Jump to content

சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

        

                நீண்ட நாட்களாக சன்பிரான்ஸ்சிஸ்கோவில் இருந்து லாஸ் அங்கிலஸ் கடற்கரை ஓரமாக உள்ள ஒற்றையடிப் பாதையில் (அனேகமான இடங்கள்)போக வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது.

                 ஒரேஒரு முறை ஒரு 50 மைல் தூரம்வரை குடும்பமாக ஒரு நிகழ்வுக்கு போயிருந்தோம்.அப்போதே இந்த பாதையின் மகத்துவம் பற்றி சொன்னார்கள்.அப்போதே எல்லாவற்றையும் கேட்ககேட்க கடற்கரையையும் பார்க்க ஒருமுறை இந்த பாதையில் போனால் என்ன என்று யோசித்தேன்.

                 அதன் பின் 2012-14 (சரியாக ஆண்டு நினைவில் இல்லை)ஆண்டளவில் அவுசிலிருந்து அண்ணனின் மகன் நண்பியுடன் வந்திருந்தான்.அவனும் இந்த பாதையை கேள்விப்பட்டோ ஏதோ இதே பாதையில் கொன்வேட்டர் கார் வாடகைக்கு எடுத்து அதுவும் கோடை காலத்தில் மேலே துறந்துவிட்டுட்டு அவ்வளவு தூரமும் இருவரும் பயணம் செய்தனர்.பயணம் முடிந்து அடுத்தநாள் தூக்கத்தால் எழும்பினால் முகம் முழுக்க தோலுரிந்து இருந்தது வேறுகதை.

                  ஏற்கனவே எனக்குள் இருந்த ஆசை இவனும் போன அனுபவங்களை சொல்லசொல்ல இன்னும் வேகம் கூடியது.ஆனாலும் நடக்குமா இல்லையா பத்தோடு பதினொன்றாக இதுவும் போயிடுமா என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில்த் தான் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

                 அதுவும் முழு தூரமும் நானே கார் ஓடிக் கொண்டு போவேன் என்று நினைத்திருக்கவில்லை.

                 ஒருநாள் காலை 9 மணிபோல புறப்பட்டோம்.ஆங்காங்கே தங்கிதங்கி இடங்கள் பார்த்து போவதற்காக மகளும் மருமகனும் முக்கியமான இடங்கள் என்று 8 இடங்கள் வரை படத்தில் அடையாளமிட்டிருந்தனர்.இந்த பாதையில் பல இடங்களில் கைபேசி வேலை செய்யாது.எனவே வரைபடத்தையும் முன்னரே சேமித்துக் கொண்டேன்.

CF24-BE4-A-D917-4-AB9-A52-A-630-F068-A39
 

                 வழமை போன்று போகும் பாதையை தேடினால் நெடுஞ்சாலையையே காட்டும்.நெடுஞ்சாலை ஐந்தரை மணிநேரமும் 101 ஆறரை மணிநேரமும் ஆகும்.ஆனால் நான் விரும்பிய பாதையில் தொடர்ந்து ஓடினால் 9 மணிநேரமாகும்.

EE7-E2818-73-B9-4-AAF-A40-B-D02-E2-DD3-D
                  இதுதான் நாங்கள் போனபாதை
மிகுதி தொடரும்.

  • Like 23
Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

நீண்ட நாட்களாக சன்பிரான்ஸ்சிஸ்கோவில் இருந்து லாஸ் அங்கிலஸ் கடற்கரை ஓரமாக உள்ள ஒற்றையடிப் பாதையில் (அனேகமான இடங்கள்)போக வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது.                  ஒரேஒரு முறை ஒரு 50 மைல் தூர

ஈழப்பிரியன்

மேலே உள்ளது தான் நெடுஞ்சாலையின் பெயர்.பெயர் தான் நெடுஞ்சாலை ஆனால் ஒற்றையடிப் பாதையே.வேகமும் ஒரு சில இடங்கள் 55 மைல்கள்.கூடிய தூரம் 15-20-25 இப்படியாகவே இருந்தது.நாங்கள் விரும்பினால்க் கூட வேகமாக ஓட மு

