Jump to content

"காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டுபோன கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இலங்கை அரசியல் நிலவரமும் இலங்கை தமிழரின் சஞ்சலமும். 

நான் ஏற்கனே திண்ணையில் எழுதிய நிலைப்பாடுதான். எனக்கென்னமோ இலங்கை தமிழர்கள்; திரும்பவும் எதையோ கோட்டைவிடுவது போல ஒரு உணர்வு. நானும் கடந்த ஒருவாரமாக நடந்து வரும் அரசுக்கெதிரான மக்கள் போராட்டம் பற்றிய பல சிங்கள செய்திகள், பல் துறை சார்ந்தவர்களின் சிங்கள பேட்டிகள் கேட்பதோடு,  ஆர்ப்பாட்ட தளத்தில் தினமும் பங்கு கொள்ளும் மற்றும் செயல்பாடுகளை திட்டமிடும்  சிங்கள இளைஞர்கள் குழுக்களோடும் தொடர்பில் இருக்கிறேன், அவற்றை தொடர்ந்தும் அவதானிக்கிறேன். 
அதன்பட்சத்தில்; எந்த நேரத்தில் எமது மக்களின் பிரச்சினைகள் (காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதி விவகாரங்கள்,  முள்ளிவாய்க்கால் அழிவுகள், மற்றும் எமக்கு நடந்த 74 வருட வக்கிரங்கள் பற்றி  பேசப்படவேணுமோ அதை செய்யாதால்; எமது சோதனைகள், துன்பங்கள் வெளிச்சத்தில் அரங்கேறாமல் வெறும் இருட்டாய் , வெற்றிடமாக இருப்பதாக நான் உணர்கிறேன். 

இங்கே சிங்களவருக்கு என்ன தமிழர்களின் 74 வருட அவலங்கள் தெரியாமலா போயிற்று என்ற கேள்வி எழுவதை நான் உணருகிறேன்.  அவர்கள் பௌத்த சங்கங்களாலும், தேரர்களாலும், அரசியல்வாதிகளாலும்  லங்காபுவத், தினமின, ராவய, மவ்பிம போன்ற செய்திகளாலும் பல தசாப்தங்கள் மூளை சலவை செய்யப்பட்ட கூட்டம் என்பதையும் மறக்கக்கூடாது.
நாங்கள் எப்படி எமது தரப்பு செய்திகளுக்கு  இன்றைக்கு வரை முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே போல அவர்களும் இருக்கிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில்; நீங்கள் நினைப்பதை போலவே அவர்களின் பெரும்பாலானோர் வெறும் மின்சாரத்துக்கும், டீசலுக்கு, விலைவாசிக்கும் தான் ரோட்டில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள், மாற்றுக்கருத்து இல்லை. 
ஆனாலும், அங்கே இன்றைய அரசியல் செய்வோரின் (ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, இதர கட்சி) அனைவரின்  நரித்தனம், மதவாதம், ஊழல், லஞ்சம், ரவுடித்தனம், மக்களை பிரித்தாளும் தந்திரம் என்பன பற்றியும் பெரியளவில் பேசப்படுகிறது என்பதையும் கவனிக்க தவறக்கூடாது.
பௌத்த பீடங்கள், விகாராதிபதிகள், பிக்குகள் முதலானோர் பற்றிய கடுமையான பார்வை கூட ஓரளவுக்கு பார்க்கக் கூடியதாய் உள்ளது. 
நான் மேலே குறிப்பிட்டதை போல சிங்கள பேட்டிகள், மக்கள் கருத்தாடல்களிலும் கூட முஸ்லீம், கத்தோலிக்க மக்கள் பற்றிய கரிசனைகள், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறிப்பிட்டு பேசப்படுகின்றன அன்றி,  தமிழர்கள்(சைவர்கள், இந்துக்கள்) போன்ற கருத்துக்கள் இயல்பாக தவிர்க்கப்படுகின்றன. இது என்னுடைய அவதானிப்பு. இதற்கான ஆதாரங்கள் நிறையவே உண்டு.

