Jump to content

ஷான் வின்சென்ட்டின் 'Made in Jaffna'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஷான் வின்சென்ட்டின் 'Made in Jaffna'

னக்கு திரைத்துறை சார்ந்தும், இசை சார்ந்தும் இருக்கும் நண்பர்கள்  குறைவு. அதைவிட இலக்கியஞ்சார்ந்து இருக்கும் நண்பர்கள் மிகக்குறைவு என்பது வேறுவிடயம்.  அவ்வளவு பரிட்சயமில்லாத இவ்வாறான துறைகள் சார்ந்திருக்கும் நண்பர்களிடம் அவர்கள் சார்ந்த துறையில், அசல் படைப்புக்களை -அது எவ்வாறான தரத்தில் இருந்தாலும்- கொண்டுவர முயற்சியுங்களென அடிக்கடி கூறிக்கொண்டேயிருப்பேன்.

 

AVvXsEib-HAzBEqynZIQbDBsR9Ox-vTG9UIP4vbpAKVta7oSc4O880RTIDH1eEsXlmhpX3LC2TxXsElz5fFG2bhxZlthE2dxFmJ8E-pb7Bnun70tZdXJSJVr9OuvEFkdL-a6ih52vF9flC_3-3gbBxq3NggivX0ONLhAd8DnEyxavjjO8ThF1f8G1No=s320

ஒன்றையே தொடர்ந்து ஒருவர் பிரதி/பாவனை செய்துகொண்டிருந்தால், அவர்கள் தம் விருப்பம் சார்ந்த விடயங்களில் இருந்து மிக விரைவில் விலகிப் போய்விடுவார்கள் என்பதை ஓர் அவதானமாகச் சொல்வேன். மேலும் ஒருவர் ஏற்கனவே பாடப்பட்டுவிட்ட பாடல்களை மட்டும் பாடிக்கொண்டிருப்பதில் என்ன பிரயோசனம் இருக்கப்போகின்றது?  எமக்குப் பிடித்த படைப்பாளிகளைப் போல, நாங்களும் படைப்புக்களை எழுதிக்கொண்டிருந்தால் நமக்கான எழுத்தின் ஆன்மாவை நாம் கண்டுபிடித்துவிடுவோமா என்ன?  இதுதான் இன்றையகால 'மோஸ்தர்' என  நாம் நம் 'முன்னத்தி ஏர்களை'ப் போல எழுதிக் கொண்டிருந்தால் வாசிப்பவர்க்கு அலுப்பு வந்துவிடாதா என்ன?

அவ்வாறான மோஸ்தருக்குள் சிக்குப்பட்டு போகாமல், தனக்குரிய அசல் பாடல்களை இசைத்ததால்தான் இன்று நவீனி (Navz-47) கவனிக்கப்படும் ஒருவராக இருக்கின்றார். இத்தனைக்கும் கனடாவில் வசித்துக்கொண்டிருக்கும் அவரால் ஆங்கிலத்தில் பாடவோ, ஆங்கிலவரிகளை பாடல்களில் கலக்கவோ முடியுமென்றாலும், முற்றுமுழுதாக தமிழிலேயே பாடல்களை  எழுதிப் பாடுகின்றார். அது இன்று ஏ.ஆர்.ரஹ்மானின் 'மாஜா'வில் அவரை ஒரு சுயாதீன இசைக்கலைஞராக அடையாளங் காணவைத்திருக்கின்றது. இதே இடத்தில் தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடச் சென்ற பல்வேறு பாடகர்கள் ஏன் காணாமற் போய்க்கொண்டேயிருக்கின்றார்கள் அல்லது ஒரு சிறுவட்டத்திற்குள் மட்டும் பாடி ஏன் சுருங்கியபடியிருக்கின்றார்கள் என்பதையும் நாம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

இதேபோல ஷான் வின்செட் இன்னொரு சுயாதீன பாடகராகப் பாடிக்கொண்டிருக்கின்றார். ஒருவகையில் Tupacம்,  Eminemம் கலந்த கலவையென நான் அவரின் பாடல்களைக் கேட்டு என்னளவில் அடையாளப்படுத்தியபோது அவருக்கு முன்னோடிகளென அவர் வேறு சில பாடகர்களைச் சொல்கின்றார். அதுவும் ஒருவகையில் சுவாரசியமானதுதான். 

இப்போது அவரும் நவீனியைப் போல ஒரு சுயாதீனப் பாடகராக 'மாஜா'வில் இருக்கின்றார்.  Made in Jaffna  என்கின்ற புதிய இசைத்தொகுப்போடு  விரைவில் வரபோகின்றார். அவரின் பிற பல பாடல்களைப் போல Made in Jaffna என்கின்ற தனிப் பாடலிலும் நமக்கு ஒரு கதை சொல்கின்றார். ஒருவகையில் இது அவர் கடந்து வாழ்க்கையைப் பற்றிய  'புதிய ஏற்பாடு'  என்கின்றார். 

