Jump to content

நாசாவில் நீண்டகாலம் கடமையாற்றிய யாழ் தமிழர் உயிரிழப்பு


Recommended Posts

நாசாவில் நீண்டகாலம் கடமையாற்றிய யாழ் தமிழர் உயிரிழப்பு

#Srilanka#America#Jaffna#Nasa#Kuppilan#Vaithilingam Thuraisamy#Apollo-11

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி நேற்று(17) தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி மைய ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11 ஐ அனுப்புகின்ற குழுவில் அங்கம் வகித்தவர் வைத்திலிங்கம் துரைசாமி. அவர் பிறந்து வளர்ந்த வீடு தற்போது குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகின்றது.

கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி அண்மையில் தனது 90 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருந்தார்.

இந்த நிலையில்யாழ்ப்பாணம் - குப்பிளான் மண்ணின் பெருமையும் ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாது உலகத்தமிழர்களின் பெருமையும் அமெரிக்க நாசா விண்வெளியில் பணியாற்றி  பெருமை சேர்த்த  ஈழத்தமிழ் விஞ்ஞானிக்கு   பலரும் இரங்கல்களை கூறிவருகின்றனர்.  

22-6234229e031e2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள். நாசா குழுமத்தில் ஈழத்தமிழன் (பெயர்) இருந்தது பற்றிபெருமை படுகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் ஊர்க்காரர்... ஆழ்ந்த இரங்கல்கள்

 