தமிழர்கள் நாங்கள் மதத்தை தூக்கி பிடிப்பவர்கள் அல்ல,  இருந்தாலும் எங்களை அவர்கள் ஒரு பொருட்டாக நோக்காமல் தாண்டிச்செல்வதும், நாங்களும் அதை கண்டும் காணாமலும் போவதும், யாரும் நாங்கள் பட்ட அனைத்து துன்பங்களையும் கணக்கிலெடுப்பதாக தெரியவில்லை. 

மேலும் ஒரு அவதானிப்பு, இன்றைய சிங்கள இளம் தலைமுறை ஓரளவுக்கு அவர்களின் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி காலத்து சிந்தனைகளை தலையில் தூக்கி பிடிப்பவர்களாகவும் தெரியவில்லை. 
உதாரணமாக இன்றைக்கு என்னால் சிங்களவர்கள்  40, 50 பேர் கூடி இருக்கும் ஒரு தளத்தில் ஒருவித தயக்கமும் இல்லாமல்;  நான் எனது வாழ்க்கையில் சந்தித்த சிங்களவரின் இனத்துவேச செயல்கள், 1977, 1983 மற்றும் இலங்கை ராணுவ கொடூரங்கள், தேசிய தலைவரின் சில சிந்தனைகள், செயல்பாடுகள் பற்றி தடையின்றி பேசக்கூடியவாறு இருக்கிறது. அவர்களும் நான் பகிரும் தகவல்களை, உணர்வுகளை  இடையூறு செய்யாமல், சர்ச்சைகள் ஏற்படாமல் பொறுமையாக கேட்டு உணருகிறார்கள், சிலர் பகிரங்கமாக எமக்கு சார்பாகவும் பேசுகிறார்கள், சிலர் இந்த தவறுகளுக்கு வருந்துவதாகவும் இனிமேலாவது நாங்கள் இப்படியாக இருக்காமல் ஒற்றுமை, சமத்துவம் பேணுவோமாக  என்றும் பேசுகிறார்கள். முன்னர் இதுவெல்லாம் முடிவதில்லை, இது ஒரு சின்ன மாற்றமே அன்றி இதில் எமக்கொன்றும் தீர்வு வரும் என்று நான் கூறவில்லை. ஆனாலும் இதுவும் நிகழவேணும் என்பதே எனது உணர்வு. 
புலிகளின் காலத்தில் கூட அவர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களிடையியே தங்கள் அரசியல் கருத்துக்களை, மக்கள் அவலங்களை சிறப்பு வானொலி சேவையூடாக செய்தார்கள் என்பதை மறுக்க முடியாது.

இந்த சந்தர்ப்பத்தில் எமது அவலங்களை அவர்களிடம் மீண்டும், மீண்டும் நாங்கள் கொண்டுசெல்லாவிட்டால் அப்படியே ஏதாவது "நல்லது" நடந்தாலும் "காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டுபோன" கதையாக தமிழர்கள் நிலை முடியும் என்பது போல நான் உணர்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Sasi_varnam said:

இன்றைய இலங்கை அரசியல் நிலவரமும் இலங்கை தமிழரின் சஞ்சலமும். 

சசிவர்ணம், அருமையான அவதானிப்புடனும்.... 
எச்சரிக்கை உணர்வுடனும் எழுதப் பட்ட கட்டுரை.  

எமது அரசியல் கட்சிகளுக்குள்  உள்ள பெரிய குறையே...
பொது விடயமான தமிழர் தீர்வில் கூட,
ஒற்றுமையாக செயல் பட மாட்டார்கள் என்பதே..
அத்துடன்.. எமது அரசியல்வாதிகளுக்கு,
தூர நோக்கு பார்வை என்பது அறவே... இல்லை.

கொழும்பில்... ஒரு வீட்டுக்கும், அமைச்சு பதவிக்கும் ஏங்கும்,
இந்த அரசியல் வாதிகாளால், மீண்டும் ஏமாறப்  போகின்றோம்... 
என்ற அச்ச உணர்வே ஏற்படுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

இன்றைய இலங்கை அரசியல் நிலவரமும் இலங்கை தமிழரின் சஞ்சலமும். 

