Jump to content

நான் ஏன் தமிழன்? ஏனெனில் என் ரத்தம் தமிழக மண்ணுடன் கலந்திருக்கிறது”- ராகுல் காந்தி பேச்சு


Recommended Posts

நான் ஏன் தமிழன்? ஏனெனில் என் ரத்தம் தமிழக மண்ணுடன் கலந்திருக்கிறது”- ராகுல் காந்தி பேச்சு

 

 

 
 
தான் தமிழன் என்று ஏன் சொன்னேன் என்பது குறித்து ராகுல்காந்தி உருக்கமாக உரையாற்றியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில், உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை நூலான, ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா, பினராயி விஜயன் ஆகிய தேசிய அளவிலான தலைவர்கள் கலந்துகொண்டனர்.
kalaignarseithigal_2022-02_5d950967-aad0
இதில் ராகுல்காந்தி பேசுகையில், ”ஒரு அருமையான புத்தகத்தை ஸ்டாலின் வழங்கியுள்ளார். அவருடைய வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம். இது பல ஆண்டுகால போராட்டம். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் நிறையவே செய்திருக்கிறார். நேற்று என் தாய் என்னை தொடர்புகொண்டு பேசினார். ஸ்டாலினுக்கு பிறந்த நாள் என்று கூறினார். நான் எனக்கு தெரியும் என்று கூறிவிட்டு, அவருக்கு எத்தனை வயது தெரியுமா என கேட்டேன். தெரியாது என்றார். 69 வயது என்று கூறியதும் அவர் வாய்ப்பேயில்லை என்றார். சரி, அவருக்கு எத்தனை வயது இருக்கும் என கேட்டேன். அதற்கு அவர்,58, 60 இருக்கும் என்றார்.
கூகுள் தேடிப்பார்த்தார். மை காட் நீ சொன்னது சரிதான் என்று ஒப்புக்கொண்டார். அவர் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார் என்பதை ஒரு புத்தகமாக எழுத வேண்டும். என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து பெருமைபடுத்தியதற்கு நன்றி கூறுகிறேன். தமிழ்நாட்டிற்கு வருவதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். என் மனதின் ஆழத்திலிருந்து கூறுகிறேன். சில நாட்களுக்கு முன்பு நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தமிழகத்தை பாராட்டினேன்.
நான் ஏன் தமிழ் என்று கூறினேன்?:
FMvU5WlWYAYNpf3-300x162.jpg
நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது, ‘நீங்கள் ஏன் தமிழ்நாட்டை மேற்கொள் காட்டினீர்கள்?” என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். அப்போதுதான் எனக்கு தோன்றியது, நான் தமிழ்நாட்டை குறிப்பிட்டிருக்கிறேன் என்பது. எனக்கே தெரியாமல் என் வாயிலிருந்து தமிழ்நாடு என்று கூறியிருக்கிறேன். நான் தமிழ் என்று கூறினேன். காரிலிருந்து ஏறியதற்கு பின்பு தான் நான் ஏன் அப்படி கூறினேன் என்று நினைத்து பார்த்தேன். 3500 ஆண்டுகள் பழமையான நாகரீகம் கொண்ட மொழி தமிழ். அந்த நாகரீகம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளவில்லை.
பிறகு எப்படி தமிழன் என்று கூறிக்கொண்டேன் என்பது குறித்து நான் யோசித்துக்கொண்டிருந்தேன். காரணம், என் ரத்தம் உங்கள் மண்ணுடன் கலந்திருக்கிறது. தந்தையை இழப்பது என்பது வேதனையானது. மிகவும் கடினமான அனுபவம் அது. அந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டேன். தமிழனாக இருப்பதன் பொருள் என்ன?. நான் தமிழ்நாட்டிற்கு வந்தபோது மனிதநேயத்துடன் வந்தேன். உங்கள் மொழி, வரலாறு, பராம்பரியத்திற்கு தலைவணங்குபவனாக வந்தேன்.
பிரதமர் மோடிக்கு புரிதல் இல்லை:
தமிழ்நாடு மக்கள் குறித்து பிரதமருக்கு புரிதல் இல்லை. தமிழ்நாடு என்பது 3500 ஆண்டுகள் பழமையானது. தமிழ்நாடு என்பது மொழி. தமிழ்நாட்டை அவர் புரிந்துகொள்ளவில்லை. தமிழ்நாடு மக்களின் குரலை புரிந்துகொள்ள முடியாமல், உங்களுக்காக பேசுகிறேன் என எப்படி அவர் கூறமுடியும். நீட், ஜிஎஸ்டி வேண்டாம் என கூறிய தமிழ்நாடு மக்களின் குரலை செவிசாய்க்காமல் அவர்களை அவமதிக்கிறீர்கள். 3000ம் ஆண்டுகலாக தமிழ்நாட்டின் மீது யாராலும், எதையும் திணிக்க முடிந்ததில்லை. அன்போடும், அக்கறையோடும் பேசினால் தமிழ்நாடு மக்களிடமிருந்து எதையும் பெற முடியும்.
இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் தற்போது தான் முதன்முறையாக ஒரு மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஜம்மு காஷ்மீர் மக்களால் தங்களை தாங்களே ஆள முடியாத நிலை உள்ளது. குஜராத், உத்தரபிரதேச அதிகாரிகள் ஜம்மு காஷ்மீரை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். இது அந்த மக்களுக்கு இழைத்திருக்கும் கொடுமை. பஞ்சாப்பில் நூற்றுக்கணக்கான நிலங்களை எடுத்து எல்லை பாதுகாப்பு படையினருக்கு கொடுத்திருக்கிறார்கள். அதேயேத்தான் தமிழ்நாட்டிற்கும் அவர்கள் செய்கிறார்கள்.
 
