Jump to content

பிரித்தானியாவில், வாழ்க்கைச் செலவுகள்... அதிகரிப்பு: கடைகளில், விற்பனை குறைந்துள்ளது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு: கடைகளில் விற்பனை குறைந்துள்ளது!

பிரித்தானியாவில், வாழ்க்கைச் செலவுகள்... அதிகரிப்பு: கடைகளில், விற்பனை குறைந்துள்ளது!

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின் அழுத்தத்தின் கீழ் வீட்டு வரவு செலவுத் திட்டங்கள் வருவதால் கடைகளில் விற்பனை குறைந்துள்ளது என்று பிரித்தானிய சில்லறை வணிகக் கூட்டமைப்பு (பிஆர்சி) தெரிவித்துள்ளது.

புதிய புள்ளிவிபரங்கள் மார்ச் மாதத்திற்கான விற்பனை வளர்ச்சி இந்த ஆண்டு இதுவரை அதன் மெதுவான வீதத்தில் உயர்ந்துள்ளது.
பிரித்தானிய சில்லறை விற்பனை 12 மாதங்களுக்கு முந்தையதை விட 0.4 சதவீதம் குறைந்துள்ளது.

மில்லியன் கணக்கானவர்கள் அதிக எரிசக்தி கட்டணங்கள் மற்றும் வரிகளை சமாளிக்க வேண்டியிருக்கும் நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.

மக்களின் நிதி மீதான அழுத்தம் மற்றும் உக்ரைன் போர் ஆகியவை நுகர்வோர் நம்பிக்கையை சீர் குலைத்துவிட்டது என்று பிரித்தானிய சில்லறை வணிகக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

https://athavannews.com/2022/1276340

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் பொருட்களின் விலைகள் கூடிக் கொண்டு போகுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரதி said:

ஒவ்வொரு நாளும் பொருட்களின் விலைகள் கூடிக் கொண்டு போகுது 

இங்கும் அப்படித்தான். 99 சதம்விற்ற சூரிய காந்தி எண்ணை. இப்ப 5 €
வடை சுடவும், வழி இல்லாமல் இருக்கு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இங்கும் அப்படித்தான். 99 சதம்விற்ற சூரிய காந்தி எண்ணை. இப்ப 5 €
வடை சுடவும், வழி இல்லாமல் இருக்கு. 🤣

சிறியர் இதையும் பாருங்கோ...என்னுடைய நிலைமையும் இதுதான்

 

இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..

பல்லாயிரம்  மைல் கடந்து

பரதேசத்தில்  கனடாவில் வாழும்நான்

படும் கஸ்டம் என்னென்று தெரியுமோ..மூ

பத்து ஆண்டு கடந்தும்முசுப்

பாத்திக்கு தன்னும்  நோ கனடியன் பூட்..

 

பக்கத்திலை

பத்துத் தமிழ்க் கடை

பலகாரம் முதல்

பத்தியச் சாப்பாடுவரை

பகலிராவாக் கிடைக்கும்

பகிடி என்ன தெரியுமோ..

 

வடை மூன்று  ஒரு டொலர் அப்ப..

வடை  இரண்டு ஒன்றரை டொலர் இப்ப….

இலங்கையில் விலைவாசி ஏற்றமாம்..

இடியப்பம் இருபத்தைந்து  மூன்று டொலர் அப்ப

இப்ப இந்தப்பெட்டிஆறு டொலர்..

இதுக்கும் அதையே   சொல்லுகினம்

 

கொத்து ரொட்டியிலும்

கொல்லுகினம்   விலையை..

கொடுவாமீன் சாப்பாட்டுக்கும் அதுதான்

கொள்ளளவில் மாற்றமும்

கொண்டுவந்துவிட்டு

கொள்ளையை கூடவும் அடித்துவிட்டு

கெத்தாகச் சொல்லுகினம்

 

இலங்கையில் விலைவாசி ஏற்றம்

இங்கையும் கூட்டத்தானே வேணும்

உண்ணாணை கேட்கின்றேன்..

இலங்கைக்கும்

இவைக்கும் என்ன தொடர்பு..

சித்தாலேபவையும்

சிறு குடிநீர் பைகளையும்

இறக்கிவிட்டு

இவையின்ரை கதைகளைக் கேட்டும்

இப்பவும்

இந்தக் கடை வரிசையிதான் நிற்கின்றேன்..

இருக்கின்ற இந்த வயிறு

இலங்கைச் சாப்பாடுதான்  வேணுமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, alvayan said:

சிறியர் இதையும் பாருங்கோ...என்னுடைய நிலைமையும் இதுதான்

 

இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..

