Jump to content

8 பில்லியன் டொலர் குத்தகைக்கு பல சொத்துக்களை வழங்க அரசாங்கம் உத்தேசம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

8 பில்லியன் டொலர் குத்தகைக்கு பல சொத்துக்களை வழங்க அரசாங்கம் உத்தேசம்?

-சி.எல்.சிசில்-
பல பெறுமதி மிக்க அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் 8 பில்லியன் டொலர்களை உடனடியாகத் திரட்ட அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
mattala-300x168.jpg
குத்தகைக்கு முன்மொழியப்பட்ட சொத்துக்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவை அடங்கும். இவை நீண்ட கால குத்தகைக்கு விடப்படும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு துறைமுகத்தின் தெற்குப் பகுதி 600 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு அடிப்படையில் குத்தகைக்கு விடப்படவுள்ளதுடன் கொழும்பு துறைமுக நகரத்தில் அரசாங்கத்துக்கு சொந்தமான பங்கு 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளது.
மேலும், ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் அரசுக்குச் சொந்தமான தொகுதி 500 மில்லியன் டொலருக்கும், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் அரச பங்குகள் 300 மில்லியன் டொலருக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக ‘திவயின’ செய்தி வெளியிட்டுள்ளது.

 

https://thinakkural.lk/article/174324

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி சொல்லிய - bridging finance இன் ஒரு செயல் முறை வடிவம்.

பணம் வரும் வரைக்கும்  ஒன்றும் நிச்சயமில்லை, அனால் அநேகமாக, இவற்றில் ஈடுபடும் கம்பனிகளுக்கு கிரெடிட் வழங்கும் வகைகளுக்கு IMF இன் வசதிப்படுத்துதல் இருக்கும்.


இப்படியான இக்கட்டான நிலையில் IMF இன் ஈடுபாட்டை கோரினால், IMF இப்படித்தான் கடந்த காலங்களில் செய்து இருக்கிறது.

1997 -1998 கிழக்காசிய நிதி நெருக்கடி, thai bhat US dollar peg, US dollars இல்லாமையால் நீக்க வேண்டி வந்ததால், உதாரணம்.    

IMF இடம் செல்லும் போது பிடி இருக்க வேண்டும், சொறி சிங்களத்துக்கு அந்த வாய்ப்பும், நேரமும் இருந்தும்,  எல்லாவற்றையும் விட்டு, மூழ்கிம் நிலையில் IMF இடம் போய் இருக்கிறது.  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனெனில், அரசு, fiscal மற்றும் monetary கொள்கைகளை சீரமைத்து, முதல் படி எடுக்கும் வரையிலும் IMF தனது பண பரிவர்த்தனை செய்ய முடியாது.

அப்படி செய்யும் போது, , fiscal மற்றும் monetary கொள்கைகளை சீரமைத்து, IMF debt restructuring ஐ கடன் கொடுத்தவர்களோடு வசதிப்படுத்தும்.  

bridging finance, அதுவும் ஓர் அரசுக்கு இக்கட்டம்னா நிலையில், முக்கியமாக, ஓர் நாட்டின், அரசின் தேசிய வருமானம் உழைக்கும் சொத்துக்களை, சேவைகளை, பொதுவாக மேற்கு தனியார் கம்பனிகள், வங்கிகளின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வருவதில், IMF மறைமுக வசதிப்படுத்தல் பங்களிப்பு செய்யும்.

இதில்  ஹிந்தியை கம்பனிகளுக்கு இடம் உள்ளது.

மேற்கு, மற்றும் ஹிந்தியா வங்கிகள் கிரெடிட் வழங்கவும் இடம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில்... நாடே, குத்தகைக்கு போகுது.
நல்ல காலம், பலாலி விமான நிலையம், தப்பீட்டுது. 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

http://globaltamilnews.net/wp-content/uploads/2020/01/jaffna-airport-1024x576.jpg

மொத்தத்தில்... நாடே, குத்தகைக்கு போகுது.
நல்ல காலம், பலாலி விமான நிலையம், தப்பீட்டுது. 😜

இதுவே சரியான சந்தர்ப்பம்.... உங்கள் கடனை நாம் கட்டி முடிக்கிறோம்.... வடக்கு, கிழக்கை முழுமையாக விலை பேசி தாருங்கள்.

