Jump to content

8 பில்லியன் டொலர் குத்தகைக்கு பல சொத்துக்களை வழங்க அரசாங்கம் உத்தேசம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

8 பில்லியன் டொலர் குத்தகைக்கு பல சொத்துக்களை வழங்க அரசாங்கம் உத்தேசம்?

-சி.எல்.சிசில்-
பல பெறுமதி மிக்க அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் 8 பில்லியன் டொலர்களை உடனடியாகத் திரட்ட அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
mattala-300x168.jpg
குத்தகைக்கு முன்மொழியப்பட்ட சொத்துக்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவை அடங்கும். இவை நீண்ட கால குத்தகைக்கு விடப்படும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு துறைமுகத்தின் தெற்குப் பகுதி 600 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு அடிப்படையில் குத்தகைக்கு விடப்படவுள்ளதுடன் கொழும்பு துறைமுக நகரத்தில் அரசாங்கத்துக்கு சொந்தமான பங்கு 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளது.
மேலும், ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் அரசுக்குச் சொந்தமான தொகுதி 500 மில்லியன் டொலருக்கும், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் அரச பங்குகள் 300 மில்லியன் டொலருக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக ‘திவயின’ செய்தி வெளியிட்டுள்ளது.

 

https://thinakkural.lk/article/174324

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி சொல்லிய - bridging finance இன் ஒரு செயல் முறை வடிவம்.

பணம் வரும் வரைக்கும்  ஒன்றும் நிச்சயமில்லை, அனால் அநேகமாக, இவற்றில் ஈடுபடும் கம்பனிகளுக்கு கிரெடிட் வழங்கும் வகைகளுக்கு IMF இன் வசதிப்படுத்துதல் இருக்கும்.


இப்படியான இக்கட்டான நிலையில் IMF இன் ஈடுபாட்டை கோரினால், IMF இப்படித்தான் கடந்த காலங்களில் செய்து இருக்கிறது.

1997 -1998 கிழக்காசிய நிதி நெருக்கடி, thai bhat US dollar peg, US dollars இல்லாமையால் நீக்க வேண்டி வந்ததால், உதாரணம்.    

IMF இடம் செல்லும் போது பிடி இருக்க வேண்டும், சொறி சிங்களத்துக்கு அந்த வாய்ப்பும், நேரமும் இருந்தும்,  எல்லாவற்றையும் விட்டு, மூழ்கிம் நிலையில் IMF இடம் போய் இருக்கிறது.  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனெனில், அரசு, fiscal மற்றும் monetary கொள்கைகளை சீரமைத்து, முதல் படி எடுக்கும் வரையிலும் IMF தனது பண பரிவர்த்தனை செய்ய முடியாது.

அப்படி செய்யும் போது, , fiscal மற்றும் monetary கொள்கைகளை சீரமைத்து, IMF debt restructuring ஐ கடன் கொடுத்தவர்களோடு வசதிப்படுத்தும்.  

bridging finance, அதுவும் ஓர் அரசுக்கு இக்கட்டம்னா நிலையில், முக்கியமாக, ஓர் நாட்டின், அரசின் தேசிய வருமானம் உழைக்கும் சொத்துக்களை, சேவைகளை, பொதுவாக மேற்கு தனியார் கம்பனிகள், வங்கிகளின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வருவதில், IMF மறைமுக வசதிப்படுத்தல் பங்களிப்பு செய்யும்.

இதில்  ஹிந்தியை கம்பனிகளுக்கு இடம் உள்ளது.

மேற்கு, மற்றும் ஹிந்தியா வங்கிகள் கிரெடிட் வழங்கவும் இடம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில்... நாடே, குத்தகைக்கு போகுது.
நல்ல காலம், பலாலி விமான நிலையம், தப்பீட்டுது. 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

http://globaltamilnews.net/wp-content/uploads/2020/01/jaffna-airport-1024x576.jpg

மொத்தத்தில்... நாடே, குத்தகைக்கு போகுது.
நல்ல காலம், பலாலி விமான நிலையம், தப்பீட்டுது. 😜

இதுவே சரியான சந்தர்ப்பம்.... உங்கள் கடனை நாம் கட்டி முடிக்கிறோம்.... வடக்கு, கிழக்கை முழுமையாக விலை பேசி தாருங்கள்.

என்ன $20 - $25 பில்லியன் வருமா?

****

9 பில்லியன்.... 

