Jump to content

கோட்டாபய தலைவர் கைகளால் செத்திருக்கலாம்!! சிங்கள நடிகர் அதிரடி!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய தப்பியோடிய படையினரில் ஒருத்தர் எந்த தகுதியும் இன்றி அமரிக்கன் இரவு பலசரக்கு கடையில் வேலை பார்த்த ஒருத்தர் தமையனின் அரசியல் செல்வாக்கால் மீண்டும் இலங்கை  வந்தவர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு நான் சொல்ல வருவது என்னவெனில் விடுதலைப்புலிகள் கொலையாளிகள் அல்ல. தமது மண்ணுக்கும் மக்களுக்குமாய் போராடியவர்கள்.தம் உயிரை துச்சமென மதித்து பல  வீரச்செயல்களை செய்தவர்கள். விடுதலைப்புலி இயக்கம் சிங்கள மக்களையோ சிங்கள அரசியல்வாதிகளை கொலை செய்வதற்காக உருவாக்கப்படவில்லை.

கோதாரி விழ....

இவ்வளவு கஷ்டங்கள் வந்தும் தமிழர்களை பற்றி ஏதாவது கதைக்கின்றானா பாவி? தமிழர் உரிமை/பிரச்சனைகள் பற்றி ஏதாவது வாய் திறந்து சொன்னானா? தன் இனத்தின் வயிறு காயுது என்றவுடன் துடிக்கிறான்.நா.....

இப்பிடியானவங்கள் இருக்க யாழ்ப்பாணத்திலை கோ கோத்தபாய எண்டு எங்கடையள் கத்துதுகள்....ஏனெண்டு எனக்கு விளங்கேல்லை? கோத்தா இருந்தால் என்ன போனால் என்ன எல்லாம் ஒண்டுதானே?

என்ன நான் சொல்லுறது சரிதானே? 😎

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இவருக்கு நான் சொல்ல வருவது என்னவெனில் விடுதலைப்புலிகள் கொலையாளிகள் அல்ல. தமது மண்ணுக்கும் மக்களுக்குமாய் போராடியவர்கள்.தம் உயிரை துச்சமென மதித்து பல  வீரச்செயல்களை செய்தவர்கள். விடுதலைப்புலி இயக்கம் சிங்கள மக்களையோ சிங்கள அரசியல்வாதிகளை கொலை செய்வதற்காக உருவாக்கப்படவில்லை.

எங்கள் போராட்டதைப்பற்றியும், எங்களைப்பற்றியும், தலைவரைபற்றியும் தவறான கருத்துக்களை சொந்த நாட்டிலும், சர்வதேசத்திலும் பரப்பியே ஆதரவு பெற்று நம்மை அழித்தார்கள். நாம் விடும் வாக்கு பொல்லாதது, அது திரும்பி வந்து நம்மைத்தாக்கும். அன்று அவர் கொலைகாரன் என்று பிரச்சாரம் செய்தார்கள் ஆனால் இன்று அவர் கையாலேயே செத்திருக்கலாம் என்று பகிரங்கமாக அறிக்கையிடுமளவிற்கு நாடு கொடுமையிலுள்ளது. என் தலைவனின் கையில் போராடும்பொழுது கைதியாக பிடிப்பட்ட சிங்கள இராணுவ வீரரை கேட்டால் சொல்வார்கள் அவரின் பெருந்தன்மையை. இந்த கோத்தா தானும் பொன்சேகாவும் போன வாகனத்திற்கு குண்டு வைத்து தாக்கியதாக பொன்சேகாவே; "அந்த தாக்குதலில் தான்மட்டுமே காயமடைந்ததாகவும், கோத்தா சிறு காயங்களை அடைந்ததாகவும்" ஒரு சமயம் கூறியிருந்தார். அதை காரணமாக்கி தமிழரை அழிக்க முடிவெடுத்து  இனவழிப்பு செய்தார் கோத்தா என்றே நான் நம்புகிறேன். இன்று புடின், உக்ரேயின் மீது போர் தொடுக்க கூறும் காரணமும், போர் செய்யும் விதமும் அன்று எமக்கு நடந்தவைகளோடு ஒத்துப்போகின்றன. இனவழிப்பு எங்கே நடந்தாலும் அதன் காரணங்களும் போக்கும் ஒரே மாதிரியாகவே இருக்கும். நாலும் நடந்து முடிந்த பின் தான் நல்லதும் கெட்டதும் புரியும், யாரும் சொன்னால் ஏளனம். ஆனால் முடிந்தபின் திரும்பிப்போய் திருத்த முடியாது அறுவடைதான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பை கண்டதும்...மனதில் பட்டதை ஒரு கிறுக்கல்...அவ்வளவுதான் நண்பர்களே

 

கண்ணுக்கு முன்னே நீங்கள்..

