Jump to content

கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது.😍


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ராசவன்னியன் said:

அந்த சாப வரிகளை, எப்படி இங்கே எழுதுவது..?

"நான் (தருமர்) புணர நீ பார்க்க, நீ புணர ஊரே பார்க்கும்"

இதை செம்மொழியில் சொல்வதா,  தருமரின் நாய்களுக்கான சாபம்?

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Kadancha

இதற்கு, வாய் வழி வரலாறு தெரிய வேண்டும். சந்ததி, சந்ததியாக ஓர் இடத்தில்  இருந்திருக்காவிட்டட்டால், இது எவருக்குமே தெரிய வாய்ப்பில்லை. போத்துக்கேயர் வருகையுடன் - நல்லூர் (உண்மையில் நெல்லூர், செம்மண

Kadancha

வேறு எதாவது மறந்து விட்டேனோ தெரியாது. வேறு கதைகள் வரும் பொது, நினைவு வரலாம். நல்லூருக்கு ஒவொரு முக்கியமான விடயத்திடற்கும் ஒவ்வொரு பரம்பரை இருந்தது. யுத்தத்தால் சில மாறி விட்டது தலைமை குருக்க

குமாரசாமி

கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது. ஒரு பெண்ணிற்கு பல ஆடவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதாரர்கள் ஒரு பெண்ணுடன் வாழ்வார்கள். பிறக்கும் குழந்தைக்கு தாயை மட்டுமே உறுதியாக தெரியும். சக

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kadancha said:

"நான் (தருமர்) புணர நீ பார்க்க, நீ புணர ஊரே பார்க்கும்"

இதை செம்மொழியில் சொல்வதா,  தருமரின் நாய்களுக்கான சாபம்?

தருமர் அந்த இக்கட்டான சமயத்திலும் தன்னுணர்வுடன் செயல்பட்டிருக்கின்றார்......அதனால்தான் அவர் தருமர்என்று போற்றப்படுகின்றார்........ அந்த நாய்க்கு சாபம் கொடுத்ததற்கு பதிலாக அதே சாபத்தை நகுலனுக்கு கொடுத்திருந்தால் நம் எல்லோருடைய நிலைமைகளையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்............!   🤔

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, suvy said:

தருமர் அந்த இக்கட்டான சமயத்திலும் தன்னுணர்வுடன் செயல்பட்டிருக்கின்றார்......அதனால்தான் அவர் தருமர்என்று போற்றப்படுகின்றார்........ அந்த நாய்க்கு சாபம் கொடுத்ததற்கு பதிலாக அதே சாபத்தை நகுலனுக்கு கொடுத்திருந்தால் நம் எல்லோருடைய நிலைமைகளையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்............!   🤔

இதை பகிடியாக சொல்லவில்லை.

தருமருக்கு அப்படி எண்ணம் வந்திராது என்று எண்ணுகிறேன்.

சமநேரக் கலவி நடந்து இருபதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

ஏனெனில்,வேதங்களில், யாகங்களின் ஓர் நோக்கம், அதுவும் அஸ்வ மேத யாகம், (பெண்களின்) புணர்ச்சி இச்சையை மிருகங்களை கொண்டு  தணிப்பதற்காக, என்ற அர்த்தப்பட வேதங்களில் சுலோகங்கள் இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன்.

உண்மை, பொய் தெரியவில்லை.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

"நான் (தருமர்) புணர நீ பார்க்க, நீ புணர ஊரே பார்க்கும்"

இதை செம்மொழியில் சொல்வதா,  தருமரின் நாய்களுக்கான சாபம்?

"நீ" என்பதைல் மாற்றம் வேண்டும்.. இச்சாபம் அந்த பிராணிகளை குறிப்பிட்டு கொடுக்கப்பட்டது.

டி.ராஜேந்தர் பாணியே இல்லையே..? அதில்தானே விசேசம்..! 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

"நீ" என்பதைல் மாற்றம் வேண்டும்.. இச்சாபம் அந்த பிராணிகளை குறிப்பிட்டு கொடுக்கப்பட்டது.

டி.ராஜேந்தர் பாணியே இல்லையே..? அதில்தானே விசேசம்..! 🤗

முழுக்க நனைந்த பின்… முக்காடு எதற்கு? 😂
ராஜேந்தர்பாணியிலேயே… நீங்களே, சொல்லி விடுங்கள். 🤣

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

நீங்கள், பிறந்ததில் இருந்து ஆரம்ப பதின்ம வயது வரையும் (விபரம் அறியும் வரை ) ஓரே இடத்தில் வளர்ந்து இருந்தால் - அந்த ஊர்களில்  - சில குடும்பங்களை - குறிப்பிட்ட பெயர் கொண்டு அழைகப்படும் குடும்பங்கள் இருக்கிறது. 

இப்பொது வழக்கொழிந்து வந்தாலும், இப்பொது 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்கும், ஒரே ஊரில் பூர்விகம் (முக்கியமாக, மிகவும் சிறு வயதில் இருந்து, விபரம் அறியும் வரை வளர்ந்து இருந்தால்).   

பொதுவாக 'ஓர் பெயர்' வீடு என்று அழைக்கப்படும் குடும்பங்கள், இப்போதும் வடக்கில், கிழக்கில் இருக்கிறது.

குறிப்பிட்ட நடத்தை கொண்ட பெயர்களும் இருக்கிறது. பெயர்களை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.

இது ஒரு புது தகவல், இதுவரை கேள்விப்பட்டதில்லை. இது யாழ்ப்பாணதில் பரவலாக இருந்ததா அல்லது குறிப்பிட்ட சில இடங்களில் இருந்ததா? இந்தியாவின் தேவதாசி முறை போல ஏதாவது ஒரு சாதியை மையப்படுத்தி நடந்த விடயமா? சாதியை குறிப்பிட்டு சொல்ல தேவையில்லை. எந்தக்கால கட்டத்தில் இவை வழக்கொழிந்தன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நீர்வேலியான் said:

இது ஒரு புது தகவல், இதுவரை கேள்விப்பட்டதில்லை. இது யாழ்ப்பாணதில் பரவலாக இருந்ததா அல்லது குறிப்பிட்ட சில இடங்களில் இருந்ததா? இந்தியாவின் தேவதாசி முறை போல ஏதாவது ஒரு சாதியை மையப்படுத்தி நடந்த விடயமா? சாதியை குறிப்பிட்டு சொல்ல தேவையில்லை. எந்தக்கால கட்டத்தில் இவை வழக்கொழிந்தன?

இதற்கு, வாய் வழி வரலாறு தெரிய வேண்டும். சந்ததி, சந்ததியாக ஓர் இடத்தில்  இருந்திருக்காவிட்டட்டால், இது எவருக்குமே தெரிய வாய்ப்பில்லை.

போத்துக்கேயர் வருகையுடன் - நல்லூர் (உண்மையில் நெல்லூர், செம்மணி வயலில் விளையும் செம்மணி போன்ற அரிசியை விளைவிக்கும் நெற்கதிர்களால் உருவாக்கிய காரணப் பெயர்) மற்றும் யாழ் நகரை அண்டிய பகுதிகளை தவிர, மற்ற ஊர்களில் பரவலாக குடிமக்கள், போத்துக்கேயரின் ஒரு பக்கம் வரி கொடுமை, மற்றையது விவசாய விளைச்சல்கள் பறிப்பது,  முக்கியமாக கத்தோலிக்கம் மதத்துக்கு மாற்றம், சைவ முறை புழக்கத்தில் இருந்தால் தண்டனை என்பன, பாரிய குடிபெயரவுக்கு வழிவகுத்தது. இப்படி குடிபெயர்வு பொதுவாக வன்னிக்கே நடந்தது.

முக்கியமாக நல்லூர் ராஜதானி மற்றும் இப்போதைய யாழ் நகரை அண்டிய பகுதிகளிகல், இந்த பகுதிகளில், முக்கியமாக ராஜதானி பகுதிகளில் இருந்த அப்போதைய ஆட்சியாளர் குடும்பங்கள்  கத்தோலிக்கத்துக்கும் மாறியமையால், முதலில் மிகவும் அழிவு இருந்தாலும்  இடப்பெயர்வு பெருமளவில் நடக்கவில்லை. ஆனல், போத்துக்கேயரை எதிர்த்தவர்கள் குடும்பமாக நாடு கடத்தப்பட்டது நடந்தது.

