Jump to content

கள்ளப் பூனைகள்-பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

எல்லா வீட்டு வேலியும் பாய்ந்து 
சட்டியை உருட்டும் பூனைகள் போலே 
எம்மிலும் பல கள்ளர் இருப்பது தெருஞ்சுக்கடா
இவர்கள் பொல்லாத மனிதப் பூனையடா
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா

வெள்ளாடை வேட்டி கட்டி
வேதங்கள் பல சொல்லி 
எல்லோர்க்கும் உதவுவதாய் 
எல்லாமே தெரிந்தவராய் 
நல்லாக நடிப்பாரடா சிலர் 
நல்ல பெயர் வேண்ட அலைவாரடா
இவர்கள் பொல்லாத மனிதப் பூனையடா 
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா 

நட்பு என்றும் உறவு என்றும்
நல்ல பல கதைகள் பேசி 
சமூகம் சேவை என்றும் 
கோவில் பள்ளி படிப்பு என்றும் 
கொக்கரித்து திரிவாரடா 
பின்பு கட்டியதை உடைப்பாரட 
கண்டபடி கதைப்பாரடா 

ஒற்றுமையை தொலைத்து விட்டு 
ஆளுக்கு ஆள் கல் எறிந்து பகைப்பாரடா 
கள்ளம் பல செய்வாரடா
கண்ணை மூடிப் பால் குடிக்கும் 
கள்ளப் பூனை போல் தானடா 
பின்பு வல்லவர் தான் என்பாரடா 
வெறும் வாய்ப் புளுகில் வல்லோரடா 
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா 

பேருக்கும் புகளுக்குமாய் 
பொய்யான கதை பேசி 
பெரும் தத்துவங்கள் சொல்வாரடா 
தம்மை தாமே புகழ்வாரடா
தம் உயரம் அறியாரடா
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா 

ஞானம் கொண்ட புத்தனைப்போல் 
தாமும் என்று சொல்வாரடா 
தங்கள் பிழை அறியாரடா 
தாங்கள் மாற நினைக்காரடா 

நல்ல மனம் இல்லாமல் 
நாளும் பொழுதும் தொழுதாலும் 
என்ன தான் கடவுள் செய்வார் 
கள்ள மனம் கொண்டோரை 

பொய்யான முகங்களுடன் 
மெய்யான  மனிதர் போலே 
அங்கீகாரம் தேடி அலைந்தே 
அதற்காய் தன்னைத் தானே விற்பாரடா 
அந்த கள்ளப் பூனை போல் தானடா 
அவர்கள் கள்ள நெஞ்சம் கொண்டோரடா 
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா.

பா.உதயன் ✍️
 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, uthayakumar said:

 

எல்லா வீட்டு வேலியும் பாய்ந்து 
சட்டியை உருட்டும் பூனைகள் போலே 
எம்மிலும் பல கள்ளர் இருப்பது தெருஞ்சுக்கடா
இவர்கள் பொல்லாத மனிதப் பூனையடா
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா

வெள்ளாடை வேட்டி கட்டி
வேதங்கள் பல சொல்லி 
எல்லோர்க்கும் உதவுவதாய் 
எல்லாமே தெரிந்தவராய் 
நல்லாக நடிப்பாரடா சிலர் 
நல்ல பெயர் வேண்ட அலைவாரடா
இவர்கள் பொல்லாத மனிதப் பூனையடா 
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா 

நட்பு என்றும் உறவு என்றும்
நல்ல பல கதைகள் பேசி 
சமூகம் சேவை என்றும் 
கோவில் பள்ளி படிப்பு என்றும் 
கொக்கரித்து திரிவாரடா 
பின்பு கட்டியதை உடைப்பாரட 
கண்டபடி கதைப்பாரடா 