பனங்கழி….சம்போ

பனங்கழி…சோப்பு

பனங்காய்  …சாப்பாடு

பற்றி எரியும் வயிறை நிரப்ப

பட்டபாடு எங்களுக்கு தெரியும்

 

அப்ப  உங்களுக்கு

பச்சை  அரிசியும் இருந்தது..

பகட்டய் பாவிக்க சோப்பும் இருந்தது..

பகரும் பீட்சாவும்

பசியாறியபின்  நாய்க்கும் போட்டீர்கள்..

பாணைப் பந்தாடியும் மகிழ்ந்தீர்கள்..

 

பச்சோந்தியாய்  வாழும் இனமொன்று..

பட்டினியால் வாழுமினத்திடம்

பகற் கொள்ளை அடித்தது….

பரிதவிக்கும் பெண்களை

பசியாராச் சாப்பிட்டுவிட்டு

பகிடி விட்டுச் சிரித்தது..

 

வீரவன்சவுடன் சேர்ந்து

வெட்டிபிரித்து வடகிழக்கை

வெட்டிச் சாய்ந்த உயிர்கள்

வன்னியில் கிடக்க

வந்தேறு குடிகள்

வவுனியாவில் பச்சரிசிப்

பால்சோறு செய்ததை மறக்கமுடியுமா

 

இப்ப உங்களுக்கு

சோறில்லை

பாண் இல்லை

கரண்டில்லை

காசில்லை…வாங்க

காசுமில்லை…எனினும் நாம்

எப்பவும்போல் ..இப்பவும்

ஏனெனில்

அரசன் அன்றறுப்பான்

தெய்வம் நின்ற்றுக்கும்..

இப்ப கண்ணுக்கு முன்னே…நீங்கள்.

  • Like 8
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

கோத்தபாய தப்பியோடிய படையினரில் ஒருத்தர் எந்த தகுதியும் இன்றி அமரிக்கன் இரவு பலசரக்கு கடையில் வேலை பார்த்த ஒருத்தர் தமையனின் அரசியல் செல்வாக்கால் மீண்டும் இலங்கை  வந்தவர் .

சுப்பர் மாக்கெட்டில வேலை செய்கிறவர்கள் ஜனாதிபதியாய் வரக் கூடாதோ?.....நல்ல காலம் தலைவர்  இல்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சுப்பர் மாக்கெட்டில வேலை செய்கிறவர்கள் ஜனாதிபதியாய் வரக் கூடாதோ?.....நல்ல காலம் தலைவர்  இல்லை 

 

உங்களுக்கு ஓர் போராளிக்கும் ஓர் நாட்டின் தலைவருக்கும் வேறுபாடு இன்னமும் புரியவில்லை.

என்ன செய்வது…..

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

உங்களுக்கு ஓர் போராளிக்கும் ஓர் நாட்டின் தலைவருக்கும் வேறுபாடு இன்னமும் புரியவில்லை.

என்ன செய்வது…..

 ஈழத்தமிழர்களுக்கு இவ்வளவு அழிவுகள் வந்தும் இன்னும் புலி வன்மத்தை கக்கும் உறவுகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். முகநூல் பக்கம் போனால் தலை வெடிக்கும். இப்படிப்பட்டவர்கள் ஏன் இன்னும் புலம்பெயர் தேசங்களில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை ????? சொந்த நாட்டிற்கு போய் பிரச்சனைகளை தீர்க்க வேண்டியது தானே?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று நினைத்திருக்க மாட்டார் இல்ல, தன் வார்த்தையே தனக்கு எதிராக திரும்பும் என்று. அதிகாரம் தந்த பெருமிதம், எக்காளம், எப்போதும் சிங்கள மக்கள் தன் பக்கம் என்கிற மமதை  அப்படி பேசினார். இன்று தனித்து விடப்பட்டபோது உணர்ந்திருப்பார் தன் நிலையை, ஏனடா கோத்தாவை கொண்டுவந்தோம் என்று? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

