Jump to content

நீண்ட வரிசையில் - T கோபிசங்கர்


Recommended Posts

நீண்ட வரிசையில் 
“அதிகாலை , சேவல் கூவியது , காகங்கள் கரைந்தன, இரவு இரை தேடச் சென்ற பெற்றோரைக்  காணாமல் குஞ்சுகள் கத்தின, தூரத்தில் எங்கேயோ கோயில் மணி ஓசை கேட்டது, கடகம் நிறைய புடுங்கிய கத்தரிபிஞ்சுகளையும்  , வெண்டைக் காய்களையும் தலையில் சுமந்த படி சின்னத்தம்பி சந்தைக்கு ஓட்டமும் நடையுமாக போய்க்கொண்டருந்தார் “ எண்டு தமிழ் பாடத்தை வாசிக்க மணி அடிச்சுது. 

பள்ளிக்கூடத்தில மிகச்சிறந்த சந்தோசம் எண்டால் , மணி அடிச்ச உடன பாய்ஞ்சு போய் முதலாவதா சைக்கிளை எடுத்துக் கொண்டு போறது தான். கொண்டு போய் விடேக்கயே டக்கெண்டு எடுக்கத் தக்கதாத்தான் விடிறது . மத்தியான வெய்யில்,  கடைசிப் பாடம் அதுகும் interval இல தண்ணி மட்டும் குடிச்சிட்டு இருக்கேக்க வகுப்பை விட சைக்கிள் park ஐத் தான் பாக்கத் தூண்டும் . 

பள்ளிக்கூடம் விடப் போகுது எண்டதுக்கு சில அறிகுறிகள் இருக்கும். மணிக்கூடு கட்டிற வாத்திமார் கையைத் திருப்பிப் பாப்பினம் , சிலர் மெல்ல staff room பக்கம் பாத்தபடி நிப்பினம் , கடைசிப்பாடம் free ஆக இருக்கிறவை staff room ஆல வெளிக்கிட்டு மெல்ல நடக்கத் தொடங்குவினம் . Cycle park duty prefects ம் , traffic duty interact club காரரும் வகுப்பால வெளிக்கிட்டு போக நாங்களும் பாடம் முடியாமலே புத்தகத்தை மூடி வைச்சிட்டு bag ஐ அடுக்கத் தொடங்கீடுவம் . 

பள்ளிக்கூட வாசல் வரை சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடிப்  போய் கேட் தாண்டி வெளீல வந்தோண்ண பாஞ்சு ஏறினா நேர வீடு தான் . 

பள்ளிக்கூடத்தில மட்டும் தான் வரிசையும் ஒழுங்கும் ஒழுங்காகவே இருக்கும் மற்றும் படி தள்ளல் முள்ளல் தான். 

ஆனாலும் எங்களை திருப்பியும் கால்கடுக்க வரிசையில நிக்க வைச்சது நிவாரணம் தான் . நிவாரணம் தாறதை ஊருக்கு எல்லாம் காட்ட நாலு சந்தீல நடு றோட்டில வைச்சுத்தான் தருவாங்கள். இப்படியான நல்ல வேலைக்கு வீட்டு representative நான் தான்.  போய் நிக்கிறதில இருக்கிற சங்கடம் வெய்யிலும் மழையும் இல்லை,  எங்கடை batch பெட்டைகள் ஆரும் றோட்டால போகேக்க பாக்கினமோ எண்டது தான் . அவளவையைக் கண்டால் திரும்பி நிண்டு முகத்தை மறைச்சு , அவள் பாத்திடுவாளோ எண்ட கவலையோட கொஞ்சம் திரும்பிப் பாக்க இவ்வளவு நாளாப் பாக்காதவளவை எல்லாம் இப்ப தான் பல்லைக்காட்டி சிரிப்பாளவை . கொஞ்சம் கொஞ்சமா queue அசைய நிவாரண அட்டை, குடும்ப அட்டை, கூப்பன் கார்ட், விதானையார்டை பதிவு எண்டு எல்லாத்தையும் எடுத்து அடுக்கிப் கொண்டு போக, கேள்வி தொடங்கும் , எல்லாமா எத்தினை பேர் , சின்னப்பிள்ளைகள் எத்தினை பேர் , ஏலாதாக்கள் எத்தினை எண்டு எல்லாக் கேள்விக்கும் நூறு marks எடுத்துக்கொண்டு போனால் தான் கனக்கப்  பரிசு கிடைக்கும் . 

Prize Giving இல நல்ல marks எண்டால் நாலைஞ்ச தரம் ஏறுவம் இங்க நல்ல marks எண்டால் நாலைஞ்சு சாமாங்கள் தருவினம். அப்ப shopping bag பெரிசா இல்லை, பெரிய உரப்பைக்குள்ள சின்ன உரப்பை , துணி bag , மாட்டுத்தாள் பைகள் கொஞ்சம் , தேங்காய் எண்ணைக்கு ஒரு போத்தில், மண்ணெண்ணைக்கு என்னொண்டு கொண்டு போறது. போனமுறை கொண்டு போன அதே set ஓட  இந்த முறை போனால் , கௌபியும் தாறாங்களாம் எண்டு கேள்ளவிப்பட யார்டையாவது ஒரு extra bag கடன் வாங்கி குடுத்த எதையும் விடாமல் வாங்கிக்கொண்டு போயிடுவம். 