நீர்வேலியான்

கலிபோர்னியா, நேவாடா, அரிசோனா, கொலராடோ,யூட்டா, டெக்சாஸ், போன்ற பெரும் பிரதேசங்கள், ஸ்பெயின்இன் ஆளுகையின் கீழ், மெக்ஸிக்கோவுடன் இருந்தது. பிறகு அமெரிக்க-மெக்ஸிகோ யுத்தத்தின் முடிவில், உடன்படிக்கையின் பட

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் குதித்து விட்டார் ஈழப்பிரியன். 😀 தொடருங்கள்  ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறோம். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட எங்கடை பெரிசும் தொடங்கீட்டார்......ஆளை இனி கையிலை பிடிக்கேலாது. 😁

உங்கள் கார் ஓட்டத்தை   தொடருங்கள்......நாங்களும் சேர்ந்து பயணிக்கின்றோம் 👍

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாதையைப் பற்றி மேலும் அறிய, ஆவலாக உள்ளோம்.
இயலும் என்றால்… படங்களுடன்,  தொடருங்கள் ஈழப்பிரியன்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அடுத்தநாள் தூக்கத்தால் எழும்பினால் முகம் முழுக்க தோலுரிந்து இருந்தது வேறுகதை.

ஏன்.? என்ன காரணம் . இப்போது முகம் எப்படி இருக்கிறது? காரில் வேகமாக போகலாமா  ?. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்தப் பாதையைப் பற்றி மேலும் அறிய, ஆவலாக உள்ளோம்.
இயலும் என்றால்… படங்களுடன்,  தொடருங்கள் ஈழப்பிரியன்.

நமக்குந்தான் அறிய ஆவல் தொடருங்கள் .

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், ஈழப்பிரியன்…!

இடங்களின் பெயர்கள் சான் என்று தொடங்குகின்றன. இவை ஸ்பானிஸ் பெயர்களா? ஏன் என்று அறிந்து சொல்லுங்கள்….!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவலுடன் வாசிக்கின்றோம் .......நல்ல படங்களுடன் தொடருங்கள் பிரியமானவரே.......!  👏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

களத்தில் குதித்து விட்டார் ஈழப்பிரியன். 😀 தொடருங்கள்  ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறோம். 

தொடரும் ஆனால் மெதுவாக.

8 hours ago, குமாரசாமி said:

அட எங்கடை பெரிசும் தொடங்கீட்டார்......ஆளை இனி கையிலை பிடிக்கேலாது. 😁

உங்கள் கார் ஓட்டத்தை   தொடருங்கள்......நாங்களும் சேர்ந்து பயணிக்கின்றோம் 👍

நீங்கள் இருக்கிற நம்பிக்கையில்த் தான் கிறுக்கத் தொடங்கியுள்ளேன்.

7 hours ago, தமிழ் சிறி said:

இந்தப் பாதையைப் பற்றி மேலும் அறிய, ஆவலாக உள்ளோம்.
இயலும் என்றால்… படங்களுடன்,  தொடருங்கள் ஈழப்பிரியன்.

 

5 hours ago, யாயினி said:

அய்யா மைப் வேணாம் படங்கள் பகிர முடிந்தால் நன்று.

நாங்கள் போன அந்தக் கிழமை மிகவும் குளிர்.சிலசில இடங்களில் நின்று பார்த்ததோடு சரி.படங்கள் எடுக்கவில்லை.கடற்கரை ஓட்டமென்றதால் கடற்காற்றும் அதிகமாக இருந்தது.காற்றில்லாவிட்டால் குளிரைத் தாங்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:
9 hours ago, ஈழப்பிரியன் said:

அடுத்தநாள் தூக்கத்தால் எழும்பினால் முகம் முழுக்க தோலுரிந்து இருந்தது வேறுகதை.