நான் ஏற்கனே திண்ணையில் எழுதிய நிலைப்பாடுதான். எனக்கென்னமோ இலங்கை தமிழர்கள்; திரும்பவும் எதையோ கோட்டைவிடுவது போல ஒரு உணர்வு. நானும் கடந்த ஒருவாரமாக நடந்து வரும் அரசுக்கெதிரான மக்கள் போராட்டம் பற்றிய பல சிங்கள செய்திகள், பல் துறை சார்ந்தவர்களின் சிங்கள பேட்டிகள் கேட்பதோடு,  ஆர்ப்பாட்ட தளத்தில் தினமும் பங்கு கொள்ளும் மற்றும் செயல்பாடுகளை திட்டமிடும்  சிங்கள இளைஞர்கள் குழுக்களோடும் தொடர்பில் இருக்கிறேன், அவற்றை தொடர்ந்தும் அவதானிக்கிறேன். 
அதன்பட்சத்தில்; எந்த நேரத்தில் எமது மக்களின் பிரச்சினைகள் (காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதி விவகாரங்கள்,  முள்ளிவாய்க்கால் அழிவுகள், மற்றும் எமக்கு நடந்த 74 வருட வக்கிரங்கள் பற்றி  பேசப்படவேணுமோ அதை செய்யாதால்; எமது சோதனைகள், துன்பங்கள் வெளிச்சத்தில் அரங்கேறாமல் வெறும் இருட்டாய் , வெற்றிடமாக இருப்பதாக நான் உணர்கிறேன். 

இங்கே சிங்களவருக்கு என்ன தமிழர்களின் 74 வருட அவலங்கள் தெரியாமலா போயிற்று என்ற கேள்வி எழுவதை நான் உணருகிறேன்.  அவர்கள் பௌத்த சங்கங்களாலும், தேரர்களாலும், அரசியல்வாதிகளாலும்  லங்காபுவத், தினமின, ராவய, மவ்பிம போன்ற செய்திகளாலும் பல தசாப்தங்கள் மூளை சலவை செய்யப்பட்ட கூட்டம் என்பதையும் மறக்கக்கூடாது.
நாங்கள் எப்படி எமது தரப்பு செய்திகளுக்கு  இன்றைக்கு வரை முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே போல அவர்களும் இருக்கிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில்; நீங்கள் நினைப்பதை போலவே அவர்களின் பெரும்பாலானோர் வெறும் மின்சாரத்துக்கும், டீசலுக்கு, விலைவாசிக்கும் தான் ரோட்டில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள், மாற்றுக்கருத்து இல்லை. 
ஆனாலும், அங்கே இன்றைய அரசியல் செய்வோரின் (ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, இதர கட்சி) அனைவரின்  நரித்தனம், மதவாதம், ஊழல், லஞ்சம், ரவுடித்தனம், மக்களை பிரித்தாளும் தந்திரம் என்பன பற்றியும் பெரியளவில் பேசப்படுகிறது என்பதையும் கவனிக்க தவறக்கூடாது.
பௌத்த பீடங்கள், விகாராதிபதிகள், பிக்குகள் முதலானோர் பற்றிய கடுமையான பார்வை கூட ஓரளவுக்கு பார்க்கக் கூடியதாய் உள்ளது. 
நான் மேலே குறிப்பிட்டதை போல சிங்கள பேட்டிகள், மக்கள் கருத்தாடல்களிலும் கூட முஸ்லீம், கத்தோலிக்க மக்கள் பற்றிய கரிசனைகள், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறிப்பிட்டு பேசப்படுகின்றன அன்றி,  தமிழர்கள்(சைவர்கள், இந்துக்கள்) போன்ற கருத்துக்கள் இயல்பாக தவிர்க்கப்படுகின்றன. இது என்னுடைய அவதானிப்பு. இதற்கான ஆதாரங்கள் நிறையவே உண்டு.

தமிழர்கள் நாங்கள் மதத்தை தூக்கி பிடிப்பவர்கள் அல்ல,  இருந்தாலும் எங்களை அவர்கள் ஒரு பொருட்டாக நோக்காமல் தாண்டிச்செல்வதும், நாங்களும் அதை கண்டும் காணாமலும் போவதும், யாரும் நாங்கள் பட்ட அனைத்து துன்பங்களையும் கணக்கிலெடுப்பதாக தெரியவில்லை. 

