Jump to content

இலங்கை பொருளாதார நெருக்கடி: "முடிந்தவரை உதவிகளை வழங்குவோம் என ஜெய்சங்கர் உறுதியளித்தார்" - இலங்கை எம்.பி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொருளாதார நெருக்கடி: "முடிந்தவரை உதவிகளை வழங்குவோம் என ஜெய்சங்கர் உறுதியளித்தார்" - இலங்கை எம்.பி

  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
29 மார்ச் 2022, 05:42 GMT
 

இலங்கை

பட மூலாதாரம்,TPA MEDIA UNIT

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு செல்வதை இந்தியா விரும்பவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபத் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேசிய பின், பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக மக்கள் செல்வது, இந்தியாவிற்கு பெரும் இக்கட்டான சூழ்நிலை என்பதை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், தம்மிடம் எடுத்துரைத்ததாக வீ.இராதாகிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.

இலங்கையின் பொருளாதார சூழ்நிலையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளுக்கு தாம் உதவிகளை வழங்குவதாகவும், அகதிகளை இந்தியாவிற்கு அனுப்பாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகள் செல்வதானது, இந்தியாவிற்கு பாரமான விடயம் என்பதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எடுத்துரைத்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து இருக்கின்றது. இது தொடர்பில் உங்களின் கருத்து?

இலங்கையினுடைய பொருளாதார வீழ்ச்சி என்பது இன்று உலகமெங்கும் பேசுகின்ற ஒரு விடயமாக இருக்கின்றது. அதேநேரத்தில் இலங்கையினுடைய இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம், இப்போது நடைமுறையிலுள்ள அரசாங்கத்தினுடைய பிற்போக்கான கொள்கை அல்லது முகாமைத்துவம் சரியில்லாத நிலை.

ஆகவே இந்த பொருளாதார சிக்கல் ஏற்பட்டிருக்கின்ற இலங்கைக்கு பல்வேறு நாடுகள் உதவி செய்ய முன்வந்த போதிலும், இந்தியா தனது முழுமையான ஆதரவை இலங்கைக்கு வழங்கி வருகின்றது. இந்தியா இப்போது இலங்கைக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்துவருகின்றது. கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர் நிதியை இந்தியா கொடுத்துள்ளது.

ஏற்கனவே 500 மில்லியன் டாலர் வரை கொடுத்துள்ளார்கள். மேலும் உதவி புரிவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவின் உதவி இலங்கைக்கு தற்போது அதிகமாக கிட்டுகின்றது என்பது எங்களுக்கு பெருமைக்குரிய விடயமாகும்.

 

வீ.இராதாகிருஸ்ணன்

 

படக்குறிப்பு,

வீ.இராதாகிருஸ்ணன்

எப்போதும் சந்திக்காத ஒரு நெடிக்கடியை இலங்கை இப்போது சந்தித்திருக்கின்றது. இந்த ஒரு சூழ்நிலையில், உதவி செய்யக்கூடிய நாட்டின் மிக முக்கிய பதவியில் இருக்கக்கூடிய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். அவரை நீங்கள் சந்தித்தீர்கள். எவ்வாறான விடயங்கள் பேசப்பட்டன?

இன்று விசேடமாக பிம்ஸ்டெக் மாநாட்டிற்கு இந்திய பிரதமர் மோடி அவர்கள் வருவதாக இருந்தது. ஆனால் அவருடைய பயணம் தள்ளிப் போடப்பட்டு, இப்போது வெளியுறவு துறைத் அமைச்சர் இன்று இலங்கைக்கு பயணம் செய்து, பல்வேறு தரப்புக்களோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்.

ஜனாதிபதி, நிதி அமைச்சர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார். அதேபோன்று, தமிழ் தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எங்களுடைய தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தமிழ் தரப்புக்களை இப்போது சந்தித்து வருகின்றார்.

அந்த வகையில் எங்களோடு சந்தித்த சந்திப்பிலே விசேடமாக நாங்கள் இலங்கையினுடைய பொருளாதார வீழ்ச்சி அல்லது இன்றைய காலக் கட்டத்திலே இலங்கை படுகின்ற சிரமம் போன்றவற்றை நாங்கள் அவருக்கு எடுத்துரைத்தோம். பெட்ரோல், கேஸ், அதேபோன்று, மக்கள் நீண்ட வரிசைகளிலே நின்று மக்கள் பொருட்களை வாங்கக்கூடிய நிலைமை இருக்கின்றது.

