Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                       நெருப்பு.

எரிக்கிறதுதான் நெருப்பு 

நெருப்புக்கு எரிக்கத்தான் தெரியும் 

ஆலயத்தில் எரிந்தால் தீபம் 

அடுப்புக்குள் எரிந்தால் சமையல் 

அகல்விளக்கில் எரிந்தால் வெளிச்சம் 

யாகத்தில் எரிந்தால் அக்நி 

சிதையில் எரிந்தால் சாம்பல் 

அடிவயிற்றில் எரிந்தால் பசி 

ஆகாயத்தில் எரிந்தால்  மின்னல்

அடர்வனத்தில் எரிந்தால் கோரம் 

மூச்சில் எரிந்தால் ஏக்கம்  

சுருட்டில் எரிந்தால் போதை தொடரும் 

இருட்டில் எரிந்தால் பாதை தெரியும் 

விழியில் எரிந்தால் காதல் 

இடையில் எரிந்தால் காமம் 

மனசில் எரிந்தால் பாசம் 

ஈருடலில் எரிந்தால் பரவசம் 

எரிக்கிறதுதான் நெருப்பு 

நெருப்புக்கு எரிக்கத்தான் தெரியும்......!  

 

ஆக்கம் சுவி .......! 

 

Edited by suvy
சில வரிகள் சேர்க்க
  • Like 5
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி சொக்கப்பானை எரிந்தால்.

பக்தி.

ஆமா இதை ஏன் அகவை 24 இல் எழுதலை?

அது பாட்டுக்கு சும்மா தூங்கிக் கொண்டிருக்கு.

சிலபேர் சண்டை பிடிக்கும் போது

வயிறு எரியுதடா

நாசமா போவீங்கடா
என்பார்களே?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

சுவி சொக்கப்பானை எரிந்தால்.

பக்தி.

ஆமா இதை ஏன் அகவை 24 இல் எழுதலை?

அது பாட்டுக்கு சும்மா தூங்கிக் கொண்டிருக்கு.

சிலபேர் சண்டை பிடிக்கும் போது

வயிறு எரியுதடா

நாசமா போவீங்கடா
என்பார்களே?

இது சும்மா கண்ணனியில் இருக்கும் போது தோன்றியது அதுதான் இதில் எழுதினேன்.......!

சொக்கபனையில் எரிந்தால் பக்தி,  இதுவும் நல்லா இருக்கு......தொடருங்கள்......!   😂

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி பிரியன்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

எரிக்கிறதுதான் நெருப்பு 

நெருப்புக்கு எரிக்கத்தான் தெரியும்......!  


உனை கண்ட நாள் முதல்
எரியுதடி பஞ்சவர்ணம்
காய்ஞ்ச பனையோலை போல்
பக்கெண்டு எரியுதடி பஞ்சவர்ணம்
எரியும் நெருப்பை அணைக்க வாடி பஞ்சவர்ணம்
வைரவர் கோயில் தீப்பந்தம் போல்
எரியுதடி பஞ்சவர்ணம்
தாமரை குளத்தில்
குளிக்கிறனடி பஞ்சவர்ணம்
அப்பவும் எரியுதடி பஞ்சவர்ணம்
நடு உச்சி வெய்யில் எரிய
காத்திருக்கிறனடி பஞ்சவர்ணம்
அணைக்க வாடி 
பஞ்சவர்ணம்.....🤣

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டில் எரிந்தால்...அது காட்டுத் தீ...!

வீட்டில் எரிந்தால்...அது சமையல்...!

சாணி எரிந்தால்...அது திருனூறு..!

மனிதன் எரிந்தால்...வெறும் சாம்பல்...!

அமெரிக்கா எரிந்தால்...அமைதி..!

வயிறு எரிந்தால்...அரசியல்..!

 

தொடருங்கள், சுவியர்...!

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2022 at 17:30, suvy said:

                       நெருப்பு.

எரிக்கிறதுதான் நெருப்பு 

நெருப்புக்கு எரிக்கத்தான் தெரியும் 

ஆலயத்தில் எரிந்தால் தீபம் 

அடுப்புக்குள் எரிந்தால் சமையல் 

அகல்விளக்கில் எரிந்தால் வெளிச்சம் 

யாகத்தில் எரிந்தால் அக்நி 

சிதையில் எரிந்தால் சாம்பல் 

அடிவயிற்றில் எரிந்தால் பசி 

ஆகாயத்தில் எரிந்தால்  மின்னல்

அடர்வனத்தில் எரிந்தால் கோரம் 

மூச்சில் எரிந்தால் ஏக்கம்  

சுருட்டில் எரிந்தால் போதை தொடரும் 

இருட்டில் எரிந்தால் பாதை தெரியும் 

விழியில் எரிந்தால் காதல் 

இடையில் எரிந்தால் காமம் 

மனசில் எரிந்தால் பாசம் 

ஈருடலில் எரிந்தால் பரவசம் 

எரிக்கிறதுதான் நெருப்பு 

நெருப்புக்கு எரிக்கத்தான் தெரியும்......!  

 

ஆக்கம் சுவி .......! 

 

நல்லதொரு கவிதை பகிர்வதற்கு நன்றிகள் கவிஞர் சுவியர் ..💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடர்வனத்தில் எரிந்தால் கோரம் ---- காட்டுத் தீ

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.