எரியும் வீட்டில் புடுங்கிறது லாபம்..... என்று தான் பார்ப்பார்கள்.... இவர்கள் கேட்பதை யாரும் கொடுக்க போவதில்லை.

நானும், பலாலி ஆமி கேம்ப் இருக்கிற காணியை கேட்டு பார்ப்பம் என்று யோசனையில இருக்கிறன். மலிவா அமத்தலாம்.....

 

  • Like 3
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

இதுவே சரியான சந்தர்ப்பம்.... உங்கள் கடனை நாம் கட்டி முடிக்கிறோம்.... வடக்கு, கிழக்கை முழுமையாக விலை பேசி தாருங்கள்.

என்ன $20 - $25 பில்லியன் வருமா?

****

9 பில்லியன்.... 

எரியும் வீட்டில் புடுங்கிறது லாபம்..... என்று தான் பார்ப்பார்கள்.... இவர்கள் கேட்பதை யாரும் கொடுக்க போவதில்லை.

நானும், பலாலி ஆமி கேம்ப் இருக்கிற காணியை கேட்டு பார்ப்பம் என்று யோசனையில இருக்கிறன். மலிவா அமத்தலாம்.....

//கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.//

இவற்றை,  யாருக்கு... குத்தகைக்கு கொடுக்கப் போகின்றார்கள் என்று செய்தியில் இல்லை.
பங்கு  பிரிப்பதில்... இந்தியாவும்,  சீனாவும் புடுங்குப் படப் போகுதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:
//கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.//

இவற்றை,  யாருக்கு... குத்தகைக்கு கொடுக்கப் போகின்றார்கள் என்று செய்தியில் இல்லை.
பங்கு  பிரிப்பதில்... இந்தியாவும்,  சீனாவும் புடுங்குப் படப் போகுதே...

டென்டர் மூலம் குத்தகைக்கு விடுவார்களோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

டென்டர் மூலம் குத்தகைக்கு விடுவார்களோ தெரியவில்லை.

சீனாவுக்கும், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் தான்...  
போட்டி இருக்கும் என நம்புகின்றேன்.

மத்தள விமான நிலையத்தை எடுப்பதில்....  பெரும் போட்டி வரும்.
சீனா  அதனை, மற்றவர்களுக்கு  கிடைக்க விரும்பாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்டிக்கு எடுத்தவனும் 

குத்தகைக்கு விட்டவனும் மீண்டும் மீண்டதாக சரித்திரம் இல்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

சீனாவுக்கும், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் தான்...  
போட்டி இருக்கும் என நம்புகின்றேன்.

மத்தள விமான நிலையத்தை எடுப்பதில்....  பெரும் போட்டி வரும்.
சீனா  அதனை, மற்றவர்களுக்கு  கிடைக்க விரும்பாது.

கடந்த அரசில், மத்தள விமான நிலையம், நெல் களஞ்சியமாக ஆக இருந்தது.

யுத்த வெற்றி மமதையில், 10ம் வகுப்பு படித்த, எங்கண்ட மகிந்த, பக்கத்தில, ஒரு படிச்ச ஆட்களையும் வைத்து முடிவு செய்யாமல், தானே முடிவு செய்து, கடனை, உடனை வாங்கி கட்டுநாயக்காவில் ஒன்று இருக்க கூடியதாக, மத்தளவில்.... கட்டினது.

உந்த பணக்கார இங்கிலாந்தில், லிவர்பூல், பர்மிங்காம், வேல்ஸ் போன்ற 100 - 200 மைலுக்கு மேல உள்ள இடங்களில் இருந்து ஹீத்ரோ ஓடி வருவார்கள்.... பிளேன் பிடிக்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இதுவே சரியான சந்தர்ப்பம்.... உங்கள் கடனை நாம் கட்டி முடிக்கிறோம்.... வடக்கு, கிழக்கை முழுமையாக விலை பேசி தாருங்கள்.

என்ன $20 - $25 பில்லியன் வருமா?

****

9 பில்லியன்.... 

எரியும் வீட்டில் புடுங்கிறது லாபம்..... என்று தான் பார்ப்பார்கள்.... இவர்கள் கேட்பதை யாரும் கொடுக்க போவதில்லை.

நானும், பலாலி ஆமி கேம்ப் இருக்கிற காணியை கேட்டு பார்ப்பம் என்று யோசனையில இருக்கிறன். மலிவா அமத்தலாம்.....

