Jump to content

கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது.😍


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

இதை கொஞ்சம் சரி பாருங்கள் ..
எமது பழைய கோவில்கள் எல்லாம் ஊரி கல்லினால் கட்டபட்டவை 
இவை மிகவும் பலமான கற்கள் எளிதில் உடைக்க முடியாதது 

கோட்டை கற்களை நான் பார்த்து இருக்கிறேன் 
அவை கருங்கல்லும் இல்லை ஊரி  கல்லும் இல்லை 

அவற்றை போன்ற கற்களை ஊர்வக்கற்துறை பகுதிகளில் பார்த்து இருக்கிறேன் 

வேறு பகுதிகளில் நான் கண்டதில்லை ... 
இதை ஏதும் ஆராய்ச்சி செய்து நான் எழுதவில்லை 
மேலோட்டொமாக பார்த்ததை மட்டுமே எழுதுகிறேன் 

கோட்டை இரு கட்டங்களில் கட்டப்பட்டது. முதலில் போத்துகேயர், பின்பு ஒல்லாந்தர் பெருபித்து (பெருமளவில் அகழி, மற்றும் அந்த 5 கோண மூலைகளில் உள்ள காப்பு, தூர பார்க்க கூடிய அரண்கள்).  

அனால், ராஜதானியை மற்றும் அனறைய நகரை  சுற்றி உள்ள கோயில்கள் உடைக்கப்பட்டன என்றே சந்ததி வழியாக சொல்லப்பட்டு வந்து இருக்கிறது.

எல்லா கோயில்களும் உடைக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

மற்றது, இது பின்பு நான் ஊகித்தது, கோயில்களில் தூண்கள் உருளை வடிவத்தில் இருந்தால், அவை ஒல்லாந்த காலத்திலேயே கட்டப்பட்டு இருக்க வேண்டும். உருளைத் தூண்கள் ஒல்லாந்த கட்டிட கலையின் சிறப்பு அம்சம். 

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Kadancha

இதற்கு, வாய் வழி வரலாறு தெரிய வேண்டும். சந்ததி, சந்ததியாக ஓர் இடத்தில்  இருந்திருக்காவிட்டட்டால், இது எவருக்குமே தெரிய வாய்ப்பில்லை. போத்துக்கேயர் வருகையுடன் - நல்லூர் (உண்மையில் நெல்லூர், செம்மண

Kadancha

வேறு எதாவது மறந்து விட்டேனோ தெரியாது. வேறு கதைகள் வரும் பொது, நினைவு வரலாம். நல்லூருக்கு ஒவொரு முக்கியமான விடயத்திடற்கும் ஒவ்வொரு பரம்பரை இருந்தது. யுத்தத்தால் சில மாறி விட்டது தலைமை குருக்க

குமாரசாமி

கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது. ஒரு பெண்ணிற்கு பல ஆடவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதாரர்கள் ஒரு பெண்ணுடன் வாழ்வார்கள். பிறக்கும் குழந்தைக்கு தாயை மட்டுமே உறுதியாக தெரியும். சக

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆறுமுக சுவாமி வாசல் கோபுரத்திற்கு எதிர்புறமாக உள்ள காணியை வேலி போட்டு அடைத்து அந்த காணிக்கு ஒரு சிறிய கோபுரம் மாதிரி ஒன்றை கட்டியிருக்கிறார் போல நினைவு. இம்முறை போன பொழுதுதான் பார்த்தேன். 

அத்துடன் இந்த காணிக்கு ஒரு பக்கம் கோவில் வீதி.. மற்றைய பக்கத்தில் கட்டடங்கள் வந்துவிட்டது

E5-DB35-FB-8213-4498-B0-F7-A0-F803453429

பற்றை காட்டை அகற்றிவிட்டு பெரிய மரங்களை விட்டு இருக்கிறர்கள். கிணற்றையும் திருத்தி கட்டிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maruthankerny said:

இதை கொஞ்சம் சரி பாருங்கள் ..
எமது பழைய கோவில்கள் எல்லாம் ஊரி கல்லினால் கட்டபட்டவை 
இவை மிகவும் பலமான கற்கள் எளிதில் உடைக்க முடியாதது 

கோட்டை கற்களை நான் பார்த்து இருக்கிறேன் 
அவை கருங்கல்லும் இல்லை ஊரி  கல்லும் இல்லை 

அவற்றை போன்ற கற்களை ஊர்வக்கற்துறை பகுதிகளில் பார்த்து இருக்கிறேன் 

வேறு பகுதிகளில் நான் கண்டதில்லை ... 
இதை ஏதும் ஆராய்ச்சி செய்து நான் எழுதவில்லை 
மேலோட்டொமாக பார்த்ததை மட்டுமே எழுதுகிறேன் 

 

அன்மையில்(2018 - 2019), கோட்டைக்குள் Prof. Coningham புதைபொருள் ஆராய்ச்சியின் போது, கல் விக்கிரங்கள் அகப்பட்டது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறு எதாவது மறந்து விட்டேனோ தெரியாது. வேறு கதைகள் வரும் பொது, நினைவு வரலாம்.