என்ன $20 - $25 பில்லியன் வருமா?

****

9 பில்லியன்.... 

எரியும் வீட்டில் புடுங்கிறது லாபம்..... என்று தான் பார்ப்பார்கள்.... இவர்கள் கேட்பதை யாரும் கொடுக்க போவதில்லை.

நானும், பலாலி ஆமி கேம்ப் இருக்கிற காணியை கேட்டு பார்ப்பம் என்று யோசனையில இருக்கிறன். மலிவா அமத்தலாம்.....

 

  • Like 3
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

இதுவே சரியான சந்தர்ப்பம்.... உங்கள் கடனை நாம் கட்டி முடிக்கிறோம்.... வடக்கு, கிழக்கை முழுமையாக விலை பேசி தாருங்கள்.

என்ன $20 - $25 பில்லியன் வருமா?

****

9 பில்லியன்.... 

எரியும் வீட்டில் புடுங்கிறது லாபம்..... என்று தான் பார்ப்பார்கள்.... இவர்கள் கேட்பதை யாரும் கொடுக்க போவதில்லை.

நானும், பலாலி ஆமி கேம்ப் இருக்கிற காணியை கேட்டு பார்ப்பம் என்று யோசனையில இருக்கிறன். மலிவா அமத்தலாம்.....

//கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.//

இவற்றை,  யாருக்கு... குத்தகைக்கு கொடுக்கப் போகின்றார்கள் என்று செய்தியில் இல்லை.
பங்கு  பிரிப்பதில்... இந்தியாவும்,  சீனாவும் புடுங்குப் படப் போகுதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:
//கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.//

இவற்றை,  யாருக்கு... குத்தகைக்கு கொடுக்கப் போகின்றார்கள் என்று செய்தியில் இல்லை.
பங்கு  பிரிப்பதில்... இந்தியாவும்,  சீனாவும் புடுங்குப் படப் போகுதே...

டென்டர் மூலம் குத்தகைக்கு விடுவார்களோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

டென்டர் மூலம் குத்தகைக்கு விடுவார்களோ தெரியவில்லை.

சீனாவுக்கும், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் தான்...  
போட்டி இருக்கும் என நம்புகின்றேன்.

மத்தள விமான நிலையத்தை எடுப்பதில்....  பெரும் போட்டி வரும்.
சீனா  அதனை, மற்றவர்களுக்கு  கிடைக்க விரும்பாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்டிக்கு எடுத்தவனும் 

குத்தகைக்கு விட்டவனும் மீண்டும் மீண்டதாக சரித்திரம் இல்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

சீனாவுக்கும், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் தான்...  
போட்டி இருக்கும் என நம்புகின்றேன்.

மத்தள விமான நிலையத்தை எடுப்பதில்....  பெரும் போட்டி வரும்.
சீனா  அதனை, மற்றவர்களுக்கு  கிடைக்க விரும்பாது.

கடந்த அரசில், மத்தள விமான நிலையம், நெல் களஞ்சியமாக ஆக இருந்தது.

யுத்த வெற்றி மமதையில், 10ம் வகுப்பு படித்த, எங்கண்ட மகிந்த, பக்கத்தில, ஒரு படிச்ச ஆட்களையும் வைத்து முடிவு செய்யாமல், தானே முடிவு செய்து, கடனை, உடனை வாங்கி கட்டுநாயக்காவில் ஒன்று இருக்க கூடியதாக, மத்தளவில்.... கட்டினது.

உந்த பணக்கார இங்கிலாந்தில், லிவர்பூல், பர்மிங்காம், வேல்ஸ் போன்ற 100 - 200 மைலுக்கு மேல உள்ள இடங்களில் இருந்து ஹீத்ரோ ஓடி வருவார்கள்.... பிளேன் பிடிக்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இதுவே சரியான சந்தர்ப்பம்.... உங்கள் கடனை நாம் கட்டி முடிக்கிறோம்.... வடக்கு, கிழக்கை முழுமையாக விலை பேசி தாருங்கள்.

என்ன $20 - $25 பில்லியன் வருமா?

****

9 பில்லியன்.... 

எரியும் வீட்டில் புடுங்கிறது லாபம்..... என்று தான் பார்ப்பார்கள்.... இவர்கள் கேட்பதை யாரும் கொடுக்க போவதில்லை.

