Jump to content

நேற்று என் கனவில் கடல் வந்தது - நிழலி


Recommended Posts

நேற்று என் கனவில்
கடல் வந்தது

என் கடல் நீலமாய் இருக்கவில்லை

அதன் அலைகள்
கடும் சிவப்பிலும்
ஆழத்தில் தொலைந்திருந்த
எங்கோ புதைந்து கிடந்த
என்றோ மறந்து விட்ட
ரகசியங்களின் நிறமாகவும் 
இருந்தது.

கரையே அற்ற பெருங்கடல்
அது
இரக்கமற்றவர்களின்
பிரார்த்தனை போலவும்
மரணங்களைக் கொண்டாடும்
கடவுள்களின் துதிப்பாடலைப்
போலவும்
இரைச்சலாக இருந்தது.

ஈரமற்ற நீர்ப்பரப்பாய்
வானமற்ற நீர் வனமாய்
உயிர்கள் அற்ற ஆழியாய்
அது பரந்து சூழ்ந்தது

அதன் அலைகளின்
நுனிகளை பற்றி
இருந்தேன்
நுரைகளால்
நிரம்பிக் கிடந்தேன்
அதன் பெரும் இரைச்சலை
எனக்குள் இறக்கிக்
கொண்டேன்

அலைக்கழிக்கும்
ஒரு பெரும் துயரத்தின்
ஆழத்துக்குள் 
அதன் சுழி
என்னை இட்டுச் சென்றது

மீள முடியாத பெரும்
சுழி அது

தொடக்கமும் முடிவும்
ஒரே புள்ளியில் 
சில கணங்களும்
பின் விலகி
எதிர் துருவங்களில் 
சில கணங்களுமாக
நேர் கோட்டிலும்
குறுக்குவாட்டிலும்
பின்
சிறுத்தும் பரந்தும்
சுருங்கியும் விரிந்தும்
என்னை இறுக்கி பிழிந்து
உயிர் குடிக்கும்
பெரும் சுழி அது

மூச்சிழந்து கிடந்தேன்
உடல் மரத்து
வேர்வை ஆறாகி பெருக
தப்ப வழியற்று
தப்பும் ஆசையும் அற்று
அதன் நெடிய கரங்களுக்குள்
இன்னும் நெருக்கிக் கொண்டு
அலைக்கழிந்தேன்

ஈற்றில்
முன்னை இட்ட தீ
சுழிக்குள் தகித்து
எரிய 
கடலில் சாம்பலாகி
அலைகளில் துகள்களாகி
கோடிக்கணக்கான அணுக்களாகி
கரைந்தே போனேன்.

நேற்று என் கனவில் 
கடல் வந்தது
இமைகள் திறந்த பொழுது
அந்தக் கடல்
வற்றிக் கொண்டது
வற்றிப் போக முன்
என் அறையெங்கும்
சேற்று மணத்தை 
நிரப்பி விட்டுச் சென்றிருந்தது...

March 27, 2022

  • Like 15
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நிழலி said:

நேற்று என் கனவில் 
கடல் வந்தது
இமைகள் திறந்த பொழுது
அந்தக் கடல்
வற்றிக் கொண்டது
வற்றிப் போக முன்
என் அறையெங்கும்
சேற்று மணத்தை 
நிரப்பி விட்டுச் சென்றிருந்தது...

நிழலி
உங்கள் கவிதை சுனாமியை கண்முன்னே கொண்டுவந்து விட்டது.
பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை......மனசில் குழப்பங்கள்( நாட்டின் நிலைமைகள் சம்பந்தமானதாகக் கூட இருக்கலாம்) கனவில் பிரதிபலித்து கடலோடு சங்கமிக்கின்றது. பாராட்டுக்கள்.........!  👍

நன்றி நிழலி.....!

Link to comment
Share on other sites

21 hours ago, ஈழப்பிரியன் said:

நிழலி
உங்கள் கவிதை சுனாமியை கண்முன்னே கொண்டுவந்து விட்டது.
பாராட்டுக்கள்.

 

21 hours ago, suvy said:

நல்ல கவிதை......மனசில் குழப்பங்கள்( நாட்டின் நிலைமைகள் சம்பந்தமானதாகக் கூட இருக்கலாம்) கனவில் பிரதிபலித்து கடலோடு சங்கமிக்கின்றது. பாராட்டுக்கள்.........!  👍

நன்றி நிழலி.....!

வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி

எனக்கு / எமக்கு வரும் சில கனவுகள் இனம்புரியாத உணர்வுகளை தோற்றுவிப்பன. அடுத்த நாள் காலையில் எழுந்தால் அக் கனவின் சுமை கண்களின் வழி மனதெங்கும் பரவி அன்றைய நாளின் மீது கவிழும் மேகமாக தொடரும் இயல்புள்ளன. என்ன கனவு என்று தெளிவாக அடுத்த நாள் சொல்ல முடியாமல் இருக்கும். மீள அதை நினைவில் கொண்டு வர முடியாமல் இருக்கும். அது தரும் உணர்வுகளையும் பழக்கமான வார்த்தைகளால் அளக்க முடியாமல் இருக்கும்.

