Jump to content

எங்களில் இருந்து மாறுபடும் புதிய தலைமுறை எண்ணங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 2009 யுத்தம் முடிந்தபின் விடுதலைப்புலிகளை கண்களால் பார்த்தறியாத தலைமுறைகள் மெதுவாக இளைஞர்களாகும் இந்த காலப்பகுதியில் அவர்களின் சிந்தனை எங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது.. இது இதற்கு அடுத்த தலைமுறை இன்னும் சில வருடங்களில் இளைஞர்கள் ஆகும்போது இன்னும் மாற்றமடையப்போகுது.. ஆனால் யாழில் எழுதும் நாம் எல்லாம் பெரும்பாலும் புலிகள் இருந்த காலத்தில் சேமித்த ஞபகங்களை சுமந்து கொண்டு அலைபவர்கள்.. எங்களுக்கு இவை அந்நியமாகப்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.. ஆனால் வயதாகும்போது ஊரில் மைனராக இருந்தவர்கள் ஒதுங்கி புது  இளைஞர்கள் மைனர்கள் ஆவதுபோல் நாமும் மெல்ல மெல்ல வயதாவதால் ஒதுங்கும் காலமோ எண்டு சிந்திக்க தோன்றுது.. இது இவர் வயதை ஒத்த பெரும்பாலானவர்கள் சிந்தனைகள் எழுத்துக்களை ஒத்து இருப்பதால் ஒரு உதாரணமாக இணைக்கிறேன்..

 

———————//—————-

தேசியக்கொடி மீதான விமர்சனங்கள், சிறுபான்மையினரை மூன்றாம் தரப் பிரஜையாக நடத்துவது குறித்த முறையீடுகள் எல்லாம் சரி தான். ஆனால் இங்கு கேள்வி ஒன்று தான். யாரோ சிலரால் எமக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றது என்பதற்காக இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடையாளத்தை இழக்கப் போகிறோமா? அல்லது இந்த நாட்டின் மீது எமக்கும் உரிமை இருப்பதை வலியுறுத்தப் போகின்றோமா என்பது தான். 

இது என்னுடைய நாடு. நான் பிறந்து வளர்ந்த நாடு. இந்த நாட்டைக் குறித்து நான் பெருமை அடைவதற்கான அதிகாரம் எனக்கு யாரோ ஒருவர் வந்து தரவேண்டியதில்லை. இந்த நாட்டின் தேசியக்கொடி மீது விமர்சனங்கள் இருந்தாலும் அதற்கு உரிய மரியாதையைக் கொடுக்க நான் பின்னிற்கப்போவதில்லை. அதைப் பெருமையாக உயர்த்திப் பிடிப்பது கடமை என்பதை விட என்னுடைய உரிமை என்பதே சாலப் பொருத்தம். 

யாரோ ஒரு சில இனவாதிகள் வந்து "உனக்கு இந்த நாட்டில் உரிமை இல்லை" என்பதற்காக எல்லாம் எனது உரிமையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. அவர்களையும், அவர்களது சிந்தனையையும் எதிர்ப்பேன். அதற்கான மனத்திடம் என்னிடம் உண்டு. மாறாக ஒரு சில முட்டாள்களுக்காக இந்த நாட்டையும், இனவாதம் இல்லாமல் பழகிய மனிதர்களையும் எதிர்த்து வன்மம் சாதிக்க என்னால் முடியாது. ஒரே இனமாக இருந்தபோதும், பிரதேசவாதம் பேசித் தள்ளிவைத்த தமிழனையும் தெரியும்; "நீ இன்னொரு தாய் வயிற்றில் பிறந்தாலும் என் சகோதரன்" என்று சொன்ன சிங்களவனையும் தெரியும். இனவாதம் என்பது மதவாதம், பிரதேசவாதம், சாதீயம் போன்ற ஒரு குழுமனநிலை தான். அவை எவைவும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