இப்புவியில் ஆரோக்கியமான நிலைமையில் வாழ்ந்து கொண்டு, 90 தடவைகள் சூரியனை சுற்றி வலம் வந்த ஈழ தமிழ் விஞ்ஞானி கலாநிதி. #வைத்திலிங்கம் - #துரைசாமி அவர்கள் தமது 90வது சுற்றுகையின் முடிவினை தமது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடியவர். தொடர்ந்து தமது 91வது சுற்றுகை வட்டத்தின் ஆரம்பத்தில் ஆண்டவரோடு அரவணைக்கப்பட்டு விட்டார்.
அந்த விண்வெளி ஆய்வுதுறை விஞ்ஞானியின் வாழ்வு இன்று அஸ்தமனமாகி விட்டது. இது இயற்கையின் நியதி! துயரப்பட வேண்டிய முடிவு அல்ல!
போற்றி வணங்கி, துதித்து அனுப்பி வைக்க வேண்டிய பிரார்த்தனைகளுடன் சேர்ந்த ஓர் நிகழ்வு!
 பிறப்பு என்ற தொடக்க புள்ளிக்கும் இறப்பு என்ற அவரது முடிவு புள்ளிக்கும் இடையில் அவர் கடந்து வந்த ஒவ்வொரு படி கல்லும் சாதனைகள் மிகுந்தது.
(Accomplished by Superior ability, Special effort, Great courage and Heroic deed)
 அவரின் வாழ்வும், அனுபவமும் இளைய தலைமுறைகளின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒரு பாடம்
(Role Model)
 மிகுந்த கூர்மையான கல்வியாளர்! விண்வெளி விஞ்ஞான ஆய்வு துறைகளில் அவரின் பங்களிப்புகள் ஏராளம்.
(Intelligental Educationist & Space Research contributor)
 முதுமையிலும் சில ஓட்ட போட்டிகளில் பங்குபற்றிய ஓர் விளையாட்டு வீரர்.
(Physically active and Strong athletics)
 தமது நிதியியல், பொருளாதார துறைகளையும் வளர்த்து கொண்டு வழிகள், ஆலோசனைகள் கேட்டும் ஏனையோருக்கும் வழிகாட்டும் நற்குணம் படைத்தவர். (Loyal Mentor)
 நல்லதொரு குடும்பதலைவன்! உறவினர்கள், நண்பர்கள், கிராமத்தவர்களை அனுசரித்து செல்லும் பெருந்தன்மையானவர்.
(Greatest Gentleman)
ஈழ மண்ணில் குப்பிழான் என்னும் கிராமத்தினை பிறப்பிடமாக கொண்டவர்.
[குப்பிழானில் இன்று சிவபூமியினால் நடத்தப்படும் சிவஞான ஆச்சிரமமாக உள்ள இல்லமே அவர் பிறந்து வளர்ந்த அவரது பெற்றோரால் உருவாக்கப்பட்ட மனையாகும்.
தாம் பிறந்த கிராமத்தின் மீது கொண்ட அபிமானத்தினால் அமெரிக்காவில் பிறந்து, இன்று அங்கு வசிக்கும் தமது கடைசி பிள்ளையின் நடுப்பெயரினை [Middle Name] அவர் பிறந்தபோது “குப்பிழான்” என வைத்து அதுவே இன்றும் பேணப்படுகின்றது. அதாவது அவரது பெயர்
Mr. GANESH K THURAISAMY [திரு. கணேஷ் – குப்பிழான் - துரைசாமி] என்பதாகும்.
கலாநிதி – வைத்திலிங்கம் – துரைசாமி அவர்களின் தந்தை தமது இளமை காலத்தில் தாயக மண்ணிலிருந்து கடல் கடந்து சென்று 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் மலேசியாவில் புகையிரத பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
அவரது அன்னை திருமதி. சிவகங்சை வைத்திலிங்கம், கட்டைபிராய் என்னும் ஊரினை பிறப்பிடமாக கொண்டவர். ஓர் அற்புதமான, பண்பான சுபாவங்களினால் முக வசீகரம் கொண்ட தெய்வீக பெண் போன்ற ஓர் அம்மையார்.
இவருக்கு இரு அக்காமார். ஒரு தங்கை என கூட பிறந்தவர்கள் ஆவார்கள்.
குப்பிழான் விக்கினேஸ்வரா வித்தியாசாலை மற்றும் [இன்று விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்] புன்னாலைகட்டுவன் ஆங்கில பாடசாலையில் ஆரம்ப கல்வியினை தொடங்கி தொடர்ந்து சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரி அதனை தொடர்ந்து, யாழ் – மத்திய கல்லூரியில் உயர் கற்கை நெறியினை முடித்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணித துறையில் சிறப்பு பட்டம் (B.Sc. [Hons.] in Maths) பெற்றார்.
மாணவ பருவ காலங்களில் குப்பிழான் கிராமத்தில் தமது தந்தையின் விவசாய விளைநிலங்களில் இரவு பகலாக வேலை செய்வதும், சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு தினமும் கால்நடையாகவும், ஓட்டமுமாக சென்று படித்து வந்ததும் இவர் வாழ்வின் சுவையான காலங்களாகும்.
அந்த ஓட்டம் அவரை அந்த காலங்களில் விளையாட்டுப் போட்டிகளிலும் பல இடங்களில் வீரனாக்கியது.
இலங்கை பல்கலைக்கழகத்தில் கணித, விஞ்ஞான துறையில் பட்டப்படிப்பினை முடித்தபின்பு, அங்கு பகுதிநேர விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த நேரம், அவர் ஏற்கனவே கல்வி கற்ற யாழ் – மத்திய கல்லூரி நிர்வாகம் இவரது பல்கலைக்கழக பேராசிரியர் ஊடாக தங்கள் கல்லூரியில் விசேட நியமனம் [Special Post with High Scale] வழங்க தயார் நிலையில் அழைப்பு விடுத்திருந்தது.
தொடர்ந்து தமது வாலிப வயது காலங்களில் யாழ் – மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்புகளுக்கு கணிதம், பௌதிகவியல் கற்பிக்கும் ஆசிரியராகவும், மாணவர் விடுதி பொறுப்பாளராகவும் சில காலங்கள் பணிபுரிந்து வந்தபோது, தமது கல்விதுறை சார்ந்த தகைமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் இங்கிலாந்து சென்று “பட்டவியல் கணக்காளர்” [Chartered Accountant] கல்விதுறையில் பயில்வதற்கு மனு செய்து, அனுமதி பெற்று அங்கு செல்வதற்குரிய விசா, கப்பல் பிரயாண ஒழுங்குகளை மேற்கொண்டார்.
இவரது யாழ் – மத்திய கல்லூரியின் வெற்றிடமான ஆசிரியர் நியமனத்திற்கு குப்பிழானை சேர்ந்த அவரது உறவினரும் நண்பருமான திரு. சின்னதம்பி – நடராஜா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதே யாழ் - மத்திய கல்லூரியின் பழைய மாணவரான திரு. சின்னதம்பி – நடராஜா அவர்கள் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பௌதிகவியல் துறையில் சிறப்பு பட்டம் பெற்ற பட்டதாரியாவார்.
1958ம் ஆண்டு!
கடல் கடந்து அந்நிய நாடு ஒன்றுக்கு செல்பவரை ஒரு ஹுரோவாக பார்க்கும் காலம்.
விமான பிரயாணம் என்பது மிக செலவானதாகவும், அருமையானதாகவும் இருந்தமையால், கடல் மார்க்கமாக கப்பல் பிரயாணத்தின் மூலமே பலரும் பிரயாணம் செய்வார்கள்.
இவரது பிரயாணமும் கொழும்பு துறைமுகத்திலிருந்து, அந்த காலத்திற்குரிய 100 இங்கிலாந்து பவுண்ஸ் கப்பல் கட்டணத்துடன் ஆரம்பித்து மூன்று கிழமையின் பின்பு, ஐந்து நாடுகளின் துறைமுகங்களில் அவர் சென்ற பிரயாண கப்பல் தரித்து நின்று நின்று,
[Bombay,
Port of City of Aden in Arab Country,
Suez in Egypt,
Beirut Labanon,
Marsailees in France]
இறுதியில் இங்கிலாந்து நாட்டின் “சவுதம்ரன்” [Southamton] கப்பல் துறைமுகத்தினை போய் சேர்ந்தது.