போத்துக்கேயர் அனறைய கோயிகளை உடைத்து, அழித்து அதில் இருந்த கருங்கல் பாளங்களை கொண்டே யாழ் கோட்டையை நிர்மாணித்தார். இப்படியாக உடைத்த கருங்கற்களை பொத்துகேயர் வண்டிலில் கொண்டு சென்றபோது, எனது மூதாதையர் ஆத்திரத்தால் கல் எறிந்து, அவர்களின் குடும்பம் நாடுகடத்தப்பட்டதை சந்ததி, சந்தியாக அறிந்து இருக்கிறோம்.  

மற்றது,  நல்லூர் ராஜதானி மற்றும் இப்போதைய யாழ் நகரை அண்டிய பகுதிகளிகல், போத்துகேயக்கருக்கு தொழிலாளர் வேண்டி இருந்தமையால், இந்த பாரிய குடி பெயர்வு நடக்கவில்லை.

நான் நினைக்கிறன், அநேகமாக இப்போது கோட்டைகள் அல்லது அப்படியான சிதைபாடுகளுக்கு சுற்றி உள்ள இடங்களில் இருந்து, பெரும்பாலும் குடிபெயர்வு நடக்கவில்லை. ஏனெனில், வணிகம், வர்த்தகம், போத்துக்கேயருக்கு வேலை செய்வதத்திற்கு தொழிலாளர் தேவை பொன்னர காரணங்கள். அத்துடன் அப்படியான இடங்களில் தான், அப்போதைய ஆட்சியாளர், நிர்வாகம் செய் தோர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோனோர் கத்தோலிக்க மதத்துக்கு மாறியதால், போத்துக்கேயர் அவர்களை கொடூரமாக நடத்தவில்லை.

குடி பெயர்வு பாரிய அளவில் நடக்காத இடங்களில், இப்படியான குடும்பகளின் பெயர் சந்தித்த சந்ததியாக வழங்கி வந்தது, இப்பொது வழக்கொழிந்து வருகிறது.

ஆனாலும், என்னுடைய ஆச்சி (அப்பாவின் அம்மா), இப்படியான குடும்பங்கள் பல இடங்களலும் இருந்ததாதாக, எனது ஆச்சியின் சந்ததி வழியாக, ஆச்சியின் தாய் தந்தையர் சொன்னதாக மற்றும் ஆச்சியின் பாட்டன், ப்படி சொன்னதாக , இப்படியான கதைகள் வரும் பொது சொல்லி உள்ளார்.

இதை வாய் வழி வரலாறு - எந்தவொரு சரித்திர குறிப்பிலும்  இருக்காது.

இதனால் தான், சந்ததி, சந்ததி  வழியாக ஒரே இடத்தில் (உங்களது அல்லது எபரினதும்) குடும்பங்கள்    வேர் விட்டு இருந்தால் ஒழிய, இது தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

உ.ம். இங்கு ஒரு சில முறை சொல்லி இருக்கிறேன், சரசுவதி மகால் எனும் நூலகமும், அருங்காட்சியகமும், அன்றைய நல்லூர் (நெல்லூர் அப்போது) ராஜதானி நகர் புறத்தில் இருந்ததாக. இது, இங்கு எவருக்குமே தெரியாது; சிலர் மறுத்தும் இருந்தனர். அதை போத்திகேயர் கொளுதியதால் தான், எம்மிடம் மகாவம்சம் போன்ற வரலாற்று குறிப்பு எழுத்து வடிவில் இல்லை.   

மற்றது இப்பதியான குடும்பங்கள், மதம் மாறி இப்பொது கதோலிக்கர்  ஆக இருபதற்கும் மிக கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

அனால், இப்படியான குடும்பங்கள், அதாவது இராச்சியத்துக்குள் (நிர்வாகம் மற்றும் ராஜதானி) செல்லக் கூடிய, அனுமதி உள்ள  எல்லா சாதிகளிலும் இருந்திருக்க வேண்டும். (குறிப்பிட சாதி மட்டும் அல்ல).  

நான் குறிப்பாக சொல்வது,  நல்லூர் இராசதானியை அண்டிய பகுதி (முக்கியமாக, அன்றைய இராஜ தானியின் நகர் புறம்).

காம சிற்பங்கள் இருந்த எல்லா கோயிகளும் (அநேகமாக அவை  பெரிய கோயிகள்)  போத்துக்கேயரால் அழிக்கப்பட்டு விட்டன. இப்பொது இருப்பவை எல்லாம், ஒல்லாந்தர் காலத்தில் பெரும்பாலும் அதே இடத்தில்  கட்டப்பட்ட கோயில்கள்.

நல்லூர் அதன் உண்மையான இடத்தில் போத்துக்கேயர் St James church ஐ (முத்திரை சந்தியில் இருந்து பார்க்கும் போது, செம்மணி வீதியில் இருக்கும் St JamesChurch தெரியும்)  கட்டிவிட, நல்லூர் கோயில்  இப்போதைய இடத்தில கட்டப்பட்டு விட்டது.

இந்த படம், பழைய நல்லூர் (நெல்லூர்) கோயிலின் கேணி. இப்போதும், யமுனாரி என்றே அழைக்கப்படுகிறது.

2017-09-22.jpg?fit=1280,695&ssl=1

 

 

  • Like 5
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி கடைஞ்சா .......!

கல்வியங்காட்டை அண்டிய பகுதிகளில் பரங்கியர்  போன்ற சில கலப்பினக் குடும்பங்கள் முன்பு இருந்தன என்று தெரியும். இப்பவும் இருக்கினமோ தெரியவில்லை.......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

இதற்கு, வாய் வழி வரலாறு தெரிய வேண்டும். சந்ததி, சந்ததியாக ஓர் இடத்தில்  இருந்திருக்காவிட்டட்டால், இது எவருக்குமே தெரிய வாய்ப்பில்லை.

போத்துக்கேயர் வருகையுடன் - நல்லூர் (உண்மையில் நெல்லூர், செம்மணி வயலில் விளையும் செம்மணி போன்ற அரிசியை விளைவிக்கும் நெற்கதிர்களால் உருவாக்கிய காரணப் பெயர்) மற்றும் யாழ் நகரை அண்டிய பகுதிகளை தவிர, மற்ற ஊர்களில் பரவலாக குடிமக்கள், போத்துக்கேயரின் ஒரு பக்கம் வரி கொடுமை, மற்றையது விவசாய விளைச்சல்கள் பறிப்பது,  முக்கியமாக கத்தோலிக்கம் மதத்துக்கு மாற்றம், சைவ முறை புழக்கத்தில் இருந்தால் தண்டனை என்பன, பாரிய குடிபெயரவுக்கு வழிவகுத்தது. இப்படி குடிபெயர்வு பொதுவாக வன்னிக்கே நடந்தது.

முக்கியமாக நல்லூர் ராஜதானி மற்றும் இப்போதைய யாழ் நகரை அண்டிய பகுதிகளிகல், இந்த பகுதிகளில், முக்கியமாக ராஜதானி பகுதிகளில் இருந்த அப்போதைய ஆட்சியாளர் குடும்பங்கள்  கத்தோலிக்கத்துக்கும் மாறியமையால், முதலில் மிகவும் அழிவு இருந்தாலும்  இடப்பெயர்வு பெருமளவில் நடக்கவில்லை. ஆனல், போத்துக்கேயரை எதிர்த்தவர்கள் குடும்பமாக நாடு கடத்தப்பட்டது நடந்தது.

போத்துக்கேயர் அனறைய கோயிகளை உடைத்து, அழித்து அதில் இருந்த கருங்கல் பாளங்களை கொண்டே யாழ் கோட்டையை நிர்மாணித்தார். இப்படியாக உடைத்த கருங்கற்களை பொத்துகேயர் வண்டிலில் கொண்டு சென்றபோது, எனது மூதாதையர் ஆத்திரத்தால் கல் எறிந்து, அவர்களின் குடும்பம் நாடுகடத்தப்பட்டதை சந்ததி, சந்தியாக அறிந்து இருக்கிறோம்.  