கோட்டை அடிபாடு தொடங்கி ரெண்டு தரம் போட்டு வந்த அவசர இடம் பெயர்வுக்குப் பிறகு எல்லாரும் எப்பவும் எதுக்கும் ரெடியாத் தான் இருந்தவை. பிரச்சினை ஏதும் வரப்போதெண்டா எல்லா வீட்டிலேயும் எப்பவும் அவசரகாலச்சட்டம் தான் . காலமை மட்டும் பால் தேத்தண்ணி அதுகும் சீனீ தொட்டுக் கொண்டு, பின்னேரம் பிளேன்ரீ பனங்கட்டியோட மட்டும். சாப்பாட்டு menu எல்லாம் மாறீடும. 

மூண்டு மாதத்துக்கு சமாளிக்கக் கூடிய சாமாங்கள் stock பண்ணிறது , உறுதிகளும், நகையும் கவனமா கட்டி வைச்ச பாக் அம்மாமாரின்ட கையிலயே எப்பவும் வைச்சிருக்கறது , இடம் பெயரந்தா கொண்டு போறதுக்கு எண்டு bags கட்டி வைக்கிறது எண்டு எல்லாரும் எப்பவும் ஆயத்தமாய்த்தான் இருப்பினம். ஆனாலும் அந்த இடம் பெயர்வுகள் அப்ப ஒரு சொந்தக்காரர் வீட்டில போய் holiday க்கு நிண்ட மாதிரித்தான் எங்களுக்கு இருந்தது. புது இடம், புது friends , புது விதமான விளையாட்டுக்கள் எண்டு கலக்கினாங்கள் அப்பவே. 

வெள்ளைப்பச்சை அரிசி, பருப்பு , மா, சீனி எண்டு தனித்தனி பாக்கில வாங்கி அதை பெரிய உரப்பையில போட்டிட்டு , சின்னப்பிள்ளை இருக்கிற வீட்டுக்கு மட்டும் குடுத்த பால்மாவை வாங்கி உரப்பையை கட்டீட்டு மணந்து பாத்து தேங்காய் எண்ணைப் போத்திலைக் சரியாக் குடுத்திட்டு பாத்தா மண்ணெண்ணைப் போத்திலில நிறமே இல்லாத மண்ணைண்ணையும் தந்திச்சினம். நீலம் , பிங் எண்டு ரெண்டு நிறத்தில பாவிச்ச மண்ணெண்ணை மாதிரி இல்லாமல் அஅதை விட்டா திரி எல்லாம் கருகிப் புகைதான் வரும். எல்லாச் சாமாங்களையும் கவனமா வீட்டை கொண்டு வர, அண்டைக்கு மட்டும் வீட்டை ராஐ மரியாதை ஏதோ உழைச்சுக் கொண்டு வந்து தந்த மாதிரி. 

இந்த இடம்பெயர்வு நாள்களில் வைரமுத்து இருந்திருந்தால் எழுதி இருப்பார்
“ இடம்பெயர்ந்து பார் “
உற்றம் உறவு பலம் பெறும்
ஒரு நேரம் உணவு என்பது கலியாண வீட்டுச் சாப்பாடு போல் இருக்கும் 
ஒரு ஒற்றைப் பேப்பர் ஓராயிரம் கதை சொல்லும் 
கனத்த வெய்யில் காற்றோடு இதம் தரும் 
சைக்கிள் உழக்கும் கால்களுக்கு தூரங்கள் துச்சமாகும் . 
காய்க்கும் மரம் எல்லாம் கறிக்கு உதவும் 
மூண்டு நேரம் குளிப்பது முக்கிய தொழிலாகும்
GS எல்லாம் GA ஆவார்கள்
பீற்றூட் கூட chicken மாதிரி இருக்கும்
மீன் விற்பவன் உற்ற நண்பன் ஆவான் 
பாண் விப்பவன் தெய்வம் ஆவான்
Cards உம் Carrom ம் காலத்தை வெல்லும்
கரண்ட் இல்லை என்பதே கவனிக்கப்படாது.

இந்த ஆரம்பத்துக்குப் பிறகு எல்லா இடமும் வரிசையும் கையேந்தலும் வழக்கமாகவே போட்டுது. சபை போட்டு வைச்ச கலியாணத்தில  எல்லாம் buffet வைக்க தட்டோட கையேந்தி நிண்டம். சபை வைக்காத்துக்கு சப்பைக் காரணங்கள்; ஆக்கள் இல்லை, இப்ப எல்லாம் கஸ்டம், எல்லாம் வயது போனதுகள் இருந்து எழும்பாதுகள் எண்டு சாட்டுக்கள் வேற. நல்ல வடிவான hall எண்டு நாலு மாடி ஏத்தின கிழடுகள் முழங்கால் மடக்கி சாப்பிட இருக்கிறது தான் கஸ்டமாத் தெரிஞ்சுது. 

கையை உயர்தாமல் அன்று ஏந்தத் தொடங்கிய நாங்கள் என்னும் பிறங்கை பின்னிற்க முழங்கை மடித்துத்தான் நிற்கிறோம் . 

Dr. T. கோபிசங்கர்
யாழப்பாணம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.