Jump to content

ஷேன் வார்ன்: முற்றிலும் திரவ உணவு முறை பாதுகாப்பானதா? ஆபத்துகள் என்னென்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஷேன் வார்ன்: முற்றிலும் திரவ உணவு முறை பாதுகாப்பானதா? ஆபத்துகள் என்னென்ன?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

திரவ உணவு முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

திரவ உணவு முறை

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன், கடந்த வெள்ளிக்கிழமை இயற்கையான காரணங்களால் உயிரிழந்தார். இந்நிலையில், விரைவாக உடல் எடையை குறைக்க 14 நாட்களாக அவர் திரவ உணவு முறையைப் பின்பற்றியதாக கூறப்படுகிறது.

இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவர் ஒரு பழைய புகைப்படத்தை ட்வீட் செய்து, "ஜூலைக்குள், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்த வடிவத்திற்கு திரும்ப வேண்டும் என்பது இலக்கு." என்று தெரித்திருந்தார்.

இதற்கு முன்பு அவர் பலமுறை முயற்சித்த உணவு முறைதான் இது என்று ஷேன் வார்னின் நண்பர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது திடீர் மரணத்திற்கும் இந்த உணவு முறைக்கும் தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை.

இந்த உணவுகள் எவ்வளவு பாதுகாப்பானவை மற்றும் அவை உடலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?

பல்வேறு வகையான திரவ உணவுமுறைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும், `குறைவான கலோரிகளை உட்கொள்வதன் மூலம் விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டும்` என்ற ஒரே நோக்கத்தையே கொண்டுள்ளன.

உடலில் உள்ள நச்சை நீக்கி சுத்தப்படுத்தக்கூடிய, பழ, காய்கறி ஜூஸ் முதல் குறைந்த கலோரிகள் கொண்ட மில்க் ஷேக்குகள் மற்றும் சூப்கள் வரை இந்த உணவுமுறை பட்டியலில் அடங்கும்.

ஆனால் தீவிரமான இந்த உணவு முறைகளால் உடல்நலத்துக்கு தீங்கு என்பதுடன் பெரும்பாலான மக்களுக்கு பொருந்தாது என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒரு நாளுக்கு 800 கலோரிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்படியான உணவு முறையை குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையான NHS பரிந்துரைக்கிறது; குறிப்பாக பருமனான அல்லது கடுமையான பருமனுடன் டைப்-2 நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு மட்டும்.

பல்வேறு மருத்துவ கண்காணிப்புகள் மற்றும் ஆதரவுகளோடு இந்த உணவுமுறை சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதேபோல இதில் ஒரு நாளைக்கு தேவையான சத்துக்களும் இருக்கின்றன. எனினும் பொதுவாக ஆன்லைனில் காணப்படும் பிற திரவ உணவுமுறைகள் அவ்வாறானதாக இல்லை.

"ஜூஸ் உணவு முறை மக்களை எளிதில் ஈர்க்கிறது. காரணம், அவர்கள் விரைவான தீர்வை விரும்புகிறார்கள். ஆனால் உணவுக் கட்டுப்பாடு என்பது மிகவும் கடினமானது" என்கிறார் பிரிட்டனில் உள்ள உணவுமுறைகள் குறித்த அமைப்பை சேரந்த ஐஸ்லிங் பிகோட்.

"ஜூஸ் போன்ற திரவ உணவுக்கு நமது உணவில் ஒரு பங்கு உள்ளது. ஆனால், இந்த ஒரு பங்கு என்பது எல்லோருக்கும் பொருந்துவதில்லை.

"அதேசமயம் சரியான உடல் எடை கொண்டவர்களிடம் இதை விளம்பரப்படுத்துவது கவலைக்குறிய ஒன்றாக உள்ளது," என்றார் அவர்.

பழம் அல்லது காய்கறி ஜூஸ் உங்களுக்கு நிறைய தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்கும். ஆனால் மிகக் குறைந்த அளவில்தான் புரதம் அல்லது கொழுப்பு கிடைக்கும்.

தோல் மற்றும் விதைகள் உட்பட முழு பழத்தையும் கூழ் செய்து சேர்க்காவிட்டால் உங்களுக்கு நார்ச்சத்து கூட பற்றாக்குறையாகி விடும்.

