Jump to content

தத்தளிக்கும் இலங்கை! பலாலியில் தரையிறங்கும் நரேந்திர மோடி - யாழ்ப்பாணம் விரையவுள்ள மகிந்த


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார ரீதியில் இலங்கை தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு இந்தியா பொருளாதார ரீதியில் உதவும் நிலையில், தமது நாட்டின் நலன்சார் விடயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் அண்மைக் கால செயற்பாடுகள் இதனை காட்டுகின்றன.

இதற்கிடையில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான இந்தியாவின் கரிசனை இந்த மாத இறுதியில் வெளிச்சத்துக்கு வருகிறது.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பாக இந்தியாவின் கரிசனை இலங்கையினால் கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்தும் கூறப்பட்டு வந்தது.

இந்தநிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி, பிம்ஸ்டாக் என்ற பல்துறை, தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ளனர்.

எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதியன்று பலாலி விமான நிலையத்துக்கு அவர்கள் வரவுள்ளனர்

22-622dafd39874c.webp

அவர்களை வரவேற்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர்

இதேவேளை மார்ச் 18ஆம் திகதி முதல் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

இந்தநிலையில் ஆசியாவின் மிக வெற்றிகரமான அரசியல் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் நரேந்திர மோடி, தொடர்ந்து இரண்டு பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று தனது எட்டாவது ஆண்டில் ஆட்சி செய்கிறார்.

ஐந்து முக்கிய மாநிலங்களுக்கான அண்மைய தேர்தலில், மோடியின் பாரதிய ஜனதா கட்சி, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசம் உட்பட நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அத்துடன் பாரதீய ஜனதாக்கட்சி அரசாங்கம் இலங்கையின் 2.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 600 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கையிருப்பாக வைத்துள்ளது.

கடந்த பல வருடங்களாக இந்தியாவின் பணவீக்க விகிதம் 6% ஆக சீராக உள்ளது,

எனினும் இலங்கையில் மார்ச் 10 ஆம் திகதி, எரிபொருள் விலையுயர்த்தப்படுவதற்கு முன்னர் பணவீக்கம் 16.9% ஆக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

https://tamilwin.com/article/india-pm-narendra-modi-land-in-palali-1647161299?itm_source=parsely-detail

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இலங்கைக்கு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ளனர்.

அதாகப்பட்டது இந்தியா சிங்களத்துக்கு ஏதாவது செய்தி சொல்ல விரும்புதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

அதாகப்பட்டது இந்தியா சிங்களத்துக்கு ஏதாவது செய்தி சொல்ல விரும்புதா?

வடக்கு Kழக்கு எங்களது..நீங்களும் ஒன்றும் அஎய்யக் கூடது. நம்பளும் அதே. 😌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன தூதுவர்… நல்லூர் கோவிலுக்குப் போன படியால்,
மோடி…… இம்முறை, நல்லூர் கோவிலுக்குப் போக சாத்தியங்கள் உண்டு. 😎

மறவன்புலவு சச்சி ஐயாவிடம் சொல்லி, பிரமாண்ட வரவேற்பு கொடுக்க வேண்டும். 🤣

Link to comment
Share on other sites

உக்ரைன் தனது எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்ததைக் காரணம் காட்டி அதன்மீது போர்தொடுப்பது ரஸ்யாவின் தார்மீகச் செயலாக ஒப்புக் கொண்ட இந்தியா, தனது பிரதான எதிரியை 16 கி மீ வரை கூட்டி வைத்துக் கும்மியடிக்கும் இலங்கையைச் சும்மா விடுமா ? மோடியா கொக்கா 😜.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, இணையவன் said:

உக்ரைன் தனது எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்ததைக் காரணம் காட்டி அதன்மீது போர்தொடுப்பது ரஸ்யாவின் தார்மீகச் செயலாக ஒப்புக் கொண்ட இந்தியா, தனது பிரதான எதிரியை 16 கி மீ வரை கூட்டி வைத்துக் கும்மியடிக்கும் இலங்கையைச் சும்மா விடுமா ? மோடியா கொக்கா 😜.

