Jump to content

பிரித்தானியாவில், வாழ்க்கைச் செலவுகள்... அதிகரிப்பு: கடைகளில், விற்பனை குறைந்துள்ளது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு: கடைகளில் விற்பனை குறைந்துள்ளது!

பிரித்தானியாவில், வாழ்க்கைச் செலவுகள்... அதிகரிப்பு: கடைகளில், விற்பனை குறைந்துள்ளது!

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின் அழுத்தத்தின் கீழ் வீட்டு வரவு செலவுத் திட்டங்கள் வருவதால் கடைகளில் விற்பனை குறைந்துள்ளது என்று பிரித்தானிய சில்லறை வணிகக் கூட்டமைப்பு (பிஆர்சி) தெரிவித்துள்ளது.

புதிய புள்ளிவிபரங்கள் மார்ச் மாதத்திற்கான விற்பனை வளர்ச்சி இந்த ஆண்டு இதுவரை அதன் மெதுவான வீதத்தில் உயர்ந்துள்ளது.
பிரித்தானிய சில்லறை விற்பனை 12 மாதங்களுக்கு முந்தையதை விட 0.4 சதவீதம் குறைந்துள்ளது.

மில்லியன் கணக்கானவர்கள் அதிக எரிசக்தி கட்டணங்கள் மற்றும் வரிகளை சமாளிக்க வேண்டியிருக்கும் நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.

மக்களின் நிதி மீதான அழுத்தம் மற்றும் உக்ரைன் போர் ஆகியவை நுகர்வோர் நம்பிக்கையை சீர் குலைத்துவிட்டது என்று பிரித்தானிய சில்லறை வணிகக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

https://athavannews.com/2022/1276340

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் பொருட்களின் விலைகள் கூடிக் கொண்டு போகுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரதி said:

ஒவ்வொரு நாளும் பொருட்களின் விலைகள் கூடிக் கொண்டு போகுது 

இங்கும் அப்படித்தான். 99 சதம்விற்ற சூரிய காந்தி எண்ணை. இப்ப 5 €
வடை சுடவும், வழி இல்லாமல் இருக்கு. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இங்கும் அப்படித்தான். 99 சதம்விற்ற சூரிய காந்தி எண்ணை. இப்ப 5 €
வடை சுடவும், வழி இல்லாமல் இருக்கு. 🤣

சிறியர் இதையும் பாருங்கோ...என்னுடைய நிலைமையும் இதுதான்

 

இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..

பல்லாயிரம்  மைல் கடந்து

பரதேசத்தில்  கனடாவில் வாழும்நான்

படும் கஸ்டம் என்னென்று தெரியுமோ..மூ

பத்து ஆண்டு கடந்தும்முசுப்

பாத்திக்கு தன்னும்  நோ கனடியன் பூட்..

 

பக்கத்திலை

பத்துத் தமிழ்க் கடை

பலகாரம் முதல்

பத்தியச் சாப்பாடுவரை

பகலிராவாக் கிடைக்கும்

பகிடி என்ன தெரியுமோ..

 

வடை மூன்று  ஒரு டொலர் அப்ப..

வடை  இரண்டு ஒன்றரை டொலர் இப்ப….

இலங்கையில் விலைவாசி ஏற்றமாம்..

இடியப்பம் இருபத்தைந்து  மூன்று டொலர் அப்ப

இப்ப இந்தப்பெட்டிஆறு டொலர்..

இதுக்கும் அதையே   சொல்லுகினம்

 

கொத்து ரொட்டியிலும்

கொல்லுகினம்   விலையை..

கொடுவாமீன் சாப்பாட்டுக்கும் அதுதான்

கொள்ளளவில் மாற்றமும்

கொண்டுவந்துவிட்டு

கொள்ளையை கூடவும் அடித்துவிட்டு

கெத்தாகச் சொல்லுகினம்

 

இலங்கையில் விலைவாசி ஏற்றம்

இங்கையும் கூட்டத்தானே வேணும்

உண்ணாணை கேட்கின்றேன்..

இலங்கைக்கும்

இவைக்கும் என்ன தொடர்பு..

சித்தாலேபவையும்

சிறு குடிநீர் பைகளையும்

இறக்கிவிட்டு

இவையின்ரை கதைகளைக் கேட்டும்

இப்பவும்

இந்தக் கடை வரிசையிதான் நிற்கின்றேன்..

இருக்கின்ற இந்த வயிறு

இலங்கைச் சாப்பாடுதான்  வேணுமாம்

  • Like 2
  • Haha 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, alvayan said:

சிறியர் இதையும் பாருங்கோ...என்னுடைய நிலைமையும் இதுதான்

 

இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..

