Jump to content

நான் ஏன் தமிழன்? ஏனெனில் என் ரத்தம் தமிழக மண்ணுடன் கலந்திருக்கிறது”- ராகுல் காந்தி பேச்சு


Recommended Posts

நான் ஏன் தமிழன்? ஏனெனில் என் ரத்தம் தமிழக மண்ணுடன் கலந்திருக்கிறது”- ராகுல் காந்தி பேச்சு

 

 

 
 
தான் தமிழன் என்று ஏன் சொன்னேன் என்பது குறித்து ராகுல்காந்தி உருக்கமாக உரையாற்றியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில், உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை நூலான, ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா, பினராயி விஜயன் ஆகிய தேசிய அளவிலான தலைவர்கள் கலந்துகொண்டனர்.
kalaignarseithigal_2022-02_5d950967-aad0
இதில் ராகுல்காந்தி பேசுகையில், ”ஒரு அருமையான புத்தகத்தை ஸ்டாலின் வழங்கியுள்ளார். அவருடைய வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம். இது பல ஆண்டுகால போராட்டம். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் நிறையவே செய்திருக்கிறார். நேற்று என் தாய் என்னை தொடர்புகொண்டு பேசினார். ஸ்டாலினுக்கு பிறந்த நாள் என்று கூறினார். நான் எனக்கு தெரியும் என்று கூறிவிட்டு, அவருக்கு எத்தனை வயது தெரியுமா என கேட்டேன். தெரியாது என்றார். 69 வயது என்று கூறியதும் அவர் வாய்ப்பேயில்லை என்றார். சரி, அவருக்கு எத்தனை வயது இருக்கும் என கேட்டேன். அதற்கு அவர்,58, 60 இருக்கும் என்றார்.
கூகுள் தேடிப்பார்த்தார். மை காட் நீ சொன்னது சரிதான் என்று ஒப்புக்கொண்டார். அவர் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார் என்பதை ஒரு புத்தகமாக எழுத வேண்டும். என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து பெருமைபடுத்தியதற்கு நன்றி கூறுகிறேன். தமிழ்நாட்டிற்கு வருவதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். என் மனதின் ஆழத்திலிருந்து கூறுகிறேன். சில நாட்களுக்கு முன்பு நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தமிழகத்தை பாராட்டினேன்.
நான் ஏன் தமிழ் என்று கூறினேன்?:
FMvU5WlWYAYNpf3-300x162.jpg
நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது, ‘நீங்கள் ஏன் தமிழ்நாட்டை மேற்கொள் காட்டினீர்கள்?” என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். அப்போதுதான் எனக்கு தோன்றியது, நான் தமிழ்நாட்டை குறிப்பிட்டிருக்கிறேன் என்பது. எனக்கே தெரியாமல் என் வாயிலிருந்து தமிழ்நாடு என்று கூறியிருக்கிறேன். நான் தமிழ் என்று கூறினேன். காரிலிருந்து ஏறியதற்கு பின்பு தான் நான் ஏன் அப்படி கூறினேன் என்று நினைத்து பார்த்தேன். 3500 ஆண்டுகள் பழமையான நாகரீகம் கொண்ட மொழி தமிழ். அந்த நாகரீகம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளவில்லை.
பிறகு எப்படி தமிழன் என்று கூறிக்கொண்டேன் என்பது குறித்து நான் யோசித்துக்கொண்டிருந்தேன். காரணம், என் ரத்தம் உங்கள் மண்ணுடன் கலந்திருக்கிறது. தந்தையை இழப்பது என்பது வேதனையானது. மிகவும் கடினமான அனுபவம் அது. அந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டேன். தமிழனாக இருப்பதன் பொருள் என்ன?. நான் தமிழ்நாட்டிற்கு வந்தபோது மனிதநேயத்துடன் வந்தேன். உங்கள் மொழி, வரலாறு, பராம்பரியத்திற்கு தலைவணங்குபவனாக வந்தேன்.
பிரதமர் மோடிக்கு புரிதல் இல்லை:
தமிழ்நாடு மக்கள் குறித்து பிரதமருக்கு புரிதல் இல்லை. தமிழ்நாடு என்பது 3500 ஆண்டுகள் பழமையானது. தமிழ்நாடு என்பது மொழி. தமிழ்நாட்டை அவர் புரிந்துகொள்ளவில்லை. தமிழ்நாடு மக்களின் குரலை புரிந்துகொள்ள முடியாமல், உங்களுக்காக பேசுகிறேன் என எப்படி அவர் கூறமுடியும். நீட், ஜிஎஸ்டி வேண்டாம் என கூறிய தமிழ்நாடு மக்களின் குரலை செவிசாய்க்காமல் அவர்களை அவமதிக்கிறீர்கள். 3000ம் ஆண்டுகலாக தமிழ்நாட்டின் மீது யாராலும், எதையும் திணிக்க முடிந்ததில்லை. அன்போடும், அக்கறையோடும் பேசினால் தமிழ்நாடு மக்களிடமிருந்து எதையும் பெற முடியும்.
இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் தற்போது தான் முதன்முறையாக ஒரு மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஜம்மு காஷ்மீர் மக்களால் தங்களை தாங்களே ஆள முடியாத நிலை உள்ளது. குஜராத், உத்தரபிரதேச அதிகாரிகள் ஜம்மு காஷ்மீரை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். இது அந்த மக்களுக்கு இழைத்திருக்கும் கொடுமை. பஞ்சாப்பில் நூற்றுக்கணக்கான நிலங்களை எடுத்து எல்லை பாதுகாப்பு படையினருக்கு கொடுத்திருக்கிறார்கள். அதேயேத்தான் தமிழ்நாட்டிற்கும் அவர்கள் செய்கிறார்கள்.
 
