Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

 ரஸ்ஸியா:

ராணுவ ரீதியிலான உதவிகள் :

புலிகளுக்கெதிரான யுத்தத்தில் இலங்கைக்கு  பெருமளவு உதவிகளை  ரஸ்ஸியா செய்துவந்திருக்கிறது. ஆயுதங்கள் , வெடிமருந்துகள், ராணுவ வாகனங்கள், விமானப்படைக்கான மிகையொலி விமானங்கள், அன்டனோவ் துருப்புக்காவி மற்றும் பொருட்களையேற்றும் சரக்கு விமானங்கள், தாக்குதல் மற்றும்  துருப்புக்காவி உலங்குவானூர்திகள், பிரதான யுத்தத் தாங்கிகள், துருப்புக்காவி வாகனங்கள், நீண்டதூர ஆட்டிலெறிகள் என்று ஒரு பாரிய ராணுவ உபகரண உதவிகளை ரஸ்ஸியா வழங்கியிருக்கிறது.

மேலும் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் களமுனைப் பயிற்சிகள் என்றும், யுத்த தந்திரோபாயங்கள், களமுனை நகர்வு ஆலோசனைகள் என்றும் யுத்தத்துடன் நேரடியாகச் சமபந்தப்பட்ட ஆலோசனைகளையும், உக்திகளையும் தொடர்ச்சியாக வழங்கியிருக்கிறார்கள்.

இலங்கை ராணுவத்திற்காக ரஸ்ஸியாவில் தயாரிக்கப்பட்ட பல ராணூவத் தளபாடங்களையும், ஆயுதங்களையும் தனது விற்பனைக்குப் பிந்திய சேவைகள், உதிரிப்பாக விற்பனை, பழுதுபார்த்தல்கள் ஆகிய யுத்தத்துடன் நேரடியாகத் தொடர்புடைய சேவைகளை ரஸ்ஸியா வழங்கியிருக்கிறது. அத்துடன், ரஸ்ஸியாவில் தயாரிக்கப்பட்டு, பிற நாடுகளில் பாவிக்கப்பட்டு, இலங்கைக்கு இரண்டாம் தரமாக வழங்கப்பட்ட பல ராணுவ உபகரணங்களுக்கான தொடர்ச்சியான உதிரிப்பாக , மேம்படுத்தல் சேவைகளையும் ரஸ்ஸியா தொடர்ச்சியாக வழங்கியே வந்திருக்கிறது. 

இலங்கை ராணூவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கான தொடர்ச்சியான வழங்கல்களும், சேவைகளும் ரஸ்ஸியாவினால் குறைந்தது 30 வருடங்களுக்கு மேலாக வழங்கப்பட்டு வந்திருக்கிறது.

ரஸ்ஸியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ராணுவத் தளபாட, ஆயுதத் தொகுதியின் சில உதராணங்களைப் பார்க்கலாம்,

1. மிகோயன் குரேவிச் - மிக் - 27 மிகையொலி தாக்குதல் மற்றும் குண்டுவீச்சு விமானங்கள்
2. எம் ஐ 24 தாக்குதல் மற்றும் எம் ஐ 17 துருப்புக்காவி உலங்குவானூர்திகள்
3. டி - 54 மற்றும் டி - 55 பிரதான யுத்தத் தாங்கிகள்
4. பி டி ஆர் - 80 ரக துருப்புக்காவி வாகனங்கள்
5. கெபார்ட் ரக கடற்படைக் கப்பல் ( ஆமெரிக டாலர் 160 மில்லியன்களுக்கு 2017 இல் ரஸ்ஸியாவினால் விற்கப்பட்டது)

அரசியல் ராஜதந்திர ரீதியிலான் உதவிகள்:

இலங்கைக்கெதிராக ஐ நா வில் கொண்டுவரப்பட்ட அனைத்துத் தீர்மானங்களிலும் இலங்கைக்கு ஆதரவாகவே ரஸ்ஸியா இதுவரையில் வாக்களித்து வந்திருக்கிறது. அதிலும் முக்கியமாக 2009 இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இனப்போரில் இலங்கையரசால் செய்யப்பட்ட போர்க்குற்றங்களையும், மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களையும் விசாரிப்பதெனும் தீர்மானங்களுக்கெதிராக ரஸ்ஸியா கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருந்ததோடு, இலங்கையின் இறையாண்மை,  பாதுகாப்புக் குறித்து தான் அதிக கவனம் கொண்டிருப்பதாகவும் வெளிப்படையாகவே தெரிவித்து வந்தது.

இதே காலப்பகுதியில் இலங்கையில் போர்நிறுத்தம் ஒன்றிற்கான முயற்சிகளை கனடா, மெக்சிக்கோ, மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் முன்னெடுத்தபோது, அதனைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ரஸ்ஸியா இறங்கியதுடன், இவ்விவகாரம் இலங்கையின் உள்நாட்டு விடயம் என்றும், பயங்கரவாதிகளுக்கெதிரான போர் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதுபோன்ற இலங்கைக்கெதிரான அனைத்து தீர்மானங்கள், நடவடிக்கைகளிலும் தனியாகவோ, சீனாவுடன் சேர்ந்தோ ரஸ்ஸியா தனது வீட்டொ அதிகாரத்தினைப் பாவித்து தடுத்தே வந்திருக்கிறது.

இதற்குப் பிரதியுபகாரமாக, உக்ரேனுக்கும் ரஸ்ஸியாவுக்கும் இடையிலான பிணக்கில், ரஸ்ஸியாவை ஆதரித்து நிற்கும் இலங்கை, ரஸ்ஸியாவின் நடவடிக்கைகளை நியாயபடுத்தியிருப்பதுடன், ரஸ்ஸியா தனது பாதுகாப்பிற்காக எடுக்கும் நடவடிக்கையென்று உக்ரேன் மீதான ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியிருக்கிறது.

பொருளாதாரம் சார்ந்த உதவிகள்:

ரஸ்ஸியா இலங்கையுடன் பல்லாண்டுகளாக பொருளாதார உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இலங்கையின் மொத்தத் தேயிலை ஏற்றுமதியில் ரஸ்ஸியாவுக்கு 17 முதல் 20 வீதமான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது, இதன் மொத்தப் பெறுமதி 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ரஸ்ஸியாவின் தேயிலைச் சந்தையில் 30 வீதமான விற்பனையினை இலங்கையின் தேயிலையே பெற்றுக்கொள்கிறது.2016 இல் மட்டும் குறைந்தது 58,000 ரஸ்ஸிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து சென்றிருக்கின்றனர். இவ்வெண்ணிக்கை பின்வந்த ஆண்டுகளில் கணிசமாகக் கூடிக்கொண்டே செல்கிறது. 

  • Like 7
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • Replies 477
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Ahasthiyan

இனி உலகில் நடக்கும் போர்களில் நிகழும் எந்தவொரு வினோதங்களும் எங்களை ஆச்சரியப் படுத்தாது ஏனென்றால் ஒரு போரில் நிகழக்கூடிய உச்சபட்ச கொடூரங்கள், இழப்புக்கள், அக்கிரமங்கள், அத்துமீறல்கள், அழிவுகள், வினோதங்

குமாரசாமி

உங்கள் இருவருக்கும் இதயபூர்வமான வணக்கம்.🤜 உங்களுக்கு என் மன ஆதங்கத்தை சொல்கின்றேன் கேளுங்கள். இன்று நடக்கும் உக்ரேன் சண்டைகளையும் எமது 40 வருட போராட்டத்தையும் ஒப்பிட்டு பார்க்கின்றேன். நான்

ரஞ்சித்

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.  ரஸ்ஸியா: ராணுவ ரீதியிலான உதவிகள் : புலிகளுக்கெதிரான யுத்தத்தில் இலங்கைக்கு  பெருமளவு உதவிகளை  ரஸ்ஸியா செ

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கெதிரான இனக்கொலை யுத்தத்தின் இறுதி நாட்களில் ஒன்றான மே 07 ஆம் திகதி ரஸ்ஸிய அரசு அப்போர் தொடர்பான தனது நிலைப்பாட்டை கூறியிருந்தது. யுத்த சூனியப் பிரதேசத்தில் அகப்பட்டிருந்த சுமார் மூன்றரை லட்சம் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றவும், காயப்பட்டவர்களை மீட்டெடுக்கவும் உடனடி யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு சில மேற்குநாடுகள் முயன்றுகொண்டிருந்த இத்தருணத்தில் ரஸ்ஸியாவின் வெளிவிவகார அமைச்சரினால் வெளியிடப்பட்ட இவ்வறிக்கை இலங்கைத் தமிழர் தொடர்பாக ரஸ்ஸியா எவ்வகையான நிலைப்பாட்டினை நடந்துகொண்டிருந்த கொடூரமான அழிவுகளுக்கு மத்தியிலும் கொண்டிருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.