பல்லாயிரம்  மைல் கடந்து

பரதேசத்தில்  கனடாவில் வாழும்நான்

படும் கஸ்டம் என்னென்று தெரியுமோ..மூ

பத்து ஆண்டு கடந்தும்முசுப்

பாத்திக்கு தன்னும்  நோ கனடியன் பூட்..

 

பக்கத்திலை

பத்துத் தமிழ்க் கடை

பலகாரம் முதல்

பத்தியச் சாப்பாடுவரை

பகலிராவாக் கிடைக்கும்

பகிடி என்ன தெரியுமோ..

 

வடை மூன்று  ஒரு டொலர் அப்ப..

வடை  இரண்டு ஒன்றரை டொலர் இப்ப….

இலங்கையில் விலைவாசி ஏற்றமாம்..

இடியப்பம் இருபத்தைந்து  மூன்று டொலர் அப்ப

இப்ப இந்தப்பெட்டிஆறு டொலர்..

இதுக்கும் அதையே   சொல்லுகினம்

 

கொத்து ரொட்டியிலும்

கொல்லுகினம்   விலையை..

கொடுவாமீன் சாப்பாட்டுக்கும் அதுதான்

கொள்ளளவில் மாற்றமும்

கொண்டுவந்துவிட்டு

கொள்ளையை கூடவும் அடித்துவிட்டு

கெத்தாகச் சொல்லுகினம்

 

இலங்கையில் விலைவாசி ஏற்றம்

இங்கையும் கூட்டத்தானே வேணும்

உண்ணாணை கேட்கின்றேன்..

இலங்கைக்கும்

இவைக்கும் என்ன தொடர்பு..

சித்தாலேபவையும்

சிறு குடிநீர் பைகளையும்

இறக்கிவிட்டு

இவையின்ரை கதைகளைக் கேட்டும்

இப்பவும்

இந்தக் கடை வரிசையிதான் நிற்கின்றேன்..

இருக்கின்ற இந்த வயிறு

இலங்கைச் சாப்பாடுதான்  வேணுமாம்

நகைச்சுவையாக சொன்ன… நல்ல கவிதை, அல்வாயன். 👍🏽 😂

இதனை… யாழ். களத்தின், சுய ஆக்கம் பகுதியில் பதிந்து விடுங்கள். 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் அதே கதைதான்  அல்வாயன்.......நல்லதொரு புலம்பல் கவிதை......!   😂

  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, alvayan said:

சிறியர் இதையும் பாருங்கோ...என்னுடைய நிலைமையும் இதுதான்

 

இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..

பல்லாயிரம்  மைல் கடந்து

பரதேசத்தில்  கனடாவில் வாழும்நான்

படும் கஸ்டம் என்னென்று தெரியுமோ..மூ

பத்து ஆண்டு கடந்தும்முசுப்

பாத்திக்கு தன்னும்  நோ கனடியன் பூட்..

 

பக்கத்திலை

பத்துத் தமிழ்க் கடை

பலகாரம் முதல்

பத்தியச் சாப்பாடுவரை

பகலிராவாக் கிடைக்கும்

பகிடி என்ன தெரியுமோ..

 

வடை மூன்று  ஒரு டொலர் அப்ப..

வடை  இரண்டு ஒன்றரை டொலர் இப்ப….

இலங்கையில் விலைவாசி ஏற்றமாம்..

இடியப்பம் இருபத்தைந்து  மூன்று டொலர் அப்ப

இப்ப இந்தப்பெட்டிஆறு டொலர்..

இதுக்கும் அதையே   சொல்லுகினம்

 

கொத்து ரொட்டியிலும்

கொல்லுகினம்   விலையை..

கொடுவாமீன் சாப்பாட்டுக்கும் அதுதான்

கொள்ளளவில் மாற்றமும்

கொண்டுவந்துவிட்டு

கொள்ளையை கூடவும் அடித்துவிட்டு

கெத்தாகச் சொல்லுகினம்

 

இலங்கையில் விலைவாசி ஏற்றம்

இங்கையும் கூட்டத்தானே வேணும்

உண்ணாணை கேட்கின்றேன்..

இலங்கைக்கும்

இவைக்கும் என்ன தொடர்பு..

சித்தாலேபவையும்

சிறு குடிநீர் பைகளையும்

இறக்கிவிட்டு

இவையின்ரை கதைகளைக் கேட்டும்

இப்பவும்

இந்தக் கடை வரிசையிதான் நிற்கின்றேன்..

