Jump to content

தேசிய அரசாங்கம் அமைக்கப் பட்டாலும்... அமைச்சுப் பதவியை, ஏற்க மாட்டோம். – சுமந்திரன்.-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் போராட்டத்தை பொறுக்கமுடியாமல் டக்ளஸ் பிதற்றுகிறார் – சுமந்திரன்

தேசிய அரசாங்கம் அமைக்கப் பட்டாலும்... அமைச்சுப் பதவியை, ஏற்க மாட்டோம். – சுமந்திரன்.-

தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சாத்தியங்கள் இல்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை அரசாங்கம் தானாகவே முன்வந்து இரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை பிரதமர் மஹிந்தவிடம் நேரில் முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.

பொருளாதார நெருக்கடியால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் இருந்து மீள்வதற்கான மாற்றுவழிகள் மற்றும் யோசனைகளை அரசாங்கத்திற்கு வழங்குவோம் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேரணை, நிறைவேற்று அதிகார முறைமையை இல்லது ஒழிப்பது மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்ற பிரேரணை குறித்து தமித் தேசிய கூட்டமைப்பு கூடி கலந்துரையாடி முடிவு செய்யும் என தெரிவித்தார்.

மேலும் தன்னுடன் தனிப்பட்ட முறையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், சந்திரிக்கா அம்மையாரும் கலந்துரையாடியதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2022/1276438

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“நாடு கிடக்கிற நிலையில நரிக்கு உழுந்து வடை கேட்டிச்சாம்” என்ற பழமொழிதான் நினைவில் வருது.

தேசிய அரசாங்கம், அமைச்சுப் பதவி , பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான யோசனைகள் மற்றும் மாற்றுவழிகள் என்பனவற்றையெல்லாம் விட்டுப்போட்டு  மக்களின் கோரிக்கையை ஏற்று கோட்டா, மகிந்த, பசில் போன்றோர் உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்ற ஆலோசனையை சுமந்திரன் வழங்கவேண்டும். 

தேசிய அரசாங்கம் என்பதே ராஜபக்‌ஷகளைக் காப்பாற்றும் அல்லது அவர்களைத் தொடர்ந்து பதவியில் இருக்கச்செய்யும் ஒரு முயற்சிதானே!

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் விழும்போதெல்லாம் தூக்கிவிட கிந்தயமும், இப்படியான் ஒட்டு உண்ணி களும் இருக்கும் வரை சிறிலங்கா திருந்துமா?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஏற்றுக்கொள்வதற்கு அமைச்சுப் பதவிகளை உங்களுக்கு தரப்போவதில்லையே ? 

பழம் புளிக்குது போல கிடக்குது அண்..😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

நீங்கள் ஏற்றுக்கொள்வதற்கு அமைச்சுப் பதவிகளை உங்களுக்கு தரப்போவதில்லையே ? 

பழம் புளிக்குது போல கிடக்குது அண்..😆

கபிதனா... மேலே உள்ளதை, எழுதியது என்று...
என்னை ஒரு முறை, நுள்ளிப் பார்த்துக் கொண்டேன். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2022 at 14:17, தமிழ் சிறி said:

தன்னுடன் தனிப்பட்ட முறையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், சந்திரிக்கா அம்மையாரும் கலந்துரையாடியதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

உள்நாட்டுக்காரரும் தனியச் சந்திக்கினம் வெளிநாட்டுக்காரரும் தனியச் சந்திக்கினம் இவரை அப்படி என்ன வியாபாரம் செய்கிறார்? இவ்வளவு பேர் இருக்க ஒதுக்கு தேடி கதைப்பதென்னவோ? இதுக்கு பெயர் கலந்துரையாடலாம். சம்பந்தம் கலக்கினமோ?

எட்டப்பரைத்தான் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேரம் பேசுறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, satan said:

உள்நாட்டுக்காரரும் தனியச் சந்திக்கினம் வெளிநாட்டுக்காரரும் தனியச் சந்திக்கினம் இவரை அப்படி என்ன வியாபாரம் செய்கிறார்? இவ்வளவு பேர் இருக்க ஒதுக்கு தேடி கதைப்பதென்னவோ? இதுக்கு பெயர் கலந்துரையாடலாம். சம்பந்தம் கலக்கினமோ?