‘நாங்கள் போராடி வெல்வோம்’
வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியா. நாங்கள் எதை சொல்கிறோமா அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். ஆனால், நீங்கள் யார் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பதற்கு.. உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது. இது தான் நாட்டின் முக்கிய பிரச்னை.
பாஜக கற்பனை கோட்டை கட்டவேண்டாம். அவர்களுக்கு எதிராக நாங்கள் போராடி வெல்வோம். அவர்கள் வரலாற்றுக்கு எதிராகவும், பாரம்பரியத்தை எதிர்த்து போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். தோற்றுவிடுவார்கள். சகோதரர் ஸ்டாலினுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்” என்றார்.

Thinakkural.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா..சொக்கத்தங்கம் என்றும் ..தமிழகத்தில்  இருந்து ஒருவர் சொன்னவர்....அதனால்தானோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and text that says 'வர்த்தக மையக் கூட்டரங்கம். நந்தம்'

மதுரையிலை....  இந்திரா காந்தியின்ரை, மண்டையை…
நாங்க உடைச்சோமே... அது,  இந்தப் பக்கத்திலை  இருக்கு.  😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

முதலமைச்சர்  ஸ்ராலின்  எழுதிய... "உங்களில் ஒருவன்"  புத்தக வெளியீட்டு  விழா.

 

"உங்களில் ஒருவன்" புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தேசிய தலைவர்கள்

 

இந்த நிகழ்ச்சி, என் அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனை - ஸ்டாலின் அதிரடி 

 

 

உங்களில் ஒருவன் புத்தக வெளியீடு - குடும்பத்துடன் வந்த உதயநிதி ஸ்டாலின்! 

 

"இந்த மேடை ட்ரைலர் மட்டும்தான்... இனி படம் வரும்" - கனிமொழி எம்.பி

 

“அந்த 17 வயது இளைஞன்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்”- வைரமுத்து

 

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people, people standing and text that says 'வர்த்தக மையக் கூட்டரங்கம். நந்தம்'

மதுரையில...  இந்திராகாந்தியின்ர  மண்டையை, 
நாங்க உடைச்சோமே... அது, இந்த பக்கதில இருக்கு.  😂 🤣

இந்தியாவின் தலை சிறந்த அரசியல்வாதிகள்.