இருக்கின்ற இந்த வயிறு

இலங்கைச் சாப்பாடுதான்  வேணுமாம்

தமிழ் உணவுக் கடைகளில் உள்ள விலையேற்றம் ஓரளவுக்கு நியாயமானதே. 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் Costco வில் $15 இற்கு விற்ற 16 லீட்டர் கனோலா எண்ணெய் , இன்று மூன்று மடங்கை விட அதிகரித்து $48 இல் வந்து நிற்கின்றது. கண்டெயினர்களின் விலையேற்றத்தினால், இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகை மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளது (சீனர்களின் கடைகளைத் தவிர). உக்ரைன் மீதான யுத்தத்தின் பின் கோதுமை மாவின் விலை அதிகரித்தது மட்டுமல்லாமல், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதே போன்றே அனைத்து மரக்கறிகளின் விலைகளும் Walmart போன்ற இடங்களில் கூட அதிகரித்து உள்ளன. எல்லாவற்றையும் எண்ணையில் பொரித்து சாப்பிடும் எமக்கு அதன் விலை அதிகரிப்பு பாதிக்கத் தான் செய்யும்.

தமிழ் உணவுக் கடைகளில் ஒவ்வொரு உணவுப் பொருளை விற்கும் போது கிடைக்கும் லாபம் மிகச் சிறியது. அதிக எண்ணிக்கையில் விற்கும் போது மாத்திரமே லாபம் காண முடியும்.  இந்த சிறிய லாபத்தின் மூலம் தான் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் இருந்து வாடகை வரைக்கும் கொடுக்க வேண்டும். லாபம் கிடைத்து தொடர்ந்து நடாத்துவது சவாலான விடயம். இதனால் தான் பல தமிழ் உணவுக் கடைகள் வந்த வேகத்தில் மறைந்து விடுகின்றன. ஒரு தமிழ் உணவுக் கடை என்பது ஒரு குறிப்பிட்ட உணவை மட்டுமே விற்கும் கடையாக இல்லாமல் வடையில் இருந்து புரியாணி, வாழையிலையில் சைவ சாப்பாடு மற்றும் மாலுபாண் வரை விற்கும் பல் உணவுச் சாலை என்பதால் றிஸ்கும் அதிகம்.

எம்மவர் Mc Donald's, Tim Hortons, Pizza hut போன்றவற்றில் ஏற்படும் விலையுயர்வை பற்றி கேள்வி கேட்பது இல்லை. ஆனால் தமிழ் கடையில் வடையின் விலையை ஏற்றினால் உடனே Google reviews இல் வந்து தாறுமாறாக எழுதுகின்றனர். 
 

Edited by நிழலி
எழுத்துப் பிழை திருத்தம்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, alvayan said:

சிறியர் இதையும் பாருங்கோ...என்னுடைய நிலைமையும் இதுதான்

 

இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..

பல்லாயிரம்  மைல் கடந்து

பரதேசத்தில்  கனடாவில் வாழும்நான்

படும் கஸ்டம் என்னென்று தெரியுமோ..மூ

பத்து ஆண்டு கடந்தும்முசுப்

பாத்திக்கு தன்னும்  நோ கனடியன் பூட்..

 

பக்கத்திலை

பத்துத் தமிழ்க் கடை

பலகாரம் முதல்

பத்தியச் சாப்பாடுவரை

பகலிராவாக் கிடைக்கும்

பகிடி என்ன தெரியுமோ..

 

வடை மூன்று  ஒரு டொலர் அப்ப..

வடை  இரண்டு ஒன்றரை டொலர் இப்ப….

இலங்கையில் விலைவாசி ஏற்றமாம்..

இடியப்பம் இருபத்தைந்து  மூன்று டொலர் அப்ப

இப்ப இந்தப்பெட்டிஆறு டொலர்..

இதுக்கும் அதையே   சொல்லுகினம்

 

கொத்து ரொட்டியிலும்

கொல்லுகினம்   விலையை..

கொடுவாமீன் சாப்பாட்டுக்கும் அதுதான்

கொள்ளளவில் மாற்றமும்

கொண்டுவந்துவிட்டு

கொள்ளையை கூடவும் அடித்துவிட்டு

கெத்தாகச் சொல்லுகினம்

 

இலங்கையில் விலைவாசி ஏற்றம்

இங்கையும் கூட்டத்தானே வேணும்

உண்ணாணை கேட்கின்றேன்..

இலங்கைக்கும்

இவைக்கும் என்ன தொடர்பு..