எட்டப்பரைத்தான் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேரம் பேசுறது.

சுமந்திரன்.... நிதி அமைச்சராகிறார்  என்று, முகநூலில்... சனம் கதைக்குது.
நீங்கள் கேள்விப் பட்டனிங்களோ....  😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

இது.... சுமந்திரன், போன தேர்தல் நேரம் பேசியது.
எப்படியோ...... அமைச்சர் ஆக வர, நீண்ட நாள் திட்டத்துடன் தான் இருக்கிறார். 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கபிதனா... மேலே உள்ளதை, எழுதியது என்று...
என்னை ஒரு முறை, நுள்ளிப் பார்த்துக் கொண்டேன். 😂

😆

சுமந்திரனது அரசியல் நிலைப்பாட்டில் எனக்கு சிறிதும் நம்பிக்கையில்லை. குறிப்பாக விடுதலைப் போராட்டத்தை விமர்சிக்கும் முறை மிகவும் அருவருப்பானது.

ஆனால் அவரை அரசியல் தவிர்ந்த பிற காரங்களுக்காக(😉) பிறர் விமர்சிக்கும்போது அதனை எதிர்க்கிறேன். அம்புட்டுதே.

தன்னை ஒருவரும் விஞ்சக்கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருப்பதாக மிகவும் உறுதியான தகவல். விஞ்சினால் இழுத்து வீழ்த்தவும் தயங்காதவர்.  அது அவரது குடும்ப உறுப்பினர்களின் ஜீனில் இருப்பதாக அறிந்தேன். 

எந்த அரசியல்வாதிதான் நேர்மையாக உழைத்திருக்கிறார்கள் ? SJV யைத் தவிர. 

😏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

இது.... சுமந்திரன், போன தேர்தல் நேரம் பேசியது.
எப்படியோ...... அமைச்சர் ஆக வர, நீண்ட நாள் திட்டத்துடன் தான் இருக்கிறார். 🤣

 

இவருக்கு மீன்பிடி அமைச்சுக் கூட குடுக்க மாட்டாங்கள்,இல்லையெண்டால் ஏதாவது ஒண்டுக்கும் உதவாத புது அமைச்சொண்டு உருவாக்கி குடுப்பினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்,  டக்கிளஸ், வி. முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் இவர்ளை விட இவர் எதில் குறைந்தகவர்? சிங்கள மக்களோடு வாழ்வது மிகப்பெரிய அதிஷ்டம் என போற்றுபவர் ஆனால் அவர்களின் அரசில் அமைச்சுப்பதவி பெறுவதற்கு தமிழ் வாக்குப்பலம் வேண்டும் ஒவ்வொருவருக்கும். சுத்த ஓநாய்க்கூட்டம்.

7 hours ago, வாதவூரான் said:

இவருக்கு மீன்பிடி அமைச்சுக் கூட குடுக்க மாட்டாங்கள்,இல்லையெண்டால் ஏதாவது ஒண்டுக்கும் உதவாத புது அமைச்சொண்டு உருவாக்கி குடுப்பினம்

 அவனவன் செயற்பாடு, தந்திரம் என்பவற்றை கருத்திற்கொண்டு இவர்களை அணைப்பவர்கள், தங்களுக்கு தாங்களே பொறி வைப்பார்களா? இவருக்கு பதவி கொடுத்து தமிழரை காலி பண்ணும் கொண்டோடிப்பதவிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

கபிதனா... மேலே உள்ளதை, எழுதியது என்று...
என்னை ஒரு முறை, நுள்ளிப் பார்த்துக் கொண்டேன். 😂

அட நீங்கள் நுள்ளி பாத்தது மட்டும் தான்...நான் பிளேட்டாலை கீறிப்பாத்தனான்(இரத்தபொட்டு வைச்ச பழக்கதோசமாக்கும்) ☺️

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

நீங்கள் ஏற்றுக்கொள்வதற்கு அமைச்சுப் பதவிகளை உங்களுக்கு தரப்போவதில்லையே ? 

பழம் புளிக்குது போல கிடக்குது அண்..😆

சுமந்திரன் கனடா வந்த சமயம் அவர் எதோ நகர்வுகள் செய்கிறார். அமெரிக்கா கூப்பிட்டுத்தான் வந்தவர். கனடா பாராளுமன்றத்துக்கு வெளியில் நிண்டு மட்டும் போட்டோ எடுக்கவில்லை, உள்ளேயும் போய் கதைச்சவர் என்று எழுதினீர்களே கற்பிதன்.