நல்லூருக்கு ஒவொரு முக்கியமான விடயத்திடற்கும் ஒவ்வொரு பரம்பரை இருந்தது. யுத்தத்தால் சில மாறி விட்டது

தலைமை குருக்கள் சந்ததி, சந்ததியாக குமாரசாமி குருக்கள். யுத்தம், பொருளாதர மாற்றங்கள் இதை  மாற்றி விட்டது.

இவர்கள் இப்போதும் இருப்பது (குமாரசாமி குருக்கள் இயற்கை எய்தி விட்டார்), மந்திரிமனை காணிக்கு பக்கமாக, பின்புறமாக.

இந்த விடயங்களை தெரிந்ததிற்கான காரணம், எனது குடும்பத்தின் நல்லூர் தொடர்பும்.

எனது அப்பாவின் வழியும், அம்மாவின் வழியும் தான், நல்லூருக்கு கொடி  சீலை கொடுப்பது.

ரகுநாத மாப்பாண முதலியார் இப்போதுள்ள நல்லூரை கட்டிய போதும் ( பழைய நல்லூர் (நெல்லூர்) கோயில் இடிக்கப்பட்ட பின்,   அதாவது ஏறத்தாழ 100 வருடங்களுக்கு பின்பு), தொன்று தொட்டு வழங்கி வந்த மரபை மறக்கவில்லை, மறைக்கவில்லை.

இந்த கொடிசீலை வழங்குமாறு அழைக்கும் வைபவம், காளாஞ்சி கொடுப்பது என்று அழைக்கப்படும்.

இப்போதும், இது (காளாஞ்சி கொடுப்பது), தொன்று தொட்டு வழங்கி வந்த மாட்டு வண்டியில் சென்று கொடுக்கும் முறையிலேயே செய்யப்படுகிறது.

இப்பொது செய்வது, எனது அம்மம்மாவின், சகோதரரின் (அம்மம்மாவிலும் மூப்பு, அனால் அம்ம்மம்வை எனக்கு தெரியாது ஏனெனில் வருத்தத்தினால் இறந்துவிட்டார் இளவயதில் ,  அவரை எனக்கு நன்கு தெரியும்) மகனின் மகன், எனது ஆச்சியின் தங்கையின் மகனின் மகன்.   

இது இப்பொது தான் பகிரங்கமாக தெரிகிறது பலருக்கு, youtube ஆல். முன்பு, பொதுவாக இப்படி ஒரு வைபவம் நடப்பது பொதுவாக தெரியாது.   ஆனாலும், இதன் பின்னேயுள்ள வரலாறும், தாற்பரியம் தெரியாது.

முதியவர்கள் (ஒருவருமே இப்போது இல்லை) சொன்னது - ஆக குறைந்தது யாழ்ப்பாண இராச்சியம் நிறுவப்படத்தில் இருந்து அங்கு சந்ததியாக இருக்கிறோம்.

அனால், அவர்கள் சொல்லியது, அதற்கு முதலில் எமது சந்ததி அங்கு இருந்து இருக்க வேண்டும். அதன் (புராண) விளக்கத்தை பின்னு சொல்கிறேன்.

அதனால், அவர்கள் சொல்லியது அநேகமாக நடந்து இருக்க வேண்டும்.

இந்த காளாஞ்சி வைபவமும், கொடிச்சீலை கொடுக்கும் வைபவமும். முழுவதையும் பார்க்கவும். வேறு வேறான வருட வீடியோ, இரண்டாவதில், முழுமையாக இல்லை.

 

 

 

 

தொடரும்.

  • Like 2
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Kadancha, இந்த பரம்பரையினருக்கு இன்னொரு பெயரும் உள்ளதா? செங்குந்தா என்பதை விட? ஏனெனில் எனது தந்தை இந்த பகுதியில் உள்ளவர்களை வேறு பெயர் கொண்டு அழைப்பதாக முன்பு எங்களுக்கு கூறியிருந்தார். 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கோயிலில் ஓர் வழக்கம் இருந்தது.

அதாவது, வைரவர் மடைக்கு ஆடு வெட்டுவது. 

இதை சொன்னால் ஒருவரும் நம்ப மாட்டார்கள் இப்பொது. ஆனால், ஆடு வெட்டுவது நடந்தது. 

இதனுடன் தொடர்பு  பட்ட சுவாரசிய சம்பவம் ஒன்றும் நடந்தது. 

 ஆட்டு வெட்டுவதற்கு முதல் ஆட்டின் காதை  கூறி கத்தியால் கீறி, அந்த இரத்தம் வைரவர்  படையலுக்கு வைக்கப்படும்.      

வைரவர் மடை பூங்காவனத்துக்கு  அடுத்த நாள்.

ஆடு வெட்டுவதை நாவலர் வெகுவாக எதிர்த்தார். 

ஒருமுறை நாவலர், வைரவர் மடை நேரத்தில், ஆட்டுக்கு பதில் என்னை வெட்டுங்கள் என்று, வெட்டுபவர்களுக்கு குற்ற உணர்ச்சியை தூண்டும் வகையில் (இது வெட்டுவார்கள்  நினைத்தது), ஆட்டின் கதை கீறுவதை தடுக்க முற்பட, நாவலர் எதிரிபார்க்கவில்லை, வெட்டுபவர்களும் நாவலரை எதிர்ப்பார்கள் என்று.