நானும், பலாலி ஆமி கேம்ப் இருக்கிற காணியை கேட்டு பார்ப்பம் என்று யோசனையில இருக்கிறன். மலிவா அமத்தலாம்.....

 

யூதர்கள் மாதிரி தமிழ் செல்வந்தர்கள் காணிகளை வாங்கலாம் ( சிங்களவன் எப்பம் விட்ட காணிகளை). சுபாஸ்கரன் பிரான்சில் கால்பந்தணியை வாங்கிவதற்கு பதில் இலங்கையில் காணிகளை வாங்கலாம்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ragaa said:

யூதர்கள் மாதிரி தமிழ் செல்வந்தர்கள் காணிகளை வாங்கலாம் ( சிங்களவன் எப்பம் விட்ட காணிகளை). சுபாஸ்கரன் பிரான்சில் கால்பந்தணியை வாங்கிவதற்கு பதில் இலங்கையில் காணிகளை வாங்கலாம்.

நான் பகிடிக்கு சொல்லவில்லை.....

விலை பேச வேண்டும்...... ஜநா முன்னிலையில் உடன்படிக்கை இடவேண்டும்.....

காசு? தவணை முறையில் கட்டி முடிக்கலாம், ஒரே தடவையாக அல்ல...

உலகத் தமிழர் அணைவருமே, தமிழருக்கு ஒரு நாடாயின்...... ஆளுக்கு பத்து டொலர் போட்டாலே..... போதும்.

மேலும்...... பிற அரசுகளிடம், புதிய நாடு, கடன் வாங்க முடியும்.....

தேவை..... யூதர்கள் சிந்தணை.....

இதுக்கு தான் சொன்னேன்..... புலம் பெயர் தமிழரிடையே ஜனநாயக தேர்தலில் தேர்ந்து எடுக்கப்பட்ட, நாடு கடந்த தமிழீழ அரசின் வகிபாகம் முக்கியமானது....

Edited by Nathamuni
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3 minutes ago, Nathamuni said:

நான் பகிடிக்கு சொல்லவில்லை.....

விலை பேச வேண்டும்...... ஜநா முன்னிலையில் உடன்படிக்கை இடவேண்டும்.....

காசு? தவணை முறையில் கட்டி முடிக்கலாம், ஒரே தடவையாக அல்ல...

உலகத் தமிழர் அணைவருமே, தமிழருக்கு ஒரு நாடாயின்...... ஆளுக்கு பத்து டொலர் போட்டாலே..... போதும்.

மேலும்...... பிற அரசுகளிடம், புதிய நாடு, கடன் வாங்க முடியும்.....

தேவை..... யூதர்கள் சிந்தணை.....

இதுக்கு தான் சொன்னேன்..... புலம் பெயர் தமிழரிடையே ஜனநாயக தேர்தலில் தேர்ந்து எடுக்கப்பட்ட, நாடு கடந்த தமிழீழ அரசின் வகிபாகம் முக்கியமானது....

ஒப்பந்தங்களை... கிழித்து எறிவதில்  சிங்களவன் ... விண்ணன்.
இது ஜே. ஆர். ஜெயவர்த்தனா காலத்தில் இருந்து, 
13´ம் திருத்த சட்டம், மட்டும் தொடர் கதை.
அதை இந்தியா கூட தட்டிக் கேட்க முடியாத அளவு, 
"தில்" லானாவான் சிங்களவன்.

ஐ.நா. பெரிய அரிச்சந்திரன் என்ற நினைப்போ....
அதுகும்... பலமுள்ளவன் பக்கம் சாயும், ஒரு வெத்து வேட்டு. 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

 

ஒப்பந்தங்களை... கிழித்து எறிவதில்  சிங்களவன் ... விண்ணன்.
இது ஜே. ஆர். ஜெயவர்த்தனா காலத்தில் இருந்து, 
13´ம் திருத்த சட்டம், மட்டும் தொடர் கதை.
அதை இந்தியா கூட தட்டிக் கேட்க முடியாத அளவு, 
"தில்" லானாவான் சிங்களவன்.

ஐ.நா. பெரிய அரிச்சந்திரன் என்ற நினைப்போ....
அதுகும்... பலமுள்ளவன் பக்கம் சாயும், ஒரு வெத்து வேட்டு. 