‘நாங்கள் போராடி வெல்வோம்’
வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியா. நாங்கள் எதை சொல்கிறோமா அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். ஆனால், நீங்கள் யார் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பதற்கு.. உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது. இது தான் நாட்டின் முக்கிய பிரச்னை.
பாஜக கற்பனை கோட்டை கட்டவேண்டாம். அவர்களுக்கு எதிராக நாங்கள் போராடி வெல்வோம். அவர்கள் வரலாற்றுக்கு எதிராகவும், பாரம்பரியத்தை எதிர்த்து போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். தோற்றுவிடுவார்கள். சகோதரர் ஸ்டாலினுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்” என்றார்.

Thinakkural.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா..சொக்கத்தங்கம் என்றும் ..தமிழகத்தில்  இருந்து ஒருவர் சொன்னவர்....அதனால்தானோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and text that says 'வர்த்தக மையக் கூட்டரங்கம். நந்தம்'

மதுரையிலை....  இந்திரா காந்தியின்ரை, மண்டையை…
நாங்க உடைச்சோமே... அது,  இந்தப் பக்கத்திலை  இருக்கு.  😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

முதலமைச்சர்  ஸ்ராலின்  எழுதிய... "உங்களில் ஒருவன்"  புத்தக வெளியீட்டு  விழா.

 

"உங்களில் ஒருவன்" புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தேசிய தலைவர்கள்

 

இந்த நிகழ்ச்சி, என் அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனை - ஸ்டாலின் அதிரடி 

 

 

உங்களில் ஒருவன் புத்தக வெளியீடு - குடும்பத்துடன் வந்த உதயநிதி ஸ்டாலின்! 

 

"இந்த மேடை ட்ரைலர் மட்டும்தான்... இனி படம் வரும்" - கனிமொழி எம்.பி

 

“அந்த 17 வயது இளைஞன்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்”- வைரமுத்து

 

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people, people standing and text that says 'வர்த்தக மையக் கூட்டரங்கம். நந்தம்'

மதுரையில...  இந்திராகாந்தியின்ர  மண்டையை, 
நாங்க உடைச்சோமே... அது, இந்த பக்கதில இருக்கு.  😂 🤣

இந்தியாவின் தலை சிறந்த அரசியல்வாதிகள்.