Link to comment
Share on other sites

நான் நினைக்கவில்லை ஸ்டாலினின் தனது  சுயசரிதை எழுதி இருப்பார் என்று ,அவருடைய மொழியறிவு யாம் அறிந்ததே, அநேகமாக கனிமொழி எழுதியிருக்க கூடும். மோடிக்கு எதிரான தேசிய சக்திகளை ஒன்றினைக்கும் ஒரு மேடையாக இந்த புத்தக வெளியீடு பாவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2022 at 03:29, nunavilan said:

நான் ஏன் தமிழன்? ஏனெனில் என் ரத்தம் தமிழக மண்ணுடன் கலந்திருக்கிறது”- ராகுல் காந்தி பேச்சு

கொஞ்சம் தள்ளி வந்து ஈழ தமிழரின் இரத்தத்தையும் குடித்து பார்த்தேன்.

வித்தியாசமாக இருந்தது.

தமிழ்நாட்டு இரத்தமே ரொம்ப ரேஸ்ட்.

Link to comment
Share on other sites

5 minutes ago, ஈழப்பிரியன் said:

கொஞ்சம் தள்ளி வந்து ஈழ தமிழரின் இரத்தத்தையும் குடித்து பார்த்தேன்.

வித்தியாசமாக இருந்தது.

தமிழ்நாட்டு இரத்தமே ரொம்ப ரேஸ்ட்.

ராகுல் ஈழத் தமிழர்களின் இரத்ததைக் குடித்தவரா? எப்ப நடந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நிழலி said:

ராகுல் ஈழத் தமிழர்களின் இரத்ததைக் குடித்தவரா? எப்ப நடந்தது?

ஓ அப்ப ராகுல் காங்கிரசில் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

இந்தியாவின் தலை சிறந்த அரசியல்வாதிகள்.

எதிர்கால இந்தியாவில்…
இவர்கள் இருவரின் பெயர்களும், பொன் எழுத்துக்களால்   பொறிக்கப் படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

நான் நினைக்கவில்லை ஸ்டாலினின் தனது  சுயசரிதை எழுதி இருப்பார் என்று ,அவருடைய மொழியறிவு யாம் அறிந்ததே, அநேகமாக கனிமொழி எழுதியிருக்க கூடும். மோடிக்கு எதிரான தேசிய சக்திகளை ஒன்றினைக்கும் ஒரு மேடையாக இந்த புத்தக வெளியீடு பாவிக்கப்பட்டுள்ளது.

கையுக்குள்ளை வைரமுத்து இருக்க... அவர் ஏன், கனி மொழியிடம் போகிறார். 

Link to comment
Share on other sites

3 hours ago, zuma said:

நான் நினைக்கவில்லை ஸ்டாலினின் தனது  சுயசரிதை எழுதி இருப்பார் என்று ,அவருடைய மொழியறிவு யாம் அறிந்ததே, அநேகமாக கனிமொழி எழுதியிருக்க கூடும். மோடிக்கு எதிரான தேசிய சக்திகளை ஒன்றினைக்கும் ஒரு மேடையாக இந்த புத்தக வெளியீடு பாவிக்கப்பட்டுள்ளது.

கதை வசனம் எழுதவா தமிழ்நாட்டில் ஆட் கள் இல்லை?

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஓ அப்ப ராகுல் காங்கிரசில் இல்லையா?

, காங்கிரஸில் இருக்கும் / இருந்த/ இருக்கப் போகும் அனைவரும் ஈழ இரத்தம் குடித்தவர்கள் என்று சொல்கின்றீர்கள்... அப்ப சரி

36 minutes ago, தமிழ் சிறி said:

எதிர்கால இந்தியாவில்…
இவர்கள் இருவரின் பெயர்களும், பொன் எழுத்துக்களால்   பொறிக்கப் படும்.