அப்ப கேட்டது..... பிச்சை..... இப்ப...வாயில தோசை.... கையில காசு!

ஜநா, பிரகடனம் இல்லாமல், ஈழம் பாஸ்போட் செல்லாது....

மேலும்..... தமிழக மக்கள் அழுத்தத்தில், இந்தியா அங்கீகாரம் செய்தால்..... பிறகு.... பிக்குகள் உடன்படிக்கையை.... கிழித்தால் என்ன, எரித்தால் என்ன ?

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

வாயில தோசை.... கையில காசு!

ஜநா, பிரகடனம் இல்லாமல், ஈழம் பாஸ்போட் செல்லாது....

மேலும்..... தமிழக மக்கள் அழுத்தத்தில், இந்தியா அங்கீகாரம் செய்தால்..... பிறகு.... பிக்குகள் உடன்படிக்கையை.... கிழித்தால் என்ன, எரித்தால் என்ன ?

 இந்தியா அங்கீகாரம் செய்தால்.....  என்பது,
அத்தைக்கு... மீசை முளைத்த கதை, நாதம்ஸ். 😜

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

 இந்தியா அங்கீகாரம் செய்தால்.....  என்பது,
அத்தைக்கு... மீசை முளைத்த கதை, நாதம்ஸ். 😜

நீங்கள், ஒரு முக்கிய விசயத்தை மறக்கப்படாது.....

நாம் இப்போது வைப்பது கோரிக்கை அல்ல.....

சிங்களவர் வாங்கிக் கொண்டிருப்பது கடன்.....

நாம் சொல்லப்போவது..... எமது பகுதியை விலை பேசி தந்து விடுங்கள்.

நாம்... தரும் பணத்தை வைத்து, உங்கள் கடனை கட்டி, நிம்மதியாக இருங்கள்.....

ஏனைனில் இலங்கை, இனி கடன் பெறவே முடியாது...... கடன் கட்டவும் மார்க்கம் இல்லை....

பணம் வாங்குவதால், முதல் அங்கீகாரம் சிங்களதேசத்தில் இருந்து தானே வரும்.

சிங்கப்பூரை பிரிந்து போகச் சொன்னதும், முதலில் அங்கீகரித்ததும், மலேசியா....

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன கம்பனிகளுக்கு, சீன வங்கிகளே பணம் கொடுக்க முடியும், auditing சீனாவுக்குள் இருப்பதால்.

இந்த bridging finance, IMF இன் ஆரம்ப நிபந்தனையாக (memorandaum of understanding), அதாவது IMF க்கும் ஏற்ற தெரிவுகள் (மேற்கு, கிந்திய கம்பனிகள், வங்கிகளுடன்) தான் இருக்க செய்ய வேண்டும் என்பது.

சீனாவின் BRI, சீன அம்பாந்தோட்டையை, port  city கட்டுப்பாட்டில் எடுக்கிறது என்று வாய் கிழிய கத்திய மேற்கு, ஹிந்தியை ஊடகங்கள், இப்பொது மூக்கை பொத்தினால் வாயை திறக்க தெரியாத அப்பாவிகளாக இருக்கிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நீங்கள், ஒரு முக்கிய விசயத்தை மறக்கப்படாது.....

நாம் இப்போது வைப்பது கோரிக்கை அல்ல.....

சிங்களவர் வாங்கிக் கொண்டிருப்பது கடன்.....

நாம் சொல்லப்போவது..... எமது பகுதியை விலை பேசி தந்து விடுங்கள்.

நாம்... தரும் பணத்தை வைத்து, உங்கள் கடனை கட்டி, நிம்மதியாக இருங்கள்.....

பணம் வாங்குவதால், முதல் அங்கீகாரம் சிங்களதேசத்தில் இருந்து தானே வரும்.

சிங்கப்பூரை பிரிந்து போகச் சொன்னதும், முதலில் அங்கீகரித்ததும், மலேசியா....

சிங்களவன், இந்தியன், எரிக் சோல்கைம், ஐ.நா. என்று...
எல்லாரும்... எம்மிடம், நீதி இருந்தும்.. கண்டு கொள்ளாமல்.
ஏமாற்றி, அளாப்பி... விட்டுப் போன இனம் தமிழினம்.

