Jump to content

UK யில் 2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Victim: Mylvaganam Nimalrajan
Victim: Mylvaganam Nimalrajan

NEWS - 24 FEBRUARY 2022 12:59

Man arrested by Met's War Crimes team as part of Sri Lankan murder investigation

The Met’s War Crimes team are appealing for information as part of an ongoing investigation into a murder committed in Sri Lanka more than 20 years ago.

Officers from the War Crimes Team - part of the Counter Terrorism Command – arrested a 48-year-old man at an address in Northamptonshire on Tuesday, 22 February as part of a proactive operation.

He was arrested on suspicion of offences under Section 51 of the International Criminal Court Act 2001. He was taken into custody, and has since been released under investigation.

The arrest relates to the murder of journalist Mylvaganam Nimalarajan who was killed in 2000.

Mr Nimalarajan’s family have been informed of this development, and they are being supported by specialist officers.

Enquiries continue, and officers are eager to hear from anyone who may have information that could assist the investigation - particularly members of the Sri Lankan community who emigrated to, and now reside in, the UK.

Commander Richard Smith, who leads the Met’s Counter Terrorism Command, said: “This is a significant update in what is a sensitive, complex investigation.

“There will still be people who may have information, particularly in relation to the murder of Mr Nimalarajan, and we would urge those people to come forward and help achieve justice for Mr Nimalarajan’s family.”

To provide information, email the War Crimes Team directly at SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk

+ The Met Police War Crimes Unit sits within the Met Police Counter Terrorism Command. It is committed to investigating and bringing to justice anyone who may fall under the UK’s jurisdiction and who is suspected of committing war crimes, crimes against humanity, genocide or torture anywhere in the world. This approach directly supports the UK Government’s ‘no safe haven’ policy.

Such investigations often require enquiries to be made overseas and evidence to be secured from abroad, so they can be very complex and lengthy.

All allegations of war crimes referred to the War Crimes Team are considered, assessed and dealt with in line with the War Crimes/Crimes Against Humanity referral guidelines, which are jointly agreed with the Crown Prosecution Service (CPS).

The War Crimes Team is part of the UK War Crimes Network, which is comprised of a number of key bodies, including the Foreign, Commonwealth and Development Office, Crown Prosecution Service and other government and non-government organisations, all working together to ensure the UK is not a safe haven for war criminals.

 

Subjects

Categories

Regions

Related media

Mylvaganam NIMALARAJAN
நிமலராஜன் கொலை சம்பந்தமாக மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் பின்வரும்  மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர் WarCrimesTeam@met.police.uk <SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk>
Link to comment
Share on other sites

  • பெருமாள் changed the title to UK யில் 2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது.
  • கருத்துக்கள உறவுகள்

அட பாவி…. நிர்மலராஜனை, 2000,ம் ஆண்டு ஊரில் கொலை செய்து விட்டு,
இவ்வளவு நாளும் இங்கிலாதில் பதுங்கி இருந்திருக்கிறானா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அட பாவி…. நிர்மலராஜனை, 2000,ம் ஆண்டு ஊரில் கொலை செய்து விட்டு,
இவ்வளவு நாளும் இங்கிலாதில் பதுங்கி இருந்திருக்கிறானா. 

டக்கி அங்கிளுக்கு கஸ்ர காலம்தான்..😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

டக்கி அங்கிளுக்கு கஸ்ர காலம்தான்..😆

டக்கிக்கு….. ஏழரை ஆரம்பிச்சிட்டுது போல் இருக்கு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்கியே ஒரு டபிள் ஏழரை ........நீங்க வேற........!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

டக்கிக்கு….. ஏழரை ஆரம்பிச்சிட்டுது போல் இருக்கு. 🤣

May be an image of 1 person, beard, sitting and indoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை நாளைக்குத்தான் மூடி மறைப்பர்....என்றாவது ஒரு நாள் வெளியில் வரத்தானே வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சக ஊடகவியல் நண்பர் இந்த செய்தியை நமது தமிழ் ஊடகங்கள் ஏன் தங்களின் தளம்களில்  போடுகினம் இல்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இவரா அவர்?