மற்றது,  நல்லூர் ராஜதானி மற்றும் இப்போதைய யாழ் நகரை அண்டிய பகுதிகளிகல், போத்துகேயக்கருக்கு தொழிலாளர் வேண்டி இருந்தமையால், இந்த பாரிய குடி பெயர்வு நடக்கவில்லை.

நான் நினைக்கிறன், அநேகமாக இப்போது கோட்டைகள் அல்லது அப்படியான சிதைபாடுகளுக்கு சுற்றி உள்ள இடங்களில் இருந்து, பெரும்பாலும் குடிபெயர்வு நடக்கவில்லை. ஏனெனில், வணிகம், வர்த்தகம், போத்துக்கேயருக்கு வேலை செய்வதத்திற்கு தொழிலாளர் தேவை பொன்னர காரணங்கள். அத்துடன் அப்படியான இடங்களில் தான், அப்போதைய ஆட்சியாளர், நிர்வாகம் செய் தோர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோனோர் கத்தோலிக்க மதத்துக்கு மாறியதால், போத்துக்கேயர் அவர்களை கொடூரமாக நடத்தவில்லை.

குடி பெயர்வு பாரிய அளவில் நடக்காத இடங்களில், இப்படியான குடும்பகளின் பெயர் சந்தித்த சந்ததியாக வழங்கி வந்தது, இப்பொது வழக்கொழிந்து வருகிறது.

ஆனாலும், என்னுடைய ஆச்சி (அப்பாவின் அம்மா), இப்படியான குடும்பங்கள் பல இடங்களலும் இருந்ததாதாக, எனது ஆச்சியின் சந்ததி வழியாக, ஆச்சியின் தாய் தந்தையர் சொன்னதாக மற்றும் ஆச்சியின் பாட்டன், ப்படி சொன்னதாக , இப்படியான கதைகள் வரும் பொது சொல்லி உள்ளார்.

இதை வாய் வழி வரலாறு - எந்தவொரு சரித்திர குறிப்பிலும்  இருக்காது.

இதனால் தான், சந்ததி, சந்ததி  வழியாக ஒரே இடத்தில் (உங்களது அல்லது எபரினதும்) குடும்பங்கள்    வேர் விட்டு இருந்தால் ஒழிய, இது தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

உ.ம். இங்கு ஒரு சில முறை சொல்லி இருக்கிறேன், சரசுவதி மகால் எனும் நூலகமும், அருங்காட்சியகமும், அன்றைய நல்லூர் (நெல்லூர் அப்போது) ராஜதானி நகர் புறத்தில் இருந்ததாக. இது, இங்கு எவருக்குமே தெரியாது; சிலர் மறுத்தும் இருந்தனர். அதை போத்திகேயர் கொளுதியதால் தான், எம்மிடம் மகாவம்சம் போன்ற வரலாற்று குறிப்பு எழுத்து வடிவில் இல்லை.   

மற்றது இப்பதியான குடும்பங்கள், மதம் மாறி இப்பொது கதோலிக்கர்  ஆக இருபதற்கும் மிக கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

அனால், இப்படியான குடும்பங்கள், அதாவது இராச்சியத்துக்குள் (நிர்வாகம் மற்றும் ராஜதானி) செல்லக் கூடிய, அனுமதி உள்ள  எல்லா சாதிகளிலும் இருந்திருக்க வேண்டும். (குறிப்பிட சாதி மட்டும் அல்ல).  

நான் குறிப்பாக சொல்வது,  நல்லூர் இராசதானியை அண்டிய பகுதி (முக்கியமாக, அன்றைய இராஜ தானியின் நகர் புறம்).

காம சிற்பங்கள் இருந்த எல்லா கோயிகளும் (அநேகமாக அவை  பெரிய கோயிகள்)  போத்துக்கேயரால் அழிக்கப்பட்டு விட்டன. இப்பொது இருப்பவை எல்லாம், ஒல்லாந்தர் காலத்தில் பெரும்பாலும் அதே இடத்தில்  கட்டப்பட்ட கோயில்கள்.

நல்லூர் அதன் உண்மையான இடத்தில் போத்துக்கேயர் St James church ஐ (முத்திரை சந்தியில் இருந்து பார்க்கும் போது, செம்மணி வீதியில் இருக்கும் St JamesChurch தெரியும்)  கட்டிவிட, நல்லூர் கோயில்  இப்போதைய இடத்தில கட்டப்பட்டு விட்டது.

இந்த படம், பழைய நல்லூர் (நெல்லூர்) கோயிலின் கேணி. இப்போதும், யமுனாரி என்றே அழைக்கப்படுகிறது.

2017-09-22.jpg?fit=1280,695&ssl=1

 

 

மிக விரிவான பதிலுக்கு நன்றி கடைஞ்சா, இதில் போத்துக்கேயரின் மதமாற்றம் மற்றும் கோவில் அழிப்பு, நாலூர் வரலாறு  பற்றி ஓரளவு தெரிந்திருந்தாலும், நீங்கள் சொன்ன வாய் வழி கதை சுவாரசியமாகவும் புதிதாகவும் இருந்தது. இவற்றை பற்றி மேலதிகமாக அறிவதற்கு ஏதாவது இணையவழி புத்தகங்களோ கட்டுரைகளோ இருக்கிறதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

கல்வியங்காட்டை அண்டிய பகுதிகளில் பரங்கியர்  போன்ற சில கலப்பினக் குடும்பங்கள் முன்பு இருந்தன என்று தெரியும். இப்பவும் இருக்கினமோ தெரியவில்லை.......!   

அவர்களை தெரியும்.

ஒரு மகனின், ஒரு மகளும், முழுப் பறங்கி தோற்றம் - தலை மயிர் செம்படை, , நீல நிற , புழுந்தும் பூனை கண்கள்,  பறங்கியலும் வெளிறிய நிறம்.

மற்றம் பிள்ளைகள்  எல்லோரும், சாதாரண தோற்றம்.

எனவே இது கலப்பால் வந்தததா, அல்லது நிறக் குறைபாடா (albino) என்பது சரியாக தெரியாது. அந்த நேரத்தில் சந்தேகம் இருந்தது நியாயமானது.

அவர்களின் தகப்பனுக்கும், பின்பு தோலின் னிரசம் வெளிற  தொடங்கிவிட்டது. அதனால், எதாவது குறைபாடா என்பது தெரியவில்லை.
 
கோப்பாயில் இருந்த போத்துக்கேயரின்  சிறு ககோட்டையில் இருந்த சிப்பாய்கள், அவ்வப்போது வன்புணர்வில்  ஈடுபட்டது, மற்றும் குடி இருப்பவர்களும் (பெண்களுக்கு) தொடர்பு இருந்தது என்ற ஓர் வாய் வழி கதையும் இருக்கிறது.   

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நீர்வேலியான் said:

மிக விரிவான பதிலுக்கு நன்றி கடைஞ்சா, இதில் போத்துக்கேயரின் மதமாற்றம் மற்றும் கோவில் அழிப்பு, நாலூர் வரலாறு  பற்றி ஓரளவு தெரிந்திருந்தாலும், நீங்கள் சொன்ன வாய் வழி கதை சுவாரசியமாகவும் புதிதாகவும் இருந்தது. இவற்றை பற்றி மேலதிகமாக அறிவதற்கு ஏதாவது இணையவழி புத்தகங்களோ கட்டுரைகளோ இருக்கிறதா? 

நான் சொல்வது, வரலாற்று குறிப்பில், எழுத்து வடிவில்,  இருக்குமா என்பது சந்தேகம்.

நான் அறிந்தவற்றை இங்கு பதிகிறேன. அநேகமாக என்னுடைய தலைமுறையுடன், இந்த வரலாறு தெரியாமல் போய்விடும்.

எங்கு தொடங்குவது என்பது தடுமாற்றமாக இருக்கிறது.  

