Jump to content

இது நாங்கள் இளைப்பாறும் நேரம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மெல்பேர்னில் - 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி - இடம்பெற்ற அற்புதமான சம்பவம் ஒன்றுக்கான பதில் நிகழ்வை, சரியாக 13 வருடங்களில் இந்த ஆஸ்திரேலிய மண், இன்று என் கைகளில் தந்து கணக்குத் தீர்க்கும் என்று நான் நம்பியிருக்கவேயில்லை. ஆனாலும், காலம் எப்போதும் யாருக்கும் கடன் வைக்காது என்பதை, இன்று மாலை பெடரேஷன் சதுக்கத்திலுள்ள கோப்பிக்கடையிலிருந்து கப்பிச்சீனோவை உறிஞ்சும்போது உற்சாகமாக உணர்ந்துகொண்டேன். 

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், முள்ளிவாய்க்காலை இராணுவ ஆட்லறிகள் கிட்டத்தட்ட முழுதாக விழுங்க ஆரம்பித்திருந்தன. தமிழ் நெற்றும் புதினம் இணையத்தளமும் சாவின் எண்ணிக்கைகளை சலாகை வரைவில் போட்டு, கணக்குச் சொல்லிக்கொண்டிருந்தன. வெளிநாடுகளிலிருந்த தமிழர்கள், யார் யாரோ கால்களிலெல்லாம் விழுந்தார்கள். முகவரி தெரியாத கவுன்ஸிலர்கள் கைகளையெல்லாம் பிடித்தார்கள்.

மெல்பேர்னிலும் ஆர்ப்பாட்டங்கள், மெழுகுவர்த்தி ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் என்று எத்தனையோ நிகழ்வுகள் நடந்தேறின. ஆஸ்திரேலிய அரசுதான் செவிசாய்ப்பாதாகத் தெரியவில்லை. ஆஸ்திரேலிய மக்களிடமாவது பிரச்சினையைச் சொல்லி, அவர்களின் ஊடாக அரசுக்கு கொடுத்து, போரை நிறுத்தலாம் என்று அப்பாவிகளாக யோசித்தார்கள்.

இதன் ஒரு பகுதியாக - ஏப்ரல் 4 ஆம் திகதி - மெல்பேர்ன் மேற்கிலுள்ள 
Footscray பிரதேசத்திலிருந்து வாகன பவனியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. வாகன பவன ஒழுங்கின்படி, சிறிலங்கா அரசின் போரை நிறுத்தக்கோரும் பதாகைகளை வாகனத்தின் வெளிப்புறமாகக் கட்டிக்கொண்டு, தமிழீழத் தேசியக்கோடியோடு 
Footscray பிரதேசத்திலிருந்து மெல்பேர்ன் நகர் ஊடாக தென்கிழக்கிலுள்ள Dandenong பிரதேசத்தைச் சென்றடைவது. 

நண்பனது காரில் அவனையும் அவனது தாயாரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டேன். சனிக்கிழமையென்று நினைக்கிறேன். அதிகம் நெரிசல் இல்லாத மெல்பேர்ன் தெருக்களில் எங்களது வாகனங்கள் அனைத்தும் ஓரளவுக்கு ஒன்றன் பின் ஒன்றாக ஓடியது. மெல்பேர்ன் நகருக்குள் புகுந்ததும், வாகனங்கள் சிக்னல் சந்திகளால் பிரிந்துகொண்டன். 

நான் செலுத்திக்கொண்டிருந்த வாகனம் மெல்பேர்ன் நகருக்குள் தனித்து ஓடத்தொடங்கியது. அப்போது, மெல்பேர்ன் Russel வீதியிலிருந்து Bourke வீதி வழியாகச் சென்று, Spring வீதியிலுள்ள விக்டோரிய நாடாளுமன்றத்தின் முன்பாகச் சென்று, நகரிலிருந்து வெளியேறுவதாக நானும் நண்பனும் முடிவெடுத்தோம். மெல்பேர்ன் நகருக்குள் வார விடுமுறையன்று திரண்டிருந்த மக்களுக்கு ஓரளவு எமது வாகனத்தில் கட்டியிருந்த பாதாகையை - அதிலிருந்து செய்தியை - காண்பிப்பது அந்தப் பயணப் பதையின் நோக்கமாக இருந்தது. 