அந்த நிலைப்பாட்டில் இருந்து ஏன் மாறினீர்கள்?

நக்கலாக கேட்கவில்லை. உங்கள் நிலைப்பாடு ஏன் மாறியது என்பதை நீங்கள் சொன்னால் சும்மை பற்றிய கணிப்பு சரிதான் என்ற முடிவுக்கு வர ஏதுவாக இருக்கும்.

பிகு: 2015 வரை இப்படி சும்முக்கு benefit of the doubt கொடுத்தவந்தான் நானும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2022 at 14:17, தமிழ் சிறி said:

தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சாத்தியங்கள் இல்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இவர் அப்பப்ப மாறி மாறி கதைத்து விடுகதை, அகடவிகடம் பேசுவார். அதையெல்லாம் கணக்கிலெடுத்து விவாதிக்கக்கூடாது.  இது அவரின் தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்தல்ல என்று கூட்டணியிலுள்ள மற்றவர்கள் அறிக்கை விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

நீங்கள் ஏற்றுக்கொள்வதற்கு அமைச்சுப் பதவிகளை உங்களுக்கு தரப்போவதில்லையே ? 

பழம் புளிக்குது போல கிடக்குது அண்..😆

அவர் கூறுவது சரி ,அமைச்சு பதவியை விட பெரிய விடயத்தை அவர் செய்கின்றார் ..
அமேரிக்கா
இந்தியா
சீனா
மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் எதை எதிர் பார்க்கின்றனரோ அதை அவர் முன்னிலைப்படுத்துகிறார்..

சிறிலங்கா மக்கள் ஒற்றுமையாக இன,மத பேதம் இன்றி வாழ்கின்றனர் ,
இன குழுமங்களுக்கு என தனிப்பிரதேச  அடையாளங்கள் தேவையில்லை  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

சிறிலங்கா மக்கள் ஒற்றுமையாக இன,மத பேதம் இன்றி வாழ்கின்றனர் ,
இன குழுமங்களுக்கு என தனிப்பிரதேச  அடையாளங்கள் தேவையில்லை

 இதற்காகவே மஹிந்தவால் தமிழரிடையே உள்நுழைக்கப்பட்டவர் இவர். அதை செவ்வனே செய்கிறார். தமிழ்க்கட்சிகளை, தேசியத்தை உடைப்பது பிரதான கடமை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

 

பிகு: 2015 வரை இப்படி சும்முக்கு benefit of the doubt கொடுத்தவந்தான் நானும். 

சிங்கள தலைவருக்கு தற்பொழுது சிங்கள இளைஞர்கள் பாடம் புகட்டுகின்றனர்...

எங்கன்ட தலைவர்களுக்கு இளைஞர்கள் 40 வருடத்திற்கு முதல் ஆயுதம் பாவித்தும் திருந்த வில்லை இனியும் திருந்த மாட்டார்கள் .....

சில வேளை அவர்களின்  வீட்டுக்கு முன் நின்று  தற்பொழுது நடைபெறும் கருவாக்காடு (colombo 7)ஸ்டைல் போராட்டம் நடத்தினால் திருந்துவார்கள்

4 minutes ago, satan said:

 இதற்காகவே மஹிந்தவால் தமிழரிடையே உள்நுழைக்கப்பட்டவர் இவர். அதை செவ்வனே செய்கிறார். தமிழ்க்கட்சிகளை, தேசியத்தை உடைப்பது பிரதான கடமை.

தேசிய அரசாங்கம் அமைத்தவுடன் எங்கட மக்களுக்கு தளபதி... 
ஆனால் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு சிங்கள அரசுகளின் தேசிய நலன்விரும்பி 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

தேசிய அரசாங்கம் அமைத்தவுடன் எங்கட மக்களுக்கு தளபதி... 
ஆனால் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு சிங்கள அரசுகளின் தேசிய நலன்விரும்பி 

 இவர் எங்களுக்கு தளபதி? எங்கள் கதி அதோ கதிதான்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

 இவர் எங்களுக்கு தளபதி? எங்கள் கதி அதோ கதிதான்!

