Jump to content

சாதலும் புதுவது அன்றே! - சோம. அழகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                            சாதலும்  புதுவது  அன்றே!

                                                                                                 -  சோம. அழகு

                        “சாதலும் புதுவது அன்றே

                          வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே

                          முனிவின் இன்னா தென்றலும் இலமே”

எனும் கணியன் பூங்குன்றன் சொல்வழி “திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின்” இக்கட்டுரை வரைய தூரிகை எடுத்தே விட்டேன்!

 

               நாம் ஒரு புகைப்படத்தினுள் அடைபட்டுப் போகவும் நமது மொத்த வாழ்வும் நமது இருப்பும் சிலரது நினைவலைகளாகிப் போவதற்கும் ஒரு நொடி போதுமானது. அந்நொடி ஒளித்து வைத்திருக்கும் திகில், நமக்குத் தெரிந்தவர்களின் மரணத்தைக் கடந்து செல்ல நேர்கையில் அவ்வப்போது எட்டிப் பார்த்துச் செல்லும். யாரேனும் மறைந்த செய்தி கேள்வியுறுகையில் உண்டாகும் அதிர்ச்சியுடன் சேர்ந்து எழும் இயல்பான கேள்வி “அவரது குடும்பம் அவரை இழந்து இனி எப்படி?”. பொருளாதாரக் கண்ணோட்டத்தைத் தாண்டி உளவியல் ரீதியிலான அவர்களது இழப்பிலும் பாதிப்பிலும் விளையும் கேள்வி. ஆனாலும் காலச் சக்கரம் சுழன்று கொண்டேதான் இருக்கிறது; நாட்கள் உருண்டோடிக் கொண்டேதான் இருக்கின்றன… அவரது குடும்பத்தார்க்கும்.

 

எனில், நான் இல்லையென்றால் இந்த உலகம் ஒன்றும் முடிவுக்கு வந்துவிடப்போவதில்லை. என்னைச் சார்ந்தவர்களின் அன்றாடப் பணிகள் எந்தவிதத்திலும் தடைபடப் போவதில்லை. அவ்வப்போது எனது நினைவுகள் மின்னலெனக் குறுக்கிடுவதைத் தவிர. உலகம் வழமையான பரபரப்புடன் இயங்கிக் கொண்டேதான் இருக்கப் போகிறது. எனது இருப்பின்மை எவ்வித மாற்றத்தையும் உண்டாக்கப் போவதில்லை. வாசகர்களின் நலன் கருதி, எழுத்து நாகரிகம் கருதி, ‘நான்’, ‘எனது’ என்று குறிப்பிட்டு முன்னிலையைத் தவிர்த்துள்ளேன். “இவ்ளோதான் வாழ்க்கை… நீ என்பது காற்றில் கரைந்து போகும் ஒரு பிடி சாம்பல். அவ்வளவே! அப்புறம் ஏன் வாழும் போது இவ்வளவு ஆட்டம்?” – ஒவ்வொரு மரணமும் பறையடித்துக் கூறும் செய்தி இது. இதை நானும் கூற ஆசைதான். ஆனால் குதியாட்டம் போடுபவர்களும் பெரிய மகான் ஆகி இதைக் கூறிவிட்டு அடுத்த ஆட்டத்தைத் துவக்குகின்றனர் ஆதலால் நான் இதை மறுமொழியாமல் விட்டுவிடுகிறேன்.

 

ஏனோ எனது மரணம் பற்றிய சிந்தனைகள் ஒருபோதும் என்னைப் பாதித்தது இல்லை. எனது அன்புக்குரியோரின் இழப்பைத்தான் தாங்கும் தைரியமில்லை எனக்கு. அதுவே பெரும் பீதியைக் கிளப்புகிறது.