ஒற்றுமையை தொலைத்து விட்டு 
ஆளுக்கு ஆள் கல் எறிந்து பகைப்பாரடா 
கள்ளம் பல செய்வாரடா
கண்ணை மூடிப் பால் குடிக்கும் 
கள்ளப் பூனை போல் தானடா 
பின்பு வல்லவர் தான் என்பாரடா 
வெறும் வாய்ப் புளுகில் வல்லோரடா 
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா 

பேருக்கும் புகளுக்குமாய் 
பொய்யான கதை பேசி 
பெரும் தத்துவங்கள் சொல்வாரடா 
தம்மை தாமே புகழ்வாரடா
தம் உயரம் அறியாரடா
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா 

ஞானம் கொண்ட புத்தனைப்போல் 
தாமும் என்று சொல்வாரடா 
தங்கள் பிழை அறியாரடா 
தாங்கள் மாற நினைக்காரடா 

நல்ல மனம் இல்லாமல் 
நாளும் பொழுதும் தொழுதாலும் 
என்ன தான் கடவுள் செய்வார் 
கள்ள மனம் கொண்டோரை 

பொய்யான முகங்களுடன் 
மெய்யான  மனிதர் போலே 
அங்கீகாரம் தேடி அலைந்தே 
அதற்காய் தன்னைத் தானே விற்பாரடா 
அந்த கள்ளப் பூனை போல் தானடா 
அவர்கள் கள்ள நெஞ்சம் கொண்டோரடா 
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா.

பா.உதயன் ✍️
 

அருமையான கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👌

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனம் இல்லாமல் 
நாளும் பொழுதும் தொழுதாலும் 
என்ன தான் கடவுள் செய்வார் 
கள்ள மனம் கொண்டோரை ....!

 

சிறப்பான வரிகள், நல்ல கவிதை உதயகுமார்.......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூனைகளிலும் கள்ளப்பூனைகள்  உள்ளது போல  எல்லா வகை வேதம் ஓதுவோர் வகையிலும் கள்ளப் பூனைகள் உள்ளனர். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளப்பூனைகள்.
நல்ல கவிதை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2022 at 13:01, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமையான கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👌

 

On 27/3/2022 at 13:10, suvy said:

சிறப்பான வரிகள், நல்ல கவிதை உதயகுமார்.......!  👍

 

On 27/3/2022 at 16:47, நிலாமதி said:

பூனைகளிலும் கள்ளப்பூனைகள்  உள்ளது போல  எல்லா வகை வேதம் ஓதுவோர் வகையிலும் கள்ளப் பூனைகள் உள்ளனர். 
 

 

On 27/3/2022 at 23:11, குமாரசாமி said:

கள்ளப்பூனைகள்.
நல்ல கவிதை.

அனைவருக்கும் மிக்க நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூனைகளில் கள்ளப்பூனை என்று ஒன்றுன்டா. இயல்பாகவே இந்த மிருகம் கள்ளத்தன்மை கொண்டதல்ல்லவா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2022 at 00:29, colomban said:

பூனைகளில் கள்ளப்பூனை என்று ஒன்றுன்டா. இயல்பாகவே இந்த மிருகம் கள்ளத்தன்மை கொண்டதல்ல்லவா?

 

பூனைகளில் இல்லை ஆனால் மனிதர்களில்தான் இருக்கிறார்கள்.. 

மிகவும் சுவாரசியமான பிராணி அதனிடம் இருந்து மனிதர்கள் கற்க வேண்டிய விடயங்கள் உள்ளது.. 

இந்த புத்தகத்தை பற்றி நல்ல கருத்து உள்ளது.. 👇🏽

 

In Feline Philosophy, the philosopher John Gray discovers in cats a way of living that is unburdened by anxiety and self-consciousness, showing how they embody answers to the big questions of love and attachment, mortality, morality, and the Self: Montaigne's house cat, whose un-examined life may have been the one worth living; Meo, the Vietnam War survivor with an unshakable capacity for fearless joy; and Colette's Saha, the feline heroine of her subversive short story The Cat, a parable about the pitfalls of human jealousy.