புலிகளை முற்றாக அழிக்கும் இலங்கையின் போருக்கு தனது முழு ஆதரவும் இருக்கும் என்று ரஸ்ஸியா அறிவித்திருக்கிறது.

புலிகளுக்கெதிராகத் தொடர்ச்சியாக இலங்கை ராணுவத்தால் ஈட்டப்பட்டுவரும் வெற்றிகளை வெகுவாகப் பாராட்டியிருக்கும் ரஸ்ஸியா, இப்போர் தடையின்றி முன்னெடுக்கப்படுவதற்கான தனது ஆதரவையும் தெரியப்படுத்தியிருக்கிறது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம்வுடன் தொலைபேசியூடாக உரையாடிய ரஸ்ஸிய வெளிவிவகார அமைச்சர் சேர்கி லவரோவ், யுத்தம் தொடர்பான தனது திருப்தியினை தெரிவித்ததுடன், இலங்கை ராணுவத்தின் போர் முயற்சிகள் குறித்தும் கேட்டு அறிந்துகொண்டார் என்று ரஸ்ஸிய வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கிறது.

அதேவேளை ஐ நா பாதுகாப்புக் கவுன்சிலின் புதிய தலைவராகப் பதவியேற்றிருக்கும் ரஸ்ஸியாவின் தூதுவர், இலங்கைய்ன் போர் நிலவரத்தை பாதுகாப்புச் சபையில் பேச முடியாதென்றும், இலங்கை தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவோ அல்லது நியாயப்படுத்த சந்தர்ப்பம் வழங்காத நிலையில் இதுதொடர்பாக அங்கே விவாதிப்பதை தமது நாடு அங்கீகரிக்காது என்றும் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். 

இலங்கைக்கு அ ண்மையில் விஜயம் ஒன்றினை மேற்கொண்ட ரஸ்ஸிய அமைச்சர், ராணுவ அதிகாரிகள் அடங்கிய குழு, இலங்கையின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவுடம் பல கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதுடன், இனிவரும் காலங்களில் இலங்கைக்கு ராஜதந்திர ரீதியிலான ஆதரவினைச் செய்வதற்கும் தாம் விரும்புவதாக உறுதியளித்திருக்கின்றனர்.

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன்

இலங்கையின் விமானப்படையில் இணைக்கப்பட்டிருந்த அன்டனோவ் விமானங்கள், எம் ஐ தாக்குதல் உலங்குவானூர்திகள், மிக் 21 ரக மிகையொலிக் குண்டுவீச்சு விமானங்கள் ஆகியவற்றில் உக்ரேனிய விமானமோட்டிகள் கூலிக்கு பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

இது, ரஸ்ஸியாவினால் தயாரிக்கப்பட்ட வானூர்திகளை இலங்கை பயன்படுத்த ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து நடந்து வந்திருக்கிறது. ரஸ்ஸிய விமானங்களை இயக்குவதில் பரீச்சயம் மிக்க உக்ரேனிய முன்னாள் விமானப்படை விமானிகள் புலிகளுக்கெதிரான தாக்குதல்களில் நேரடியாகப் பங்குபற்றியிருப்பதுடன், பல அழிவுகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள். 

ஆனால், இத்தாக்குதல்கள் உக்ரேனியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பகையுணர்வினால் ஏற்பட்டதொன்றல்ல. மாறாக, சோவியத் ஒன்றியம் சிதறுண்ட காலத்தில் பெரும் பணப்பற்றாக்குறையினை எதிர்நோக்கிய உக்ரேனிய முன்னாள் போர்வீரர்கள் இலங்கை, வட கொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் குறைந்த சம்பளத்திற்கு பணியில் அமர்த்தப்பட்டார்கள். இதில் கவனிக்கவேண்டிய விடயம் யாதெனில் இந்த முன்னாள் உக்ரேனிய வீரர்கள் கூலிப்படையினராக பணிபுரிந்த நாடுகள் எல்லாமே ரஸ்ஸியாவின் உதவிகளையும், ஆயுதத் தளபாடங்களையும் ஏற்கனவே தம்மிடம் கொண்டிருந்தவை என்பதுதன். 

ஆகவே, தமிழர்க்கெதிரான போரில் இவர்கள் விரும்பி ஈடுபடவில்லை என்பதும், தொழில் நிமித்தமே இவர்கள் ஈடுபட்டார்கள் என்பதும், கொள்கையளவில் அல்ல என்பதும் கவனிக்கத் தக்கது. 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தாராளவாத ஜனநாயகத்திலும், மனிதவுரிமைகளிலும் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனாலும் ஒரு பேரரசைக் கட்டியெழுப்பி தமது பழைய மதிப்பை திரும்பவும் எடுத்துக்கொள்ள சர்வாதிகாரியாக செயற்படும் ரஷ்ய அதிபர் புட்டின் மீது பேரபிமானமும் கொண்டவர்கள். அவர் தன்னை கட்டுக்கடங்காத ஒரு பெருவீரனாகக் காட்ட எத்தனை பேரைப் பலிகொண்டாலும், கொல்லப்படும் மக்கள்மீது எதுவித அனுதாபமும் எமக்கு வராது.

  • Like 7
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வருமானத்தில் கணிசமானளவு வருவாயை ஏற்படுத்திக் கொடுக்கும் உல்லாசப் பயணத்துறையில் ரஸ்ஸியர்களுக்கு அடுத்ததாக அதிகளவு உக்ரேனியர்கள் இலங்கைக்கு வருகை தருகிறார்கள். கோவிட் கால தடை நீக்கல்களுக்குப் பின்னரான காலப்பகுதியில் சுமார் 19,000 ரஸ்ஸியர்களூம், 9,000 உக்ரேனியர்களும் இலங்கைக்கு வந்திருக்கிறார்கள். 

ரஸ்ஸியாவினை உற்பத்தியிடமாகவும், உக்ரேனில் தயாரிக்கப்பட்டவையுமான அன்டனோவ் 32 ரக சரக்கு விமானங்கள மூன்றினை உக்ரேன் இலங்கைக்கு விற்பனை செய்திருக்கிறது. 2021 இல் இவ்விமானங்களில் ஏற்பட்ட கோளாறுகளைச் சரிசெய்து மீளவும் சேவையில் அமர்த்தும் முயற்சிகளில் உக்ரேன் இலங்கைக்கு உதவிவருகிறது. இவை தவிரவும் இன்னும் சில அன்டனோவ் விமானங்களை உக்ரேன் 1995 இல் இலங்கைக்கு விற்பனை செய்து இருந்ததுடன், இவற்றில் முன்னாள் உக்ரேன் விமானப்படை ஓட்டிகள் செலுத்திகளாகவும்  இருந்திருக்கின்றனர். இவ்விமானங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் சிலவற்றில் இந்த உக்ரேனிய விமானமோட்டிகளும் கொல்லப்பட்டிருக்கிரார்கள். 

