Jump to content

தமிழ்ப் பெண்ணை மணந்த கிரிக்கெட் வீரர்!


Recommended Posts

தமிழ்ப் பெண்ணை மணந்த கிரிக்கெட் வீரர்! (படங்கள்)

பிரபல கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனைத் திருமணம் செய்துள்ளார்.

அவுஸ்திரேலியத் தமிழ்ப் பெண் வினி ராமனை 2017 முதல் காதலித்து வருகிறார் மேக்ஸ்வெல். கடந்த வருடம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த வெள்ளியன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணப் புகைப்படங்களை இருவரும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

இந்தியப் பெண்ணை மணந்த 2 வது ஆஸி. கிரிக்கெட் வீரர், மேக்ஸ்வெல். இதற்கு முன்பு ஆஸி. வீரர் ஷான் டைட், மஷும் சின்ஹா என்கிற இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்தார்.

ஐபிஎல் போட்டியில் மேக்ஸ்வெல்லை ரூ. 11 கோடிக்குத் தக்கவைத்துள்ளது ஆர்சிபி அணி.

http://s3.amazonaws.com/kisukisu/wp-content/uploads/2022/03/22081626/1-300x200.jpg

http://s3.amazonaws.com/kisukisu/wp-content/uploads/2022/03/22081636/2-300x200.jpg

http://s3.amazonaws.com/kisukisu/wp-content/uploads/2022/03/22081647/31-300x200.jpg

» தமிழ்ப் பெண்ணை மணந்த கிரிக்கெட் வீரர்! (படங்கள்) (kisukisu.lk)

maxwell-vini-insta1.jpg

glennmaxwellgirlfriendviniphot.jpeg?RjEZ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்........!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பிராமண பெண்ணாம்.
மாப்பிள்ளை பெரிய இடம் என்ற படியால்…
பூணூல்   போடாதவரை… “ஜாம், ஜாம்” என்று கெட்டி மேளத்துடன்…
திருமணம் செய்து வைத்து விட்டார்கள். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இவர் பிராமண பெண்ணாம்.

பிராமணர் தமிழரா? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பிராமணர் தமிழரா? 😎

கோழி குருடென்றா என்ன சார்

குழம்பு ருசியா இருந்தா சரி.

8 hours ago, தமிழ் சிறி said:

இவர் பிராமண பெண்ணாம்.

 

Link to comment
Share on other sites

வினி ராமன்: கிளென் மேக்ஸ்வெல் கரம்பிடித்த தமிழ் பெண் - இந்தியர்களை மணம் முடித்த மற்ற வீரர்கள் யார்?

 
 

தமிழ்நாட்டு பெண்ணை கரம் பிடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்

பட மூலாதாரம்,GLENN MAXWELL/TWITTER

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது காதலியான வினி ராமன் உடன் மார்ச் 18-ஆம் தேதியன்று திருமணம் நடந்துள்ளது.

அவர்களுடைய திருமண விழாவின் புகைப்படங்களை கிளென் மேக்ஸ்வெல் தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தப் படத்தில், கிளென் மேக்ஸ்வெல், வினி ராமன் இருவரும் தம்பதிகளாக நிற்கின்றனர்.

வினி ராமன் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர். மெர்ல்போர்னில் மருந்தாளராக இருக்கும் அவர், மருத்துவமும் படித்துக் கொண்டிருக்கிறார்.

கிளென் மேக்ஸ்வெல், வினி ராமன் இருவரும் 2017-ஆம் ஆண்டு முதல் பழகி வந்தனர். இருவரும் பல பொது இடங்களில், நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்து கொள்வது வழக்கம்.

 

அவர்கள் பழகத் தொடங்கிய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

திருமண உடையில் கைகளைக் கோர்த்துக் கொண்டிருக்கும் படத்தைப் பதிவிட்டிருந்த மேக்ஸ்வெல், "காதல் என்பது நிறைவுக்கான தேடல், உன்னுடன் நான் அதை முழுமையாக உணர்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

தவறவிட்ட பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

மேக்ஸ்வெல் மார்ச்-ஏப்ரலில் ஆஸ்திரேலியாவின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வாரா என்ற கேள்வி, அவருடைய திருமணம் நிச்சயமான நேரத்தில் எழுந்தது. மேக்ஸ்வெல், வினி ராமன் இருவருக்கும் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திருமணம் நிச்சயமானது. ஆனால், கோவிட்-19 ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களுடைய திருமணத் தேதியைப் பலமுறை மாற்ற வேண்டியிருந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திருமணம் முடிவான போது, பாகிஸ்தான் உடனான தொடரில் பங்கெடுப்பாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் செல்கிறேனா இல்லையா என்பது என் வருங்கால மனைவியின் முடிவைப் பொறுத்து இருக்கலாம். ஏனெனில் அந்த நேரத்தில் என் திருமணம் நடக்க வேண்டும். எனவே அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க நான் சரியான நபர் இல்லை," என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டது.