சம்பந்தன் தன்னுடைய கொள்கைக்கு சரியான தளபதியை சிறிலங்கா தேசியத்திற்கு காட்டி விட்டுள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

சம்பந்தன் தன்னுடைய கொள்கைக்கு சரியான தளபதியை சிறிலங்கா தேசியத்திற்கு காட்டி விட்டுள்ளார்

தன் மொள்ளைமாரித்தனத்திலிருந்தும்,  கையாலாகத்தனத்திலிருந்தும்  தான் தப்புவதற்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

தன் மொள்ளைமாரித்தனத்திலிருந்தும்,  கையாலாகத்தனத்திலிருந்தும்  தான் தப்புவதற்காக.

60 வருடங்களாக அவர் செய்த தொழிலை இவர் செய்வார்....டிசன்டா சொல்லுவது என்றால் 
சிறிலங்கா தேசியத்திற்கு உயிர் உடல் ஆவி, தமிழ்தேசித்திற்கு நிழல் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

சுமந்திரன் கனடா வந்த சமயம் அவர் எதோ நகர்வுகள் செய்கிறார். அமெரிக்கா கூப்பிட்டுத்தான் வந்தவர். கனடா பாராளுமன்றத்துக்கு வெளியில் நிண்டு மட்டும் போட்டோ எடுக்கவில்லை, உள்ளேயும் போய் கதைச்சவர் என்று எழுதினீர்களே கற்பிதன்.

அந்த நிலைப்பாட்டில் இருந்து ஏன் மாறினீர்கள்?

நக்கலாக கேட்கவில்லை. உங்கள் நிலைப்பாடு ஏன் மாறியது என்பதை நீங்கள் சொன்னால் சும்மை பற்றிய கணிப்பு சரிதான் என்ற முடிவுக்கு வர ஏதுவாக இருக்கும்.

பிகு: 2015 வரை இப்படி சும்முக்கு benefit of the doubt கொடுத்தவந்தான் நானும். 

அந்த நிலைப்பாட்டில் இருந்து நான் மாறவில்லை. 

திரும்ப்வும் கூறுகிறேன், TNA யை அமெரிக்கா அழைத்து கதைத்திருந்தது. அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக கூறியிருந்தார்க்ள். இந்த விடயத்தை ஒழுங்கு செய்தவர்களை நான் அறிவேன். . 

சுமந்திரன் தொடர்பான விமர்சனங்களை  மூன்று விதமாகப் பார்க்கிறேன.

1) அவரது அரசியல் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விமர்சிப்பவர்கள். 

2) அவரது தனிப்பட்ட குணநலனின் அடிப்படியில் அவரை விமர்சிப்பவர்கள்.  

3) அவர் TNA யின் தலைமைத்துவத்தை பிடித்துவிடுவார் என்கின்ற அடிப்படையில், அவரை எப்படியாவது அந்த இடத்தை பிடிக்க விடக்கூடாது என்கின்ற அடிப்படையில் அவரை விமர்சிப்பவர்கள். 

இங்கே 1)விடயத்தில் சுமந்திரனை பல இடங்களில் நான் ஆதரித்து வந்துள்ளேன். அதற்குக் காரணம்  எங்கள் அரசியல்வாதிகளிடையே உள்ள Intellectuals ன் பற்றாக்குறை. தெரிவுகள் மிகக் குறைவான இடத்தில் விரும்பியோ விரும்பாவிட்டால்லோ அவரைத் தாங்கிப்பிடிக்க வேண்டிய தேவை (தற்போதும்) இருக்கிறது.

பல இடங்களில் அவரது நிலைப்பாட்டை கடுமையாக எதிர்க்கிறேன். உதாரணமாக போராட்டம், போராளிகள் தொடர்பாக அவர்து கருத்துக்கள் ஒட்டுமொத்த தியாகத்தையும் கொச்சைப்படுத்துகின்றது. போராட்டத்தை இகழ்வது கோபத்தை கடுமையான  உண்டுபண்ணுவதோடு எங்கள் பக்கம் உள்ள நியாயமான காரணங்களை வலுவிழக்கச் செய்யும். இதனால் பல இடங்களில் அவரை எதிர்க்கிறேன்.