வாக்குவாதம் முற்றி, வெட்டுவபவர்கள், சரி நாவலரை பிடி அவரின்  காதை  வெட்டுவோம் என்று  கத்தியை நாவலருக்கு நீட்ட, நாவலர் ஓடி விட்டார் என்று அந்த நேரதில் இருந்த பலருக்கு தெரிந்தும் பார்த்தும் இருந்தவர்கள் இருந்தார்கள் (இப்பொது ஒருவரும் இல்லை).

வெட்டுபசவர்கள்  சொன்னது, நாவலர் தன்னை காட்டி கதை விடுகிறார், நாவலரின் நடிப்பை உடைப்பதா ற்கே தாம் கத்தியை நீட்டியதாகவும், உண்மையில் நாவலரின் காதலி வெட்டும் எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை என்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டு இரத்தத்தோடு சம்பந்தப்பட்ட இன்னொரு நிகழ்வும் இருக்கிறது.       

நல்லூரில் ஆடு வெட்டுவதை  முன்பு அறிந்து இருந்தாலும் மறந்து விட்டேன், இதை இப்பொது உயிருடன் உள்ள மிகவும் வயதாபன ஒருவரின் கதைக்கும் போதே, மாவிளக்கு ஆட்டு இரத்தம் சம்பந்தமான கதை வந்து  நினைவு படுத்தினார்.

நல்லூரில்  அல்லது மிகவும் புராதன முருகன் கோயிலில் (இது எனது அம்மா சொன்னது அப்போது - முழுவதையும் வாசிக்கவும்) மாவிளக்கு போடும் போது குங்குமம் பூசியே  மாவிளக்கு ஏற்றப்படும். 

அநேகமாக நான் அம்மாவுடன் போவது மாவிளக்கு போடுவதற்கு (இப்பொது மாவிளக்கு ஏற்றுவதற்கு நல்லூர் கோயில் நிர்வாகம் அனுமதிக்கிறதா என்பது தெரியவில்லை) .

தேனும், நெய்யும், தினை மாவுன் கலந்து மாவிளக்குகளை  மெழுகி விட்டு குங்குமம் பூசும் விதத்தை காட்டி, என்னை மிகுதியான மாவிளக்குகளிற்கு குங்குமம் பூசி அடுக்கி வைக்குமாறு சொன்னார்.

நான் குங்குமம் பூசாமல் அடுக்க, ஒரு விதமான கடியும் தொனியில் சொல்லி, குங்குமம் பூசி அடுக்குமாறு சொன்னார்.

எல்லாம் முடிந்து நான்  கேட்டேன் ஏன் குங்குமம் பூச வேண்டும் என்று, எனது அம்மா (எனது அமம்மா அவரிடம் சொன்னதாக)  சொன்னது முருகனுக்கு தினையும் ஆட்டு இரத்தமும் கலந்த நைவேத்தியம் வைத்து வழிபாடு இருந்ததாக. அதை தொடரும் வழிக்கே, குங்குமம் மாவிளக்குக்கு பூசப்படுவதாக.

பல காலத்தின் பின்ப எனது அம்மா, சைவ சமயம் மற்றும் பொருள் சொல்வதில் ஆழமாக ஈடுபட்ட பொது, ஒருமுறை திருமுரு காற்றுப் படையில் எனது அம்மா கண்டதை வாசித்த காட்டினார். திருமுருகாற்றுப் படையில் இருக்கிறது முருகனை வழிபட ஆடு இரத்தமும் தினையும் கலந்த நைவேத்தியம் வைத்து வழிபாடும் முறை. எனது அம்மா சொன்னது, வாய் வழியாக வழங்கி வந்த கதை உண்மையாகத் தன் இருக்க வேண்டும்.

அதனால், ஆடு வெட்டுவது முருக வழிபாட்டில் அநேகமாக இருந்து இருக்க வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், இன்னொன்றையும் மறந்து விட்டேன். தாய் முன்பே சொல்லி இருந்தால் ஓர் தொடர்ச்சி இருக்கும்.

செம்மணியில் உள்ள வயல்கள் இப்போது தனியார் கையில் உள்ளதாயினும், முழு வயல்களுமே ஏதொ ஓர் கோயிலிலுக்கு சொந்தமாக இருந்து இருக்க வேண்டும். அநேகமாக அவை சிவன் கோயில்களாக இருந்து இருக்கும்.

இப்போதும் செம்மணிடயில் உள்ள வயல்களில் ஓர் பகுதி சட்ட நாதர் கோயிளுக்கும், வண்ணை வைதீஸ்வரன் கோயிலுக்கும் முதல் விளைச்சல் அனுப்புகிறார்கள் என்று நினைக்கிறன்.