சுப்பர் மாக்கெட்டில வேலை செய்கிறவர்கள் ஜனாதிபதியாய் வரக் கூடாதோ?.....நல்ல காலம் தலைவர்  இல்லை 

இனத்தில்  சொந்த நாட்டில் பற்று மிகுந்தவரா இருக்கனும் அல்லது சொந்தமாக படித்து குறைந்தபட்சம் ஒரு பட்டம் ஆவது பெற்று இருக்கனும் சுய சிந்தனையுள்ளவர் ஆக இருக்கணும்  மேலைநாடுகளுக்கும் ஸ்ரீலங்கா இந்தியா போன்ற நாடுகள் உள்ள வித்தியாசமே  இதுதான் 

பக்கத்தில் மோடி பல்கலை கழகம்  படித்தவர் என்கிறார்கள் எந்த பல்கலைக்கழகம் எத்தனையாம் ஆண்டு எவருக்குமே தெரியாது அதே போல் சுமத்திரன் தன்னுடைய படிப்பு சம்பந்தமாக வெளிவிடுவரா அவரால் முடியாது 😃இந்த  கோத்தா இந்த நாடே வேண்டாம் என்று USA சிட்டிசன் எடுத்தவர் எங்களுக்குத்தான் சிங்களவன் கலைத்தான் அவருக்கு யார் கலைத்தார்கள் சும்மா விளங்கியும் எதிர் கருத்து வைக்கணும் என்பதற்காக வைக்க கூடாது .

இப்படியான அரசியலில் எந்த நாடும் உருப்படாது உலகத்தில் உள்ள மிகப்பெரிய கொம்பனிகளில் தலைமை பொறுப்பு இந்தியர்கள் கைகளில் ஆனால் அதே கொம்பனிகள் இந்தியாவில் தலைமைபீடத்தை அமைத்தால் ஒருவருடத்தில் உலகில் காணமால் போய் விடும் காரணம் அரசியல் அதுவும் ஒருவகையான பரம்பரை அரசியல் இங்கும் ஸ்ரீலங்காவை நாசமாக்கிய சிங்கள தலைவர்கள்  யார் என்று தேடினால் விளங்கும் .

Edited by பெருமாள்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2022 at 07:19, குமாரசாமி said:

இவருக்கு நான் சொல்ல வருவது என்னவெனில் விடுதலைப்புலிகள் கொலையாளிகள் அல்ல. தமது மண்ணுக்கும் மக்களுக்குமாய் போராடியவர்கள்.தம் உயிரை துச்சமென மதித்து பல  வீரச்செயல்களை செய்தவர்கள். விடுதலைப்புலி இயக்கம் சிங்கள மக்களையோ சிங்கள அரசியல்வாதிகளை கொலை செய்வதற்காக உருவாக்கப்படவில்லை.

கோதாரி விழ....

இவ்வளவு கஷ்டங்கள் வந்தும் தமிழர்களை பற்றி ஏதாவது கதைக்கின்றானா பாவி? தமிழர் உரிமை/பிரச்சனைகள் பற்றி ஏதாவது வாய் திறந்து சொன்னானா? தன் இனத்தின் வயிறு காயுது என்றவுடன் துடிக்கிறான்.நா.....

இப்பிடியானவங்கள் இருக்க யாழ்ப்பாணத்திலை கோ கோத்தபாய எண்டு எங்கடையள் கத்துதுகள்....ஏனெண்டு எனக்கு விளங்கேல்லை? கோத்தா இருந்தால் என்ன போனால் என்ன எல்லாம் ஒண்டுதானே?

என்ன நான் சொல்லுறது சரிதானே? 😎

பெரியவர் இப்பிடி எழுத்திறதிற்கு மன்னிக்க வேணும்.

 எங்களுக்கு முட்டையில் மயிர் புடுங்கிறதே வேலையாய் போச்சு .

தலைவரின் கையால் இவன் செத்திருக்கலாம் எண்டு அவன் சொன்னது ஓரளவிற்கேனும்  முழுமையான  அங்கீகரிப்பின் ஒரு பகுதியாக தென்படவில்லையா.

