Jump to content

இந்திய எம்.பி-க்கள் குறித்து சர்ச்சை பேச்சு - சிங்கப்பூர் பிரதமருக்கு வலுக்கும் கண்டனங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: இந்திய எம்.பி-க்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் பேசியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், ''நேருவின் இந்தியாவில் தற்போது ஊடக அறிக்கைகளின்படி, மக்களவையில் கிட்டத்தட்டப் பாதி எம்.பி-க்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார்கள் நிலுவையில் உள்ளது.

 

India summons Singapores PM Lee Hsien Loongs statement on Indian MPs
மேலும் இந்திய‌ எம்.பி-க்கள் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் பல அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றாலும், இன்னும் இந்த நிலைதான் உள்ளது'' என்று பேசியிருந்தார்.

சிங்கப்பூர் பிரதமரின் இப்பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம், டெல்லியில் உள்ள தூதரக அலுவலகத்தில் இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வொங்கிற்கு சம்மன் அனுப்பி கடும் கண்டனத்தை பதிவு செய்தது.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பிரதமர் லீ சியென் லூங் பேசியதாவது, சுதந்திரத்திற்காகப் போராடி வென்றத் தலைவர்கள், பெரும் தைரியம், மகத்தான கலாசாரம் மற்றும் சிறந்த திறன் கொண்ட தலைவர்களாக வெளிப்பட்டனர்.
அவர்களில் டேவிட் பென்-குரியன்ஸ், ஜவஹர்லால் நேரு போன்றோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

புதிதாக ஒரு நாட்டை உருவாக்கும் தலைவர்கள், தங்கள் மக்களுக்கும் தங்கள் நாட்டுக்கும் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், தங்கள் மக்களின் உயர்ந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும் முயற்சி செய்கிறார்கள். ஆனால், அந்த தலைவர்கள் ஏற்படுத்திய உத்வேகத்தை அதற்கு அடுத்து வரும் தலைமுறை தக்கவைக்காமல் அதை அழித்துவிடுகிறது.

அரசியலின் அமைப்பு ஒவ்வொரு கட்டத்துக்கும் மாறிவருகிறது. அரசியல்வாதிகள் மீதான மரியாதை குறைந்து வருகிறது. வாக்காளர்களும் இதுதான் விதிமுறை என்று நினைக்கிறார்கள். தரம் குறைந்து, நம்பிக்கை சிதைந்து, நாடு அப்போது வீழ்ச்சியடையும்.

நேருவின் இந்தியாவில் தற்போது ஊடகங்கள் சொல்லும் செய்திகளின்படி, நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்டப் பாதி உறுப்பினர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் பல அரசியல் உள்நோக்கம் கொண்டவை தான் என்றாலும், இன்னும் இந்த நிலைதான் இந்தியாவில் உள்ளது.
அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் சிங்கப்பூரின் மரபைக் காப்பாற்ற வேண்டும், அதைப் பாதுகாக்க வேண்டும். இதற்கு நாம் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும், விதிகளைச் சரியாகச் செயல்படுத்தவேண்டும், அதே விதிகளை அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்த வேண்டும், யாரும் சட்டத்திற்கு மேல் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என்று சிங்கப்பூர் பிரதமர் பேசியிருந்தார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரைப் புகழ்ந்து, தற்போதைய ஆட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிங்கப்பூர் பிரதமர் விமர்சித்திருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

https://tamil.oneindia.com/

https://tamil.oneindia.com/news/delhi/india-summons-singapore-s-pm-lee-hsien-loong-s-statement-on-indian-mp-s-449152.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதை  சொன்னால்  எதுக்கு  எரியுது??

அந்தாள் இப்படி  ஆகிவிடவேண்டாம்  என்று தனது அடுத்த தலைமுறைக்கு  புத்தி  சொல்வது  எவ்வாறு தவறாகிவிடும்??

Link to comment
Share on other sites

இந்தியாவின் சாமானிய மக்களே இதை கூறுகிறார்கள். சிங்கப்பூர் பிரதமர் கூறியவுடன் (உண்மையை) தாதாக்களுக்கு கோவம் வந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார் பிரதமர் லீ சியன் லூங். படம்: பிரதமர் லீயின் ஃபேஸ்புக் பக்கம்

ஐயா! அப்பிடியே இந்தியாவுக்கு பக்கத்து நாடான சிறிலங்காவுக்கும் ஒரு நாலு வரி சொல்லிப்போட்டு போங்கோ.....

