Jump to content

அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால், போராட வீதியில் இறங்கிவிட்டேன்" - இலங்கை முஸ்லிம் பெண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால், போராட வீதியில் இறங்கிவிட்டேன்" - இலங்கை முஸ்லிம் பெண்

  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

"அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால், அதனால் போராட வீதியில் இறங்கிவிட்டேன்" - இலங்கை இஸ்லாமிய பெண்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

''கோட்டாபய கோ ஹோம்" என கோஷங்களை எழுப்பியவாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஒன்று கூடி போராடி வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில், கொழும்பு - காலி முகத்திடலுக்கு தன்னிச்சையாக கூடிய பெரும் எண்ணிக்கையிலானோர் நேற்றைய தினம் தன்னெழுச்சிப் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட போராட்டத்தில் பெருமளவில் இளைஞர், இளம் பெண்களே கலந்துக்கொண்டிருந்தனர்.

இதில் கலந்துக்கொண்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள், சாலை நடுவில் அமர்ந்து, நோன்பு திறந்து, தொழுகைகளில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில், ஏனைய மதத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அவர்களுடன் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அத்துடன், நோன்பு திறந்து தொழுகைகளில் ஈடுபட்ட இஸ்லாமியர்களுக்கு, ஏனைய மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு உதவிகளையும் செய்திருந்தனர்.

சாலைகளில் நோன்பு திறந்த சந்தர்ப்பத்தில், ஏனைய மதத் தலைவர்களும் இஸ்லாமியர்களுடன் கைக்கோர்த்திருந்தனர்.

இதையடுத்து, போராட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த முஸ்லிம் பெண்கள், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தனர்.

''எங்களுக்கு வேறு நாடு இல்லை. இது தான் நாடு" என போராட்டத்தில் கலந்துக்கொண்ட சப்ரா தெரிவிக்கின்றார்.

 

"அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால், அதனால் போராட வீதியில் இறங்கிவிட்டேன்" - இலங்கை இஸ்லாமிய பெண்

''இது எங்கட நாட்டுக்காக போராடுறோம் இன்றைக்கு. இது எங்கட நாடு. நாங்கள் எல்லாம், சிங்களம், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் எல்லாம் ஒன்றா சேர்ந்து வாழுகிற நாடு இது. எங்களுக்கு இந்த நாடு வேண்டும். நாங்க சந்தோசமாக இருக்க வேண்டும். எங்களுக்கு வேறு ஒன்றும் நாடு இல்ல. இது தான் நாடு. மனுசன்கள் போவாங்க. படிப்பாங்க வெளி ஊருக்கு. ஆனால் இது எங்கள் நாடு. இதைவிட்டுப் போகமாட்டோம். எங்களுக்கு சுதந்திரம் தேவை".

அவங்க முழு உலகத்துக்கும் நாட்டை வித்துட்டாங்க. எங்க சொத்து எங்களுக்கு வேணும். இது என் தாய் நாடு. நான் இங்கேதான் பிறந்தேன். இங்கேதான் இறப்பேன். எனக்கு ரொம்ப மன வருத்தம். ஆனால், கோட்டாபய இன்று எங்களை ஒன்று சேர்த்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த ஒன்றுக்காக மட்டும் நன்றி சொல்லவேண்டும்" என சப்ரா கூறுகிறார்.

''எங்கள் பிள்ளைகளோட பிள்ளைகளும், கடனை கட்டும் நிலைமை ஏற்பட்டிருக்கு, இந்த நாட்டை ஆட்சியாளர்கள் திருப்பித்தர வேண்டும்" என போராட்டத்தில் கலந்துக்கொண்ட அப்ஷா குறிப்பிடுகிறார்.

''இவரு போகத்தான் வேண்டும். இந்த நாட்டில் எங்களுக்கு என்ன சுதந்திரம் இருக்கு? எங்களுக்கு பெட்ரோல் இல்லை. டீசல் இல்லை. எங்களுக்கு வண்டி இல்லை. எங்கள் வாழ்க்கையில் எல்லாமே, கல்வி எல்லாமே எடுத்துட்டாங்க. எங்கள் நாட்டைத்தான் நாங்கள் திருப்பி கேட்கிறோம். வேறு ஒன்றும் இல்லை. அவர் திரும்பி போகலாம். எங்கள் நாட்டை எங்களுக்கு திருப்பி தந்துட்டு திருப்பி போகலாம். எங்களுக்கு பிறக்க இருக்குற பிள்ளைகளுக்கும் இந்த கடனை கட்ட வேண்டிய நிலைமை ஆகிவிட்டது.