சித்தாலேபவையும்

சிறு குடிநீர் பைகளையும்

இறக்கிவிட்டு

இவையின்ரை கதைகளைக் கேட்டும்

இப்பவும்

இந்தக் கடை வரிசையிதான் நிற்கின்றேன்..

இருக்கின்ற இந்த வயிறு

இலங்கைச் சாப்பாடுதான்  வேணுமாம்

எல்லாரது நிலைமையும் இதே தானே..✍😊

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

நகைச்சுவையாக சொன்ன… நல்ல கவிதை, அல்வாயன். 👍🏽 😂

இதனை… யாழ். களத்தின், சுய ஆக்கம் பகுதியில் பதிந்து விடுங்கள். 🙂

பதிவிடத்தெரியவில்லை..உதவி கிடைக்குமா..

 

எம்மவர் Mc Donald's, Tim Hortons, Pizza hut போன்றவற்றில் ஏற்படும் விலையுயர்வை பற்றி கேள்வி கேட்பது இல்லை. ஆனால் தமிழ் கடையில் வடையின் விலையை ஏற்றினால் உடனே இல் வந்து தாறுமாறாக எழுதுகின்றனர். 

ஏனையா இந்த கொலைவெறி...விரும்பிச் சாப்பிடும் சாப்பாட்டின் விலை கூட்டினால் கண்டபடி எழுதத்தானே தோன்றும்... மார்க் /ஸ் டீல் சந்திக் கடைகளில் நீங்கள்  வாடிக்கையாளர்தானே...அங்கு நிச்சயம் இதை அனுபவித்திருப்பீர்கள்....அளவு முதல் விலை  விலைவரை....பகல் கொள்ளை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

நகைச்சுவையாக சொன்ன… நல்ல கவிதை, அல்வாயன். 👍🏽 😂

இதனை… யாழ். களத்தின், சுய ஆக்கம் பகுதியில் பதிந்து விடுங்கள். 🙂

 

4 minutes ago, alvayan said:

பதிவிடத்தெரியவில்லை..உதவி கிடைக்குமா..

 

22 minutes ago, நிழலி said:

தமிழ் உணவுக் கடைகளில் உள்ள விலையேற்றம் ஓரளவுக்கு நியாயமானதே.  

நிழலி…. மேலே, அல்வாயன் எழுதிய கவிதையை…
யாழ். கள சுய ஆக்கம் பகுதிக்கு, மாற்றி விடட்டாம். 
நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இங்கும் அப்படித்தான். 99 சதம்விற்ற சூரிய காந்தி எண்ணை. இப்ப 5 €
வடை சுடவும், வழி இல்லாமல் இருக்கு. 🤣

எண்ணை இல்லாமல் நல்ல சுவையாய் சமைக்கலாம் சிறித்தம்பி.....😎
எண்ணைச்சாப்பாடு உடம்புக்கு கூடாது🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

எண்ணை இல்லாமல் நல்ல சுவையாய் சமைக்கலாம் சிறித்தம்பி.....😎
எண்ணைச்சாப்பாடு உடம்புக்கு கூடாது🤣

குமாரசாமி அண்ணை…. எண்ணை சாப்பாடு, கூடாது தான்…
ஆனால்…. நாக்கு, சொல்வழி கேட்குதில்லையே…. 😂

Link to comment
Share on other sites

43 minutes ago, alvayan said:

பதிவிடத்தெரியவில்லை..உதவி கிடைக்குமா..

 

எம்மவர் Mc Donald's, Tim Hortons, Pizza hut போன்றவற்றில் ஏற்படும் விலையுயர்வை பற்றி கேள்வி கேட்பது இல்லை. ஆனால் தமிழ் கடையில் வடையின் விலையை ஏற்றினால் உடனே இல் வந்து தாறுமாறாக எழுதுகின்றனர். 

 

Google review இல் என்று வந்திருக்க வேண்டும், தமிழில் எழுதி கொப்பி பேஸ்ட் செய்யும் போது விடுபட்டு விட்டது

45 minutes ago, alvayan said:

 

ஏனையா இந்த கொலைவெறி...விரும்பிச் சாப்பிடும் சாப்பாட்டின் விலை கூட்டினால் கண்டபடி எழுதத்தானே தோன்றும்... மார்க் /ஸ் டீல் சந்திக் கடைகளில் நீங்கள்  வாடிக்கையாளர்தானே...அங்கு நிச்சயம் இதை அனுபவித்திருப்பீர்கள்....அளவு முதல் விலை  விலைவரை....பகல் கொள்ளை..