அப்படி ஒரு கனவு நேற்றுக் காலையில் வந்தது. அதில் கடல் நிரம்பி இருந்தது. விடிய எழும்பும் போது கண்களில் எரிச்சலும் மனசில் உளைச்சலுமாக இருந்தது. அதை எழுத்தில் கொண்டு வர எடுத்த முயற்சி தான் இது. யாழின் 24 ஆவது அகவைக்கு என்று மினக்கெட்டு எழுதவில்லை இது. தானாக வந்த கவிதை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி… நிழலி.
எனக்கு வாற கனவுகளில் எல்லாம்….
நக்மாவும், நமீதாவும் தான் வருகிறார்கள். 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. இலவசமா வார கனவுல கூட இன்னும் நக்மா, நமீதா காலத்திலேயே இருந்தால் எப்படி? சட்டு புட்டுன்னு அப்டேட் ஆகிற வழிய பாருங்க தலைவா.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

கவிதைக்கு நன்றி… நிழலி.
எனக்கு வாற கனவுகளில் எல்லாம்….
நக்மாவும், நமீதாவும் தான் வருகிறார்கள். 😛

அவனவன் சமந்தாவையும் கஜோலையும் தாண்டி போய்கொண்டிருக்கிறான் இவர் நக்மாவும் நமீதாவும் என்று கொண்டு......."அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு"படம் பாருங்க அக்க்ஷரா ஹாசன் செம க்யூட் என்று சொல்கிறார்கள்........!   😂

Edited by suvy
எழுத்து பிழை திருத்தம் .....!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கவிதைக்கு நன்றி… நிழலி.
எனக்கு வாற கனவுகளில் எல்லாம்….
நக்மாவும், நமீதாவும் தான் வருகிறார்கள். 😛

 

2 hours ago, Sasi_varnam said:

ம்ம்ம்.. இலவசமா வார கனவுல கூட இன்னும் நக்மா, நமீதா காலத்திலேயே இருந்தால் எப்படி? சட்டு புட்டுன்னு அப்டேட் ஆகிற வழிய பாருங்க தலைவா.🤣

வயசுக்கேற்ற ஆக்கள் தானே வருவார்கள்.

2 hours ago, தமிழ் சிறி said:

கவிதைக்கு நன்றி… நிழலி.
எனக்கு வாற கனவுகளில் எல்லாம்….
நக்மாவும், நமீதாவும் தான் வருகிறார்கள். 😛

ஏன் சிறி ஆஸ்பத்திரி நேர்ஸ் எவரும் வாறலையோ?

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

வயசுக்கேற்ற ஆக்கள் தானே வருவார்கள்.

ஐயாவின்ரை கனவிலை வந்து போறது கேஆர் விஜயாவா?

Ghfhghvjkvvhg Mature, Yesteryear, tamil, actress, KR, Vijaya, hot, saree, pallu, blouse GIF

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

ஐயாவின்ரை கனவிலை வந்து போறது கேஆர் விஜயாவா?

Ghfhghvjkvvhg Mature, Yesteryear, tamil, actress, KR, Vijaya, hot, saree, pallu, blouse GIF

அவர் இன்னும் சுந்தராம்பாள் ஐ தாண்டவில்லை, அவர் நினைவாகவே இருக்கிறார்

7 hours ago, நிழலி said:

 

வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி

எனக்கு / எமக்கு வரும் சில கனவுகள் இனம்புரியாத உணர்வுகளை தோற்றுவிப்பன. அடுத்த நாள் காலையில் எழுந்தால் அக் கனவின் சுமை கண்களின் வழி மனதெங்கும் பரவி அன்றைய நாளின் மீது கவிழும் மேகமாக தொடரும் இயல்புள்ளன. என்ன கனவு என்று தெளிவாக அடுத்த நாள் சொல்ல முடியாமல் இருக்கும். மீள அதை நினைவில் கொண்டு வர முடியாமல் இருக்கும். அது தரும் உணர்வுகளையும் பழக்கமான வார்த்தைகளால் அளக்க முடியாமல் இருக்கும்.

அப்படி ஒரு கனவு நேற்றுக் காலையில் வந்தது. அதில் கடல் நிரம்பி இருந்தது. விடிய எழும்பும் போது கண்களில் எரிச்சலும் மனசில் உளைச்சலுமாக இருந்தது. அதை எழுத்தில் கொண்டு வர எடுத்த முயற்சி தான் இது. யாழின் 24 ஆவது அகவைக்கு என்று மினக்கெட்டு எழுதவில்லை இது. தானாக வந்த கவிதை.

கவிதை சூப்பர், எங்களுக்கு வரும் கனவுகளை இப்பிடி எல்லாம் எழுத்தெரியாது. எழுத்ததெரிவது ஒரு கொடுப்பினை.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

ஐயாவின்ரை கனவிலை வந்து போறது கேஆர் விஜயாவா?

Ghfhghvjkvvhg Mature, Yesteryear, tamil, actress, KR, Vijaya, hot, saree, pallu, blouse GIF

இப்பிடி படங்கள் உடனே எங்கிருந்து தேடிப்பிடிக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை, நிழலி…!

ஒருவரது பார்வையைப் பொறுத்துக் கவிதையைப்வ்பல நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி ரசிக்கலாம் என்பது கவிதையின் தனிச் சிறப்பாகும்…! ஒரு விதமான பயத்தையும், இயலாமையையும், வெறுமையையும் கவிதை அழகாக விபரிக்கின்றது…! தொடர்ந்தும் இது போன்ற கவிதைகளைத் தாருங்கள்…! வாழ்த்துக்கள்…!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன நாட்களின் பின் உங்கள் கவிதை .. .. .. நன்று

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.