ஏனெண்டால் அவையள் தான் இப்பவும் உங்கடை சிங்கப்பூர் கனவிலை திரியினம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஏக போகத்துக்கும் வைச்சு சாத்துறாங்கள்........ இஞ்சை போய் பாத்தியளெண்டால் தெரியும் 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது வடகத்தியர்கள்  தென்மாநிலத்தை கொள்ளையடிக்க செய்யப்பட்ட ஏட்பாடே இந்தியா எனும் மாயை பெயர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் பிரதமர் நேருவை பாராட்டியதால் சர்ச்சை; தூதரக அதிகாரியிடம் விளக்கம் கேட்ட இந்தியா

17 பிப்ரவரி 2022
 

லீ

பட மூலாதாரம்,PRIME MINISTER'S OFFICE, SINGAPORE

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் லீ சென் லூங், இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பாராட்டிப் பேசியிருப்பது இந்தியாவில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் 'கிரிமினல் எம்பிக்கள்' இருப்பதாக அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரக உயர் அதிகாரி சைமன் வாங்-கிடம், சிங்கப்பூர் பிரதமரின் கருத்து தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டறிந்ததாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் பேசும் வீடியோவை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிரும் காங்கிரஸ் தலைவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நேருவை தேவையின்றி விமர்சிப்பதாக தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமையன்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டுப் பிரதமர் லீ செய்ன் லூங், "பெரும்பாலான நாடுகள் நிறுவப்பட்டு, உயர்ந்த லட்சியங்கள் மற்றும் உன்னத மதிப்புகளின் அடிப்படையில் பயணத்தைத் தொடங்குகின்றன. பெரும்பாலும் நிறுவனத் தலைவர்கள் மற்றும் முன்னோடி தலைமுறைக்கு பிறகு படிப்படியாக அவை மாறுகின்றன" என்று கூறினார்.

இஸ்ரேலையும் லீ தனது பேச்சின் போது குறிப்பிட்டார். நேரு மற்றும் பென் குரியன் ஆகியோரைப் பாராட்டினார். அவர்களைப் போன்ற தலைவர்கள் சிங்கப்பூரிலும் இருந்தார்கள் என்று பேசினார்.

"ஊடகச் செய்திகளின்படி, நேருவின் இந்தியாவில், மக்களவையில் கிட்டத்தட்ட பாதி எம்.பி.க்கள் மீது பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன, அவை அரசியல் ரீதியானவை என்று கூறப்பட்டாலும்கூட" என லீ கூறினார்.

"இதே பாதையில் சிங்கப்பூர் பயணிப்பதைத் தடுக்க வேண்டியது முக்கியமானது" என்றும் அவர் பேசினார்.

லீயின் இந்தக் கருத்துகள் இந்தியாவில் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கின்றன. காங்கிரஸ் தலைவர்கள் இந்தக் காணொளியைப் பகிர்ந்து, நரேந்திர மோதி தலைமையிலான அரசை விமர்சித்துள்ளனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷும் இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமரின் கருத்து தொடர்பான இந்திய வெளியுறவுத் துறை, சிங்கப்பூர் தூதரிடம் ஆட்சேபம் தெரிவித்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.bbc.com/tamil/global-60422558

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையச் சொன்னோண டக்கெண்டு வெக்கம் வந்திட்டு.

அது கிடக்க நேரு மாமா எட்வினா உடன் போட்ட ஆட்டங்கள் சிங்கப்பூர் பிரதமருக்கு தெரியாது போல👀

Link to comment
Share on other sites

1 minute ago, வாலி said:

உண்மையச் சொன்னோண டக்கெண்டு வெக்கம் வந்திட்டு.

