Jump to content

ஜனாதிபதி செயலகத்திற்கு, முன்பாக... பதற்றம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றம்!

ஜனாதிபதி செயலகத்திற்கு, முன்பாக... பதற்றம்!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருளுக்கு தட்டுப்பாடு, எரிவாயுவிற்கு தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு என்பவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோர் பலவந்தமாக ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைவதற்கு முயன்றுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1272382

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி செயலகம் முன் பதற்றம் (Video)

 

அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்துள்ளது. அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

காலி வீதியில்,  லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
 

 

https://www.tamilmirror.lk/video/ஜனாதிபதி-செயலகம்-முன்-பதற்றம்-Video/52-293254

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன ராஜபக்ஸ குடும்பத்துக்கு வந்த சோதனை? இந்த நேரம் பாத்து பயங்கரவாதச் சட்டத்தையும் பயன்படுத்த முடியாமல் கையை கட்டிபோட்டாச்சே. வெள்ளை வானுக்கும் எரிபொருள் இல்லை. இந்த முறை போர் வெற்றி விழாவுக்கு மூடுவிழா, அரோகரா! இன்னும் கொஞ்ச காலந்தாழ்த்தியிருந்தா தமிழரை முழுவதுமாக விழுங்கிய பயங்கரவாத சட்டம் இவர்களை பதம் பாத்திருக்கும். பயங்கரவாத தடைச் சட்டம் என்றால் என்ன? அதன் வலி என்ன? என்பதை இவர்களும் சுவைத்து பார்க்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். நல்லவேளை தப்பிவிட்டார்கள். ராஜபக்ஸ குடும்பம் இப்போ பல்லுக்கலட்டிய பாம்பு,  தப்பி ஓடுமா? தெரிந்தவர்கள்  யாராவது இருந்தா சொல்லுங்களேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரிரு வருடங்களின் முன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு மஹிந்த சகோதரர்களை அனுப்பி வைக்க தெருவில் இறங்கி அணிவகுத்த சிங்களவர்கள், இப்போது ஜனாதிபதியை அவர் மாளிகையிலிருந்து வெளியே அனுப்ப போராட்டம் நடத்துகிறார்கள்.

2009இல் சிங்கள அட்டூழியங்களிற்கெதிரான தமிழர்களின் ஆயுதபோர் மஹிந்த சகோதரர்களால் மிகபெரும் படுகொலை உக்கிர தாண்டவத்துடன் முடித்து வைக்கப்பட்டபோது,  இனிமேல் இலங்கையின் நிரந்தர ஆட்சிபீடத்தில் மஹிந்த குடும்பமே இருக்கும் என பெரும்தொகை சிங்களவர்களும்  ராஜபக்ச குடும்பத்தினரும் எதிர்பார்த்ததைவிட தமிழர்களே அதிகம் யூகித்திருந்தனர்.

அடுத்த தேர்தலிலேயே அவர்கள் ஆட்சிபீடத்திலிருந்து அகற்றபட்டபோது தமிழர் உட்பட்ட இலங்கையின் அனைத்து இனங்களிற்கும் நம்ப முடியாத ஒரு நிகழ்வாகவே அது அமைந்திருந்தது.

இன்று ஒட்டுமொத்த இலங்கையின் வங்குரோத்து பொருளாதார நிலமைக்கு எதிரான போராட்டத்தில்கூட  வடக்குகிழக்கு உட்பட்ட அனைத்து இனங்களையும் ஒன்றுசேருமாறு அறைகூவல் விடுத்ததாக எங்கும் பெரிதாக தகவல்கள் இல்லை, ஒட்டு மொத்த மக்களின் வாழ்வில் புயல்வீசபோகும் இந்த நெருக்கடியில்கூட வேற்று இனங்களையும் சக மனிதர்களாக மதிக்கும் இயல்புகளில் எந்த மாற்றமும் இல்லை.