 

"அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால், அதனால் போராட வீதியில் இறங்கிவிட்டேன்" - இலங்கை இஸ்லாமிய பெண்

இந்த நாட்டுல இருந்து நாங்க போனா, இந்த நாட்டை யாரு காப்பாத்துறது? இந்த போராட்டம் பண்ணுறதே, எங்களுக்கு எங்க நாட்ட குடுங்க. எங்கள் பிள்ளைகளோட பிள்ளைகளுக்கு நிம்மதியாக வாழ்க்கைய கொண்டு போகிற மாதிரி நாட்டை கொடுங்கள் என்று கேட்பதற்குதான். இந்த போராட்டத்தை தொடர்வேன் என்றுதான் நான் நினைக்கிறேன். அவர்கள் போகாவிட்டால் போராடிக்கொண்டே இருப்போம்" என அப்ஷா தெரிவிக்கிறார்.

''தமிழ் பேசும் சிறுபான்மையாக அணியும் ஆடை முதல் ஒரு பெண்ணாக பல சவால்களை சந்தித்தேன். பொறுத்து கொண்டேன், இனி பொறுத்து கொள்ள முடியாது. போராட முதல் தடவையாக வீதிக்கு இறங்கி விட்டேன். முடிவு வரும் வரை நாட்டுக்காக போராடுவேன்" என ரஸானா குறிப்பிடுகிறார்.

''நாட்டை காப்பாற்றப் போராடுறோம். மக்களுக்காக போராடுறோம். வருங்காலத்தை நினைத்துப் போராடுறோம். இந்த போராட்டம் நிற்கப்போவது இல்லை. கோட்டா விலகும் வரை போராட்டம் நடக்கும். நாடு கடன் பட்டு, இவ்வளவு கஷ்டம் வருவதற்கு கோட்டாபய மட்டும் அல்ல. ராஜபக்ஷ குடும்பம் மொத்துமுமே காரணம். அது நிற்கும்வரை நாங்கள் போராடுவோம். எதிர்காலம் இன்னும் கேள்விக் குறியாகத்தான் இருக்கும். எனக்கு எந்தநாளும் சவால்தான்.

 

"அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால், அதனால் போராட வீதியில் இறங்கிவிட்டேன்" - இலங்கை இஸ்லாமிய பெண்

இது வந்தது இன்று நேற்றல்ல. ராஜபக்ஷ அரசாங்கம் எப்போது வந்ததோ, அப்போது இருந்து, தமிழ் பேசும் மக்கள், இந்த இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்கள் பல சவால்களை சந்தித்தோம். வாழ்க்கையில முதல் தடவையாக போராட்டத்துக்கு வந்திருக்கேன்.

இதுக்கு முன்பு நடந்த அவ்வளவு சவாலையும் நான் பொறுத்துக் கொண்டேன். இப்போது முடியாது. சாலையில் இறங்கிவிட்டேன். கோட்டா வீட்டுக்கு போகும் வரைக்கும் நிறுத்தப் போவது இல்லை. கோட்டா எத்தனை பேரை இல்லாமம் ஆக்கமுடியும்? எத்தனை பேரை அழிக்க முடியும்? இதுக்கு முன்னாடி ராஜபக்ஷ குடும்பம் எத்தனை பேரை அழித்தது. இனி எத்தனை பேரை அழிக்க முடியும்? அதற்கு நாங்கள் தயார்" என ரஸானா தெரிவிக்கிறார்.

https://www.bbc.com/tamil/global-61058098

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா இரண்டு வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தனது அமைச்சரவையில் சேர்த்திருந்தால் இந்த உம்மா வேறு ஸ்டாண்ட் எடுத்திருப்பாங்க. ரிசாட், ஹக்கீம் போன்ற அமைச்சர்கள் கோட்டாவுக்கு ஆதரவாகத்தான் இருந்திருப்பார்கள். கோட்டாவின் விதி துருக்கித் தொப்பி அணியும் முஸ்லிம்களை அமைச்சரவையில் சேர்க்காமல் விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை கேப்பில கடா வெட்டுகிற ஆட்கள்...கால்பேசிலை  கடைவிரித்து...சாப்பாடு வெட்டு வெட்டினதை  வைச்சே கண்டுபிடிக்கலாம்....நாங்கள்   தேங்காய்பூவில்லை....பால்ச்சோறும் ...சம்பலும்தானுமென்று...சாணக்கியன் தம்பிக்கு விளங்கினால் சரி..