பல்லாயிரம்  மைல் கடந்து

பரதேசத்தில்  கனடாவில் வாழும்நான்

படும் கஸ்டம் என்னென்று தெரியுமோ..மூ

பத்து ஆண்டு கடந்தும்முசுப்

பாத்திக்கு தன்னும்  நோ கனடியன் பூட்..

 

பக்கத்திலை

பத்துத் தமிழ்க் கடை

பலகாரம் முதல்

பத்தியச் சாப்பாடுவரை

பகலிராவாக் கிடைக்கும்

பகிடி என்ன தெரியுமோ..

 

வடை மூன்று  ஒரு டொலர் அப்ப..

வடை  இரண்டு ஒன்றரை டொலர் இப்ப….

இலங்கையில் விலைவாசி ஏற்றமாம்..

இடியப்பம் இருபத்தைந்து  மூன்று டொலர் அப்ப

இப்ப இந்தப்பெட்டிஆறு டொலர்..

இதுக்கும் அதையே   சொல்லுகினம்

 

கொத்து ரொட்டியிலும்

கொல்லுகினம்   விலையை..

கொடுவாமீன் சாப்பாட்டுக்கும் அதுதான்

கொள்ளளவில் மாற்றமும்

கொண்டுவந்துவிட்டு

கொள்ளையை கூடவும் அடித்துவிட்டு

கெத்தாகச் சொல்லுகினம்

 

இலங்கையில் விலைவாசி ஏற்றம்

இங்கையும் கூட்டத்தானே வேணும்

உண்ணாணை கேட்கின்றேன்..

இலங்கைக்கும்

இவைக்கும் என்ன தொடர்பு..

சித்தாலேபவையும்

சிறு குடிநீர் பைகளையும்

இறக்கிவிட்டு

இவையின்ரை கதைகளைக் கேட்டும்

இப்பவும்

இந்தக் கடை வரிசையிதான் நிற்கின்றேன்..

இருக்கின்ற இந்த வயிறு

இலங்கைச் சாப்பாடுதான்  வேணுமாம்

நகைச்சுவையாக சொன்ன… நல்ல கவிதை, அல்வாயன். 👍🏽 😂

இதனை… யாழ். களத்தின், சுய ஆக்கம் பகுதியில் பதிந்து விடுங்கள். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் அதே கதைதான்  அல்வாயன்.......நல்லதொரு புலம்பல் கவிதை......!   😂

Link to comment
Share on other sites

1 hour ago, alvayan said:

சிறியர் இதையும் பாருங்கோ...என்னுடைய நிலைமையும் இதுதான்

 

இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..

பல்லாயிரம்  மைல் கடந்து

பரதேசத்தில்  கனடாவில் வாழும்நான்

படும் கஸ்டம் என்னென்று தெரியுமோ..மூ

பத்து ஆண்டு கடந்தும்முசுப்

பாத்திக்கு தன்னும்  நோ கனடியன் பூட்..

 

பக்கத்திலை

பத்துத் தமிழ்க் கடை

பலகாரம் முதல்

பத்தியச் சாப்பாடுவரை

பகலிராவாக் கிடைக்கும்

பகிடி என்ன தெரியுமோ..

 

வடை மூன்று  ஒரு டொலர் அப்ப..

வடை  இரண்டு ஒன்றரை டொலர் இப்ப….

இலங்கையில் விலைவாசி ஏற்றமாம்..

இடியப்பம் இருபத்தைந்து  மூன்று டொலர் அப்ப

இப்ப இந்தப்பெட்டிஆறு டொலர்..

இதுக்கும் அதையே   சொல்லுகினம்

 

கொத்து ரொட்டியிலும்

கொல்லுகினம்   விலையை..

கொடுவாமீன் சாப்பாட்டுக்கும் அதுதான்

கொள்ளளவில் மாற்றமும்

கொண்டுவந்துவிட்டு

கொள்ளையை கூடவும் அடித்துவிட்டு

கெத்தாகச் சொல்லுகினம்

 

இலங்கையில் விலைவாசி ஏற்றம்

இங்கையும் கூட்டத்தானே வேணும்

உண்ணாணை கேட்கின்றேன்..

இலங்கைக்கும்

இவைக்கும் என்ன தொடர்பு..

சித்தாலேபவையும்

சிறு குடிநீர் பைகளையும்

இறக்கிவிட்டு

இவையின்ரை கதைகளைக் கேட்டும்

இப்பவும்

இந்தக் கடை வரிசையிதான் நிற்கின்றேன்..