இலங்கை விமானப்படைக்கென்று 2006 - 2007 காலப்பகுதியில் அந்நாள் பாதுகாப்பமைச்சர் கோட்டாபயல் 6 மிக் - 27 ரக இரண்டாம் தர விமானங்களைக் கொள்வனவு செய்திருந்தார். சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இவ்விமானங்கள் குறைந்தது இரு தடவைகள் உக்ரேனுக்கு பழுதுபார்த்தல் செயற்பாடுகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.  இந்த விமானக் கொள்வனவின் மூலம் கோட்டாபயல் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டார் என்றும், விமானப்படை அதிகாரிகளீன் வேண்டுகோளான இஸ்ரேலிய கிபிர்களை உதாசீனம் செய்துவிட்டே பெரும் பணத்திற்காக கோட்டாபயல் இதனைச் செய்தார் என்றும் நம்பப்படுகிறது. 

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபயல் அரச அதிபராக பதவியேற்றதன் பின்னர் உக்ரேனுடனான உறவுகளை புதுப்பிக்க தாம் விரும்புவதாக அறிவித்திருந்தார். உல்லாசப் பயணத்துறை, தேயிலை ஏற்றுமதி, தொழில்நுட்ப உதவிகள், விமானப்படை விமானங்களுக்கான சேவைகள் குறித்து உக்ரேனின் உதவி கோரப்பட்டிருந்ததாக அரசு அறிவித்திருந்தது. 

ஆனால், அண்மய ரஸ்ஸிய - உக்ரேன் மோதலில் இலங்கை ரஸ்ஸியாவின் பக்கமே நின்றாலும்கூட, "நடுநிலைமை" வகிக்கப்போவதாகக் கூறியிருப்பது மேற்குலகின் அழுத்தங்களுக்குப் பயந்துதான் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

உக்ரேனிலிருந்து வாங்கப்பட்டதாக இலங்கை அரசு கூறும் மிக் தாக்குதல் விமானக் கொள்வனவு உக்ரேன் அரசுடன் தொடர்பற்றது என்று அந்நாட்டு நீதியமைச்சர் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். உக்ரேனின் தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து சிங்கப்பூர் தொழில் அதிபர் ஒருவரூடாக வாங்கப்பட்ட இந்த இரண்டாம் தர விமானங்கள் தரமற்றவையாகக் காணப்பட்டதாகவும் ஆனால், இந்தக் கொள்வனவில் இடம்பெற்ற பெருமளவு தரகுப் பணத்திற்காக கோட்டாபயல் சார்பாக இந்தக் கொள்வனவில்  உக்ரேனின் இலங்கைக்கான தூதுவர் உதயங்க வீரதுங்க ஈடுபட்டதாகவும் இலங்கை விசாரனைக் குழுவினரை ஆதாரம் காட்டி சண்டே டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது.

https://www.newsfirst.lk/2018/03/18/further-revelations-on-the-infamous-mig-deal/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ரஸ்ஸியா, உக்ரேன் ஆகிய இரு நாட்டவருமே பல அழிவுகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

இதல் ரஸ்ஸியா கொள்கையளவிலும், ஆயுத தளபாட ரீதியிலும், ராஜதந்திர ரீதியிலும் மிகப்பெரும் அழிவினை தமிழர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இனக்கொலையின் இறுதிக்காலத்திலும், ஐ நா மனிதவுரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கெதிரான தீர்மானங்களின்போதும் ரஸ்ஸியா மிருகத்தனமாகவே நடந்திருக்கிறது, இனிமேலும் அப்படியேதான்.

உக்ரேனைப் பொறுத்தவரை ராணுவ சரக்கு விமானங்களையும், தாக்குதல் விமானங்களையும் தனியார் நிறுவனம் ஒன்றினூடாக இலங்கைக்கு விற்றிருக்கிறது. சில முன்னாள் விமானமோட்டிகளும் தனிப்பட்ட ரீதியில் கூலிக்காக தமிழர் மீது தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், கொள்கையளவில் உக்ரேன் எனும் நாடு ஈழத்தமிழருக்கெதிரான போக்கினை இதுவரை காட்டவில்லை. உக்ரேன் இலங்கையில் செலுத்தியிருக்கும் தாக்கத்திற்கு ஒப்பான தாக்கங்களை இன்னும் பல நாடுகள் கூடச் செலுத்தியிருக்கின்றன. ஆனால், இவை தனிப்பட்ட ரீதியில், நிறுவனங்கள் மூலமாக செய்யப்பட்டவை. அந்நாடுகளின் அரசியல், ராஜதந்திர ரீதியிலான கொள்கைகளின் பால் அல்ல. 

இலங்கையின் அந்நியச் செலாவணி வருமானத்தில் உக்ரேனைக் காட்டிலும் ரஸ்ஸியாவே அதிக வருவாயை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

ஆகவே, ஈழத்தமிழரான எமை பொறுத்தவரை இவ்விரு நாடுகளிலும் ரஸ்ஸியாவே கொள்கை ரீதியில் எமது இருப்பிற்கு எதிரானது. அதுமட்டுமல்லாமல் அதன் கையில் எப்போதும் இருக்கும் பலம் மிக வீட்டோ அதிகாரம் இலங்கையினை எந்தச் சந்தர்ப்பத்திலும் காப்பதற்கு உதவிவருகிறது. ஆனால், உக்ரேன் அப்படியல்ல. எம்மைப் போலவே, ரஸ்ஸிய ஆக்கிரமிப்பிற்கு முகம்கொடுத்து நிற்கும் இன்னொரு மக்கள் கூட்டமே உக்ரேன்.

இவை எப்படியாக இருப்பினும், இன்று நூற்றுக்கணக்கில் கொல்லப்படும் அப்பாவி உக்ரேனியர்களுக்காக நாம் கவலைப்படவேண்டாம், குறைந்தது சக மனிதர்களாக அவர்களின் அழிவில் அகமகிழும் கீழ்ச்செயலினைச் செய்யாமலாவது இருக்கலாமே? இதே களத்தில் திண்ணைப்பகுதியில் கொல்லப்பட்ட அப்பாவிகள் பற்றிப் பேசும்போது, "137 சவப்பெட்டி இன்று அனுப்பப்பட்டது" போன்ற அப்பாவிகளின் அழிவில் சுகம் காணும் எமது அரக்கக்குணம் களையப்பட வேண்டும்.

உக்ரேனிய விமானமோட்டிகள் எம்மைக் கொன்றார்கள், அதனால், அவர்களின் நாட்டு மக்கள் கொல்லப்பட்டது மகிழக்கூடிய விடயம் என்றால், இதே காரணத்துக்காக புலிகளின் உறவுகளான நாம் சிங்களவர்களால் கொல்லப்பட்டதும் நியாயப்படுத்தப்பட முடியும் என்பதை எம்மவர்கள் நினைவில் வைப்பது நல்லது.

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு... உக்ரேன் செய்ததும் துரோகம், ரஷ்யா செய்ததும் துரோகம்.
இதில் யார் கூட துரோகம் செய்தது என்று... தராசு வைத்து, நிறுத்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இரண்டும்... அடிபட்டு சாகட்டும். 😁

  • Like 2
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

ஈழத்தமிழர்களுக்கு... உக்ரேன் செய்ததும் துரோகம், ரஷ்யா செய்ததும் துரோகம்.
இதில் யார் கூட துரோகம் செய்தது என்று... தராசு வைத்து, நிறுத்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இரண்டும்... அடிபட்டு சாகட்டும். 😁

அப்பாவிகள் கொல்லப்படுவதைப் பார்த்து அகமகிழும் நாம், இதே நிலையில் முன்னர் இருந்திருக்கிறோம் என்பதையும், எமக்காக எவருமே குரல் கொடுக்கவில்லையென்று அழுதிருக்கிறோம் என்பதையும் நினைவில் வைப்பது நல்லது. எமது அழிவில் எவராவது அகமகிழ்ந்திருந்தால் எமது மனோநிலை எப்படியிருந்திருக்கும் என்பதையும் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

அப்பாவிகள் கொல்லப்படுவதைப் பார்த்து அகமகிழும் நாம், இதே நிலையில் முன்னர் இருந்திருக்கிறோம் என்பதையும், எமக்காக எவருமே குரல் கொடுக்கவில்லையென்று அழுதிருக்கிறோம் என்பதையும் நினைவில் வைப்பது நல்லது. எமது அழிவில் எவராவது அகமகிழ்ந்திருந்தால் எமது மனோநிலை எப்படியிருந்திருக்கும் என்பதையும் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.