அது கிடக்க நேரு மாமா எட்வினா உடன் போட்ட ஆட்டங்கள் சிங்கப்பூர் பிரதமருக்கு தெரியாது போல👀

பிரியதர்சினி இந்திரா காந்தி ஆன கதையை  சிங்கப்பூர் பிரதமர் கேட்டா சொக்(shock)  ஆகிடுவாரு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற கிரிமினல்கள் எல்லாரையும், எம்.பி. ஆக்கி வைத்துக் கொண்டு…
அதனை மற்றவன் சுட்டிக் காட்டியவுடன், குற்ற உணர்ச்சி ஏற்படும் என்று பார்த்தால்…. கோவம் வருகுது. 😂

செய்யிற, முள்ளமாரித் தனத்துக்குள்ளை…
காந்தி தேசம், கத்தரிக்காய் தேசம் என்று… பீலா வேறை. 🙁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இருக்கிற கிரிமினல்கள் எல்லாரையும், எம்.பி. ஆக்கி வைத்துக் கொண்டு…
அதனை மற்றவன் சுட்டிக் காட்டியவுடன், குற்ற உணர்ச்சி ஏற்படும் என்று பார்த்தால்…. கோவம் வருகுது. 😂

செய்யிற, முள்ளமாரித் தனத்துக்குள்ளை…
காந்தி தேசம், கத்தரிக்காய் தேசம் என்று… பீலா வேறை. 🙁

காந்தி மட்டும் சும்மா ஆளா ?  வல்லிபுரக்கோவில் கோபுரத்தில் ஆளை சிலையாய் வைக்குமளவுக்கு விசுக்கோத்து இலவச படிப்பு கண்ணைமறைத்து உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

காந்தி மட்டும் சும்மா ஆளா ?  வல்லிபுரக்கோவில் கோபுரத்தில் ஆளை சிலையாய் வைக்குமளவுக்கு விசுக்கோத்து இலவச படிப்பு கண்ணைமறைத்து உள்ளது .

இதென்ன புதுக் கதையாய் உள்ளது.
கோயில் கோபுரத்துக்கும், காந்திக்கும் என்ன சம்பந்தம்?
ஏணி வைத்தாலும்…. எட்டாதே.
எமதர்மராஜனின் சிலை, காந்தி போல் தெரிகிறது ஆக்கும். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

இதென்ன புதுக் கதையாய் உள்ளது.
கோயில் கோபுரத்துக்கும், காந்திக்கும் என்ன சம்பந்தம்?
ஏணி வைத்தாலும்…. எட்டாதே.
எமதர்மராஜனின் சிலை, காந்தி போல் தெரிகிறது ஆக்கும். 😜

படத்தை தேடிட வைத்து விட்டீர்கள் அண்ணா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

படத்தை தேடிட வைத்து விட்டீர்கள் அண்ணா .

பெருமாள்…. நானும் அந்தச் செய்தியையும், படத்தையும்…. யாழ். களத்தில் பார்த்தேன்.
இந்த நேரம், படத்தை தேடி மினைக்கெடாதீர்கள்.

காந்தி சிலையை… கோபுரத்தில் இருந்து அகற்ரி, ஆறுமுக நாவலரின் சிலையை அங்கு வைக்க வேண்டும். 🙂

நம்ம ஆட்கள், சண்டைக்கு வருவார்களோ…. 😁 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

பெருமாள்…. நானும் அந்தச் செய்தியையும், படத்தையும்…. யாழ். களத்தில் பார்த்தேன்.
இந்த நேரம், படத்தை தேடி மினைக்கெடாதீர்கள்.

காந்தி சிலையை… கோபுரத்தில் இருந்து அகற்ரி, ஆறுமுக நாவலரின் சிலையை அங்கு வைக்க வேண்டும். 🙂

அதுக்குதான் வம்பு  எம்பஸி யாழில் வேலைவெட்டி இல்லாமல் உட்கார்ந்து இருக்கினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அதுக்குதான் வம்பு  எம்பஸி யாழில் வேலைவெட்டி இல்லாமல் உட்கார்ந்து இருக்கினம் .

அட…. அந்த காந்தி சிலைக்கு, பாதுகாப்பு வழங்கவா… 
யாழ்ப்பாணத்தில் இந்தியன் எம்பஸி இருக்குது. 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் பிரதிநிதிகள் என்போர் தனியே வானத்தில் இருந்தா குதிக்கினம் ..? 

IMG-20220219-073859.jpg

" மக்கள் எவ்வழியோ அரசன் அவ்வழி "☺️

இதில் கோர்ட் அடுத்த தலைமுறையில் தீர்ப்பு சொல்லும் வரையில் ஆரையும் "குற்றவாளி" என்படாதாம் . குற்றம் சாட்டபட்டவராம்.😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

IMG-20220219-073859.jpg

கேரளாவும், பீகாரும்…. கிரிமினல் வரிசையில் முன்னணியில் உள்ளார்கள்.