ஏன்.? என்ன காரணம் . இப்போது முகம் எப்படி இருக்கிறது? காரில் வேகமாக போகலாமா

இது எனக்கு நடந்ததல்ல.எனது அண்ணனின் மகனுக்கு நடந்தது.கோடைகாலம் மிகவும் வெப்பமாக இருக்கும் போது காரின் மூடியை திறந்துவிட்டு ஓட நன்றாக இருந்திருக்கும்.அனல்காற்று அடித்ததே தெரிந்திருக்காது.

5 hours ago, பெருமாள் said:

நமக்குந்தான் அறிய ஆவல் தொடருங்கள் .

பெருமாள் அமைதி பிளீஸ்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

தொடரும் ஆனால் மெதுவாக.

பரவாயில்லை அங்கிள்… எனக்கும் இடங்கள் அதிலும் காடு மலை கடல் என்பனவற்றை பார்க்க மிகவும் விருப்பம்..

அதிலும் ஒரு தரமாவது USல் உள்ள Grand Ganyan பார்க்க விருப்பம்..let’s see 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

தொடருங்கள், ஈழப்பிரியன்…!

இடங்களின் பெயர்கள் சான் என்று தொடங்குகின்றன. இவை ஸ்பானிஸ் பெயர்களா? ஏன் என்று அறிந்து சொல்லுங்கள்….!

ஒரு காலத்தில் இந்தியன் இருந்தார்கள்.

பின்னர் ஸ்பானிஸ்(கூடுதல் மெக்சிக்கன்ஸ்).

1850களில் திடீரென தங்கம் கண்டுபிடிக்க உள்ள வெள்ளை இனத்தவர் குடியேறிவிட்டனர்.

6 hours ago, suvy said:

ஆவலுடன் வாசிக்கின்றோம் .......நல்ல படங்களுடன் தொடருங்கள் பிரியமானவரே.......!  👏

எல்லோரும் படங்கள் படங்கள் என்றால் சுட்டுத் தான் போட வேண்டும்.

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

பரவாயில்லை அங்கிள்… எனக்கும் இடங்கள் அதிலும் காடு மலை கடல் என்பனவற்றை பார்க்க மிகவும் விருப்பம்..

அதிலும் ஒரு தரமாவது USல் உள்ள Grand Ganyan பார்க்க விருப்பம்..let’s see 

 

கடந்த வருடம் எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்தது.

இங்கு பாடப் புத்தகங்களிலேயே இவை பற்றி இருந்ததால் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.

அத்தோடு அமெரிக்காவின் மிகவும் புகழ் பெற்ற களியாட்ட நகரமான லாஸ்வீகசும் ஒன்றாக பார்க்க கிடைத்தது.

இரண்டையும் பார்த்தது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு காலத்தில் இந்தியன் இருந்தார்கள்.

பின்னர் ஸ்பானிஸ்(கூடுதல் மெக்சிக்கன்ஸ்).

1850களில் திடீரென தங்கம் கண்டுபிடிக்க உள்ள வெள்ளை இனத்தவர் குடியேறிவிட்டனர்.

ஈழப்பிரியன்…. இந்தியன் என்றால்,
நம்ம அயல்நாட்டு, ஹிந்தி பேசும் இந்தியன் என நினைக்கப் போகிறார்கள். 😜
செவ் இந்தியன் என்று… குறிப்பிடுங்கள். 🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்…. இந்தியன் என்றால்,
நம்ம அயல்நாட்டு, ஹிந்தி பேசும் இந்தியன் என நினைக்கப் போகிறார்கள். 😜
செவ் இந்தியன் என்று… குறிப்பிடுங்கள். 🤣

இந்தியாக்காரனை  ‘ஹிந்தியன்’ என்று எல்லோ அழைப்பார்கள்!😂

Edited by புங்கையூரன்
எழுத்துப் பிழை
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒடுங்கோ ஓடினதை எழுதுங்கோ 
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தாள் எல்லாருக்கும் பதில் எழுதியே இரண்டு பக்கத்தை கொண்டு போகும் போல கிடக்கு...😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்…. இந்தியன் என்றால்,
நம்ம அயல்நாட்டு, ஹிந்தி பேசும் இந்தியன் என நினைக்கப் போகிறார்கள். 😜
செவ் இந்தியன் என்று… குறிப்பிடுங்கள். 🤣

உண்மை தான் சிறி.