 

எனது மரணத்தைப் பற்றிய சில கற்பனைகளும் ஆசைகளும் (ஆம்! ‘ஆசைகள்’) உண்டு எனக்கு. இதுவரை தனது மரணம் குறித்த விருப்பங்களை யாரேனும் இப்படி அங்கதத்தில் எழுதி வைத்திருக்கிறார்களா? தெரியவில்லை. இதை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போதா வெளிப்படுத்த முடியும்? எதற்கும் இப்போதே எழுதி வைத்துவிடுவோம்…  அகால மரணம், நரைகூடி கிழப்பருவம் எய்தி போதும் போதும் என வாழ்ந்த பின்னான மரணம், திடீர் மரணம், நெடுநாள் நோய்வாய்ப்பட்டு கஷ்டப்பட்டு பின் தழுவப்பட்ட மரணம்…. எத்தனை எத்தனை வகைகள்? கண்டிப்பாய் இறுதியாகக் கூறப்பட்ட வழியில் எனது கடைசி மூச்சை விட விரும்பவில்லை. எனக்கானவர்கள் நூறாம் அகவையையும் தாண்டி ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் என் மரணம் நிகழ வேண்டும். எனது மரணம் வலியில்லாததாய் இருக்க வேண்டும். ஒரு நல்ல மகிழ்ச்சியான நிகழ்வுக்குப் பிறகு மனநிறைவுடன் கூடிய இரவில் வாய்க்கும் அமைதியான நித்திரை நிரந்தரமானதாகிப் போக வேண்டும். மிக முக்கியமாக என்னைச் சார்ந்தோருக்குப் பாரமாய் இல்லாமல் அவர்களின் மனதில் ‘Why now?” என்ற கேள்வியை விட்டுச் செல்வதே சாலச் சிறந்தது. “Why not now?” என்ற  கேள்வி தரும் உணர்வை விடவும் கொடூரமானதொன்று இவ்வுலகில் இருக்க முடியுமா?

 

கம்பீரமாக வாழ்வது போலவே கம்பீரமாக மரணத்தையும் வரவேற்கவே உத்தேசம். மரணம் என்னைத் தழுவும் போது… ஆமா, அது ஏன் தழுவுது? மரணத்துடன் கட்டிப்பிடி வைத்தியம் எல்லாம் செய்ய விருப்பமில்லை எனக்கு. பாரதி கூறியதைப் போல் “காலா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா ! சற்றே உனை மிதிக்கிறேன்” என்று மரணத்தை எட்டி உதைக்கவும் வேண்டாம் எனக்கு. மரணம் என்னை அழைத்துச் செல்ல வருகையில், “அட! கொஞ்சம் இருப்பா… போர்ன்விட்டா குடிச்சிட்டு தெம்பா வரேன்” என்று கூறி ஆற அமர கடைசி கோப்பையை ரசித்து அருந்திவிட்டு, “அப்புறம் என்ன? கெளம்புறது” என்றவாறே மரணத்தின் தோளில் கையைப் போட்டுப் பகடி செய்தவாறே அந்நீண்ட யாத்திரையை இனிதே துவங்க வேண்டும். என் மரணத்திற்குப் பிறகு அன்பர்கள் கடைபிடிக்க வேண்டியவை.

 

·        என் நினைவாக வீட்டில் நடுநாயகமாக (பூஜை அறையில் அல்ல!) மாட்டப்பட வேண்டிய புகைப்படம் தேர்வு செய்து வைத்திருக்கிறேன். பட்டுப்புடவையின் முந்தானையை ஒய்யாரமாக ஒரு கையில் ஏந்தியவாறு மறுகையை இடுப்பில் வைத்து, “இதுவே என் கட்டளை; என் கட்டளையே சாசனம்” என்பதான பார்வையோடு ராஜமாதா சிவகாமிதேவி போல் கம்பீரமாக யான் காட்சி தரும்(!) நிழற்படம் தலைமுறைக்கும் எனது குணாதிசயத்தைப் பறைசாற்றட்டும். செம இல்ல, அடடா! நினைத்துப் பார்க்கவே குதூகலமாக இருக்கிறது.

 

·        என் மண்ணில் கலந்து கரைந்து போகவே விழைகிறேன். எனவே என்னை திராவிட மரபின் படி புதைக்குமாறு ஆணையிடுகிறேன். என் மீது ஓங்கி உயர்ந்து படர்ந்து வளரும் மரத்தின் கன்று ஒன்றை நட்டு வையுங்கள். நல்ல வாசனை தரும் பூ மரமாக இருத்தல் சிறப்பு. அதன் கிளைகளில் வந்து அமரும் பறவைகள் எனக்காக இசையை மீட்டித் தந்து செல்லட்டும். என் பிள்ளைகளும் அவர்களது பிள்ளைகளும் அவ்வப்போது என்னை வந்து கண்டு செல்ல வசதியாய் நிறைய நிழல் தரும் மரமாக இருத்தல் அவசியம்.

