Jump to content

ஐரோப்பாவின்... மிகப்பெரிய அணுமின் நிலையத்தில், தீ விபத்து! தீயணைப்பு வீரர்களை அனுமதிக்க உக்ரைன் கோரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ விபத்து! தீயணைப்பு வீரர்களை அனுமதிக்க உக்ரைன் கோரிக்கை!

ஐரோப்பாவின்... மிகப்பெரிய அணுமின் நிலையத்தில், தீ விபத்து! தீயணைப்பு வீரர்களை அனுமதிக்க உக்ரைன் கோரிக்கை!

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருகிலுள்ள எனர்ஹோடர் நகரின் மேயர் டிமிட்ரோ ஓர்லோ ‘(அணு உலையின்) கட்டடங்கள் மற்றும் உலைகளின் மீது எதிரியின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களால்’ இது ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

அணுமின் நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரி டூஸ், ரஷ்ய படைகள், ‘கடுமையான தாக்குதலை நிறுத்த வேண்டும்,’ என்று சமூக ஊடகங்களில் கேட்டுக் கொண்டார்.

மேலும், ‘ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையத்தில், அணு ஆற்றல் அபாயத்தின் உண்மையான அச்சுறுத்தல் உள்ளது’ என்று கூறினார்.

அணுமின் நிலையம் ரஷ்ய படைகளின் நேரடி ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால், பற்றி எரியும் நெருப்பை அணைக்கை தீயணைப்பு வீரர்களால் செல்ல முடியவில்லை என்றும் டூஸ் கூறினார்.

மேலும், தீப் பிடித்து எரியும் அணு உலை தற்போது செயற்பாட்டில் இல்லை, அது புதுப்பிக்கப்படுகிறது இருப்பினும், அங்கு அணு உலைக்கான எரிபொருள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டின் மொத்த மின் தேவையில் 25 சதவீதத்தை ஸபோரிஷியா அணு மின் நிலையம் வழங்குவதாகக் கூறப்படுகிறது.

https://athavannews.com/2022/1270251

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

உக்ரைன் அணுமின் நிலையம், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளான... காணொளி காட்சிகள்.

Link to comment
Share on other sites

நல்ல விசயம். அமெரிக்காவும், ரஷ்யாவும் ஆயிரக்கணக்கான அணுஆயுதங்களை வைத்துக் கொண்டு சும்மா நொட்டி விளையாடிக்கொண்டு இருக்கின்றார்கள். சில அணுஆயுதங்களை ஏவி வாண வேடிக்கை காட்ட வேண்டும். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

நல்ல விசயம். அமெரிக்காவும், ரஷ்யாவும் ஆயிரக்கணக்கான அணுஆயுதங்களை வைத்துக் கொண்டு சும்மா நொட்டி விளையாடிக்கொண்டு இருக்கின்றார்கள். சில அணுஆயுதங்களை ஏவி வாண வேடிக்கை காட்ட வேண்டும். 😜

முதல்லை நீங்கள் இருக்கிற நாட்டுக்கு மேலை வெடிக்குதோ வெடிக்கேல்லையோ பரிசோதிச்சு பாத்திட்டு.....பிறகு இஞ்சாலை......😎

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

முதல்லை நீங்கள் இருக்கிற நாட்டுக்கு மேலை வெடிக்குதோ வெடிக்கேல்லையோ பரிசோதிச்சு பாத்திட்டு.....பிறகு இஞ்சாலை......😎

 

ரஷ்யாவின் உக்கிரேன் மீட்பு போருக்கு விசில் அடிச்சு ஆதரவு வழங்கி போட்டு இப்படி ஜகா வாங்குகின்றிர்களே. ரஷ்யா ஐரோப்பவிக்கான எரிவாயு வழங்களை நிறுத்தி நேட்டோவிக்கும் அதன் குடிமக்களுக்கும் தகுந்த பாடம் புகட்டிட வேண்டும்.
#தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும். 😜


ஒவ்வொரு கண்டத்துக்கும் 10 அணுஆயுதங்கள் கானும் மனித குலத்தை அழிப்பதற்கு,  மனித  இனம் இல்லாத உலகம் சாந்தியும் சமாதானமாகவும் இருக்கும்.  😎

Link to comment
Share on other sites

உக்ரைனில் அணு உலைகள் உள்ளதென்றும், ரஷ்யா படை எடுத்து வந்தால் (நேட்டோ மொழியில் சொல்வதென்றால் ஆக்கிரமித்தால்) அவை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றோ அல்லது தாக்குதலுக்குள்ளாகும் என்றோ நேட்டோவுக்கும் ஐரோப்பாவுக்கும் தெரியாதா.