குப்பிழான் கிராமத்திலிருந்து கடல் மார்க்கமாக இங்கிலாந்து சென்ற முதல் நபர் என்ற சான்று இன்றும் இவருக்கே உரித்தானதாகும்.
லண்டனில் “கணக்காய்வு அலுவலகம்” [Small Chartered Accountancy Firm] ஒன்றில் அலுவலக பணியாளர் தொழில் கிழமைக்கு ஐந்து பவுண் ஊதியத்தில் உடனடியாக அந்த நேரம் கிடைத்தது.
அதே துறையில் பணி புரிந்துகொண்டு பட்டய கணக்காளர் கல்வியினை தொடர்வதே அடுத்த அவரது நோக்கமாகவிருந்தது.
“கணக்காளர்” தொழில் என்பது ஒரு சிறு கௌரவமான அலுவலக உத்தியோகத்தர் மட்டுமே என்றதொரு பார்வை முதல் ஐந்து மாதத்தினுள் அவர் மனதில் எழுந்தால் தமக்கு தமது எதிர்கால வாழ்வில், தமது ஆற்றல், திறமைகளை வெளிகொணர இது உகந்ததல்ல என்ற எண்ணங்கள் அவரது மனதில் அந்த நேரம் பல குழப்பங்களை உருவாக்கியிருந்தது.
லண்டன் நகரின் நூலகம் ஒன்றுக்கு சென்றபோது, அந்த காலம் [1958ம் ஆண்டு] பிரித்தானிய காலணித்துவ நாடுகளில் ஒன்றான “ஜீமன்” [அராபிய நாடுகளில் Aden என்ற பெயரில முன்பிருந்தது.] நாட்டில் ஆசிரிய தொழிலுக்கு விண்ணப்பங்கள் கோரும் தகவல் கிடைத்ததும் அதற்கு மனு செய்தார்.
உடனடியாக அவர் பாதை மாறியது. அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டு லண்டனில் நேர்முக பரீட்சை நடத்தப்பட்டு பிரித்தானியாவின் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்த அந்த அராபிய நாட்டில் ஆசிரிய நியமனமும் கிடைத்து விட்டது.
லண்டனில் தொடரவிருந்த பட்டய கணக்காளர் கனவினை நிறுத்திவிட்டு அராபிய நாடான ஜீமன் சென்று அங்கு ஆசிரிய தொழில் செய்தார்.
1960ம் ஆண்டு!
தாயக மண் திரும்பி வந்து இல்லற வாழ்வில் இணைந்து கொண்டார்.
Ms. யோகராணி! இவரது இல்லத்தரசி! யாழ்ப்பாணத்தில் ஊரெழு என்ற கிராமத்தினை பூர்வீகமாக கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரி! இவர்கள் இல்லற வாழ்வில் மூன்று பிள்ளைகள். மூத்த மகன் பிரகாஷ் பல் மருத்துவர். மகள் கல்பனா மருத்துவர். இளைய மகன் கணேஷ் தகவல் தொழில்நுட்பவியலாளர். தற்போது மூவரும் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.
திருமணத்தின் பின்பு மீண்டும் ஜீமன் நாடு சென்று தமது ஆசிரிய பணியினை தொடர்ந்தார்.
1961ம் ஆண்டு!
அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்த இவரது பல்கலைக்கழக கால நண்பன், பௌதிகவியல் நிபுணர் [Physist] கலாநிதி. அருணாசலம் அவர்களின் ஆலோசனைகள், வழிகாட்டல்களை ஏற்று அமெரிக்கா சென்று அங்குள்ள மசாசசு செற்ஸ் பல்கலைக்கழகத்தில் [University of Massachusetts] கல்வி பயின்று முதுமாணி [M.Sc.,] பட்டம் பெற்றார்.
தொடர்ந்து அமெரிக்காவின் “மேரிலான்ட் பல்கலைக்கழகத்தில்” (University of Maryland) பிரயோக கணிதத்தில் கலாநிதி பட்டம் (Ph.D.) பெற்றார்.
“கலாநிதி” பட்டம் பெற்றதனை தொடர்ந்து சர்வதேச ரீதியில் தொழில்நுட்ப தகவல்களை வழங்கும் அமெரிக்காவின் பிரபல்யமான தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி கம்பனியின் நுண்பரிசோதனை கூடத்தில் (Bell Comm Laboratory) தொழில்நுட்பவியல் விஞ்ஞானியாக தமது பணியினை தொடர்ந்தார்.
விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளும் சர்வதேச விண்வெளி பல்கலைகழகமான அமெரிக்க நாசா பல்கலைக்கழக (NASA – International University) விண்வெளி ஆய்வுகளுக்கு தொலைதொடர் தொழில்நுட்பங்களை வழங்கும் ஒரு நிறுவனமாக இவர் பணிபுரிந்த “பெல் நுண்பரிசோதனை மையம்” கூட்டாக சேர்ந்து பணிபுரிந்தது.
இந்த காலங்களில் கூட்டாக இயங்கிய நாசா விண்வெளி விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பணிபுரிந்து, தமது கல்வி, புலமைகள், ஆளுமை திறமைகளை விண்வெளி ஆராய்ச்சி துறைகளுக்கு வழங்கி பல வெற்றிகரமான விஞ்ஞான ஆய்வுகளுக்கு கூட்டான கை கொடுப்பாக செயல்பட்டது அவர் வாழ்வில் ஒரு சாதனைமிகுந்த காலமாகும்.
1969ம் ஆண்டு! யூலை 9ம் திகதி!
உலக வரலாற்றில் ஒரு மறக்க முடியாத சாதனை கண்ட தினம்.
சந்திரனில் மனிதன் கால் பதித்த நாள். திரு. நீல் ஆம்ஸ்ரோங்க் (Mr. Neil Armstrong) என்ற விண்வெளி விஞ்ஞானி முதல் நபராக சந்திரனில் கால் பதித்து நடந்து அமெரிக்காவின் தேசிய கொடியினை சந்திரனில் நாட்டுகின்றார்.
இவரை தொடர்ந்து இரண்டாவது நபராக கால் பதித்து நடக்கின்றார் திரு. புஷ் ஆல்றின்! (Mr. Buzz Aldrin)
மூன்றாவது விண்வெளி விஞ்ஞானியாக சந்தரனில் நின்றவர் திரு. மைக்கல் ஹொலின்ஸ் (Mr. Michael Collins). உலகநாடுகள் தொலைக்காட்சிகள் மூலம் இவ் சாதனைகளை பார்த்து கொண்டிருந்தனர்.
சந்திரனில் கால் பதிக்கும் இவர்களை தளத்திலிருந்து நாசா விண்வெளி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தொடர்ந்து தூக்கமேயின்றி வழி நடத்துகின்றனர்.
அவ் விஞ்ஞானிகள் குழுவில் தொடர்புகளை தொடரும் தொழில் நுட்பவியலாளர்களுள் (Communication Scientist) முக்கியமானவராக கலாநிதி. வைத்திலிங்கம் – துரைசாமி அவர்களும் செயல்பட்ட வண்ணமேயிருக்கின்றார்.
“நாசா அப்பலோ சாதனை விருது” (The Nasa Appollo Achivement Award) அமெரிக்க நாசா விண்வெளி மையத்தினால், யூலை|20|1969 யில் இவருக்கு வழங்கப்பட்டது.
சந்திரனில் மனிதன் தடம் பதித்த அந்த காலம்!
அவர்களை வெற்றிகரமாக தடம் பதிப்பதில் செயல்பட்ட விஞ்ஞானிகள் குழுவில் நமது தாயக மண்ணைச் சேர்ந்த இருவர் பணிபுரிந்தனர்.
ஒருவர் கலாநிதி சிறில் பொன்னம்பெருமா (Dr. Cyril – Ponnam Peruma) என்ற சிங்கள இனத்தினை சேர்ந்த இரசாயனவியல் நிபுணர். நாசா விண்வெளி ஆய்வு பல்கலைக்கழகத்தின் இராசயன கூர்ப்பு துறையின் பொறுப்பாளராக அந்த நேரம் பணிபுரிந்து வந்தவர் ஆவார்.
சந்திரனிலிருந்து எடுத்து வரப்பட்ட மண்ணை பரிசோதனை செய்யும் விஞ்ஞானியாக அவர் செயல்பட்டார்.
மற்றவர் கலாநிதி வைத்திலிங்கம் – துரைசாமி விண்வெளியில் சுற்றி சந்திரனில் தடம் பதித்து நிற்கும் வீரர்களுடன் தொலை தொடர்புகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் குழுவில் இயங்கியவர்.
இங்கு இன்னொரு விடயத்தினையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.
சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்த நாசா விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகளில் ஒருவர் தங்கள் நாட்டினை சேர்ந்தவர் கலாநிதி சிறில் – பொன்னம்பெருமா என பெருமையுடன் அன்றைய இலங்கை அரசு அந்த காலங்களில் பறைசாற்றி கௌரவித்தது.