அனால், செம்மணியில் உள்ள வயகல்ளில்  ஓர் பகுதி சிதம்பரம் கோயிலுக்கும் விளைச்சல் அனுப்பியதாக அப்போது இருந்த எனது பல முதுமையானவர்கள் சொல்லி அறிந்து இருக்கிறேன். - 1960 மற்றும் 70 தொடக்கம் வரை இது நடந்து இருக்க வேண்டும். பின்பு, பணம் கொடுத்ததாக. அதுவும் நின்று இருக்கும் என்று நினைக்கிறன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kadancha said:

ஆம், இன்னொன்றையும் மறந்து விட்டேன். தாய் முன்பே சொல்லி இருந்தால் ஓர் தொடர்ச்சி இருக்கும்.

செம்மணியில் உள்ள வயல்கள் இப்போது தனியார் கையில் உள்ளதாயினும், முழு வயல்களுமே ஏதொ ஓர் கோயிலிலுக்கு சொந்தமாக இருந்து இருக்க வேண்டும். அநேகமாக அவை சிவன் கோயில்களாக இருந்து இருக்கும்.

இப்போதும் செம்மணிடயில் உள்ள வயல்களில் ஓர் பகுதி சட்ட நாதர் கோயிளுக்கும், வண்ணை வைதீஸ்வரன் கோயிலுக்கும் முதல் விளைச்சல் அனுப்புகிறார்கள் என்று நினைக்கிறன்.

அனால், செம்மணியில் உள்ள வயகல்ளில்  ஓர் பகுதி சிதம்பரம் கோயிலுக்கும் விளைச்சல் அனுப்பியதாக அப்போது இருந்த எனது பல முதுமையானவர்கள் சொல்லி அறிந்து இருக்கிறேன். - 1960 மற்றும் 70 தொடக்கம் வரை இது நடந்து இருக்க வேண்டும். பின்பு, பணம் கொடுத்ததாக. அதுவும் நின்று இருக்கும் என்று நினைக்கிறன். 

கந்தர்மடத்தில் உள்ள சில காணிகள் சிதம்பரம் கோயிலுக்கும்,
வேறு ஒரு பகுதி காணிகள் நல்லூர் சிவன் கோவிலுக்கும் சொந்தமானது என்று…
எனது பாட்டி சொன்னது நல்ல நினைவில் உள்ளது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

கந்தர்மடத்தில் உள்ள சில காணிகள் சிதம்பரம் கோயிலுக்கும்,
வேறு ஒரு பகுதி காணிகள் நல்லூர் சிவன் கோவிலுக்கும் சொந்தமானது என்று…
எனது பாட்டி சொன்னது நல்ல நினைவில் உள்ளது.

அது பாட்டி காலத்தில்....  இந்தியா, இலங்கை எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரே ராசா, ராணி கீழ் இருந்ததால் சாத்தியம் ஆகி இருந்தது. சுதந்திரத்தின் பின், வேறு, வேறு நாடுகள் ஆகியவுடன் அந்தந்த கோவில்களின், இலங்கையில் இருந்த முகவர்கள் சட்ட வலு இல்லாமல் ஆகியதால், இருந்தவர்கள், 10 வருசம் வாடகை செலுத்தாமல் அல்லது கோரப்படாமல் இருந்தால், அவ் ஆதனம் அவர்களுக்கே சொந்தம் என்ற தொடர்ந்து இலங்கை சட்டத்தில் இருந்த அதே பிரிட்டிஷ் சட்டத்தின் படி, சொந்தமாகியது.

சிவபெருமான், பேரருளுடன் அருளியது என்று ஸ்வாகா பண்ணியது.....  😇

பிள்ளைகள் இல்லாதவர்கள், குறிப்பாக, இந்தியாவில் உள்ள சிவன் கோவில்களுக்கு எழுதி வைத்தது.

இப்படி தான், நல்லூர் ஆறுமுகநாவலர், தமிழகத்தில், சிதம்பரம் கோவில் அருகே, வாங்கி, நிர்மாணித்து, நடாத்திய, நாவலர் யாத்திரிகள் மடம் உள்ளது.

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

அது பாட்டி காலத்தில்....  இந்தியா, இலங்கை எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரே ராசா, ராணி கீழ் இருந்ததால் சாத்தியம் ஆகி இருந்தது. சுதந்திரத்தின் பின், வேறு, வேறு நாடுகள் ஆகியவுடன் அந்தந்த கோவில்களின், இலங்கையில் இருந்த முகவர்கள் சட்ட வலு இல்லாமல் ஆகியதால், இருந்தவர்கள், 10 வருசம் வாடகை செலுத்தாமல் அல்லது கோரப்படாமல் இருந்தால், அவ் ஆதனம் அவர்களுக்கே சொந்தம் என்ற தொடர்ந்து இலங்கை சட்டத்தில் இருந்த அதே பிரிட்டிஷ் சட்டத்தின் படி, சொந்தமாகியது.

சிவபெருமான், பேரருளுடன் அருளியது என்று ஸ்வாகா பண்ணியது.....  😇

பிள்ளைகள் இல்லாதவர்கள், குறிப்பாக, இந்தியாவில் உள்ள சிவன் கோவில்களுக்கு எழுதி வைத்தது.