2) அவரது தனிப்பட்ட  குணநலனில் உள்ள குறைபாடு ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் பாதிப்பை உண்டுபண்ணும். சரியான தலைமைத்துவம் எப்போதுமே தன்னைச் சூழவுள்ளவர்களது வளர்ச்சியை விரும்பும். ஆனால் சுமந்திரனது செய்கை, வளர விரும்புபவர்களை / அதற்கான தகுதியுள்லவர்களை கத்தரித்துவிடுவதாக இருக்கிறது (உ+ம் சாணக்கியன் ).  இவரது செயற்பாடு நீண்ட காலத்தில் தமிழருக்கு மிகவும் பலவீனமான அரசியல் ஆழுமைகளை உருவாக்கிவிடும். அத்தகைய அரசியல் தலைவர்கள் ஒன்று சோரம் போவார்கள் அல்லது பேரம்பேசும் துணிவுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். 

மேலே நான் கூறிய 3) வது வகையான விமரிசனங்களையே நான் கடுமையாக எதிர்க்கிறேன். இந்த வகை விமர்சனங்களுக்கு அவர்கள்(விமர்சனம் செய்வோர்) இலகுவாகத் தூக்கும் ஆயுதம் சமயம். சமயத்தை பின்னணியாகக் கொண்டு அவரை விமர்சனம் செய்யும்போது சுமந்திரனுக்கு நான் ஆதரவளிக்கிறேன். ஏனென்றால் சாதி சமய ரீதியிலான பிரிவினால் பாதிக்கப்படுவது சிறுபான்மை சமயத்தவர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகம் அதனால் பாதிக்கப்படுகிறது.

உதாரணமாக மன்னார் மாவட்டத்தில் TNA யை எதிர்த்து(உயர்குல யாழ்ப்பாண சைவ வேளாளர்) மன்னார் மாவட்ட மக்களை ஒருங்கிணைக்கும் வேலை  ஆரம்பமாகியுள்ளது. அவர்கள் தனித்து இயங்குவதற்காக ஒன்று சேர்கிறார்கள். TNA யை எதிர்த்துப் போட்டியிட கங்கணம் கட்டியுள்ளனர். 

அதற்கு அவர்களது விளக்கம், 

1) யாழ்ப்பாணத்துத் தலைமை (சைவ, வேளாளர்) மன்னாரைப் புறக்கணிக்கிறது. 

2) மன்னார் மாவட்டத்தில் ஏற்படும் சமயப் பூசல்கள் எல்லாவற்றிற்கும் காரணம் இந்த யாழ்ப்பாண சைவ வேளாளத் தலைமையே. உதாரணமாக திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் நிர்வாகம்(?) அல்லது உரிமையாளர்கள் அவரும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தவரே. அவர்கள்தான் இங்கே பிரச்சனையை உருவாக்குகிறார்கள்.

எனவே, மேற்கூறிய காரணங்களால்தான் பல இடங்களில் சுமந்திரனை நான் ஆதரிக்கிறேன்  அல்லது பல இடங்களில் அவரை எதிர்க்கிறேன்.

(என்ன  குழப்பமாக இருக்கிறதா 🤣)

 

 

10 hours ago, putthan said:

அவர் கூறுவது சரி ,அமைச்சு பதவியை விட பெரிய விடயத்தை அவர் செய்கின்றார் ..
அமேரிக்கா
இந்தியா
சீனா
மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் எதை எதிர் பார்க்கின்றனரோ அதை அவர் முன்னிலைப்படுத்துகிறார்..

சிறிலங்கா மக்கள் ஒற்றுமையாக இன,மத பேதம் இன்றி வாழ்கின்றனர் ,
இன குழுமங்களுக்கு என தனிப்பிரதேச  அடையாளங்கள் தேவையில்லை  
 

இப்போது இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் நாளடைவில் இதுதான் நடைபெறப்போகிறது. 

ஒட்டுமொத்த இந்தியாவையும் 2% மான பிராமணர்கள்தான் ஆழ்கிறார்கள். உலகில் பல நாடுகளில் சிறுபான்மையினர்தான் நாட்டை ஆழ்கிறார்கள் என்பதையும் கவனிக்க. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

இப்போது இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் நாளடைவில் இதுதான் நடைபெறப்போகிறது. 

ஒட்டுமொத்த இந்தியாவையும் 2% மான பிராமணர்கள்தான் ஆழ்கிறார்கள். உலகில் பல நாடுகளில் சிறுபான்மையினர்தான் நாட்டை ஆழ்கிறார்கள் என்பதையும் கவனிக்க. 