 

யூதர்கள் மாதிரி தமிழ் செல்வந்தர்கள் காணிகளை வாங்கலாம் ( சிங்களவன் எப்பம் விட்ட காணிகளை). சுபாஸ்கரன் பிரான்சில் கால்பந்தணியை வாங்கிவதற்கு பதில் இலங்கையில் காணிகளை வாங்கலாம்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ragaa said:

யூதர்கள் மாதிரி தமிழ் செல்வந்தர்கள் காணிகளை வாங்கலாம் ( சிங்களவன் எப்பம் விட்ட காணிகளை). சுபாஸ்கரன் பிரான்சில் கால்பந்தணியை வாங்கிவதற்கு பதில் இலங்கையில் காணிகளை வாங்கலாம்.

நான் பகிடிக்கு சொல்லவில்லை.....

விலை பேச வேண்டும்...... ஜநா முன்னிலையில் உடன்படிக்கை இடவேண்டும்.....

காசு? தவணை முறையில் கட்டி முடிக்கலாம், ஒரே தடவையாக அல்ல...

உலகத் தமிழர் அணைவருமே, தமிழருக்கு ஒரு நாடாயின்...... ஆளுக்கு பத்து டொலர் போட்டாலே..... போதும்.

மேலும்...... பிற அரசுகளிடம், புதிய நாடு, கடன் வாங்க முடியும்.....

தேவை..... யூதர்கள் சிந்தணை.....

இதுக்கு தான் சொன்னேன்..... புலம் பெயர் தமிழரிடையே ஜனநாயக தேர்தலில் தேர்ந்து எடுக்கப்பட்ட, நாடு கடந்த தமிழீழ அரசின் வகிபாகம் முக்கியமானது....

Edited by Nathamuni
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3 minutes ago, Nathamuni said:

நான் பகிடிக்கு சொல்லவில்லை.....

விலை பேச வேண்டும்...... ஜநா முன்னிலையில் உடன்படிக்கை இடவேண்டும்.....

காசு? தவணை முறையில் கட்டி முடிக்கலாம், ஒரே தடவையாக அல்ல...

உலகத் தமிழர் அணைவருமே, தமிழருக்கு ஒரு நாடாயின்...... ஆளுக்கு பத்து டொலர் போட்டாலே..... போதும்.

மேலும்...... பிற அரசுகளிடம், புதிய நாடு, கடன் வாங்க முடியும்.....

தேவை..... யூதர்கள் சிந்தணை.....

இதுக்கு தான் சொன்னேன்..... புலம் பெயர் தமிழரிடையே ஜனநாயக தேர்தலில் தேர்ந்து எடுக்கப்பட்ட, நாடு கடந்த தமிழீழ அரசின் வகிபாகம் முக்கியமானது....

ஒப்பந்தங்களை... கிழித்து எறிவதில்  சிங்களவன் ... விண்ணன்.
இது ஜே. ஆர். ஜெயவர்த்தனா காலத்தில் இருந்து, 
13´ம் திருத்த சட்டம், மட்டும் தொடர் கதை.
அதை இந்தியா கூட தட்டிக் கேட்க முடியாத அளவு, 
"தில்" லானாவான் சிங்களவன்.

ஐ.நா. பெரிய அரிச்சந்திரன் என்ற நினைப்போ....
அதுகும்... பலமுள்ளவன் பக்கம் சாயும், ஒரு வெத்து வேட்டு. 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

 

ஒப்பந்தங்களை... கிழித்து எறிவதில்  சிங்களவன் ... விண்ணன்.
இது ஜே. ஆர். ஜெயவர்த்தனா காலத்தில் இருந்து, 
13´ம் திருத்த சட்டம், மட்டும் தொடர் கதை.
அதை இந்தியா கூட தட்டிக் கேட்க முடியாத அளவு, 
"தில்" லானாவான் சிங்களவன்.

ஐ.நா. பெரிய அரிச்சந்திரன் என்ற நினைப்போ....
அதுகும்... பலமுள்ளவன் பக்கம் சாயும், ஒரு வெத்து வேட்டு. 

அப்ப கேட்டது..... பிச்சை..... இப்ப...வாயில தோசை.... கையில காசு!

ஜநா, பிரகடனம் இல்லாமல், ஈழம் பாஸ்போட் செல்லாது....

மேலும்..... தமிழக மக்கள் அழுத்தத்தில், இந்தியா அங்கீகாரம் செய்தால்..... பிறகு.... பிக்குகள் உடன்படிக்கையை.... கிழித்தால் என்ன, எரித்தால் என்ன ?

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

வாயில தோசை.... கையில காசு!

ஜநா, பிரகடனம் இல்லாமல், ஈழம் பாஸ்போட் செல்லாது....