இருக்கின்ற இந்த வயிறு

இலங்கைச் சாப்பாடுதான்  வேணுமாம்

தமிழ் உணவுக் கடைகளில் உள்ள விலையேற்றம் ஓரளவுக்கு நியாயமானதே. 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் Costco வில் $15 இற்கு விற்ற 16 லீட்டர் கனோலா எண்ணெய் , இன்று மூன்று மடங்கை விட அதிகரித்து $48 இல் வந்து நிற்கின்றது. கண்டெயினர்களின் விலையேற்றத்தினால், இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகை மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளது (சீனர்களின் கடைகளைத் தவிர). உக்ரைன் மீதான யுத்தத்தின் பின் கோதுமை மாவின் விலை அதிகரித்தது மட்டுமல்லாமல், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதே போன்றே அனைத்து மரக்கறிகளின் விலைகளும் Walmart போன்ற இடங்களில் கூட அதிகரித்து உள்ளன. எல்லாவற்றையும் எண்ணையில் பொரித்து சாப்பிடும் எமக்கு அதன் விலை அதிகரிப்பு பாதிக்கத் தான் செய்யும்.

தமிழ் உணவுக் கடைகளில் ஒவ்வொரு உணவுப் பொருளை விற்கும் போது கிடைக்கும் லாபம் மிகச் சிறியது. அதிக எண்ணிக்கையில் விற்கும் போது மாத்திரமே லாபம் காண முடியும்.  இந்த சிறிய லாபத்தின் மூலம் தான் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் இருந்து வாடகை வரைக்கும் கொடுக்க வேண்டும். லாபம் கிடைத்து தொடர்ந்து நடாத்துவது சவாலான விடயம். இதனால் தான் பல தமிழ் உணவுக் கடைகள் வந்த வேகத்தில் மறைந்து விடுகின்றன. ஒரு தமிழ் உணவுக் கடை என்பது ஒரு குறிப்பிட்ட உணவை மட்டுமே விற்கும் கடையாக இல்லாமல் வடையில் இருந்து புரியாணி, வாழையிலையில் சைவ சாப்பாடு மற்றும் மாலுபாண் வரை விற்கும் பல் உணவுச் சாலை என்பதால் றிஸ்கும் அதிகம்.

எம்மவர் Mc Donald's, Tim Hortons, Pizza hut போன்றவற்றில் ஏற்படும் விலையுயர்வை பற்றி கேள்வி கேட்பது இல்லை. ஆனால் தமிழ் கடையில் வடையின் விலையை ஏற்றினால் உடனே Google reviews இல் வந்து தாறுமாறாக எழுதுகின்றனர். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, alvayan said:

சிறியர் இதையும் பாருங்கோ...என்னுடைய நிலைமையும் இதுதான்

 

இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..

பல்லாயிரம்  மைல் கடந்து

பரதேசத்தில்  கனடாவில் வாழும்நான்

படும் கஸ்டம் என்னென்று தெரியுமோ..மூ

பத்து ஆண்டு கடந்தும்முசுப்

பாத்திக்கு தன்னும்  நோ கனடியன் பூட்..

 

பக்கத்திலை

பத்துத் தமிழ்க் கடை

பலகாரம் முதல்

பத்தியச் சாப்பாடுவரை

பகலிராவாக் கிடைக்கும்

பகிடி என்ன தெரியுமோ..

 

வடை மூன்று  ஒரு டொலர் அப்ப..

வடை  இரண்டு ஒன்றரை டொலர் இப்ப….

இலங்கையில் விலைவாசி ஏற்றமாம்..

இடியப்பம் இருபத்தைந்து  மூன்று டொலர் அப்ப

இப்ப இந்தப்பெட்டிஆறு டொலர்..

இதுக்கும் அதையே   சொல்லுகினம்

 

கொத்து ரொட்டியிலும்

கொல்லுகினம்   விலையை..

கொடுவாமீன் சாப்பாட்டுக்கும் அதுதான்

கொள்ளளவில் மாற்றமும்

கொண்டுவந்துவிட்டு

கொள்ளையை கூடவும் அடித்துவிட்டு

கெத்தாகச் சொல்லுகினம்

 

இலங்கையில் விலைவாசி ஏற்றம்

இங்கையும் கூட்டத்தானே வேணும்

உண்ணாணை கேட்கின்றேன்..

இலங்கைக்கும்

இவைக்கும் என்ன தொடர்பு..