 

ஐயா

கூலிக்காக  கொன்றார்களா?

வியாபாரத்துக்காக  கொன்றார்களா? என்பதல்ல முக்கியம்

எமது  உறவுகளை  கொன்றார்களா இல்லையா??

கொன்றால்  எமது  உறவுகளை கொன்றவன் கொல்லப்படும்போது ...?

மனிதனையா  நாங்க?

நீங்கள்  தெய்வங்கள்

உங்கள்  அரசியலை உங்கள்  ஆலோசைனைகளை 

உங்கள் ஆதரவுகளை அவர்களுக்கு  தெரிவியுங்கள்

நீங்களும்  உங்கள் அரசியலும் வேண்டும்  எம்  இனத்தின் விடுதலைக்கு.

நன்றி கட்டுரைக்கும் நேரத்துக்கும்

Edited by விசுகு
பிழை திருத்தம்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

 

ஐயா

கூலிக்காக  கொன்றார்களா?

வியாபாரத்துக்காக  கொன்றார்களா? என்பதல்ல முக்கியம்

எமது  உறவுகளை  கொன்றார்களா இல்லையா??

கொன்றால்  எமது  உறவுகளை கொன்றவன் கொல்லப்படும்போது ...?

மனிதனையா  நாங்க?

நீங்கள்  தெய்வங்கள்

உங்கள்  அரசியலை உங்கள்  ஆலோசைனைகளை 

உங்கள் ஆதரவுகளை அவர்களுக்கு  தெரிவியுங்கள்

நீங்களும்  உங்கள் அரசியலும் வேண்டும்  எம்  இனத்தின் விடுதலைக்கு.

நன்றி கட்டுரைக்கும் நேரத்துக்கும்

என்னைத் தெய்வமாக்க வேண்டாம் அண்ணை. அப்பாவிகளைக் கொல்வதை நியாயப்படுத்தவேண்டாம், அவர்களின் அழிவில் மகிழவேண்டாம், ஏனென்றால் நாமும் இதே அழிவை எதிர்கொண்ட மக்கள் கூட்டம் என்னும் அடிப்படையிலிருந்து இதனை நாம் அணுகவேண்டும் என்றுதான் கேட்கிறேன். 

ஆனால், அப்படியல்ல, அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நியாயமானது, அவர்கள் கொல்லப்படுவது எமக்கு மகிழ்வினை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் நினைத்தால், நாம் அழிக்கப்பட்டதுகூட எவரோ ஒருவரால் நியாயப்படுத்தப்படும், இன்னொரு மக்கள் கூட்டத்தால் மகிழ்ந்து வரவேற்கப்படும். 

இதுபற்றி உங்களுடன் பேச எனக்கு வேறு எதுவும் இல்லை. நன்றி உங்கள் கருத்திற்கும் நேரத்திற்கும் அண்ணை!

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணொளியை ஒருகணம் பார்த்துவிட்டு நீதி நியாயங்களை பேசுங்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இந்த காணொளியை ஒருகணம் பார்த்துவிட்டு நீதி நியாயங்களை பேசுங்கள்.

 

 

ஏற்றுக்கொள்கிறேன், உக்ரேனிய விமானமோட்டியிருவன் தான் ஓட்டிச்சென்ற விமானத்தை காட்டுக்குள் இறக்கிவிட்டு, சிங்களத்தில் பேசிக்கொண்டு தமிழர்களை இனக்கொலை செய்யும் நோக்கத்தில் இதனைச் செய்தான்.

எனது தவறான புரிதலுக்காக வருந்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

அவர்கள் கொல்லப்படுவது எமக்கு மகிழ்வினை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் நினைத்தால், நாம் அழிக்கப்பட்டதுகூட எவரோ ஒருவரால் நியாயப்படுத்தப்படும், இன்னொரு மக்கள் கூட்டத்தால் மகிழ்ந்து வரவேற்கப்படும். 

2009 க்கு பின்னர் எம்மவர் அழிவுகளை வைத்து  தினசரி மகிழ்ந்து கொண்டுதானே இருக்கின்றார்கள். நாம் மட்டும் ஏன் நீதி நியாய பறவைகளாக அழுத கண்ணீரும் சோறுமாக அலைய வேண்டும்?

3 minutes ago, ரஞ்சித் said:

ஏற்றுக்கொள்கிறேன், உக்ரேனிய விமானமோட்டியிருவன் தான் ஓட்டிச்சென்ற விமானத்தை காட்டுக்குள் இறக்கிவிட்டு, சிங்களத்தில் பேசிக்கொண்டு தமிழர்களை இனக்கொலை செய்யும் நோக்கத்தில் இதனைச் செய்தான்.

எனது தவறான புரிதலுக்காக வருந்துகிறேன்.

இந்த சம்பவங்கள் உருவாக உதவி புரிந்ததில் உக்ரேனுக்கும் உண்டு என்பதை ஏன் உணர மறுக்கின்றீர்கள்?

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரஞ்சித் said:

 

 

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

2009 க்கு பின்னர் எம்மவர் அழிவுகளை வைத்து  தினசரி மகிழ்ந்து கொண்டுதானே இருக்கின்றார்கள். நாம் மட்டும் ஏன் நீதி நியாய பறவைகளாக அழுத கண்ணீரும் சோறுமாக அலைய வேண்டும்?

ஆகவே நாமும் உக்ரேனியர்கள் கொல்லப்படுவதையும், நீதி நியாயம் கேட்டு உயிரைக் கையில்பிடித்துக்கொண்டு ஓடுவதையும் பார்த்து மகிழலாம் என்கிறீர்கள். சரி, பரவாயில்லை.

 

24 minutes ago, குமாரசாமி said:

இந்த சம்பவங்கள் உருவாக உதவி புரிந்ததில் உக்ரேனுக்கும் உண்டு என்பதை ஏன் உணர மறுக்கின்றீர்கள்?

ஆம், உக்ரேன் காரணம், ரஸ்ஸியா காரணம், இந்தியா காரணம், சீனா காரணம், அமெரிக்கா காரணம், பாக்கிஸ்த்தான் காரணம், இங்கிலாந்து காரணம், பங்களாதேஷ் காரணம், மாலைதீவு காரணம், அவுஸ்த்திரேலியா காரணம், கனடா காரணம், ஜேர்மனி காரணம், பிரான்ஸ் காரணம்…….இப்படிப் பல நாடுகள் காரணம். அந்த அரசுகள் செய்த தவறுக்காக அந்த நாட்டு மக்கள் கொல்லப்படுவது நியாயமானதா? இப்படிப் பார்த்தால் உலகில் பல இனத்தவர்கள் கொல்லப்படவேண்டுமே? 

6 minutes ago, குமாரசாமி said:

 

Bild

இந்தப்படங்களை ஏதோ புறத்தியானுக்குக் காட்டுவதுபோலக் காட்டுகிறீர்களே? இனக்கொலை நடக்கும்போது நானும் உங்களைப்போல இதே படங்களைப் பார்த்தும், செய்திகளைக் கேட்டும் இருந்தவன் தான். அதனாலேயே இன்று அப்பாவி உக்ரேனியர்கள் கொல்லப்படும்போதும், உயிரைக் கையில்ப்பிடித்துக்கொண்டு ஓடும்போது அவர்களின் அவலம் எனக்குப் புரிகிறது. அதனாலேயே இந்த ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்கிறேன்.