மேலும் ஒரு அவதானிப்பு, இன்றைய சிங்கள இளம் தலைமுறை ஓரளவுக்கு அவர்களின் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி காலத்து சிந்தனைகளை தலையில் தூக்கி பிடிப்பவர்களாகவும் தெரியவில்லை. 
உதாரணமாக இன்றைக்கு என்னால் சிங்களவர்கள்  40, 50 பேர் கூடி இருக்கும் ஒரு தளத்தில் ஒருவித தயக்கமும் இல்லாமல்;  நான் எனது வாழ்க்கையில் சந்தித்த சிங்களவரின் இனத்துவேச செயல்கள், 1977, 1983 மற்றும் இலங்கை ராணுவ கொடூரங்கள், தேசிய தலைவரின் சில சிந்தனைகள், செயல்பாடுகள் பற்றி தடையின்றி பேசக்கூடியவாறு இருக்கிறது. அவர்களும் நான் பகிரும் தகவல்களை, உணர்வுகளை  இடையூறு செய்யாமல், சர்ச்சைகள் ஏற்படாமல் பொறுமையாக கேட்டு உணருகிறார்கள், சிலர் பகிரங்கமாக எமக்கு சார்பாகவும் பேசுகிறார்கள், சிலர் இந்த தவறுகளுக்கு வருந்துவதாகவும் இனிமேலாவது நாங்கள் இப்படியாக இருக்காமல் ஒற்றுமை, சமத்துவம் பேணுவோமாக  என்றும் பேசுகிறார்கள். முன்னர் இதுவெல்லாம் முடிவதில்லை, இது ஒரு சின்ன மாற்றமே அன்றி இதில் எமக்கொன்றும் தீர்வு வரும் என்று நான் கூறவில்லை. ஆனாலும் இதுவும் நிகழவேணும் என்பதே எனது உணர்வு. 
புலிகளின் காலத்தில் கூட அவர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களிடையியே தங்கள் அரசியல் கருத்துக்களை, மக்கள் அவலங்களை சிறப்பு வானொலி சேவையூடாக செய்தார்கள் என்பதை மறுக்க முடியாது.

இந்த சந்தர்ப்பத்தில் எமது அவலங்களை அவர்களிடம் மீண்டும், மீண்டும் நாங்கள் கொண்டுசெல்லாவிட்டால் அப்படியே ஏதாவது "நல்லது" நடந்தாலும் "காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டுபோன" கதையாக தமிழர்கள் நிலை முடியும் என்பது போல நான் உணர்கிறேன்.

இந்த கருவாக்காடு ஸ்டைல்  ஆர்ப்பாட்டத்தில்   சிறிலங்கா தேசியகொடிக்கு  அதிக முக்கியத்துவம்  கொடுப்பதை கவனித்திருப்பீர்கள் என  நம்புகிறேன்...

சிங்கள அரசியல்வாதிகளுக்கும் ,பிக்குமார்களுக்கும் ,ஏன் இந்த திருந்திய சிங்கள இளைஞர்களுக்கும் இனிவரும் காலங்களில் 
தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கொடுப்பதில் பிரச்சனை இருக்காது ,
இந்து ,கிறிஸ்தவம்,இஸ்லாம் சம அந்தஸ்து கொடுப்பதிலும் பிரச்சனை இருக்காது..
 காரணம் சிறிலங்கா தேசியத்தினுள் எல்லாம் அடக்கம் சிறிலங்கா தேசிய பிரஜைகள்...

ஆனால் தமிழர்களுக்கு என்று தனித்துவமான நிலப்பரப்பை ஒரு நாளும் அங்கிகரிக்க மாட்டார்கள்... 74 வருடங்களாக அவர்கள் அதை புத்த பகவானுக்கு செய்யும் பணியாக செய்து கொண்டிருக்கிறார்கள்...