 

·        ஆண் பெண் பேதமின்றி எனக்கானோர் அனைவரும் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டு புதைக்கும் இடம் வரை வர வேண்டும். மிக முக்கியமாக என்னவனோ வேறு யாருமோ மொட்டை அடித்துக் கொள்ளக் கூடாது. ‘மயிரே போச்சு’ என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கப்பிடாது. முடியும் எடுக்கப்பிடாது!

 

·        ‘வாழ்வின் ஒட்டு மொத்த ஆச்சரியங்கள், அதிசயங்கள், ரகசியங்கள், கேள்விகள், பதில்கள் எல்லாமும் இவளோடு புதைக்கப்பட்டிருக்கின்றன’ – எனது கல்லறைக் கல்லில் இப்படி ஏதாவது புரிஞ்ச மாதிரியும் புரியாத மாதிரியும் கொசகொசன்னு எழுதி வச்சு ‘It’s deep’னு நாலு பேரு கண்ணுல தண்ணி வர வைக்கணும்.

 

·        ‘ஆவி வந்து தண்ணி குடிச்சிட்டுப் போகும்; ஆன்மா வந்து பிரியாணி சாப்டுட்டுப் போகும்’, ‘ஆன்மா சாந்தி அடையச் செய்யுறேன்; சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா தர்றேன்’ என்ற பெயரில்  ‘காரியம் செய்றேன்; கருமாதி செய்றேன்’னு குடுமி வைத்திருக்கும் யாரையும் அழைத்து வந்து செத்துப் போன எனது பிராணனை மீண்டும் மீண்டும் வாங்காதீர்கள். கிழமை, 16வது நாள் விசேஷம் என வந்தேறிகளின் சடங்கு ஒன்று கூட இருத்தல் கூடாது. அவர்கள் பிழைப்பிற்கு என் சாவா கிடைத்தது?

 

·        ‘ஆவி சுத்தி சுத்தி வரும்; பிசாசு நடுவுல இருந்து பிச்சுக்கிட்டு வரும்’ என்றெல்லாம் கலர் கலராக நம்பும் அன்பர்களுக்கு : அப்படி சகல சக்திகள் யாவும் வாய்க்கப் பெற்ற ஆவி ஆகி காற்றில் பறந்து திரியும் பெரும் பாக்கியம் கிட்டுகிறதெனில் எனது அன்புக்குரியவர்களுக்கு அரணாக இருந்து அவர்களைக் காப்பேன். எனவே என்னை வழியனுப்பி வைக்கும் வைபவத்தைக் கைவிடுங்கள். என்னையும் எனது மன நிம்மதியையும் குலைக்கும் பொருட்டு என்னைப் பாடாய்ப் படுத்தியவர்கள் ‘ஜாக்க்க்க்கிரதை’. என்ன பில்லி சூனியம் வச்சாலும் போக மாட்டேன். வச்ச்ச்சு செய்வேன். பட்டியல் கொஞ்சம் பெருசு ஒறவுகளே… பாத்து பக்குவமா பத்திரமா நடந்துக்கோங்க! உயிருடன் இருக்கும் போதே இவ்வளாவு பிடிவாதத்துடன் இருப்பவள் இறந்த பின் எவ்வளவு பிடிவாதக்காரியாய் மாறுவேன் என்பதைத் தங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். என் பிடிவாதத்தின் முன் உங்கள் பில்லி சூனியம் எல்லாம் தவிடு பொடியாகி விடும் !