இயலுமானவரை, ஓர் ஒழுங்கு முறையில் சொல்ல முயற்சிக்கிறேன்.
 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நீர்வேலியான் said:

மிக விரிவான பதிலுக்கு நன்றி கடைஞ்சா, இதில் போத்துக்கேயரின் மதமாற்றம் மற்றும் கோவில் அழிப்பு, நாலூர் வரலாறு  பற்றி ஓரளவு தெரிந்திருந்தாலும், நீங்கள் சொன்ன வாய் வழி கதை சுவாரசியமாகவும் புதிதாகவும் இருந்தது. இவற்றை பற்றி மேலதிகமாக அறிவதற்கு ஏதாவது இணையவழி புத்தகங்களோ கட்டுரைகளோ இருக்கிறதா? 

 

https://en.calameo.com/read/001179320cd352221bc41

இந்த புத்தகத்தை வாசித்து பாருங்கள்.

ஆனாலும், இந்த நூலில் கண்ணனுக்கு தெரியும் புராதன கட்டிடங்கள், வீதிகள், வளவுகளை வைத்தும், சரித்திர குறிப்பில் உள்ள பெயர்களை வைத்தும், கட்டிட தோற்றங்கள், கலைகளை வைத்தும், அனுமான  அடிப்படையில் எழுதப்பட்டு உள்ளது.

உ.ம். ஆக இந்த நூலில் சரசுவதி மகால் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று நினைக்கிறன். ஏன், நெல்லூர் (இது ஆரம்ப   போத்துகேய குறிப்புகளில் உள்ளதாக இப்பொது அறிகிறேன்) பற்றியே ஓர் குறிப்பும் இல்லை.

ஆனாலும், பழைய நல்லூர் (நெல்லூர்), மற்றும் ராஜதானி, நகர்ப்புறம் போன்றவற்றை எந்த அளவில் இருந்தது என்பதை (பிளைகள் இருந்தாலும்) குறிப்பாக எழுத்து வடிவில் உள்ளது.  

இன்னொரூ உ.ம் . ஆக, , இப்போதும் பராமரிப்பு இன்றி சிதைவடைந்து, முன்னைய தோற்றத்துடன் இருக்கும் மந்திரி மனை, சட்ட நாதர் கோயில் அருகில் இருக்கிறது என்பதை இந்த நூல் சொல்லவில்லை.

இதை இங்கே முன்பு சொல்லிய நினைவு இருக்கிறது, ஆனாலும்  குறிப்புக்காக சொல்கிறேன்.

சட்டநாதர் சிவன் (கோயில்) என்பது காரணப் பெயர் (பலர் சட்டை நாதர் என்று அழைக்கிறார்கள், அநேகமாக அந்த இடத்துக்கு புதிதாக வந்தவர்கள் மற்றும் வேறு இடத்தை சேர்ந்தவர்கள், அது தவறு.).

பெயறில் இருக்கும் அர்த்தமே அதன் காரணம் - சட்ட (சட்ட (ஆட்சியின்)) நாதர் (தலைவன்). யாழ் இராச்சியம் இருந்தவரை, மந்திரி நாளாந்தம் சட்டக் கோவையை சட்ட நாதர் கோயிளுக்கு எடுத்து  சென்று, (நீதி வழுவா) ஆட்சிக்கும், இராச்சியத்துக்கும் இறை அருள், aasiyum வேண்டி,  பூசை நடைபெற்று, அதன் பின்பே நாளாந்த நிர்வாகம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நாம் அறியும், rule of law இன், அப்போதைய வடிவம்.    

அதாவது, இத கட்டிடங்கள், வீதிகள், சிதைபாடுகள் சொல்லும் சரித்திர நிகவுகள், கதைகள் போன்றவை, அந்த இடத்தில சந்ததி, சந்ததியாக  இருக்காவிட்டால் தெரியாது. காரணம், பொதுவாக, சந்ததி, சந்ததியாக, வாய்வழி வரலாறாக சொல்லப்படுவது.

 

=======================================

 

https://en.calameo.com/read/001179320cd352221bc41

இந்த புத்தகத்தை வாசித்து பாருங்கள். அனால், இந்த நூலின் வெளியீட்டின் பின் வேறு சில நோக்கங்களும் (vested interests) இருக்கலாம். முக்கியமாக, இப்பொது நெதர்லாந்தில் இருக்கும்,, தாம் அன்றைய ஆட்சி பரம்பரையின் வாரிசுகள் என்று கோருபவர்களால்.
 
ஆனாலும், இந்த நூலில் கண்ணனுக்கு தெரியும் புராதன கட்டிடங்கள், வீதிகள், வளவுகளை வைத்தும், சரித்திர குறிப்பில் உள்ள பெயர்களை வைத்தும், கட்டிட தோற்றங்கள், கலைகளை வைத்தும், அனுமான  அடிப்படையில் எழுதப்பட்டு உள்ளது.

உ.ம். ஆக இந்த நூலில் சரசுவதி மகால் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று நினைக்கிறன். ஏன், நெல்லூர் (இது ஆரம்ப   போத்துகேய குறிப்புகளில் உள்ளதாக இப்பொது அறிகிறேன்) பற்றியே ஓர் குறிப்பும் இல்லை.

ஆனாலும், பழைய நல்லூர் (நெல்லூர்), மற்றும் ராஜதானி, நகர்ப்புறம் போன்றவற்றை எந்த அளவில் இருந்தது என்பதை (பிழைகள் இருந்தாலும்) குறிப்பாக எழுத்து வடிவில் உள்ளது.  

இன்னொரூ உ.ம் . ஆக, , இப்போதும் பராமரிப்பு இன்றி சிதைவடைந்து, முன்னைய தோற்றத்துடன் இருக்கும் மந்திரி மனை, சட்ட நாதர் கோயில் அருகில் இருக்கிறது என்பதை இந்த நூல் சொல்லவில்லை.

இதை இங்கே முன்பு சொல்லிய நினைவு இருக்கிறது, ஆனாலும்  குறிப்புக்காக சொல்கிறேன்.

சட்டநாதர் சிவன் (கோயில்) என்பது காரணப் பெயர் (பலர் சட்டை நாதர் என்று அழைக்கிறார்கள், அநேகமாக அந்த இடத்துக்கு புதிதாக வந்தவர்கள் மற்றும் வேறு இடத்தை சேர்ந்தவர்கள், அது தவறு.).

பெயறில் இருக்கும் அர்த்தமே அதன் காரணம் - சட்ட (சட்ட (ஆட்சியின்)) நாதர் (தலைவன்). யாழ் இராச்சியம் இருந்தவரை, மந்திரி நாளாந்தம் சட்டக் கோவையை சட்ட நாதர் கோயிலுக்கு எடுத்து  சென்று, (நீதி வழுவா) ஆட்சிக்கும், இராச்சியத்துக்கும் இறை அருள் வேண்டி,  பூசை நடைபெற்று, அதன் பின்பே நாளாந்த நிர்வாகம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நாம் அறியும், rule of law இன், அப்போதைய வடிவம்.    
 

அதாவது, இத கட்டிடங்கள், வீதிகள், சிதைபாடுகள் சொல்லும் சரித்திர நிகவுகள், கதைகள் போன்றவை, அந்த இடத்தில சந்ததி, சந்ததியாக  இருக்காவிட்டால் தெரியாது. காரணம், பொதுவாக, சந்ததி, சந்ததியாக, வாய்வழி வரலாறாக சொல்லப்படுவது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kadancha said:

 

https://en.calameo.com/read/001179320cd352221bc41

இந்த புத்தகத்தை வாசித்து பாருங்கள்.

ஆனாலும், இந்த நூலில் கண்ணனுக்கு தெரியும் புராதன கட்டிடங்கள், வீதிகள், வளவுகளை வைத்தும், சரித்திர குறிப்பில் உள்ள பெயர்களை வைத்தும், கட்டிட தோற்றங்கள், கலைகளை வைத்தும், அனுமான  அடிப்படையில் எழுதப்பட்டு உள்ளது.

உ.ம். ஆக இந்த நூலில் சரசுவதி மகால் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று நினைக்கிறன். ஏன், நெல்லூர் (இது ஆரம்ப   போத்துகேய குறிப்புகளில் உள்ளதாக இப்பொது அறிகிறேன்) பற்றியே ஓர் குறிப்பும் இல்லை.