இப்படி தான், நல்லூர் ஆறுமுகநாவலர், தமிழகத்தில், சிதம்பரம் கோவில் அருகே, வாங்கி, நிர்மாணித்து, நடாத்திய, நாவலர் யாத்திரிகள் மடம் உள்ளது.

இப்ப சிதம்பரம் தில்லை நடராஜப்  பெருமானே....
தன்ரை காணியை, திரும்ப  தரச் சொல்லி கேட்டால், 
வாள் வெட்டுத்தான்  விழும்.   🤣

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

இப்ப சிதம்பரம் தில்லை நடராஜப்  பெருமானே....
தன்ரை காணியை, திரும்ப  தரச் சொல்லி கேட்டால், 
வாள் வெட்டுத்தான்  விழும்.   🤣

வரட்டும், வரட்டும். துன்னூறு வாங்கிப் பூசிக்கொண்டு.... காணியை கொடுத்திரலாம்.... என்ன வெவசாயம் செய்யப்போறீங்கோ சாமி எண்டு விசாரிச்சிரிலாம்... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2022 at 17:09, Nathamuni said:

பிள்ளைகள் இல்லாதவர்கள், குறிப்பாக, இந்தியாவில் உள்ள சிவன் கோவில்களுக்கு எழுதி வைத்தது.

 

போத்துக்கேயருக்கு பின்பே, இப்படி எழுதி கொடுத்தது சரியாக இருக்கும்.

அனால், நீங்கள் சொன்னது நல்லம், ஏனெனில், பல கிளை  கதைகள் எனது நினைவுக்கு வருகிறது. 

முழு இராச்சியமுமே (சைவ) சமயம் மற்றும் கோயில்களின் சொத்தாக இருந்தது என்றும் . இராச்சியம் கோயில் மற்றும் மதத்தின் பாதுகாவர் என்றே நிலையில், காணிகளை உரிமம் மாற்றம் செய்யும் உரிமை சமயத்தின் பெயராலேயே இராச்சியத்துக்கு வந்தது என்றும்.  

ஏனெனில், பழைய நல்லூர் (நெல்லூர்) கோயில் இருந்த இடத்தில, இப்பொது St James  Church இருக்கும் இடத்தில் ஓர் உரிமம் பிரச்னை இருக்கிறது. அரசி வேதத்துக்கு மாறிய    பின் Church கட்டுவதற்கு கொடுத்ததாக. அனால், மாறியதும்    காணி உரிமம் மாற்றம் செய்யும் உரிமையை அரசி இழந்து விட்டதாகவும், அதனால், St James Church க்கு அந்த காணி உரிமம் இல்லை என்றும். இதை எனது முதியவர்கள், அவர்களுக்கும் வாய்வழியாக சொல்லப்பட்டு வந்துள்ளது.  

அனால், போத்துக்கேயர் ஆட்சியில் கத்தோலிக்கத்துக்கு மாறியவர்கள் அனைவர்க்கும் இது பொருந்தும்.

ஏனெனில், அவர்களின் காணி, அவர்களுக்கு இராச்சியதால் வழங்கப்பட்டு இருந்தால், அது அவர்கள் சைவ சமயத்தினர் என்ற அடிப்படையிலேயே காணி உரிமம் கொடுக்கப்பட்டு இருந்து  இருக்க வேண்டும்.


அனால் சங்கிலி மதம் மாறவில்லை என்றும்,போத்துக்கேயர், அரசிக்கு , காணியை தந்தால் சங்கிலியை உயிருடன் விடுவதாக சொல்லி, காணியை அரசி எழுதிய பின், அரசியை ஏமாற்றி சங்கிலியை சிரச்சேதம்  செய்தது  நடந்தது என்றும்  ஓர் வாய் வழி கதை இருக்கிறது.

அனால், போத்துகேய வரதலற்று குறிப்புகள் சொல்கிறது, சிரப் சேதத்தை போது, சங்கிலி, அரசனகா இருப்பதை காட்டிலும் இயேசுவின் கூலியாக சாவதே மேல் என்று சொல்லியே சிரச்சேதத்தை  வாங்கியதாகவும் (இது பின்பு அறிந்தது, இது வாய்வழி கதை இல்லை).

இது உண்மையாக இருப்பதற்கு இடம் இருக்கிறது, மன்னாரில் நடந்ததை வைத்து பார்த்தால். 

இதுவரையும், மன்னாரில் சங்கிலியன் (இது சங்கிலியன் 1, செகராசசேகரம்) மதம் மாறியோரை சிரச்சேதம் செய்ததாக. அவரது மகனும் கத்தோலிக்கத்துக்கு மாறியதால் மனையும் சங்கிலியன் சிரப் சேதம் செய்ததாகவுமே (போத்துகேய) குறிப்புகள் இருக்கிறது. 