மேலும்..... தமிழக மக்கள் அழுத்தத்தில், இந்தியா அங்கீகாரம் செய்தால்..... பிறகு.... பிக்குகள் உடன்படிக்கையை.... கிழித்தால் என்ன, எரித்தால் என்ன ?

 இந்தியா அங்கீகாரம் செய்தால்.....  என்பது,
அத்தைக்கு... மீசை முளைத்த கதை, நாதம்ஸ். 😜

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

 இந்தியா அங்கீகாரம் செய்தால்.....  என்பது,
அத்தைக்கு... மீசை முளைத்த கதை, நாதம்ஸ். 😜

நீங்கள், ஒரு முக்கிய விசயத்தை மறக்கப்படாது.....

நாம் இப்போது வைப்பது கோரிக்கை அல்ல.....

சிங்களவர் வாங்கிக் கொண்டிருப்பது கடன்.....

நாம் சொல்லப்போவது..... எமது பகுதியை விலை பேசி தந்து விடுங்கள்.

நாம்... தரும் பணத்தை வைத்து, உங்கள் கடனை கட்டி, நிம்மதியாக இருங்கள்.....

ஏனைனில் இலங்கை, இனி கடன் பெறவே முடியாது...... கடன் கட்டவும் மார்க்கம் இல்லை....

பணம் வாங்குவதால், முதல் அங்கீகாரம் சிங்களதேசத்தில் இருந்து தானே வரும்.

சிங்கப்பூரை பிரிந்து போகச் சொன்னதும், முதலில் அங்கீகரித்ததும், மலேசியா....

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன கம்பனிகளுக்கு, சீன வங்கிகளே பணம் கொடுக்க முடியும், auditing சீனாவுக்குள் இருப்பதால்.

இந்த bridging finance, IMF இன் ஆரம்ப நிபந்தனையாக (memorandaum of understanding), அதாவது IMF க்கும் ஏற்ற தெரிவுகள் (மேற்கு, கிந்திய கம்பனிகள், வங்கிகளுடன்) தான் இருக்க செய்ய வேண்டும் என்பது.

சீனாவின் BRI, சீன அம்பாந்தோட்டையை, port  city கட்டுப்பாட்டில் எடுக்கிறது என்று வாய் கிழிய கத்திய மேற்கு, ஹிந்தியை ஊடகங்கள், இப்பொது மூக்கை பொத்தினால் வாயை திறக்க தெரியாத அப்பாவிகளாக இருக்கிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நீங்கள், ஒரு முக்கிய விசயத்தை மறக்கப்படாது.....

நாம் இப்போது வைப்பது கோரிக்கை அல்ல.....

சிங்களவர் வாங்கிக் கொண்டிருப்பது கடன்.....

நாம் சொல்லப்போவது..... எமது பகுதியை விலை பேசி தந்து விடுங்கள்.

நாம்... தரும் பணத்தை வைத்து, உங்கள் கடனை கட்டி, நிம்மதியாக இருங்கள்.....

பணம் வாங்குவதால், முதல் அங்கீகாரம் சிங்களதேசத்தில் இருந்து தானே வரும்.

சிங்கப்பூரை பிரிந்து போகச் சொன்னதும், முதலில் அங்கீகரித்ததும், மலேசியா....

சிங்களவன், இந்தியன், எரிக் சோல்கைம், ஐ.நா. என்று...
எல்லாரும்... எம்மிடம், நீதி இருந்தும்.. கண்டு கொள்ளாமல்.
ஏமாற்றி, அளாப்பி... விட்டுப் போன இனம் தமிழினம்.

போதாக்குறைக்கு... கருணாநிதியும்.. 3 மணித்தியால உண்ணாவிரதம் இருந்து,
போர் முடிந்த கதையை.. சொல்லி ஏமாற்றியவர். 
நடந்த சம்பவங்களை, மறக்காமல் மீண்டும்...
பல பில்லியன் டொலர் கணக்கில், ஏமாற சொல்லாதீர்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

சிங்களவன், இந்தியன், எரிக் சோல்கைம், ஐ.நா. என்று...
எல்லாரும்... எம்மிடம், நீதி இருந்தும்.. கண்டு கொள்ளாமல்.
ஏமாற்றி, அளாப்பி... விட்டுப் போன இனம் தமிழினம்.