இன்று பெற்றோல்,டிசல்,பான் பருப்பு இல்லை என்ற காரணத்தால் ஆட்சியை கலைக்க சொல்கின்றனர் .....நாளை வேறு ஆட்சி வந்து சகலதும் கிடைக்க தொடங்க 
மீண்டும் வேதாளம் முருங்கையில் ஜம்ப் பண்ணும்....

ஆட்சி மாற்றத்துக்கு ஏன் தேசிய கொடி ?
கோத்தாவும் ,மகிந்தாவும் தேசிய கொடிக்கு எதிரானவர்களா?


கோத்தா இன்னும் மெளனமாக இருப்பது ஏன் என தெரியவில்லை...

கோத்தாவை நிச்சயம் அடுத்த தேர்தலில் தோற்கடிப்பார்கள் ஆனால் அதுவரை அவர் ஏதாவது செய்யத்தான் பார்ப்பார்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Sasi_varnam said:

 

இன்றைய இலங்கை அரசியல் நிலவரமும் இலங்கை தமிழரின் சஞ்சலமும். 

நான் ஏற்கனே திண்ணையில் எழுதிய நிலைப்பாடுதான். எனக்கென்னமோ இலங்கை தமிழர்கள்; திரும்பவும் எதையோ கோட்டைவிடுவது போல ஒரு உணர்வு. நானும் கடந்த ஒருவாரமாக நடந்து வரும் அரசுக்கெதிரான மக்கள் போராட்டம் பற்றிய பல சிங்கள செய்திகள், பல் துறை சார்ந்தவர்களின் சிங்கள பேட்டிகள் கேட்பதோடு,  ஆர்ப்பாட்ட தளத்தில் தினமும் பங்கு கொள்ளும் மற்றும் செயல்பாடுகளை திட்டமிடும்  சிங்கள இளைஞர்கள் குழுக்களோடும் தொடர்பில் இருக்கிறேன், அவற்றை தொடர்ந்தும் அவதானிக்கிறேன். 
அதன்பட்சத்தில்; எந்த நேரத்தில் எமது மக்களின் பிரச்சினைகள் (காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதி விவகாரங்கள்,  முள்ளிவாய்க்கால் அழிவுகள், மற்றும் எமக்கு நடந்த 74 வருட வக்கிரங்கள் பற்றி  பேசப்படவேணுமோ அதை செய்யாதால்; எமது சோதனைகள், துன்பங்கள் வெளிச்சத்தில் அரங்கேறாமல் வெறும் இருட்டாய் , வெற்றிடமாக இருப்பதாக நான் உணர்கிறேன். 

 

இதற்கு இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் அமைதியக இருப்பதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது சிங்களவர்கள் மீதோ அல்லது எந்த ஒரு சிங்கள அரசின் மீதோ உள்ள நம்பிக்கையின்மையே. ஏனெனில் இன்று வரை அங்கே உள்ள தமிழர்களில் சாதரான சிங்களவர் தொடங்கி அரசு வரை ஏதோவொரு ஆதிக்க மனப்பாங்கை காட்டுவதே ஆகும். அதுமட்டுமல்ல காலங்காலமாக இவர்களால் ஏற்பட்ட தாக்கங்கள் உளவியல் ரீதியாக ஒரு வித பயத்தை ஏற்படுத்தியிருக்கும். அதனால்தான் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.. 

அதே வேளை சிங்கள மக்களின் உளவியலையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். 

நான் அவதானித்த வரையில் இலங்கையில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகங்களின் செய்திகளுக்கு பதிவிடும் சிங்கள தமிழ் மக்களின் கருத்துகளை வாசிக்கும் பொழுது, அவர்கள் இந்த அரசின் மீது வெறுப்பை கொண்டுள்ளார்கள், ஆனால் இந்த பொருளாதாரப் பிரச்சனையின் அடிப்படை உண்மையை ஏற்க விருப்பமில்லை. எங்களுக்கு நடந்தவற்றை சிலர் எழுதும் பொழுது, அதை ஓரிருவர் சாட்டுக்கு ஏதாவது எழுதினாலும், எங்களுடைய பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்பதை கடந்து போகிறார்கள் என தோன்றுகிறது. எப்பொழுது அவர்கள் இந்த பிக்குகளின் பிடியில் இருந்து வெளிவருகிறார்களோ அன்றுதான் சக இனங்களையும் மனிதர்களாக மதிப்பார்கள் என நினைக்கிறேன். 