அனால், போத்துக்கேயேரே அங்கு இருந்தவர்களை Church கட்டுவதற்கு  அத்திவாரத்துக்கு பலியாக இடுவதற்கு  சிரச் சேதம் செய்ததாக, ஏனெனில், அவர்கள் போத்துக்கேயரை எதிர்த்ததால். சங்கிகிலியன் முதலில் மகனை அனுப்பியதாகவும், போத்துக்கேயர் மகனை உள்வீட்டு சூழ்ச்சியால் பிடித்து கொன்று  விட்டு, சங்கிலியன் மீது பழியை போட்டு விட்டார்கள் என்றும் கதை இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தர்மடம்  என்ற பெயரிலேயே தெரிகிறது அது சைவ சமயம் மற்றும் கோயிகளுடன் தொடர்புபட்ட இடம் என்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எனது அவதானமும் முடிவும், போத்துகேய குறிப்புகள் சொல்வது பொய் அல்லது திரிபு என்று.

போத்துக்கேய குறிப்பு சொல்வது, சங்கிலியனுக்கான சிரச்சேதம், மன்னாரில் கத்தோலிக்கத்துக்கு மாறியவர்களை சங்கிலியன் செய்ததன் காரணமாக.

அது நடந்த போது ஆட்சியில் இருந்தது (மன்னாரில் கத்தோலிக்கத்துக்கு மாறியவர்களை சங்கிலியன்) , சங்கிலியன் 1 (செகராசசேகரம்).  

அனால் போத்துக்கேயர் பிடித்தது சங்கிலி (சங்கிலி குமாரன்), அவரை சங்கிலியன் 2 என்று இப்பொது அழைக்கும் வழக்கம் வந்து விட்டது.

போத்துக்கேயர் சங்கிலிக்கு (சங்கிலி குமாரன்) சிரச் சேதம் செய்தது, சங்கிலியன் 1 ((செகராசசேகரம்) ஆல்  மன்னாரில் கத்தோலிக்கத்துக்கு மாறியவர்களை சிரப் சேதம் செய்ததுக்கு என்பதி பொய்யாக, திரிப்பாக உள்ளது.

இதில் எனது உறவினர்களும், சங்கிலியின் படையினராக,  குடும்பம், குடும்பமாக அழிக்கப்பட்டு இருப்பார்கள் என்று நம்புகிறேன். முதியவர்களும் அது நடந்து இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஏனென்றால், போத்துக்கேயர் எதிர்த்தவர்களை, அரசோடு நின்றவர்களை,   தொடர்பு உள்ளவர்களை, ஏன் அவர்களது சட்டங்களை மீறியவர்களை  குடும்பம் குடும்பமாகவே அழித்தனர். அதனால், தெளிவான தொடர்பு இல்லாமல் இருக்கிறது. 

அனால், வரலாறு எச்சங்கள் இருக்கும். இந்த எச்சம் இப்பொதும்  தொடர்வது, நல்லூர் சூரன் போரில்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தைய பதிவில் சொன்ன வரலாற்று எச்சம் பற்றி  சொல்லுவதற்கு காரணம், இப்போதுள்ள நல்லூரை 1700 களில், ஒல்லாந்த ஆட்சியில், மீண்டும் கட்டும் போது, இந்த இரண்டும், கொடி சீலை வழங்குதல் (முன்னைய பதிவுகளில் youtube இணைப்பு), மற்றது  சூரன் போரில் முடி வீரர்களாக (நவ வீரர்களை) பிரதிநிதிப்பதும் நினைவு (இதை ஓரளவு விளக்குகிறேன்) மீண்டும் முக்கிய (வரலாற்று நினைவு) சடங்குகளாக கட்டி எழுப்பப்பட்டது.

இதில்  கிளைக்  கதைகள்  உள்ளது நினைவு வந்ததால் சொல்லிவிட்டு, மீண்டும் சூரன் போர், அதன் வரலாற்று முக்கியத்துவம் பற்றி பார்க்கலாம்.  

உங்களுடைய கேள்விக்கு, வரலாற்று (புராண வரலாறு கூட) ஊடான பதிலாக அடுத்த 2-3 பதிவுகளில் இருக்கும்.

On 9/4/2022 at 15:35, பிரபா சிதம்பரநாதன் said:

@Kadancha, இந்த பரம்பரையினருக்கு இன்னொரு பெயரும் உள்ளதா? செங்குந்தா என்பதை விட? ஏனெனில் எனது தந்தை இந்த பகுதியில் உள்ளவர்களை வேறு பெயர் கொண்டு அழைப்பதாக முன்பு எங்களுக்கு கூறியிருந்தார். 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2022 at 15:35, பிரபா சிதம்பரநாதன் said:

@Kadancha, இந்த பரம்பரையினருக்கு இன்னொரு பெயரும் உள்ளதா? செங்குந்தா என்பதை விட? ஏனெனில் எனது தந்தை இந்த பகுதியில் உள்ளவர்களை வேறு பெயர் கொண்டு அழைப்பதாக முன்பு எங்களுக்கு கூறியிருந்தார். 

செங்குந்தர் என்பவர்கள் - ஒரு வகை சாதிய  பிரிப்பு என நினைக்கிறேன். நெசவு தொழில் செய்பவர்கள் - கைகுழவர் என்பது இன்னொரு பெயர் (சாதிய பெயர் தரவுக்காக மட்டுமே பயன்படுத்த பட்டுள்ளது). குல தெய்வம் முருகன்.