தமிழ் நாட்டு….  திருட்டு திராவிட கட்சிகள், பாதி அளவில் கிரிமினல்களை தம்மகத்தே கொண்டுள்ளார்கள்.

விஞ்ஞான பூர்வமாக…. தமிழ்நாட்டில் ஊழல் செய்பவர்களையும் கணக்கில் எடுத்தால், இன்னும் அதிகம் வரும். 🤣

Link to comment
Share on other sites

7 hours ago, பெருமாள் said:

காந்தி மட்டும் சும்மா ஆளா ?

மகாத்மா காந்தி

தனது உதவியாளர்கள் அபா மற்றும் மனுவுடன் காந்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

காந்தி மட்டும் சும்மா ஆளா ?

இம்மாதிரி பாடல்களை கேட்டுத்தான், நம்பி வளர்ந்துள்ளோம்.. 👇👇

அதெல்லாம் பொய்யா கோப்பால்..? 🤭😛

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

 

தனது உதவியாளர்கள் அபா மற்றும் மனுவுடன் காந்தி.

மகாத்மா காந்தி

சார்!!!! 
உண்மை பேசி உத்தமனாக வாழ் என்று சொன்னவர் இவரா சார்? பிளீஸ் ரெல் மீ 😎

Link to comment
Share on other sites

31 minutes ago, குமாரசாமி said:

மகாத்மா காந்தி

சார்!!!! 
உண்மை பேசி உத்தமனாக வாழ் என்று சொன்னவர் இவரா சார்? பிளீஸ் ரெல் மீ 😎

இடுப்புத் துண்டுகூடப் பாரமாக இருக்கிறதே என்று முற்றும் துறந்த முனிவரான பட்டினத்தாரே இப்படிப் பாடியுள்ளபோது....  

"பிறந்த இடத்தை நாடுதே பேதைமட நெஞ்சம்

கறந்த இடத்தை நாடுதே கண்".

ஆசையைக் கொல்லமுடியாது அல்லலுற்றேன் என்று தனது சுயசரிதையில் குறிப்பிட்ட காந்தி அவர்கள், இள மங்கைகள் இருவரை அணைத்து மகிழ்ந்து கொண்டே, "உத்தமனாக வாழ்" என்று சொன்னதில் என்ன ஐய்யம் கொள்ளமுடியும் சாமிகளே.!!🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ராசவன்னியன் said:

இம்மாதிரி பாடல்களை கேட்டுத்தான், நம்பி வளர்ந்துள்ளோம்.. 👇👇

அதெல்லாம் பொய்யா கோப்பால்..? 🤭

அந்த பாடல்கள் கேட்டு சாதரண பொதுமக்கள் சத்தியம் உண்மை என்று வாழ்வது சரி அரசியல்வாதிகள் வாழ்கிறார்களா ?

இந்தியா எனும் புதிய தேசத்துக்கு காந்தி என்பவர் விளம்பர பிராண்ட் மாத்திரமல்ல ஆங்கிலேயர்களுக்கும் புரியணுமா 500வருடங்களாக உலகம் முழுக்க அவர்கள் செய்த  படுகொலைகள் காந்தி எனும் மனிதரால் வெள்ளையடிக்கப்ட்டது காந்தியின்  உணவு மறுப்புக்கு பயந்து வெள்ளைக்காரர்  இந்தியா எனும் தேசத்தை கொடுத்து சென்றார்கள் எனும் கதை அம்புலிமாமா கதை. உண்மையில் இரண்டாவது உலகப்போர் நேரடியாக மறைமுகமாக இங்கிலாந்தின் ஆண்களின் எண்ணிக்கையில் முக்கால்வாசிக்கும் மேல் கபளீகரம் செய்து விட்டது.இந்த உண்மையை உணர பட்டதும்1945ல் ஜெர்மன் சரணடைவு1947 ல் இந்தியா சுதந்திரம் அப்படியே அவசர அவசரமாக இலங்கை தீவில்   1948ல் எந்தவித முன்யோசனையும் இன்றி பன்னி போல் பெருத்துக்கிடந்த சோம்பேறி சிங்களவர்களிடம் அதிகாரத்தை கொடுத்துவிட்டு ஒரே ஓட்டம்.