உற்றுநோக்கி கவனித்தால் இலங்கை தீவில் சிங்களவர்கள் தமக்கு சார்பாயில்லாத தலைமைகளை பதவியில் இருத்துவார்கள் அல்லது தூக்கி எறிவார்கள்

இப்போது ஆட்சியாளர்களுக்கெதிராக இடம்பெறும் பிரளயங்கள்கூட  தமக்கு உள்ள பட்டினிபற்றிய கவலையே ஒழிய பிற இனங்கள் பற்றியதானதல்ல, 

வெறும் வயிற்றில் இருக்கும்போதும் அவர்கள் இன விசுவாசம் தொடர்கிறது.

அந்த இனவாதம் இந்த நெருக்கடி தீர்ந்த பின்பும் இலங்கை தீவில்  தொடர்கதையாகவே தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே தமிழர் மேல் கட்டவிழ்த்து விட்ட இராணுவத்தை இங்கே கட்டவிழ்த்து விடட்டும் பாப்போம்?

1 hour ago, valavan said:

ஒட்டுமொத்த இலங்கையின் வங்குரோத்து பொருளாதார நிலமைக்கு எதிரான போராட்டத்தில்கூட  வடக்குகிழக்கு உட்பட்ட அனைத்து இனங்களையும் ஒன்றுசேருமாறு அறைகூவல் விடுத்ததாக எங்கும் பெரிதாக தகவல்கள் இல்லை

எங்களை அழிக்கும்போது மகிழ்ந்து கொண்டாடியவர்கள், எந்த முகத்தோடு எம்மை அழைக்க முடியும்? எங்களை அழித்ததனாலேயே இவர்களை அமோகமாக ஆதரித்து கதிரை ஏற்றி மகிழ்ந்தவர்கள். இப்போதைய போராட்டம் தங்கள் பொருளாதார பற்றாக்குறைக்கானது.  இதே நிலையில் நாம் இருக்கும்போது இவர்கள் யாரும் கவலைப்படவில்லையே. தனக்கு தனக்கென்றால் சுளகு படக்கு படக்கு என்குமாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிளியவன் said:

அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

உங்களை பல நாட்களின் பின் கண்டதில் மிக்க மகிழ்ச்சி, இணைந்திருங்கள் எங்களுடன்👍

Link to comment
Share on other sites

3 hours ago, valavan said:

 

அடுத்த தேர்தலிலேயே அவர்கள் ஆட்சிபீடத்திலிருந்து அகற்றபட்டபோது தமிழர் உட்பட்ட இலங்கையின் அனைத்து இனங்களிற்கும் நம்ப முடியாத ஒரு நிகழ்வாகவே அது அமைந்திருந்தது.

 

ஒரு சிறு திருத்தம், அடுத்த தேர்தலில் அல்ல. அதற்கும் அடுத்த தேர்தலில். 2010 வந்த தேர்தலில் தான் சரத் பொன்சேக்கா சனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். போர் குற்றவாளிகளில் ஒருவரான அவருக்கு தமிழ் தேசிய கூத்தமைப்பு ஆதரவு கொடுத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு : ஜனாதிபதி செயலகத்திற்கு முன் அமைதியின்மை

(எம்.மனோசித்ரா)

 

'நாடு 74 ஆண்டுகளாக அனுபவித்து வரும் சாபத்தை நீக்குவோம்' என்ற தொனிப்பொருளிலில் சோசலிச இளைஞர் அணியினர் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 

May be an image of 7 people, people standing, outdoors and text that says 'SYU 5YU දේගප්‍රම තරුණයිනි, 6ට රැකීමට එක්වච! #You SYU SYU SYU පාලිම් තවත් එපා! තෙල් ටැංකි, ඇමරිකාවට බලිදුන් යුගදනව් හා පවරා ගනු! ණ සංගමය #SYUSRILANKA வேண்டாம் எண்ணெய் வரிசைகள்! இந்தியாவுக்கு தாரைவார்த்த எண்ணெய் தொட்டிகளையும், அமெரிக் காவுக்கு தாரைவார்த்த யுகதனவியையும் உடனடியாக மீளப் பெறவும்! #JVP Youth சோஷலிச இளைஞர் சங்கம் #SYU SRILANKA #JVP Yout'

மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு துரித தீர்வினை வழங்கி வரிசை யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதோடு , பௌத்த மதகுரு ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை ஆக்கிரோஷமாக தாக்க முற்பட்டார். இதனால் அங்கு அமைதியற்ற நிலைமையும் ஏற்பட்டது. 