சித்தாலேபவையும்

சிறு குடிநீர் பைகளையும்

இறக்கிவிட்டு

இவையின்ரை கதைகளைக் கேட்டும்

இப்பவும்

இந்தக் கடை வரிசையிதான் நிற்கின்றேன்..

இருக்கின்ற இந்த வயிறு

இலங்கைச் சாப்பாடுதான்  வேணுமாம்

எல்லாரது நிலைமையும் இதே தானே..✍😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

நகைச்சுவையாக சொன்ன… நல்ல கவிதை, அல்வாயன். 👍🏽 😂

இதனை… யாழ். களத்தின், சுய ஆக்கம் பகுதியில் பதிந்து விடுங்கள். 🙂

பதிவிடத்தெரியவில்லை..உதவி கிடைக்குமா..

 

எம்மவர் Mc Donald's, Tim Hortons, Pizza hut போன்றவற்றில் ஏற்படும் விலையுயர்வை பற்றி கேள்வி கேட்பது இல்லை. ஆனால் தமிழ் கடையில் வடையின் விலையை ஏற்றினால் உடனே இல் வந்து தாறுமாறாக எழுதுகின்றனர். 

ஏனையா இந்த கொலைவெறி...விரும்பிச் சாப்பிடும் சாப்பாட்டின் விலை கூட்டினால் கண்டபடி எழுதத்தானே தோன்றும்... மார்க் /ஸ் டீல் சந்திக் கடைகளில் நீங்கள்  வாடிக்கையாளர்தானே...அங்கு நிச்சயம் இதை அனுபவித்திருப்பீர்கள்....அளவு முதல் விலை  விலைவரை....பகல் கொள்ளை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

நகைச்சுவையாக சொன்ன… நல்ல கவிதை, அல்வாயன். 👍🏽 😂

இதனை… யாழ். களத்தின், சுய ஆக்கம் பகுதியில் பதிந்து விடுங்கள். 🙂

 

4 minutes ago, alvayan said:

பதிவிடத்தெரியவில்லை..உதவி கிடைக்குமா..

 

22 minutes ago, நிழலி said:

தமிழ் உணவுக் கடைகளில் உள்ள விலையேற்றம் ஓரளவுக்கு நியாயமானதே.  

நிழலி…. மேலே, அல்வாயன் எழுதிய கவிதையை…
யாழ். கள சுய ஆக்கம் பகுதிக்கு, மாற்றி விடட்டாம். 
நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இங்கும் அப்படித்தான். 99 சதம்விற்ற சூரிய காந்தி எண்ணை. இப்ப 5 €
வடை சுடவும், வழி இல்லாமல் இருக்கு. 🤣

எண்ணை இல்லாமல் நல்ல சுவையாய் சமைக்கலாம் சிறித்தம்பி.....😎
எண்ணைச்சாப்பாடு உடம்புக்கு கூடாது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

எண்ணை இல்லாமல் நல்ல சுவையாய் சமைக்கலாம் சிறித்தம்பி.....😎
எண்ணைச்சாப்பாடு உடம்புக்கு கூடாது🤣

குமாரசாமி அண்ணை…. எண்ணை சாப்பாடு, கூடாது தான்…
ஆனால்…. நாக்கு, சொல்வழி கேட்குதில்லையே…. 😂

Link to comment
Share on other sites

43 minutes ago, alvayan said:

பதிவிடத்தெரியவில்லை..உதவி கிடைக்குமா..

 

எம்மவர் Mc Donald's, Tim Hortons, Pizza hut போன்றவற்றில் ஏற்படும் விலையுயர்வை பற்றி கேள்வி கேட்பது இல்லை. ஆனால் தமிழ் கடையில் வடையின் விலையை ஏற்றினால் உடனே இல் வந்து தாறுமாறாக எழுதுகின்றனர். 

 

Google review இல் என்று வந்திருக்க வேண்டும், தமிழில் எழுதி கொப்பி பேஸ்ட் செய்யும் போது விடுபட்டு விட்டது

45 minutes ago, alvayan said:

 

ஏனையா இந்த கொலைவெறி...விரும்பிச் சாப்பிடும் சாப்பாட்டின் விலை கூட்டினால் கண்டபடி எழுதத்தானே தோன்றும்... மார்க் /ஸ் டீல் சந்திக் கடைகளில் நீங்கள்  வாடிக்கையாளர்தானே...அங்கு நிச்சயம் இதை அனுபவித்திருப்பீர்கள்....அளவு முதல் விலை  விலைவரை....பகல் கொள்ளை..