பிளைமவுத் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து துறை இணை பேராசிரியர் டாக்டர் கெயில் ரீஸ் கூறுகையில், "இந்த உணவு முறையில் ஒரு வாரத்திற்குப் பிறகு நீங்கள் சோர்வாக உணர்வீர்கள்," என்றார்.

ஊட்டச்சத்து சமநிலை இல்லாத, உடலுக்குத் தேவையான அனைத்தையும் கொடுக்காத உணவுமுறை நீண்ட நாட்களுக்குத் தொடரும்பட்சத்தில், அது "மிகுந்த பாதிப்பைத் தரக்கூடியதாக இருக்கலாம்" என்றும் அவர் கூறுகிறார்.

உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் இரும்புசத்து பயன்படுத்தப்பட்டு விடும். இது பெண்களுக்கு இரத்த சோகை வர வழிவகுக்கும். தசையின் வலு குறையும் மற்றும் குடல், நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகியவை உங்கள் உடலை இயல்பாக செயல்பட வைக்கவே கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

அத்துடன், தலைவலி, தலைச்சுற்றல், கடும் சோர்வு, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஆகிய பக்க விளைவுகளுக்கும் சாத்தியமுண்டு.

நிறைய இயற்கை அமிலங்களைக் கொண்ட பழச்சாறுகள், பற்களில் உள்ள ஈறுகளை தேய்த்துவிடுவதோடு, கலோரிகள் இல்லாததால் சுவாசமும் வித்தியாசமான வாசனையை உண்டாக்கும்.

திரவ உணவில் விரைவாக உடல் எடையை குறைப்பது சாத்தியம், ஆனால் பிகோட்டின் கூற்றுப்படி, மிகப்பெரிய சவால் "யோ-யோ ஆபத்து". அதாவது, உணவுமுறை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும்போது எடை கூடும் ஆபத்து.

 

Woman on a liquid diet

பட மூலாதாரம்,GETTY IMAGES

'எடை சுழற்சி'

"அதீத உணவுக்கட்டுப்பாடு, உடல் எடையை குறைப்பதற்கு ஒரு நிலையான தீர்வாகாது, ஏனெனில் இழக்கப்படும் எடையின் பெரும்பகுதி நீர் அல்லது மெலிந்த தசையாக இருக்கலாம்" என்று பிரிட்டிஷ் ஊட்டச்சத்து அறக்கட்டளையின் டாக்டர் சைமன் ஸ்டீன்சன் கூறுகிறார்.

"இந்த வகையான துரித டயட்கள், பித்தப்பையில் கற்களை உருவாக்குவதுடன், சில உடல்நல அபாயங்களுக்கும் வழிவகுக்கும்."

டாக்டர் ஸ்டீன்சன் "எடை சுழற்சி" முறை பற்றி எச்சரிக்கிறார். அதாவது குறிப்பிட்ட எடைக்குள் தொடர்ந்து இருப்பதற்காக, உடல் எடையை குறைக்கும் மற்றும் திரும்பப்பெறும் விதமான உணவுப்பழக்கம் இது. இதன் விளைவாக, உடலில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம்.

எடையைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த வழி, பல்வேறு பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பீன்ஸ், கொட்டைகள் மற்றும் விதைகள் என பலதரப்பட்ட சமமான உணவுகளை உட்கொள்வது அதனுடன் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதும் இதற்கான வழிதான்.

விரைவான மாற்றத்துக்காக இப்படி ஒரு "திரவ உணவுமுறை"யில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உடலுக்கு தேவையற்ற கலோரிகளை வழங்கும் மது, நொறுக்குத்தீனி, பிஸ்கட் ஆகிய உணவுகளை நீக்குமாறு டாக்டர் ரீஸ் பரிந்துரைக்கிறார்.

மேலும் உங்களுக்கு ஏதேனும் அடிப்படை உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், ஏதேனும் உணவுமுறையை தொடங்குவதற்கு முன் எப்போதும் ஒரு உணவியல் நிபுணரை கலந்தாலோசிக்கவும்.

சரியான முறையில் மேற்கொள்ளப்படும், திரவ உணவுமுறைகள், அதிக எடை கொண்டவர்களுக்கான குறைந்த கலோரி திட்டங்கள் போன்றவை பலனளிக்கும் என்று நிரூபிக்கப்பட்டவைதான். ஆனால் பலருக்கு, அவற்றைப் பின்பற்றுவது கடினமாகவும் தேவையற்ற அபாயமாகவும் இருக்கலாம்.

https://www.bbc.com/tamil/global-60670998

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.