தமிழ் சாதியாக மட்டும் அல்லாமல் தெலுங்கு சாதியாகவும் செங்குத்த முதலியார் என்று உள்ளார்கள். அவர்கள் முருகனை செங்கல்வராயன் என்ஐழைப்பர்.

வீரவாகு, Singha bahu என்ற தமிழ், தெலுங்கு, சிங்கள பெயர்கள் - இந்த சாதியினரின் என்கிறார்கள். 

பேரறிஞர் அண்ணா ஒரு வழியால் செங்குந்த முதலியார் என்பார்கள். 

யாழில் முன்னர் ஓடிய பல “தெலுங்கு” திரிகளில் ஒன்றில் இவை குறித்து சிலாகிக்கபட்ட நியாபகம்.

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் கிளளைக் கதைகள், விட்டால்  மறந்து விடுவேன்.

இப்போதுள்ள நல்லூர் தேரில் பீடத்தின்  (உள்ளே) , போத்துக்கேயருக்கு முன்பு இருந்த தேரில் இருந்த பெரும் மரத் துண்டு ஓன்று இருப்பதாக ஓர் கதை இருக்கிறது.

அதை போத்துக்கேயரிடம் இருந்து மறைத்து, நல்லூரை மீண்டும் கட்டும் போது கொடுத்தது, இப்பொது  கொடி  வழங்குபவரின் (அதாவது இப்பொது சிறிய தேர் வைத்து கொடியை நல்லூருக்கு கொண்டு வருபவர்கள் (youtube இல் இருப்பது), அதாவது எனது அம்மாவின் வழி) முனைய சந்ததி.

இப்போதுள்ள, கொடி கொண்டு செல்லப்படும்  சிறிய  தேர் (youtube இல் இருப்பது), போத்துக்கேயருக்கு முன்பு இருந்த தேரின் அழிவு எச்சத்தை மறைத்து, பாதுகாத்து, அந்த எச்சங்களை அடி பீடத்தில் உள்ளே  வைத்து கட்டப்பட்டதாக.

இதை, எனது அம்மம்மாவின் சகோதரரும் அவ்வப்போது சொல்லி இருக்கிறார்.

இரண்டுமே, நடந்து இருக்கலாம். பெரிய மரப்பகுதியை பகுதியை நல்லூர் மீண்டும் கட்டப்படும் போது  (இப்போதுள்ள) நல்லோர் தேருக்கு கொடுத்து விட்டு, மிகுதி  பகுதிகளை கொண்டு கொடி கொண்டு செல்லப்படும் (அவர்களின்) தேரை கட்டி இருக்கலாம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2022 at 08:18, goshan_che said:

செங்குந்தர் என்பவர்கள் - ஒரு வகை சாதிய  பிரிப்பு என நினைக்கிறேன். நெசவு தொழில் செய்பவர்கள் - கைகுழவர் என்பது இன்னொரு பெயர் (சாதிய பெயர் தரவுக்காக மட்டுமே பயன்படுத்த பட்டுள்ளது). குல தெய்வம் முருகன்.

தமிழ் சாதியாக மட்டும் அல்லாமல் தெலுங்கு சாதியாகவும் செங்குத்த முதலியார் என்று உள்ளார்கள். அவர்கள் முருகனை செங்கல்வராயன் என்ஐழைப்பர்.

வீரவாகு, Singha bahu என்ற தமிழ், தெலுங்கு, சிங்கள பெயர்கள் - இந்த சாதியினரின் என்கிறார்கள். 

பேரறிஞர் அண்ணா ஒரு வழியால் செங்குந்த முதலியார் என்பார்கள். 

யாழில் முன்னர் ஓடிய பல “தெலுங்கு” திரிகளில் ஒன்றில் இவை குறித்து சிலாகிக்கபட்ட நியாபகம்.

 

கைகுழவர்.. அப்படித்தான் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். ஏன் அப்படி அழைக்கிறார்கள் என சரியாக தெரியாது. ஆனால் அவர்களில் அனேகமானோர் சைவர்கள். 

ம்ம்ம.. வீரவாகு என்ற பெயர் இந்த மரபினரை குறிக்கலாம் என இன்றுதான் அறிந்தேன்.. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2022 at 15:41, பிரபா சிதம்பரநாதன் said:

வீரவாகு என்ற பெயர் இந்த மரபினரை குறிக்கலாம் என இன்றுதான் அறிந்தேன்.. 

 

நேரம் கிடைத்தமையால், மீண்டும் பதிய ஆரம்பிக்கிறேன். ஏதாவது, கேள்விகள் இருந்தால் முடியும் வரை பொறுக்கவும். 

முதலில் சில குறிப்புகள்.

1) சாதி பற்றி கதைக்க வேண்டி வரும் - வரலாற்றுக்குக்காக. அதனால், வாசிக்கும் எவரினதும் சாதிகள் பாதிக்கப்படும் ஆயின், அது வரலாற்றில் நடந்தது, நான் அறிந்த படி இங்கு பதிவது (குறிப்பு: என்னுடைய முதியவர்கள் எவருமே எந்த   சாதிகளை தாழ்த்தி சொன்னதாக என்னிடம் நினைவு இல்லை).