ஆக தேசியக்கொடியைப் Profile pictureல்போட்டு வைத்திருப்பது போன்ற சில்லறைக் காரணங்களுக்காக கேற்றை ஆட்டவேண்டாம். 

https://www.facebook.com/688115846/posts/10159027383970847/?d=n

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 5/4/2022 at 17:33, பாலபத்ர ஓணாண்டி said:

இலங்கையில் 2009 யுத்தம் முடிந்தபின் விடுதலைப்புலிகளை கண்களால் பார்த்தறியாத தலைமுறைகள் மெதுவாக இளைஞர்களாகும் இந்த காலப்பகுதியில் அவர்களின் சிந்தனை எங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது.. இது இதற்கு அடுத்த தலைமுறை இன்னும் சில வருடங்களில் இளைஞர்கள் ஆகும்போது இன்னும் மாற்றமடையப்போகுது.. ஆனால் யாழில் எழுதும் நாம் எல்லாம் பெரும்பாலும் புலிகள் இருந்த காலத்தில் சேமித்த ஞபகங்களை சுமந்து கொண்டு அலைபவர்கள்.. எங்களுக்கு இவை அந்நியமாகப்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.. ஆனால் வயதாகும்போது ஊரில் மைனராக இருந்தவர்கள் ஒதுங்கி புது  இளைஞர்கள் மைனர்கள் ஆவதுபோல் நாமும் மெல்ல மெல்ல வயதாவதால் ஒதுங்கும் காலமோ எண்டு சிந்திக்க தோன்றுது.. இது இவர் வயதை ஒத்த பெரும்பாலானவர்கள் சிந்தனைகள் எழுத்துக்களை ஒத்து இருப்பதால் ஒரு உதாரணமாக இணைக்கிறேன்..

 

———————//—————-

தேசியக்கொடி மீதான விமர்சனங்கள், சிறுபான்மையினரை மூன்றாம் தரப் பிரஜையாக நடத்துவது குறித்த முறையீடுகள் எல்லாம் சரி தான். ஆனால் இங்கு கேள்வி ஒன்று தான். யாரோ சிலரால் எமக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றது என்பதற்காக இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடையாளத்தை இழக்கப் போகிறோமா? அல்லது இந்த நாட்டின் மீது எமக்கும் உரிமை இருப்பதை வலியுறுத்தப் போகின்றோமா என்பது தான். 

இது என்னுடைய நாடு. நான் பிறந்து வளர்ந்த நாடு. இந்த நாட்டைக் குறித்து நான் பெருமை அடைவதற்கான அதிகாரம் எனக்கு யாரோ ஒருவர் வந்து தரவேண்டியதில்லை. இந்த நாட்டின் தேசியக்கொடி மீது விமர்சனங்கள் இருந்தாலும் அதற்கு உரிய மரியாதையைக் கொடுக்க நான் பின்னிற்கப்போவதில்லை. அதைப் பெருமையாக உயர்த்திப் பிடிப்பது கடமை என்பதை விட என்னுடைய உரிமை என்பதே சாலப் பொருத்தம். 

யாரோ ஒரு சில இனவாதிகள் வந்து "உனக்கு இந்த நாட்டில் உரிமை இல்லை" என்பதற்காக எல்லாம் எனது உரிமையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. அவர்களையும், அவர்களது சிந்தனையையும் எதிர்ப்பேன். அதற்கான மனத்திடம் என்னிடம் உண்டு. மாறாக ஒரு சில முட்டாள்களுக்காக இந்த நாட்டையும், இனவாதம் இல்லாமல் பழகிய மனிதர்களையும் எதிர்த்து வன்மம் சாதிக்க என்னால் முடியாது. ஒரே இனமாக இருந்தபோதும், பிரதேசவாதம் பேசித் தள்ளிவைத்த தமிழனையும் தெரியும்; "நீ இன்னொரு தாய் வயிற்றில் பிறந்தாலும் என் சகோதரன்" என்று சொன்ன சிங்களவனையும் தெரியும். இனவாதம் என்பது மதவாதம், பிரதேசவாதம், சாதீயம் போன்ற ஒரு குழுமனநிலை தான். அவை எவைவும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