Link to comment
Share on other sites

நான் நினைக்கவில்லை ஸ்டாலினின் தனது  சுயசரிதை எழுதி இருப்பார் என்று ,அவருடைய மொழியறிவு யாம் அறிந்ததே, அநேகமாக கனிமொழி எழுதியிருக்க கூடும். மோடிக்கு எதிரான தேசிய சக்திகளை ஒன்றினைக்கும் ஒரு மேடையாக இந்த புத்தக வெளியீடு பாவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2022 at 03:29, nunavilan said:

நான் ஏன் தமிழன்? ஏனெனில் என் ரத்தம் தமிழக மண்ணுடன் கலந்திருக்கிறது”- ராகுல் காந்தி பேச்சு

கொஞ்சம் தள்ளி வந்து ஈழ தமிழரின் இரத்தத்தையும் குடித்து பார்த்தேன்.

வித்தியாசமாக இருந்தது.

தமிழ்நாட்டு இரத்தமே ரொம்ப ரேஸ்ட்.

Link to comment
Share on other sites

5 minutes ago, ஈழப்பிரியன் said:

கொஞ்சம் தள்ளி வந்து ஈழ தமிழரின் இரத்தத்தையும் குடித்து பார்த்தேன்.

வித்தியாசமாக இருந்தது.

தமிழ்நாட்டு இரத்தமே ரொம்ப ரேஸ்ட்.

ராகுல் ஈழத் தமிழர்களின் இரத்ததைக் குடித்தவரா? எப்ப நடந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நிழலி said:

ராகுல் ஈழத் தமிழர்களின் இரத்ததைக் குடித்தவரா? எப்ப நடந்தது?

ஓ அப்ப ராகுல் காங்கிரசில் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

இந்தியாவின் தலை சிறந்த அரசியல்வாதிகள்.

எதிர்கால இந்தியாவில்…
இவர்கள் இருவரின் பெயர்களும், பொன் எழுத்துக்களால்   பொறிக்கப் படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

நான் நினைக்கவில்லை ஸ்டாலினின் தனது  சுயசரிதை எழுதி இருப்பார் என்று ,அவருடைய மொழியறிவு யாம் அறிந்ததே, அநேகமாக கனிமொழி எழுதியிருக்க கூடும். மோடிக்கு எதிரான தேசிய சக்திகளை ஒன்றினைக்கும் ஒரு மேடையாக இந்த புத்தக வெளியீடு பாவிக்கப்பட்டுள்ளது.

கையுக்குள்ளை வைரமுத்து இருக்க... அவர் ஏன், கனி மொழியிடம் போகிறார். 

Link to comment
Share on other sites

3 hours ago, zuma said:

நான் நினைக்கவில்லை ஸ்டாலினின் தனது  சுயசரிதை எழுதி இருப்பார் என்று ,அவருடைய மொழியறிவு யாம் அறிந்ததே, அநேகமாக கனிமொழி எழுதியிருக்க கூடும். மோடிக்கு எதிரான தேசிய சக்திகளை ஒன்றினைக்கும் ஒரு மேடையாக இந்த புத்தக வெளியீடு பாவிக்கப்பட்டுள்ளது.

கதை வசனம் எழுதவா தமிழ்நாட்டில் ஆட் கள் இல்லை?

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஓ அப்ப ராகுல் காங்கிரசில் இல்லையா?

, காங்கிரஸில் இருக்கும் / இருந்த/ இருக்கப் போகும் அனைவரும் ஈழ இரத்தம் குடித்தவர்கள் என்று சொல்கின்றீர்கள்... அப்ப சரி

36 minutes ago, தமிழ் சிறி said:

எதிர்கால இந்தியாவில்…
இவர்கள் இருவரின் பெயர்களும், பொன் எழுத்துக்களால்   பொறிக்கப் படும்.