ஆனாலும், பழைய நல்லூர் (நெல்லூர்), மற்றும் ராஜதானி, நகர்ப்புறம் போன்றவற்றை எந்த அளவில் இருந்தது என்பதை (பிளைகள் இருந்தாலும்) குறிப்பாக எழுத்து வடிவில் உள்ளது.  

இன்னொரூ உ.ம் . ஆக, , இப்போதும் பராமரிப்பு இன்றி சிதைவடைந்து, முன்னைய தோற்றத்துடன் இருக்கும் மந்திரி மனை, சட்ட நாதர் கோயில் அருகில் இருக்கிறது என்பதை இந்த நூல் சொல்லவில்லை.

இதை இங்கே முன்பு சொல்லிய நினைவு இருக்கிறது, ஆனாலும்  குறிப்புக்காக சொல்கிறேன்.

சட்டநாதர் சிவன் (கோயில்) என்பது காரணப் பெயர் (பலர் சட்டை நாதர் என்று அழைக்கிறார்கள், அநேகமாக அந்த இடத்துக்கு புதிதாக வந்தவர்கள் மற்றும் வேறு இடத்தை சேர்ந்தவர்கள், அது தவறு.).

பெயறில் இருக்கும் அர்த்தமே அதன் காரணம் - சட்ட (சட்ட (ஆட்சியின்)) நாதர் (தலைவன்). யாழ் இராச்சியம் இருந்தவரை, மந்திரி நாளாந்தம் சட்டக் கோவையை சட்ட நாதர் கோயிளுக்கு எடுத்து  சென்று, (நீதி வழுவா) ஆட்சிக்கும், இராச்சியத்துக்கும் இறை அருள், aasiyum வேண்டி,  பூசை நடைபெற்று, அதன் பின்பே நாளாந்த நிர்வாகம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நாம் அறியும், rule of law இன், அப்போதைய வடிவம்.    

அதாவது, இத கட்டிடங்கள், வீதிகள், சிதைபாடுகள் சொல்லும் சரித்திர நிகவுகள், கதைகள் போன்றவை, அந்த இடத்தில சந்ததி, சந்ததியாக  இருக்காவிட்டால் தெரியாது. காரணம், பொதுவாக, சந்ததி, சந்ததியாக, வாய்வழி வரலாறாக சொல்லப்படுவது.

 

=======================================

 

https://en.calameo.com/read/001179320cd352221bc41

இந்த புத்தகத்தை வாசித்து பாருங்கள். அனால், இந்த நூலின் வெளியீட்டின் பின் வேறு சில நோக்கங்களும் (vested interests) இருக்கலாம். முக்கியமாக, இப்பொது நெதர்லாந்தில் இருக்கும்,, தாம் அன்றைய ஆட்சி பரம்பரையின் வாரிசுகள் என்று கோருபவர்களால்.
 
ஆனாலும், இந்த நூலில் கண்ணனுக்கு தெரியும் புராதன கட்டிடங்கள், வீதிகள், வளவுகளை வைத்தும், சரித்திர குறிப்பில் உள்ள பெயர்களை வைத்தும், கட்டிட தோற்றங்கள், கலைகளை வைத்தும், அனுமான  அடிப்படையில் எழுதப்பட்டு உள்ளது.

உ.ம். ஆக இந்த நூலில் சரசுவதி மகால் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று நினைக்கிறன். ஏன், நெல்லூர் (இது ஆரம்ப   போத்துகேய குறிப்புகளில் உள்ளதாக இப்பொது அறிகிறேன்) பற்றியே ஓர் குறிப்பும் இல்லை.

ஆனாலும், பழைய நல்லூர் (நெல்லூர்), மற்றும் ராஜதானி, நகர்ப்புறம் போன்றவற்றை எந்த அளவில் இருந்தது என்பதை (பிழைகள் இருந்தாலும்) குறிப்பாக எழுத்து வடிவில் உள்ளது.  

இன்னொரூ உ.ம் . ஆக, , இப்போதும் பராமரிப்பு இன்றி சிதைவடைந்து, முன்னைய தோற்றத்துடன் இருக்கும் மந்திரி மனை, சட்ட நாதர் கோயில் அருகில் இருக்கிறது என்பதை இந்த நூல் சொல்லவில்லை.

இதை இங்கே முன்பு சொல்லிய நினைவு இருக்கிறது, ஆனாலும்  குறிப்புக்காக சொல்கிறேன்.

சட்டநாதர் சிவன் (கோயில்) என்பது காரணப் பெயர் (பலர் சட்டை நாதர் என்று அழைக்கிறார்கள், அநேகமாக அந்த இடத்துக்கு புதிதாக வந்தவர்கள் மற்றும் வேறு இடத்தை சேர்ந்தவர்கள், அது தவறு.).

பெயறில் இருக்கும் அர்த்தமே அதன் காரணம் - சட்ட (சட்ட (ஆட்சியின்)) நாதர் (தலைவன்). யாழ் இராச்சியம் இருந்தவரை, மந்திரி நாளாந்தம் சட்டக் கோவையை சட்ட நாதர் கோயிலுக்கு எடுத்து  சென்று, (நீதி வழுவா) ஆட்சிக்கும், இராச்சியத்துக்கும் இறை அருள் வேண்டி,  பூசை நடைபெற்று, அதன் பின்பே நாளாந்த நிர்வாகம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நாம் அறியும், rule of law இன், அப்போதைய வடிவம்.    
 

அதாவது, இத கட்டிடங்கள், வீதிகள், சிதைபாடுகள் சொல்லும் சரித்திர நிகவுகள், கதைகள் போன்றவை, அந்த இடத்தில சந்ததி, சந்ததியாக  இருக்காவிட்டால் தெரியாது. காரணம், பொதுவாக, சந்ததி, சந்ததியாக, வாய்வழி வரலாறாக சொல்லப்படுவது.

நன்றி, நீங்கள் எழுதியவற்றையும், இணைத்ததையும் பொறுமையாக வாசிக்கவேண்டும். இதில் நீங்கள் நிறைய ஆராட்சி செய்திருப்பீர்கள் போலுள்ளது. எங்களுக்கு தெரியாமல் முன்பு நிறைய விடயங்கள் நடந்துள்ளன😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நீர்வேலியான் said:

இதில் நீங்கள் நிறைய ஆராட்சி செய்திருப்பீர்கள் போலுள்ளது.

இதில் என்னை பொறுத்தவரையில், ஒரு ஆராய்வும்  (தேவை) இல்லை.

சொன்னது போல, இந்த கதைகளை வாய்  வழியாக மிக சிறு வதில் இருந்தே பலரிடம் இருந்து கேட்டு அறிந்ததும், அந்த இடத்தில் வளர்ந்த படியால், அநேகமாக் அனைத்து இடங்களையும் பார்த்தே வளர்ந்தேன்.

உ.ம். இப்பொது உள்ள மந்திரி மனைக்குள் நான் பல தடவைவை சென்று வந்து இருக்கிறேன். 

அதையும் சேர்த்து பின்பு விளக்கமாக எழுதுகிறேன். 

ஆனால், நூலை வாசித்து இருக்கிறேன், இது பொதுவான அனுமனை அடிப்படையில் எழுதப்பட்டு உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யமுனாரியின் படத்தில் வெளிப்புறத்தில் தெரியும் செங்கற்கள், சிதைவை சரி செய்ய பின்பு  கட்டப்பட்டவை. அனால், அதன் உள்ளே இருக்கும் ஒவ்வொரு கல்லும், தனித்தனியே செவ்வக  கருங்கல் குற்றிகள். படத்தில் அவற்றின் பிரமாண்ட அளவு தெரியவில்லை. நேரடியாக பார்க்கும்  போதே  அதன் பிரமாண்டம் தெரியும், குறிப்பாக கோடையில் ஓரளவு வற்றும் போது அதன் ஆழம், கற்களின் பிரமாண்டம் தெரியும்.