இன்று விகடனில் ஒரு பத்தி வந்துள்ளது... ஸ்டாலினின் இளமை ரகசியம் என்னவென்று... சிரிப்போம் சிறப்போம் பகுதியில் பிரசுரிக்கவா என்று யோசித்து விட்டு பிறகு நிறைய body shaming வகையான பதில்கள் வரும் என்று நினைத்து பிரசுரிக்கவில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

இன்று விகடனில் ஒரு பத்தி வந்துள்ளது... ஸ்டாலினின் இளமை ரகசியம் என்னவென்று... சிரிப்போம் சிறப்போம் பகுதியில் பிரசுரிக்கவா என்று யோசித்து விட்டு பிறகு நிறைய body shaming வகையான பதில்கள் வரும் என்று நினைத்து பிரசுரிக்கவில்லை.
 

ஸ்ராலினின் இளமை ரகசியம்…. அவர் தலையில் போட்டு இருக்கின்ற “விக்” என்று,
சோனியாவையும், ராகுலையும் தவிர… அகில உலக தமிழருக்கும் தெரியும். 😂
சில வேளை அவர்கள் இருவரும்…  ஸ்ராலினை, பப்பா மரத்தில் ஏற்ற… “றீல்” விட்டிருக்கலாம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

இன்று விகடனில் ஒரு பத்தி வந்துள்ளது... ஸ்டாலினின் இளமை ரகசியம் என்னவென்று... சிரிப்போம் சிறப்போம் பகுதியில் பிரசுரிக்கவா என்று யோசித்து விட்டு பிறகு நிறைய body shaming வகையான பதில்கள் வரும் என்று நினைத்து பிரசுரிக்கவில்லை.
 

நாங்கள்…. பகிடி பண்ண மாட்டம்.
நீங்கள்… அந்த விகடன் கட்டுரையை இணைத்து விடுங்கோ. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people, people standing and text that says 'வர்த்தக மையக் கூட்டரங்கம். நந்தம்'

மதுரையிலை....  இந்திரா காந்தியின்ரை, மண்டையை…
நாங்க உடைச்சோமே... அது,  இந்தப் பக்கத்திலை  இருக்கு.  😂 🤣

இது யார் மனதையும் புண்படுத்தினால் நான் பொறுப்பல்ல..🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

ராகுல் ஈழத் தமிழர்களின் இரத்ததைக் குடித்தவரா? எப்ப நடந்தது?

2009, இல் கொத்து கொத்தாக தமிழர் கொள்ளப்பட்டு போது, ராகுல் சொன்னது ஈழத்தமிழருக்கு நாடு அல்லது அரசு கிடைக்க கூடாது என்று; அல்லது அந்த கருத்தை அவரது மொழியில்.


இதை கண்டு தான், இறுதியில் தெரிந்தது, யார் தமிழ்  இனவழிப்புக்கு கரணம் என்று.

     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and text that says 'வர்த்தக மையக் கூட்டரங்கம். நந்தம்'

இந்த பக்கத்துல தான்.... தம்பி,  
உங்க ஆயாவும்... எங்க நைனாவும்,  
கச்சத்தீவை...  ஸ்ரீலங்காவுக்கு,  வித்ததை  பற்றி  இருக்கு. 😁 😂 🤣

Link to comment
Share on other sites

1 hour ago, Kadancha said:

2009, இல் கொத்து கொத்தாக தமிழர் கொள்ளப்பட்டு போது, ராகுல் சொன்னது ஈழத்தமிழருக்கு நாடு அல்லது அரசு கிடைக்க கூடாது என்று; அல்லது அந்த கருத்தை அவரது மொழியில்.


 

     

ஈழத்தமிழருக்கு நாடு அல்லது அரசு கிடைக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் சிலவற்றைத் தவிர (அவற்றிலும் அனேகமானவை திராவிட கட்சிகளும் சாதிக் கட்சிகளுமே) உலகில் வேறு எவராவது எந்த தேசமாவது, விரும்பியிருக்கின்றதா?

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளும் இணைந்து தான் தமிழர்களுக்கு நாடு கிடைக்க கூடாது என்று இலங்கை அரசை பலப்படுத்தியும் புலிகளை தடை செய்தும் காரியம் ஆற்றின. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ராலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தகத்தை பற்றி,
ஆராய்ச்சி செய்பவர்களுக்கு, டாக்டர் பட்டம் கொடுக்க,
பல பல்கலைக் கழகங்கள் தயாராக உள்ளதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

ஸ்ராலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தகத்தை பற்றி,
ஆராய்ச்சி செய்பவர்களுக்கு, டாக்டர் பட்டம் கொடுக்க,
பல பல்கலைக் கழகங்கள் தயாராக உள்ளதாம்.

