Jump to content

கோத்தகோகமவில் தமிழ் தேசிய கீதம்: பிக்கர் சிறு சர்ச்சை...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கீதம்: முரண்பட்ட பிக்கர் வெளியே அனுப்பப்பட்டார்!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சிறீலங்காவின்ர தேசியப்பண்ணே எமக்குத் தேவையில்லை. இதில் அது எந்த மொழியில் பாடப்பட்டால்தான் என்ன?  எல்லாம் ஒன்றுதான்.

அது தமிழில் பாடப்படுவதே காதில் ஈயம் காய்ச்சி ஊற்றுவது போல இருக்கிறது. சைக்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள் தமிழில் சிங்கள  தேசிய கீதம் பாடப்பட்டது தமிழுக்கு அவமானம் தயவு செய்து யாரும் சிங்கள தேசிய கீதத்தை தமிழில் பாடி தமிழை தரம் தாழ்த்தவேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@பெருமாள்

நாங்கள் ஏன் இந்த கொடியையும் கீதத்தையும் எதிர்க்கிறோம்! எங்களை அழித்தபின் எங்கள் பிணங்களின் மேல் இந்த கொடிகளை தான் ஏற்றினார்கள்! எங்கள் நிலங்களை இந்த கொடிகள் தான் ஆக்கிரமித்தன! இறந்த கிடந்த என் அக்காளை புணர்ந்தவர்கள் இந்த கீதத்தை தான் பாடினார்கள்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்....வாழ்க பிக்கர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான போராட்டக் களத்தில் தமிழிலும் ஒலித்த தேசிய கீதம்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

(இன்றைய (ஏப்ரல் 18) இலங்கை நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.)

தமிழ் மொழியில் தேசிய கீதம்

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் சிங்கள மொழியுடன் சேர்த்து தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது என்கிறது வீரகேசரி செய்தி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பொது மக்களால் சுயமாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்றுடன் பாத்தாவது நாளாக தொடர்கிறது. கோட்டா கோ ஹோம் என்ற கருப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டாம் தற்போது 'கோட்டா கோ கம' என்றவாறு திரிபடைந்து நாடாளாவிய ரீதியிலும் வியாபித்துள்ளது. அத்தோடு நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட செயற்பாடுகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று முந்தினம் குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது. இது தொடர்பில் சிலர் விமர்சனங்களை முன் வைத்திருந்த நிலையில், நேற்றைய தினம் மாலை தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது நாட்டில் நல்லிணக்க செயன்முறையை நோக்கிய ஒரு சிறந்த முன்னெடுப்பாக அமையும் என்று பலராலும் வரவேற்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு நேற்று வாஷிங்டன் சென்றடைந்துள்ளது என்கிறது தமிழன் நாளிதழ் செய்தி.

 

அலி சப்ரி

பட மூலாதாரம்,ALI SABRY FB

அந்த குழுவில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் உள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்பகட்ட பேச்சு வார்த்தைகள் நாளை முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

'அமைதியான போராட்டத்தின் மீது ராணுவத்தை பயன்படுத்தப்போவதில்லை'

அமைதியான போராட்டத்தின் மீது ராணுவ அதிகாரத்தை பயன்படுத்தப்போவதில்லை என இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்தின தெரிவித்துள்ளார் என சிலோன் டுடே நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயக ரீதியில் அமைதியாக நடைபெறும் போராட்டத்தை ஒடுக்க ராணுவப் படைகளை பயன்படுத்தப் போவதில்லை.

அதே நேரம் நாட்டை பாதுகாக்க ராணுவத்தின் துணையை காவல்துறை நாடினால் நிச்சயம் காவல்துறையினருக்கு துணை நிற்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61137587

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் தேசிய கீதம் பாடிய உடனேயே... 
அந்தப் பிக்குவுக்கு, வயித்து குத்து வந்திருக்குது எண்டால்..
தமிழனுக்கு... ஏதாவது உரிமை கொடுக்க வெளிக்கிட்டால்,
என்ன செய்திருப்பாங்கள், என்று  இப்பவே... விளங்குது.
உந்த நாடு... உருப்படப்  போறதில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.