Jump to content

கல்வித் தகைமையும் அரசியலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்வித் தகைமையும் அரசியலும்

என்.கே. அஷோக்பரன்

அரசியலில் மாற்றம் வேண்டும் என்போர் பலரினதும் எண்ணப்பகிரல், ‘படிச்சவன் அரசியலுக்கு வரவேண்டும்’ என்பதாக இருக்கிறது.

‘படிச்சவன்’ என்ற சொற்பதத்தின் பயன்பாடு, கொஞ்சம் மேலோட்டமானது. ஆனால், பெரும்பாலும் இந்தச் சொல் ஏதோ ஒரு துறையில் கற்று, பட்டம் பெற்று, குறித்த துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளமையைச் சுட்டியே, பொதுவில் பயன்படுத்தப்படுவதை அவதானிக்கலாம்.

தம்மைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதி, படித்துப் பட்டம் பெற்ற ஒருவராக இருக்க வேண்டும் என்ற அவா, மக்களிடையே அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அதற்கு ஒருவகையில், ஏலவே உள்ள அரசியல்வாதிகளின் நடத்தைகளும் நடவடிக்கைகளும், முக்கிய காரணமாக இருக்கிறது. இத்தகைய மோசமான அரசியல்வாதிகளை வெறுக்கும் மக்களிடையே, அவர்களின் மோசமான நடத்தைகளுக்குக் காரணம், அவர்கள் ‘படித்தவர்களாக இல்லை’ என்ற பொது மனப்பான்மை, ஏதோவொரு வகையில் உருவாகிவிடுகிறது. ஆகவே படித்தவர்கள், தொழில் நிபுணர்கள் அரசியலுக்கு வந்தால், அவர்கள் திறம்படச் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை, மக்களிடையே ஏற்பட்டுள்ளதையும் காணலாம்.

இந்தப் ‘படித்தவர்களின் ஆட்சி’ என்பதை முன்னிறுத்தியே, சில கட்சிகள், அரசியல் குழுக்கள் அல்லது அழுத்தக் குழுக்கள், தமது அரசியலை முன்னெடுப்பதையும் நாம் காணலாம்.

இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கூட, ‘வியத்மக’ என்ற ‘படித்த’ நிபுணர்களின் குழுவொன்றின் பலத்த ஆதரவுப் பின்புலத்திலிருந்து வந்தவர். அந்த நிபுணர்களின் ஆட்சியில், இலங்கையை மாற்றுவேன் என்ற சூளுரையோடு தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார்.

ஆனால், பாடசாலைக் கல்வியைத் தாண்டிப் படித்திராத, முன்னாள் கிராம சேகவரான மைத்ரிபால சிறிசேனவின் ஆட்சியை விட, மோசமான ஆட்சியாக இந்த ‘நிபுணர்’களின் ஆட்சி நடந்துகொண்டிருப்பதை, மக்கள் நித்தம் நித்தம் அனுபவம் மூலம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நாட்டின் பெரும் சாபக் கேடான இனவெறித் தீக்கு, எண்ணெய் ஊற்றி, பெரும் தீப்பிளம்பாக மாற்றிய, தனிச்சிங்களச் சட்டத்தை அறிமுகப்படுத்திய எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
20ஆம் நூற்றாண்டில் நடத்தப்பட்ட பெரும் இனரீதியான புத்தக அழிப்பு யாழ்ப்பாண நூலக எரிப்பு ஆகும்.

20ஆம் நூற்றாண்டில் ஆசியாவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய இன அழிப்பான 1983 கறுப்பு ஜூலை என்பன, சிலோன் பல்கலைக்கழகம், இலங்கை சட்டக் கல்லூரியில் ‘படித்த’ ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியில் நடந்தேறியிருந்தன.

“ஒரு மொழி, இருநாடு; இரு மொழி, ஒரு நாடு” என்று 1956இல் பேசிய கலாநிதி கொல்வின் ஆர் டீ சில்வாவும் தனிச்சிங்களச் சட்டத்தை 1956இல் கடுமையாக விமர்சித்த கலாநிதி என்.எம்.பெரேராவும், சிங்கள மொழியை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக அறிவித்த, பௌத்த மதத்துக்கு முதலிடம் தந்த 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பை ஆதரித்திருந்தார்கள்.