9 hours ago, putthan said:

ஒடுங்கோ ஓடினதை எழுதுங்கோ 
 

பேரப்பிள்ளைகள் வந்து எமது சுதந்திரம் பறி போகிறது.

கணனியோ போனோ விளையாட விடுவதில்லை.

அதைக் கண்டாலும் எடுத்து தந்துவிட்டு போவார்கள்.

சில பிள்ளைகள் போன் ரிவி இல்லாவிட்டால் தொலைஞ்சுது.

நாங்களும் பழக்க வேண்டாமே என்று கவனமாக இருக்கிறோம்.

4 hours ago, குமாரசாமி said:

உந்தாள் எல்லாருக்கும் பதில் எழுதியே இரண்டு பக்கத்தை கொண்டு போகும் போல கிடக்கு...😎

என்னா பெரிசு கடையை பூட்டாவிட்டால் கல்லெறி விழும் போல இருக்கே.

கெதியில் பூட்ட முயற்சி செய்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5-EA989-B0-281-C-4-DED-9331-7-A367-D8746                     
 மேலே உள்ளது தான் நெடுஞ்சாலையின் பெயர்.பெயர் தான் நெடுஞ்சாலை ஆனால் ஒற்றையடிப் பாதையே.வேகமும் ஒரு சில இடங்கள் 55 மைல்கள்.கூடிய தூரம் 15-20-25 இப்படியாகவே இருந்தது.நாங்கள் விரும்பினால்க் கூட வேகமாக ஓட முடியாது.

30-A28384-3966-4-CAA-A26-F-50-CED6-F8654

                        படங்கள் எடுக்கக் கூடிய இடங்கள் இருந்தன.ஆனாலும் எமது கைபேசியினால் பரந்த தேசங்களை எடுக்க முடியாது.ஆரம்பத்தில் இருந்து முடியும்வரை மிகவும் ரசிக்கக் கூடிய இடமாக இருந்தது.நின்றுநின்று போகிறபடியால் தொடர்ந்து கார் ஓட வேண்டாமென்று பிள்ளைகள் இடையில் ஒரு கொட்டேலும் போட்டிருந்தனர்.

                      பிற்பகல் 6 மணிபோல் கொட்டலை சென்றடைந்தோம்.இரவு நல்ல சாப்பாடு நல்ல தூக்கம்.நீண்ட தூரம் கார் ஓடுவதானால் நிறைய சாப்பிடுவதில்லை.காலை சாப்பாடு கொட்டேலில் மீண்டும் பகல் 9.30 போல புறப்பட்டோம்.அன்றைய தினம் அதிகம் நின்று செல்லவில்லை.ஒரேஒரு இடம் தான் பார்க்க திட்டமிட்டிருந்தோம்.வேறோன்றுமில்லை வண்ணாத்தி பூச்சிகளே.

                      குறிப்பிட்ட ஒரு அரைமைல் சுற்றளவில் தேனீக்கள் எப்படி இருக்குமோ அதே மாதிரி வண்ணாத்தி பூச்சிகள்.மிகவும் ஆச்சரியமாக இருந்தது.படமெடுக்கலாம் என்று கைபேசியில் பார்த்தா எல்லா வண்ணாத்தி பூச்சிகளும் சிறிய தேனீக்கள் போல தெரிந்தன.

