Jump to content

மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொட முடியாமல் போனால் என்னாகும்? - தொடுதல் மனித வாழ்வுக்கு ஏன் அவசியம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொட முடியாமல் போனால் என்னாகும்? - தொடுதல் மனித வாழ்வுக்கு ஏன் அவசியம்?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

human touch 1

பட மூலாதாரம்,GETTY IMAGES

 மனிதர்கள் நலமுடன்  இருக்க தொடுதல் அடிப்படையான ஒன்று. ஆனால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொட முடியாமல் போனால்,  அவர்களுக்கு என்ன நடக்கும்? விளக்குகிறார்கள் நிபுணர்கள்.

மனிதர்களுக்கு இடையே தொடுதல் மிகவும் முக்கியமானது. இது  சமூகத்தை ஒன்றிணைக்கும் பிணைப்பு  என்று "யுனிக்: தி நியூ சயின்ஸ் ஆஃப் ஹுமன் ஆஃப் இண்டிவிஜுவலிடி (Unique: The NewScience of Human Individuality) என்ற புத்தக்கத்தின் எழுத்தாளர் டெவிட் லிண்டேன் கூறுகிறார்.

சமூகத்துடன்  நாம் பழகும் போது, தொடுதல் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் மிகவும் குறைவாக மதிப்பிடுகிறோம். நாம் உயிர் வாழ மனிதத் தொடுதல் மிகவும் முக்கியமானது. அது நம் டி.என்.ஏவில் உள்ளது. 

தொடுதல் குறித்த மிகவும் குறைவாகவே ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. தொடுகை குறித்து வெறும் 100 பக்கங்கள் கொண்ட  ஆய்வே அனைவருக்குமாக இருக்கிறது. தொடுதலை நாம் மிகவும் சுலபமாக எடுத்துக் கொள்கிறோம் என்று பரிணாம வளர்ச்சி குறித்த உளவியலாளர் ராபின் டன்பர் கூறுகிறார்.

தொடுதல் நமது தோலின் மூலமாகவே உணரப்படுகிறது.  ஆனால், நாம் பிறரை தொடும்போது, என்ன நடக்கும்?  ஏன் அது மிகவும் தனித்துவம் வாய்ந்தது?  என்ற கேள்வியுடன் தொடர்கிறார் சைக்கோடைனமிக் நியூரோ சயின்ஸ் பேராசிரியர் ( Professor of Psychodynamic Neuroscience) கேடரினா ஃபோட்டோலூலோ  (KATERINA FOTOLOULOU ).

"பிறரை தொடுவது என்பது, மூளையின் வெவ்வேறு செயல்பாடுகளால்  இயக்கப்படுகிறது. 1990-களில்தான், மனிதர்களின் தோலில் பிரத்யேகமான செல்களின் தொகுப்பு உள்ளது. அது தனித்துவமான பாதைகளுக்கு பயணித்து சென்று, மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்கின்றது.  இந்த செயல்முறைக்கு  C-Tactile System என்று அழைக்கப்படுகிறது.", என்று அவர் கூறுகிறார்.

தொடுதல் என்பது நம் இயல்பிலேயெ இருக்கும் ஒன்று. மனித இனத்திற்கு முன் வாழ்ந்த உயிரினங்கள் விழித்திருக்கும்போது, தங்கள்  ரோமங்களை தூய்மைப்படுத்தி கொள்ளுதலில்,  10-20%   நேரத்தை செலவழித்தன.  ஆனால், மனிதர்களுக்கு தற்போது ரோமங்கள் (Fur) இல்லை.  ஆனால், தொடுதலை பொருத்தவரையில், முந்தைய உயிரினங்களுடன்  மனிதர்களுக்கு நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

 நம் உடலில் ரோமங்களை  கைகளிலிருந்து பிரித்து காட்டும் பகுதி, மூளைக்கு இவ்வாறு சமிக்ஞையை அனுப்புகிறது, "நீங்கள் இங்கே உங்கள் சிறந்த நண்பருக்கு அருகில் இருக்கிறீர்கள்." இது  மூளையில் என்ன செய்கிறது எனில், எண்டோர்பின் அமைப்பைத் தூண்டுகிறது.  நாம் மிகவும் அமைதியாக உணர்கிறோம். மேலும், குறிப்பாக, இந்தச் செயலைச் செய்யும் நபர் மீது நம்பிக்கை வைக்கிறோம். அதுவே இந்த நட்பின் உணர்வை உருவாக்குகிறது.