சிலோன் பல்கலைக்கழகம் மற்றும் இலண்டன் பல்கலைக்கழகத்தல் ‘படித்த’ கொல்வின் ஆர் டீ சில்வா, கலாநிதி பட்டத்தை இலண்டன் பல்கலைக்கழகத்தின்  கிங்ஸ் கல்லூரியில் பெற்றிருந்தார். 

என்.எம். பெரேரா, இலண்டன் பொருளியல் மற்றும் அரசறிவியல் கல்லூரியின் பேராசிரியர் ஹறல்ட் லாஸ்கியின் கீழ் கற்று, தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டதுடன், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து விஞ்ஞான முனைவர் பட்டத்தையும் பெற்று, இரட்டைக் கலாநிதிப் பட்டங்களைக் கொண்டிருந்தார்.
இந்த இருவரும் சிறிமாவோவின் அரசாங்கத்தில், அமைச்சர்களாகப் பதவி வகித்தது மட்டுமல்லாது, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பை ஆதரித்தும் இருந்தார்கள்.

தமிழர்களின் அரசியலைப் பொறுத்தவரையில், ‘தனிநாடு’ என்ற உணர்ச்சிவயப்பட்ட கோரிக்கையை, அதன் சாத்தியப்பாடுகள், அதன் குறுங்கால மற்றும் நீண்டகால விளைவுகள் என்பவற்றைப் பற்றிய எந்தச் சிந்தனையுமின்றி, எதுவித திட்டங்களுமின்றி அரசியல் பகட்டாரவாரமாக முன்வைத்தவர், ராஜா அப்புக்காத்துவான சா.ஜே.வே.செல்வநாயகம்.

செல்வநாயகத்தின் முன்வைப்பை, தனது அரசியலின் மூலதனமாக மாற்றியவர் ‘படித்த’ சட்டத்தரணியான அ.அமிர்தலிங்கம். இளைஞர்களைச் சரியான அரசியல் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கடமையைக் கொண்டிருந்தவர், இளைஞர்களை உணர்ச்சிவச அரசியலின் பாதையில் இட்டுச்சென்று, தமிழினத்தின் தலையெழுத்தையே தலைகீழாக மாற்றிப்போட்டுவிட்டார். அவர் இட்டதீ, அவரையே சுட்டது.

ஆகவே, ‘படித்த’ அரசியல்வாதிகளும் கூட, மிக மிக மோசமான முடிவுகளை எடுத்திருக்கிறார்கள்; மிக மோசமான காரியங்களைச் செய்திருக்கிறார்கள்; மிக மிக மோசமான காரியங்கள் நிகழ்வதை அனுமதித்திருக்கிறார்கள்; தமது பதவியைக் காத்துக்கொள்ள, பிழையானவற்றை ஆதரித்திருக்கிறார்கள். அதனால், கல்வியறிவு அவசியமில்லை என்று ஆகிவிடாது. ஆனால், கல்வித்தகைமை மட்டும் ஓர் அரசியல்வாதியை சிறந்தவராக்கி விடாது.

முன்னர் குறிப்பிட்டதுபோல, இங்கு பொதுவாகக் கல்வித்தகைமையாக, அல்லது ஒருவரைப் படித்தவராகக் கருதுவதற்கு அடிப்படையாக அமைவது, அவர் முறையான கல்வியைப் பெற்று, பட்டம் பெற்றிருப்பதையே ஆகும். முறையான கல்வி என்பது, ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் முறையான கற்றல் வடிவமாகும். பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு கட்டமைக்கப்பட்ட தரத்தின் அடிப்படையிலான கல்வி இதுவாகும்.

பாலர் பாடசாலைக் கல்வி, பாடசாலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி என முறையான கல்வி அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. முறையான கல்வி என்பது, ஆரம்பத்தில் வகுப்பறை அடிப்படையிலானது. அதாவது, ஒரு மாணவர் கற்றுக் கொள்ளும் அனைத்தும், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஒரே நோக்கத்துடன், புத்தகங்கள் மற்றும் பிற கல்விச் சாதனங்களூடு கல்வி புகட்டப்படுகிறது.