Image

'எரிபொருள் வரிசை வேண்டாம்' , 'இந்தியாவிற்கு வழங்கிய எண்ணெய் தாங்கிகளையும் , அமெரிக்காவிற்கு வழங்கிய யுகதனவி மின்நிலையத்தையும் மீளப்பெறு' உள்ளிட்டவை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரின் பிரதான கோரிக்கைகயாகக் காணப்பட்டது.

May be an image of one or more people, people standing and outdoors

இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மருதானை - டெக்னிகல் சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. 

குறித்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி பேரணியாக செல்லவுள்ளதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. 

எவ்வாறிருப்பினும் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

 

ஜனாதிபதி செயலக வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர்

May be an image of one or more people, people standing, military uniform and outdoors

May be an image of 8 people, people standing, military uniform and outdoors

இதன் காரணமாக ஜனாதிபதி செயலக வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புபடையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் ஜனாதிபதி செயலக வளாகத்தை முற்றுகையிட்டு ஒரு மணித்தியாலயத்திற்கும் அதிக நேரம் அங்கு அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

 

இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து நாலா பக்கமும் முற்றுகையிடுவோம்

May be an image of 2 people, people standing, outdoors, crowd and text

May be an image of one or more people, people standing, crowd and outdoors

'இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து நாலா பக்கமும் முற்றுகையிடுவோம்' , 'நாம் இளம் பலசாலிகள்' , 'தாய் நாட்டை பாதுகாப்பது எமது பொறுப்பு - எமது பொறுப்பை நிறைவேற்ற எமக்கு வாய்ப்பளி' , 'பொறுப்பை நிறைவேற்ற எம்முடன் ஒன்றிணையுங்கள்' , 'பொறுப்பற்ற தலைவர்கள் எமது நாட்டை விற்கின்றனர்' , 'இலஞ்சத்தை பெற்று வெளிநாட்டு சுற்றுலா செல்கின்றனர்' , 'யுகதனவி, எண்ணெய் தாங்கிகளை மீளப்பெறு', 'உண்பதற்கு வழியில்லை - எரிபொருள் வரிசைக்கு முடிவில்லை'  என்றவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர்.

 

போக்குவரத்து ஸ்தம்பிதம்

May be an image of 1 person, standing, crowd and outdoors

ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்று முற்பகல் மருதானை டெல்னிகல் சந்தி வீதி, புறக்கோட்டை புகையிரத நிலைய வீதி மற்றும் ஜனாதிபதி செயலக வளாக வீதி என்பவற்றின் ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதமடைந்தன.

 அத்தோடு லோட்டஸ் சுற்று வட்டத்திலிருந்து காலி முகத்திடல் வீதியும் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்தது. இதனால் பேரூந்து மற்றும் ஏனைய வாகனங்கள் ஊடாக பயணித்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

ஜனாதிபதி, பிரமரைப் போன்று வேடமிட்டுச் சென்றனர்

May be an image of 12 people, people standing, outdoors and text that says 'C லங்கா வகா LANKA SYU SY'

May be an image of 7 people, people standing, outdoors and monument

May be an image of 9 people, people standing, balloon, outdoors and text that says 'ලංකා LANKA லங்கா esa'

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரைப் போன்று வேடமிட்டு சென்றதோடு , இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் இலட்சினையையும் எடுத்துச் சென்றனர்.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைதியற்ற நிலைமை

May be an image of 3 people, people standing and outdoors

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முற்பட்டமையினால் அங்கு பதற்றமற்ற நிலைமை ஏற்பட்டது. 

