Jump to content

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு கோதபாய மட்டுமன்றி சம்பந்தனும் பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டவர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு கோதபாய மட்டுமன்றி சம்பந்தனும் பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டவர்!

sam-300x200.jpgமுள்ளிவாய்க்காலில் அரச பயங்கரவாதத்தால் தமிழினம் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது இதனை இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் கவனத்துக்கு நான் எடுத்துச்சென்று தடுக்குமாறு கேட்டேன். போர் முடியும்வரை மௌனமாக இருங்கள். அதன்பின்னர் தமிழரின் அரசியல் தீர்வுக்கு வழி வகுப்போம் என்று இரு நாடுகளும் எனக்கு வாக்குறுதி அளித்தன. அதனை நம்பி பன்னிரண்டு வருடங்களாகக் காத்திருந்த என்னை இரு நாடுகளும் ஏமாற்றிவிட்டன” என்பது சம்பந்தனின் வாக்குமூலம். 

உலகின் முதலாவது பெண் பிரதமர் என்று பெயர் பெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்க, 1970ம் ஆண்டு இலங்கைப் பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி சாதனை படைத்தவர்.

இலங்கை என்பதை சிறீலங்கா என்று பெயர் மாற்றி சிங்களவர்களை மகிழ்ச்சிப்படுத்திய இவரை, 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அவர்களே தலைகுப்புற வீழ்த்தி ஆறு ஆசனங்களை மட்டும் வழங்கினர்.

1978ம் ஆண்டுத் தேர்தலில் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன சிறிமாவோவின் குடியுரிமையை ஏழு ஆண்டுகளுக்கு ரத்துச் செய்து மீண்டும் அவரை குசினிக்குள் முடக்கினார். இவ்வேளையில் கொழும்பிலிருந்து வெளிவந்த தவச என்ற சிங்களப் பத்திரிகைக்கு சிறிமாவோ அளித்த செவ்வியில் குறிப்பிட்ட ஒரு விடயம் எக்காலத்திலும் அரசியல் தலைமைகளுக்குப் பொருத்தமானது.

பிரதமர் கதிரையில் ஏழாண்டுகள் தாம் இருந்தபோது, தம்மைச் சுற்றி இருந்தவர்கள் நாட்டினதும் மக்களினதும் உண்மை நிலையை தமக்கு மறைத்து பொய்யுரைத்தமையை தேர்தல் தோல்வியின் பின்னரே தம்மால் தெரிந்து கொள்ள முடிந்ததாக சுட்டியிருந்தார்.

தற்போது, ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சி இரண்டரை ஆண்டுகளுக்குள் அல்லோலகல்லோலப்படுவதற்கும், மக்கள் எதிர்ப்பு பேரெழுச்சியாகி நாடு தழுவிய ரீதியில் நாளாந்தம் அதிகரித்துச் செல்வதற்கும் சிறிமாவோ அன்று சொன்னதே காரணம் என்பதை விளக்க வேண்டியதில்லை.

காணாமலாக்கப்பட்டவர்களுக்காக அவர்களின் உறவுகள் ஆண்டுக்கணக்கில் நடத்தி வரும் போராட்டமே இன்றைய அனைத்துப் போராட்டங்களுக்கும் தாயானது. சிங்கள தேசத்தில் நாளாந்தம் எல்லாவற்றுக்கும் போராட்டமாகி விட்டது. இந்த மாதம் 15ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற பிரமாண்டமான பேரணி ராஜபக்சக்களை உலுப்பிவிட்டது.

இலங்கை என்றால் கடன்படுநாடு என்ற பட்டத்துக்குள்ளாகி விட்டது. மக்கள் பட்டினியால் வாடும் நிலை வந்துவிட்டது. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்குக்கூட அரசாங்கத்திடம் டாலர்கள் இல்லாமலாகி விட்டது.

‘குடும்பத்தின் இரவு உணவு மேசையில் (குயஅடைல னinநெச வயடிடந) அரசியல் தீர்மானங்களை எடுப்பதே நாட்டின் இன்றைய சீர்கேட்டுக்குக் காரணம்” என்று நாடாளுமன்ற உறுப்பினராகவிருக்கும் அத்தரலிய ரத்ன தேரர் பகிரங்கமாகக் கூறியிருப்பது யதார்த்தமானது.