முன்னர் பூரணி விலாசில் வந்து வாங்குவதுண்டு. ஆனால் அக் கடையில் முதலாளி ஊழியர்களை எனக்கு முன்பாக திட்டியது குறித்து நான் கேள்வி கேட்டு பிரச்சினைபட்ட பின் அங்கு வாங்குவது இல்லை.

இப்ப கொத்து கடைக்கு மட்டுமே வருவதுண்டு. அங்கு விற்கும் ஆட்டுக்குடல் கறிக்காகவும், லம்ப் ரைசுக்காகவும் வருவதுண்டு. இரால் வடை பொரியலும் நன்றாக இருக்கும்.

நான் விற்பியில் வசிப்பதால் ஸ்கார்பரோ வந்து வாங்குவது நேர விரயமாக தோன்றும். 

Link to comment
Share on other sites

41 minutes ago, தமிழ் சிறி said:

 

 

நிழலி…. மேலே, அல்வாயன் எழுதிய கவிதையை…
யாழ். கள சுய ஆக்கம் பகுதிக்கு, மாற்றி விடட்டாம். 
நன்றி.

அவரே அங்கு போட்டால் நல்லது. திரியின் இடையில் உள்ளதை பிரித்து எடிட் பண்ணித்தான் என்னால் போட வேண்டி வரும்

 சுய ஆக்கத்தில் என் பெயர் அடியில் தெரியும் அல்லது எடிட் பண்ணியதில் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, alvayan said:

பதிவிடத்தெரியவில்லை..உதவி கிடைக்குமா..

 

எம்மவர் Mc Donald's, Tim Hortons, Pizza hut போன்றவற்றில் ஏற்படும் விலையுயர்வை பற்றி கேள்வி கேட்பது இல்லை. ஆனால் தமிழ் கடையில் வடையின் விலையை ஏற்றினால் உடனே இல் வந்து தாறுமாறாக எழுதுகின்றனர். 

ஏனையா இந்த கொலைவெறி...விரும்பிச் சாப்பிடும் சாப்பாட்டின் விலை கூட்டினால் கண்டபடி எழுதத்தானே தோன்றும்... மார்க் /ஸ் டீல் சந்திக் கடைகளில் நீங்கள்  வாடிக்கையாளர்தானே...அங்கு நிச்சயம் இதை அனுபவித்திருப்பீர்கள்....அளவு முதல் விலை  விலைவரை....பகல் கொள்ளை..

நான் பதில் எழுதுவது தவறு..இருந்தாலும் எழுதுகிறேன்.கடைக்காரர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளும் அதிகமாகத் தானே இருக்கும்..வாடகை தொடக்கம் பணியாளார்களின் சம்பளம் பொருட்களின் கொள்வனவு செலவு..நிறையவே..இதே ரிம்கொட்டனில் ஏதாவது கேட்டால் வேணும் என்றால் நம்மவர்களே எவ்வளவு கதைப்பினம்....👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

அவரே அங்கு போட்டால் நல்லது. திரியின் இடையில் உள்ளதை பிரித்து எடிட் பண்ணித்தான் என்னால் போட வேண்டி வரும்

 சுய ஆக்கத்தில் என் பெயர் அடியில் தெரியும் அல்லது எடிட் பண்ணியதில் தெரியும்.

நன்றி நிழலி.
 

58 minutes ago, alvayan said:

பதிவிடத்தெரியவில்லை..உதவி கிடைக்குமா..

அல்வாயன்….
நீங்களே… சுய ஆக்கம் பகுதியில், மேலே உள்ள கவிதையை கொப்பி எடுத்து,
புதிய தலைப்பில் பதிந்து விடுங்களேன். 

“இலங்கை… சாப்பாடுதான், வேணுமாம்.”
என்ற தலைப்பே… நன்றாக உள்ளது. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்வாயன் வாய் இலங்கை சாப்பாடுதான் வேணும் என்று அடம்பிடித்தால் கைகளுக்கு சமைக்கப்பழக்கி விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வல்வை சகாறா said:

அல்வாயன் வாய் இலங்கை சாப்பாடுதான் வேணும் என்று அடம்பிடித்தால் கைகளுக்கு சமைக்கப்பழக்கி விடுங்கள்.

காப்புக் கையாலை…. சமைத்தது தான், அல்வாயனுக்கு வேணுமாம். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

காப்புக் கையாலை…. சமைத்தது தான், அல்வாயனுக்கு வேணுமாம். 😂

காப்புக்கையால் உணவு கிடைக்க ஏகப்பட்ட புண்ணியத்தை போன ஜென்மத்தில் செய்திருக்க வேணும் இலையான் கில்லர் உங்களைப் போல எல்லாருக்கும் கிடைக்குமோ?