போதாக்குறைக்கு... கருணாநிதியும்.. 3 மணித்தியால உண்ணாவிரதம் இருந்து,
போர் முடிந்த கதையை.. சொல்லி ஏமாற்றியவர். 
நடந்த சம்பவங்களை, மறக்காமல் மீண்டும்...
பல பில்லியன் டொலர் கணக்கில், ஏமாற சொல்லாதீர்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

சிங்களவன், இந்தியன், எரிக் சோல்கைம், ஐ.நா. என்று...
எல்லாரும்... எம்மிடம், நீதி இருந்தும்.. கண்டு கொள்ளாமல்.
ஏமாற்றி, அளாப்பி... விட்டுப் போன இனம் தமிழினம்.

போதாக்குறைக்கு... கருணாநிதியும்.. 3 மணித்தியால உண்ணாவிரதம் இருந்து,
போர் முடிந்த கதையை.. சொல்லி ஏமாற்றியவர். 
நடந்த சம்பவங்களை, மறக்காமல் மீண்டும்...
பல பில்லியன் டொலர் கணக்கில், ஏமாற சொல்லாதீர்கள்.

பழைய கதையளை விடுவம்.

நீங்கள், காசை ரெடி பண்ணுங்கோ....

மிச்ச அலுவலை வெட்டி ஆட.... நான் ஆட்களை ரெடி பண்ணுறன்....

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

பழைய கதையளை விடுவம்.

நீங்கள், காசை ரெடி பண்ணுங்கோ....

மிச்ச அலுவலை வெட்டி ஆட.... நான் ஆட்களை ரெடி பண்ணுறன்....

நாதம்ஸ்.... நீங்கள், காசை ரெடி பண்ணுங்கோ,
நான்... ஆக்களை, ரெடி பண்ணுறன். 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

மொத்தத்தில்... நாடே, குத்தகைக்கு போகுது.
நல்ல காலம், பலாலி விமான நிலையம், தப்பீட்டுது. 

ரொம்பத்தான் சந்தோஷப்படாதீர்கள் சிறி! காசு பத்தாவிட்டால் இதையும் சேர்த்தே குத்தகைக்கு விடுவார்கள். எங்கட தலைகள் தடுப்பினம் என்றா நினைக்கிறீர்கள்? கேட்ப்பவனும் பலாலி சும்மாதானே கிடக்கு அதையும் ஒரு விலைபோட்டு தாங்கோ என்று கேட்டாப்போச்சு.

2 hours ago, தமிழ் சிறி said:
//கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.//

இவற்றை,  யாருக்கு... குத்தகைக்கு கொடுக்கப் போகின்றார்கள் என்று செய்தியில் இல்லை.
பங்கு  பிரிப்பதில்... இந்தியாவும்,  சீனாவும் புடுங்குப் படப் போகுதே...

ஏன் இதுக்குள்ள அநாமதேயமாய் நம்மவர்கள் புகுந்து விளையாடக்கூடாது? அவர்களுக்கு வேண்டியது பணம், அதை யார் கொடுத்தாலென்ன. தமிழன் என்று இனங்காட்டாமல் ஒரு நாட்டை வைத்து எடுக்கலாமே? நம்ம நிலங்களை பறித்தவன் நடு வீட்டில் நாம் குடியேற வேண்டும்!

Link to comment
Share on other sites

நல்லது.

பொருளாதாரம் இறைமை எல்லாவற்றையும் விட மேற்குலகின் நுளைவு மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும். அதுவே எமக்குத் தற்போது தேவையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

சிங்களவன், இந்தியன், எரிக் சோல்கைம், ஐ.நா. என்று...
எல்லாரும்... எம்மிடம், நீதி இருந்தும்.. கண்டு கொள்ளாமல்.
ஏமாற்றி, அளாப்பி... விட்டுப் போன இனம் தமிழினம்.

போதாக்குறைக்கு... கருணாநிதியும்.. 3 மணித்தியால உண்ணாவிரதம் இருந்து,
போர் முடிந்த கதையை.. சொல்லி ஏமாற்றியவர். 
நடந்த சம்பவங்களை, மறக்காமல் மீண்டும்...
பல பில்லியன் டொலர் கணக்கில், ஏமாற சொல்லாதீர்கள்.

