Jump to content

சுவையான ஒரு கெபாப் ரெசிபி - Greek Lamb Kebab


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி BBQ/Grill பண்ணி சாப்பிடுபவர்களுக்கு இது ஒரு சுவையான ரெஸிபி. வீட்டில் அடிக்கடி  BBQ செய்வோம் அப்பொழுது இதுவும் கட்டாயம் இருக்கும். வீட்டில் எல்லோருக்கும் நன்றாக பிடிக்கும். பார்க்க Turkish Shish Kebab மாதிரி இருந்தாலும், சுவை வித்தியாசமானது. எனது அனுபவத்தின்படி, BBQவிற்கு Lamb கால் வாங்கக்கூடாது, கொஞ்சம் கடினமாகவே இருக்கும், நல்ல tender cutஆக பார்த்து வாங்கினால் மிகவும் சுவையாக இருக்கும்.  

2.jpg

a.jpg

b.jpg

கீழே செய்முறை உள்ளது. நான் ஆரம்பத்தில், வேறு ஒரு சிறப்பான வீடீயோ பார்த்து செய்தேன். அந்த வீடியோவை இப்பொது கண்ணவில்லை. கிட்டத்தட்ட கீழே இருக்கும் செய்முறை போன்றதுதான்.  இதில் குறிப்பிடப்படும் buttermilk என்பது, எங்களது மோர். இது கிடைக்காவிட்டால் தயிர் பாவிக்கலாம். ஒரிஜினல் ரெசிபியின்படி Lime இருக்கு பதிலாக lemon பாவிப்பது சிறப்பானது. Fresh Rosemary இலைக்கு பதிலாக, காய்ந்த இலை பயன்படுத்தலாம், இலகுவாகவும் கிடைக்கும். கொஞ்சம் அருவல் நொறுவலாக அரைத்த மிளகாய்யும்  (Chile Flakes) போட வேண்டும். இதைவிட வேறு ஒரு வித்தியாமான முறையிலும் செய்கிறார்கள், அதற்கு நற்சீரகம் கூட போடுகிறார்கள், நான் இன்னும் செய்து பார்க்கவில்லை.

 

  • Like 6
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி நீர்வேலியான்.......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆடு சாப்பிடுவதில்லை.. இந்த முறையில் கோழியில் செய்ய நல்லாய் இருக்குமா நீர்வேலியான்..?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடை வந்தால் கூடுதலான நேரங்களில் இது தான் சாப்பாடு.

எப்பவும் கோழிக்கால் தான்.சிலவேளைகளில் பண்டி.

பார்க்க நல்லாதான் இருக்கு. செய்து பார்த்தா போச்சு.

நீர்வேலியான் லைம்முக்கும் லெமனுக்கும் உள்ள வித்தியாசமென்ன?

இணைப்புக்கு நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

 

நீர்வேலியான் லைம்முக்கும் லெமனுக்கும் உள்ள வித்தியாசமென்ன?

இணைப்புக்கு நன்றி.

மோதகத்துக்கும் கொழுகட்டைக்கும் உள்ள வித்தியாசம்தான்.....!   😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, suvy said:

நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி நீர்வேலியான்.......!   👍

நன்றி, நீங்களும் முயன்று பாருங்கள்

17 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் ஆடு சாப்பிடுவதில்லை.. இந்த முறையில் கோழியில் செய்ய நல்லாய் இருக்குமா நீர்வேலியான்..?

ஓணாண்டி, ஆடு சாப்பிடாமல் வாழ்க்கையில் பாதியை இழந்துவிட்டீர்கள்😀 சிக்கன் ஆடு அளவுக்கு எப்போதுமே சுவை வராது. சிக்கன் கொஞ்சம் வித்தியாசமாக செய்வார்கள். ஒரு முறை செய்தேன், தேடி எடுட்கிறேன். இதைவிட சிக்கன் இற்கு, நான் பொதுவாக, தந்தூரி மசாலாவுடன், தனி மிளகாய்த்தூள், தயிர், அரைத்த இஞ்சி உள்ளி, ஒலிவ் ஆயில், உப்பு, lime போட்டு ஊறவிட்டு BBQ செய்வேன், அது நன்றாக இருக்கும்

17 hours ago, ஈழப்பிரியன் said:

கோடை வந்தால் கூடுதலான நேரங்களில் இது தான் சாப்பாடு.

எப்பவும் கோழிக்கால் தான்.சிலவேளைகளில் பண்டி.

பார்க்க நல்லாதான் இருக்கு. செய்து பார்த்தா போச்சு.

நீர்வேலியான் லைம்முக்கும் லெமனுக்கும் உள்ள வித்தியாசமென்ன?

இணைப்புக்கு நன்றி.

ஒருமுறை செய்து பாருங்கள். Lime உம் Lemonஉம் வேறு வேறானவை, முதலாவது பச்சை நிறமாகவும், மற்றது மஞ்சள் நிறத்திலும் இருக்கும். Flavor உம் வித்தியாசம். Lime புளிப்பு accute ஆக இருக்கும், அத்துடன் அதன் தோல் மிக மிக கசப்பாகவும் இருக்கும். இரண்டும் பெரும்பாலும் ஒத்துப்போனாலும், எல்லா உணவுக்கும் மாறி மாறி போட முடியாது. ஒரு நாள் பால் சொதிக்கு, lime கிடைக்காமல், lemon விட்டேன், சுவை சரி வரவில்லை, திரைந்தும் விட்டது

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நீர்வேலியான் said:

ஒருமுறை செய்து பாருங்கள். Lime உம் Lemonஉம் வேறு வேறானவை, முதலாவது பச்சை நிறமாகவும், மற்றது மஞ்சள் நிறத்திலும் இருக்கும். Flavor உம் வித்தியாசம். Lime புளிப்பு accute ஆக இருக்கும், அத்துடன் அதன் தோல் மிக மிக கசப்பாகவும் இருக்கும். இரண்டும் பெரும்பாலும் ஒத்துப்போனாலும், எல்லா உணவுக்கும் மாறி மாறி போட முடியாது. ஒரு நாள் பால் சொதிக்கு, lime கிடைக்காமல், lemon விட்டேன், சுவை சரி வரவில்லை, திரைந்தும் விட்டது

தகவலுக்கு நன்றி நீர்வேலியான்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.