Jump to content

கொரோனாக்கே சிரிப்பாய் கிடக்கு-பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் தான் கொரோனா 
கொல்லுறன் என்று 
நாடுகளை எல்லாம் 
நாசம் செய்கிறேன் என்று 

வீட்டுக்குள்ள பூட்டி 
இருந்து போட்டு 
ஊசியை போட்டு 
என்னை ஓட வச்சுப் போட்டு 

சத்தம் இல்லாமல் 
கிடந்த நீங்கள் 
இப்போ யுத்தத்தை 
கொண்டு வந்திட்டியள் 

பேயை விரட்டிறம்
என்று இப்போ 
பிசாசை எல்லா 
கொண்டு வந்திட்டியள் 

என்ன செய்வது 
எனக்கே சிரிப்பாய் கிடக்கு 

எட என்னை விட
பெரிய கொரோனாக்கள் 
இருக்குது உலகத்தில 
என்னைப்போலவே 
இதுகும் கொல்லும் 

என்னைப்போலவே
எல்லாத்தையும் அழிக்கும்
சொல்லப்போனால் 
சும்மா விடாது 
சுய நலன்கள் 
கொண்ட கொரோனாக்கள் 

நான் இனம் மதம்
சாதி சமயம் எந்த நாடு 
என் நலன் என்று பார்க்காமல் 
எல்லோரையும் கொன்றேன் 

என்னைக் கலைச்சாலும்
இதை இப்போதைக்கு 
கலைக்க மாட்டியள் 

என்ன செய்வது 
எனக்கே சிரிபாய் கிடக்கு 

எவ்வளவு 
கூக்குரல் போட்டியள் 
எல்லோரையும் கொல்லுறான் 
கொரோனா என்று 
எல்லாத்தையும் அழிக்கிறான் 
கொரோனா என்று 
சும்மாவா விட்டியள் என்னை 

எட இப்போ மனிசரை 
மனுஷர் கொல்லுறியள் 
இன்னும் சரியப் போறியள் 
நான் அரை வாசி 
பொருளாதாரத்தை தின்றன் 
இப்போ மிகுதியை 
நீங்கள் தின்னப்போறியள் 
சாப்பாட்டுக்கே குழறப்போறியள் 
குடும்பமாய் அகதியாய் 
அலையவா போறீர்

என்ன செய்வது 
எனக்கே சிரிப்பாய் கிடக்கு 

என்னடா நீங்கள் 
மனிசரா என்று
நான் அழிச்சது காணாது என்று 
நீங்களும் இப்போ
உங்களை அளிக்கிறீர் 
அணு ஆயுதம் என்றும் 
ஆளுக்கு ஆள் வெருட்டுறியள் 

உலகில் அரைவாசி குழந்தைகள் 
பசியோட கிடக்குது 
அணு குண்டை எல்லாம் 
அவர்கள் தலையிலா போடுவீர் 
அப்புறம் ஐ நா வில் வந்து 
சாலமும் போடுறீர் 
ஐ நா என்ன ஐ நா 
அமெரிக்காவின் கைப்பொம்மை 

என்ன செய்வது 
எனக்கே சிரிப்பாய் கிடக்கு 
எங்க போய் உங்கட கதை 
முடியும் என்று.

பா.உதயன் ✍️


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்ப கொரோனாவுக்கும்.... 
மா, எண்ணை, ரொய்லற் பேப்பர் தட்டுப்பாடு வந்தது,
இந்தப் போருக்கும்... அதுகளுக்கு தட்டுப்பாடு வருகுது.
அதை... நினைக்க, எனக்கே சிரிப்பாய் கிடக்கு. 

கவிதைக்கு... நன்றி உதயகுமார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/3/2022 at 08:29, தமிழ் சிறி said:

ஆரம்ப கொரோனாவுக்கும்.... 
மா, எண்ணை, ரொய்லற் பேப்பர் தட்டுப்பாடு வந்தது,
இந்தப் போருக்கும்... அதுகளுக்கு தட்டுப்பாடு வருகுது.
அதை... நினைக்க, எனக்கே சிரிப்பாய் கிடக்கு. 

கவிதைக்கு... நன்றி உதயகுமார்.

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/3/2022 at 12:21, uthayakumar said:

 

நான் தான் கொரோனா 
கொல்லுறன் என்று 
நாடுகளை எல்லாம் 
நாசம் செய்கிறேன் என்று 

வீட்டுக்குள்ள பூட்டி 
இருந்து போட்டு 
ஊசியை போட்டு 
என்னை ஓட வச்சுப் போட்டு 

சத்தம் இல்லாமல் 
கிடந்த நீங்கள் 
இப்போ யுத்தத்தை 
கொண்டு வந்திட்டியள் 

பேயை விரட்டிறம்
என்று இப்போ 
பிசாசை எல்லா 
கொண்டு வந்திட்டியள் 

என்ன செய்வது 
எனக்கே சிரிப்பாய் கிடக்கு 

எட என்னை விட
பெரிய கொரோனாக்கள் 
இருக்குது உலகத்தில 
என்னைப்போலவே 
இதுகும் கொல்லும் 

என்னைப்போலவே
எல்லாத்தையும் அழிக்கும்
சொல்லப்போனால் 
சும்மா விடாது 
சுய நலன்கள் 
கொண்ட கொரோனாக்கள் 

நான் இனம் மதம்
சாதி சமயம் எந்த நாடு 
என் நலன் என்று பார்க்காமல் 
எல்லோரையும் கொன்றேன் 

என்னைக் கலைச்சாலும்
இதை இப்போதைக்கு 
கலைக்க மாட்டியள் 

என்ன செய்வது 
எனக்கே சிரிபாய் கிடக்கு 

எவ்வளவு 
கூக்குரல் போட்டியள் 
எல்லோரையும் கொல்லுறான் 
கொரோனா என்று 
எல்லாத்தையும் அழிக்கிறான் 
கொரோனா என்று 
சும்மாவா விட்டியள் என்னை 