ஆனால் புலம்பெயர் அமைப்புகள், தமிழ் அரசியல்வாதிகள்(வெளிநாட்டில் உள்ள, இலங்கையில் உள்ள)தமிழர்களுக்கான நாடு கடந்த அரசாங்கம்(?), போன்றவை, அந்தந்த நாட்டு அரசுகளின் ஊடாக, இலங்கை IMF நாடும் பொழுது இவர்கள் ஊடாக சிலவற்றை சாதிக்கலாம் என நினைக்கிறேன். வெளி அமைப்பு/நாடு ஒன்றின் அழுத்தம் இல்லாமல் அவர்கள் எங்களுக்கு நியாயமான தீர்வை வழங்க மாட்டார்கள் என நினைக்கிறேன். 

நீங்கள் கூறுவது போல இந்த சந்தர்ப்பத்தையும் நாங்கள் கோட்டைவிட்டு விடுவோமோ என்ற பயம் உள்ளது. ஆனால் எங்களால் இந்த வெளிநாடுகளில் சிங்களவர்கள் நடத்தும் அரசிற்கு எதிரான பேரணிகளில் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் அவலத்தை கூற முடியுமா? சந்தேகமே. அப்படியிருக்க இலங்கையில் உள்ள தமிழர்கள் எப்படி எங்களுக்கு நடந்தவற்றை பயமின்றி கதைக்க முடியும்? 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனால் எங்களால் இந்த வெளிநாடுகளில் சிங்களவர்கள் நடத்தும் அரசிற்கு எதிரான பேரணிகளில் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் அவலத்தை கூற முடியுமா? சந்தேகமே. அப்படியிருக்க இலங்கையில் உள்ள தமிழர்கள் எப்படி எங்களுக்கு நடந்தவற்றை பயமின்றி கதைக்க முடியும்? 

எம்மால் நிச்சயமாக முடியாது. புலம்பெயர் நாடுகளில் சிங்களவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் தமிழர்கள் போர்க்குற்ற விசாரனைகளுக்கான கோரிக்கைகளையோ அல்லது இனவழிப்பிற்கான நீதிகோரலையோ அல்லது காணாமற்போனவர்களுக்கான நீதியையோ அல்லது எமது தேசத்தில் ஆக்கிரமிப்பில் இன்றும் ஈடுபட்டுவரும் பெளத்த - ராணுவ மேலாதிக்கத்தை அகற்றுமாறோ கேட்கமுடியுமா? நிச்சயமாக இல்லை. ஏனென்றால், இவை எல்லாவற்றையும் சிங்களவர்கள் பிழையானவை, முறைகேடானவை என்பதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவர்களைப்பொறுத்தவரையில்  போர்க்குற்றங்களோ, இனவழிப்போ நடைபெறவில்லை என்பதுடன், தமது நாட்டில் தாம் எங்கு வேண்டுமானாலும் விகாரைகளையோ, குடியேற்றங்களையோ அமைக்கலாம் என்கிற மனோநிலையே உள்ளது.

சிங்களவரின் பொருளாதாரப் பிரச்சினையோடு, எமது அரசியல் உரிமைகளுக்கான கோரிக்கைகளையோ, எமது அழிவிற்கான நீதி தேடலையோ சேர்ப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றுதான் நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Sasi_varnam said:

மேலும் ஒரு அவதானிப்பு, இன்றைய சிங்கள இளம் தலைமுறை ஓரளவுக்கு அவர்களின் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி காலத்து சிந்தனைகளை தலையில் தூக்கி பிடிப்பவர்களாகவும் தெரியவில்லை. 