ஆனால், அன்றைய தினம் மதியம், சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக - அது நடத்திக்கொண்டிருந்த போருக்கு ஆதரவாக - மெல்பேர்ன் சிங்களவர்கள் ஏற்பாடு செய்திருந்த மிகப்பெரியதொரு ஆர்ப்பாட்டம், விக்டோரிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது என்பது, Bourke வீதிக்குள் வாகனத்தை திருப்பிக்கொண்ட சில நிமிடங்களில் தெரிந்துவிட்டது. விக்டோரிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக பெரும் பைலா கோஷ்டியொன்று, கூத்தும் கும்மாளமும் அடித்தபடி ஆக்ரோஷித்துக்கொண்டிருந்தது. சிறிலங்கா கிரிக்கெட் அணி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கும் முதல் 15 ஓவர்கள்போல, எங்கு பார்த்தாலும் சிங்களக்கொடிகள். குறைந்தது இரண்டாயிரம் பேரிருப்பர். 

அத்தனை பேரையும் எதிர்கொண்டபடி, புலிக்கொடியுடன் ஒரு வாகனம் போனால் எப்படியிருக்கும்? எங்களை நோக்கி வேட்டை நாய்கள் போல ஓடிவந்தார்கள். எப்படியாவது காரைப் பிரித்து, உள்ளிருப்பவர்களை உப்புப் புளிபோட்டு தின்றுவிடலாம் என்ற வெறி, ஓடிவந்த ஒவ்வொரு சிங்களவனின் கண்களிலும் பார்த்தேன். தவறான இடத்திற்குள் நுழைந்துவிட்டோமே என்று சுதாரித்துக்கொள்வதற்குள், கொடியை பிய்த்துக்கொண்டு ஓடினார்கள். கட்டியிருந்த பதாகையை கழற்றிக்கொண்டு ஓடினார்கள். காரை முதலில் உதைந்தார்கள். தள்ளினார்கள். ஒரு கட்டத்தில் காரின் மீது ஒவ்வொருத்தராக ஏறி ஓடினார்கள். ஒருவன் ஏறி நின்று, கையில் கிடந்த தடியால் கண்ணாடியை ஓங்கி ஓங்கி குத்தினான். ஒரு holden commodore குறித்த மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்த நாள் அன்றுதான் எனலாம். கண்ணாடி உடையவில்லை. ஆனால், காரின் கூரையின் மீது ஏறிக்குதித்து, இயன்றளவு வளைத்துவிட்டார்கள்.

எங்கிருந்தோ ஓடிவந்த பொலீஸார் கடுகுப்புகையடித்து, அத்தனைபேரையும் கலைத்துவிட்டு, எங்களது காரைக் கவனமாக மெல்பேர்ன் நகரிற்கு வெளியே பாதுகாப்புடன் அழைத்து வந்து, வெளியேற்றினார்கள். 

அன்று எங்களது காரின் மீது ஏறி ஓடியவர்களும் - 

யுத்தம் முடிந்த பிறகு தலைநகர் கன்பராவுக்குச் சென்று களியாட்டம் போட்டவர்களும் - 

கோட்டபாய ஜனாதிபதியாகவேண்டும் என்பதற்காக சிறிலங்காவுக்கு டிக்கெட்டு எடுத்துச் சென்று வாக்களித்துவிட்டு வந்தவர்களும் - 

கோட்டபாய வெல்லவேண்டும் என்று மெல்பேர்னில் புளகாங்கிதம் பொங்க கூட்டம் போட்டவர்களும் - 

இன்று மெல்பேர்ன் பெடரேஷன் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கில் கூடினார்கள். 

"கோட்டா ஹொற ஹொற" என்று கூவினார்கள். "ராஜபக்ஷக்களை வீட்டுக்கு அனுப்பாதீர்கள். ஜெயிலுக்கு அனுப்புங்கள்" - என்று குழறினார்கள். "இனியும் எங்கள் நாட்டினை இந்தக் கொடியவர்களின் கைகளில் விட்டுவைக்கமுடியாது" - என்று கன்னத் தசை துடிக்கக் கத்தினார்கள்.

மூன்று மணிக்கே ஆர்ப்பாட்டத்தில் ஆஜராகியிருந்தேன். 

இன்று சிங்கள தேசத்தினை சில்லு சில்லாக சிதைத்துக்கொண்டிருப்பவன், அன்று தமிழர்களின் தேசத்தை யுகத்துக்கும் மீளமுடியாதபடி கருக்கியபோது, அவனுக்கு ஆதரவாக எங்களது காரின் மீது ஏறி நின்றவர்களின் கண்கள் எங்காவது தெரியுதா என்று பார்த்தேன்.

"இன்னும் இருபது கிலோ மீற்றர்தானிருக்கு. அதுக்குப் பிறகு முழு நாடும் எங்களுக்கு. பிறகு என்னடா செய்வாய் நாயே" - என்று பொலீஸின் பாதுகாப்போடு கூட்டிச்சென்ற எங்களது - காரின் மீது காறித்துப்பியவனின் கண்கள் எங்காவது தெரியுதா என்று பார்த்தேன். 