 

  • Like 1
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரஞ்சித் said:

என்னைத் தெய்வமாக்க வேண்டாம் அண்ணை. அப்பாவிகளைக் கொல்வதை நியாயப்படுத்தவேண்டாம், அவர்களின் அழிவில் மகிழவேண்டாம், ஏனென்றால் நாமும் இதே அழிவை எதிர்கொண்ட மக்கள் கூட்டம் என்னும் அடிப்படையிலிருந்து இதனை நாம் அணுகவேண்டும் என்றுதான் கேட்கிறேன். 

ஆனால், அப்படியல்ல, அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நியாயமானது, அவர்கள் கொல்லப்படுவது எமக்கு மகிழ்வினை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் நினைத்தால், நாம் அழிக்கப்பட்டதுகூட எவரோ ஒருவரால் நியாயப்படுத்தப்படும், இன்னொரு மக்கள் கூட்டத்தால் மகிழ்ந்து வரவேற்கப்படும். 

இதுபற்றி உங்களுடன் பேச எனக்கு வேறு எதுவும் இல்லை. நன்றி உங்கள் கருத்திற்கும் நேரத்திற்கும் அண்ணை!

 

இன்றைய உலகு இது  தான்  சகோ

இனித்தான் உக்ரைன்  மக்கள்  எமக்கு  ◌தாம் செய்தவற்றையும்

இனி தாம் சேரவேண்டியவர்களையும்  அடையாளம்  காணப்போகிறார்கள்

தற்கு  எமது  இந்த  கோபமும் பரப்புரைகளும்  அவசியம்

செய்திகளையும்  காணொளிகளையும் பரப்புங்கள்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்த சம்பவங்கள் உருவாக உதவி புரிந்ததில் உக்ரேனுக்கும் உண்டு என்பதை ஏன் உணர மறுக்கின்றீர்கள்?

தமிழர்களின் போராட்டம் அழிக்கப்பட்டதற்கு முதலில் தமிழர்கள்தான் காரணம். போராட்டத்தில் பங்குபற்றாமல் புலம்பெயர்நாடுகளில் இருந்து நிதி கொடுத்தால் போதும் என்ற நிலைதான் காரணம். அந்த குற்றவுணர்வை மறைக்க மற்றைய எல்லோரையும் குற்றம்சாட்டி மனச்சாட்சியின் கேள்விகளில் இருந்து இலகுவாகத் தப்பிக்கும் உளவியலையும் புரிந்து கொள்ளமுடிகின்றது.

போராளிகளை நிர்வாணப்படுத்தி கொன்ற காணொளிகளைப் பார்த்துவிட்டு கோபம் கொண்டு சிங்கள அரசுக்கு எதிராகப் போராடினாமோ? இல்லைத்தானே! 

ஒரு வலிமையற்ற மக்கள் கூட்டம் சர்வாதிகாரி ஒருவனின் பேரரசுக்காக கொல்லப்படும்போது அம்மக்களுக்கு தார்மீக ஆதரவு அளிக்கவேண்டும். ஆனால் தமிழர்களில் இடதுசாரிகளும், வலதுசாரிகளும் ரஷ்யாவை ஆதரித்து வியாக்கியானங்கள் கொடுக்கின்றார்கள். 

இடதுசாரிகள், ரஷ்யா இப்போதும் ஒரு சோஷலிச நாடு என்ற மயக்கத்தில் இருக்கின்றார்கள். ரஷ்யா மேற்கத்தைய ஏகாபத்திய விஸ்தரிப்புக்கு எதிராகவும், உக்ரேயின் நேட்டோவில் சேருவதைத் தடுக்கவும் உக்ரேனிய நாட்டை ஆக்கிரமித்து, உக்கிரேனிய மக்களின் ஜனநாயக விருப்பங்களுக்கு எதிராக ஒரு பொம்மை அரசை நிறுவுவதை இந்த இடதுசாரிகள் கண்டிப்பதில்லை. கொல்லப்படும் மக்களைப் பற்றிய அக்கறை இல்லை.

வலதுசாரிகள், ரஷ்ய அதிபர் பூட்டின்மீது பேரபிமானம் கொண்டவர்கள். ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளின் மீதான ஆழமான விருப்பு, ஹிட்லைரைப் போல நடக்கும் பூட்டின் மீதும் விருப்பம் வரக் காரணம். பெரும்தொகையில் உக்கிரேனிய மக்கள் கொல்லப்படவேண்டும் என்று மனதார விரும்புவர்கள் இந்த வலதுசாரிகள். அதற்கு கொடுக்கும் நொண்டிச்சாட்டு எம்மக்களை உக்கிரேனிய வானோட்டி குண்டுபோட்டு அழித்தான் என்பது. ஆனால் அதே உக்கிரேனினடமிருந்துதான் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும், பிற ஆயுதங்களையும் புலிகளும் பெற்றிருந்தார்கள் என்பதை வசதியாக மறந்துவிடுவார்கள்.

 

  • Like 4
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இந்த சம்பவங்கள் உருவாக உதவி புரிந்ததில் உக்ரேனுக்கும் உண்டு என்பதை ஏன் உணர மறுக்கின்றீர்கள்?

இதைவிட பெரியப்பங்கை வகித்ததில் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் உள்ளடக்கம். நீங்களும் அங்கே இருந்து குப்பை கொட்டுவதால் எஜமான் விசுவாசம் அதுதானே!! விவேக் சொன்னமாதிரி 1000 பிரபாகரன் வந்தாலும் எங்கடைசனம் திருந்தப்போவதில்லை!அப்பாவிப்பொதுமக்களின் அழிவில் களிப்புறும் நாமெல்லாம் வெளிநாடு உதவவில்லை என்று இன்றுவரை சப்பைக்கட்டு கட்டுவது சகிக்கமுடியவில்லை! இப்படியானவர்களுக்காகவா போராட வெளிக்கிட்டேன் என்று நினைத்துத்தான் தலைவரும் தனது  முடிவை தானே தேடிக்கொண்டாரோ!!!

Edited by Eppothum Thamizhan
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

அப்பாவிகள் கொல்லப்படுவதைப் பார்த்து அகமகிழும் நாம், இதே நிலையில் முன்னர் இருந்திருக்கிறோம் என்பதையும், எமக்காக எவருமே குரல் கொடுக்கவில்லையென்று அழுதிருக்கிறோம் என்பதையும் நினைவில் வைப்பது நல்லது. எமது அழிவில் எவராவது அகமகிழ்ந்திருந்தால் எமது மனோநிலை எப்படியிருந்திருக்கும் என்பதையும் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.

எனது நிலைப்பாடு;

நாங்கள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிட்டோம். அழிக்கப்படும்போது இந்த உலகம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தது.

இனிமேல் யார் அழிந்தால் என்ன அழியாவிட்டால்தான் எனக்கென்ன ?

😏

Edited by Kapithan
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறுமனே புலம்பெயர் தமிழர்களை குற்றம் சாட்டாமல், ஒவ்வொருவரும் தமிழீழம் நோக்கிய போராட்டத்தில் தமது வகிபாகம் யாது என்பதை உற்று நோக்க / ஆராய  வேண்டும். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நீங்கள்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் பலம் இருந்தால் பல நாடு வரும் இல்லையென்றால் கைகட்டி வேடிக்கை பார்க்கும். உக்ரேன் நாட்டு நிலை சான்று.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

இந்தப்படங்களை ஏதோ புறத்தியானுக்குக் காட்டுவதுபோலக் காட்டுகிறீர்களே? இனக்கொலை நடக்கும்போது நானும் உங்களைப்போல இதே படங்களைப் பார்த்தும், செய்திகளைக் கேட்டும் இருந்தவன் தான். அதனாலேயே இன்று அப்பாவி உக்ரேனியர்கள் கொல்லப்படும்போதும், உயிரைக் கையில்ப்பிடித்துக்கொண்டு ஓடும்போது அவர்களின் அவலம் எனக்குப் புரிகிறது. அதனாலேயே இந்த ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்கிறேன்.

