Jump to content

பாலியல் இன்பத்தை நாற்பது வயதுக்குப் பிறகு அதிகரிப்பது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாற்பது வயதுக்குப் பிறகு பாலியல் ஆசைகளும், பாலுறவு கொள்வதற்கான திறனும் குறைகிறது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.

இது உண்மையா? அப்படியெனில் இதற்கான காரணங்கள் என்னென்ன, நாற்பது வயதுக்குப் பிறகு பாலியல் இன்பத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பாலியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி காமராஜ் பதிலளிக்கிறார். பிபிசி தமிழுக்காக ஹேமா ராக்கேஷிடம் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துகளின் உரை வடிவம் இது.

கேள்வி: தம்பதிகளுக்கு 40 வயது ஆகும்போது குழந்தைகள் பெரியவர்களாகி விடுகின்றனர். இனி எதிற்கு காதல் உணர்வு, பாலுறவு என்பது போன்ற கேள்விகள் பலருக்கும் எழுந்து விடுகிறது. இது இயல்புதானா?

பதில்: நாற்பது வயது என்பது முதிய வயது அல்ல. வயதாகிவிட்டது என்ற பொருள் அல்ல. தற்காலத்தில் உள்ள தரவுகளின்படி 40 வயதில்தான் மிட் லைப் என்கிற மத்திய வயது வாழ்க்கை தொடங்குகிறது. ஒரு காலத்தில் 30 வயதை இப்படிக் குறிப்பிட்டார்கள். இப்போது 40 வயதில்தான் மிட்-லைஃப் தொடங்குகிறது.

40 வயது என்பது இன்னொரு இளமையின் தொடக்கம் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. உடல் பயிற்சி, மருத்துவம் போன்ற காரணங்களால் சராசரி ஆயுள் கூடியிருக்கிறது. அதனால் 40 வயதுக்குப் பிறகு 50 சதவிகித வாழ்க்கை மிச்சமிருக்கிறது என்று கூறலாம்.

குழந்தைகள் பெரியவர்களாகி விட்டார்கள் என்பதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 40 வயதுக்குப் பிறகுதான் சுவையான பாலியல் இன்பத்தை அதிக தம்பதிகள் பெறுகிறார்கள் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதற்குக் காரணம் வாழ்க்கையில் பல கவனச் சிதறல்கள் 40 வயதுக்குப் பிறகு இருப்பதில்லை. படிக்க வேண்டும், வேலைக்குப் போக வேண்டும், அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பன போன்ற பல விஷயங்கள் அப்போது முடிந்திருக்கும். ஓரளவுக்கு நிலையான வாழ்க்கைக்கு பலரும் வந்திருப்பார்கள்.

அதனால் இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு பாலியல் உறவு என்பது இனிமையாகிறது. மகப்பேறு, குழந்தைகள் வளர்ப்பு போன்ற பணிகளில் இருந்து பெண்கள் விடுபட்டிருப்பதால் அவர்களால் கணவரோடு நெருக்கமான அன்பைப் பேண முடியும். அதனால் தம்பதிகள் தங்களுக்கு இடையே செலவிடும் தனிப்பட்ட நேரம் அதிகரிக்கிறது. ஆகவேதான் 40 வயதுக்கு மேல் பாலுறவு இனிமையாகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அப்படியெனில் 40 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளலாமா?

40 வயதுக்குப் பிறகு பாலியல் வாழ்க்கை கடினமாக இருக்கும் என்பது தவறு. 42 வயதில் இருந்து 50 வயது வரை பாலுறவுச் செயல்பாடுகள் தீவிரமாக இருப்போரின் அளவு 70 சதவிகிதம் வரை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உடலுறவு எண்ணிக்கையும் 30 முதல் 40 வயது வரை இருப்பதைவிட 40 வயதுக்குப் பிறகு அதிகமாக இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.

இதேபோல 50 வயதைத் தாண்டிய தம்பதிகளில் 50 முதல் 60 வயது வரை பாலுறவில் 46 சதவிகிதம் பேர் வழக்கமாக ஈடுபடுகின்றனர் என்றும். 60 முதல் 70 வயதுவரை 26 முதல் 30 சதவிகிதம் பேர் வரை வழக்கமான பாலுறவில் ஈடுபடுகின்றனர் என்பதும் தெரியவந்திருக்கிறது. ஆண்கள் - பெண்கள் என எடுத்துக் கொண்டால், பெண்களை விட ஆண்களே 51 சதவிகிதம் வரை கூடுதலாக பாலுறவில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.