இந்த யமுனாரி  என்பது, அரசியும், அரச குமாரிகளும் நீராடுவதற்காக (யமுனை ஆற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீர் விட்டு) கட்டடப்பட்ட ஏறி எனும் ஒரு வாய்வழி  கதை இருக்கிறது. இது இப்பொது ஆங்காங்கே இன்டர்நெட் (சுற்றுலா) வரலாற்று குறிப்புக்களிலும் இருக்கிறது. (யமுனை ஆற்று நீர் விட்டு கட்டிய கதை, வாய்வழியாகவே தெரியும்.)

உ.ம். ஆக கோடையில், இப்போதுள்ள நல்லூர் கேணியின் அடிமட்டம் தெரியும். ஆனல் யமுனாரி அப்படி ஒருபோதுமே (நான் அறிந்த, பார்த்த வரையில்) இல்லை . ஏனெனில் யாமுனறி பகுதியில் சிறுவயதில் புதினம் பார்ப்பது. அப்போது (70, 80, 90 களில், அதற்கு முன்னரும் இருந்து இருக்கும்)   ஒரு நடை] பாதை இருந்தது. அது, யமுனா வீதியயில் இருந்து தொடங்கி , கிட்டு பூங்காவுக்கு, , St  James  Church  க்கும் இடையில். செம்மணி வீதியில் மிதக்கும். மிதக்கும் என்பது ஏனெனில், ஓரளவு பதிந்து பின் மேல் ஏறும் தரையமைப்பை  கொண்டது யமுனாரி இருக்கும் நிலப்பகுதி.      

ஓர் நிலக்கீழ் பாதை யமுனாரிக்கும், அரச மாளிகைக்கும் (இப்படி அரச மாளிகை என்று சொல்பவர்கள் குறிப்பது, இப்பொது இருக்கும் மந்திரி மனை)  இருந்ததாகவும், அதை பாவித்தே அரசியும், அரச குமாரிகளும் யமுனாருக்கு சென்று நீராடி வந்ததாக ஓர் கதை இருக்கிறது.

அனால், அரசியும், குமரிகளும் நிலக்கீழ் பாதையிது யாமுனறி சென்று நீராடி வந்த கதை, யதார்த்தமாக இல்லை.


ஒன்று யமுனாரி, பழைய நல்லூர்  கோயிலின் கேணி. மற்றது, யமுனாரி  இருக்கும் நிலப்பரப்பு இப்போதும் செட்டியா தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது. இந்த செட்டியா தோட்டம் என்பது வண்ணை வைத்தீஸ்வரர் கோயிலுலுக்கு தொடர்பு  உடையது என்பது இப்போதும் பலருக்கு தெரியும். செட்டியா தோட்டம் பற்றியும் வலரேறு இருக்கிறது. பின்பு அதை பற்றி பார்க்கலாம்.

அநேகமாக போத்துக்கேயரால் அல்லது அன்று சங்கிலிக்கு  (சங்கலியன் 2) எதிராக இருந்தவர்களால் இந்த கதை   பரப்பப்பட்டு   இருந்திருக்க வேண்டும். போத்துக்கேயரால், நீராடும் தடாகமாக பாவிக்கப்பட்டு இருக்கலாம்.   

 படத்தை இணைத்து விளங்கப்படுத்தினால் தான், அரசியும், அரச குமாரிகளும் நித்தடி பாதை பாவித்து நீராடி இருக்க முடியாது என்பது புரியும்.

ஆனால், முழு  இராட்சியமுமே, அதாவது இராச்சிய நிலம் முழுவதும் கோயிலில்களுடன் சம்பந்தப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். 


தொடரும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மற்ற திரியில் சொன்னதை இடையிட்ட பதிவாக இந்த தியரியில்  பதியப்படுகிறது. 

நல்லூரை எந்த தமிழரின் வரலாற்றில் இருந்தும் பிரித்துவிடமுடியாது.

ஏன், முஸ்லிம்களின் வரலாற்றில் இருந்தும் பிரிக்க முடியாது.

நல்லோரின் ஆதி மூலத்தில் இருக்கும் இடத்தில , ஓர் இஸ்லாமிய சமயக் குறியீடு இருந்தது என்பது அந்த இடத்தில சந்திதியாக வேர் விட்டு இருந்தவர்களுக்கு தெரியும்..

இப்போதைய நல்லூர் கோயிலில் இருக்கும் இடத்துக்கு  குருக்கள் வளவு என்பததே அதன் வரலாற்று பெயர்.

அதில் கோயில் கட்ட முதல் அதில் முஸ்லிம்கள் இருந்தனர், முஸ்லீம் குருவானவரின் சமாதியும் அல்லது இஸ்லாமிய குறியீடு  இருந்தது என்பது, நான் முதல் சொன்னது போல,  அந்த இடத்தில சந்திதியாக வேர் விட்டு இருந்தவர்களுக்கு தெரியும். (இப்போதைய, உள்ளோர் நிர்வாகம் அதை மறைக்க முற்படுகிறது, நல்லோர் நிர்வாகமும் இதை ஏற்றகிறதா என்பது தெரியவில்லை.)

கிந்தியா எம்மை அழித்தாலும், இதை அங்கேயுள்ள துணை தூதரகம் இணையத்தில் பதிந்து வைத்துப் உள்ளது வரவேற்கப்படவே வேண்டும்,


இஸ்லாமிய குறியீடு அகற்றப்பட்டதாக சொல்கிறது தூதரகம், நான் அறிந்த வரையில் அப்படி நடக்கவில்லை.

ஆதி மூலத்துக்கு பின் சுவரில், எந்த ஒரு விக்கிரகமும்   இல்லாத போதும் அதை வணக்கும் வழக்கம் இருக்கிறது அங்கு உள்ளவர்கக்லால், இப்போதைய தலைமுறைக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

இததற்கான இப்போதைய சான்று (முஸ்லிம்கள் இருந்தது என்பதற்கு), நல்லூர் கோயில் திருவிழாவின் போது, தற்காலிக வியாபர கடைகள், யிரவர் வாசலுக்கு முன்னால், தேர் முட்டிக்கு எதிர்ப்புறமாக,     நல்லூர் கோயிலின் முன்னால் போடுவதத்திற்கு, குறிப்பிட்ட முஸ்லிம்ம் குடும்பக்களிற்கு மட்டுமே கொடுக்கப்படும்.

இப்பொது கடை போடுபவது, வழக்கொழிந்து போய் விட்டது, நல்லூர் நிர்வாகமும், உளூர் நிர்வாகமும் சேர்ந்து தடுத்து விட்டனர்.    

முஸ்லிம்களுக்கு கூட, அப்போதைய இராச்சியத்தின் அரசர்களே, முஸ்லிம்கள் அகதியாக வந்த போது அடைக்கலம் கொடுத்தனர். சிங்கள மன்னர்கள் மறுத்து விட்டனர். இதுவே காரணம், முஸ்லிம்கள் மூன்று இடங்களில் செறிந்து இருப்பதற்கு.

தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாய்வழி கதை இருக்கிறது, அந்த நேரத்தில் இருந்த முஸ்லிம்கள், இப்போதுள்ள நல்லூர்  கோயிலை கட்டுவதற்கு  பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக. 

அவர்களை வெளியேற்றுவதற்கு, அவர்கள் பாவித்த கிணற்றில் பன்றித் தலைகள் இரவோடு இரவாக போடப்பட்டதாக.

அனால், அந்த நிலம் கோயில் காணி, அன்னைய அரசு முஸ்லிம்களுக்கு பாவிக்க கொடுத்து இருந்தது. முஸ்லிம்கள், அத தமது நிரந்தர சொத்தாக ஆக்குவதற்கு முயன்று இருக்கிறார்கள் போலுள்ளது. 

நல்லூர் கோயிலின் முன்புறமாக ஆறுமுக நாவலர் சிலை இருந்த போது (ஏறத்தாழ கேணிக்கு, சமாந்திரமாக, நல்லூர் கோயிலின் முன்புறம், இப்பொது மறைத்து சுவர் எழுப்பப்பட்டு விட்டது, நாவலர் சிலை அகற்றபிசட்டுவிட்டது ). இப்பொது அதில் யோகா நிலையசம் இருக்கிறது  என்று google காட்டுகிறது.