தெரிந்திருந்திருந்தால் உக்ரைனை உசுப்பேத்தி நானும் ரவுடிதான் என்று ரஷ்சியாவுக்கு காட்டாமல் விட்டிருக்கலாம். 

இங்கு நாலு வீடுகள் எரிந்தாலே அதை அணைக்க ஒரு நாள் முழுதும் தேவையாக இருக்கும். ஜப்பானில் நில நடுக்கத்திற்குள்ளான அணு உலை ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்க ஒரு மாதம் தேவைப்பட்டது என வாசித்தது ஞாபகம். ஆனால் இங்கு ஒரு சில மணித்தியாலங்களில் நெருப்பை அணைத்து விட்டார்களாம்.

ரஷ்சிய செய்திகளை, அதன் தொலைக்காட்சி அலைவரிசைகளை மேற்கில் தடை செய்து விட்டு, இப்ப அவர்கள் சொல்வதை மட்டுமே கேட்க வைத்து நாடகம் ஆடுகின்றார்கள் போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

2 hours ago, நிழலி said:

 

ரஷ்சிய செய்திகளை, அதன் தொலைக்காட்சி அலைவரிசைகளை மேற்கில் தடை செய்து விட்டு, இப்ப அவர்கள் சொல்வதை மட்டுமே கேட்க வைத்து நாடகம் ஆடுகின்றார்கள் போல் தெரிகிறது.

யாழ் கருத்துக்கள பொறுப்பாளராக இருந்து கொண்டு இப்படி பொசுக்கென்று  சொல்லி விட்டீர்களே. தேசியத்தையும், தலைவரையும் விமர்சனம் செய்யக்கூடாது என்று, பல்லாண்டு காலமாக காத்திரமான பங்களிப்பை செய்து வந்த  மாற்று கருத்து மாணிக்கங்களை துரத்தி விட்டு அல்லது விலக செய்து விட்டு, இப்படி ஊடக சுகந்திரத்தை பற்றி நீட்டி முழங்குவது பாசாங்குத்தனமாக(Hypocrisy)  தெரியவில்லையா?
கட்டற்ற ஊடக சுகந்திரத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

ரஷ்யாவின் உக்கிரேன் மீட்பு போருக்கு விசில் அடிச்சு ஆதரவு வழங்கி போட்டு இப்படி ஜகா வாங்குகின்றிர்களே.

அது உக்ரேன் மீட்பு போர் அல்ல.
முதலில் போருக்கான காரணங்களை தேடிக்கண்டு பிடித்துவிட்டு மேற்க்கொண்டு கருத்துக்களை எழுத வாருங்கள்.
உக்ரேன் மீட்பு போர் என்றால் அந்த போர் 15 வருடங்களுக்கு முன்னரே  ஆரம்பித்து இருக்க வேண்டியது

 

Link to comment
Share on other sites

30 minutes ago, zuma said:

யாழ் கருத்துக்கள பொறுப்பாளராக இருந்து கொண்டு இப்படி பொசுக்கென்று  சொல்லி விட்டீர்களே. தேசியத்தையும், தலைவரையும் விமர்சனம் செய்யக்கூடாது என்று, பல்லாண்டு காலமாக காத்திரமான பங்களிப்பை செய்து வந்த  மாற்று கருத்து மாணிக்கங்களை துரத்தி விட்டு அல்லது விலக செய்து விட்டு, இப்படி ஊடக சுகந்திரத்தை பற்றி நீட்டி முழங்குவது பாசாங்குத்தனமாக(Hypocrisy)  தெரியவில்லையா?
கட்டற்ற ஊடக சுகந்திரத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை.

என்னுடைய மேற்சொன்ன பதிலுக்கும் நான் யாழ்கள பொறுப்பாளராக இருப்பதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லாமல், தேவையற்ற விதத்தில் இதை எழுதியிருக்கின்றீர்கள். ஆனால் பாவம் கன நாட்களாக இதை கொட்டித் தீர்க்க வழியில்லாமல் ,தேவையற்ற ஒரு இடத்தில் இருந்திருக்கின்றீர்கள் என புரிகின்றது என்பதால் இந்த பதிலை எழுதுகின்றேன்.

யாழ்  எந்த இடத்திலும் தேசியத்தையும், தலைவரையும் விமர்சிக்க வேண்டாம் என்று கூறியதில்லை. ஆனால் 

//விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களையும்,  தலைவர் பிரபாகரனையும் அவமதிப்புக்குள்ளாக்காமல் காத்திரமான முறையில் வைக்கப்படுதல் வேண்டும் என வலியுறுத்துகின்றது.// என்றே சொல்கின்றது.