நான்கு வயதில் யாழிலிருந்து மொன்றியலிலுக்கு வந்து, பின்னர் ரொறொண்டோவில் பள்ளிக்காலம் கழிகையில் இனவாதம், வெறுப்புவாதம் என்பவற்றுக்கால் வாழ்ந்து, வன்முறைக்குள்ளாலும் தப்பி வந்ததைச் சொல்கின்றார். இது என்னைப் போன்று கனடாவிற்கு பதின்மத்தில் வந்த பலர் நுழைந்து, அருந்தப்பில் தப்பி வந்த பாதையுங்கூட. ஆகவே யாழ்ப்பாணத்தில் இருந்து எனத் தொடங்குகின்ற இந்தப்பாடலில் இருப்பது என்னைப் போன்றவர்களுக்கான கதையேதான். 

அதை மட்டும் ஷான் சொல்லவில்லை.  வெள்ளை ஆசிரியர், வெள்ளை ஜீஸஸ்,  வெள்ளைப் பாடசாலை, வெள்ளை சட்டங்களுக்குள் என எல்லாமே வெள்ளையினத்தவர்களால் சூழப்பட்டு, அதில் சிக்குப்பட்ட ஒரு மண்ணிறக்காரனின் தத்தளிப்புக்களையும் சொல்கின்றார். மேலும் அவர் வெளியிட்ட முதல் இசைத்தொகுப்பு அவ்வளவு கவனிக்கப்படாது போக, வாழ்க்கை அவருக்கு ஒரு மகளையும் கையளிக்க, எதையும் செய்யவியலாத இயலாமையில் அலைந்து திரிந்த வாழ்க்கையின் புள்ளிகளையும் இங்கே கூறுகின்றார். ஆனால் இதையும் தாண்டி அவருக்கு இசை மீதிருந்த காதல், இன்று கவனிக்கத்தொரு இசைக் கலைஞராக அவரை நம்முன்னே நிறுத்தியிருக்கின்றது. 

அதேபோன்று 'உயிரே' என்ற பாடல் ஒரு குழந்தை பிறந்தபின் விவாகரத்துப் பெறும் இணையைப் பற்றிப் பேசுகின்றது. தமிழ்ச்சூழலில் விவாகரத்து என்பது இன்னும் ஓர் எளிதான விடயமாக இருப்பதில்லை. ஆணொருத்தன் தன் தாயாரிடம் இந்த விவாகரத்து விடயத்தைச் சொல்கின்றான். எதிர்முனையில் அமைதி. ஆனால் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் துயரம், அவன் அறிவான். அதைவிட தனது இணையிடம் இந்தக் காதலை எவ்வளவு முயன்றாலும் தொடர்ந்து கொண்டுசெல்ல முடியவில்லை என்பதைச் சொல்கின்றான். 

தங்களுக்கிடையில் காதல் இல்லாமல், ஒரு குழந்தையை வளர்க்கமுடியாதென்று, குழந்தை மிமியின் தாயாரிடமும் வலியுடன் இந்தப் பாடலில் தன்னை முன்வைக்கின்றான்.  ஆனால்  தன் இணையிடம் உன்னைவிட ஒரு அருமையான தாயார் தன் பிள்ளைக்குக் கிடைக்காதிருக்க மாட்டார் என்கின்ற அவன், எம் பிள்ளையின் நிமித்தம் நமது பிரிவை கடினப்படுத்தாமல் கொண்டுசெல்லலாம் எனவும் வேண்டுகின்றான். 

 

AVvXsEgWN46UpRR07SpSjenJUA7jKReBhauzBBC_yH3v1PqS1911oWU2lO4Gm8KuTRPEosIifY9ZStrvHxaV699frwyndMFMPbuLYWZzIsU8uAiHFv7xbW7Cu2MQ6MCxlPlMvN_s_Zx5KUtc6eybmRz19UiVGg-PpBI42uEnCMMZsnAMzbur0u7rjss=s320

நான் இப்போது உன்னிடம் என்னை மன்னிக்கச் சொல்லிக் கேட்க வரவில்லை. இந்த வாழ்க்கையின் ஒரு நாள் நீ என்னை உனக்குள் மன்னிப்பாய் என்பதற்காய் பிரார்த்தனை செய்கின்றேன்.  இந்தக் கோடையில் நான் எடுத்த இந்த முடிவானது என் வாழ்வின் இறுதிவரை தொந்தரவுபடுத்தியபடியே வருமென்பதையும் அறிவேன் என்பதையும் சொல்கின்றான். இதுவே இந்தப் பாடல் பிரிவைப்பற்றிப் பாடினாலும் கூட,  அதனூடாக வெறுப்பை உமிழாது, ஒரு காதல் இருந்தது, இப்போதில்லை என்பது கடினமானது, ஆனால் காதலில்லாத வீட்டில் அன்பு வாழாது, அது குழந்தையையும் பாதிக்கும் என்பதால் இந்த உறவிலிருந்து நாம் வெளியேறுவதே சிறந்ததெனன எவரையும் காயப்படுத்தாது பாடப்படுவதால் இந்தப் பாடல் ஒரு முக்கியபாடலாகின்றது.