டக்கியார் மடித்து கட்டிய வேட்டியின் பின் இவர் உதிர்ந்து விழுந்தவர் ஆனால் தமிழ் ஊடகங்கள் என்பவை பொய்யுக்கு தமிழ் தேசியம் பாடியுள்ளன .

அவரேதான் ஆனால் ஆதாரம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிமலராஜன் கொலை தொடர்பான முக்கிய சந்தேகநபர் ஒருவர் லண்டனில் கைது!

February 24, 2022
 

 

ஊடகவியலாளர்  நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்    லண்டனில் மெற் காவற்துறையால் கைது!

ஊடகவியலாளர் ம. நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்   ஒருவர்  லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக யுத்தக் கு்றங்களை விசாரிக்கும் பெருநகர காவற்துறைப் பிரிவு தெரிவித்துள்ளது. 

கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இரவு 8 மணியளவில் ஊடகவியலாளர் மயில்வாகனம்  நிமலராஜன் வீட்டில் செய்தி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை சுட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த படுகொலையின் பிரதான சந்தேகநபர் என  அடையாளம் காணப்பட்ட ஒருவர்,  காவல்துறையினா் மேற்கொண்ட விசாரணைகளின் இனம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் வழக்கு விசாரணைக்கு சமூகம் அளிக்காது தலைமறைவானார்.

இந்த நிலையில் இலங்கையில் இடம்பெற்ற கொலை விசாரணையின் ஒரு பகுதியாக Met’s War Crimes குழுவால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற இந்தக்  கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக Met’s War Crimes Team பொதுமக்களிடம் தகவல் கோரியுள்ளது.

போர்க்குற்றக் குழுவின் அதிகாரிகள் – பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்  ஒரு பகுதியாக  பெப்ரவரி 22 செவ்வாய்க்கிழமை  அன்று நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள முகவரியில் 48 வயதுடைய ஒருவரைக் கைது செய்ததாக மெற் காவற்துறை தெரிவித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டம் 2001 இன் பிரிவு 51 இன் கீழ் குற்றங்கள் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் காவலில் வைக்கப்பட்டார், பின்னர் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய  இந்தக் கைது குறித்து, நிமலராஜனின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்களுக்கு சிறப்பு அதிகாரிகள் ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் தொடர்கின்றன, மேலும் விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்டிருக்கும் எவரிடமிருந்தும் தகவல்களை பேற்றுக்கொள்ள  அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர் – குறிப்பாக இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்து இப்போது வசிக்கும் இலங்கை சமூகத்தினரிடம் இருந்து இந்த தகவல்களை எதிர்பார்ப்பதாக,  Met இன் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளைக்கு தலைமை தாங்கும் கமாண்டர் ரிச்சர்ட் ஸ்மித் கூறியுள்ளார்.

“குறிப்பாக திரு நிமலராஜனின் கொலை தொடர்பாக இன்னும் சிலருக்கு தகவல்கள் இருக்கலாம், மேலும் நிமலராஜனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க முன்வருமாறு அந்த மக்களை தாங்கள் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகவலை வழங்க, போர் குற்றங்கள் குழுவிற்கு நேரடியாக SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பமுடியும்.

+ Met Police War Crimes Unit ஆனது Met Police பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளைப்பிரிவின் ஒரு பகுதியாகும். பிரித்தானியாவின்  அதிகார வரம்பிற்குள் வரக்கூடிய மற்றும் உலகில் எங்கும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை அல்லது சித்திரவதை செய்ததாக சந்தேகிக்கப்படும் எவரையும் விசாரித்து நீதிக்கு கொண்டு வருவதற்கு இது உறுதிபூண்டுள்ளது. இந்த அணுகுமுறை UK அரசாங்கத்தின் ‘பாதுகாப்பான புகலிடமில்லை’ கொள்கையை நேரடியாக ஆதரிக்கிறது.

இத்தகைய விசாரணைகள் பெரும்பாலும் வெளிநாட்டில் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் மற்றும் வெளிநாட்டிலிருந்து ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும், எனவே அவை மிகவும் சிக்கலானதாகவும் நீண்டதாகவும் இருக்கும்.