இங்கே யாழ் இணையத்தில் தாரகி அவர்களின் கட்டுரை ஒன்றின் சிறிய பகுதியை எழுஞாயிறு அவர்கள் இணைத்திருந்தார்கள், அதில் வரும் சிங்களவர்களின் எண்ணங்களைப் பாருங்கள். அதே போல இந்த பேராசிரியர் சிங்களவர்களின் மனநிலை 6 விதமாக வகுத்திருக்கிறார். எல்லோரும் கூறுவது இதுதான் சிங்களர்வர்களின் எண்ணங்கள் மாற வேண்டும். அதற்கு அவர்கள் இந்த மதத்தின் பிடியில் இருந்து வெளிவர வேண்டும். தமிழர்கள் தங்களில் எப்பொழுதும் தங்கியிருக்க வேண்டும் என்ற போக்கு மாறவேண்டும். நாங்கள் எவ்வளவு போராட்டங்களை முன்னெடுத்தும் சாதாரன சிங்கள மக்கள் கூட எங்களுக்கு மனிதாபிமான எண்ணத்தில் கூட உதவ வரவில்லை. 

உண்மையில் இந்த சந்தர்ப்பத்தை எங்களது தமிழ் அரசியல்வாதிகள் சரியாக பயன்படுத்தி பேரம் பேச வேண்டும், அதே நேரம் எங்களுக்கு நடந்தவற்றை இவர்கள் மத்தியில் எச்சரிக்கையுடன்தான பரப்பவேண்டும், இல்லாவிடில் எங்களது கருத்துக்களை வைத்தே இன்னொரு இனவாத போரை முன்னெடுக்கவும் தயங்கமாட்டார்கள்.  

இதில் உள்ளது தாரகி சிவராம் அவர்களின் கட்டுரையில் வந்த சிறிய பகுதியை எழுஞாயிறு அவர்கள் இணைத்திருக்கிறார்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

இந்த கருவாக்காடு ஸ்டைல்  ஆர்ப்பாட்டத்தில்   சிறிலங்கா தேசியகொடிக்கு  அதிக முக்கியத்துவம்  கொடுப்பதை கவனித்திருப்பீர்கள் என  நம்புகிறேன்...

சிங்கள அரசியல்வாதிகளுக்கும் ,பிக்குமார்களுக்கும் ,ஏன் இந்த திருந்திய சிங்கள இளைஞர்களுக்கும் இனிவரும் காலங்களில் 
தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கொடுப்பதில் பிரச்சனை இருக்காது ,
இந்து ,கிறிஸ்தவம்,இஸ்லாம் சம அந்தஸ்து கொடுப்பதிலும் பிரச்சனை இருக்காது..
 காரணம் சிறிலங்கா தேசியத்தினுள் எல்லாம் அடக்கம் சிறிலங்கா தேசிய பிரஜைகள்...

ஆனால் தமிழர்களுக்கு என்று தனித்துவமான நிலப்பரப்பை ஒரு நாளும் அங்கிகரிக்க மாட்டார்கள்... 74 வருடங்களாக அவர்கள் அதை புத்த பகவானுக்கு செய்யும் பணியாக செய்து கொண்டிருக்கிறார்கள்...

இன்று பெற்றோல்,டிசல்,பான் பருப்பு இல்லை என்ற காரணத்தால் ஆட்சியை கலைக்க சொல்கின்றனர் .....நாளை வேறு ஆட்சி வந்து சகலதும் கிடைக்க தொடங்க 
மீண்டும் வேதாளம் முருங்கையில் ஜம்ப் பண்ணும்....

ஆட்சி மாற்றத்துக்கு ஏன் தேசிய கொடி ?
கோத்தாவும் ,மகிந்தாவும் தேசிய கொடிக்கு எதிரானவர்களா?


கோத்தா இன்னும் மெளனமாக இருப்பது ஏன் என தெரியவில்லை...

கோத்தாவை நிச்சயம் அடுத்த தேர்தலில் தோற்கடிப்பார்கள் ஆனால் அதுவரை அவர் ஏதாவது செய்யத்தான் பார்ப்பார்...

 

தேசியக்கொடி தாய்நாட்டுப் பற்றை வெளிப்படுத்துவதுடன் அதை வைத்திருப்பவர்களை தாக்காமல் இருப்பதற்காகவும் இருக்கலாம் என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  தம்பி  சசி உங்களது  ஆக்கத்துக்கும்  ஆதங்கத்துக்கும்...

