Jump to content

பிளவு… - T. கோபிசங்கர்


Recommended Posts

பிளவு…

“ மனோகரா தியட்டரடியில குண்டு வெடிச்சு பெரிய சண்டையாம் கனபேர் செத்திட்டாங்களாம் ,அதால நாங்கள் ஓடி வந்திட்டம் நாவலர் பள்ளிக்கூடத்தில இருந்து” , எண்டு கொஞ்சச் சனம் உள்ள பூந்திச்சிது. அவங்கள் சொன்ன list ல யாழ் இந்துக்கல்லூரியும் இருந்ததால நாங்கள் கொஞ்சம் வேளைக்கே போய் அங்க settle ஆகீட்டம் . பக்கத்து வீட்டு யோசப் மாஷ்டரின்டை புண்ணியத்தில மரவேலை வகுப்பை எங்கடை area ஆக்கள் ஆக்கிரமிச்சம் . 

வாங்குக்கு மேல வாங்கை கவிட்டு அடுக்கி shell பட்டாலும் பாதுகாப்பா பங்கர் போல மாத்தி , அதுக்கு மேல உடுப்பு bag எல்லாம் வைச்சிட்டு கீழ ரெண்டு வாங்கு இடைவெளியில ஒரு குடும்பம் எண்டு ஐக்கியமானம். வீட்டை இருந்து கொண்டு வந்த சாப்பாடு ஒரு இரவில முடிய யாழ் இந்து hostel சமையலறை தான் எல்லாருக்கும் சாப்பாடு போட்டது . பள்ளிக்கூட hostel பெடியளுக்கு சமைக்க வைச்சிருந்ததும் ஒரு நாளைக்குத்தான் காணும் என்ன செய்யலாம் எண்டு கேள்விக்கு விடை தேடினம். 

யாழ்ப்பாணம் எண்டால் நூறடிக்கு ஒரு சந்தி , சந்திக்கு சந்தி நாலு கடை. மூடீட்டுப் போன இந்தக்கடையை உரிமையோட உடைச்சு மூட்டையைக் கொண்டு வர , எங்களோட இருந்த தாமோதர விலாஸ் சமையல்காரர் கரண்டி தூக்க முதலாவது அகதி முகாம் சாப்பாடு தாமோதர விலாஸ் மசாலைத் தோசை மணத்தோட உள்ள போச்சுது. காலமை சுடுதண்ணி மட்டும் குடுக்கிறது அவரவர் கொண்டு போய் தேத்தண்ணி போட, மத்தியானம் தழுசை ,பின்னேரம் ரொட்டி எண்டு ரெண்டு நாள் சாப்பாடு கிடைச்சிது. சோத்துக்குள்ள நாலு பருப்பு உப்பு புளி இருந்தால் ஒரு மரக்கறி எல்லாம் சேத்து அவிச்சு சிரட்டையில வடிவா அடிச்சு வாறது தான் தழுசை. ஆக்களுக்கு குடுக்கிற அந்த அளவுச் சாப்பாடு கொண்டு வரேக்க ஆள் இருந்தாத் தான் கிடைக்கும் சாப்பாடு அங்கால இங்கால போனால் அதுகும் இல்லை. சாப்பாட்டை சமாளிச்சு ஆத்திரம் அவசரம் வரேக்க அக்கம் பக்கம் மதில் பாஞ்சு போய் வந்து கொண்டும் இருந்தம். 

காலமை எட்டு மணி இருக்கும் குண்டு வெடிக்கிற சத்தம் கூடக் கேக்கத் தொடங்கிச்சுது. பள்ளிக்கூடத்தின் ரோட்டிக்கு அங்கால குமாரசாமி hall பக்கமும் நிரம்பி இங்காலேம் நிரம்பீட்டுது. சனம் கூடீட்டிது. இனி ஆரும் வந்தாக் கஸ்டம் அதோட எண்டு கேற்றை சிலர் மூடி இருக்கேக்க தான் இந்த புது வரவுக்குடும்பம் நாவலர் ரோட் கதையை வந்து எடுத்து விட்டிச்சிது . வந்த சனத்திக்கு கேற்றைத் துறக்காம இங்க இடமில்லை எண்டு ஆரோ சொல்ல , பொங்கி எழுந்த பிள்ளையார் ராசா அண்ணா நிர்வாகத்தோட சண்டைபிடிச்சு அவையை உள்ள விட்டார் . வந்தவை சொல்லிச்சினம் நாவலர் பள்ளிக்கூடத்திலேம் சனம் நிறைய இருந்தது , குண்டு வெடிச்சாப் பிறகு துவக்குச் சூடும் கேட்டது அதுகும் பள்ளிக்கூடத்திக்குள்ள இருந்து தான் கேட்டது எண்டு, இன்னொரு பெரிய ஒரு குண்டைப் போட்டிச்சினம் . 

கேட்ட இந்த விடுப்பை உடனடியா கொஞ்சம் உப்பு உறைப்பு சேத்து எல்லாரையும் பயப்பிடித்திட்டு மத்தியானக் குழைசாதத்தை விழுங்கீட்டு திருப்பி வந்து hostel சாப்பாட்டு அறைக்க cards விளையாடத் தொடங்கினம் . ஐஞ்சு மணியாகுது எழும்புவம் எண்டு cards விளையாடின வாங்கில எழும்பி நிண்டு ground பக்கம் பாக்க கஸ்தூரியார் றோட் மதிலால பச்சைத் தொப்பிகள் பாயிறது தெரிய, வந்திட்டாங்கள் எண்டு சொல்லிக்கொண்டு எல்லாரும் ஓடிப்போனம் . 