May be an image of one or more people, people standing, outdoors and crowd

எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முற்படவில்லை என்றும் , அங்கு பதற்றமான சூழல் மாத்திரமே உருவாக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு : ஜனாதிபதி செயலகத்திற்கு முன் அமைதியின்மை | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவின் புதல்வர்களின் நடந்துமுடிந்த  திருமண நிகழ்வை பாருங்கள், எத்தனைகோடி செலவழித்திருப்பார்கள்? கோத்தா தன் புதல்வனின்திருமணத்திற்காக வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் மலர்களை வருவித்திருந்தார். இதெல்லாம் இவர்கள் கஷ்ரப்பட்டு உழைத்த பணமாக இருந்தால் இப்படி அள்ளி இறைத்திருப்பார்களா? தமிழரை கடத்தி கப்பமாக பெற்ற பணம், ஏழை மக்களை; கொஞ்சம்அனுசரித்து போங்கள், புலிகளை அழித்த பின் உங்களுக்கு வளமான வாழ்வை ஏற்படுத்தி தருகிறோம் என ஆசை காட்டி, தாம் ஏகபோக வாழ்க்கை நடத்தினார்கள். துண்டைக் காணோம், துணியைக்காணோம் என்று ஓட ஓட விரட்டியடிக்க போகிறார்கள். இராணுவம் மக்களோடு சேரலாம் அல்லது சண்டித்தனம் காட்டப்போய் மனித உரிமை காவலரை  சிங்களமே சர்வதேசத்துக்கு காட்டிக்கொடுக்கலாம். முள்ளிவாய்க்காலில் போட்ட ஆட்டத்தை இப்போது யாராவது போட்டு காண்பிக்கலாம் போராட்டக்குழுவுக்கு.

Link to comment
Share on other sites

23 hours ago, உடையார் said:

உங்களை பல நாட்களின் பின் கண்டதில் மிக்க மகிழ்ச்சி, இணைந்திருங்கள் எங்களுடன்👍

நன்றி உடையார். நிச்சயமாக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்களின் கோபத்தைப் பார்க்கும்போது அநியாயமாக சதாமும், கடாபியும் நினைவு வருகின்றார்கள்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க எவ்வளவு பாவமாக  இருக்கு..

நாமும்  இவ்வாறான சூழலில்  அவதிப்பட்டோம்

பசி  என்றால்  என்ன?

பட்டினி  என்றால்  என்ன??

விலை  ஏற்றங்கள்  என்றால்  என்ன??

பெற்றோல் டீசல்  தட்டப்பாடு என்றால்  என்ன??

என்பதை  நாமும் சுமந்ததால் அதை  எந்த  மக்கள் சுமந்தாலும் நாமும் அவர்களுக்காக  பரிதாபப்படுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

பார்க்க எவ்வளவு பாவமாக  இருக்கு..

நாமும்  இவ்வாறான சூழலில்  அவதிப்பட்டோம்

பசி  என்றால்  என்ன?

பட்டினி  என்றால்  என்ன??

விலை  ஏற்றங்கள்  என்றால்  என்ன??

பெற்றோல் டீசல்  தட்டப்பாடு என்றால்  என்ன??

என்பதை  நாமும் சுமந்ததால் அதை  எந்த  மக்கள் சுமந்தாலும் நாமும் அவர்களுக்காக  பரிதாபப்படுவோம்🤣

இப்ப கூட ஒன்றும் கெட்டு போகவில்லை தமிழனுக்கு உரிய தீர்வை கொடுத்தால் பிரச்சனை முடிந்தது .

சண்டை தொடங்கையில் 1980களில் 15 ஆயிரம் பேர்தான் ஆயுதப்படை  2009 ல் தமிழ் இனவளிப்புடன் முடித்து வைக்கப்பட்ட போது ரிசர்வ் படையுடன் சேர்த்து நேரடியாக 4லட்ஷத்து 30ஆயிரம் பேர் அண்ணளவாக  புலிகளை அழிப்பதுக்கு என்று உருவாக்கியவர்கள் எல்லா வளமும் யுத்தத்துக்கு இறைத்தார்கள் இன்றும் அவ்வாறே ஒரு 8000ஆயிரம் பேர் மட்டும் ஐநா படைப்பிரிவில் இருக்கிறார்கள் அதுவும் இனிவரும் வருடங்களில் குறைப்பு செய்யப்படுகிறார்கள் காரணம் அங்கும் தங்கடை ஊத்தை வேலைகளால் .