 

·        சடங்கு சம்பிரதாயம் என்று என்னைக் குளிப்பாட்டுதலோ உடை மாற்றுதலோ நடைபெறக் கூடாது. அக்காலத்தில் குளிரூட்டப்பட்ட பெட்டி கிடையாது. எனவே துர்நாற்றம் வீசக் கூடாது என இறந்தவரைச் சுற்றி நின்று சிலர் குளிப்பாட்டி உடை மாற்றி விடுவார்கள். அப்போது இறந்தவரின் உடல் படும் பாடு இருக்கிறதே! தலை ஒரு பக்கமாய் சரிய கை மறு புறம் பொத்தென விழ… காணவே பதைபதைக்கும் காட்சிகள் அவை. உயிருடன் இருக்கும் போது கலகலப்பான அன்னாரது முகம் ஒரு நொடி கண்திரை முன் வந்து மறையும் அத்தருணம் என் கண்களில் நீர் கோர்த்திருக்கிறேன் பல முறை. இக்கொடூரம் எல்லாம் எங்கிட்ட வேண்டாம்… ஆமா!

 

·        எல்லாவற்றிற்கும் மேலாக உயிருடன் இருக்கும் போது நான் காக்கும் கண்ணியத்தை என் மறைவிற்குப் பிறகும் பின்பற்ற விடுங்கள். உயிரில்லாதவருக்கு மானம் இல்லை என்று யார் சொன்னது? உடலைச் சுத்தம் செய்ய, என்னைத் தெரியாத தாதியரை வைத்து கண் மறைவில் செய்து விட்டுப் போங்களேன். ஒருவேளை சமூக வழக்கப்படி இவ்விடயத்தில் எனது விருப்பத்தை மீற எத்தனித்தால் அக்கணம் உயிர்த்தெழுந்து, “அடேய் அறிவிலிகாள்!” என்று வசவு பாடிவிட்டு மீண்டும் மீளாத் துயில் கொள்ள உத்தேசம்.

 

·        என் நேசத்துக்குரியவர்களுக்கு அன்போடு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன் : I hate tears. என் மரணத்தை முழுமையாகக் கொண்டாடுவீர்களாக!

 

·        எனது அடுத்தடுத்த தலைமுறைக்கு பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோரைச் சொல்லிக் கொடுங்கள்.

 

ஓரளவு நினைவுக்கு வந்தவற்றைப் பதிவிட்ட நிறைவு.

 

ஒருமுறை செத்துப் பிழைத்த உணர்வு.

 

மேலும் செத்துச் செத்து விளையாட விழைவு!

 

 

-        சோம. அழகு 

 

நன்றி 'கீற்று' இணைய இதழ்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு ஒன்று பேராசிரியர் அவர்களே! பகிர்ந்தமைக்கு நன்றி!

பெரும்பலானவர்கள் மரணத்தைப்பற்றியோ விருப்பங்கள் பற்றியோ கதைப்பதில்லை.. அதைப்பற்றி கதைக்க முற்பட்டலே “ உனக்கு இப்ப எத்தனை வயது.. இளம் பிள்ளை நீ இப்படி கதைக்கலாமோ! பேசாமல் இரு, உயிலும் எழுதவேண்டாம் ஒன்றும் வேண்டாம்’ என முளையிலே கிள்ளிவிடுவார்கள், காது கொடுத்து கேட்கமாட்டார்கள்.. ஆனால் ஏதாவது நடந்தபின் என்னென்ன ஆசைகள் இருந்ததோ என சொல்லி கண்ணீர் விடுவார்கள்.. 

என் மனதில், என் மரணத்தைப்பற்றி நான் வைத்திருக்கும் ஆசைகளை கூறும் பதிவு ஒன்று(பின்வருவனவற்றை தவிர:- ஆண் பெண் பேதமின்றி எனக்கானோர் அனைவரும் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டு புதைக்கும் இடம் வரை வர வேண்டும், ·    என் மண்ணில் கலந்து கரைந்து போகவே விழைகிறேன்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2022 at 21:09, பிரபா சிதம்பரநாதன் said:

அருமையான பதிவு ஒன்று பேராசிரியர் அவர்களே! பகிர்ந்தமைக்கு நன்றி!

பெரும்பலானவர்கள் மரணத்தைப்பற்றியோ விருப்பங்கள் பற்றியோ கதைப்பதில்லை.. அதைப்பற்றி கதைக்க முற்பட்டலே “ உனக்கு இப்ப எத்தனை வயது.. இளம் பிள்ளை நீ இப்படி கதைக்கலாமோ! பேசாமல் இரு, உயிலும் எழுதவேண்டாம் ஒன்றும் வேண்டாம்’ என முளையிலே கிள்ளிவிடுவார்கள், காது கொடுத்து கேட்கமாட்டார்கள்.. ஆனால் ஏதாவது நடந்தபின் என்னென்ன ஆசைகள் இருந்ததோ என சொல்லி கண்ணீர் விடுவார்கள்.. 