வந்தவங்கள் உள்ளுக்க வரேல்லை பள்ளிக்கூட நிர்வாகக் கட்டிடத்தில் இருந்த பெரிய ஆக்களோட ஏதோ கதைச்சவையாம் , அவங்கள் சொல்லும் வரை ஒருத்தரையும் வெளீல திரியவேண்டாமாம் எண்டு சொல்ல எல்லோரும் போய் அவையவை பிடிச்சிருந்த இடங்களில ஐக்கியமானோம். பள்ளிக்கூடத்திக்கு பின்பக்கமாய் வந்தவங்கள் நேர போய் K K S றோட்டில சிவாஸ் ஸ்ரோர்ஸ் கடையத்தாண்டி இருப்பினம் எண்டு நெக்கிறன் திருப்பியும் சுடுபாடு தொடங்கிச்சிது. சத்தம் உச்சம் தொட செல்லடியும் தொடங்கிச்சிது. கொஞ்ச நேரத்தால திருப்பியும் உள்ள வந்தவங்கள் முன்னுக்கு நிண்டு சனங்களுக்கு வேலை செய்து கொண்டிருந்த பெரிய பெடியளை கூட்டிக் கொண்டு போனாங்கள் , என்னத்துக்கு எண்டு கேக்கப்போனா காயப்பட்ட ஆக்களைத் தூக்கவாம் எண்டு பதில் வந்திச்சது. திருப்பியும் இரவிரவா அடிபாடு நடந்தது. அடிச்சதில சிலதுகள் பள்ளிக்கூடத்துக்குள்ளையும் விழுந்து ரெண்டு பேர் செத்தது காலமை தான் தெரிஞ்சிது. சத்தமே இல்லாமல் அடுத்த நாள் காலமை வந்திச்சுது. இரவிரவா மூச்சையே அடக்கி இருந்த எங்களுக்கு ஒண்டையும் ரெண்டையும் அடக்கிறது கஸ்டமாத் தெரியேல்லை. எண்டாலும் சத்திய சோதனையாக பெஞ்ச மழை எங்கடை பொறுமையை சோதிக்கத் தொடங்கிச்சுது. சத்தியிமா பொம்பிளைகள் எல்லாம் என்ன செய்தவை எண்டு ஞாபகம் இல்லை. Hostel குசினீப் பக்கம் இருந்த மதிலை அந்த வீட்டுக்கார சனமே உடைச்சு ஆக்களை வீட்டை விட்டதாக ஞாபகம் . சீனீ போட்ட Maliban nice , lemon puff பிஸ்கட்டும் பிளேன் ரீயும் மூண்டு நேர உணவாகியது. 

மூண்டாம் நாள் கழிய விடிய கொஞ்சம் பெரிய தலைகள் வந்து பெருந்தலைகளோட கதைச்சனம் . சாப்பாடு குடுக்க வைச்சிருந்த பதிவுகளை எல்லாம் பாத்திட்டு பத்து வயதுக்கு மேற்பட்ட எல்லா ஆம்பிளைகளையும் ground க்கு வரச் சொன்னாங்கள் . அதோட குறிப்பிட்ட எல்லைக்குள்ள இருக்கிற வீட்டுக்கு பொம்பிளைகளை மட்டும் போய் வரலாம் எண்டு சொன்னதை பல அம்மாமார் சந்தேகத்தோட மறுத்திட்டு நிக்க, சில அம்மம்மா மார் மட்டும் சேந்து பக்கத்து வீட்டை போய் ஏதோ சமைச்சுக்கொண்டு வர அவசரமா 

வெளிக்கிட்டிச்சினம் . ஆம்பிளைகளை மட்டும் வரச் சொல்லி Ground அரசமரத்தடியில போய் நிண்டா கால் வரை வெள்ளம். இந்துக்கல்லூரி march past parade மாதிரி எங்களை கிரவுண்டைச்சுத்தி வரச்சொல்லிச்சனம் . ஏதோ fashion walk மாதிரி இடைவெளி விட்டு ஒவ்வொருத்தரா நடக்கப் பண்ணி , வடக்குப் பக்கம் eyes right க்குப் பதிலா ஐஞ்சு நிமிசம் ஒரு ஓட்டை போட்ட sentry point க்கு முன்னால நிப்பாட்ட தலைஆடினால் உள்ள இல்லாட்டி வெளிய எண்ட விளையாட்டிலயும் தப்பி திருப்பி camp க்கு வர, வராத பிள்ளைகளின்டை அம்மா மார் அழத்தொடங்க வந்த தன்டை பிள்ளைக்கு அம்மாமார் சாப்பாட்டை தீத்தத்தொடங்கச்சினம். ஒண்டாப்போய் ஒவ்வொருவராய் திரும்பி வந்தது , அடுத்தவர்களின் உணர்ச்சியைப் பாக்காம நான் மட்டும் தப்பினது survival of the fittest எண்டு கூர்ப்பின் தத்துவம் பிழையாக விளங்கப்பட்டதும் இந்த நாளில் தான் . இது தான் எங்கள் வாழக்கையில சமூகம் தாண்டி தனிமனிதனாக வாழக்கையில் தப்பினால் சரி எண்டு சமூகம் பிளவுபடத்தொடங்கின நாள். 

Dr.T. கோபிசங்கர்

யாழப்பாணம்

  • Sad 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.