இங்கு, எவர் பாடத்திட்டத்தைத் தீர்மானிக்கிறாரோ, அவரே அந்தத் தலைமுறையின் ‘முறையான கல்வியறிவின்’ அளவையும் பெருமளவுக்குத்  தீர்மானிக்கிறார்.
பல்கலைக்கழகக் கல்வியில்தான் பெருமளவுக்கு ஆய்வு அடிப்படையிலான கல்வியை நோக்கி, முறையான கல்வி திரும்புகிறது. ஆனால், இது குறித்த நபர் தெரிவுசெய்த துறையிலுள்ள ஏதோ ஒரு விடயம் பற்றிய ஆழமான ஆய்வாகவே அமைகிறது.

ஆகவே, முறையான கல்வி என்பது, மனித அறிவை விருத்திசெய்யும் ஒரு வழியே அன்றி, முறையான கல்வி மட்டும்தான் மனித அறிவுக்கான அளவுகோல் என்பது ஏற்புடையதொன்றல்ல.

அரசியல் என்பது, மிகச் சிக்கலானதொரு கலை மட்டுமல்ல, ஆபத்தானதொரு கலையும் கூட. ஏனென்றால், அதிகாரத்தைக் கையாளும் கலை அது! அதற்குப் பரந்த அறிவு அவசியம். அறிவை விடவும் ஆற்றல் அவசியம்.

இவையெல்லாவற்றையும் விட, தரமான குணநலனும் நேர்மையும் நல்லெண்ணமும் அவசியம். அதிகாரம் என்பது, மிகப்பெரும் பலம் மட்டுமல்ல; மிகப்பெரும் பொறுப்பும் கூட!

ஜனநாயக உலகத்தில், அதிகாரம் என்பது மக்களுடையது; மக்களுக்கானது. அப்படியானால், அந்த மக்களின் நல்லெண்ணத்தை முன்னிறுத்துபவர் ஒருவரே, தன்னலமின்றி அதிகாரத்தை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தும் இயல்பினராவார். ஆனால், நல்லெண்ணம் மட்டும் போதாது.

அதிகாரத்தை எப்படி, மக்களின் நன்மைக்குப் பயன்படுத்துவது என்ற அறிவும் வேண்டும். அது, ஒரு துறைசார்ந்த அறிவாக இருக்க முடியாது. பரந்த அறிவும் அனுபவமும் அதற்குத் தேவை.

நல்லெண்ணமும் பரந்த அறிவும் மட்டும், காரியத்தைச் சாதிக்க உதவாது. அதற்கு எதையும் சாதிக்க வல்ல ஆற்றலும் இயலுமையும் அவசியம். இவையெல்லாம் ஒன்றிணையும்போதுதான் திறமையானதோர் அரசியல்வாதியாக அவர் துலங்குவார்.
ஆகவே, முறையான கல்விறிவு உடையவர்கள் அரசியலுக்கு வந்தால், அது நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்குமான சர்வரோக நிவாரணியாக அமையும் என்ற நம்பிக்கையில் அர்த்தமுமில்லை; உண்மையுமில்லை.

முறையான கல்விபெறாத காமராஜர், மக்களை நேசிக்கும் நேர்மையான, ஆற்றல் மிகு தலைவனாக இருந்தமையால், முறையான கல்வியைப் பெற்றுக்கொள்ள சாமானியர்களுக்குள்ள சவால்களை, தனது அனுபவத்தின் வாயிலாக உணர்ந்தமையால், மிகப் பரந்த சமூக, பொருளாதார, அரசியல் அறிவைக் கொண்டிருந்தமையால், அனைவரும் கல்வி பெறத்தக்க திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இப்படிப் பல உதாரணங்கள் உலகெங்கும் இருக்கிறது.

முறையான கல்வி பெற்றவர்களே, சிறந்த அரசியல்வாதிகளாவார்கள் என்று கருதுவதைவிட அபத்தமானது, ஆங்கிலம் நல்லாப் பேசுகிறான்; சிங்களம் நன்றாகப் பேசுகிறான்; தமிழ் நன்றாகப் பேசுகிறான்; இருமொழியாற்றல் உடையவன்; மும்மொழியாற்றல் உடையவன் என்பதால் மட்டும், ஒருவனை மிகச் சிறந்த அரசியல்வாதியாகக் கருதுவதாகும்.

மொழியாற்றலுக்கும் ஒருவனுடைய அறிவுக்கும் நல்லெண்ணத்துக்கும்  ஆற்றலுக்கும் எந்தச் சம்பந்தமும்மில்லை. இந்த அபத்தங்களைத் தாண்டி, மக்கள் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கல்வித்-தகைமையும்-அரசியலும்/91-291680

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.