2) சிங்களவரில்  இருப்பவர்கள் பற்றி, அது பிறிம்பாக பாராக்கப்பட வேண்டும். ஆனாலும், இந்த பதிவின் முடிவில் அதற்கு சாத்தியக் கூறுகள்  இருக்கமுடியாது என்பது  தெரிய வேண்டி வரும்.  (குறிப்பு: எப்படி நிறத்தை வைத்து race, இனம் பற்றி சொல்ல முடியாதோ, அப்படியே பெயரை வைத்து குறிப்பிட்டவரக்ள்  இந்த குழுமத்தை சேர்த்தவர்கள் என்று சொல்ல முடியாது - இது வெளிப்படை).

3)  முதியோர் முன்பு சொன்னதையும் (அதாவது, 80, 90 களில், எனது அம்மா,அப்பாவுக்கு (பிறந்தது 1925) அவர்களின் முதியவர்கள் சொல்லியாது என்று சொல்லி  எனது அம்மா, அப்பா சொல்லியது), மற்றும்  இப்பொது உயிரோடு உள்ள முதியவரக்ள் சொல்வதையும் பதிகிறேன்.

4) நான் தேடி அறிந்தவைகள்.

தொடரும்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kadancha said:

நேரம் கிடைத்தமையால், மீண்டும் பதிய ஆரம்பிக்கிறேன். ஏதாவது, கேள்விகள் இருந்தால் முடியும் வரை பொறுக்கவும்.

ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்கள் இவற்றை எழுதுவதே மகிழ்ச்சியான ஒரு விடயம். 

நன்றி கடஞ்சா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kadancha said:

தொடரும்

தொடருங்கள் .அறிய ஆவலாக உள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2022 at 10:41, பிரபா சிதம்பரநாதன் said:

கைகுழவர்.. அப்படித்தான் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். ஏன் அப்படி அழைக்கிறார்கள் என சரியாக தெரியாது. ஆனால் அவர்களில் அனேகமானோர் சைவர்கள். 

கல்வியன்காட்டு பகுதியில் இந்த சாதியினர் இப்போதும் இருக்கிறார்கள்.

கல்வியன்காட்டு சந்தையை முன்னர் கைக்குழ சந்தையென்றும் அழைப்பார்கள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எல்லோரிடமும் ஓர் கேள்வி. 

நீந்கள் ஒரு போதுமே உங்கள் முதியவர்கள், அம்மா, அப்பா, உறவினர்கள் என்று எவரிடமும் குறிப்பிட்ட இடத்தில் எள்ளளவு காலம் இருக்கிறோம்,  எப்படி வந்தோம், தனிப்பட்ட முறையில் நீங்கள் யார் (முனைய சந்ததி) என்று கேள்வி கேட்கவில்லையா நீங்கள் விபரம் அறிந்த  நாட்களில் இருந்து ( 8 - 10 வயதில் இருந்து).

முதியவர்கள், உறவினர்கள், அம்மா, அப்பா சொன்னது எல்லாம், கூப்பிட்டு வைத்து இது தான் வரலாறு என்று  சொல்லியது இல்லை. நான் அறிந்தது, அவ்வப்போது கதைக்கும்  போது வரும்.

எனது நினைவு, 6-7 வயதில். அது, ஒருமுறை எனது சகோதரங்கள் என்னத்த தூண்டுவதற்காக நாம் இருந்த வீட்டில் உனக்கு தரமுடியாது என்று  பகிடி பண்ணி, இது யாரின் வீடு என்று நான் கேட்க, அது எனது, அம்மம்மாவின் முன்னைய சந்ததி வீடு என்று எனது  ஓர் மூத்த சகோதரம் சொல்ல, அதில் சண்டையும் வந்து, பின் அதில் இருந்து ஆரம்பித்தது.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

 

முதலில் எல்லோரிடமும் ஓர் கேள்வி. 

நீந்கள் ஒரு போதுமே உங்கள் முதியவர்கள், அம்மா, அப்பா, உறவினர்கள் என்று எவரிடமும் குறிப்பிட்ட இடத்தில் எள்ளளவு காலம் இருக்கிறோம்,  எப்படி வந்தோம், தனிப்பட்ட முறையில் நீங்கள் யார் (முனைய சந்ததி) என்று கேள்வி கேட்கவில்லையா

 

பெரும்பாலும் எல்லோருமே இந்த கேள்வியை கேட்டிருப்பார்கள் என்றுதான் நம்புகிறேன்.. ஆனால் முன்னைய சந்ததியில் எந்த காலம் வரை (great great great grandparents) என்பது அவரவருக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பொறுத்தே அமையும் என நினைக்கின்றேன்..

என்னைப் பொறுத்த வரையில் எனது அப்பு/அம்மம்மா(அம்மா வழி)யிடம் இருந்து அவர்களது முன்னைய சந்ததியைப் பற்றி அறிந்தாலும் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் போக முடியவில்லை. 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.