இன்று விகடனில் ஒரு பத்தி வந்துள்ளது... ஸ்டாலினின் இளமை ரகசியம் என்னவென்று... சிரிப்போம் சிறப்போம் பகுதியில் பிரசுரிக்கவா என்று யோசித்து விட்டு பிறகு நிறைய body shaming வகையான பதில்கள் வரும் என்று நினைத்து பிரசுரிக்கவில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

இன்று விகடனில் ஒரு பத்தி வந்துள்ளது... ஸ்டாலினின் இளமை ரகசியம் என்னவென்று... சிரிப்போம் சிறப்போம் பகுதியில் பிரசுரிக்கவா என்று யோசித்து விட்டு பிறகு நிறைய body shaming வகையான பதில்கள் வரும் என்று நினைத்து பிரசுரிக்கவில்லை.
 

ஸ்ராலினின் இளமை ரகசியம்…. அவர் தலையில் போட்டு இருக்கின்ற “விக்” என்று,
சோனியாவையும், ராகுலையும் தவிர… அகில உலக தமிழருக்கும் தெரியும். 😂
சில வேளை அவர்கள் இருவரும்…  ஸ்ராலினை, பப்பா மரத்தில் ஏற்ற… “றீல்” விட்டிருக்கலாம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

இன்று விகடனில் ஒரு பத்தி வந்துள்ளது... ஸ்டாலினின் இளமை ரகசியம் என்னவென்று... சிரிப்போம் சிறப்போம் பகுதியில் பிரசுரிக்கவா என்று யோசித்து விட்டு பிறகு நிறைய body shaming வகையான பதில்கள் வரும் என்று நினைத்து பிரசுரிக்கவில்லை.
 

நாங்கள்…. பகிடி பண்ண மாட்டம்.
நீங்கள்… அந்த விகடன் கட்டுரையை இணைத்து விடுங்கோ. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people, people standing and text that says 'வர்த்தக மையக் கூட்டரங்கம். நந்தம்'

மதுரையிலை....  இந்திரா காந்தியின்ரை, மண்டையை…
நாங்க உடைச்சோமே... அது,  இந்தப் பக்கத்திலை  இருக்கு.  😂 🤣

இது யார் மனதையும் புண்படுத்தினால் நான் பொறுப்பல்ல..🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

ராகுல் ஈழத் தமிழர்களின் இரத்ததைக் குடித்தவரா? எப்ப நடந்தது?

2009, இல் கொத்து கொத்தாக தமிழர் கொள்ளப்பட்டு போது, ராகுல் சொன்னது ஈழத்தமிழருக்கு நாடு அல்லது அரசு கிடைக்க கூடாது என்று; அல்லது அந்த கருத்தை அவரது மொழியில்.


இதை கண்டு தான், இறுதியில் தெரிந்தது, யார் தமிழ்  இனவழிப்புக்கு கரணம் என்று.

     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and text that says 'வர்த்தக மையக் கூட்டரங்கம். நந்தம்'

இந்த பக்கத்துல தான்.... தம்பி,  
உங்க ஆயாவும்... எங்க நைனாவும்,  
கச்சத்தீவை...  ஸ்ரீலங்காவுக்கு,  வித்ததை  பற்றி  இருக்கு. 😁 😂 🤣

Link to comment
Share on other sites

1 hour ago, Kadancha said:

2009, இல் கொத்து கொத்தாக தமிழர் கொள்ளப்பட்டு போது, ராகுல் சொன்னது ஈழத்தமிழருக்கு நாடு அல்லது அரசு கிடைக்க கூடாது என்று; அல்லது அந்த கருத்தை அவரது மொழியில்.


 

     

ஈழத்தமிழருக்கு நாடு அல்லது அரசு கிடைக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் சிலவற்றைத் தவிர (அவற்றிலும் அனேகமானவை திராவிட கட்சிகளும் சாதிக் கட்சிகளுமே) உலகில் வேறு எவராவது எந்த தேசமாவது, விரும்பியிருக்கின்றதா?

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளும் இணைந்து தான் தமிழர்களுக்கு நாடு கிடைக்க கூடாது என்று இலங்கை அரசை பலப்படுத்தியும் புலிகளை தடை செய்தும் காரியம் ஆற்றின. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ராலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தகத்தை பற்றி,
ஆராய்ச்சி செய்பவர்களுக்கு, டாக்டர் பட்டம் கொடுக்க,
பல பல்கலைக் கழகங்கள் தயாராக உள்ளதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

ஸ்ராலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தகத்தை பற்றி,
ஆராய்ச்சி செய்பவர்களுக்கு, டாக்டர் பட்டம் கொடுக்க,
பல பல்கலைக் கழகங்கள் தயாராக உள்ளதாம்.