ஷான் வின்சென்ட் கடந்து வந்த இந்தப் பாதை நெடியதும், கடியதுங்கூட.  அது நம்மாலும் எளிதாக அடையாளங் கண்டுகொள்ளக்கூடிய வாழ்வின் பாதை என்பதாலேயே இந்தப் பாடல்கள் நம்மை இன்னும் நெருக்கம் கொள்ளச் செய்கின்றது போலும். 

நாளை ஷானை நினைவுகொள்ள இந்தப் பாடல்களே நமக்குப் போதுமாகவும் இருக்கவும் கூடும். கலையின் மீது பித்தங்கொண்டு, அசல் படைப்புக்களைத் தருகின்ற எவருமே தோற்றுப்போனவர்கள் அல்ல, அவர்கள் சில்வேளைகளில் சமகாலத்தில் கவனிக்கப்படாத படைப்பாளிகளாக இருக்கலாம். ஆனால் அவர்களைப் பற்றிபேச வெளியில் தெரியாத (என்னைப் போன்ற) இரசிகர்கள் இருப்பார்கள். பெருங்காதலுடன் இரகசியமாகப் இவர்களைப் போன்றோரைப் பின் தொடர்ந்தபடியும் இருப்போம். அப்படி அவர்களைச் சமகாலம் கைவிட்டால் கூட, கலையின் மீது பித்தங்கொண்டவர்களை அடுத்த தலைமுறை கவனிக்கவே செய்யும்.

 

*********************

 

(நன்றி: 'காலம்' - 2022)

 

 

http://djthamilan.blogspot.com/2022/02/made-in-jaffna.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
    • டுபாய் தன்னைப் பற்றி கட்டி வைத்திருந்த பிம்பம் உடைந்து போய்விட்டது இதனால். கடும் புயலும், மழையும் அதனால் வெள்ளமும் வரும் என்பதை ஏற்கனவே வானிலை எதிர்கூறல்கள் எச்சரித்து இருந்தும், அருகே இருக்கும் ஓமானில் இதே நிலை ஏற்பட்டதை கண்டும், எந்தவொரு முன்னேற்பாட்டையும் செய்து இருக்கவில்லை, முக்கியமாக டுபாய் விமான நிலைய நிர்வாகம். ஆயிரக்கணக்கானவர்கள் 30 மணித்தியாலங்களுக்கு மேல் விமான இன்றி தவித்து கிடந்த போதும், தண்ணீர் கூட அவர்களுக்கு விமான நிலைய ஊழியர்களால் வழங்கப்படவில்லை. குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பால்மா, nappies கூட கொடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. சிலர் 24 மணி நேரத்தும் மேலாக சாப்பாடு இல்லாமல் இருந்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த அனைத்து உணவு விடுதிகளும் பூட்டப்பட்டுள்ளதாம். அதே போன்று செக் இன் கவுண்டரிலும் (check in counters), விமான சேவை கவுண்டர்களிலும் ஒரு ஊழியரும் இல்லாமையால், அடுத்தது என்ன என்று தெரியாமல் பலர் பிள்ளைகளுடன், குழந்தைகளுடன் தவித்து போய் விட்டனர்.  பல Mall களில் புயல் வரும் முன் மக்களை உள்ளே அனுமதித்து விட்டு, புயல் தொடங்கிய பின் கடைகளை இழுத்து மூடி, வந்தவர்களை தவிக்க விட்டுள்ளனர். Mall களில் இருந்து தம் தங்குமிடத்திற்கு செல்ல முடியாமல் பல நூறு உல்லாசப் பயணிகள் அல்லாடியிருகின்றனர். இதற்கு எல்லாம் மேலாக, Cloud seeding இனால் தான் இந்த புயல் வந்தது என்று அங்குள்ள சமூக வலைத்தளங்களில் முட்டாள் தனமாக ஒரு கூட்டம் வதந்தியை பரப்பிக் கொண்டு இருக்கு. Cloud seeding இனால், சாதரணமாக சிறு தூறல்களையும், சிறு மழையையும் தான் தருவிக்க முடியும். ஆனால் புயலை அல்ல,
    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
    • முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்தனர்.  மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார்.  Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள்.  இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்:  alua camp de mar  நன்றி. 
    • ரணிலுக்கு... அழகிகளில் நாட்டம் இல்லை என்று கேள்விப் பட்டோம். 🤣 நீங்கள் இப்பிடி சொல்கிறீர்கள். வேணுமென்றால்... @விசுகுவிடம் கேட்டுப் பாருங்கள். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.