ராஜபக்ச சகோதரர்களும் அவர்களது பிள்ளைகளும் தங்கள் வீட்டுக்குள்ளேயே அரசியல் முடிவுகளை எடுக்கின்றனர். அமைச்சரவைத் தீர்மானம் என்பது உண்மையல்ல என்பதுவே தேரர் இங்கு குறிப்பிடும் மறைபொருள்.

தேரர் தலைமை தாங்கிய ஜாதிக ஹெல உறுமய கட்சி வழங்கிய ஆதரவினாலேயே, 2005ல் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்து மகிந்த ஜனாதிபதியானார் என்பதுவும், 2015ல் இவரது கட்சி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியதாலேயே மகிந்த தோற்கடிக்கப்பட்டார் என்பதுவும் நிகழ்கால வரலாறு.

இப்போது ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமானால், 69 லட்சம் சிங்கள மக்களின் அரைப்பங்கு வாக்குகளைக்கூட ராஜபக்சக்கள் பெற முடியாதென்பதை அரச புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்தக் கதிரையில் இருக்கும்வரை (சிறிமாவோ சொன்னதுபோல) முழு உண்மையை கோதபாயவுக்குச் சொல்ல எவரும் முன்வர மாட்டார்கள்.

இந்தப் பின்னணியிலேயே இன்றைய அரச இயந்திரம் ஓடிக் கொண்டிருக்கிறது. சீனாவும் இந்தியாவும் இல்லையென்றால் இலங்கை தனக்குத் தானே தூக்குப் போட்டு இறந்திருக்கும். ஒரு வகையில் பார்ப்பதானால் ஒரு நாட்டின் கடனுக்கான வட்டியைச் செலுத்த இன்னொரு நாட்டிடம் காமதேனுவான நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பிச்சா பாத்திரம் ஏந்துகிறார்.

அயல் நாடே முக்கியம், அதனால் இந்தியா உதவுகிறது என்று கூறிக்கொண்டு 100 பில்லியன் டாலரை கடன் பிணையாக இலங்கைக்கு இந்தியா இ;ந்த வாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடியும், பசில் ராஜபக்சவும் நடத்திய கலந்துரையாடலில் இலங்கையின் விவசாயம், மீன்பிடித்துறை, சக்திவளம் உட்பட ஐந்து அம்சங்கள் குறிப்பிடப்பட்டன.

ஆனால், இலங்கைத் தமிழரின் அரசியல் அபிலாசைகள், பதின்மூன்றாவது திருத்த அமுலாக்கல் பற்றி மறந்தும்கூட மோடி ஒரு வார்த்தையும் பேசவில்லை. வடபகுதி மீனவர்களுக்கு இந்தியாவிடமிருந்து இப்போது உலர் உணவுப்பொதி மட்டுமே. இதற்குப் பெயர் – தக்க தருணத்தில் உதவும் நட்பு என்று இந்தியத் துணைத் தூதுவர் ரகீஸ் நடராஜன் கூறியுள்ளார்.

போரினால் அழிக்கப்பட்ட தமிழ் மண்ணை மீட்கவும், காக்கவும், தங்கள் பிறப்புரிமைக்காகவும் தமிழினம் போராடிக் கொண்டிருக்க, நட்பு நாடு சிங்கள தேசத்தை நோக்கி நேசக்கரம் நீட்டுகிறது. ஈழத்தமிழரின் தலைமையும் இதே போக்கில்தான் அரசியல் செய்கிறது. மோடியின் அழைப்பை நிராகரித்த இவர்கள் கோதபாயவைச் சந்திப்பதற்கு காத்திருந்தார்கள். அதற்காக தீர்மானிக்கப்பட்ட இந்த மாதம் 15ம் திகதி கானல் நீராகிவிட்டது.

அன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தை சஜித் பிரேமதாசவின் எதிரணி முற்றுகையிடுமென்று தெரிந்திருந்தும், அந்த நாளையே கூட்டமைப்பை சந்திப்பதற்கு கோதபாய தெரிந்தெடுத்தது நாடகத்தின் உச்சம். இது இப்படித்தான் போகுமென்று தெரிந்து கொண்டும் அந்த நாடகத்தில் பங்கேற்றது சம்பந்தன் அணியின் அபார நடிப்பு.