 
பாலுறவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அத்துடன், திருமணம் செய்து கொள்வது என்பது பாலுறவை மட்டுமே சார்ந்தது அல்ல. தங்களுக்கு ஒரு துணை வேண்டும் என்பதை பலரும் முக்கியமாகக் கருதுகின்றனர். 40 வயதுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு பாலுறவு என்பது பிரச்னையாக இருப்பது இல்லை.

பெண்களுக்கு மாதவிலக்கு நிற்பது, ஈஸ்ட்ரோஜன் குறைவு ஆகிய காரணங்களால் பாலுறவில் நாட்டம் குறைவதை எப்படிச் சரி செய்வது?

35 வயதுக்குப் பிறகுதான் பல பெண்களுக்கு உச்சகட்டம் அடைவது என்பதே என்னவென்று தெரியவருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் மாதவிலக்கு நிற்பது போன்ற பிரச்னைகளால் உடலுறவில் எந்தத் தடையும் ஏற்படுவதில்லை. ஆனால் குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார, குழந்தைகள் ரீதியிலான வேறு பிரச்னைகளால் பாலியல் உறவை பல பெண்கள் தவிர்க்கின்றனர்.

பாலியல் வேட்கை அல்லது விருப்பம் என்பதற்கு வயது வரம்பு ஏதேனும் இருக்கிறதா?

பொதுவாக 85 வயதுக்குப் பிறகு பாலியல் வேட்கை குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவை தவிர ஆர்த்தரைட்டிஸ் போன்ற வலிகளால் பலருக்கு பாலியல் விருப்பம் குறைகிறது. அவர்களுக்கும் பாலுறவு முறைகளில் மாற்றம் செய்து தீர்வு அளிக்க முடியும். பொதுவாக பெண்களுக்கு பாலியல் விருப்பம் குறைகிறது என்பதைவிட, ஆண்களுக்கு வரும் பிரச்னைகளால்தான் பாலியல் விருப்பம் குறைகிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

 
பாலியல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எந்தவொரு செயலும் வழக்கமானதாக, ஒரே மாதிரியாக இருக்கும்போது அதில் விருப்பம் குறைவது இயற்கைதான். இதன் காரணமாக 40 வயதுக்குப் பிறகு பாலியல் செயல்பாடுகளில் உற்சாகம் குறைந்தால் என்ன செய்வது?

பெண்களுடைய விருப்பத்துக்கு ஆண்களால் செயலாற்ற முடியாமல் போவது, அதேபோல ஆண்கள் விரும்பியபடி பெண்களால் நடந்து கொள்ள முடியாமல் போவது என பிரச்னைகள் இருக்கின்றன. இவர்களை முறையாக ஆய்வு செய்யும்போது பெரும்பாலும் ஆண்களிடமே பிரச்னைகள் இருக்கின்றன என்பது தெரியவருகிறது. அவர்களுக்கு நாங்கள் சொல்லும் அறிவுரையே ஒரு இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள் என்பதுதான். விடுமுறையில் சுற்றுலா சொல்வது போன்ற பரிந்துரைகளைச் செய்கிறோம். இது அவர்களுடைய பாலியல் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.

இந்தப் பேட்டியை முழுமையாகக் காண:

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் சேவையே மகேசன் சேவை ...... நன்றி பிபிசி.🙏
அன்ட்.....
ரொம்ப தாங்ஸ் ஜெயராணி காம ராஜ்   :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/3/2022 at 22:44, குமாரசாமி said:

மக்கள் சேவையே மகேசன் சேவை ...... நன்றி பிபிசி.🙏
அன்ட்.....
ரொம்ப தாங்ஸ் ஜெயராணி காம ராஜ்   :cool:

உங்களுக்குப் பயத்தில தான் நான் இணைக்காமல் விட்டனான்!
ஏதும் இடக்கு முடக்கா கேப்பியள் என்று!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக  இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த  ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
    • 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.   
    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.