Exploring the nature of cats, and what we can learn from it, Gray offers a profound, thought-provoking meditation on the follies of human exceptionalism and our fundamentally vulnerable and lonely condition. He charts a path toward a life without illusions and delusions, revealing how we can endure both crisis and transformation, and adapt to a changed scene, as cats have always done.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2022 at 15:29, colomban said:

பூனைகளில் கள்ளப்பூனை என்று ஒன்றுன்டா. இயல்பாகவே இந்த மிருகம் கள்ளத்தன்மை கொண்டதல்ல்லவா?

 

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

பூனைகளில் இல்லை ஆனால் மனிதர்களில்தான் இருக்கிறார்கள்.. 

மிகவும் சுவாரசியமான பிராணி அதனிடம் இருந்து மனிதர்கள் கற்க வேண்டிய விடயங்கள் உள்ளது.. 

இந்த புத்தகத்தை பற்றி நல்ல கருத்து உள்ளது.. 👇🏽

ஆறு அறிவுகளை மனிதன் கொண்டிருந்தாலும் மனிதனுக்கும் விலங்குக்குக்கும் இடையில் பல ஒருமித்த எதிர் குணாதிசயங்கள் பல உண்டு. மனிதர்களை போன்றே உண்ணும் போதும் உறங்கும் போதும் தம் பாதுகாப்பு கருதியே செயல்ப்படுகின்றன. பூனைகள் கண்ணை மூடி பால் குடிப்பது அதன் கண்கள் மிக அருகில் இருப்பதால் கண்ணில் பால் தெறிக்காமல் இருப்பதற்கு என்றும் விஞ்ஞான ரீதியான விளக்கம் கூறுவதாகவும் சொல்வார்கள்.அதேபோல் தாம் செய்யும் சில செயல்களை தவறாக இருந்தும் அது அடுத்தவருக்கு தெரியாது என்ற நினைப்புடனேயோ அதனை செய்கிறார்கள் என்ற ஒரு கருத்துடன் மனிதனுடன் இணைத்து பேசப் படுகின்றன. சில மிருக்கங்களினது ஆற்றல் மிகுந்த செய்கைகளைக் கொண்டும் அதன் செயற்பாடுகளைக் கொண்டும் பூனை மாத்திரம் இல்லை இன்னும் பல விலங்குகளை மனிதக் குணங்களுடன் ஒப்பிடுவார்கள். நீங்கள் எழுதிய உதாரணம் போலவே  மியோ, வியட்நாம் போரில் உயிர் பிழைத்தவர், அச்சமற்ற மகிழ்ச்சிக்கான அசைக்க முடியாத திறன் கொண்டவர்; குரங்கு மனம் கொண்டானே மனிதா என்றும் , நரித்தந்திர காரன் என்றும் , பச்சோந்தி மனிதன் என்றும் , எறும்பு போல் ஒற்றுமையை பார் என்றும் , தேனீ போல் உழைக்கப் பார் என்றும்,  யானை போல் பலம் என்றும்,  ஆந்தை போலும் என்றும், விலங்குகளைப் போலவே  இன்னும் பல இயற்கையோடு மனிதனை ஒப்பிட்டு போசுவதும் பாடுவதும் மனித வாழ்வியலிலிலும் இது பொருந்தக்கூடியதாகவே அமைகிறது. சில ஊர்வன பறப்பன தெய்வங்களாகவே மனிதரால் வணங்கப்படுகின்றன. இலக்கியமும், இதிகாசங்களும், புராணங்களும் இதை ஒப்பிட்டே பாடுகின்றன பேசுகின்றன. ஆமாம் மிருகங்களின் இயல்பை ஆராந்து மனிதன் கற்றுக் கொள்வதற்கு நிறையவே உதாரணங்கள் உண்டு அனைவரின் கருத்துக்கும் நன்றிகள். 
 

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.