ஜெனிவாவின் 46:1 தீர்மானத்தின் இரண்டாம் கட்டம் தாண்டி, மூன்றாவதும் இறுதிக் கட்டமுமான 51வது அமர்வு எதிர்வரும் செப்டம்பரில் இடம்பெறவுள்ளது. அடுத்தது ஐ.நா. பொதுச்சபையா அல்லது பாதுகாப்புச் சபையா என்ற கேள்வி தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கையில், ராணுவ மயமாக்கலை மறைக்கவும், ஜெனிவாவை ஏமாற்றவும் கோதபாய தரப்பு அவசரம் அவசரமாக இரண்டு சந்திப்புகளை அறிவித்தது.

முதலாவது 15ம் திகதி கூட்டமைப்பின் சந்திப்பு (ரெலோ இதனை நிராகரித்துள்ளதால் தமிழரசு மற்றும் புளொட்டின் சந்திப்பு என்பதே சரி). அடுத்தது 23ம் திகதிய சர்வகட்சி மாநாடு.

 

15ம் திகதிய சந்திப்பு நடத்திய பின்னர் சர்வகட்சி மாநாடு நடத்தினால் மட்டுமே, தமிழர் தரப்பு முன்வைக்கும் யோசனைகளை அல்லது கோரிக்கைகளை சர்வகட்சி மாநாட்டில் ஆராய முடியும். ஆனால் தமிழர் தரப்பின் சந்திப்பை 25ம் திகதிக்குப் பின்போட்டுவிட்டு, சர்வகட்சி மாநாட்டை அதற்கு இரண்டு நாட்கள் முன்னராக – 23ம் திகதி நடத்துவதால் என்ன பயன்? சிலவேளைகளில் இதனையே காரணமாகக் கூறி சர்வகட்சி மாநாட்டை 25ம் திகதிக்குப் பின்னர் நடத்தும் யோசனையையும் கோதபாய நிர்வாகம் ரகசியமாக வைத்திருக்கக்கூடும். இல்லையென்றால் இதுவும் இன்னொரு நாடகமாகலாம்.

மறுதரப்பில், எதிரணியின் பேரணி பாரிய வெற்றியை பெற்றிருப்பதால், விரும்பியோ விரும்பாமலோ நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டிய அவசியம் கோதபாயவுக்கு ஏற்பட்டது.

இன்றைய மோசமான பொருளாதார நெருக்கடிக்கு தமது அரசு எந்த வகையிலும் பொறுப்பில்லை என்றவாறு தமது உரையை ஆரம்பித்த இவர், கொரோனா பேரிடரை முன்னிறுத்தி, அதனிலும் மேலாக தங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய காரணங்களாலேயே பாரிய பொருளாதார நெருக்கடி தொடர்வதாக தெரிவித்துவிட்டு, தமது போர்க்கால தலைமைத்துவ சாதனையையும் வெற்றியையும் கோடி காட்டியிருந்தார்.

கொடூரமான பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை நிர்வகிக்க தம்மால் முடிந்தமையே தமக்கான தகுதியாக குறிப்பிட்ட கோதபாய, தம்மீது நம்பிக்கை வைக்குமாறு மீண்டும் மீண்டும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இவர் அடிக்கடி கூறி வரும் இவரது பயங்கரவாத ஒழிப்புச் சாதனையே, உலக அரங்கிலும் ஜெனிவா மன்றிலும் இவரை முதலாம் இலக்க போர்க்குற்றவாளியாக அடையாளப்படுத்தியிருப்பதை மூடி மறைக்கும் எத்தனத்தில், தம்மை பயங்கரவாதத்தை முறியடித்தவரென முடி சூட்டி வருகிறார். இவரே அரச பயங்கரவாதத்தின் தலைமகன் என்பது முள்ளிவாய்க்காலின் வரலாற்றில் கல்வெட்டாக உள்ளது.