 

Edited by alvayan
Link to comment
Share on other sites

4 hours ago, ஏராளன் said:

அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால், போராட வீதியில் இறங்கிவிட்டேன்" - இலங்கை முஸ்லிம் பெண்

வடக்கு கிழக்கை இணைக்க விடமாட்டோம்…முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆர்ப்பரிப்பு….

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

வடக்கு கிழக்கை இணைக்க விடமாட்டோம்…முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆர்ப்பரிப்பு….

இதுதான் இவையின் தாரக மந்திரம்..

Edited by alvayan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

"அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால், அதனால் போராட வீதியில் இறங்கிவிட்டேன்" - இலங்கை இஸ்லாமிய பெண்

''இது எங்கட நாட்டுக்காக போராடுறோம் இன்றைக்கு. இது எங்கட நாடு. நாங்கள் எல்லாம், சிங்களம், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் எல்லாம் ஒன்றா சேர்ந்து வாழுகிற நாடு இது. எங்களுக்கு இந்த நாடு வேண்டும். நாங்க சந்தோசமாக இருக்க வேண்டும். எங்களுக்கு வேறு ஒன்றும் நாடு இல்ல. இது தான் நாடு. மனுசன்கள் போவாங்க. படிப்பாங்க வெளி ஊருக்கு. ஆனால் இது எங்கள் நாடு. இதைவிட்டுப் போகமாட்டோம். எங்களுக்கு சுதந்திரம் தேவை".

 சிரிலங்காவில ஒங்கலுக்கு என்ன சுதந்திரம் இல்ல? தமிழ் ஏரியாவோ இல்ல சிங்கல ஏரியாவோ எங்கையெண்டாலும் சௌக்கியமாய் தானே இருக்கீங்க...

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால்

பெண்கள் அணியும் ஆடைகளுக்கு இலங்கையில் சவால் வந்ததா? சவுதி அரேபியா, அப்கானிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளில் தானே பெண்கள் அணியும் ஆடைகளுக்கு தடை உள்ளது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பெண்கள் அணியும் ஆடைகளுக்கு இலங்கையில் சவால் வந்ததா? சவுதி அரேபியா, அப்கானிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளில் தானே பெண்கள் அணியும் ஆடைகளுக்கு தடை உள்ளது.

ஒன்ஸ்மோர் பிளீஸ்....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

 சிரிலங்காவில ஒங்கலுக்கு என்ன சுதந்திரம் இல்ல? தமிழ் ஏரியாவோ இல்ல சிங்கல ஏரியாவோ எங்கையெண்டாலும் சௌக்கியமாய் தானே இருக்கீங்க...

https://www.bbc.com/tamil/av-embeds/india-61063484

இந்த அழகான புள்ளையப் பாத்து எப்பிடி நானா ஒங்கலுக்கு இப்புடி கேக்க தோணிச்சு?!🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

https://www.bbc.com/tamil/av-embeds/india-61063484

இந்த அழகான புள்ளையப் பாத்து எப்பிடி நானா ஒங்கலுக்கு இப்புடி கேக்க தோணிச்சு?!🤣

அது.. புள்ள இல்ல, உம்மா. 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

https://www.bbc.com/tamil/av-embeds/india-61063484

இந்த அழகான புள்ளையப் பாத்து எப்பிடி நானா ஒங்கலுக்கு இப்புடி கேக்க தோணிச்சு?!🤣

மன்னிக்கோணும் தம்பி. பக்கத்திலை கண் டாக்குத்தர் இருந்தால் உடனடியாக அணுகவும்.😁

 இதிலை கிட்டபார்வை  தூரப்பார்வை சரிபார்க்கவும் 😎

Ach wie gut dass niemand weiß - Optiker Sehtest' Tasse | Spreadshirt

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் சிறுபான்மையாக அணியும் ஆடை முதல் ஒரு பெண்ணாக பல சவால்களை சந்தித்தேன். பொறுத்து கொண்டேன், இனி பொறுத்து கொள்ள முடியாது. போராட முதல் தடவையாக வீதிக்கு இறங்கி விட்டேன். முடிவு வரும் வரை நாட்டுக்காக போராடுவேன்"

தன் மொழியின் ஒற்றுமையை காட்டிக்கொடுத்து வாழ துணியும் இனம் இவ்வாறு தான் சுயத்தை இழந்து தனியாக நிற்கும்.