மீண்டும் மீண்டும் நாடுகளையும் மக்களையும் குழப்பத்திலும், பசி, பட்டிணி எனவும் அலைய விடாமல் 75% வீதமாவது நிம்மதியா வாழவிட வேண்டும் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

)விடயத்தில் சுமந்திரனை பல இடங்களில் நான் ஆதரித்து வந்துள்ளேன். அதற்குக் காரணம்  எங்கள் அரசியல்வாதிகளிடையே உள்ள Intellectuals ன் பற்றாக்குறை. தெரிவுகள் மிகக் குறைவான இடத்தில் விரும்பியோ விரும்பாவிட்டால்லோ அவரைத் தாங்கிப்பிடிக்க வேண்டிய தேவை (தற்போதும்) இருக்கிறது.

இவர் அரசியலுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது, இன்னும் விட்ட இடத்திலிருந்து பின்னோக்கியே செல்கிறது. எதுவும் இவரின் வரவால், இருப்பால் முன்னேற்றமடைந்ததாக தெரியவில்லை. அவ்வளவு திறமை இவருகிருந்திருந்தால்; முன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரனை களமிறக்கி, நாறடித்திருக்க வேண்டியதில்லையே!

11 hours ago, Kapithan said:

இலகுவாகத் தூக்கும் ஆயுதம் சமயம். சமயத்தை பின்னணியாகக் கொண்டு அவரை விமர்சனம் செய்யும்போது சுமந்திரனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்.

 

11 hours ago, Kapithan said:

அதற்கு அவர்களது விளக்கம், 

1) யாழ்ப்பாணத்துத் தலைமை (சைவ, வேளாளர்) மன்னாரைப் புறக்கணிக்கிறது.

 

11 hours ago, Kapithan said:

மன்னார் மாவட்டத்தில் ஏற்படும் சமயப் பூசல்கள் எல்லாவற்றிற்கும் காரணம் இந்த யாழ்ப்பாண சைவ வேளாளத் தலைமையே

இதற்கும் சுமந்திரனுக்கும் என்ன தொடர்பு? அவர் கிறிஸ்தவர் என்பதார்த்தான் விமர்சிக்கப்படுகிறார் என்கிற முன்னைய வாதம் அடிபட்டுப்போகிறதே?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இவர் அரசியலுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது, இன்னும் விட்ட இடத்திலிருந்து பின்னோக்கியே செல்கிறது. எதுவும் இவரின் வரவால், இருப்பால் முன்னேற்றமடைந்ததாக தெரியவில்லை. அவ்வளவு திறமை இவருகிருந்திருந்தால்; முன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரனை களமிறக்கி, நாறடித்திருக்க வேண்டியதில்லையே!

 

 

இதற்கும் சுமந்திரனுக்கும் என்ன தொடர்பு? அவர் கிறிஸ்தவர் என்பதார்த்தான் விமர்சிக்கப்படுகிறார் என்கிற முன்னைய வாதம் அடிபட்டுப்போகிறதே?

"இதற்கும் சுமந்திரனுக்கும் என்ன தொடர்பு? அவர் கிறிஸ்தவர் என்பதார்த்தான் விமர்சிக்கப்படுகிறார் என்கிற முன்னைய வாதம் அடிபட்டுப்போகிறதே?"

மன்னார் மாவட்டத்தில்  தற்போது கலந்துரையாடப்பட்டுவரும் விடத்தைக் கூறியிருக்கிறேன். 

சமய ரீதியிலான, பிர்தேச ரீதியிலான, சாதி ரீதியிலான செயற்பாடுகள் எம்மை எப்படிப் பலவீனப்படுத்தும் என்பதற்கு இது சிறந்த உதாரணம். 

(மேலும் சிறு தகவல் ஒன்று - கனடாவின் Winnipeg  மாகாணத்தில் இன்று, இலங்கையில் இருந்து வந்த சிங்களம் அரசின் முகவர்களும், கனடாவில் தங்களை நிலை நிறுத்தியிருக்கும் சிங்கள Professionals ம் கனடாவில் புலம்பெயர்ந்த தமிழர்களின் செய்ர்பாடுகளை முறியடிப்பது தொடர்பாக  கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருக்கின்றனர்)

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.