அதேபோன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்னை போன்றவற்றையும் நாங்கள் எடுத்து காட்டினோம். அதேவேளை, இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நிறைய பேர் அகதிகளாக போகின்ற ஒரூ சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது.

அதாவது இலங்கையிலே கடினமான சூழ்நிலை அனுபவிக்க முடியாமல், மக்கள் இந்தியாவிற்கு போகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே எதிர்காலத்தில் இந்தியாவிற்கு இதுவொரு பயங்கர இக்கட்டான நிலையை உருவாக்கும். எனவே கூடுமான வரைக்கும் இலங்கையினுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எங்களால் முடிந்த உதவிகளை செய்கின்றோம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக அகதிகளை இந்தியாவிற்கு அனுப்பாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஏனென்றால், அவர்கள் வந்தால், இந்தியாவிற்கு அதுவொரு பாரமாக அமையும்.

அதேபோல இலங்கையினுடைய பொருளாதார வீழ்ச்சியினால், மக்களை பலிகேடாக்குவதோ? அல்லது அவர்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதோ? அல்லது கடந்து வருகின்ற வேலைகளை செய்வதோ? ஒரு பாரிய பிரச்னையை சமூகத்தில் உருவாக்கும் என்பதை நாம் எடுத்து சொன்னோம். அவரும் எடுத்து காட்டினார். ஆகவே இதற்கு பிறகு இலங்கைக்கு நிறைய உதவிகளை செய்வதாக அவர் சொல்லியிருக்கின்றார்.

இந்த பொருளாதார நெருக்கடி தொடருமாக இருந்தால், இந்தியா எப்படியான உதவிகளை இலங்கைக்கு வழங்கும்?

 

srilanka crisis

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொருளாதார உதவியை ஒரு நாடு எந்த நாளும் செய்துக்கொண்டிருக்க முடியாது.

இலங்கை இன்று சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்கின்றது. சர்வதேச நாணய நிதியத்திலே அவர்கள் சொல்கின்ற சில கட்டுப்பாடுகளை இலங்கை அனுசரித்து, அதை முறையாக பேணி இந்த பொருளாதார சிக்கலிலே இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர, எந்தநாளும் இன்னொருத்தர் கடன் கொடுப்பார், அதை வாங்கி நாங்கள் செலவளிக்க முடியும் என்ற கோட்பாட்டில் இருந்தால், ஒரு நாளும் இலங்கை முன்னேற முடியாது. ஆகவே இந்த சூழ்நிலையிலே நாங்கள் சொல்வது மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டும் என்பதுதான்.

13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதிகார பரவலாக்கலை இலங்கை ஒத்துக்கொள்ள வேண்டும். தமிழர் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். எங்களது மலையக மக்களுடைய பல்வேறு பிரச்னைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களிலே நாங்கள் எடுத்துக் கூறியுள்ளோம்.

அதேநேரத்தில் மலையக மக்களை பொருத்தவரை எங்களுயை பிரச்னையை நாங்கள் சொல்லும் போது, ஒரு ஆவணமொன்றை தயாரித்து அவர்களுக்கு கொடுத்திருக்கின்றோம்.

இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வந்து அடுத்த வருடத்துடன் 200 வருடங்கள் பூர்த்தியாகின்றது. 2023ம் ஆண்டு அந்த வருடத்தை நாங்கள் கொண்டாடுவதற்காக எத்தனித்திருக்கின்றோம். அதற்காக இந்திய அமைச்சர் ஒருவரையும் அனுப்பும் படி நாங்கள் அவரிடம் கேட்டிருக்கின்றோம். அனுப்புவதாக அவர்சொல்லி இருக்கின்றரர்.

அதேபோன்று, மலையகத்திலே கல்வி, சுகாதாரம், பின்னடைவை சந்தித்துள்ள கலாசாரம், போன்ற பல்வேறு பகுதிகளுக்கு உதவிகளை செய்வதாகவும் அவர் சொல்லி இருக்கின்றார்.

ஆசிரியர் பரிமாற்றங்கள். கணித விஞ்ஞான பாடங்களுக்கு இலங்கையிலே ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக இருக்கின்றது இப்போது. அதனை ஈடு செய்வதற்கான பயிற்சிகளை கொடுப்பதற்கு அங்கிருந்து ஆசிரியர்களை இங்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு கூறியுள்ளார்.