ஆக தேசியக்கொடியைப் Profile pictureல்போட்டு வைத்திருப்பது போன்ற சில்லறைக் காரணங்களுக்காக கேற்றை ஆட்டவேண்டாம். 

https://www.facebook.com/688115846/posts/10159027383970847/?d=n

 

"பெரும்பாலானோர்" உப்பிடி இல்லை ஐயனே, உந்த வகையறாக்கள் எல்லாம் கொழும்பு மற்றும் இன்னபிற சிங்களப் பகுதிகளில் உண்டாக்கப்பட்டதுகள். உதுகள் ஆயுதவழி விடுதலைப் போர்க்காலத்தில் இருந்தே உப்படித்தான். அதற்காக தமிழீழத்தில் இல்லையென்றில்லை. தாயகப் பகுதிகளிலும் உப்படிப்பட்ட சிலதுகள் இன்னமும் உண்டு.

என்ர தமிழீழ நட்பு வட்டம் எல்லாம் இப்போதும் அதே ஓர்மத்தோடுதான் இருக்கினம் (சிலது தீவுக்குள் உள்ளிருந்தபடியே 'தமிழீழம்' என்று இன்சுராகிராமில் வைத்துள்ளார்கள்). உதெல்லாம் வீட்டில சொல்லிக்கொடுப்பதால் உவ்வாறாகி எழுதுபவையேயொழிய தானாக சிந்தித்து வருபவை அன்று. 

உவங்களில் சிலரின் அப்பன் ஆத்தையெல்லாம் அந்தக் காலத்தில் ஈப்பிநாய்ப்பீ அ சிங்களவர்களின் எடுபிடிகளாக தமிழீழ தேசயெதிர்ப்பு வால்களாக வாழ்ந்ததானதால் சிலர் வஞ்கங்கள், காட்டிக்கொடுப்புகள், தலையாட்டல்கள் போன்ற தேசவஞ்சக குற்றத்திற்காக இலவசமாக கைலாயம் அனுப்பப்பட்டவங்கள். வேறு சிலர் அக்காலம் முதலே 'தமிழீழ எதிர்ப்பு' என பொல்லம்பொத்தப்பட்டதால் தமது தலைமுறைகளுக்கும் அதே நஞ்சையே விதைத்து அவையும் அவ்வாறே வளர்ந்து பிறருக்கும் அவற்றை செலுத்திவிடுகின்றன. வெளிநாடுகளில் வாழும் இதே போன்ற சிலரை நான் இன்சுராகிராமிலும் கண்டுள்ளேன். 

சிலருக்காக எல்லாரும் மாறிட்டினம் என எண்ண வேண்டாம். இவ்வகை உயிரினங்கள் முக்காலத்திலும் வாழும் (எ.கா. யாழ் கருத்துக்களம்). 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2022 at 07:33, பாலபத்ர ஓணாண்டி said:

இலங்கையில் 2009 யுத்தம் முடிந்தபின் விடுதலைப்புலிகளை கண்களால் பார்த்தறியாத தலைமுறைகள் மெதுவாக இளைஞர்களாகும் இந்த காலப்பகுதியில் அவர்களின் சிந்தனை எங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது.. இது இதற்கு அடுத்த தலைமுறை இன்னும் சில வருடங்களில் இளைஞர்கள் ஆகும்போது இன்னும் மாற்றமடையப்போகுது.. ஆனால் யாழில் எழுதும் நாம் எல்லாம் பெரும்பாலும் புலிகள் இருந்த காலத்தில் சேமித்த ஞபகங்களை சுமந்து கொண்டு அலைபவர்கள்.. எங்களுக்கு இவை அந்நியமாகப்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.. ஆனால் வயதாகும்போது ஊரில் மைனராக இருந்தவர்கள் ஒதுங்கி புது  இளைஞர்கள் மைனர்கள் ஆவதுபோல் நாமும் மெல்ல மெல்ல வயதாவதால் ஒதுங்கும் காலமோ எண்டு சிந்திக்க தோன்றுது.. இது இவர் வயதை ஒத்த பெரும்பாலானவர்கள் சிந்தனைகள் எழுத்துக்களை ஒத்து இருப்பதால் ஒரு உதாரணமாக இணைக்கிறேன்..