ஆனால், அதே குழுவில் பணிபுரிந்து சாதனை படைத்த இலங்கை தேசத்தினை சேர்ந்த இன்னொரு விஞ்ஞானியான கலாநிதி. வைத்திலிங்கம் – துரைசாமி அவர்களை தமிழன் என்ற காரணமாகவோ என்னவோ இலங்கை அரசு பெரிதாக திரும்பிப் பார்த்ததாக செய்திகள் எவையுமில்லை.
ஆனால், தொடர்ந்து தமது விடுமுறை காலங்களில், அவர் தாயக மண் திரும்பியபோது அவரது பிறந்த ஊரான குப்பிழான் கிராமம் சிறுவிழா கோலம் கொண்டு அவரை கௌரவித்த நிகழ்வுகள் எனது சிறு வயதில் அங்கு நான் கண்ட காட்சிகளாகும்.
அதே நேரம் கிராமத்திலிருந்து முதன்முதல் Ph.D. பட்டம் (கலாநிதி) பெற்றவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
அமெரிக்காவில் ஓய்வு நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவரை சில வருடங்களின் முன்பு கனடாவில் இயங்கும் சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் தங்கள் ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக அழைத்து கௌரவித்திருந்தனர்.
சந்திரனில் மனிதர்களை தடம் பதிக்க வைத்த அந்த கால தங்கள் அனுபவங்களை விழா மேடையில் தமது நீண்ட உரையின்போது தெளிவு பண்ணியிருந்தார்.
கனடாவில் இயங்கும் CTR என்னும் தமிழ் வானொலியும் அவரும் ஒருவராக நின்று சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி தடம் பதித்த அனுபவங்கள் தொடர்பாக அவரிடம் நேரடி செவ்வி கண்டது.
கனடாவிற்கு அவர் வருகை தரும் காலங்களில் எங்கள் இல்லங்களில் நடக்கும் சந்திப்புகள், விருந்துபசாரங்களில் அவரின் கடந்தகால கல்விதுறை, விண்வெளி ஆராய்ச்சி துறைகளின் சாதனைகள் பற்றிய அனுபவங்களின் சம்பாஷணைகள் என்றும் எமக்கு மிக ஆர்வமாகவும், பல விடயங்களை கற்றுக் கொண்ட உணர்வுகளாகவும், எமது மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும்.
1990ம் ஆண்டு எதிர்பாராத நிலையில் அவரது அன்பு மனைவியின் மரணம் என்பது துயரங்களோடு சேர்ந்த அவர் வாழ்வில் தொழில்துறைகளின் பாதையினை மாற்றி ஓய்வுபெறும் நிலைமைக்கு எடுத்துச் சென்றது.
தொடர்ந்து அவர் இல்லற வாழ்வின் துணையாக வாழ்வில் ஒன்றிணைந்த ருக்மணி என்னும் மனையாளின் கரம் இணைப்புடன் மகிழ்வோடு அவர் வாழ்வு மீண்டும் தொடர்ந்தது.
ஓய்வு பெற்று அமெரிக்காவில் வாழும் கடந்த 30 ஆண்டுகளில் தனி தனி மாணவர்களுக்குரிய விசேட கணித ஆசிரியராக நல்ல வேதனத்தில் பணிபுரிந்தார். (Private Maths Tutor) தமது பெயரில் பங்குகள் வாங்கி விற்பனை செய்யும் கம்பனி (Stock Trading Company) ஒன்று சட்டரீதியாக பதிவு செய்து, அவ் தொழில்துறையில் பல புதிய அனுபவங்களை எதிர்கொண்டார்.
சாதனைகள் நிறைந்த அவர் வாழ்வு இன்றுடன் (மார்ச்|17|2022) முடிந்து விட்டது. அவர் வாழ்வு, வாழ்வில் எதிர்கொண்ட சாதனைகள் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு ஓர் பாடமாக, வழிகாட்டலாக அமையட்டும்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக ஒன்றாக சேர்ந்து துதிப்போம்.
- கனடாவிலிருந்து சிவ - பஞ்சலிங்கம்.இப்புவியில் ஆரோக்கியமான நிலைமையில் வாழ்ந்து கொண்டு, 90 தடவைகள் சூரியனை சுற்றி வலம் வந்த ஈழ தமிழ் விஞ்ஞானி கலாநிதி. வைத்திலிங்கம் - துரைசாமி அவர்கள் தமது 90வது சுற்றுகையின் முடிவினை தமது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடியவர். தொடர்ந்து தமது 91வது சுற்றுகை வட்டத்தின் ஆரம்பத்தில் ஆண்டவரோடு அரவணைக்கப்பட்டு விட்டார்.
அந்த விண்வெளி ஆய்வுதுறை விஞ்ஞானியின் வாழ்வு இன்று அஸ்தமனமாகி விட்டது. இது இயற்கையின் நியதி! துயரப்பட வேண்டிய முடிவு அல்ல!
போற்றி வணங்கி, துதித்து அனுப்பி வைக்க வேண்டிய பிரார்த்தனைகளுடன் சேர்ந்த ஓர் நிகழ்வு!
 பிறப்பு என்ற தொடக்க புள்ளிக்கும் இறப்பு என்ற அவரது முடிவு புள்ளிக்கும் இடையில் அவர் கடந்து வந்த ஒவ்வொரு படி கல்லும் சாதனைகள் மிகுந்தது.
(Accomplished by Superior ability, Special effort, Great courage and Heroic deed)
 அவரின் வாழ்வும், அனுபவமும் இளைய தலைமுறைகளின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒரு பாடம்
(Role Model)
 மிகுந்த கூர்மையான கல்வியாளர்! விண்வெளி விஞ்ஞான ஆய்வு துறைகளில் அவரின் பங்களிப்புகள் ஏராளம்.
(Intelligental Educationist & Space Research contributor)
 முதுமையிலும் சில ஓட்ட போட்டிகளில் பங்குபற்றிய ஓர் விளையாட்டு வீரர்.
(Physically active and Strong athletics)
 தமது நிதியியல், பொருளாதார துறைகளையும் வளர்த்து கொண்டு வழிகள், ஆலோசனைகள் கேட்டும் ஏனையோருக்கும் வழிகாட்டும் நற்குணம் படைத்தவர். (Loyal Mentor)
 நல்லதொரு குடும்பதலைவன்! உறவினர்கள், நண்பர்கள், கிராமத்தவர்களை அனுசரித்து செல்லும் பெருந்தன்மையானவர்.
(Greatest Gentleman)
ஈழ மண்ணில் குப்பிழான் என்னும் கிராமத்தினை பிறப்பிடமாக கொண்டவர்.
[குப்பிழானில் இன்று சிவபூமியினால் நடத்தப்படும் சிவஞான ஆச்சிரமமாக உள்ள இல்லமே அவர் பிறந்து வளர்ந்த அவரது பெற்றோரால் உருவாக்கப்பட்ட மனையாகும்.
தாம் பிறந்த கிராமத்தின் மீது கொண்ட அபிமானத்தினால் அமெரிக்காவில் பிறந்து, இன்று அங்கு வசிக்கும் தமது கடைசி பிள்ளையின் நடுப்பெயரினை [Middle Name] அவர் பிறந்தபோது “குப்பிழான்” என வைத்து அதுவே இன்றும் பேணப்படுகின்றது. அதாவது அவரது பெயர்
Mr. GANESH K THURAISAMY [திரு. கணேஷ் – குப்பிழான் - துரைசாமி] என்பதாகும்.
கலாநிதி – வைத்திலிங்கம் – துரைசாமி அவர்களின் தந்தை தமது இளமை காலத்தில் தாயக மண்ணிலிருந்து கடல் கடந்து சென்று 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் மலேசியாவில் புகையிரத பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
அவரது அன்னை திருமதி. சிவகங்சை வைத்திலிங்கம், கட்டைபிராய் என்னும் ஊரினை பிறப்பிடமாக கொண்டவர். ஓர் அற்புதமான, பண்பான சுபாவங்களினால் முக வசீகரம் கொண்ட தெய்வீக பெண் போன்ற ஓர் அம்மையார்.
இவருக்கு இரு அக்காமார். ஒரு தங்கை என கூட பிறந்தவர்கள் ஆவார்கள்.