மேலும் 1927களில் இலங்கைக்கு மூன்றுவார விசிட் அடித்தார் அதுவும் பள்ளிகளுக்கு அங்கு என்ன சொன்னார் தெரியுமா ? அவர் சொன்னதை சீமான் சொல்லியிருந்தால் இனதுவேசத்தை தூண்டுகிறார் என்று சலங்கை கட்டி ஒரு கூட்டம் ஆடும் காந்தி சொன்னதை இந்தியா இலங்கை இருபகுதிகளிலும் கடைபிடித்தால் முக்கியம் அரசியல்வாதிகள் இரண்டு நாடும் எங்கேயோ போயிருக்கும்  அவர் சொன்னதை அப்படியே கொப்பி பேஸ்ட் .மகாத்மா காந்தி இலங்கையில் புத்தமத இறையியல் சங்கத்தால் நிறுவப்பட்ட பள்ளிகளுக்கும் சென்று அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உரையாற்றினார். தனது சொந்த மொழியைத் தவிர வேறு மொழியில் அறிவுறுத்தல்களைப் பெறும் ஒரு நாட்டின் குழந்தைகள் தற்கொலை செய்துகொள்வது உறுதி என்று காலியில் உள்ள மகிந்தா கல்லூரியில் தனது உரையின் போது காந்தி கூறினார்.

இப்படி சொன்னவரின் நாட்டில் ஹிந்தி மொழி திணிப்பு .

இலங்கையின் எல்லாப்பக்கமும் நூல் நூற்கும் ராட்டையுடன் திரிந்தவருக்கு இந்திய தென்மாநிலத்தில் இருந்து அடிமையாக லட்ஷக்கணக்கில் வேலை  செய்த தமிழர்களை சந்திக்க மனம் வரவில்லையாக்கும் அல்லது என் தேடலில் விடுபட்டு விட்டதோ யாரும் தெரிந்தால் கூறவும்.

இப்படி தோல்வி களை கருத்தாக கொண்ட விளம்பர மனிதரின் உருவத்தை கோயில் கோபுரத்தில் வைப்பது சுத்த அபத்தம் முடிந்தால் அவர் சொன்ன கருத்தை நடைமுறைப்படுத்துங்கள் அதன் பின் நாங்களே பார்த்துக்கொள்கிறோம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

...

இந்தியா எனும் புதிய தேசத்துக்கு காந்தி என்பவர் விளம்பர பிராண்ட் மாத்திரமல்ல ஆங்கிலேயர்களுக்கும் புரியணுமா 500வருடங்களாக உலகம் முழுக்க அவர்கள் செய்த  படுகொலைகள் காந்தி எனும் மனிதரால் வெள்ளையடிக்கப்ட்டது காந்தியின்  உணவு மறுப்புக்கு பயந்து வெள்ளைக்காரர்  இந்தியா எனும் தேசத்தை கொடுத்து சென்றார்கள் எனும் கதை அம்புலிமாமா கதை. உண்மையில் இரண்டாவது உலகப்போர் நேரடியாக மறைமுகமாக இங்கிலாந்தின் ஆண்களின் எண்ணிக்கையில் முக்கால்வாசிக்கும் மேல் கபளீகரம் செய்து விட்டது.இந்த உண்மையை உணர பட்டதும்1945ல் ஜெர்மன் சரணடைவு1947 ல் இந்தியா சுதந்திரம் அப்படியே அவசர அவசரமாக இலங்கை தீவில்   1948ல் எந்தவித முன்யோசனையும் இன்றி பன்னி போல் பெருத்துக்கிடந்த சோம்பேறி சிங்களவர்களிடம் அதிகாரத்தை கொடுத்துவிட்டு ஒரே ஓட்டம்.

...

இது, அக்கால சுதந்திர போராட்டம் பற்றிய விவரம் தெரிந்த எல்லோரும் அறிந்த விடையம்தான்.

யாரையாவது போற்றி புகழ வேணும்தானே? பெயரை தக்க வைத்துக்கொண்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை ஈழம் பின்னாளில் கிடைத்தால், அப்பொழுது 'சம்பந்தன் அகிம்சையுடன் சாதுர்யமாக சிங்களரிடம் பேசி வாங்கி தந்தார்' எனவும் சொல்ல வாய்ப்பிருக்கிறது. 🤭😋

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.