 பல்கலையில் எங்கள் Batch  இல் 250 பேர் , சரி அரைவாசி தமிழும் சிங்களமும் (1979 நடப்பு இது) .

Whatsapp குரூப் வைச்சிருக்கிறம். ஒரு 75% ஆன ஆக்கள்  இருக்கினம்.

 அதில Putin  Hague war Crime Tribunal க்கு போக வேண்டி வரும் என்று இரண்டு நாட்களுக்கு  முன்பு  ஒருவன் பதிவிட , ராஜபக்ச சகோதரர்களையும் அதில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும் என்று  முதல் தடவையாக ஒரு சிங்கள நண்பன் பதிவிட்டிருக்கிறான் .

2009 இல்  கதவைத் தட்டிய சந்தர்ப்பம் , மீண்டும் ஒரு முறை கதவைத் தட்டி நிற்பதாக உணர்கிறேன்.

 எங்களுக்கு என்ன வந்தது என்ற அலட்சிய மனோபாவத்தைத் துறந்து,  பக்கத்து வீட்டுக் காரனுடன் நட்பை மீண்டும் கட்டி எழுப்பி, எமது பிள்ளைகள் எமது நாட்டில் நிம்மதியாகக் வாழ்வதற்கான வழிவகைகளை அமைப்பதில் எமக்கு இருக்கக் கூடிய தார்மீகப் பொறுப்புகளை பற்றி சீரியஸாக யோசிப்போமா….

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

இது 12 ஆண்டுகளுக்கு முன்னர், வளரி தொலைக்காட்சிக்காக ஒளிப்பதிவான ஒரு நிகழ்ச்சி, இன்றைய நிலைவரத்தோடும், பொருந்திப்போகிறது.

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தட்டுப்பாடும் பட்டினியும் அங்கே தலை விரித்து ஆடுது .

வெளிநாடுகளில் இருக்கும் நம்மவர் பொருள் சேர்த்து வணங்காமுடியை  வாடகைக்கு அமர்த்தி அங்கே இருக்கும் எல்லோருக்குமே உதவியாக அனுப்பி வைப்பதை பற்றி யோசிக்கலாமே…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, சாமானியன் said:

இன்று தட்டுப்பாடும் பட்டினியும் அங்கே தலை விரித்து ஆடுது .

வெளிநாடுகளில் இருக்கும் நம்மவர் பொருள் சேர்த்து வணங்காமுடியை  வாடகைக்கு அமர்த்தி அங்கே இருக்கும் எல்லோருக்குமே உதவியாக அனுப்பி வைப்பதை பற்றி யோசிக்கலாமே…

வணங்காமுடி ரொம்பவும் பிசி புறோ.

நாங்க நினைத்த நேரத்துக்கெல்லாம் வராது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இது 12 ஆண்டுகளுக்கு முன்னர், வளரி தொலைக்காட்சிக்காக ஒளிப்பதிவான ஒரு நிகழ்ச்சி, இன்றைய நிலைவரத்தோடும், பொருந்திப்போகிறது.

 

ஹாஹா.... இதை மஹிந்தா பார்த்தால் அப்பிடியே ஆடிப்போய்விடுவார். இணைப்புக்கு நன்றி நுணா! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎06‎-‎04‎-‎2022 at 20:21, MEERA said:

உங்களுக்கு ஓர் போராளிக்கும் ஓர் நாட்டின் தலைவருக்கும் வேறுபாடு இன்னமும் புரியவில்லை.

என்ன செய்வது…..

ஏன் ஒரு போராளி தலைவர் நாளைக்கு நாட்டை ஆள கூடாதா? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை ஆளுபவர்க்கு மனித நேயம், நாட்டில் பற்று, மக்களில் அன்பு, உண்மை, மக்களுக்காக உயிரை குடுத்து காப்பாற்றும் பண்பு இருக்கவேண்டும். மக்களை கொள்ளையடித்து, ஏப்பம் விடும் கொள்ளைக்குணம் இருக்கக்கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

ஏன் ஒரு போராளி தலைவர் நாளைக்கு நாட்டை ஆள கூடாதா? 

 

தலைவர் தான் அரசியலுக்குள் வரமாட்டேன் என்று கூறியது உங்களுக்கு தெரியாது. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.