3600-A4-CF-6804-47-AB-A2-EF-5-D37-B09-E0

                      அங்கிருந்கு நேராக மகளாக்கள் நின்ற இடத்துக்கு போய் சேர்ந்தோம்.

                       அடுத்த நாள் கொலிவூட் என்ற பெரிய எழுத்துக்கள் உள்ள விளம்பரத்தை பார்க்க போனோம்.
நான் நினைத்திருந்தது வேறு.கண்ட காட்சியோ வேறு.

10-B8789-E-2-B1-D-49-F2-8-B75-1519-F8438

77622-F2-A-1651-4500-8763-1-D5389-DFD824
                      இதுவரை நான் நினைத்தது கொலிவூட் நடிகர் நடிகைகள் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களே அந்தப் பகுதியில் இருப்பார்கள்.உள்ளே போய் பார்க்க கட்டணம் அறவிடுவார்களோ பெரிய கட்டுப்பாடுகள் இருக்கும் என்று கனக்க எண்ணியிருந்தேன்.நான் தான் இதை ஒருதரமாவது பார்க்க வேண்டும் என்று சொல்ல பிள்ளைகள் சிரிக்கிறார்கள்.இதைப்போய் என்னத்தை பார்க்க போறீங்கள் என்று.

                        ஒரு மலைப் பிரதேசத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.காரில் போக பல பாதைகள் இருக்கும் என எண்ணுகிறேன்.நாங்கள் போன பாதை மலையில் கொஞ்ச தூரம் போனபின் குடிமனைகள் உள்ள இடத்தால் ஒரு கார் மட்டுமே போக கூடியவாறு வீதிகள் இருந்தன.அங்குள்ள மக்கள் இதை பார்க்க வருபவர்களின் தொல்லை தாங்க முடியாமல் இந்த றோட்டால் போக கூடாது தனியார் றோட்டு வாகனம் நிறுத்தக் கூடாது என்று பலவாறு எச்சரிக்கை பலகைகள் தொங்கவிட்டிருந்தனர்.

                       ஓரளவுக்கு மேல் எமக்கும் யோசனை.ஏதோ கிடைத்த இடத்தில் நிறுத்திவிட்டு மலையில் சிறிது தூரம் ஏறி போய் பார்த்தோம்.வழமையில் நல்ல காலநிலையாக இருந்த இடம் நாங்கள் போனகிழமை மிகவும் குளிராக இருந்தது.காலநிலை நன்றாக இருந்தால் நிறைய கூட்டம் அந்த கொலிவூட் என்ற விளம்பர பலகையிலேயே ஏறி படங்களெல்லாம் எடுப்பார்களாம்.

                        இதனிடையே நீர்வேலியானை சந்தித்தது பற்றி எழுதியிருந்தேன்.

B3554267-0435-4949-AEE7-75-EAFC3-E299-F.
                    கடைசியாக ஒரு கோவிலுக்கு போய் தரிசனத்துடன் எமது லாஸ் அங்கிலஸ் சுற்றுலாவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம்.

                    வரும்போது நெடுஞ்சாலை 5 வழியாக 6 மணிநேரத்தில் வீடு வந்து சேர்ந்தோம்.
நன்றி.
இனிவராது.

யாராவது கலிபோர்ணியா போனால் நிச்சயம் இந்த பாதையில் பயணித்து பாருங்கள்.

  • Like 16
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/3/2022 at 14:28, புங்கையூரன் said:

தொடருங்கள், ஈழப்பிரியன்…!

இடங்களின் பெயர்கள் சான் என்று தொடங்குகின்றன. இவை ஸ்பானிஸ் பெயர்களா? ஏன் என்று அறிந்து சொல்லுங்கள்….!