இந்த பொருளாதார நெருக்கடி, அதேபோன்று இதற்கு முன்னர் மலையக மக்கள் எதிர்நோக்கி சம்பள பிரச்னை, இன்றும் மக்கள் அடிமைகளை போன்று வாழக்கூடிய ஒரு சூழ்நிலை, இவ்வாறான அனைத்து பிரச்னைகளுக்குமான எதிர்கால நடவடிக்கைகள் எவ்வாறு அமையும்?

நிச்சயமாக இலங்கையினுடைய பொருளாதாரத்தை முதலில் சீர் செய்ய வேண்டும். இலங்கையினுடைய பொருளாதாரத்தை சீர்ப்படுத்த வேண்டும். இன்று ரஷ்யா - யுக்ரேன் பிரச்னையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது.

ஆகவே உலகத்துடைய சமகால அரசியல் சூழ்நிலை மாற வேண்டும். இலங்கையினுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது இலங்கையிலே ஒரு நிலையான அரசாங்கம் அமைய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டும்.

அல்லது இந்த அரசாங்கம் தொடர்ந்தும் செய்யுமானால், இதற்கு அனுபவசாலிகளுடைய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று அனுபவசாலிகளின் ஆலோசனைகளை அரசாங்கம் பெற்றுக்கொள்வதில்லை.

ஆகவே இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் அரசாங்கம் மீண்டும் மீண்டும் குழிக்குள் விழாமல் இதை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

https://www.bbc.com/tamil/sri-lanka-60909937

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட நாட்டை சுற்றி,  சிங்கள அரசியலை அதள பாதாளத்தில் இருந்து காப்பாற்ற எவ்வளவு நடக்கிறது !!! 
எங்கட தமிழ் அரசியல் தரப்பு என்ன "ஹேரை" புடிங்கிக்கொண்டு இருக்கு. 🤬
இந்தியா கடைசி பஸ்ஸில் பின்சீட்ட  பிடிச்சு பலாலி, திருகோணமலை, மன்னார்,  இன்னும் சில தீவுகள் இப்படி எல்லாவற்றையும் தன்னகத்தே கையடக்க கடைவிரிக்க, எங்கட மைனர் குஞ்சு அரசியல்வாதிகள் 13ஐ எழுதி கொடுத்துப்போட்டு வாய் / சூ ரெண்டையும் பொத்திக்கொண்டு இருக்கிறார்கள்!!
டக்ளஸுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட இந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லை.
பொது மக்களோடு ஒரு கலந்துரையாடல், சமூக அமைப்புகளோடு ஒரு கருத்தாடல், புலம்பெயர் தமிழர்களின் ஒரு அபிலாஷை ஒன்றையும் உள்வாங்காத முட்டாள் அரசியல்வாதிகள்.
தமிழரின் மூலவளங்கள் இதோடு காலி!!

74 வருஷ தமிழர் பிரச்சினை குறித்த எந்த ஒரு கரிசனையும் இல்லை.
சுமந்திரனை மட்டுமே மையமாக வைத்து தமிழர் பிரச்சினை பேசப்படுவது தமிழனாக பிறந்த ஒவ்வொருவனும் வெட்கி தலை குனியப்பட வேண்டிய தருணம்!!!!

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் பென்சனியர் கடடைகள். நமக்காக பேச இளஞ்சிங்கங்கள் முன்  வர வேண்டும் .  . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிலாமதி said:

எல்லாம் பென்சனியர் கடடைகள். நமக்காக பேச இளஞ்சிங்கங்கள் முன்  வர வேண்டும் .  . 

விடமாட்டாங்கள், ஆனால் எதிர்காலத்தில் மாற்றம் நடக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

விடமாட்டாங்கள்

🤔

பென்சனியர்கள் அரசியல் தலைவர்களாக இருந்தால் தீமை தான் போலிருக்கிறது. பென்சன் வயதை கடந்த புரினை இதற்கு உதாரணம் சொல்லலாம் மற்றவர்களை வர விடவும் மாட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Sasi_varnam said:

சுமந்திரனை மட்டுமே மையமாக வைத்து தமிழர் பிரச்சினை பேசப்படுவது தமிழனாக பிறந்த ஒவ்வொருவனும் வெட்கி தலை குனியப்பட வேண்டிய தருணம்!!!!

திரும்ப திரும்ப சொல்வது ஒன்றுதான் 
உங்களுக்கு தரப்பட்ட தானை தலைவன் சுமந்திரன், விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ அவரோடு தான் குடும்பம் நடத்தியாகவேண்டும், வந்த வேலை முடியும் வரை எவர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.