தென்னிலங்கை அரசியல்வாதிகள் கோத்தா போனால் தாங்கள்  பதவி ஏறி இலங்கையின் முதுகெலும்பை நிமித்தலாம் என்று கனவு காண்கிறார்கள் காலம் கடந்த கனவு .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கஸ்டத்தின் மத்தியிலும்...காணி பிடிக்கிறது...புத்த சிலை வைக்கிறது....புனிதபூமி ..ஆக்கிறது நிப்பாட்டவில்லையே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

பார்க்க எவ்வளவு பாவமாக  இருக்கு..

நாமும்  இவ்வாறான சூழலில்  அவதிப்பட்டோம்

பசி  என்றால்  என்ன?

பட்டினி  என்றால்  என்ன??

விலை  ஏற்றங்கள்  என்றால்  என்ன??

பெற்றோல் டீசல்  தட்டப்பாடு என்றால்  என்ன??

என்பதை  நாமும் சுமந்ததால் அதை  எந்த  மக்கள் சுமந்தாலும் நாமும் அவர்களுக்காக  பரிதாபப்படுவோம்

அறுபத்தொன்பது லட்ஷம் மக்களால்   தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று அதே மக்களால் துரத்தப்பட்ட உள்ளார்கள். ஏன் அவர்கள் இவர்களை தெரிந்தெடுத்தார்கள்? இந்த மக்களுக்கு இவர்கள் செய்த நன்மையென்ன? வாக்குக்காக கொடுத்த பணம், வெளிநாடுகளில் இருந்த சிங்களவருக்கு பயணச்செலவு, எல்லாவற்றிற்கும் மேலாக தமிழரை அடக்கி ஒடுக்கியவர்கள் என்கிற ஒரே காரணம், இன்னும் ஒடுக்கப்படுவார்கள் என்கிற உத்தரவாதம்  இவர்களை மலைமேல் ஏற்றி வைத்தது. இவர்கள் செய்த ஊழல்கள் மக்களுக்கு தெரியாததல்ல, இப்போ தங்கள் பொருளாதார நெருக்கடிக்காக இவர்களை துரத்துகிறார்களேயொழிய நீதிகாக்கவல்ல. நாங்கள் இவர்கள் படும் கஸ்ரத்திற்கு மேலாக பட்டவர்கள். நம் நிலங்களை, உறவுகளை, இருப்பிடங்களை விட்டு ஏதிலிகளாக துரத்தப்படும் செய்திகள் வானொலி, தொலைக்காட்சி மூலம் ஒலி, ஒளி பரப்பப்பட்டது. பார்த்து, கேட்டு மகிழ்ந்தார்கள், பகிர்ந்தார்கள். எங்களின் அவலநிலை கண்டு யாரும் வருந்தவில்லை, கேள்வி கேட்கவில்லை, எதிர்க்கவில்லை. மாறாக ஊக்கப்படுத்தினார்கள். ஆனால் நாம் இப்போ இவர்களின் அவலத்தில் மகிழவில்லை, நாம் தொடர்ந்து வருத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் இவர்களின் இந்த அவல நிலையிலும் எம்மைப்பற்றி நினைக்கவில்லை, விரும்பவுமில்லை. அதை இவர்கள் உணர்ந்தால் ஆட்சியாளர்கள் அதற்காக வெட்கப்படுவார்கள், இனிமேல் பயங்கரவாதிகளை அடக்கினோம் என்று வீரக்கதை பேசமாட்டார்கள். நாளைக்கே இவர்களின் பொருளாதாரநிலை நிலை மாறிவிட்டால் பழையபடி வேதாளம் முருங்கை மரத்திற்தான் என்பதையே இது காட்டுகிறது!

7 hours ago, alvayan said:

இவ்வளவு கஸ்டத்தின் மத்தியிலும்...காணி பிடிக்கிறது...புத்த சிலை வைக்கிறது....புனிதபூமி ..ஆக்கிறது நிப்பாட்டவில்லையே..

இதை வைத்துத்தானே இதுவரை ஆட்சி செய்தவர்கள். அதையே வைத்து இந்த இக்கட்டான  சூழ்நிலையை கடக்க முயற்சிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.