மனிதர்களின் கையில் இருக்கும் ரோமப்பகுதி, தடவி கொடுப்பதற்கு என்றே  வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

human touch 2

பட மூலாதாரம்,GETTY IMAGES

"அரவணைப்பு சிகிச்சையில் கட்டிப்பிடித்தல், தடவி  கொடுத்தல், அனைத்து வகையான பிளாட்டோனிக் தொடுதல்கள் (Platonic touch)  ஆகியவை அடங்கும்.  இது மிகவும் எளிமையான நடைமுறை.  ஆனால், இது உண்மையில் மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்",  என்று கூறுகிறார்  (Hug Therapist) அரவணைப்பு  சிகிச்சையாளராக உள்ள ரெபெக்கா மிக்கோலா.

தொடுதல் நம் வாழ்வை  மேம்படுத்துகிறது மற்றும் வலி நிவாரணியாகக் கூட செயல்பட முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொடுதல் என்பது ஒரு குழந்தையாக நாம் கற்றுக் கொள்ளும் முதல் உணர்வு.  நாம் இவ்வாறே  முதலில் தொடர்பு கொள்கிறோம். மேலும் இது ஆரம்பகால வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. 

இதுகுறித்து, குழந்தை நரம்பியல் பேராசிரியரான ரெபெக்கா ஸ்லேட்டர் கூறுகையில்,  "இது அவர்களின் இதயத் துடிப்பை சீராக்கும்.  இது அவர்களின் எடையை அதிகரிக்க உதவலாம். இது உண்மையில் சமூக பிணைப்பை உருவாக்கும் முதல் நிகழ்வு", என்று விளக்குகிறார்.

"அதனால்தான், யாரெனும் உங்களைப் பற்றி எப்படி உணருகிறார்கள் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், அவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். அவர்கள் உங்களை எப்படித் தொடுகிறார்கள் என்பதை உணருங்கள் என நான் கூறுகிறேன்", என்று ராபின் டன்பர் கூறுகிறார்.

ஆனால், 110க்கும் மேற்பட்டநாடுகளில் கிட்டத்தட்ட 40,000 பேரிடம் நடத்தப்பட்ட தொடுதல் குறித்த ஆய்வு கணக்கெடுப்பின்படி, நம்மில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்குபோதுமான தொடுதலைப் பெறவில்லை என்று கூறுகிறார்கள். 

இது  தொடுதலின்மை (TOUCH HUNGER) என்ற  பிரச்னையாக தீவிரமாக உள்ளது. மேலும் இது நம்  பலரைப் பாதிக்கத் தொடங்குகிறது.

"நம் அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாக தொடும் நபர்களைத் தொட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், உடனடியாக அது பாதிப்பை ஏற்படுத்தாது.  ஆனால்,  நமது பிணைப்பு, கருணை,  நம்பிக்கை போன்ற உணர்வுகள் மெதுவாக குறையும்.",  என்று டேவிட் லிண்டேன் கூறுகிறார்.

 

human touch 2

பட மூலாதாரம்,GETTY IMAGES

"நீங்கள் ஒருவிலங்கை தொடுவதை நிறுத்தினால்,  அவை உண்மையில் நோய்வாய்ப்படும்; அதற்கு பதட்டம் ஏற்படும். மேலும் அவை நீண்டகாலத்திற்கு ஆரோக்கியமாக இருக்காது.குறைவான வாழ்நாளே கொண்டிருக்கும்."  சமூகத்தில் தொடுதல் பற்றிய கருத்து உண்மையில் மாறிவருகிறது.

