Jump to content

உக்ரைன் விவகாரம் : இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்து!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் விவகாரம் : இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்து!

உக்ரைன் விவகாரம் : இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்து!

உக்ரைன் விவகாரத்தில் இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் என ஐ.நா சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்  இன்று (செவ்வாய்க்கிழமை) அவசர கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடரந்து தெரிவித்த அவர், ” உக்ரைன் தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் ரஷ்யாவின் தொடர் அறிவிப்புகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

ரஷ்ய கூட்டமைப்புடன் உக்ரைன் எல்லையில் பதற்றம் அதிகரிப்பது ஆழ்ந்த கவலைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இந்த முன்னேற்றங்கள் பிராந்தியத்தின் அமைதியையும்,  பாதுகாப்பையும் குறை மதிப்பிற்கு உட்படுத்தும் சாத்தியம் உள்ளது.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கான இன்றியமையாத தேவையை நாங்கள் வலுவாக வலியுறுத்துகிறோம். அதன்மூலம் பரஸ்பர இணக்கமான தீர்வு விரைவில் எட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1268354

#############    ##############   #################

இரண்டு  நாடுகள்  சண்டை பிடித்தால்.... 
சின்ராசு, பாடத்  தொடங்கீடுவான்.  😂

Link to comment
Share on other sites

இன்று ரஸ்ய தொலைக்காட்சியில் இம்ரான் கான் மோடியின் அரசை நாசிகளின் அரசு என கூறி  நேரு காலத்தில் இருந்த ஜனநாயக இந்தியா இப்போ இல்லை என கூறி இருந்தார்.

 இந்தியாவின் பதில் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைன் விவகாரம் : இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்து!

இணக்கமான தீர்வு? அப்பிடியெண்டால் என்னெண்டு தெரியுமோ?

வாயிலை மண்ணை அள்ளி போட...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.