Bild

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தன் வரலாறு ... இந்தப் புத்தகத்தை திமுகவினர் அல்லது திமுகவின் அனுதாபியாக இருப்பவர்கள் படிப்பார்களா என்று தெரியவில்லை ஆனால் நான் படித்தது தான் ஆச்சரியம். 😀

பொதுவாக மாற்று சித்தாந்தத்தில் உள்ளவர்களைப் பற்றி படிப்பது என் வழக்கம் அதன்படி ஸ்டாலின் அவர்களின் தன் வரலாற்றில் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக இந்த புத்தகத்தை வாங்கினேன். 

புத்தகத்தில் மொத்தம் 338 பக்கங்கள் உள்ளது அதில் வெறும் 137 பக்கங்கள் மட்டுமே எழுத்துக்களால் ஆனவை மற்ற பக்கங்கள் அனைத்தும் அவர்களுடைய புகைப்படத்தை பதித்துள்ளார்கள்.  

அந்த 137 பக்கத்தில் கூட ஸ்டாலின் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள வெறும் 60 மட்டுமே உள்ளது மீதி அனைத்தும் திமுகவின் வரலாற்றைப் பற்றியும் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தான் குறிப்பு உள்ளது. இதற்கு மேல் இந்த புத்தகத்தை விமர்சிப்பதற்கு வேறு வார்த்தைகள் இல்லை. 

విషాల్ బొలివర్

 

 

fathima%20babu%20stalin-n38yt.jpg

இவர்கள் பற்றிய சம்பவங்கள் அடங்கிய பக்கங்கள் கிழித்தெறியப்பட்டு விட்டதாம் 😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

Bild

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தன் வரலாறு ... இந்தப் புத்தகத்தை திமுகவினர் அல்லது திமுகவின் அனுதாபியாக இருப்பவர்கள் படிப்பார்களா என்று தெரியவில்லை ஆனால் நான் படித்தது தான் ஆச்சரியம். 😀

பொதுவாக மாற்று சித்தாந்தத்தில் உள்ளவர்களைப் பற்றி படிப்பது என் வழக்கம் அதன்படி ஸ்டாலின் அவர்களின் தன் வரலாற்றில் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக இந்த புத்தகத்தை வாங்கினேன். 

புத்தகத்தில் மொத்தம் 338 பக்கங்கள் உள்ளது அதில் வெறும் 137 பக்கங்கள் மட்டுமே எழுத்துக்களால் ஆனவை மற்ற பக்கங்கள் அனைத்தும் அவர்களுடைய புகைப்படத்தை பதித்துள்ளார்கள்.  

அந்த 137 பக்கத்தில் கூட ஸ்டாலின் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள வெறும் 60 மட்டுமே உள்ளது மீதி அனைத்தும் திமுகவின் வரலாற்றைப் பற்றியும் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தான் குறிப்பு உள்ளது. இதற்கு மேல் இந்த புத்தகத்தை விமர்சிப்பதற்கு வேறு வார்த்தைகள் இல்லை. 

విషాల్ బొలివర్

 

 

அறிஞர் அண்ணாதுரையின், காசை…
ஆட்டையை போட்டதைப் பற்றியும் புத்தகத்தில் இருக்குதா? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

அறிஞர் அண்ணாதுரையின், காசை…
ஆட்டையை போட்டதைப் பற்றியும் புத்தகத்தில் இருக்குதா? 😂

ரயில் பயணங்கள்  சம்பவம் கூட இல்லை சிறித்தம்பி 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

ரயில் பயணங்கள்  சம்பவம் கூட இல்லை சிறித்தம்பி 🤣

குமாரசாமி அண்ணை…இன்னும் கன பாகங்கள், புத்தமாக வர இருக்குதாம்.
சிலவேளை அதில வர இருக்குதோ…. 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.