"ஊரடங்கின் போது மக்கள் இயற்கையான தொடுதல் இருக்கும் காட்சிகள் உள்ள படங்களை பார்த்தபோது, அவர்கள்.  "இல்லை, அப்படி செய்யக்கூடாது !" என்று டிவியை நோக்கிப் பேச தொடங்கினர். நாம் எவ்வளவு விரைவாக மாற்றத்தை பழக கற்றுக்கொள்கிறோம் என்பதற்கு இது ஒருநல்ல உதாரணம்",   என்று கேடரினாஃபோட்டோலூலோ கூறுகிறார்.

பெருந்தொற்று முன்பு மக்கள் இருந்ததே போல, இப்போது அவர்களை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை.", என்று ரெபெக்கா ஸ்லேட்டர் கூறுகிறார். "தொடுதலின் முக்கியத்துவத்தை நாம் எப்போதாவது இழக்க நேரிடும் என்று நான் காண்கிறேன். பரிணாம வளர்ச்சி என்று வரும்போது, அப்படி ஒரு போதும் நடக்காது என்று சொல்லமுடியாது.  ஆனால், காதல் உறவுகளை நாம் கைவிடாத வரை அது சாத்தியமில்லை என்று நான் சந்தேகிக்கிறேன்." என்கிறார் ராபின் டன்பர்.

https://www.bbc.com/tamil/science-60712942

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோணா என்ற ஒன்று உலகம் பூரா பரவத் தொடங்கிய காலம் தொட்டு ஒருவரை ஒருவர் தொடுவது கை குலுக்குவது மற்றும் அணைப்பது எல்லாமே வெகுவாக குறைந்துவிட்டது என்றே சொல்லலாம்..என்ன இறப்பு வீடுகளில் மட்டும் சில விடையங்கள் விதி விதி விலக்காக்கப்பட  வேண்டிய சந்தர்ப்ப சூழ் நிலை.மற்றப்படி சொல்வற்கு ஒன்றும் இல்லை.✍️

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

COVID மூலம் அது குறைந்திருந்தாலும் தொடுதல் என்பது இல்லாமல் போகாது. மனிதர்களுடைய வாழ்க்கையில் சில நேரங்களில் வார்த்தைகளால் சொல்லமுடியாத ஆறுதலை, தொடுகை உணர்த்தியிருக்கும். 

கெட்ட எண்ணங்களுடனான தொடுகையை விடுத்து பார்ப்பீர்களேயானால், இந்த சாதாரன ஒரு pat ஒரு அணைப்பு உங்களிற்கு தோழமையை, ஆதரவை உணர்த்தும்..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடுதல் பற்றி நல்ல கட்டுரை......அதற்காக வீடுகளில, பிள்ளைகளில படு வேகமாய் தொடுவது எல்லாம் நீங்கள் சொல்லும் தொடுதலில் வராது என்று நினைக்கின்றேன்.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

தொடுதல் பற்றி நல்ல கட்டுரை......அதற்காக வீடுகளில, பிள்ளைகளில படு வேகமாய் தொடுவது எல்லாம் நீங்கள் சொல்லும் தொடுதலில் வராது என்று நினைக்கின்றேன்.......!   😁

தெய்வம் எங்கை வந்து நிக்குது கண்டியளே.....? 😁

எனக்கு தொடுதல் இல்லாட்டி நித்திரையே வராது.....கொரோனாவாவது  மண்ணாங்கட்டியாவது :cool:

Link to comment
Share on other sites

9 hours ago, suvy said:

தொடுதல் பற்றி நல்ல கட்டுரை......அதற்காக வீடுகளில, பிள்ளைகளில படு வேகமாய் தொடுவது எல்லாம் நீங்கள் சொல்லும் தொடுதலில் வராது என்று நினைக்கின்றேன்.......!   😁

அதற்கு "சாத்துதல்" என்று குறிப்பிடுவார்கள்.😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.