இதனால்தான் தற்போதைய அரசாங்கம் மீது போர்க்கால பொறுப்புக்கூறலும், சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இதே விடயத்தில், கூட்டமைப்பின் தலைவராக விளங்கும் சம்பந்தனின் அண்மைக்கால வாக்குமூலமொன்று, இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டுப் போராடும் ஈழத்தமிழினத்தின் தீவிர பார்வைக்கு உட்பட்டுள்ளது:

‘முள்ளிவாய்க்காலில் அரச பயங்கரவாதத்தால் தமிழினம் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது இதனை இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் கவனத்துக்கு நான் எடுத்துச்சென்று தடுக்குமாறு கேட்டேன். போர் முடியும்வரை மௌனமாக இருங்கள். அதன்பின்னர் தமிழரின் அரசியல் தீர்வுக்கு வழி வகுப்போம் என்று இரு நாடுகளும் எனக்கு வாக்குறுதி அளித்தன. அதனை நம்பி பன்னிரண்டு வருடங்களாகக் காத்திருந்த என்னை இரு நாடுகளும் ஏமாற்றி விட்டன” என்பதுவே சம்பந்தனின் வாக்குமூலம்.

அண்மையில் தம்மைச் சந்தித்த இந்தியத் தலைவர்களிடமும், இந்த மாதம் கொழும்பில் சந்தித்த அமெரிக்காவின் புதிய தூதுவரிடமும் சம்பந்தன் இதனை எடுத்துக்கூறி (புலம்பி) தம்மைத் தாமே நொந்து கொண்டார்.

சம்பந்தன் ஒரு போதும் பொய் சொல்ல மாட்டார், உண்மையே கூறுவார் என்ற நம்பிக்கையில் அவரது வாக்குமூலத்தை உண்மையாகவே ஏற்றுக் கொள்வோமானால்…..

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு சம்பந்தனும் சம்பந்தியாகியுள்ளார். எனவே, இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு மட்டுமன்றி சம்பந்தனுக்கும் உண்டு. கோதபாயவும், இலங்கை அரசாங்கமும், சம்பந்தனும் இவ்விடயத்தில் ஒரே தராசில் நிற்பவர்களே.

பனங்காட்டான்முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு கோதபாய மட்டுமன்றி சம்பந்தனும் பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டவர்! – குறியீடு (kuriyeedu.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nochchi said:

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு சம்பந்தனும் சம்பந்தியாகியுள்ளார். எனவே, இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு மட்டுமன்றி சம்பந்தனுக்கும் உண்டு. கோதபாயவும், இலங்கை அரசாங்கமும், சம்பந்தனும் இவ்விடயத்தில் ஒரே தராசில் நிற்பவர்களே.

கோத்தாவுக்கு ஆயுள் சம்மந்தனுக்கு தூக்கு கொடுப்பதென்றாலும் எனக்கு டபுள் ஓகே,
என்னை பொறுத்தவரை தொலைபேசியை அணைத்துவிட்டு இந்தியாவுக்குள் ஒழித்துக்கொண்டிருந்த அனைவருமே கே-மாரிகள் தான், கும்பலாக அள்ளிக்கொண்டுபோய் கட்டி தூக்குங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

கோத்தாவுக்கு ஆயுள் சம்மந்தனுக்கு தூக்கு கொடுப்பதென்றாலும் எனக்கு டபுள் ஓகே,
என்னை பொறுத்தவரை தொலைபேசியை அணைத்துவிட்டு இந்தியாவுக்குள் ஒழித்துக்கொண்டிருந்த அனைவருமே கே-மாரிகள் தான், கும்பலாக அள்ளிக்கொண்டுபோய் கட்டி தூக்குங்கள் 

எனக்கும்… ஒகே. இதோடையாவது… தமிழனுக்கு பிடித்த, தரித்திரம் ஒழியட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2022 at 14:05, nochchi said:

அயல் நாடே முக்கியம், அதனால் இந்தியா உதவுகிறது என்று கூறிக்கொண்டு 100 பில்லியன் டாலரை கடன் பிணையாக இலங்கைக்கு இந்தியா இ;ந்த வாரம் வழங்கியுள்ளது.

கட்டுரையாளர் பூச்சியங்களை அடிக்கிக் கொண்டே போகிறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.