போர்க் குற்றங்கள் குழுவிடம் குறிப்பிடப்பட்ட அனைத்து போர்க் குற்றச் சாட்டுகளும் போர்க்குற்றங்கள்/மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பரிந்துரை வழிகாட்டுதல்களின்படி பரிசீலிக்கப்பட்டு, மதிப்பிடப்பட்டு கையாளப்படுகின்றன.

போர்க் குற்றங்கள் குழு என்பது UK போர்க் குற்ற வலையமைப்பின் ஒரு பகுதியாகும், இதில் வெளிநாட்டு, கொமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம், கிரவுன் ப்ராசிகியூஷன் சேர்விஸ் மற்றும் பிற அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் உட்பட பல முக்கிய அமைப்புகளை உள்ளடக்கியது. போர்க் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக பிரித்தானியா ஒருபோதும் இருப்பதில்லை.

இதேவேளை யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது  ஊர்காவற்துறை நாரந்தனை எனும் இடத்தில் குழு ஒன்று வழி மறித்து துப்பாக்கியால் சுட்டும்,  வாளினால் வெட்டியும் , இரும்பு கம்பிகள், பொல்லுகளாலும் தாக்குதல்கள் மேற்கொண்டது.

அத் தாக்குதலில் யாழ்.பல்கலைகழக ஊழியர் ஏரம்பு பேரம்பலம் மற்றும்  ரெலோ அமைப்பின் ஆதரவாளரான யோகசிங்கம் கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். 
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா , எம்.கே.சிவாஜிலிங்கம் , மற்றும் ரவிராஜ் உள்ளிட்ட 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் அடிப்படையில்  2016ஆம் ஆண்டு டிசெம்பர் 7ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ம. இளஞ்செழியன்   மூவரை குற்றவாளிகளாக இனம் கண்டு தீர்பளித்தார். இவர்களும் தலைமறைவாகினர்.

இந்த மூவருக்கும்  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், வெளிவிவாகார அமைச்சு, நீதி அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் காவல்துறை மா அதிபர் திணைக்களம் ஆகிய இணைந்து இந்தக் குற்றவாளிகள் இருவரையும் நாடு கடத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2022/173398

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்    லண்டன்  பெருநகர பொலிசாரால் கைது!

நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்    லண்டன்  பெருநகர பொலிசாரால் கைது!

ஊடகவியலாளர் ம. நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்   ஒருவர்  லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக யுத்தக் குற்றங்களை விசாரிக்கும் பெருநகர பொலிஸ்  பிரிவு (Met’s War Crimes team) தெரிவித்துள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இரவு 8 மணியளவில், ஊடகவியலாளர் மயில்வாகனம்  நிமலராஜன்,  வீட்டில் செய்தி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலையின் பிரதான சந்தேகநபர் என  அடையாளம் காணப்பட்ட ஒருவர்,  பொலிசார்  மேற்கொண்ட விசாரணைகளில் இனம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் வழக்கு விசாரணைக்கு சமூகம் அளிக்காது வெளிநாட்டில் தலைமறைவானார்.

இந்த நிலையில் இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான கொலை விசாரணையின் ஒரு பகுதியாக பெருநகர காவற்துறையின் யுத்த குற்றம் தொடர்பான விசாரணைப் பிரிவும் (Met’s War CrimesTeam), பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு (Counter Terrorism Command) அகியன இணைந்து 48 வயதான  இவரை இநகிலாந்தின் Northamptonshire பகுதியில் கடந்த 22 ஆம் திகதி (22.02.22) கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் 2001 – 51 ஆவது பிரிகு சட்டத்தின் கீழ் கைதான இவர் விசாரணையின் கீள் விடுவிக்கப்பட்டுள்ளார்

இதேவேளை 20 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற இந்தக்  கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக Met’s War Crimes Team,  பொதுமக்களிடம் தகவல்களைக் கோரியுள்ளது.

