Jump to content

உக்ரைனில் இடம்பெற்று வரும் விடயங்கள் தொடர்பில், உன்னிப்பாக... அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனில் இடம்பெற்று வரும் விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

உக்ரைனில் இடம்பெற்று வரும் விடயங்கள் தொடர்பில், உன்னிப்பாக... அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

உக்ரைனில் இடம்பெற்று வரும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகம், உக்ரைனில் வசிக்கும் 14 மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைனிலுள்ள 14 இலங்கை மாணவர்களில் 6 பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகம் எஞ்சிய 8 மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உக்ரைனிலுள்ள அனைத்து இலங்கைப் பிரஜைகளும் அவதானத்துடன் செயற்படுமாறும், அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு அத்தியாவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதை தற்போது தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கையர்களை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, உக்ரைனின் கிழக்கு பகுதியிலுள்ள இரண்டு பகுதிகளை சுதந்திர குடியரசுகளாக அங்கீகரிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அறிவித்துள்ள நிலையில் அங்கு பதற்றநிலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1268317

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைனில் இடம்பெற்று வரும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

கவனிச்சு என்ன செய்யிறதாய் உத்தேசம்? படைகளை அனுப்பி போரிடலாமா? தானும் ஒரு ஆளாம் என்று கவனிக்கிறாராம், அதிலும் உன்னிப்பாக. பக்கத்து வீட்டுக்கு ஓடியோடி போய் அவர்களின் தோஷம் பிடிச்சிட்டுது.

Link to comment
Share on other sites

யாரடா நீங்க?முதலில் உங்கடய கழுவுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பு  பகுதியில்  வந்திருக்கணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, sitpi said:

யாரடா நீங்க?முதலில் உங்கடய கழுவுங்கோ.

ஆத்திரம் கட்டுக்கடங்காமல் எங்கடை பழைய காய் ஒண்டு களம் இறங்கியிட்டுது...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கும் இதுபோன்ற ஆதரவை யாராவது கொடுத்துவிடுவார்களோ என்று உன்னிப்பாக அவதானிக்கிறார்களோ.... என்றும் எடுக்கலாம்.

மேற்கு உக்ரெயினை தமக்குள் இழுக்க , ரஸ்யா முன்னகர்ந்து தனது ஆதிக்கத்தை தனது எல்லையோரம் நிலைநாட்டித் தடுத்தாடுகிறது. இங்கே மக்கள் நலனோ இன நலனோ கிடையாது. தமது தேசநலன், சுயநலன் மட்டுமே.ஆனால், அந்த நலனின் ஊடாக தமது நலன்களை டொனெஸ்க் மற்றும் லுகான்ஸ்க் மக்கள் அடைகின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

தமிழர்களுக்கும் இதுபோன்ற ஆதரவை யாராவது கொடுத்துவிடுவார்களோ என்று உன்னிப்பாக அவதானிக்கிறார்களோ.... என்றும் எடுக்கலாம்.

மேற்கு உக்ரெயினை தமக்குள் இழுக்க , ரஸ்யா முன்னகர்ந்து தனது ஆதிக்கத்தை தனது எல்லையோரம் நிலைநாட்டித் தடுத்தாடுகிறது. இங்கே மக்கள் நலனோ இன நலனோ கிடையாது. தமது தேசநலன், சுயநலன் மட்டுமே.ஆனால், அந்த நலனின் ஊடாக தமது நலன்களை டொனெஸ்க் மற்றும் லுகான்ஸ்க் மக்கள் அடைகின்றார்கள். 

மக்டொனால்ஸ் மக்கள் ...? 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கும் இதுபோன்ற ஆதரவை யாராவது கொடுத்துவிடுவார்களோ என்று உன்னிப்பாக அவதானிக்கிறார்களோ.... என்றும் எடுக்கலாம்.

ரசியன் அமெரிக்கன் டொலர் இங்கு தேவையில்லையென்று ...தூக்கி எறியச் சொன்னால்...அங்குள்ள இலங்கையரைக் கொண்டு நைசா பொறுக்கிவிடலாம் என்ற ஐடியாதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் இவர்கள் சொல்லுகிற அந்த உன்னிப்பாக அவதானமோ? பொறுக்கேக்கை அவன் அடிக்கிற ஷெல் வந்து விழப்போகுது தலையில!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

அதுதான் இவர்கள் சொல்லுகிற அந்த உன்னிப்பாக அவதானமோ? பொறுக்கேக்கை அவன் அடிக்கிற ஷெல் வந்து விழப்போகுது தலையில!

அடிக்கொரு  குண்டு  போட  அவர்கள் நினைக்கமாட்டார்கள்  என்ற  தைரியம்  தான்
அப்படி  போட்டு  திவாலாக  அவர்கள் அந்தளவு   மோடுகள் இல்லைத்தானே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

அடிக்கொரு  குண்டு  போட  அவர்கள் நினைக்கமாட்டார்கள்  என்ற  தைரியம்  தான்
அப்படி  போட்டு  திவாலாக  அவர்கள் அந்தளவு   மோடுகள் இல்லைத்தானே???

பட்ட அனுபவப்பாடம் உண்டல்லவா? எங்கள் தலையில குண்டுமாரி பொழிந்து சந்தோஷப்பட்டதன் விளைவை இப்போ அனுபவிக்கும்போது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, satan said:

பட்ட அனுபவப்பாடம் உண்டல்லவா? எங்கள் தலையில குண்டுமாரி பொழிந்து சந்தோஷப்பட்டதன் விளைவை இப்போ அனுபவிக்கும்போது.

அப்படி என்னைத்த அனுபவிக்கிறாங்க🤔🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் அனுபவிக்கலை, ஆனால் அவர்களை தாங்கிய மக்கள் அனுபவிக்கிறார்கள். அதன் வெளிப்பாடு வெகு விரைவில் வெளியில் வரும். அது உங்களுக்கு கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். வினை விதைத்தவன் அதைத்தானே அறுக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

அவர்கள் அனுபவிக்கலை, ஆனால் அவர்களை தாங்கிய மக்கள் அனுபவிக்கிறார்கள். அதன் வெளிப்பாடு வெகு விரைவில் வெளியில் வரும். அது உங்களுக்கு கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். வினை விதைத்தவன் அதைத்தானே அறுக்கவேண்டும்.

வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல 😏😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

பட்ட அனுபவப்பாடம் உண்டல்லவா? எங்கள் தலையில குண்டுமாரி பொழிந்து சந்தோஷப்பட்டதன் விளைவை இப்போ அனுபவிக்கும்போது.

 

7 hours ago, satan said:

அவர்கள் அனுபவிக்கலை, ஆனால் அவர்களை தாங்கிய மக்கள் அனுபவிக்கிறார்கள். அதன் வெளிப்பாடு வெகு விரைவில் வெளியில் வரும். அது உங்களுக்கு கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். வினை விதைத்தவன் அதைத்தானே அறுக்கவேண்டும்.

நன்றி ஐயா
நான்  எழுத  வந்ததெல்லாம் இங்கே  ஏற்கனவே  பதியப்பட்டிருக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.