குப்பிழான் விக்கினேஸ்வரா வித்தியாசாலை மற்றும் [இன்று விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்] புன்னாலைகட்டுவன் ஆங்கில பாடசாலையில் ஆரம்ப கல்வியினை தொடங்கி தொடர்ந்து சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரி அதனை தொடர்ந்து, யாழ் – மத்திய கல்லூரியில் உயர் கற்கை நெறியினை முடித்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணித துறையில் சிறப்பு பட்டம் (B.Sc. [Hons.] in Maths) பெற்றார்.
மாணவ பருவ காலங்களில் குப்பிழான் கிராமத்தில் தமது தந்தையின் விவசாய விளைநிலங்களில் இரவு பகலாக வேலை செய்வதும், சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு தினமும் கால்நடையாகவும், ஓட்டமுமாக சென்று படித்து வந்ததும் இவர் வாழ்வின் சுவையான காலங்களாகும்.
அந்த ஓட்டம் அவரை அந்த காலங்களில் விளையாட்டுப் போட்டிகளிலும் பல இடங்களில் வீரனாக்கியது.
இலங்கை பல்கலைக்கழகத்தில் கணித, விஞ்ஞான துறையில் பட்டப்படிப்பினை முடித்தபின்பு, அங்கு பகுதிநேர விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த நேரம், அவர் ஏற்கனவே கல்வி கற்ற யாழ் – மத்திய கல்லூரி நிர்வாகம் இவரது பல்கலைக்கழக பேராசிரியர் ஊடாக தங்கள் கல்லூரியில் விசேட நியமனம் [Special Post with High Scale] வழங்க தயார் நிலையில் அழைப்பு விடுத்திருந்தது.
தொடர்ந்து தமது வாலிப வயது காலங்களில் யாழ் – மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்புகளுக்கு கணிதம், பௌதிகவியல் கற்பிக்கும் ஆசிரியராகவும், மாணவர் விடுதி பொறுப்பாளராகவும் சில காலங்கள் பணிபுரிந்து வந்தபோது, தமது கல்விதுறை சார்ந்த தகைமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் இங்கிலாந்து சென்று “பட்டவியல் கணக்காளர்” [Chartered Accountant] கல்விதுறையில் பயில்வதற்கு மனு செய்து, அனுமதி பெற்று அங்கு செல்வதற்குரிய விசா, கப்பல் பிரயாண ஒழுங்குகளை மேற்கொண்டார்.
இவரது யாழ் – மத்திய கல்லூரியின் வெற்றிடமான ஆசிரியர் நியமனத்திற்கு குப்பிழானை சேர்ந்த அவரது உறவினரும் நண்பருமான திரு. சின்னதம்பி – நடராஜா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதே யாழ் - மத்திய கல்லூரியின் பழைய மாணவரான திரு. சின்னதம்பி – நடராஜா அவர்கள் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பௌதிகவியல் துறையில் சிறப்பு பட்டம் பெற்ற பட்டதாரியாவார்.
1958ம் ஆண்டு!
கடல் கடந்து அந்நிய நாடு ஒன்றுக்கு செல்பவரை ஒரு ஹுரோவாக பார்க்கும் காலம்.
விமான பிரயாணம் என்பது மிக செலவானதாகவும், அருமையானதாகவும் இருந்தமையால், கடல் மார்க்கமாக கப்பல் பிரயாணத்தின் மூலமே பலரும் பிரயாணம் செய்வார்கள்.
இவரது பிரயாணமும் கொழும்பு துறைமுகத்திலிருந்து, அந்த காலத்திற்குரிய 100 இங்கிலாந்து பவுண்ஸ் கப்பல் கட்டணத்துடன் ஆரம்பித்து மூன்று கிழமையின் பின்பு, ஐந்து நாடுகளின் துறைமுகங்களில் அவர் சென்ற பிரயாண கப்பல் தரித்து நின்று நின்று,
[Bombay,
Port of City of Aden in Arab Country,
Suez in Egypt,
Beirut Labanon,
Marsailees in France]
இறுதியில் இங்கிலாந்து நாட்டின் “சவுதம்ரன்” [Southamton] கப்பல் துறைமுகத்தினை போய் சேர்ந்தது.
குப்பிழான் கிராமத்திலிருந்து கடல் மார்க்கமாக இங்கிலாந்து சென்ற முதல் நபர் என்ற சான்று இன்றும் இவருக்கே உரித்தானதாகும்.
லண்டனில் “கணக்காய்வு அலுவலகம்” [Small Chartered Accountancy Firm] ஒன்றில் அலுவலக பணியாளர் தொழில் கிழமைக்கு ஐந்து பவுண் ஊதியத்தில் உடனடியாக அந்த நேரம் கிடைத்தது.
அதே துறையில் பணி புரிந்துகொண்டு பட்டய கணக்காளர் கல்வியினை தொடர்வதே அடுத்த அவரது நோக்கமாகவிருந்தது.
“கணக்காளர்” தொழில் என்பது ஒரு சிறு கௌரவமான அலுவலக உத்தியோகத்தர் மட்டுமே என்றதொரு பார்வை முதல் ஐந்து மாதத்தினுள் அவர் மனதில் எழுந்தால் தமக்கு தமது எதிர்கால வாழ்வில், தமது ஆற்றல், திறமைகளை வெளிகொணர இது உகந்ததல்ல என்ற எண்ணங்கள் அவரது மனதில் அந்த நேரம் பல குழப்பங்களை உருவாக்கியிருந்தது.
லண்டன் நகரின் நூலகம் ஒன்றுக்கு சென்றபோது, அந்த காலம் [1958ம் ஆண்டு] பிரித்தானிய காலணித்துவ நாடுகளில் ஒன்றான “ஜீமன்” [அராபிய நாடுகளில் Aden என்ற பெயரில முன்பிருந்தது.] நாட்டில் ஆசிரிய தொழிலுக்கு விண்ணப்பங்கள் கோரும் தகவல் கிடைத்ததும் அதற்கு மனு செய்தார்.
உடனடியாக அவர் பாதை மாறியது. அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டு லண்டனில் நேர்முக பரீட்சை நடத்தப்பட்டு பிரித்தானியாவின் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்த அந்த அராபிய நாட்டில் ஆசிரிய நியமனமும் கிடைத்து விட்டது.
லண்டனில் தொடரவிருந்த பட்டய கணக்காளர் கனவினை நிறுத்திவிட்டு அராபிய நாடான ஜீமன் சென்று அங்கு ஆசிரிய தொழில் செய்தார்.
1960ம் ஆண்டு!
தாயக மண் திரும்பி வந்து இல்லற வாழ்வில் இணைந்து கொண்டார்.
Ms. யோகராணி! இவரது இல்லத்தரசி! யாழ்ப்பாணத்தில் ஊரெழு என்ற கிராமத்தினை பூர்வீகமாக கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரி! இவர்கள் இல்லற வாழ்வில் மூன்று பிள்ளைகள். மூத்த மகன் பிரகாஷ் பல் மருத்துவர். மகள் கல்பனா மருத்துவர். இளைய மகன் கணேஷ் தகவல் தொழில்நுட்பவியலாளர். தற்போது மூவரும் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.
திருமணத்தின் பின்பு மீண்டும் ஜீமன் நாடு சென்று தமது ஆசிரிய பணியினை தொடர்ந்தார்.
1961ம் ஆண்டு!
அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்த இவரது பல்கலைக்கழக கால நண்பன், பௌதிகவியல் நிபுணர் [Physist] கலாநிதி. அருணாசலம் அவர்களின் ஆலோசனைகள், வழிகாட்டல்களை ஏற்று அமெரிக்கா சென்று அங்குள்ள மசாசசு செற்ஸ் பல்கலைக்கழகத்தில் [University of Massachusetts] கல்வி பயின்று முதுமாணி [M.Sc.,] பட்டம் பெற்றார்.
தொடர்ந்து அமெரிக்காவின் “மேரிலான்ட் பல்கலைக்கழகத்தில்” (University of Maryland) பிரயோக கணிதத்தில் கலாநிதி பட்டம் (Ph.D.) பெற்றார்.
“கலாநிதி” பட்டம் பெற்றதனை தொடர்ந்து சர்வதேச ரீதியில் தொழில்நுட்ப தகவல்களை வழங்கும் அமெரிக்காவின் பிரபல்யமான தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி கம்பனியின் நுண்பரிசோதனை கூடத்தில் (Bell Comm Laboratory) தொழில்நுட்பவியல் விஞ்ஞானியாக தமது பணியினை தொடர்ந்தார்.
விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளும் சர்வதேச விண்வெளி பல்கலைகழகமான அமெரிக்க நாசா பல்கலைக்கழக (NASA – International University) விண்வெளி ஆய்வுகளுக்கு தொலைதொடர் தொழில்நுட்பங்களை வழங்கும் ஒரு நிறுவனமாக இவர் பணிபுரிந்த “பெல் நுண்பரிசோதனை மையம்” கூட்டாக சேர்ந்து பணிபுரிந்தது.
இந்த காலங்களில் கூட்டாக இயங்கிய நாசா விண்வெளி விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பணிபுரிந்து, தமது கல்வி, புலமைகள், ஆளுமை திறமைகளை விண்வெளி ஆராய்ச்சி துறைகளுக்கு வழங்கி பல வெற்றிகரமான விஞ்ஞான ஆய்வுகளுக்கு கூட்டான கை கொடுப்பாக செயல்பட்டது அவர் வாழ்வில் ஒரு சாதனைமிகுந்த காலமாகும்.
1969ம் ஆண்டு! யூலை 9ம் திகதி!
உலக வரலாற்றில் ஒரு மறக்க முடியாத சாதனை கண்ட தினம்.
சந்திரனில் மனிதன் கால் பதித்த நாள். திரு. நீல் ஆம்ஸ்ரோங்க் (Mr. Neil Armstrong) என்ற விண்வெளி விஞ்ஞானி முதல் நபராக சந்திரனில் கால் பதித்து நடந்து அமெரிக்காவின் தேசிய கொடியினை சந்திரனில் நாட்டுகின்றார்.
இவரை தொடர்ந்து இரண்டாவது நபராக கால் பதித்து நடக்கின்றார் திரு. புஷ் ஆல்றின்! (Mr. Buzz Aldrin)
மூன்றாவது விண்வெளி விஞ்ஞானியாக சந்தரனில் நின்றவர் திரு. மைக்கல் ஹொலின்ஸ் (Mr. Michael Collins). உலகநாடுகள் தொலைக்காட்சிகள் மூலம் இவ் சாதனைகளை பார்த்து கொண்டிருந்தனர்.
சந்திரனில் கால் பதிக்கும் இவர்களை தளத்திலிருந்து நாசா விண்வெளி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தொடர்ந்து தூக்கமேயின்றி வழி நடத்துகின்றனர்.
அவ் விஞ்ஞானிகள் குழுவில் தொடர்புகளை தொடரும் தொழில் நுட்பவியலாளர்களுள் (Communication Scientist) முக்கியமானவராக கலாநிதி. வைத்திலிங்கம் – துரைசாமி அவர்களும் செயல்பட்ட வண்ணமேயிருக்கின்றார்.
“நாசா அப்பலோ சாதனை விருது” (The Nasa Appollo Achivement Award) அமெரிக்க நாசா விண்வெளி மையத்தினால், யூலை|20|1969 யில் இவருக்கு வழங்கப்பட்டது.
சந்திரனில் மனிதன் தடம் பதித்த அந்த காலம்!
அவர்களை வெற்றிகரமாக தடம் பதிப்பதில் செயல்பட்ட விஞ்ஞானிகள் குழுவில் நமது தாயக மண்ணைச் சேர்ந்த இருவர் பணிபுரிந்தனர்.
ஒருவர் கலாநிதி சிறில் பொன்னம்பெருமா (Dr. Cyril – Ponnam Peruma) என்ற சிங்கள இனத்தினை சேர்ந்த இரசாயனவியல் நிபுணர். நாசா விண்வெளி ஆய்வு பல்கலைக்கழகத்தின் இராசயன கூர்ப்பு துறையின் பொறுப்பாளராக அந்த நேரம் பணிபுரிந்து வந்தவர் ஆவார்.
சந்திரனிலிருந்து எடுத்து வரப்பட்ட மண்ணை பரிசோதனை செய்யும் விஞ்ஞானியாக அவர் செயல்பட்டார்.
மற்றவர் கலாநிதி வைத்திலிங்கம் – துரைசாமி விண்வெளியில் சுற்றி சந்திரனில் தடம் பதித்து நிற்கும் வீரர்களுடன் தொலை தொடர்புகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் குழுவில் இயங்கியவர்.
இங்கு இன்னொரு விடயத்தினையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.
சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்த நாசா விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகளில் ஒருவர் தங்கள் நாட்டினை சேர்ந்தவர் கலாநிதி சிறில் – பொன்னம்பெருமா என பெருமையுடன் அன்றைய இலங்கை அரசு அந்த காலங்களில் பறைசாற்றி கௌரவித்தது.
ஆனால், அதே குழுவில் பணிபுரிந்து சாதனை படைத்த இலங்கை தேசத்தினை சேர்ந்த இன்னொரு விஞ்ஞானியான கலாநிதி. வைத்திலிங்கம் – துரைசாமி அவர்களை தமிழன் என்ற காரணமாகவோ என்னவோ இலங்கை அரசு பெரிதாக திரும்பிப் பார்த்ததாக செய்திகள் எவையுமில்லை.
ஆனால், தொடர்ந்து தமது விடுமுறை காலங்களில், அவர் தாயக மண் திரும்பியபோது அவரது பிறந்த ஊரான குப்பிழான் கிராமம் சிறுவிழா கோலம் கொண்டு அவரை கௌரவித்த நிகழ்வுகள் எனது சிறு வயதில் அங்கு நான் கண்ட காட்சிகளாகும்.
அதே நேரம் கிராமத்திலிருந்து முதன்முதல் Ph.D. பட்டம் (கலாநிதி) பெற்றவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
அமெரிக்காவில் ஓய்வு நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவரை சில வருடங்களின் முன்பு கனடாவில் இயங்கும் சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் தங்கள் ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக அழைத்து கௌரவித்திருந்தனர்.
சந்திரனில் மனிதர்களை தடம் பதிக்க வைத்த அந்த கால தங்கள் அனுபவங்களை விழா மேடையில் தமது நீண்ட உரையின்போது தெளிவு பண்ணியிருந்தார்.
கனடாவில் இயங்கும் CTR என்னும் தமிழ் வானொலியும் அவரும் ஒருவராக நின்று சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி தடம் பதித்த அனுபவங்கள் தொடர்பாக அவரிடம் நேரடி செவ்வி கண்டது.
கனடாவிற்கு அவர் வருகை தரும் காலங்களில் எங்கள் இல்லங்களில் நடக்கும் சந்திப்புகள், விருந்துபசாரங்களில் அவரின் கடந்தகால கல்விதுறை, விண்வெளி ஆராய்ச்சி துறைகளின் சாதனைகள் பற்றிய அனுபவங்களின் சம்பாஷணைகள் என்றும் எமக்கு மிக ஆர்வமாகவும், பல விடயங்களை கற்றுக் கொண்ட உணர்வுகளாகவும், எமது மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும்.
1990ம் ஆண்டு எதிர்பாராத நிலையில் அவரது அன்பு மனைவியின் மரணம் என்பது துயரங்களோடு சேர்ந்த அவர் வாழ்வில் தொழில்துறைகளின் பாதையினை மாற்றி ஓய்வுபெறும் நிலைமைக்கு எடுத்துச் சென்றது.
தொடர்ந்து அவர் இல்லற வாழ்வின் துணையாக வாழ்வில் ஒன்றிணைந்த ருக்மணி என்னும் மனையாளின் கரம் இணைப்புடன் மகிழ்வோடு அவர் வாழ்வு மீண்டும் தொடர்ந்தது.
ஓய்வு பெற்று அமெரிக்காவில் வாழும் கடந்த 30 ஆண்டுகளில் தனி தனி மாணவர்களுக்குரிய விசேட கணித ஆசிரியராக நல்ல வேதனத்தில் பணிபுரிந்தார். (Private Maths Tutor) தமது பெயரில் பங்குகள் வாங்கி விற்பனை செய்யும் கம்பனி (Stock Trading Company) ஒன்று சட்டரீதியாக பதிவு செய்து, அவ் தொழில்துறையில் பல புதிய அனுபவங்களை எதிர்கொண்டார்.
சாதனைகள் நிறைந்த அவர் வாழ்வு இன்றுடன் (மார்ச்|17|2022) முடிந்து விட்டது. அவர் வாழ்வு, வாழ்வில் எதிர்கொண்ட சாதனைகள் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு ஓர் பாடமாக, வழிகாட்டலாக அமையட்டும்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக ஒன்றாக சேர்ந்து துதிப்போம்.
 