ஆனால் என்னைப்பொறுத்தவரை 

இன்னும்  காத்திருப்பு நன்று

இன்னும் சிங்களத்துக்குள் சிதைவுகளும் நலிவுகளும் பஞ்சங்களும் பட்டிறிவின்  அடிப்படையிலான ஆக்கபூர்வமான  தேடலும்  வரணும்

இல்லையென்றால் பசி முடிந்ததும் பூதம்  மீண்டும்  முருக்க  மரத்தில்  ஏறி விடும்

இதற்கு சாட்சியாக வரலாறையும்  தங்களுக்குள் தாழ்வுகள்  வரும்போது எழுதப்பட்ட  ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஒப்பந்தங்களின்  நிலையையும்

கோத்தா காத்திருப்பது  தமிழர்களை ஏதாவது  ஒரு  விதத்தில் இழுத்து  விட்டு இனவாதப்பூதத்தை கையிலெடுக்கவே  என்பதையும் இங்கே  எனது  கருத்துக்கு சாட்சியங்களாக  வைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

தேசியக்கொடி தாய்நாட்டுப் பற்றை வெளிப்படுத்துவதுடன் அதை வைத்திருப்பவர்களை தாக்காமல் இருப்பதற்காகவும் இருக்கலாம் என நினைக்கிறேன்

சோறு இல்லையென்றாலும் தேசிய கொடி தேவை என்றால்  கஸ்டம் தான்.....
சோறு இல்லை என்றால் தேசிய கொடி
சக இனத்தை கொலை செய்தால் தேசிய கொடி
கிரிக்கெட் வென்றால் தேசிய கொடி

இந்த கொடிவெறியும் ,மத வெறி இனவெறி க்கு சமன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

எம்மால் நிச்சயமாக முடியாது. புலம்பெயர் நாடுகளில் சிங்களவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் தமிழர்கள் போர்க்குற்ற விசாரனைகளுக்கான கோரிக்கைகளையோ அல்லது இனவழிப்பிற்கான நீதிகோரலையோ அல்லது காணாமற்போனவர்களுக்கான நீதியையோ அல்லது எமது தேசத்தில் ஆக்கிரமிப்பில் இன்றும் ஈடுபட்டுவரும் பெளத்த - ராணுவ மேலாதிக்கத்தை அகற்றுமாறோ கேட்கமுடியுமா? நிச்சயமாக இல்லை. ஏனென்றால், இவை எல்லாவற்றையும் சிங்களவர்கள் பிழையானவை, முறைகேடானவை என்பதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவர்களைப்பொறுத்தவரையில்  போர்க்குற்றங்களோ, இனவழிப்போ நடைபெறவில்லை என்பதுடன், தமது நாட்டில் தாம் எங்கு வேண்டுமானாலும் விகாரைகளையோ, குடியேற்றங்களையோ அமைக்கலாம் என்கிற மனோநிலையே உள்ளது.

சிங்களவரின் பொருளாதாரப் பிரச்சினையோடு, எமது அரசியல் உரிமைகளுக்கான கோரிக்கைகளையோ, எமது அழிவிற்கான நீதி தேடலையோ சேர்ப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றுதான் நினைக்கிறேன். 

உண்மையான கருத்து ...அவர்களை பொறுத்தவரை அழிவுகளுக்கு காரணம் புலிகள்,புலிகளை ஒழித்து விட்டோம் அங்கு நடந்தது பயங்கரவாதிகளின் அழிப்பு இனவழிப்பு இல்லை என நம்புகிறார்கள் ...அதைத்தான் வெளிநாடுகளும் நம்புகிறது.. எமது  இனவழிப்பை தமிழ்ர்களை தவிர வேறு எவரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் ....ஐ.நா மனித உரிமைகள் சபையே ஏற்றுக்ககொள்ள வில்லை சாட்சியங்கள் இருந்தும்.....நேற்று  யுக்ரேயினில் நடந்த விடயத்தை அடுத்த நாளே இனவழிப்பு  மீறல் என கூறுகிறார்கள்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.