அந்த இடத்தை ஒற்றி   பருத்தித்துறை வீதி வளைந்து செல்லும் (இப்போதைய ஆறுமுக சாமி வாசல் கோபுரம்). பருத்தித்துறை வீதிக்கு மற்ற பக்கம் ஓர் காடு (அப்போது) படித்த நிலப் பகுதி இருந்தது. அதில் ஓர் தூர்ந்த ,கிணறும் இருந்ததாகவும் (மூடப்பட்ட சிதை பாடுகளை பார்த்து இருக்கிறேன்), அதிலேயே இந்த பன்றித்தலைகள் போட்டதாகவும், என்னுடைய உறவில் பல வயது முதிந்தவர்கள் (அவர்களும் கேள்விப்பட்டது, எல்லோரும் இப்போது இல்லை ) சொல்லி அறிந்து இருக்கிறேன்.

தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில், முத்திரைச் சந்தியின் வரலாற்று பெயர் முத்திரைச் சந்தை.

அது காரணப் பெயர், அன்றைய இராச்சியத்தின்  வரியுடன் தொடர்பு பட்டது.

அந்த சந்தையில் (இப்போது சந்தி) வைத்து இராச்சியத்துக்குள் வாங்க, விற்க அனுமதிக்கப்பட்ட பொருட்களுக்கு  அரச முத்திரை (royal seal) பொறிக்கப்பட்டுள்ளது, வரியும் அறவிடப்பட்டது. 

முத்திரைச்  சந்தி (முத்திரைச் சந்தை), ராஜதானியின் ( அப்போதைய அரச  நிர்வாகம்   
) முத்திரை சந்தையை பார்வையில்  வைவைப்பதற்கான தூரத்தில் இருந்ததாக (அது இப்போதும் பார்த்து ஊகிக்க கூடியதாக உள்ளது), என்னுடைய பல வயது முதிர்ந்தவர்கள் (அவர்களுக்கு அவர்களின் சந்ததி வழியாக சொல்லி )  சொல்லி கிறார்கள்.  

தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன் னைய பகுதியின் தலைப்பாக சொல்லி இருக்க வேண்டியது. 

இப்போதைய நல்லூரை (அப்போதைய நெல்லூரை) பற்றி சொல்லும் போது, முத்திரைச் சந்தி பற்றியும் சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு நல்லூரில் முஸ்லீம் சிறுவர்கள் கற்பூரம், ஊதுவத்தி எல்லாம் விற்றுக் கொண்டிருந்தவர்கள்.....!

கோயிலின் பின்பக்கமாக (பிள்ளையார் கோவிலுக்கு முன்) மதிலில் ஒரு சிறிய கதவு இருந்ததாக ஞாபகம்.......!

கோவில் வீதியும் கூட பழனியாண்டவர் கோயிலும் கேணியும் ஒருபக்கம் நடுவில் வீதி அடுத்து கோவில் என்று இருந்தது.....!

பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஏழெட்டு முஸ்லீம் பிள்ளைகள் சேர்ந்து படிப்பார்கள்....அப்போது யாருக்கும் மதம் பிடித்திருக்கவில்லை......நாசமாப்போன அரசியல் வந்து மக்களையும் கெடுத்து நாட்டையும் கெடுத்துப் போட்டுது......!  

நல்ல தகவல்கள்....தொடருங்கள் கடைஞ்சா......!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

முன்பு நல்லூரில் முஸ்லீம் சிறுவர்கள் கற்பூரம், ஊதுவத்தி எல்லாம் விற்றுக் கொண்டிருந்தவர்கள்.....!

கோயிலின் பின்பக்கமாக (பிள்ளையார் கோவிலுக்கு முன்) மதிலில் ஒரு சிறிய கதவு இருந்ததாக ஞாபகம்.......!

கோவில் வீதியும் கூட பழனியாண்டவர் கோயிலும் கேணியும் ஒருபக்கம் நடுவில் வீதி அடுத்து கோவில் என்று இருந்தது.....!

பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஏழெட்டு முஸ்லீம் பிள்ளைகள் சேர்ந்து படிப்பார்கள்....அப்போது யாருக்கும் மதம் பிடித்திருக்கவில்லை......நாசமாப்போன அரசியல் வந்து மக்களையும் கெடுத்து நாட்டையும் கெடுத்துப் போட்டுது......!  

நல்ல தகவல்கள்....தொடருங்கள் கடைஞ்சா......!  🌹

ஆம், திருவிழா தவிர்ந்த காலத்தில் அவர்கள் கற்பூரம், ஊதுபத்தி விற்ப்பார்கள். தீர்வல்ல காலத்தில், ஓரளவு பெரிதாக, அந்த காலத்து  விளையாட்டுப் பொருட்கள் ( காற்றாடி, அம்மம்மா குழல்), மற்றும் கற்பூர சட்டி , பட்டு சீலை போன்றவையும் விற்றபரர்கள்,

இது அவர்களின் உரிமையாக நல்லூர் (கோயில் கட்டப்பதில் இருந்து)  எழுதப்படாத உரிமையாக வழங்கி இருந்தது என்பது,  வயது முதிர்ந்தவர்கள் சொல்லி  நான் அறிந்தது,  

ஆம், கேணிக்கும் (பழனி ஆண்டவர் இருப்பது), ஆறுமுக சாமி வாசல் (பிரதான கோயில் கட்டிடத்திற்கும்) இடையில் வீதி  இருந்தது.

வருடாந்த காவடி எனது குடும்பத்தின் தலையாய நல்லூர் கடமைகளில் ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kadancha said:

நல்லூர் கோயிலின் முன்புறமாக ஆறுமுக நாவலர் சிலை இருந்த போது (ஏறத்தாழ கேணிக்கு, சமாந்திரமாக, நல்லூர் கோயிலின் முன்புறம், இப்பொது மறைத்து சுவர் எழுப்பப்பட்டு விட்டது, நாவலர் சிலை அகற்றபிசட்டுவிட்டது ). இப்பொது அதில் யோகா நிலையசம் இருக்கிறது  என்று google காட்டுகிறது.

நாவலர் மணிமண்டபம் என்றுதான் அதற்கு பெயர் என நினைக்கிறேன். அதே போல கிணறும் உள்ளது. நீங்கள் கூறும் கிணறு உள்ள இடம் இதுவென நினைக்கிறேன்.

5-E3-E03-A6-7394-4341-855-E-FFFF644895-B

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நாவலர் மணிமண்டபம் என்றுதான் அதற்கு பெயர் என நினைக்கிறேன். அதே போல கிணறும் உள்ளது. நீங்கள் கூறும் கிணறு உள்ள இடம் இதுவென நினைக்கிறேன்.

5-E3-E03-A6-7394-4341-855-E-FFFF644895-B

 

இதில் உள்ள கிணறு, நாவலர் சிலை அருகில் இருந்த கிணறு போல தெரிகிறது.

நான் சொல்வது, பருத்தித்துறை வீதியின் மறுபக்கம். அதில் அந்த நேரம் வீடுகள் இல்லை.

google map இல் பார்க்கும் பொது பெரிய மரங்கள் இருப்பதாக தெரிகிறது.முன்பு கண்ணை மறைக்கும் பற்றைக்காடு,இப்பொது பெரிய்ய மரங்களுடன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2022 at 08:30, Kadancha said:

இதற்கு, வாய் வழி வரலாறு தெரிய வேண்டும். சந்ததி, சந்ததியாக ஓர் இடத்தில்  இருந்திருக்காவிட்டட்டால், இது எவருக்குமே தெரிய வாய்ப்பில்லை.

போத்துக்கேயர் வருகையுடன் - நல்லூர் (உண்மையில் நெல்லூர், செம்மணி வயலில் விளையும் செம்மணி போன்ற அரிசியை விளைவிக்கும் நெற்கதிர்களால் உருவாக்கிய காரணப் பெயர்) மற்றும் யாழ் நகரை அண்டிய பகுதிகளை தவிர, மற்ற ஊர்களில் பரவலாக குடிமக்கள், போத்துக்கேயரின் ஒரு பக்கம் வரி கொடுமை, மற்றையது விவசாய விளைச்சல்கள் பறிப்பது,  முக்கியமாக கத்தோலிக்கம் மதத்துக்கு மாற்றம், சைவ முறை புழக்கத்தில் இருந்தால் தண்டனை என்பன, பாரிய குடிபெயரவுக்கு வழிவகுத்தது. இப்படி குடிபெயர்வு பொதுவாக வன்னிக்கே நடந்தது.