இனியாவது உன் நியத்தை தேடு???

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அது.. புள்ள இல்ல, உம்மா. 😂

 

1 hour ago, குமாரசாமி said:

மன்னிக்கோணும் தம்பி. பக்கத்திலை கண் டாக்குத்தர் இருந்தால் உடனடியாக அணுகவும்.😁

 இதிலை கிட்டபார்வை  தூரப்பார்வை சரிபார்க்கவும் 😎

Ach wie gut dass niemand weiß - Optiker Sehtest' Tasse | Spreadshirt

 

 

கடைசியா இங்கிலீசிலயும் கொச்சைத் தமிழிலும் பேசுறது புள்ளயா? உம்மாவா?!
40 தாண்டினா வெள்ளெழுத்து என்று சொல்லுவாங்க, எதுக்கும் சரி கண்டாக்டரை பாப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு போராட்டம் தமிழ் மக்களால் இனிஷியேட் பண்ணப்பட்டு இருந்தால் முஸ்லிம்கள் அதுக்கு ஆதரவு தந்திருப்பார்களா? எப்பவுமே வெல்ற பக்கத்திலதான் முஸ்லிம்கள் இருப்பார்கள். நோகாமல் நுங்கு சாப்பிடுவதில் வல்லவர்கள்.

புலிகள் காலத்தில் தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டபோது தென்கிழக்கு அலகு என்று முழங்கினர்கள். இப்ப அது எங்க போச்சுது எண்டு தெரியேல்லை. வடக்கு கிழக்கு இணைப்புக்கு தடையாக இருப்பவர்கள் இந்த முஸ்லிம்கள்.  இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு பெரும்பான்மை கிடைக்காது. கிழக்கு பிரிந்திருந்தால் சிங்களவருடன் சேர்ந்து அல்லது தமிழரை பேக்காட்டி ஆட்சி அமைக்கலாம். எதிரியைக் கூட நம்பலாம் ஆனால் துருக்கித் தொப்பி அணிந்த கணவான்களை நம்பக் கூடாது

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாலி said:

இப்படி ஒரு போராட்டம் தமிழ் மக்களால் இனிஷியேட் பண்ணப்பட்டு இருந்தால் முஸ்லிம்கள் அதுக்கு ஆதரவு தந்திருப்பார்களா? எப்பவுமே வெல்ற பக்கத்திலதான் முஸ்லிம்கள் இருப்பார்கள். நோகாமல் நுங்கு சாப்பிடுவதில் வல்லவர்கள்.

புலிகள் காலத்தில் தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டபோது தென்கிழக்கு அலகு என்று முழங்கினர்கள். இப்ப அது எங்க போச்சுது எண்டு தெரியேல்லை. வடக்கு கிழக்கு இணைப்புக்கு தடையாக இருப்பவர்கள் இந்த முஸ்லிம்கள்.  இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு பெரும்பான்மை கிடைக்காது. கிழக்கு பிரிந்திருந்தால் சிங்களவருடன் சேர்ந்து அல்லது தமிழரை பேக்காட்டி ஆட்சி அமைக்கலாம். எதிரியைக் கூட நம்பலாம் ஆனால் துருக்கித் தொப்பி அணிந்த கணவான்களை நம்பக் கூடாது

உண்மைதான்.. அதுவும் இலங்கை முஸ்லீம்கள் சேறுகண்ட இடத்தில் பூசி தண்ணிகண்ட இடத்தில் கழுவீட்டு போற சுயநலவாதிகள்.. ஆனால் இந்த விடயத்தில் தமிழ்நாட்டு முஸ்லீம்களை பாராட்டவேணும்.. அவர்கள் உன்னும் உணவிற்கும் பேசும் மொழிக்கும் வாழும் மண்ணுக்கும் விசுவாசமானவர்கள்..

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/mohamed.ajeem.9/videos/384500080341657/?

பசில் எனது நல்ல நண்பர்  அவரது நட்பு இன்று இல்லாததால் நான் வாடுகின்றேன் -ரிசாட்-

Edited by வாலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, வாலி said:

https://www.facebook.com/mohamed.ajeem.9/videos/384500080341657/?

பசில் எனது நல்ல நண்பர்  அவரது நட்பு இன்று இல்லாததால் நான் வாடுகின்றேன் -ரிசாட்-

இந்த பசிலு இவருக்கு மட்டுமல்ல கிசிபுல்லாவுக்கும் மிக வேண்டப்பட்டவர்..

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.