முன்னர் பூரணி விலாசில் வந்து வாங்குவதுண்டு. ஆனால் அக் கடையில் முதலாளி ஊழியர்களை எனக்கு முன்பாக திட்டியது குறித்து நான் கேள்வி கேட்டு பிரச்சினைபட்ட பின் அங்கு வாங்குவது இல்லை.

இப்ப கொத்து கடைக்கு மட்டுமே வருவதுண்டு. அங்கு விற்கும் ஆட்டுக்குடல் கறிக்காகவும், லம்ப் ரைசுக்காகவும் வருவதுண்டு. இரால் வடை பொரியலும் நன்றாக இருக்கும்.

நான் விற்பியில் வசிப்பதால் ஸ்கார்பரோ வந்து வாங்குவது நேர விரயமாக தோன்றும். 

Link to comment
Share on other sites

41 minutes ago, தமிழ் சிறி said:

 

 

நிழலி…. மேலே, அல்வாயன் எழுதிய கவிதையை…
யாழ். கள சுய ஆக்கம் பகுதிக்கு, மாற்றி விடட்டாம். 
நன்றி.

அவரே அங்கு போட்டால் நல்லது. திரியின் இடையில் உள்ளதை பிரித்து எடிட் பண்ணித்தான் என்னால் போட வேண்டி வரும்

 சுய ஆக்கத்தில் என் பெயர் அடியில் தெரியும் அல்லது எடிட் பண்ணியதில் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, alvayan said:

பதிவிடத்தெரியவில்லை..உதவி கிடைக்குமா..

 

எம்மவர் Mc Donald's, Tim Hortons, Pizza hut போன்றவற்றில் ஏற்படும் விலையுயர்வை பற்றி கேள்வி கேட்பது இல்லை. ஆனால் தமிழ் கடையில் வடையின் விலையை ஏற்றினால் உடனே இல் வந்து தாறுமாறாக எழுதுகின்றனர். 

ஏனையா இந்த கொலைவெறி...விரும்பிச் சாப்பிடும் சாப்பாட்டின் விலை கூட்டினால் கண்டபடி எழுதத்தானே தோன்றும்... மார்க் /ஸ் டீல் சந்திக் கடைகளில் நீங்கள்  வாடிக்கையாளர்தானே...அங்கு நிச்சயம் இதை அனுபவித்திருப்பீர்கள்....அளவு முதல் விலை  விலைவரை....பகல் கொள்ளை..

நான் பதில் எழுதுவது தவறு..இருந்தாலும் எழுதுகிறேன்.கடைக்காரர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளும் அதிகமாகத் தானே இருக்கும்..வாடகை தொடக்கம் பணியாளார்களின் சம்பளம் பொருட்களின் கொள்வனவு செலவு..நிறையவே..இதே ரிம்கொட்டனில் ஏதாவது கேட்டால் வேணும் என்றால் நம்மவர்களே எவ்வளவு கதைப்பினம்....👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

அவரே அங்கு போட்டால் நல்லது. திரியின் இடையில் உள்ளதை பிரித்து எடிட் பண்ணித்தான் என்னால் போட வேண்டி வரும்

 சுய ஆக்கத்தில் என் பெயர் அடியில் தெரியும் அல்லது எடிட் பண்ணியதில் தெரியும்.

நன்றி நிழலி.
 

58 minutes ago, alvayan said:

பதிவிடத்தெரியவில்லை..உதவி கிடைக்குமா..

அல்வாயன்….
நீங்களே… சுய ஆக்கம் பகுதியில், மேலே உள்ள கவிதையை கொப்பி எடுத்து,
புதிய தலைப்பில் பதிந்து விடுங்களேன். 

“இலங்கை… சாப்பாடுதான், வேணுமாம்.”
என்ற தலைப்பே… நன்றாக உள்ளது. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்வாயன் வாய் இலங்கை சாப்பாடுதான் வேணும் என்று அடம்பிடித்தால் கைகளுக்கு சமைக்கப்பழக்கி விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வல்வை சகாறா said:

அல்வாயன் வாய் இலங்கை சாப்பாடுதான் வேணும் என்று அடம்பிடித்தால் கைகளுக்கு சமைக்கப்பழக்கி விடுங்கள்.

காப்புக் கையாலை…. சமைத்தது தான், அல்வாயனுக்கு வேணுமாம். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

காப்புக் கையாலை…. சமைத்தது தான், அல்வாயனுக்கு வேணுமாம். 😂

காப்புக்கையால் உணவு கிடைக்க ஏகப்பட்ட புண்ணியத்தை போன ஜென்மத்தில் செய்திருக்க வேணும் இலையான் கில்லர் உங்களைப் போல எல்லாருக்கும் கிடைக்குமோ?