 

———————//—————-

தேசியக்கொடி மீதான விமர்சனங்கள், சிறுபான்மையினரை மூன்றாம் தரப் பிரஜையாக நடத்துவது குறித்த முறையீடுகள் எல்லாம் சரி தான். ஆனால் இங்கு கேள்வி ஒன்று தான். யாரோ சிலரால் எமக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றது என்பதற்காக இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடையாளத்தை இழக்கப் போகிறோமா? அல்லது இந்த நாட்டின் மீது எமக்கும் உரிமை இருப்பதை வலியுறுத்தப் போகின்றோமா என்பது தான். 

இது என்னுடைய நாடு. நான் பிறந்து வளர்ந்த நாடு. இந்த நாட்டைக் குறித்து நான் பெருமை அடைவதற்கான அதிகாரம் எனக்கு யாரோ ஒருவர் வந்து தரவேண்டியதில்லை. இந்த நாட்டின் தேசியக்கொடி மீது விமர்சனங்கள் இருந்தாலும் அதற்கு உரிய மரியாதையைக் கொடுக்க நான் பின்னிற்கப்போவதில்லை. அதைப் பெருமையாக உயர்த்திப் பிடிப்பது கடமை என்பதை விட என்னுடைய உரிமை என்பதே சாலப் பொருத்தம். 

யாரோ ஒரு சில இனவாதிகள் வந்து "உனக்கு இந்த நாட்டில் உரிமை இல்லை" என்பதற்காக எல்லாம் எனது உரிமையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. அவர்களையும், அவர்களது சிந்தனையையும் எதிர்ப்பேன். அதற்கான மனத்திடம் என்னிடம் உண்டு. மாறாக ஒரு சில முட்டாள்களுக்காக இந்த நாட்டையும், இனவாதம் இல்லாமல் பழகிய மனிதர்களையும் எதிர்த்து வன்மம் சாதிக்க என்னால் முடியாது. ஒரே இனமாக இருந்தபோதும், பிரதேசவாதம் பேசித் தள்ளிவைத்த தமிழனையும் தெரியும்; "நீ இன்னொரு தாய் வயிற்றில் பிறந்தாலும் என் சகோதரன்" என்று சொன்ன சிங்களவனையும் தெரியும். இனவாதம் என்பது மதவாதம், பிரதேசவாதம், சாதீயம் போன்ற ஒரு குழுமனநிலை தான். அவை எவைவும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

ஆக தேசியக்கொடியைப் Profile pictureல்போட்டு வைத்திருப்பது போன்ற சில்லறைக் காரணங்களுக்காக கேற்றை ஆட்டவேண்டாம். 

https://www.facebook.com/688115846/posts/10159027383970847/?d=n

83 வைகாசியில் பேராதனை பல்கலைக்கழகம் குழம்பி , ஒன்றாகக் படித்த சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை அடித்து கேவலப்படுத்திய நேரம் , பாதுகாப்பு இல்லை என்று நாங்கள் இடத்தை காலி பண்ணி வீடு போக ஆயத்தப்படுத்திய நேரம் , அங்கே வந்த எமது சிங்கள நண்பர்கள் எம்மை போக வேண்டாம் என்று தடுத்ததுடன் , எங்களுக்கு எதாவது நடந்தால் அது தங்களின்  உயிரற்ற உடலங்கள் மேல்  தான் சாத்தியமாகும் என்று சொல்லி , அதன் படியே நடந்து எங்களை தாக்க வந்தவர்களிடம் இருந்து எங்களை காத்து நின்றதும் நினைவகலா நிகழ்வுகள்…..

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.