எட இப்போ மனிசரை 
மனுஷர் கொல்லுறியள் 
இன்னும் சரியப் போறியள் 
நான் அரை வாசி 
பொருளாதாரத்தை தின்றன் 
இப்போ மிகுதியை 
நீங்கள் தின்னப்போறியள் 
சாப்பாட்டுக்கே குழறப்போறியள் 
குடும்பமாய் அகதியாய் 
அலையவா போறீர்

என்ன செய்வது 
எனக்கே சிரிப்பாய் கிடக்கு 

என்னடா நீங்கள் 
மனிசரா என்று
நான் அழிச்சது காணாது என்று 
நீங்களும் இப்போ
உங்களை அளிக்கிறீர் 
அணு ஆயுதம் என்றும் 
ஆளுக்கு ஆள் வெருட்டுறியள் 

உலகில் அரைவாசி குழந்தைகள் 
பசியோட கிடக்குது 
அணு குண்டை எல்லாம் 
அவர்கள் தலையிலா போடுவீர் 
அப்புறம் ஐ நா வில் வந்து 
சாலமும் போடுறீர் 
ஐ நா என்ன ஐ நா 
அமெரிக்காவின் கைப்பொம்மை 

என்ன செய்வது 
எனக்கே சிரிப்பாய் கிடக்கு 
எங்க போய் உங்கட கதை 
முடியும் என்று.

பா.உதயன் ✍️


 

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/3/2022 at 07:28, uthayakumar said:

 

அருமையான கவி வரிகள்.வாழ்த்துக்கள் பா.உ அவர்களே!
நாடுகளில் போர் குறைந்த போது கொரோனாவை விட்டார்கள் கொரோனா குறைய போரைத்துவங்கி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறதது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட இப்போ மனிசரை 
மனுஷர் கொல்லுறியள் 
இன்னும் சரியப் போறியள் 
நான் அரை வாசி 
பொருளாதாரத்தை தின்றன் 
இப்போ மிகுதியை 
நீங்கள் தின்னப்போறியள் 
சாப்பாட்டுக்கே குழறப்போறியள் 
குடும்பமாய் அகதியாய் 
அலையவா போறீர்.....!

 

நிதர்சனமான வரிகள் உதயன்........!  👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதரை அழிப்பதிலேயே  எல்லா   நாடுகளும்முன் நிற்கின்றன. அவர்களும் ஒரு நாள் அழிவார்கள் என எனோ தெரிவதில்லை . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொன்றிற்கும் ஏதோவொரு பின்புலம் செயற்படுகின்றது. இந்த அவலங்கள் எனது சந்ததியோடு மறையட்டும் என வேண்டுகின்றேன்.

அடுத்த சந்ததிகளாவது புரிந்துணர்வோடு வாழட்டும்.

கவிதைக்கு நன்றி உதயன் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2022 at 10:21, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..💐

 

On 16/3/2022 at 22:46, குமாரசாமி said:

ஒவ்வொன்றிற்கும் ஏதோவொரு பின்புலம் செயற்படுகின்றது. இந்த அவலங்கள் எனது சந்ததியோடு மறையட்டும் என வேண்டுகின்றேன்.

அடுத்த சந்ததிகளாவது புரிந்துணர்வோடு வாழட்டும்.

கவிதைக்கு நன்றி உதயன் 👍

 

On 16/3/2022 at 22:10, நிலாமதி said:

மனிதரை அழிப்பதிலேயே  எல்லா   நாடுகளும்முன் நிற்கின்றன. அவர்களும் ஒரு நாள் அழிவார்கள் என எனோ தெரிவதில்லை . 

 

On 16/3/2022 at 11:32, பசுவூர்க்கோபி said:

அருமையான கவி வரிகள்.வாழ்த்துக்கள் பா.உ அவர்களே!
நாடுகளில் போர் குறைந்த போது கொரோனாவை விட்டார்கள் கொரோனா குறைய போரைத்துவங்கி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறதது.

 

On 16/3/2022 at 11:36, suvy said:

நிதர்சனமான வரிகள் உதயன்........!  👏

அனைத்து உறவுகளின் கருத்துக்கும் நன்றிகள் 🙏🌺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2022 at 22:46, குமாரசாமி said:

ஒவ்வொன்றிற்கும் ஏதோவொரு பின்புலம் செயற்படுகின்றது. இந்த அவலங்கள் எனது சந்ததியோடு மறையட்டும் என வேண்டுகின்றேன்.

அடுத்த சந்ததிகளாவது புரிந்துணர்வோடு வாழட்டும்.

கவிதைக்கு நன்றி உதயன் 👍

அதற்கு இனி சாத்தியமே இல்லை கு.சா ......!

தொழில் நுட்பங்களில் அசாத்தியமாக முன்னேற்றமடைந்த கடந்த அரை நூற்றாண்டும் இதுதான், தூரதிஷ்டவசமாக மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டு விதையில்லாத உணவு உற்பத்திகள் மற்றும்  கோழி, பன்றி, மாடு, ஆடு போன்ற மாமிசங்கள் ...... உலகை அழிக்கும் சக்தியுள்ள ஆயுதங்கள், அணுகுண்டுகள் எல்லாத்தையும் தந்த ஆண்டும் இதுதான்....... தந்திரம் நிறைந்த அரசாங்கங்கள், மனிதர்கள் என்று எதிர்கால சந்ததியை இட்டு கவலைப்படத்தான் முடியும். வேறு ஒன்றும் செய்யேலாது......!  🤔

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.