கலிபோர்னியா, நேவாடா, அரிசோனா, கொலராடோ,யூட்டா, டெக்சாஸ், போன்ற பெரும் பிரதேசங்கள், ஸ்பெயின்இன் ஆளுகையின் கீழ், மெக்ஸிக்கோவுடன் இருந்தது. பிறகு அமெரிக்க-மெக்ஸிகோ யுத்தத்தின் முடிவில், உடன்படிக்கையின் படி வெற்றி பெற்ற அமெரிக்காவிடம் வந்தது.  இதற்கு ஈடாக மெக்ஸிகோ வுக்கு பணம் கொடுக்கப்பட்டது. 1700 களில் ஸ்பானிஷ் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டு, மிக அதிகமாக நடைபெற்றது, இங்குள்ள native இந்தியர்களுக்கு மதமும் பரப்பப்பட்டது,  பிறகுதான் ஆங்கிலேயர்களும் மற்றைய ஐரோப்பியர்களும், தங்கத்துக்காக வந்தார்கள். அதனால்தான் இங்குள்ள இடங்களின் பெயர்கள் பெரும்பாலும் ஸ்பானிஷ் மொழியில் இருக்கும். Native இந்தியர்களுக்கு சொந்தமான இடங்களுக்காக ஸ்பானியர்களும் ஆங்கிலேயர்களும் அடிப்பட்டுக்கொண்டார்கள்

  • Like 9
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி, நீர்வேலியான்…!

ஆங்கிலேயர்களிலும் பார்க்க ஸ்பானியர்களின் காலனித்துவம் இலாபத்தையும், மதம் பரப்பலையும் நோக்கமாகக் கொண்டது..!அவர்களின் அக்கிரமங்கள் அதிகமாக இருந்தாலும், அடிமகளை ஓரளவுக்கு மனிதராக மதித்தார்கள் என்று தான் கூற வேண்டும்! ஆங்கிலேயர் அடிமைகளை savages ஆகத் தான் கருதினார்கள்.இதுநாள் அடிமைகள் ஆங்கிலேயர்களை விடவும் ஸ்பானியர்களை விரும்பினார்கள்!

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை ஈழப்பிரியன் ஐயா

 

1 hour ago, புங்கையூரன் said:

மிக்க நன்றி, நீர்வேலியான்…!

ஆங்கிலேயர்களிலும் பார்க்க ஸ்பானியர்களின் காலனித்துவம் இலாபத்தையும், மதம் பரப்பலையும் நோக்கமாகக் கொண்டது..!அவர்களின் அக்கிரமங்கள் அதிகமாக இருந்தாலும், அடிமகளை ஓரளவுக்கு மனிதராக மதித்தார்கள் என்று தான் கூற வேண்டும்! ஆங்கிலேயர் அடிமைகளை savages ஆகத் தான் கருதினார்கள்.இதுநாள் அடிமைகள் ஆங்கிலேயர்களை விடவும் ஸ்பானியர்களை விரும்பினார்கள்!

 

ஆம் புங்கை நானும் இதை பற்றி கேள்விப்ட்டேன். 


என்னுடைய முன்னாள் மேலாளர் ஒரு மெக்க்சிகன். அடிக்கடி இலங்கைக்கு விடுமுறைக்கும் வருவான். அவன் கூறிய ஒரு விடையன் என்னவென்றால் ஆங்கிலேயர்கள் தாங்கள் பிடித்த நாடுகளை அபிவிருத்தி செய்தார்களாம் உ+ம் ரயில் பாதைகள் போன்றவற்றை அமைத்துள்ளார்கள். ஆனால் ஸ்பானிய ஆக்கிரமிப்ள‌ர்கள் அப்படி எதுவும் செய்வதிலையாம். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நீர்வேலியான் said:

கலிபோர்னியா, நேவாடா, அரிசோனா, கொலராடோ,யூட்டா, டெக்சாஸ், போன்ற பெரும் பிரதேசங்கள், ஸ்பெயின்இன் ஆளுகையின் கீழ், மெக்ஸிக்கோவுடன் இருந்தது. பிறகு அமெரிக்க-மெக்ஸிகோ யுத்தத்தின் முடிவில், உடன்படிக்கையின் படி வெற்றி பெற்ற அமெரிக்காவிடம் வந்தது.  இதற்கு ஈடாக மெக்ஸிகோ வுக்கு பணம் கொடுக்கப்பட்டது. 1700 களில் ஸ்பானிஷ் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டு, மிக அதிகமாக நடைபெற்றது, இங்குள்ள native இந்தியர்களுக்கு மதமும் பரப்பப்பட்டது,  பிறகுதான் ஆங்கிலேயர்களும் மற்றைய ஐரோப்பியர்களும், தங்கத்துக்காக வந்தார்கள். அதனால்தான் இங்குள்ள இடங்களின் பெயர்கள் பெரும்பாலும் ஸ்பானிஷ் மொழியில் இருக்கும். Native இந்தியர்களுக்கு சொந்தமான இடங்களுக்காக ஸ்பானியர்களும் ஆங்கிலேயர்களும் அடிப்பட்டுக்கொண்டார்கள்

நல்ல தகவல், தகவல்களுக்கு நன்றி நீர்வேலியான் ........!  🌹

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

நன்றி.
இனிவராது.

என்ன தல பொசுக்கெண்டு இப்பிடி சொல்லிப்போட்டியள் ?!?!?!?!?!?!?!?!?!?!?!😵

படங்களோடை கனக்க எதிர்பார்த்தனே 🤔

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நீர்வேலியான் said:

கலிபோர்னியா, நேவாடா, அரிசோனா, கொலராடோ,யூட்டா, டெக்சாஸ், போன்ற பெரும் பிரதேசங்கள், ஸ்பெயின்இன் ஆளுகையின் கீழ், மெக்ஸிக்கோவுடன் இருந்தது. பிறகு அமெரிக்க-மெக்ஸிகோ யுத்தத்தின் முடிவில், உடன்படிக்கையின் படி வெற்றி பெற்ற அமெரிக்காவிடம் வந்தது.  இதற்கு ஈடாக மெக்ஸிகோ வுக்கு பணம் கொடுக்கப்பட்டது. 1700 களில் ஸ்பானிஷ் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டு, மிக அதிகமாக நடைபெற்றது, இங்குள்ள native இந்தியர்களுக்கு மதமும் பரப்பப்பட்டது,  பிறகுதான் ஆங்கிலேயர்களும் மற்றைய ஐரோப்பியர்களும், தங்கத்துக்காக வந்தார்கள். அதனால்தான் இங்குள்ள இடங்களின் பெயர்கள் பெரும்பாலும் ஸ்பானிஷ் மொழியில் இருக்கும். Native இந்தியர்களுக்கு சொந்தமான இடங்களுக்காக ஸ்பானியர்களும் ஆங்கிலேயர்களும் அடிப்பட்டுக்கொண்டார்கள்

நல்லதொரு விளக்கம்.இத்தனையும் நடந்திருக்குதா?

நன்றி நீர்வேலியான்.

6 hours ago, புங்கையூரன் said:

மிக்க நன்றி, நீர்வேலியான்…!

ஆங்கிலேயர்களிலும் பார்க்க ஸ்பானியர்களின் காலனித்துவம் இலாபத்தையும், மதம் பரப்பலையும் நோக்கமாகக் கொண்டது..!அவர்களின் அக்கிரமங்கள் அதிகமாக இருந்தாலும், அடிமகளை ஓரளவுக்கு மனிதராக மதித்தார்கள் என்று தான் கூற வேண்டும்! ஆங்கிலேயர் அடிமைகளை savages ஆகத் தான் கருதினார்கள்.இதுநாள் அடிமைகள் ஆங்கிலேயர்களை விடவும் ஸ்பானியர்களை விரும்பினார்கள்!

புங்கை நல்லகாலம் நான் அரைகுறையாக சொன்னதை நீர்வேலியான் முழுமையாக சொல்லியுள்ளார்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.