பாவம் அல்வாயன் வாயிற்கு வாழ்க்கைப்பட்ட மனுசன்போல... இடியப்பத்திற்கும் வடைக்கும் வரிசையில் நின்று வாங்குவதில் இன்னும் வாழ்க்கை வெறுக்காமல் இருப்பது பெரியவிடயம் 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

எம்மவர் Mc Donald's, Tim Hortons, Pizza hut போன்றவற்றில் ஏற்படும் விலையுயர்வை பற்றி கேள்வி கேட்பது இல்லை. ஆனால் தமிழ் கடையில் வடையின் விலையை ஏற்றினால் உடனே Google reviews இல் வந்து தாறுமாறாக எழுதுகின்றனர். 

நீங்கள்  சொல்லிய அனைத்து கடைகளும் நடுசாமத்தில் போய்  வேண்டினாலும் சுவை மாறாது ஆனால் நம்ம தமிழ்க்கடைகள் அப்படியா ? 

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வடை  என்பதா?
சுவையும்  போங்கிவிட்டதா?
மனமே அழுது விட்டதா அல்லது  சிந்திவிட்டதா?
சொல் மனமே....

 ஒரு நாளைக்கு உப்பு ஒருநாளைக்கு உப்பே இல்லாமல்  உறைப்பு அடுத்தநாள் உறைப்பே  இல்லாமல் லண்டன் வெதர்  போல் சுவை .

  • Like 2
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறையவே எழுதி வைத்திருக்கின்றேன்..தலைப்பு ஒன்றை  கண்டதும் ..2 கிறுக்கல்களை 2 இடத்தில் போட்டேன்...இப்ப  ஒன்று .. அடிவாங்கிறமாதிரி இருக்கு.. எல்லோருக்கும் நன்றி...

சிறியர்..உங்கள்  உதவிக்கு நன்றி

சகாரா ...வாய்க்கட்டுபாடற்ற  எனக்கு  வாய்த்ததும்..நல்ல சமையல் காப்புக் கைதான் ..நன்றி உங்களுக்கு..

இந்த இடத்தி ல் 25 வருடமாய் இருக்கின்றேன்...சாப்பாடு வாங்காவிட்டாலும்...பார்த்த அனுபவகங்களையே பகிடியாய் கிறுக்கினேன்..

நிழலி...25 வருடமாய் இந்த இடம்....அப்ப இந்தக் கடைகள்..பிறந்து ..தவழ்ந்து நடந்தது வரை தெரியும்...இதை நான் கிறுக்கியது...பகிடிக்காக மட்டுமே...கடைகாரன் அதிலாபம் அடைந்தாலும் ,நான் நட்டமடைந்தாலும் போற இடம் ஒக்டன்தான்.. இரண்டு பேருக்குமே ஒரு இடம்தான் வித்தியாசமில்லை...இருக்கும்வரை சிரித்துவிட்டுப் போவோம்...மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்..

Edited by alvayan
  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

நீங்கள்  சொல்லிய அனைத்து கடைகளும் நடுசாமத்தில் போய்  வேண்டினாலும் சுவை மாறாது ஆனால் நம்ம தமிழ்க்கடைகள் அப்படியா ? 

 

விலையும் அப்படித்தானே பெருமாள்.

நாலு பேர் இருக்கும் ஒரு குடும்பம் Mc இற்கு போய் வயிறாற சாப்பிட குறைந்தது $35 ஆவது தேவைப்படும். ஆனால் தமிழ் கடையில் $20 இற்கும் குறைவான விலையில் 20 இட்டலி + சம்பல் + சாம்பார் எல்லாம் சேர்த்து வாங்கி ஒரு வேளை உணவை பூர்த்தி செய்யலாம். இதுவே இடியப்பம் என்றால் $13 இற்கு 25 இடியப்பம் + சொதி வாங்கி medium size இல் கோழியோ அல்லது மீன் கறியும் வாங்கி 4 பேர் சாப்பிடலாம்.

அனேக தமிழ் கடைகளில் கொத்து ரொட்டி $9 ஆக்கி விட்டார்கள். ஆனால் 3 வாங்கினால் 4 பேர் இரவும் சாப்பிட்டு அடுத்த நாள் 2 பேர் சாப்பிட முடியும்.

Mc, Tim போன்ற கடைகளில் burger போடுவதற்குரிய bun இல் இருந்து fries இற்குரிய உருளைக்கிழங்கு சிப்ஸ் வரை அவர்களது பிரதான பிரிவில் இருந்து தான் franchise களுக்கு அனுப்பி வைப்பர். பீசா என்றால் மாவை (Daugh), cheese போன்றவற்றை அனுப்பி வைப்பர். அவை கடும் தரக்கட்டுப்பாடுடன் இருக்கும். இதனை தமிழ், இந்திய, சீன கடைகளில் எதிர்பார்க்க முடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

விலையும் அப்படித்தானே பெருமாள்.