எமது பூமியில் ஆயுதங்கள் எல்லாம் மௌனிக்கப்பட்ட பின்னர் தான் ஒட்டு முழுவதுமாக அரிந்தெடுத்தார்கள்.

ஆனால் உக்ரேனில் அப்படியில்லை.இப்போது பல நாடுகள் வெளிப்படையாகவே ஆயுதம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆகவே அதன் அர்த்தம் மக்களை பாதுகாக்கின்றோம் என்ற அடிப்படையில் நீயா நானா சண்டை நடக்கின்றது.சம்பந்தப்பட்டவர்கள் மக்களைப்பற்றி கவலைப்படாமல் ஆயுதங்களை வழங்கியபடி நீலிக்கண்ணீர் வடிக்க...

எம்மவர்களோ கண்ணீர் மல்க........🤣

உயிரிழப்புகள் பற்றி எனக்கும் கவலைதான்......ஆனால் எனது பூமியில் நடந்த அவலங்களை பார்த்து விட்டு உக்ரேன் அவலத்தை பார்க்கும் போது என் கண்கள் குளமாகவில்லை. மாறாக வரட்சி....வரட்சி 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

உயிரிழப்புகள் பற்றி எனக்கும் கவலைதான்

இதுபோதும்

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இந்த மோடியை தடை செய்த நாடு, தன் சுயநலத்திற்காக தடையெடுத்து கம்பளம் விரித்து வரவேற்றார்கள், இவர்களை என்ன வென்று சொல்வது, தங்கள் சுயநலத்திற்காக யாரையும் எப்படியும் மாற்றும் இவர்களை என்னவென்று சொல்வது 🤣😅 இந்த காந்தி என்றுமே எழ முடியாது இனி😎
    • எல்லாமே இக்கரைக்கு அக்கரை பச்சை விளையாட்டு தான். டொலர் போனால் அல்லது ரசியா சீனாவிடம் பண அதிகாரம் போனால் உலகமக்கள் வாழ்வு செழிக்கும் என்ற உங்கள் கனவில் நான் தலையிட விரும்பவில்லை.  எனக்கு அவர்கள் இதைவிட மோசமான வியாபாரிகள் மக்கள் ஐனநாயக விரோதிகள். 
    • நடுவரின் தீர்ப்பால் முடிவு மாறியதா? - மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு காரணமான 'திரில்லிங்' திருப்புமுனை பட மூலாதாரம்,GETTY IMAGES 27 மார்ச் 2023, 09:18 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெண்கள் பிரீமியர் லீக் தொடர் நேற்றைய தினம் ஒரு திரில்லர் பாணியில் நடந்து முடிந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி அறிமுக பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னர் நடந்த டி20 பெண்கள் உலகக் கோப்பையை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையில் அபாரமாக விளையாடி வந்த இந்திய அணி, அரை இறுதியில் மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவிடம் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. பின்னர் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. ஒரு மாதத்திற்குப் பின்னர் இது வேறோரு களம். மீண்டும் ஓர் அதி முக்கியமான போட்டியில் மெக் லானிங் மற்றும் ஹர்மன் ப்ரீத் தலைமையிலான அணிகள் மோதின. வீடியோ கேமா? சர்வதேச ஆட்டமா? கிரிக்கெட்டில் 17 ஆண்டுக்கு பின் தென் ஆப்ரிக்கா மீண்டும் அசாத்திய சாதனை7 மணி நேரங்களுக்கு முன்னர் பிரியங்கா காந்தியின் தீவிர அணுகுமுறை காங்கிரசை கரை சேர்க்குமா?5 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச கால்பந்தில் மீண்டும் முத்திரை பதிக்கும் ரொனால்டோ - யூரோ தகுதிச்சுற்றில் சாதனைமேல் சாதனை4 மணி நேரங்களுக்கு முன்னர் ஹர்மன்ப்ரீத் கவுர் தனது தலைமையில் டி20 உலகக் கோப்பையை வெல்லத் தவறியபோதும், இந்த முறை மனம் துவளாமல் நேர்த்தியாக அணியை வழிநடத்தி கோப்பையை வெல்ல வழிவகுத்தார்.   நேற்றைய தினம் நடந்த பெண்கள் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. ஆனால் இந்தப் போட்டியின் முடிவைத் தாண்டியும் நடுவரின் ஒரு தீர்ப்பு மிகவும் சர்ச்சை கிளப்பியுள்ளது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்றைய தினம் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதிரடி இளம் வீரர் ஷஃபாலி வர்மா, அனுபவம் வாய்ந்த கேப்டன் மெக் லானிங், துடிப்பான பேட்டர் ஜெமிமா, உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர் மரிஜென் கப், பௌலிங் ஆல்ரவுண்டர் ஷீகா பாண்டே என டெல்லி வலுவான படையோடு களமிறங்கியது. அதிரடி பேட்ஸ்மேன்கள், அசத்தல் ஆல்ரவுண்டர்கள் ஃபுல் பார்மில் அணி என மும்பையும் சம பலத்தோடு களம் கண்டது. லீக் போட்டிகளில் இந்த இரு அணிகளும் மோதிய இரு போட்டிகளில் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன. லீக் சுற்றுகள் முடிவில் இரு அணிகளும் விளையாடிய எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகளோடு 12 புள்ளிகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி பேட்டிங்கை தொடங்கியது. முதல் ஓவரை மெக் லானிங் எதிர்கொண்டார். நட்சத்திர வீரர் நட் சிவர் ப்ரண்ட் பந்து வீசினார். ஐந்தாவது பந்தில்தான் முதல் ரன் எடுத்தார் லானிங். ஆறாவது பந்தை எதிர்கொண்ட ஷெஃபாலி வர்மா ஒரு ரன் எடுத்து பேட்டிங் முனைக்கு வந்தார். இப்போதுதான் அனல் பறக்கும் அந்த யுத்தம் ஆரம்பமானது. இந்த தொடரில் ஓவருக்கு ஆறு ரன்களுக்கும் கீழ் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான இஸி வாங் பந்து வீச வந்தார். இந்தத் தொடரில் அபாரமான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் அதிரடி பேட்டரான ஷெஃபாலி வர்மா வாங்கை எதிர்கொள்ளத் தயரானார். ஹாட்ரிக் எடுத்த நட்சத்திர பந்து வீச்சளராக உருவெடுத்திருந்த வாங், ஷெஃபாலிக்கு லெக் ஸ்டம்புக்கு வெளியே தனது முதல் பந்தை வீசினார். அந்த பந்தை லாங் ஆன் திசையில் விளாசினார் ஷெஃபாலி. பந்து சிக்சருக்கு சென்றது. அடுத்த பந்தையே பௌண்டரிக்கும் விளாசினார். இப்போது மூன்றாவது பந்து, ஹை ஃபுல் டாஸாக வீசினார் வாங், இடதுபுறம் நகர்ந்து லாகவமாக ஆஃப் சைடில் ஒரு ஸ்லைஸ் ஷாட் ஆடினார். அந்தப் பந்து மெலி கெர் கையில் தஞ்சமடைந்தது. பந்து இடுப்புக்கு மேல் ஃபுல் டாஸாக வந்தது என நம்பிய ஷெஃபாலி மற்றும் லானிங் உடனடியாக ரிவ்யூ செய்தனர். மூன்றாவது நடுவர் திரும்பத் திரும்ப அந்தப் பந்தின் ரீப்ளேவை பார்த்தார். பந்தை டிராக் செய்யும் தொழில்நுட்பம் அந்தப் பந்து இடுப்புக்கு மேல் வந்து, கீழே இறங்குவது போன்று தெரிந்தது. மூன்றாவது நடுவர் ஷெஃபாலி அவுட் என கள நடுவரின் தீர்ப்பை உறுதிப்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 களத்தில் இருந்த லானிங் மற்றும் ஷெஃபாலி இருவருமே அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக கேப்டன் லானிங் கள நடுவரிடமே அதிருப்தியை வெளிப்படுத்தினார். நடுவரின் தீர்ப்பு மும்பை இந்தியன்ஸுக்கு சாதகமாக சென்றதையடுத்து அந்தப் பந்து நோ பாலா இல்லையா என சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்தன. பொதுவாக கிரிக்கெட் விதிகளின்படி, பந்து வீச்சாளர் வீசும் பந்து ஃபுல் டாஸாக பேட்டரின் இடுப்புக்கு மேல் சென்றால் அந்தப் பந்து நோ பாலாக அறிவிக்கப்படும். ஆனால் இந்தக் குறிப்பிட்ட பந்தில் இரு வகையான விவாதங்கள் எழுந்தன. எனினும் நடுவரின் முடிவு குறித்து பலர் சமூக ஊடகங்களில் அதிருப்தி தெரிவித்தனர். Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 Twitter பதிவை கடந்து செல்ல, 3 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 3 Twitter பதிவை கடந்து செல்ல, 4 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 4 அபாயகரமான பேட்டர் ஷெஃபாலியை வீழ்த்தியதால் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் உற்சாகமடைந்தனர். 4 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஷெஃபாலி பெவிலியனுக்கு திரும்பினார். அவருக்குப் பின் வந்த அலிஸ் கேப்சி அதே ஓவரில் மீண்டும் ஒரு ஃபுல் டாஸ் பந்தில் இரையானார். ஒரே ஓவரில் இரண்டு ரிவ்யூக்களையும் இழந்தது டெல்லி. அடுத்த ஓவரை பிரன்ட் வீச லானிங் மற்றும் ஜெமிமா மூன்று பௌண்டரிகளை விளாசினர். ஐந்தாவது ஓவரை வீச மீண்டும் வாங் வந்தார். மீண்டும் ஒரு லோ ஃபுல் டாஸ் வீசினார் வாங். இந்த முறை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இப்படி பவர்பிளேவுக்குள்ளாகவே ஃபுல் டாசுக்கு மூன்று பேட்டர்களை இழந்தது டெல்லி. ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நங்கூரமாக நின்றார் கேப்டன் லானிங். எனினும் அவரும் 12வது ஓவரில் ரன் அவுட் ஆனார். பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் லானிங் அவுட்டானதை கொண்டாடும் மும்பை இந்தியன்ஸ் அணி. ரன்கள் எடுக்கத் தடுமாறிக் கொண்டிருந்த ஜெஸ் ஜொனாசன் அழுத்தம் காரணமாக எடுத்த ஒரு தவறான முடிவால் லானிங் தமது விக்கெட்டை இழந்தார். 16 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது டெல்லி. 73 ரன்களுக்கு மூன்று விக்கெட் என இருந்த ஸ்கோர் அடுத்த ஐந்து ஓவர்கள் கழித்துப் பார்த்தால் 79/9 என இருந்தது. டெல்லியின் பேட்டிங்கின்போது அந்த அணியின் மிக மோசமான பகுதியாக அந்த ஐந்து ஓவர்கள் அமைந்தன. இந்த ஐந்து ஓவர்களில் வெறும் ஆறு ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது டெல்லி. ஆனால், அப்போதுதான் இன்னொரு ட்விஸ்ட் காத்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, டெல்லி கேபிட்டல்ஸ் வீராங்கனை ஷிகா பாண்டே கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராதா யாதவ் மற்றும் ஷிகா பாண்டே அபராமாக விளையாடினர். குறிப்பாக ஃபுல் டாஸில் திணற வைத்துக் கொண்டிருந்த இசி வாங் வீசிய 19வது ஓவரை எதிர்கொண்ட இந்த இணை மூன்று பௌண்டரிகள், ஒரு சிக்ஸர் என 20 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரையும் விட்டு வைக்காமல் கடைசி ஓவரின் கடைசி இரு பந்துகளையும் சிக்சருக்கு விளாசினார் ராதா. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது டெல்லி. இந்த இணை வெறும் 24 பந்துகளில் 52 ரன்கள் குவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, அதிரடியில் மிரட்டிய டெல்லி கேபிட்டல்ஸ் வீராங்கனை ராதா யாதவ். கடைசி விக்கெட்டுக்கு ஒரு கூட்டணி 50 ரன்களுக்கும் மேல் குவிப்பதும், அதையும் இறுதிப்போட்டி போன்ற அழுத்தம் நிறைந்த சூழலில் இதைச் சாதிப்பதையும் டி20 போட்டிகளில் மிக மிக அரிதாகவே பார்க்க முடியும். இந்த இரு பந்துவீச்சாளர்களும் பேட்டிங்கில் அசத்தியதைப் பார்க்கும்போது ஆடுகளம் அவ்வளவு ஒன்றும் பேட்டிங்கிற்கு கடினமாக இல்லை என்றே தோன்றியது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் சேஸிங்கை தொடங்கியதும், டெல்லியை போல மந்தமாகவே விளையாடியது. பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் ஹர்மன் ப்ரீத் கவுரும் நட் சிவர் ப்ரண்டும் பொறுமையாக விக்கெட் விழக்கூடாது எனக் கவனமாக விளையாடி சிறுகச் சிறுக ரன்களைச் சேர்த்தார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை உறுதிப்படுத்திய நட் சிவர் ப்ரண்ட் 17வது ஓவரின் முதல் பந்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ரன் அவுட் ஆனார். அந்தச் சம்பவம் நிகழ்ந்ததும், ஒரு மாதம் முன்பு நடந்த உலகக் கோப்பை அரை இறுதி போட்டி பலருக்கும் நினைவுக்கு வந்திருக்கக் கூடும். ஏனெனில் அரை இறுதியில் சேஸிங்கில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஹர்மன் ப்ரீத்தின் ரன் அவுட் இந்திய அணிக்கு பாதகமானது. ஆனால், இம்முறை அவரது அணியின் சக வீரர்கள் ஹர்மன் ப்ரீத் கவுருக்கு அந்த தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES மூன்று பந்துகள் மீதமிருக்கும் நிலையில் இலக்கை எட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி. பிரண்ட் கடைசி வரை களத்தில் நின்று பொறுப்பாக விளையாடி 55 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அவரே பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதையும் வென்றார். போட்டி முடிந்த பிறகு பேசிய மெக் லானிங், மும்பை இந்தியன்ஸ் இந்த வெற்றிக்குத் தகுதி வாய்ந்த அணி எனக் குறிப்பிட்டார். நீண்ட நாட்களாக ஒரு மிகப்பெரிய வெற்றிக்குக் காத்திருந்த ஹர்மன்ப்ரீத் கவுருக்கு நேற்றைய தினம் அவருக்கான நாளாக அமைந்தது. https://www.bbc.com/tamil/articles/c137e3rz5n4o
    • ஆரம்பச் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 70) வரை. கேள்விக்கொத்து: 1)    மார்ச் 31, வெள்ளி   19:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்   -  அஹமதாபாத்     GT  vs CSK 2)    ஏப்ரல் 01, சனி  15:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  -   மொஹாலி     PBKS  vs  KKR 3)    ஏப்ரல் 01, சனி  19:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்   - லக்னோ     LSG  vs  DC 4)    ஏப்ரல் 02, ஞாயிறு   15:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்  - ஐதராபாத்     SRH   vs  RR 5)    ஏப்ரல் 02, ஞாயிறு   19:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ்   - பெங்களூரு    RCB  vs  MI 6)    ஏப்ரல் 03, திங்கள்  19:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  - சென்னை     CSK  vs  LSG 7)    ஏப்ரல் 04, செவ்வாய் 19:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்     - டெல்லி    DC  vs  GT 8 )  ஏப்ரல் 05, புதன்    19:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்     - குவஹாத்தி    RR   vs PBKS 9)    ஏப்ரல் 06, வியாழன்  19:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்     - கொல்கத்தா    KKR  vs  RCB 10)    ஏப்ரல் 07, வெள்ளி   19:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  - லக்னோ     LSG  vs  SRH 11)    ஏப்ரல் 08, சனி  15:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்   - குவஹாத்தி     RR   vs DC 12)    ஏப்ரல் 08, சனி  19:30   மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்    - மும்பை     MI  vs  CSK 13)    ஏப்ரல் 09, ஞாயிறு   15:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  - அஹமதாபாத்    GT  vs  KKR 14)    ஏப்ரல் 09, ஞாயிறு   19:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ்  - ஐதராபாத்    SRH vs   PBKS 15)    ஏப்ரல் 10, திங்கள்  19:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  - பெங்களூரு    RCB  vs  LSG 16)    ஏப்ரல் 11, செவ்வாய் 19:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி    DC  vs  MI 17)    ஏப்ரல் 12, புதன்    19:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்  - சென்னை     CSK  vs  RR 18)    ஏப்ரல் 13, வியாழன்  19:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்   - மொஹாலி    PBKS  vs   GT 19)    ஏப்ரல் 14, வெள்ளி   19:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்     - கொல்கத்தா    KKR vs   SRH 20)    ஏப்ரல் 15, சனி  15:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்    - பெங்களூரு    RCB vs   DC 21)    ஏப்ரல் 15, சனி  19:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்     - லக்னோ     LSG vs   PBKS 22)    ஏப்ரல் 16, ஞாயிறு   15:30   மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  - மும்பை    MI  vs  KKR 23)    ஏப்ரல் 16, ஞாயிறு   19:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்   - அஹமதாபாத்     GT  vs  RR 24)    ஏப்ரல் 17, திங்கள்  19:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்   - பெங்களூரு     RCB vs   CSK 25)    ஏப்ரல் 18, செவ்வாய் 19:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ்    - ஐதராபாத்     SRH   vs  MI 26)    ஏப்ரல் 19, புதன்    19:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்     - ஜெய்பூர்    RR  vs  LSG 27)    ஏப்ரல் 20, வியாழன்  15:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  - மொஹாலி    PBKS  vs  RCB 28)    ஏப்ரல் 