Jump to content

கோத்தா-கூட்டமைப்புப் பேர்ச்சுவார்த்தை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா-கூட்டமைப்புப் பேர்ச்சுவார்த்தை.

தரகர்களின் காலில் வீழ்வதை விடவும் எதிரியிடமே பேசுவது என்னமோ பெட்டர்தான்.

அதிலும் அரைகுறைகளிடம் அல்லாது அசல் "சிங்களத் தலைவனிடமே" பேசிவிடுவது சாலச்சிறந்தது. 

ஆட்சி மாற்றம், ஊழல் ஒழிப்பு என்று சிங்கள தேசத்தை அதன் அழிவில் இருந்து காப்பாற்றும் முயற்சி எதுவும் எடுக்காது, மொள்ளைமாரிகள், போலி ஜனநாயகவாதிகளுடன் கைகோர்க்காது நேரே "பாசிஸ்ட்டுகள்" இடமே பேசத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

இதுதான் "புலிவழி"

"பலம்தான் உலக ஒழுங்கைத் தீர்மானிக்கிறது"

என்பது நந்திக்கடலோன் வாக்கு.

சிங்களதேசம் அந்நிய செலவாணிக்கு வழியின்றி பாதாளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தடுத்து சிங்கள தேசத்தைக் காப்பாற்றும் வல்லமை தற்போது தமிழ்த் தேசத்திடமே உள்ளது.

இதைத்தான், "எமது போராட்டத்தின் அடுத்த கட்டத்தை புலம்பெயர் உறவுகளிடமே விடுகிறோம்" என நந்திக் கடலோன் சொன்னான் போலும்.

அந்த வகையில் எமது பலத்தையும் சிங்கள தேசத்தின் பலவீனத்தையும் கூட்டமைப்பு சரியாகக் கையாளுமிடத்து இந்த பேச்சுவார்த்தையும் பேரம் பேசுதலும் வரவேற்கத்தக்கதே!

ஆயினும் அது அவ்வளவு எளிதல்ல!

அவசரப்பட்டு எமது பலத்தை சிங்கள தேசத்துக்கு தாரவார்த்துக் கொடுக்காதிருத்தல் வேண்டும்.

வழமையாக சிங்கள தேசம்தான் இழுத்தடிக்கும்.

இந்த முறை நாம் இழுத்தடிக்க வேண்டும். 

"முதலீடு செய்கிறோம். அந்நிய செல்வாணியைக் கொண்டு வாறோம்..."

என்று சொன்னபடி எதையும் செய்யாதிருக்க வேண்டும், கோத்தா ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் - சிங்கள தேசம் படு, படு, படு... படுபாதாளத்தை எட்டும் வரை!

ஏனெனில்,

படு,படு, படு, படு...

படுபாதாளத்தை எட்டாதவரை சிங்கள தேசம் ஒரு போதும் வழிக்கு வராது.

கூட்டமைப்பு இதைச் செய்யுமா? அல்லது மீண்டும் எம்மை தோற்கடிக்குமா?

https://www.facebook.com/1119806244/posts/10226372951766364/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.