ரஷ்யாவின் எதிரிகள் யார்?
எந்த விதத்தில் அவர்கள் எதிரிகள்?

முடிந்தால் அல்லது நேரமிருந்தால் பதில் சொல்லுங்கள்.

இப்படிக்கு 
மீம்ஸ் மாணவன்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வடக்கு Kழக்கு எங்களது..நீங்களும் ஒன்றும் அஎய்யக் கூடது. நம்பளும் அதே. 😌

 

அம்பாந்தோட்டை சைனாவின் துறைமுகத்துக்கு அருகில் இரண்டு யுத்த கப்பலை  அனுப்பி விட்டுத்தான் ஆள் வருகிறார் பார்ப்பம் இந்தமுறையாவது சட்டையை கழட்டி நல்லூர் முருகனை தரிசிக்கிறாரா என்று பார்ப்பம் ?

34 minutes ago, குமாரசாமி said:

ரஷ்யாவின் எதிரிகள் யார்?
எந்த விதத்தில் அவர்கள் எதிரிகள்?

முடிந்தால் அல்லது நேரமிருந்தால் பதில் சொல்லுங்கள்.

இப்படிக்கு 
மீம்ஸ் மாணவன்😂

சேர் நான் சொல்லட்டோ ?

நான் நினைக்கிறன் பனி கரடிகள் என்று 🥱

6 hours ago, பெருமாள் said:

இதற்கிடையில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான இந்தியாவின் கரிசனை இந்த மாத இறுதியில் வெளிச்சத்துக்கு வருகிறது.

கொஞ்சகாலத்துக்கு முன்பு கோத்தா ஆட்சிக்கு வந்ததும் பலாலி விமான நிலையத்தில் இருந்த  கதிரை மேசையில் இருந்து கம்யூட்டர் வரை  புடுங்கி எடுத்துகொண்டுபோய் மாத்தால விமான நிலையத்தை புதுப்பித்தவை .இப்ப மோடி தான் பலாலி விமான நிலையத்தை  புதுப்பிக்க கொடுத்த பொருட்கள் எங்கே என்று ? அல்லது அதானி நிறுவனத்துக்கு பலாலியை  குத்தகை எடுக்க போக்கினமாக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

உக்ரைன் தனது எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்ததைக் காரணம் காட்டி அதன்மீது போர்தொடுப்பது ரஸ்யாவின் தார்மீகச் செயலாக ஒப்புக் கொண்ட இந்தியா, தனது பிரதான எதிரியை 16 கி மீ வரை கூட்டி வைத்துக் கும்மியடிக்கும் இலங்கையைச் சும்மா விடுமா ? மோடியா கொக்கா 😜.

சீனண் மன்னார் வளைகுடாவில் ஆய்வுகளைச் செய்வது இப்போதுதான் மூடிக்குத் தெரியுமாக்கும்...😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் சும்மா சிண்டு முடியுற வேலை. தான் தமிழருக்கு உதவ வருவதுபோல் பாவனை செய்ய, சிங்களவன் அலறி அடிச்சுக்கொண்டுபோய் காலில விழ, மோடியும் தன் நலன் பாக்க, தமிழரோ தேரையனார் இளனி உண்ணார் பழி சுமப்பார் கதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ரஷ்யாவின் எதிரிகள் யார்?
எந்த விதத்தில் அவர்கள் எதிரிகள்?

முடிந்தால் அல்லது நேரமிருந்தால் பதில் சொல்லுங்கள்.

இப்படிக்கு 
மீம்ஸ் மாணவன்😂

என்ன கு.சா அண்ணா 
நீங்கள், ஓணாண்டியார், சிறியர் எழுதும் பக்கம் பக்கமான பதிவுகளில் இருந்து தானே நானே ரசியாவின் எதிரிகள் யார் என்பதை அறிந்துகொண்டு இருக்கிறேன். திடீரென்று நீங்கள் இப்படி ஒரு கேள்வியை கேட்டால்.. நான் பெற்ற  ஞானமெல்லாம் என்னாவது !!! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.