- கனடாவிலிருந்து சிவ - பஞ்சலிங்கம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.
இவர் உயிருடன் வாழும் போது... இவரைப் பற்றிய தகவல்கள் எதனையுமே, 
தமிழ் ஊடகங்கள் பகிரவில்லை என்பது.. வேதனை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.........!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞானி வைத்திலிங்கம் துரைசசாமிக்கு ஆழ்ந்த இரங்கல்.

நான் சிறுவனாக இருந்த போது நாசாவில் இருந்து தாயாரின் இறுதிக்கிரியைக்காக விஞ்ஞானியான தமிழர் ஒருவர் யாழ் வந்தபோது கூடவே அங்கு நடப்பவற்றை வெளியே சொல்லிவிடாமல் இருக்க கூடவே இரு அமெரிக்கர்களும் வந்ததாக கதைத்தார்கள்.

இது வதந்தியா உண்மையா எந்தப் பகுதி என்ற விபரம் ஏதுமே தெரியாது.

1 hour ago, தமிழ் சிறி said:

ஆழ்ந்த இரங்கல்கள்.
இவர் உயிருடன் வாழும் போது... இவரைப் பற்றிய தகவல்கள் எதனையுமே, 
தமிழ் ஊடகங்கள் பகிரவில்லை என்பது.. வேதனை. 

சிறி இதில் பிரச்சனை என்னவென்றால் பல தமிழர்கள் பிரபலமாக இருந்தாலும் தான் ஒரு தமிழராக காட்டிக் கொள்வதில்லை.

ஏன் சில பல தமிழர்கள் தழிழை பேசுவதேயில்லை.
தமிழர்களுடன் பேசும்போது கூட ஆங்கிலத்தில்த் தான் பேசுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

விஞ்ஞானி வைத்திலிங்கம் துரைசசாமிக்கு ஆழ்ந்த இரங்கல்.

நான் சிறுவனாக இருந்த போது நாசாவில் இருந்து தாயாரின் இறுதிக்கிரியைக்காக விஞ்ஞானியான தமிழர் ஒருவர் யாழ் வந்தபோது கூடவே அங்கு நடப்பவற்றை வெளியே சொல்லிவிடாமல் இருக்க கூடவே இரு அமெரிக்கர்களும் வந்ததாக கதைத்தார்கள்.

இது வதந்தியா உண்மையா எந்தப் பகுதி என்ற விபரம் ஏதுமே தெரியாது.

நானும்,  சிறுவனாக இருந்த போது…  விடயத்தை, கேள்விப் பட்டனான்.
அவர்தான் விஞ்ஞானி வைத்திலிங்கம் என்று, தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

நானும்,  சிறுவனாக இருந்த போது…  விடயத்தை, கேள்விப் பட்டனான்.
அவர்தான் விஞ்ஞானி வைத்திலிங்கம் என்று, தெரியாது.

இருவரும் கேள்விப்பட்டதால் விடயம் உண்மையாக இருக்கும்.

ஆனால் இதே வைத்திலிங்கமோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி இதில் பிரச்சனை என்னவென்றால் பல தமிழர்கள் பிரபலமாக இருந்தாலும் தான் ஒரு தமிழராக காட்டிக் கொள்வதில்லை.

ஏன் சில பல தமிழர்கள் தழிழை பேசுவதேயில்லை.
தமிழர்களுடன் பேசும்போது கூட ஆங்கிலத்தில்த் தான் பேசுவார்கள்.

நீங்கள்… சொல்வது நியாயமான உண்மை, ஈழப்பிரியன்.
நானும் பல தமிழரை அவதானித்து இருக்கின்றேன்.
அப்படிப் பட்டவர்களை பார்க்கும் போது, பத்திக் கொண்டு வரும்.

17 minutes ago, ஈழப்பிரியன் said:

இருவரும் கேள்விப்பட்டதால் விடயம் உண்மையாக இருக்கும்.

ஆனால் இதே வைத்திலிங்கமோ தெரியாது.

ஆம்… அவர் தான், இவர் என்று உறுதிப் படுத்த முடியவில்லை.
தந்தை செல்வநாயகத்தின் மகன் ஒருவரும், இதே துறையில் வேலை செய்தவர்…
என்பது எனது ஊகம் மட்டுமே. சில வேளை அவராகவும் இருக்கலாம்.
(தந்தை செல்வாவின் மற்ற மகன் இந்தியாவில் வசிக்கின்றார், அவர் அல்ல.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மத்திய கல்லூரி முன்னொரு காலத்தில் மிகவும் திறமையானவர்களை உருவாக்கி வந்ததாகச் சொல்வார்கள். அதேபோல் ஸ்கந்தாவும்.  பின்னர் போர் சூழலில் யாழ் மத்திய கல்லூரியின் தரநிலையில் வீழ்ச்சி இருந்தாலும்.. இப்போ தேசிய பாடசாலையாகி நிமிர்ந்து செல்கிறது. தொடர்ந்து முன்னேறிச் சென்று மீண்டும் உச்சத்தை தொட யாழ் மத்திய கல்லூரி மாணவ சமூகம் அயராது படிப்பிலும் விளையாட்டிலும் தொடர்ந்து வெற்றி பெறனும்.

இந்த யாழ் மத்தியின் மைந்தனுக்கு கண்ணீரஞ்சலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

நான் சிறுவனாக இருந்த போது நாசாவில் இருந்து தாயாரின் இறுதிக்கிரியைக்காக விஞ்ஞானியான தமிழர் ஒருவர் யாழ் வந்தபோது கூடவே அங்கு நடப்பவற்றை வெளியே சொல்லிவிடாமல் இருக்க கூடவே இரு அமெரிக்கர்களும் வந்ததாக கதைத்தார்கள்.