Bild

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தன் வரலாறு ... இந்தப் புத்தகத்தை திமுகவினர் அல்லது திமுகவின் அனுதாபியாக இருப்பவர்கள் படிப்பார்களா என்று தெரியவில்லை ஆனால் நான் படித்தது தான் ஆச்சரியம். 😀

பொதுவாக மாற்று சித்தாந்தத்தில் உள்ளவர்களைப் பற்றி படிப்பது என் வழக்கம் அதன்படி ஸ்டாலின் அவர்களின் தன் வரலாற்றில் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக இந்த புத்தகத்தை வாங்கினேன். 

புத்தகத்தில் மொத்தம் 338 பக்கங்கள் உள்ளது அதில் வெறும் 137 பக்கங்கள் மட்டுமே எழுத்துக்களால் ஆனவை மற்ற பக்கங்கள் அனைத்தும் அவர்களுடைய புகைப்படத்தை பதித்துள்ளார்கள்.  

அந்த 137 பக்கத்தில் கூட ஸ்டாலின் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள வெறும் 60 மட்டுமே உள்ளது மீதி அனைத்தும் திமுகவின் வரலாற்றைப் பற்றியும் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தான் குறிப்பு உள்ளது. இதற்கு மேல் இந்த புத்தகத்தை விமர்சிப்பதற்கு வேறு வார்த்தைகள் இல்லை. 

విషాల్ బొలివర్

 

 

fathima%20babu%20stalin-n38yt.jpg

இவர்கள் பற்றிய சம்பவங்கள் அடங்கிய பக்கங்கள் கிழித்தெறியப்பட்டு விட்டதாம் 😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

Bild

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தன் வரலாறு ... இந்தப் புத்தகத்தை திமுகவினர் அல்லது திமுகவின் அனுதாபியாக இருப்பவர்கள் படிப்பார்களா என்று தெரியவில்லை ஆனால் நான் படித்தது தான் ஆச்சரியம். 😀

பொதுவாக மாற்று சித்தாந்தத்தில் உள்ளவர்களைப் பற்றி படிப்பது என் வழக்கம் அதன்படி ஸ்டாலின் அவர்களின் தன் வரலாற்றில் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக இந்த புத்தகத்தை வாங்கினேன். 

புத்தகத்தில் மொத்தம் 338 பக்கங்கள் உள்ளது அதில் வெறும் 137 பக்கங்கள் மட்டுமே எழுத்துக்களால் ஆனவை மற்ற பக்கங்கள் அனைத்தும் அவர்களுடைய புகைப்படத்தை பதித்துள்ளார்கள்.  

அந்த 137 பக்கத்தில் கூட ஸ்டாலின் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள வெறும் 60 மட்டுமே உள்ளது மீதி அனைத்தும் திமுகவின் வரலாற்றைப் பற்றியும் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தான் குறிப்பு உள்ளது. இதற்கு மேல் இந்த புத்தகத்தை விமர்சிப்பதற்கு வேறு வார்த்தைகள் இல்லை. 

విషాల్ బొలివర్

 

 

அறிஞர் அண்ணாதுரையின், காசை…
ஆட்டையை போட்டதைப் பற்றியும் புத்தகத்தில் இருக்குதா? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

அறிஞர் அண்ணாதுரையின், காசை…
ஆட்டையை போட்டதைப் பற்றியும் புத்தகத்தில் இருக்குதா? 😂

ரயில் பயணங்கள்  சம்பவம் கூட இல்லை சிறித்தம்பி 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

ரயில் பயணங்கள்  சம்பவம் கூட இல்லை சிறித்தம்பி 🤣

குமாரசாமி அண்ணை…இன்னும் கன பாகங்கள், புத்தமாக வர இருக்குதாம்.
சிலவேளை அதில வர இருக்குதோ…. 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.