என் மனதில், என் மரணத்தைப்பற்றி நான் வைத்திருக்கும் ஆசைகளை கூறும் பதிவு ஒன்று(பின்வருவனவற்றை தவிர:- ஆண் பெண் பேதமின்றி எனக்கானோர் அனைவரும் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டு புதைக்கும் இடம் வரை வர வேண்டும், ·    என் மண்ணில் கலந்து கரைந்து போகவே விழைகிறேன்.)

இந்த பூமியில் எங்கிருந்தாலும் எம் மண்தான் இனிமேல், தமிழ் ஈழத்தில் கரைவது இனி கனவே🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இந்தப் பதிவை பார்க்க நேர்ந்தது......!

நீங்கள் சொல்வதெல்லாம் படிப்பதற்கு வாகா இருக்குதே தவிர வேறு ஒன்றுமே இதில் இல்லை.மேலும் சொல்லப்போனால் உங்களின் வீட்டாரை கண்கலங்க வைத்திருப்பதைத் தவிர.....!

எனது நண்பர் தனது கணனியில் ஒரு மரண அஞ்சலியென்று தனது படத்தை போட்டொசொப் செய்து வாக்கியங்கள் எல்லாம் அமைத்து அதில் வைத்திருந்தார்......அவர்களின் படுக்கை அறையில் அந்தக் கணனி இருந்தது.....அது எப்பொழுதும் திறக்கும் போதும் மூடும் போதும் அவரின் மனைவி கண்ணீர் விடாத நாளே இல்லாமல் இருந்தது. இது எனக்கு தெரியவந்து அவரோடு உரிமையுடன் பேசி சண்டை பிடித்து அவற்றையெல்லாம் அழிக்க வைத்தேன்........!

                    ஒரு மனிதனுக்கு சகோதரர்கள், பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் யார்.....எதுவரை எவ்வளவு காலம்வரை..... தாரமும்,தாயும் தந்தையும்தான் ஒருவரது இழப்பை கடைசிவரை தங்கள் நெஞ்சில் சுமந்து வாழ்பவர்கள்.....எமது ஒரு சொல்லோ எழுத்தோ தாய் தாரத்தை வேதனைப் படுத்தாமல் இருந்தால் அதுவே பெரும்பேறு......!

இன்று உக்ரேனில் செத்துக் கொண்டிருக்கிறார்களே எவ்வளவு கனவுகளுடன் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் மரணம் அவர்கள் நினைத்தபடியா நடந்து கொண்டிருக்கு......!

நீங்கள் படித்தவர்கள் அதிகமான அறிவும் பிரச்சினைதான் போல் இருக்கு.....குறைவிளங்க வேண்டாம்....ஏதோ தோணிச்சுது எழுதிவிட்டேன்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

நீங்கள் படித்தவர்கள் அதிகமான அறிவும் பிரச்சினைதான் போல் இருக்கு

ஒரு பதிவை விமர்சனம் செய்ய உங்களுக்கு முழு உரிமை உண்டு. இதே கட்டுரையை என்னிடம் சிலாகித்தவர்களும் உண்டு. அது ஒவ்வொருவர் பார்வை, ரசனை பற்றியது.  

          இருப்பினும் மேற்குறித்ததைப் போன்ற தனிநபர் விமர்சனத்தைத்  தவிர்ப்பது நாகரிகமாய் இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுப.சோமசுந்தரம் said:

ஒரு பதிவை விமர்சனம் செய்ய உங்களுக்கு முழு உரிமை உண்டு. இதே கட்டுரையை என்னிடம் சிலாகித்தவர்களும் உண்டு. அது ஒவ்வொருவர் பார்வை, ரசனை பற்றியது.  

          இருப்பினும் மேற்குறித்ததைப் போன்ற தனிநபர் விமர்சனத்தைத்  தவிர்ப்பது நாகரிகமாய் இருக்கும். 

அதற்காக மிகவும் வருந்துகிறேன் ........! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.