20, வியாழன்  19:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  - டெல்லி    DC  vs  KKR 29)    ஏப்ரல் 21, வெள்ளி   19:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்   - சென்னை     CSK  vs  SRH 30)    ஏப்ரல் 22, சனி  15:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்   - லக்னோ    LSG  vs  GT 31)    ஏப்ரல் 22, சனி  19:30   மும்பை இந்தியன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்   - மும்பை     MI vs   PBKS 32)    ஏப்ரல் 23, ஞாயிறு   15:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்  - பெங்களூரு    RCB vs   RR 33)    ஏப்ரல் 23, ஞாயிறு   19:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்     - கொல்கத்தா     KKR  vs  CSK 34)    ஏப்ரல் 24, திங்கள்  19:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்    - ஐதராபாத்     SRH vs   DC 35)    ஏப்ரல் 25, செவ்வாய் 19:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்     -   அஹமதாபாத்     GT  vs  MI 36)    ஏப்ரல் 26, புதன்    19:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்     - பெங்களூரு     RCB  vs  KKR 37)    ஏப்ரல் 27, வியாழன்  19:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்  - ஜெய்பூர்     RR  vs   CSK 38)    ஏப்ரல் 28, வெள்ளி   19:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்     - மொஹாலி     PBKS  vs  LSG 39)    ஏப்ரல் 29, சனி  15:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்  - கொல்கத்தா    KKR  vs  GT 40)    ஏப்ரல் 29, சனி  19:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்    - டெல்லி    DC   vs  SRH 41)    ஏப்ரல் 30, ஞாயிறு   15:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்  - சென்னை     CSK  vs  PBKS 42)    ஏப்ரல் 30, ஞாயிறு   19:30   மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்   - மும்பை    MI vs   RR 43)    மே 01, திங்கள்  19:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  - லக்னோ     LSG  vs  RCB 44)    மே 02, செவ்வாய் 19:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்       அஹமதாபாத்    GT  vs  DC 45)    மே 03, புதன்    19:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்   - மொஹாலி     PBKS  vs  MI 46)    மே 04, வியாழன்  15:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்  - லக்னோ     LSG  vs  CSK 47)    மே 04, வியாழன்  19:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்     - ஐதராபாத்     SRH vs   KKR 48)    மே 05, வெள்ளி   19:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்   - ஜெய்பூர்     RR   vs  GT 49)    மே 06, சனி  15:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்    - சென்னை    CSK  vs  MI 50)    மே 06, சனி  19:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்    - டெல்லி    DC  vs  RCB 51)    மே 07, ஞாயிறு   15:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்    அஹமதாபாத்    GT  vs  LSG 52)    மே 07, ஞாயிறு   19:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  - ஜெய்பூர்     RR   vs  SRH 53)    மே 08, திங்கள்  19:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்    - கொல்கத்தா     KKR vs   PBKS 54)    மே 09, செவ்வாய் 19:30   மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்    - மும்பை    MI  vs  RCB 55)    மே 10, புதன்    19:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்    - சென்னை     CSK  vs  DC 56)    மே 11, வியாழன்  19:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்    - கொல்கத்தா    KKR vs   RR 57)    மே 12, வெள்ளி   19:30   மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்     - மும்பை    MI  vs  GT 58)    மே 13, சனி  15:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  - ஐதராபாத்     SRH  vs  LSG 59)    மே 13, சனி  19:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்   - டெல்லி    DC vs   PBKS 60)    மே 14, ஞாயிறு   15:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  - ஜெய்பூர்    RR  vs  RCB 61)    மே 14, ஞாயிறு   19:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்     - சென்னை     CSK  vs  KKR 62)    மே 15, திங்கள்  19:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்    -   அஹமதாபாத்     GT  vs  SRH 63)    மே 16, செவ்வாய் 19:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்   - லக்னோ    LSG  vs  MI 64)    மே 17, புதன்    19:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்   - தர்மசாலா    PBKS vs   DC 65)    மே 18, வியாழன்  19:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்   - ஐதராபாத்    SRH vs   RCB 66)    மே 19, வெள்ளி   19:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - தர்மசாலா     PBKS  vs  RR 67)    மே 20, சனி  15:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்    - டெல்லி     DC  vs  CSK 68)    மே 20, சனி  19:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்    - கொல்கத்தா     KKR  vs  LSG 69)    மே 21, ஞாயிறு   15:30   மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்    - மும்பை     MI vs   SRH 70)    மே 21, ஞாயிறு   19:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ்    - பெங்களூரு    RCB vs   GT   கேள்விகள் 71) முதல் 90) வரை: 71)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)  GT      LSG     RR       CSK 72)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.   (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)     #1 - GT (4 புள்ளிகள்)     #2 - LSG (3 புள்ளிகள்)     #3 - RR (2 புள்ளிகள்)     #4 - CSK (1 புள்ளி) 73)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!  KKR 74)    Date Day 19:30 Stadium  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team  GT 75)    Date Day 19:30 Stadium  Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team RR 76)    Date Day 19:30  Stadium Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 77)   "Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2  LSG 78)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)  CSK 79)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)  KKR 80)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jos Buttler 81)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )  GT 82)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Wanindu Hasaranga 83)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 84)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )  Quinton de Kock 85)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )  CSK 86)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Yuzvendra Chahal   87)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )  RCB 88)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jos Buttler   89)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) GT 90)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK  தடித்த எழுத்தில் எனது பதில்கள் கிருபன் அண்ணை.
×