பாவம் அல்வாயன் வாயிற்கு வாழ்க்கைப்பட்ட மனுசன்போல... இடியப்பத்திற்கும் வடைக்கும் வரிசையில் நின்று வாங்குவதில் இன்னும் வாழ்க்கை வெறுக்காமல் இருப்பது பெரியவிடயம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

எம்மவர் Mc Donald's, Tim Hortons, Pizza hut போன்றவற்றில் ஏற்படும் விலையுயர்வை பற்றி கேள்வி கேட்பது இல்லை. ஆனால் தமிழ் கடையில் வடையின் விலையை ஏற்றினால் உடனே Google reviews இல் வந்து தாறுமாறாக எழுதுகின்றனர். 

நீங்கள்  சொல்லிய அனைத்து கடைகளும் நடுசாமத்தில் போய்  வேண்டினாலும் சுவை மாறாது ஆனால் நம்ம தமிழ்க்கடைகள் அப்படியா ? 

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வடை  என்பதா?
சுவையும்  போங்கிவிட்டதா?
மனமே அழுது விட்டதா அல்லது  சிந்திவிட்டதா?
சொல் மனமே....

 ஒரு நாளைக்கு உப்பு ஒருநாளைக்கு உப்பே இல்லாமல்  உறைப்பு அடுத்தநாள் உறைப்பே  இல்லாமல் லண்டன் வெதர்  போல் சுவை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறையவே எழுதி வைத்திருக்கின்றேன்..தலைப்பு ஒன்றை  கண்டதும் ..2 கிறுக்கல்களை 2 இடத்தில் போட்டேன்...இப்ப  ஒன்று .. அடிவாங்கிறமாதிரி இருக்கு.. எல்லோருக்கும் நன்றி...

சிறியர்..உங்கள்  உதவிக்கு நன்றி

சகாரா ...வாய்க்கட்டுபாடற்ற  எனக்கு  வாய்த்ததும்..நல்ல சமையல் காப்புக் கைதான் ..நன்றி உங்களுக்கு..

இந்த இடத்தி ல் 25 வருடமாய் இருக்கின்றேன்...சாப்பாடு வாங்காவிட்டாலும்...பார்த்த அனுபவகங்களையே பகிடியாய் கிறுக்கினேன்..

நிழலி...25 வருடமாய் இந்த இடம்....அப்ப இந்தக் கடைகள்..பிறந்து ..தவழ்ந்து நடந்தது வரை தெரியும்...இதை நான் கிறுக்கியது...பகிடிக்காக மட்டுமே...கடைகாரன் அதிலாபம் அடைந்தாலும் ,நான் நட்டமடைந்தாலும் போற இடம் ஒக்டன்தான்.. இரண்டு பேருக்குமே ஒரு இடம்தான் வித்தியாசமில்லை...இருக்கும்வரை சிரித்துவிட்டுப் போவோம்...மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்..

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

நீங்கள்  சொல்லிய அனைத்து கடைகளும் நடுசாமத்தில் போய்  வேண்டினாலும் சுவை மாறாது ஆனால் நம்ம தமிழ்க்கடைகள் அப்படியா ? 

 

விலையும் அப்படித்தானே பெருமாள்.

நாலு பேர் இருக்கும் ஒரு குடும்பம் Mc இற்கு போய் வயிறாற சாப்பிட குறைந்தது $35 ஆவது தேவைப்படும். ஆனால் தமிழ் கடையில் $20 இற்கும் குறைவான விலையில் 20 இட்டலி + சம்பல் + சாம்பார் எல்லாம் சேர்த்து வாங்கி ஒரு வேளை உணவை பூர்த்தி செய்யலாம். இதுவே இடியப்பம் என்றால் $13 இற்கு 25 இடியப்பம் + சொதி வாங்கி medium size இல் கோழியோ அல்லது மீன் கறியும் வாங்கி 4 பேர் சாப்பிடலாம்.

அனேக தமிழ் கடைகளில் கொத்து ரொட்டி $9 ஆக்கி விட்டார்கள். ஆனால் 3 வாங்கினால் 4 பேர் இரவும் சாப்பிட்டு அடுத்த நாள் 2 பேர் சாப்பிட முடியும்.

Mc, Tim போன்ற கடைகளில் burger போடுவதற்குரிய bun இல் இருந்து fries இற்குரிய உருளைக்கிழங்கு சிப்ஸ் வரை அவர்களது பிரதான பிரிவில் இருந்து தான் franchise களுக்கு அனுப்பி வைப்பர். பீசா என்றால் மாவை (Daugh), cheese போன்றவற்றை அனுப்பி வைப்பர். அவை கடும் தரக்கட்டுப்பாடுடன் இருக்கும். இதனை தமிழ், இந்திய, சீன கடைகளில் எதிர்பார்க்க முடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

விலையும் அப்படித்தானே பெருமாள்.