பின்பக்கத்தில் சிங்களவன்  பலதடவை குறி இழுத்தும் மறந்து மறந்து குறி இழுவை வாங்க முடியடிப்பது நம்ம இனம் . உலகில் வேறு எந்த இனமும் குத்தகைக்கு எடுத்துபோகட்டும் சிங்களவன் நிம்மதியா இருப்பான் ஆனால் நாங்கள் வாங்கி விட்டம்  என்றால் எல்லா இனவாத சிங்களவன்களும் நித்திரை இல்லாமல் தமிழ்  இனத்துவேச கருத்துக்களை விஷம் கக்கும்  நாகம் போல் கக்கிக்கொண்டு  திரிவார்கள் சும்மா ஜஸ்டின் ரூடோ வேட்டி கட்டி தமிழர் மாதம் கொண்டாட கனடிய சிங்களவர்கள் எவ்வளவு தமிழர் எதிர்ப்பு துவேசம் கக்கினவர்கள்?

உடம்பு முழுக்க  தமிழர் இனவெறி  விஷம் கொண்ட நல்லபாம்பு  கூட்டம் அவசரப்பட்டு வாங்கிரம் என்று அவர்களை தூக்கி விட மறுபடியும் தங்கள் கோர முகத்தை காட்டுவார்கள் .

  • Like 5
Link to comment
Share on other sites

10 minutes ago, பெருமாள் said:

 ஆனால் நாங்கள் வாங்கி விட்டம்  என்றால் எல்லா இனவாத சிங்களவன்களும் நித்திரை இல்லாமல் தமிழ்  இனத்துவேச கருத்துக்களை விஷம் கக்கும்  நாகம் போல் கக்கிக்கொண்டு  திரிவார்கள்

குறை நினைக்க வேண்டாம், நாம் என்றால் புலத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளையும் சேர்த்தா ? 
அவர்கள் யாருக்குக் கணக்குக் காட்டுவார்கள் ? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

பின்பக்கத்தில் சிங்களவன்  பலதடவை குறி இழுத்தும் மறந்து மறந்து குறி இழுவை வாங்க முடியடிப்பது நம்ம இனம் . உலகில் வேறு எந்த இனமும் குத்தகைக்கு எடுத்துபோகட்டும் சிங்களவன் நிம்மதியா இருப்பான் ஆனால் நாங்கள் வாங்கி விட்டம்  என்றால் எல்லா இனவாத சிங்களவன்களும் நித்திரை இல்லாமல் தமிழ்  இனத்துவேச கருத்துக்களை விஷம் கக்கும்  நாகம் போல் கக்கிக்கொண்டு  திரிவார்கள் சும்மா ஜஸ்டின் ரூடோ வேட்டி கட்டி தமிழர் மாதம் கொண்டாட கனடிய சிங்களவர்கள் எவ்வளவு தமிழர் எதிர்ப்பு துவேசம் கக்கினவர்கள்?

உடம்பு முழுக்க  தமிழர் இனவெறி  விஷம் கொண்ட நல்லபாம்பு  கூட்டம் அவசரப்பட்டு வாங்கிரம் என்று அவர்களை தூக்கி விட மறுபடியும் தங்கள் கோர முகத்தை காட்டுவார்கள் .

பெருமாள்,

நீங்களும், சிறியரும் பழைய அனுபவங்களில் பேசுகிறீர்கள். சிங்களவன் மண்டைக்கனத்தில் இருந்த கால வேலைகள் வேறு,

இப்போதும் யாரு காசு தந்தாலும் பல்லை காட்டிக்கொண்டு வாங்கும், பிச்சப்பாத்திரம் உடன் நிக்கும் நிலைமை.

பழைய கதை நினைவில் கொண்டு, இதனை சரியாக கையாள்வதே நமது திறமை.

சந்தர்ப்பம், ஒருமுறை தான் வரும்.... சீனாக்காரன், இந்தியாக்காரன் வாங்குவதிலும், பார்க்க, தமிழர்கள் வாங்குவது, அவர்களுக்கும், தமிழர்களுக்கும் நல்லது.

கணக்க வேணாம்.... திண்ணையில் நம்ம ராசவன்னியரே... மெதுவா விலை பேசுறாரே....கவனித்தீர்களா? துபாய் எமிரோடை டீல் போடலாம்.... போல தான் தெரியுது... 😜

Edited by Nathamuni
  • Like 3
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.