2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய  இந்தக் கைது குறித்து, நிமலராஜனின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்களுக்கு விசேட விசாரணைப்பிரிவின் அதிகாரிகள் ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

விசாரணைகள் தொடர்கின்றன, மேலும் விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்டிருக்கும் எவரிடமிருந்தும் தகவல்களை பேற்றுக்கொள்ள  அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர் – குறிப்பாக இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்து இப்போது வசிக்கும் இலங்கை சமூகத்தினரிடம் இருந்து இந்த தகவல்களை எதிர்பார்ப்பதாக,  Met இன் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளை பிரிவிற்கு தலைமை தாங்கும் கொமாண்டர் ரிச்சர்ட் ஸ்மித் (Commander Richard Smith) கூறியுள்ளார்.

“குறிப்பாக  நிமலராஜனின் கொலை தொடர்பாக இன்னும் சிலருக்கு தகவல்கள் இருக்கலாம், மேலும் நிமலராஜனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க முன்வருமாறு அந்த மக்களை தாங்கள் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகவலை வழங்க, போர் குற்றங்கள் குழுவிற்கு நேரடியாக SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பமுடியும்.

+ Met Police War Crimes Unit ஆனது Met Police பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளைப்பிரிவின் ஒரு பகுதியாகும். பிரித்தானியாவின்  அதிகார வரம்பிற்குள் வரக்கூடிய மற்றும் உலகில் எங்கும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை அல்லது சித்திரவதை செய்ததாக சந்தேகிக்கப்படும் எவரையும் விசாரித்து நீதிக்கு கொண்டு வருவதற்கு இது உறுதிபூண்டுள்ளது. இந்த அணுகுமுறை யுத்தக் குற்றவாளிகளுக்கு ‘பாதுகாப்பான புகலிடமில்லை’ என்ற பிரித்தானிய அரசாங்கத்தின் கொள்கையை நேரடியாக ஆதரிக்கிறது.

இத்தகைய விசாரணைகள் பெரும்பாலும் வெளிநாட்டில் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் அத்துடன் வெளிநாட்டிலிருந்து ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும், எனவே அவை மிகவும் சிக்கலானதாகவும் நீண்டதாகவும் இருக்கும்.

குறிப்பிடப்பட்ட அனைத்து போர்க் குற்றச் சாட்டுகளும் போர்க்குற்றங்கள்/மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பரிந்துரை வழிகாட்டுதல்களின்படி பரிசீலிக்கப்பட்டு, மதிப்பிடப்பட்டு போர்க் குற்றங்கள் குழுவினால் கையாளப்படுகின்றன.

போர்க் குற்றங்கள் குழு என்பது பிரித்தானிய போர்க் குற்ற வலையமைப்பின் ஒரு பகுதியாகும், இதில் வெளிநாட்டு, கொமன்வெல்த் மேம்பாட்டு அலுவலகம், முடிக்குரிய சட்டவாக்க சேசை, பிற அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் உட்பட பல முக்கிய அமைப்புகளை உள்ளடக்கியது. போர்க் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக பிரித்தானியா ஒருபோதும் இருப்பதில்லை இந்தக் கைது உறுதிப்படுத்துவதாகவும் குறிப்படப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது  ஊர்காவற்துறை நாரந்தனை எனும் இடத்தில் குழு ஒன்று வழி மறித்து துப்பாக்கியால் சுட்டும்,  வாளினால் வெட்டியும் , இரும்பு கம்பிகள், பொல்லுகளாலும் தாக்குதல்கள் மேற்கொண்டது.

 

அத் தாக்குதலில் யாழ்.பல்கலைகழக ஊழியர் ஏரம்பு பேரம்பலம் மற்றும்  ரெலோ அமைப்பின் ஆதரவாளரான யோகசிங்கம் கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா , எம்.கே.சிவாஜிலிங்கம் , மற்றும் ரவிராஜ் உள்ளிட்ட 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் அடிப்படையில்  2016ஆம் ஆண்டு டிசெம்பர் 7ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ம. இளஞ்செழியன்   மூவரை குற்றவாளிகளாக இனம் கண்டு தீர்பளித்தார். தலைமறைவாகிய இவர்களில் சிலருக்கும் நிமலராஜனின் கொலையுடன் தொடர்பிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த மூவருக்கும்  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், வெளிவிவாகார அமைச்சு, நீதி அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் காவல்துறை மா அதிபர் திணைக்களம் ஆகிய இணைந்து இந்தக் குற்றவாளிகள் இருவரையும் நாடு கடத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1268938

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.