நீங்கள்கூறிய செய்தியை நானும் ஊரில் இருக்கும் போது கேள்விப்பட்டுள்ளேன்..இதில் எனது வியாக்கியானம் என்னவென்றால்.....

பிற இனங்களில் ஒருவர் உச்சத்திற்கு வந்துவிட்டால் தன் உற்றார் உறவினர்களையோ அல்லது தன் இனத்தையோ உயர வழி செய்து விடுவார்கள்.இவர்களால் அவர் சார்ந்த இனமே உலகளாவில் பேசப்படும். மாறாக எம்மினத்தில் எதுவுமே இன்றுவரை இல்லை.

இன்றுவரை நாமும் ஆ அவர் தமிழர் என  பலரை புகழ்ந்து வாழ்த்துகின்றோமே தவிர இன்றுவரை இனம் சார்பாக அவர்கள் ஏதும் செய்ததேயில்லை.

ஆனால் தலைவர் பிரபாகரன் எங்குமே செல்லாமல் உயர்படிப்பிற்காக மேல் நாடு செல்லாமல் தமிழினத்தை உலகளாவில் பேச வைத்தார்.

அன்னாருக்கு அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

நீங்கள்கூறிய செய்தியை நானும் ஊரில் இருக்கும் போது கேள்விப்பட்டுள்ளேன்..இதில் எனது வியாக்கியானம் என்னவென்றால்.....

பிற இனங்களில் ஒருவர் உச்சத்திற்கு வந்துவிட்டால் தன் உற்றார் உறவினர்களையோ அல்லது தன் இனத்தையோ உயர வழி செய்து விடுவார்கள்.இவர்களால் அவர் சார்ந்த இனமே உலகளாவில் பேசப்படும். மாறாக எம்மினத்தில் எதுவுமே இன்றுவரை இல்லை.

இன்றுவரை நாமும் ஆ அவர் தமிழர் என  பலரை புகழ்ந்து வாழ்த்துகின்றோமே தவிர இன்றுவரை இனம் சார்பாக அவர்கள் ஏதும் செய்ததேயில்லை.

ஆனால் தலைவர் பிரபாகரன் எங்குமே செல்லாமல் உயர்படிப்பிற்காக மேல் நாடு செல்லாமல் தமிழினத்தை உலகளாவில் பேச வைத்தார்.

அன்னாருக்கு அஞ்சலிகள்.

இதுவரை இந்த செய்தியை மூவர் கேட்டிருக்கிறோம் என்றால் செய்தி உண்மையாகவே இருக்கும்.

சிலர் மேலே போனால் போனது தான்.

கீழே பார்ப்பதில்லை.

Link to comment
Share on other sites

16 hours ago, ஈழப்பிரியன் said:

விஞ்ஞானி வைத்திலிங்கம் துரைசசாமிக்கு ஆழ்ந்த இரங்கல்.

நான் சிறுவனாக இருந்த போது நாசாவில் இருந்து தாயாரின் இறுதிக்கிரியைக்காக விஞ்ஞானியான தமிழர் ஒருவர் யாழ் வந்தபோது கூடவே அங்கு நடப்பவற்றை வெளியே சொல்லிவிடாமல் இருக்க கூடவே இரு அமெரிக்கர்களும் வந்ததாக கதைத்தார்கள்.

இது வதந்தியா உண்மையா எந்தப் பகுதி என்ற விபரம் ஏதுமே தெரியாது.

இது வதந்தி இல்லை. உண்மை. எனது அம்மம்மா இவர் வந்தது பற்றி சொல்லியிருக்கிறா. இவரைப்பற்றி எழுத பலரிடமும் கேட்டு சரியான தரவுகள் கிடைக்காத நிலையில் விட்டுவிட்டேன். 2008ம் ஆண்டு ஒரு முயற்சி எடுத்தேன்.

ஊரவர் உறவு அவர் வாழும் போது பலராலும் அறியப்படாத மனிதர்.

இதய அஞ்சலி ஐயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

நீங்கள்கூறிய செய்தியை நானும் ஊரில் இருக்கும் போது கேள்விப்பட்டுள்ளேன்..இதில் எனது வியாக்கியானம் என்னவென்றால்.....

பிற இனங்களில் ஒருவர் உச்சத்திற்கு வந்துவிட்டால் தன் உற்றார் உறவினர்களையோ அல்லது தன் இனத்தையோ உயர வழி செய்து விடுவார்கள்.இவர்களால் அவர் சார்ந்த இனமே உலகளாவில் பேசப்படும். மாறாக எம்மினத்தில் எதுவுமே இன்றுவரை இல்லை.

இன்றுவரை நாமும் ஆ அவர் தமிழர் என  பலரை புகழ்ந்து வாழ்த்துகின்றோமே தவிர இன்றுவரை இனம் சார்பாக அவர்கள் ஏதும் செய்ததேயில்லை.

ஆனால் தலைவர் பிரபாகரன் எங்குமே செல்லாமல் உயர்படிப்பிற்காக மேல் நாடு செல்லாமல் தமிழினத்தை உலகளாவில் பேச வைத்தார்.

அன்னாருக்கு அஞ்சலிகள்.

கரெக்டா சொன்னீங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, shanthy said:

இது வதந்தி இல்லை. உண்மை. எனது அம்மம்மா இவர் வந்தது பற்றி சொல்லியிருக்கிறா. இவரைப்பற்றி எழுத பலரிடமும் கேட்டு சரியான தரவுகள் கிடைக்காத நிலையில் விட்டுவிட்டேன். 2008ம் ஆண்டு ஒரு முயற்சி எடுத்தேன்.

ஊரவர் உறவு அவர் வாழும் போது பலராலும் அறியப்படாத மனிதர்.

இதய அஞ்சலி ஐயா.

சாந்தி நான் எழுதிய பின்பு இது தேவை தானா என்று சங்கடப்பட்டுக் கொண்டிருந்தேன்.

இப்போ நீங்கள் எல்லோரும் கூறிய பின் ஆறுதலாக உள்ளது.

இந்த செய்தியில் இன்னுமொரு வரியையும் சேர்க்க விரும்புகிறேன்.

அதாவது இறுதிக்கிரியைக்கு வந்தவரை யாருடனுமே பேசவிடாமல் கையோடு கூட்டிச் சென்றுவிட்டதாகவும் கூறினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

அதாவது இறுதிக்கிரியைக்கு வந்தவரை யாருடனுமே பேசவிடாமல் கையோடு கூட்டிச் சென்றுவிட்டதாகவும் கூறினார்கள்.

நானும் அப்பிடித்தான் கேள்விப்பட்டனான்.கெலிகொப்டரிலை கூட்டிக்கொண்டுவந்து கிரியை முடிய கூட்டிக்கொண்டு போய்விட்டார்களாம்.கன இரகசியங்கள் தெரிஞ்சு வைச்சிருப்பார் போல....?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.