மே 18 ஆம் திகதி போர் முடிந்த பிறகும், இருபதாம் திகதி வரைக்கும், இதே பெடரேஷன் சதுக்கத்தில் செய்வதறியாது, புலிக்கொடியுடன் ஆங்காங்கே உட்கார்ந்திருந்த சிலரைப் பார்த்து, அவ்வழியால் நடு வீரலைக் காண்பித்துவிட்டுப்போன - சிங்க ஸ்டிக்கர் போட்ட - வாகனச் சாரதிகள் எங்காவது தெரிகிறார்களா என்று பார்த்தேன். 

போர் முடிந்து எத்தனையோ வருடங்களான பிறகும், மே மாதம் வந்தால், தமிழ் மக்கள் செத்த உறவுகளுக்கு சுட்டியில் தீபம் ஏற்றுவதற்கே உரிமை மறுக்கப்பட்டிருந்த வேளையில், கிரிபத் சட்டியோடு அலைந்த சிறிலங்கா என்ற தேசத்தின் அற்புதப் பிறவிகளின் கண்கள் எங்காவது தெரியுதா என்று பார்த்தேன்.

இவ்வளவும் ஏன், மகிந்தவிற்கு பக்கத்தில் நின்று படம் எடுப்பதையெல்லாம் பிறவிப்பெரும் பயனாகவும் - அவர் குடும்பமே தமிழ் மக்களின் குலம் செழிக்க வந்த தலைவர்கள் என்றும் - வாய் நீர் வடியச் சொல்லித் திரிந்த, கோட்டாவின் கோடரிகளைக்கூடத் தேடிப்பார்த்தேன்.

யாரையும் காணவில்லை. 

பெடரேஷன் சதுக்கத்தில் ஒரு கோப்பிக் கடையுள்ளது. சும்மா சொல்லப்படாது. அதில், இன்று எதை வாங்கிக்குடித்தாலும் நல்ல சுவையாகவே இருந்தது.

large.BC56E5F7-85F8-49B1-A4E6-FA0D48130568.jpeg.17772fffa8fbf9b2200abcd2bbdf37e3.jpeg

https://www.facebook.com/584910603/posts/10166745393640604/?d=n

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சாக்களின் அரசிற்கு எதிராக சர்வதேச ரீதியில் வலுக்கும் போராட்டம். பிரித்தானிய தலைநகர் லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் போராட்டம்.

 

ஜேர்மனிய தலைநகர் பெர்லினில்...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் இருக்கே காலம் - அது ரெண்டு கையிலயும் புழுதியும் விபூதியும் படிச்சு உக்காந்திருக்கு எவ்வளவு பெரிய வெற்றியா இருக்கட்டும்! சூ!மறைஞ்சு போ'ன்னு புழுதியடிச்சு வெற்றிய மறைச்சு விட்டுப் போயிருது எவ்வளவு பெரிய துன்பமாயிருக்கட்டும்! 'சூ!மறந்து போன்னு விபூதியடிச்சுத் துன்பத்த மறக்கடிச்சிட்டுப் யோயிருது.

காலத்துக்குண்ணு மாறாம இருக்கிற கொணம் இது ஒண்ணுதான்.

யாரு பொறந்தாலும் ஆகாயத்துல வெள்ளி மொளைக்கிறதுமில்ல யாரு செத்தாலும் சூரியன் நெஞ்சப்புடிச்சு நிண்டு போறதுமில்ல..

காலம்தான் ஞானம்; காலத்தை போல மனசு வச்சிருக்கிறவன் ஞானி..

     -வைரமுத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அரசன் அன்றறுப்பான். தெய்வம் நின்றறுக்கும்!

 

கொலை மிரட்டல் - பிரிகேடியர் பிரியங்க - வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் - தீர்பும்  பிடியாணையும்... - GTN

 

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

Y4hZIVQ1?format=jpg&name=small

இது போனஸ் ⇩ 🤣

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் ஒரே மாதிரி பைலாதான் போடுறாங்கண்ணே.....ஒரே மருந்துதானோ/

கழுத்தறுப்பானும் இப்ப லண்டனிலை அசைலம் அடிச்சிருப்பாரே/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, alvayan said:

எதுக்கும் ஒரே மாதிரி பைலாதான் போடுறாங்கண்ணே.....ஒரே மருந்துதானோ/

கழுத்தறுப்பானும் இப்ப லண்டனிலை அசைலம் அடிச்சிருப்பாரே/

இஞ்ச கனடாவில் கனபேர் கையத் தூக்கியிருக்கினம. அதில கனக்க சிங்கங்களும் தொப்பிகளும் இருக்கினம். எல்லாருமே பெரிய பெரிய ஆக்கள்.  காசும் அதிகாரத்திலும் புரண்ட பெரிய ஆக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

இஞ்ச கனடாவில் கனபேர் கையத் தூக்கியிருக்கினம. அதில கனக்க சிங்கங்களும் தொப்பிகளும் இருக்கினம். எல்லாருமே பெரிய பெரிய ஆக்கள்.  காசும் அதிகாரத்திலும் புரண்ட பெரிய ஆக்கள். 