விமர்சனத்துக்கும் அவமதிப்புக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியாத அளவு அறிவை வைத்துக் கொண்டு தான் இங்கு இவ்வளவு நாளும் கருத்தாடி இருக்கின்றீர்கள், நல்லது.

விமர்சனத்துக்கும் அவமதிப்புக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை கூட புரிந்து கொள்ள விரும்பாமல், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இங்கு வந்து தேசியத்தையும் தலைவரையும் அவமதித்தே ஆவோம் என்று நினைக்கின்றவர்கள் யாழை விட்டு ஓடிப்போனால் அது பற்றி எந்த கவலையும் எனக்கோ, கண்டிப்பாக மோகனுக்கோ இருக்கப் போவதில்லை. தலைவரை அவமதிக்க விடுகின்றீர்கள் இல்லை என்று ஓடிப்போனவர்கள் அப்படியே ஓடிப் போகட்டும். இல்லை தலைவரினதும் தளபதிகளினது கல்வியறிவு பற்றி இழிவாக கதைக்க விடவில்லை என்று அவர்கள் ஓடிப்போயிருந்தால், சொல்லுங்கள் ஒரு நாளும் இந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்க வேண்டாம் இனி என்று.

நன்றி
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்…. அருமையான பதில், நிழலி. 👏🏻👏🏻👏🏻👏🏻

5 minutes ago, நிழலி said:

என்னுடைய மேற்சொன்ன பதிலுக்கும் நான் யாழ்கள பொறுப்பாளராக இருப்பதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லாமல், தேவையற்ற விதத்தில் இதை எழுதியிருக்கின்றீர்கள். ஆனால் பாவம் கன நாட்களாக இதை கொட்டித் தீர்க்க வழியில்லாமல் ,தேவையற்ற ஒரு இடத்தில் இருந்திருக்கின்றீர்கள் என புரிகின்றது என்பதால் இந்த பதிலை எழுதுகின்றேன்.

யாழ்  எந்த இடத்திலும் தேசியத்தையும், தலைவரையும் விமர்சிக்க வேண்டாம் என்று கூறியதில்லை. ஆனால் 

//விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களையும்,  தலைவர் பிரபாகரனையும் அவமதிப்புக்குள்ளாக்காமல் காத்திரமான முறையில் வைக்கப்படுதல் வேண்டும் என வலியுறுத்துகின்றது.// என்றே சொல்கின்றது.

விமர்சனத்துக்கும் அவமதிப்புக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியாத அளவு அறிவை வைத்துக் கொண்டு தான் இங்கு இவ்வளவு நாளும் கருத்தாடி இருக்கின்றீர்கள், நல்லது.

விமர்சனத்துக்கும் அவமதிப்புக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை கட புரிந்து கொள்ள விரும்பாமல், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இங்கு வந்து தேசியத்தையும் தலைவரையும் அவமதித்தே ஆவோம் என்று நினைக்கின்றவர்கள் யாழை விட்டு ஓடிப்போனால் அது பற்றி எந்த கவலையும் எனக்கோ, கண்டிப்பாக மோகனுக்கோ இருக்கப் போவதில்லை. தலைவரை அவமதிக்க விடுகின்றீர்கள் இல்லை என்று ஓடிப்போனவர்கள் அப்படியே ஓடிப் போகட்டும். 

நன்றி
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, zuma said:

யாழ் கருத்துக்கள பொறுப்பாளராக இருந்து கொண்டு இப்படி பொசுக்கென்று  சொல்லி விட்டீர்களே. தேசியத்தையும், தலைவரையும் விமர்சனம் செய்யக்கூடாது என்று, பல்லாண்டு காலமாக காத்திரமான பங்களிப்பை செய்து வந்த  மாற்று கருத்து மாணிக்கங்களை துரத்தி விட்டு அல்லது விலக செய்து விட்டு, இப்படி ஊடக சுகந்திரத்தை பற்றி நீட்டி முழங்குவது பாசாங்குத்தனமாக(Hypocrisy)  தெரியவில்லையா?
கட்டற்ற ஊடக சுகந்திரத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை.

கவனம்  சகோ
அவசரத்தில் குடும்பி  தெரிய  வெளிக்கிடுது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜேர்மனியில் வசித்த இவர்கள் தங்கள் குத்துச்சண்டை பலம் குறைய தங்கள் நாட்டுக்கு(உக்ரேன்) சென்று அரசியல் செய்ய வெளிக்கிட்டதின் அவலங்கள் தான் இன்றைய உக்ரேன் அவலம்.

Vitali Klitschko boxt gegen "Alptraum" Cristobal Arreola

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.