 

தமிழ்நாட்டு பெண்ணை கரம் பிடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்

பட மூலாதாரம்,GLENN MAXWELL/TWITTER

அதற்கு, அவருடைய வருங்கால மனைவி திருமணத் தேதியை மாற்றுவதைக் கருத்தில் கொள்வாரா என்று கேட்டபோது, "அதற்கு வாய்ப்பே இல்லை. நாங்கள் ஏற்கெனவே இரண்டு முறை தேதியை மாற்றிவிட்டோம்," என்று கூறியுள்ளார்.

தற்போது மெல்போர்னில் இருவருக்கும் நடந்த திருமணத்தால், மேக்ஸ்வெல் பாகிஸ்தான் உடனான ஆஸ்திரேலியாவின் சுற்றுப்பயணத்தைத் தவறவிட்டார்.

அவர்களுடைய திருமணம், நெருங்கிய நண்பர்கள் 350 பேர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ் முறைப்படி அவர்களுடைய திருமணம் மார்ச் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகக் கூறபடுகிறது.

மேக்ஸ்வெல்லை போலவே இந்திய பெண்களை திருமணம் செய்த வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் சிலருடைய குறிப்புகள் இங்கே:

ஷோயிப் மாலிக்

இந்திய பெண்களை திருமணம் செய்துகொண்ட கிரிக்கெட் வீரர்களில் அதிகமாகப் பேசப்படும் பெயர்களில் ஷோயிப் மாலிக்கும் ஒருவர். பாகிஸ்தானின் மூத்த ஆல்-ரவுண்டரான ஷோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

 

ஷோயிப் மாலிக் - சானியா மிர்சா

பட மூலாதாரம்,GETTY IMAGES

முத்தையா முரளிதரன்

இலங்கையின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், இந்தியாவைச் சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தி என்பவரை 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மதிமலர், சென்னையிலுள்ள மலர் மருத்துவமனையின் இயக்குநராக உள்ளார்.

ஹஸ்ஸன் அலி

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹஸ்ஸன் அலியும் இந்திய பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஹஸ்ஸன் 2019-ஆம் ஆண்டு துபாயில் இந்தியாவைச் சேர்ந்த சாமியா அர்ஜுவை மணந்தார்.

ஷான் டெய்ட்

கிளென் மேக்ஸ்வெல்லை போலவே, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மற்றொரு நட்சத்திர கிரிக்கெட் வீரரும் இந்திய பெண்ணை மணந்துள்ளார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட் மற்றும் மாடல் அழகி மஷூம் சிங் உடன் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுடைய திருமணம் மும்பையில் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

https://www.bbc.com/tamil/india-60810983?fbclid=IwAR1EmPaUo0WHhwLYsWQqA092B5S46GdWwOcjG15TvesQXz-35l1CGCVdWMY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பிராமணர் தமிழரா? 😎

பிராமணர்கள்… வசதிக்கு ஏற்ற மாதிரி, தம்மைத் தாமே… அழைத்துக் கொள்வார்கள்.
இவர் தனது, திருமண அழைப்பிதழை தமிழில் அடித்தமையால்…
தமிழக பத்திரிகைகள் எல்லாம், இவரை தமிழர் என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிராமணர்களில்  பெரும்பாலும் தமிழர்களும் இருக்கின்றார்கள்........சமஸ்கிருதம் அவர்களது தொழில் மொழி. பேச்சுவழக்கில் அதை பயன்படுத்துவோர் சொற்பமானவர்களே......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

பிராமணர்கள்… வசதிக்கு ஏற்ற மாதிரி, தம்மைத் தாமே… அழைத்துக் கொள்வார்கள்.
இவர் தனது, திருமண அழைப்பிதழை தமிழில் அடித்தமையால்…
தமிழக பத்திரிகைகள் எல்லாம், இவரை தமிழர் என்கிறார்கள்.

அப்ப ரஜனிகாந்த் தன்னை பச்சைதமிழன் என்று சொன்னது பொய்யா  சார்?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

அப்ப ரஜனிகாந்த் தன்னை பச்சைதமிழன் என்று சொன்னது பொய்யா  சார்?😎

ரசனிகாந்து... பிழைக்கிறதுக்கு, ஆயிரம் பொய்யை சொல்லும்,
அதை நம்பி... சில மண்டை கழண்ட  தமிழ் சனமும், 
"கட் அவுட்டுக்கு" பால் ஊத்தி கொண்டாடும்.
அந்தாளை நம்பாதேங்கோ... குமாரசாமி  அண்ணை.

ரஜனி காந்திடம் நல்ல காசு இருந்த படியால்...
அவரின் மனைவி லதா, பிராமணமாராக இருந்தும்..
சூத்திரனை கலியாணம் கட்டினதை, கவனித்தீர்களா.  😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.