நாலு பேர் இருக்கும் ஒரு குடும்பம் Mc இற்கு போய் வயிறாற சாப்பிட குறைந்தது $35 ஆவது தேவைப்படும். ஆனால் தமிழ் கடையில் $20 இற்கும் குறைவான விலையில் 20 இட்டலி + சம்பல் + சாம்பார் எல்லாம் சேர்த்து வாங்கி ஒரு வேளை உணவை பூர்த்தி செய்யலாம். இதுவே இடியப்பம் என்றால் $13 இற்கு 25 இடியப்பம் + சொதி வாங்கி medium size இல் கோழியோ அல்லது மீன் கறியும் வாங்கி 4 பேர் சாப்பிடலாம்.

அனேக தமிழ் கடைகளில் கொத்து ரொட்டி $9 ஆக்கி விட்டார்கள். ஆனால் 3 வாங்கினால் 4 பேர் இரவும் சாப்பிட்டு அடுத்த நாள் 2 பேர் சாப்பிட முடியும்.

Mc, Tim போன்ற கடைகளில் burger போடுவதற்குரிய bun இல் இருந்து fries இற்குரிய உருளைக்கிழங்கு சிப்ஸ் வரை அவர்களது பிரதான பிரிவில் இருந்து தான் franchise களுக்கு அனுப்பி வைப்பர். பீசா என்றால் மாவை (Daugh), cheese போன்றவற்றை அனுப்பி வைப்பர். அவை கடும் தரக்கட்டுப்பாடுடன் இருக்கும். இதனை தமிழ், இந்திய, சீன கடைகளில் எதிர்பார்க்க முடியாது.

 

எனது தமிழ் சாப்பாட்டுக்கடை கொள்வனவு சரியான குறைவு.  சாப்பாடு (சோறு புட்டு இட்லி பிரியாணி) என்று ஒரு நாளும் வாங்கியது இல்லை (ஓரிரு தடவை வேறு வீடுகளுக்கு அவசரமாக கொடுக்க வேண்டிய தேவைகளைத் தவிர).  

நான் வாங்குவது அப்பப்போ கொத்து ரொட்டி, ரோல்ஸ், சமோசா/பற்றிஸ், மோதகம் மற்றும் ரோஸ்ற் பாண்.  
வெறும் உருளைக்கிழங்குகை (10  இறத்தல் 3 டாலர்)  அவிச்சு அதை மட்டன் gravy  ஓட கலந்து மாவிலை உருட்டி பழைய எண்னிக்கை போட்டு குடுக்கிற ரோல்லஸிற்கு  ஏன் 1.50  என்று இன்னும் விளங்கவில்லை.  அதே போல சமோசா பற்றிஸ் எண்ட பேர்ல வெறும் மாவை எண்னிக்கை போட்டு விற்கிறார்கள் விக்கிரங்கள் 2/$.  10-20% கூட்டுறது பரவாய் இல்லை.  50-100% கூட்டுறது கொஞ்சம் கூட.

நீங்கள் நினைப்பது போல சாப்பாட்டுக்கடை வருமானமில்லாமல் இல்லை.  100% லாபம் எடுக்கும் ஒரே வியாபாரம்.  பலர் பூட்டியதுக்கு காரணம் 1. ஏற்கனவே 4 சாப்பிட்டு கடை இருக்கிற இடத்தில  திறக்கிறது.  2.  வாடிக்கையாளர்களிடம் சரியான அணுகுமுறை இல்லை.  எதோ நாங்கள் வில்லங்கத்துக்கு போற போல நினைப்பு.  3.  தரம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Sabesh said:

எனது தமிழ் சாப்பாட்டுக்கடை கொள்வனவு சரியான குறைவு.  சாப்பாடு (சோறு புட்டு இட்லி பிரியாணி) என்று ஒரு நாளும் வாங்கியது இல்லை (ஓரிரு தடவை வேறு வீடுகளுக்கு அவசரமாக கொடுக்க வேண்டிய தேவைகளைத் தவிர).  