நாலு பேர் இருக்கும் ஒரு குடும்பம் Mc இற்கு போய் வயிறாற சாப்பிட குறைந்தது $35 ஆவது தேவைப்படும். ஆனால் தமிழ் கடையில் $20 இற்கும் குறைவான விலையில் 20 இட்டலி + சம்பல் + சாம்பார் எல்லாம் சேர்த்து வாங்கி ஒரு வேளை உணவை பூர்த்தி செய்யலாம். இதுவே இடியப்பம் என்றால் $13 இற்கு 25 இடியப்பம் + சொதி வாங்கி medium size இல் கோழியோ அல்லது மீன் கறியும் வாங்கி 4 பேர் சாப்பிடலாம்.

அனேக தமிழ் கடைகளில் கொத்து ரொட்டி $9 ஆக்கி விட்டார்கள். ஆனால் 3 வாங்கினால் 4 பேர் இரவும் சாப்பிட்டு அடுத்த நாள் 2 பேர் சாப்பிட முடியும்.

Mc, Tim போன்ற கடைகளில் burger போடுவதற்குரிய bun இல் இருந்து fries இற்குரிய உருளைக்கிழங்கு சிப்ஸ் வரை அவர்களது பிரதான பிரிவில் இருந்து தான் franchise களுக்கு அனுப்பி வைப்பர். பீசா என்றால் மாவை (Daugh), cheese போன்றவற்றை அனுப்பி வைப்பர். அவை கடும் தரக்கட்டுப்பாடுடன் இருக்கும். இதனை தமிழ், இந்திய, சீன கடைகளில் எதிர்பார்க்க முடியாது.

 

எனது தமிழ் சாப்பாட்டுக்கடை கொள்வனவு சரியான குறைவு.  சாப்பாடு (சோறு புட்டு இட்லி பிரியாணி) என்று ஒரு நாளும் வாங்கியது இல்லை (ஓரிரு தடவை வேறு வீடுகளுக்கு அவசரமாக கொடுக்க வேண்டிய தேவைகளைத் தவிர).  

நான் வாங்குவது அப்பப்போ கொத்து ரொட்டி, ரோல்ஸ், சமோசா/பற்றிஸ், மோதகம் மற்றும் ரோஸ்ற் பாண்.  
வெறும் உருளைக்கிழங்குகை (10  இறத்தல் 3 டாலர்)  அவிச்சு அதை மட்டன் gravy  ஓட கலந்து மாவிலை உருட்டி பழைய எண்னிக்கை போட்டு குடுக்கிற ரோல்லஸிற்கு  ஏன் 1.50  என்று இன்னும் விளங்கவில்லை.  அதே போல சமோசா பற்றிஸ் எண்ட பேர்ல வெறும் மாவை எண்னிக்கை போட்டு விற்கிறார்கள் விக்கிரங்கள் 2/$.  10-20% கூட்டுறது பரவாய் இல்லை.  50-100% கூட்டுறது கொஞ்சம் கூட.

நீங்கள் நினைப்பது போல சாப்பாட்டுக்கடை வருமானமில்லாமல் இல்லை.  100% லாபம் எடுக்கும் ஒரே வியாபாரம்.  பலர் பூட்டியதுக்கு காரணம் 1. ஏற்கனவே 4 சாப்பிட்டு கடை இருக்கிற இடத்தில  திறக்கிறது.  2.  வாடிக்கையாளர்களிடம் சரியான அணுகுமுறை இல்லை.  எதோ நாங்கள் வில்லங்கத்துக்கு போற போல நினைப்பு.  3.  தரம். 

Edited by Sabesh
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Sabesh said:

எனது தமிழ் சாப்பாட்டுக்கடை கொள்வனவு சரியான குறைவு.  சாப்பாடு (சோறு புட்டு இட்லி பிரியாணி) என்று ஒரு நாளும் வாங்கியது இல்லை (ஓரிரு தடவை வேறு வீடுகளுக்கு அவசரமாக கொடுக்க வேண்டிய தேவைகளைத் தவிர).  