கனடா நியூசு உங்களுக்கு அத்துப்படி....கண்டுபிடிக்கிறதிலை விண்ணன்தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

கனடா நியூசு உங்களுக்கு அத்துப்படி....கண்டுபிடிக்கிறதிலை விண்ணன்தான்....

ஏனென்றால் நான் வசிப்பது கனடாவில். எனது நண்பர்கள் பலர்  இத்துறை(?)யுடன் தொடர்புபட்டவர்களே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இது நாங்கள் இளைப்பாறும் நேரம்!

2009 மேயில் இருந்து தமிழர்கள் இளைப்பாறிக்கொண்டுதானே இருக்கின்றார்கள். இப்ப சம்மருக்கு சிறிலங்காவுக்கு ஹொலிடேயில் போய் கோவில் திருவிழா எல்லாம் பார்த்து காலாற இளைப்பாறமுடியவில்லையே என்ற கவலையைத் தவிர வேறு என்ன இருக்கும்?

சிங்களவர் ஒரு தேக்கரண்டி சம்பலுக்கு 20 ரூபா கொடுத்துச் சாப்பிடும் நிலை இன்று. நாளை பாணும் சம்பலும் கூட இல்லையென்றாலும் இனவாதத்தையும், பெரும்பான்மைச் சிந்தனையையும் இழக்கமாட்டார்கள். பொலிஸும், இராணுவமும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேரும் நிலை வந்தால் அரச சொத்துக்களுடன்,  தமிழர், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேர்த்துத்தான் கொள்ளையடிப்பர். 

அப்பவும் தமிழரும், தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளும் இளைப்பாறிக் கொண்டிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

2009 மேயில் இருந்து தமிழர்கள் இளைப்பாறிக்கொண்டுதானே இருக்கின்றார்கள். இப்ப சம்மருக்கு சிறிலங்காவுக்கு ஹொலிடேயில் போய் கோவில் திருவிழா எல்லாம் பார்த்து காலாற இளைப்பாறமுடியவில்லையே என்ற கவலையைத் தவிர வேறு என்ன இருக்கும்?

சிங்களவர் ஒரு தேக்கரண்டி சம்பலுக்கு 20 ரூபா கொடுத்துச் சாப்பிடும் நிலை இன்று. நாளை பாணும் சம்பலும் கூட இல்லையென்றாலும் இனவாதத்தையும், பெரும்பான்மைச் சிந்தனையையும் இழக்கமாட்டார்கள். பொலிஸும், இராணுவமும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேரும் நிலை வந்தால் அரச சொத்துக்களுடன்,  தமிழர், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேர்த்துத்தான் கொள்ளையடிப்பர். 

அப்பவும் தமிழரும், தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளும் இளைப்பாறிக் கொண்டிருப்பார்கள்.

அது சிங்கள்ளர்கள் வழமையாய் செய்வதுதானே......அவர்களுக்கு பஞ்சம் வரும்போதெல்லாம் யாழ்தேவியை மறித்து கொள்ளை அடிப்பது, கொழும்பில் தமிழர் கடைகளை உடைப்பது, வீடுகளுக்குள் புகுந்து சூறையாடுவதுதானே அவர்களின் வழக்கம்......நாங்களும் சளைத்தவர்களல்ல. அடிவாங்கி அவலத்தோடு கப்பலில் யாழ்ப்பாணம் வந்தாலும் அடுத்த மாதமே "தொலைத்ததை அந்த இடத்தில்தான் எடுக்க வேண்டும்" என்று ஒருமாதத்தில் மீண்டும் போய் விடுவோம்மெல்லோ......!   🤔

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
    • இந்த திரியில் சரியாக ஒரு கிழமைக்கு பின் வந்து கருத்து எழுதுகிறேன்.
    • நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை? ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣 ஓம்….இன்னும் கனக்க இருக்கு….அண்ணனின் டகால்டி வேலைகளை …… விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்🤣
    • பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்? போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி? பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார். இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள். நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம். அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம்.  வட்டுக்கோட்டை!🤣
    • செந்தமிழன் சீமான் அண்ணா இம்முறை போட்டியிட்ட மக்களவைத் தொகுதி எது?  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.