முக்கியமாக நல்லூர் ராஜதானி மற்றும் இப்போதைய யாழ் நகரை அண்டிய பகுதிகளிகல், இந்த பகுதிகளில், முக்கியமாக ராஜதானி பகுதிகளில் இருந்த அப்போதைய ஆட்சியாளர் குடும்பங்கள்  கத்தோலிக்கத்துக்கும் மாறியமையால், முதலில் மிகவும் அழிவு இருந்தாலும்  இடப்பெயர்வு பெருமளவில் நடக்கவில்லை. ஆனல், போத்துக்கேயரை எதிர்த்தவர்கள் குடும்பமாக நாடு கடத்தப்பட்டது நடந்தது.

போத்துக்கேயர் அனறைய கோயிகளை உடைத்து, அழித்து அதில் இருந்த கருங்கல் பாளங்களை கொண்டே யாழ் கோட்டையை நிர்மாணித்தார். இப்படியாக உடைத்த கருங்கற்களை பொத்துகேயர் வண்டிலில் கொண்டு சென்றபோது, எனது மூதாதையர் ஆத்திரத்தால் கல் எறிந்து, அவர்களின் குடும்பம் நாடுகடத்தப்பட்டதை சந்ததி, சந்தியாக அறிந்து இருக்கிறோம்.  

மற்றது,  நல்லூர் ராஜதானி மற்றும் இப்போதைய யாழ் நகரை அண்டிய பகுதிகளிகல், போத்துகேயக்கருக்கு தொழிலாளர் வேண்டி இருந்தமையால், இந்த பாரிய குடி பெயர்வு நடக்கவில்லை.

நான் நினைக்கிறன், அநேகமாக இப்போது கோட்டைகள் அல்லது அப்படியான சிதைபாடுகளுக்கு சுற்றி உள்ள இடங்களில் இருந்து, பெரும்பாலும் குடிபெயர்வு நடக்கவில்லை. ஏனெனில், வணிகம், வர்த்தகம், போத்துக்கேயருக்கு வேலை செய்வதத்திற்கு தொழிலாளர் தேவை பொன்னர காரணங்கள். அத்துடன் அப்படியான இடங்களில் தான், அப்போதைய ஆட்சியாளர், நிர்வாகம் செய் தோர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோனோர் கத்தோலிக்க மதத்துக்கு மாறியதால், போத்துக்கேயர் அவர்களை கொடூரமாக நடத்தவில்லை.

குடி பெயர்வு பாரிய அளவில் நடக்காத இடங்களில், இப்படியான குடும்பகளின் பெயர் சந்தித்த சந்ததியாக வழங்கி வந்தது, இப்பொது வழக்கொழிந்து வருகிறது.

ஆனாலும், என்னுடைய ஆச்சி (அப்பாவின் அம்மா), இப்படியான குடும்பங்கள் பல இடங்களலும் இருந்ததாதாக, எனது ஆச்சியின் சந்ததி வழியாக, ஆச்சியின் தாய் தந்தையர் சொன்னதாக மற்றும் ஆச்சியின் பாட்டன், ப்படி சொன்னதாக , இப்படியான கதைகள் வரும் பொது சொல்லி உள்ளார்.

இதை வாய் வழி வரலாறு - எந்தவொரு சரித்திர குறிப்பிலும்  இருக்காது.

இதனால் தான், சந்ததி, சந்ததி  வழியாக ஒரே இடத்தில் (உங்களது அல்லது எபரினதும்) குடும்பங்கள்    வேர் விட்டு இருந்தால் ஒழிய, இது தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

உ.ம். இங்கு ஒரு சில முறை சொல்லி இருக்கிறேன், சரசுவதி மகால் எனும் நூலகமும், அருங்காட்சியகமும், அன்றைய நல்லூர் (நெல்லூர் அப்போது) ராஜதானி நகர் புறத்தில் இருந்ததாக. இது, இங்கு எவருக்குமே தெரியாது; சிலர் மறுத்தும் இருந்தனர். அதை போத்திகேயர் கொளுதியதால் தான், எம்மிடம் மகாவம்சம் போன்ற வரலாற்று குறிப்பு எழுத்து வடிவில் இல்லை.   

மற்றது இப்பதியான குடும்பங்கள், மதம் மாறி இப்பொது கதோலிக்கர்  ஆக இருபதற்கும் மிக கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

அனால், இப்படியான குடும்பங்கள், அதாவது இராச்சியத்துக்குள் (நிர்வாகம் மற்றும் ராஜதானி) செல்லக் கூடிய, அனுமதி உள்ள  எல்லா சாதிகளிலும் இருந்திருக்க வேண்டும். (குறிப்பிட சாதி மட்டும் அல்ல).  

நான் குறிப்பாக சொல்வது,  நல்லூர் இராசதானியை அண்டிய பகுதி (முக்கியமாக, அன்றைய இராஜ தானியின் நகர் புறம்).

காம சிற்பங்கள் இருந்த எல்லா கோயிகளும் (அநேகமாக அவை  பெரிய கோயிகள்)  போத்துக்கேயரால் அழிக்கப்பட்டு விட்டன. இப்பொது இருப்பவை எல்லாம், ஒல்லாந்தர் காலத்தில் பெரும்பாலும் அதே இடத்தில்  கட்டப்பட்ட கோயில்கள்.

நல்லூர் அதன் உண்மையான இடத்தில் போத்துக்கேயர் St James church ஐ (முத்திரை சந்தியில் இருந்து பார்க்கும் போது, செம்மணி வீதியில் இருக்கும் St JamesChurch தெரியும்)  கட்டிவிட, நல்லூர் கோயில்  இப்போதைய இடத்தில கட்டப்பட்டு விட்டது.

இந்த படம், பழைய நல்லூர் (நெல்லூர்) கோயிலின் கேணி. இப்போதும், யமுனாரி என்றே அழைக்கப்படுகிறது.

2017-09-22.jpg?fit=1280,695&ssl=1

 

 

இதை கொஞ்சம் சரி பாருங்கள் ..
எமது பழைய கோவில்கள் எல்லாம் ஊரி கல்லினால் கட்டபட்டவை 
இவை மிகவும் பலமான கற்கள் எளிதில் உடைக்க முடியாதது 

கோட்டை கற்களை நான் பார்த்து இருக்கிறேன் 
அவை கருங்கல்லும் இல்லை ஊரி  கல்லும் இல்லை 

அவற்றை போன்ற கற்களை ஊர்வக்கற்துறை பகுதிகளில் பார்த்து இருக்கிறேன் 

வேறு பகுதிகளில் நான் கண்டதில்லை ... 
இதை ஏதும் ஆராய்ச்சி செய்து நான் எழுதவில்லை 
மேலோட்டொமாக பார்த்ததை மட்டுமே எழுதுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kadancha said:

இதில் உள்ள கிணறு, நாவலர் சிலை அருகில் இருந்த கிணறு போல தெரிகிறது.

நான் சொல்வது, பருத்தித்துறை வீதியின் மறுபக்கம். அதில் அந்த நேரம் வீடுகள் இல்லை.

google map இல் பார்க்கும் பொது பெரிய மரங்கள் இருப்பதாக தெரிகிறது.முன்பு கண்ணை மறைக்கும் பற்றைக்காடு,இப்பொது பெரிய்ய மரங்களுடன். 

ஆறுமுக சுவாமி வாசல் கோபுரத்திற்கு எதிர்புறமாக உள்ள காணியை வேலி போட்டு அடைத்து அந்த காணிக்கு ஒரு சிறிய கோபுரம் மாதிரி ஒன்றை கட்டியிருக்கிறார் போல நினைவு. இம்முறை போன பொழுதுதான் பார்த்தேன். 

அத்துடன் இந்த காணிக்கு ஒரு பக்கம் கோவில் வீதி.. மற்றைய பக்கத்தில் கட்டடங்கள் வந்துவிட்டது

E5-DB35-FB-8213-4498-B0-F7-A0-F803453429

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.