நான் வாங்குவது அப்பப்போ கொத்து ரொட்டி, ரோல்ஸ், சமோசா/பற்றிஸ், மோதகம் மற்றும் ரோஸ்ற் பாண்.  
வெறும் உருளைக்கிழங்குகை (10  இறத்தல் 3 டாலர்)  அவிச்சு அதை மட்டன் gravy  ஓட கலந்து மாவிலை உருட்டி பழைய எண்னிக்கை போட்டு குடுக்கிற ரோல்லஸிற்கு  ஏன் 1.50  என்று இன்னும் விளங்கவில்லை.  அதே போல சமோசா பற்றிஸ் எண்ட பேர்ல வெறும் மாவை எண்னிக்கை போட்டு விக்கிரங்கள் 2/$.  10-20% கூட்டுறது பரவாய் இல்லை.  50-100% கூட்டுறது கொஞ்சம் கூட.

நீங்கள் நினைப்பது போல சாப்பாட்டுக்கடை வருமானமில்லாமல் இல்லை.  100% லாபம் எடுக்கும் ஒரே வியாபாரம்.  பலர் பூட்டியதுக்கு காரணம் 1. ஏற்கனவே 4 சாப்பிட்டு கடை இருக்கிற இடத்தில  திறக்கிறது.  2.  வாடிக்கையாளர்களிடம் சரியான அணுகுமுறை இல்லை.  எதோ நாங்கள் வில்லங்கத்துக்கு போற போல நினைப்பு.  3.  தரம். 

இதுதான் உண்மை.....நாங்களும் கஸ்டப்பட்டு உழைக்கிறது...அவர்களும் அவ்வாறுதான்....ஆனால் ஒரு மனச்சாட்சி வேண்டும்....

  • Like 1
Link to comment
Share on other sites

2 hours ago, Sabesh said:

எனது தமிழ் சாப்பாட்டுக்கடை கொள்வனவு சரியான குறைவு.  சாப்பாடு (சோறு புட்டு இட்லி பிரியாணி) என்று ஒரு நாளும் வாங்கியது இல்லை (ஓரிரு தடவை வேறு வீடுகளுக்கு அவசரமாக கொடுக்க வேண்டிய தேவைகளைத் தவிர).  

நான் வாங்குவது அப்பப்போ கொத்து ரொட்டி, ரோல்ஸ், சமோசா/பற்றிஸ், மோதகம் மற்றும் ரோஸ்ற் பாண்.  
வெறும் உருளைக்கிழங்குகை (10  இறத்தல் 3 டாலர்)  அவிச்சு அதை மட்டன் gravy  ஓட கலந்து மாவிலை உருட்டி பழைய எண்னிக்கை போட்டு குடுக்கிற ரோல்லஸிற்கு  ஏன் 1.50  என்று இன்னும் விளங்கவில்லை.  அதே போல சமோசா பற்றிஸ் எண்ட பேர்ல வெறும் மாவை எண்னிக்கை போட்டு விற்கிறார்கள் விக்கிரங்கள் 2/$.  10-20% கூட்டுறது பரவாய் இல்லை.  50-100% கூட்டுறது கொஞ்சம் கூட.

நீங்கள் நினைப்பது போல சாப்பாட்டுக்கடை வருமானமில்லாமல் இல்லை.  100% லாபம் எடுக்கும் ஒரே வியாபாரம்.  பலர் பூட்டியதுக்கு காரணம் 1. ஏற்கனவே 4 சாப்பிட்டு கடை இருக்கிற இடத்தில  திறக்கிறது.  2.  வாடிக்கையாளர்களிடம் சரியான அணுகுமுறை இல்லை.  எதோ நாங்கள் வில்லங்கத்துக்கு போற போல நினைப்பு.  3.  தரம். 

சபேஷ்,

நிறைய நிறைய இறைச்சி போட்டு, இலங்கை தக்காளி சோஸ் (MD) போட்டு ஒரு தமிழ் கடையில் விற்கின்றார்கல். 3 றோல்ஸ் 7.50. கொள்ளுப்பிட்டியில் உள்ள இல் upscale breakfast restaurant இல் சாப்பிட்ட மாதிரி இருக்கும். விற்பியில் தான் உள்ளது. பெயர்: Cuisine Xpress. அங்குள்ள எல்லா உணவும் நல்ல தரமானது. ஆனால் விலை...கடும் விலை. (ஒரு கொத்து $13 இல் இருந்து $15 வரை).

நல்ல தரமாக, ஆனால் விலை அதிகமாக விற்கும் சில தமிழ் / இலங்கை உணவுக் கடைகள் அண்மையில் திறக்கத் தொடங்கியுள்ளனர். இது ஸ்பைஸ் லாண்ட், பூரணி போன்ற தரத்தை போன்றவை அல்ல (Example: Bhai biriyani)

 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.