நான் வாங்குவது அப்பப்போ கொத்து ரொட்டி, ரோல்ஸ், சமோசா/பற்றிஸ், மோதகம் மற்றும் ரோஸ்ற் பாண்.  
வெறும் உருளைக்கிழங்குகை (10  இறத்தல் 3 டாலர்)  அவிச்சு அதை மட்டன் gravy  ஓட கலந்து மாவிலை உருட்டி பழைய எண்னிக்கை போட்டு குடுக்கிற ரோல்லஸிற்கு  ஏன் 1.50  என்று இன்னும் விளங்கவில்லை.  அதே போல சமோசா பற்றிஸ் எண்ட பேர்ல வெறும் மாவை எண்னிக்கை போட்டு விக்கிரங்கள் 2/$.  10-20% கூட்டுறது பரவாய் இல்லை.  50-100% கூட்டுறது கொஞ்சம் கூட.

நீங்கள் நினைப்பது போல சாப்பாட்டுக்கடை வருமானமில்லாமல் இல்லை.  100% லாபம் எடுக்கும் ஒரே வியாபாரம்.  பலர் பூட்டியதுக்கு காரணம் 1. ஏற்கனவே 4 சாப்பிட்டு கடை இருக்கிற இடத்தில  திறக்கிறது.  2.  வாடிக்கையாளர்களிடம் சரியான அணுகுமுறை இல்லை.  எதோ நாங்கள் வில்லங்கத்துக்கு போற போல நினைப்பு.  3.  தரம். 

இதுதான் உண்மை.....நாங்களும் கஸ்டப்பட்டு உழைக்கிறது...அவர்களும் அவ்வாறுதான்....ஆனால் ஒரு மனச்சாட்சி வேண்டும்....

Link to comment
Share on other sites

2 hours ago, Sabesh said:

எனது தமிழ் சாப்பாட்டுக்கடை கொள்வனவு சரியான குறைவு.  சாப்பாடு (சோறு புட்டு இட்லி பிரியாணி) என்று ஒரு நாளும் வாங்கியது இல்லை (ஓரிரு தடவை வேறு வீடுகளுக்கு அவசரமாக கொடுக்க வேண்டிய தேவைகளைத் தவிர).  

நான் வாங்குவது அப்பப்போ கொத்து ரொட்டி, ரோல்ஸ், சமோசா/பற்றிஸ், மோதகம் மற்றும் ரோஸ்ற் பாண்.  
வெறும் உருளைக்கிழங்குகை (10  இறத்தல் 3 டாலர்)  அவிச்சு அதை மட்டன் gravy  ஓட கலந்து மாவிலை உருட்டி பழைய எண்னிக்கை போட்டு குடுக்கிற ரோல்லஸிற்கு  ஏன் 1.50  என்று இன்னும் விளங்கவில்லை.  அதே போல சமோசா பற்றிஸ் எண்ட பேர்ல வெறும் மாவை எண்னிக்கை போட்டு விற்கிறார்கள் விக்கிரங்கள் 2/$.  10-20% கூட்டுறது பரவாய் இல்லை.  50-100% கூட்டுறது கொஞ்சம் கூட.

நீங்கள் நினைப்பது போல சாப்பாட்டுக்கடை வருமானமில்லாமல் இல்லை.  100% லாபம் எடுக்கும் ஒரே வியாபாரம்.  பலர் பூட்டியதுக்கு காரணம் 1. ஏற்கனவே 4 சாப்பிட்டு கடை இருக்கிற இடத்தில  திறக்கிறது.  2.  வாடிக்கையாளர்களிடம் சரியான அணுகுமுறை இல்லை.  எதோ நாங்கள் வில்லங்கத்துக்கு போற போல நினைப்பு.  3.  தரம். 

சபேஷ்,

நிறைய நிறைய இறைச்சி போட்டு, இலங்கை தக்காளி சோஸ் (MD) போட்டு ஒரு தமிழ் கடையில் விற்கின்றார்கல். 3 றோல்ஸ் 7.50. கொள்ளுப்பிட்டியில் உள்ள இல் upscale breakfast restaurant இல் சாப்பிட்ட மாதிரி இருக்கும். விற்பியில் தான் உள்ளது. பெயர்: Cuisine Xpress. அங்குள்ள எல்லா உணவும் நல்ல தரமானது. ஆனால் விலை...கடும் விலை. (ஒரு கொத்து $13 இல் இருந்து $15 வரை).

நல்ல தரமாக, ஆனால் விலை அதிகமாக விற்கும் சில தமிழ் / இலங்கை உணவுக் கடைகள் அண்மையில் திறக்கத் தொடங்கியுள்ளனர். இது ஸ்பைஸ் லாண்ட், பூரணி போன்ற தரத்தை போன்றவை அல்ல (Example: Bhai biriyani)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.