போதாக்குறைக்கு... கருணாநிதியும்.. 3 மணித்தியால உண்ணாவிரதம் இருந்து,
போர் முடிந்த கதையை.. சொல்லி ஏமாற்றியவர். 
நடந்த சம்பவங்களை, மறக்காமல் மீண்டும்...
பல பில்லியன் டொலர் கணக்கில், ஏமாற சொல்லாதீர்கள்.

பழைய கதையளை விடுவம்.

நீங்கள், காசை ரெடி பண்ணுங்கோ....

மிச்ச அலுவலை வெட்டி ஆட.... நான் ஆட்களை ரெடி பண்ணுறன்....

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

பழைய கதையளை விடுவம்.

நீங்கள், காசை ரெடி பண்ணுங்கோ....

மிச்ச அலுவலை வெட்டி ஆட.... நான் ஆட்களை ரெடி பண்ணுறன்....

நாதம்ஸ்.... நீங்கள், காசை ரெடி பண்ணுங்கோ,
நான்... ஆக்களை, ரெடி பண்ணுறன். 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

மொத்தத்தில்... நாடே, குத்தகைக்கு போகுது.
நல்ல காலம், பலாலி விமான நிலையம், தப்பீட்டுது. 

ரொம்பத்தான் சந்தோஷப்படாதீர்கள் சிறி! காசு பத்தாவிட்டால் இதையும் சேர்த்தே குத்தகைக்கு விடுவார்கள். எங்கட தலைகள் தடுப்பினம் என்றா நினைக்கிறீர்கள்? கேட்ப்பவனும் பலாலி சும்மாதானே கிடக்கு அதையும் ஒரு விலைபோட்டு தாங்கோ என்று கேட்டாப்போச்சு.

2 hours ago, தமிழ் சிறி said:
//கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.//

இவற்றை,  யாருக்கு... குத்தகைக்கு கொடுக்கப் போகின்றார்கள் என்று செய்தியில் இல்லை.
பங்கு  பிரிப்பதில்... இந்தியாவும்,  சீனாவும் புடுங்குப் படப் போகுதே...

ஏன் இதுக்குள்ள அநாமதேயமாய் நம்மவர்கள் புகுந்து விளையாடக்கூடாது? அவர்களுக்கு வேண்டியது பணம், அதை யார் கொடுத்தாலென்ன. தமிழன் என்று இனங்காட்டாமல் ஒரு நாட்டை வைத்து எடுக்கலாமே? நம்ம நிலங்களை பறித்தவன் நடு வீட்டில் நாம் குடியேற வேண்டும்!

Link to comment
Share on other sites

நல்லது.

பொருளாதாரம் இறைமை எல்லாவற்றையும் விட மேற்குலகின் நுளைவு மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும். அதுவே எமக்குத் தற்போது தேவையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

சிங்களவன், இந்தியன், எரிக் சோல்கைம், ஐ.நா. என்று...
எல்லாரும்... எம்மிடம், நீதி இருந்தும்.. கண்டு கொள்ளாமல்.
ஏமாற்றி, அளாப்பி... விட்டுப் போன இனம் தமிழினம்.

போதாக்குறைக்கு... கருணாநிதியும்.. 3 மணித்தியால உண்ணாவிரதம் இருந்து,
போர் முடிந்த கதையை.. சொல்லி ஏமாற்றியவர். 
நடந்த சம்பவங்களை, மறக்காமல் மீண்டும்...
பல பில்லியன் டொலர் கணக்கில், ஏமாற சொல்லாதீர்கள்.

பின்பக்கத்தில் சிங்களவன்  பலதடவை குறி இழுத்தும் மறந்து மறந்து குறி இழுவை வாங்க முடியடிப்பது நம்ம இனம் . உலகில் வேறு எந்த இனமும் குத்தகைக்கு எடுத்துபோகட்டும் சிங்களவன் நிம்மதியா இருப்பான் ஆனால் நாங்கள் வாங்கி விட்டம்  என்றால் எல்லா இனவாத சிங்களவன்களும் நித்திரை இல்லாமல் தமிழ்  இனத்துவேச கருத்துக்களை விஷம் கக்கும்  நாகம் போல் கக்கிக்கொண்டு  திரிவார்கள் சும்மா ஜஸ்டின் ரூடோ வேட்டி கட்டி தமிழர் மாதம் கொண்டாட கனடிய சிங்களவர்கள் எவ்வளவு தமிழர் எதிர்ப்பு துவேசம் கக்கினவர்கள்?

உடம்பு முழுக்க  தமிழர் இனவெறி  விஷம் கொண்ட நல்லபாம்பு  கூட்டம் அவசரப்பட்டு வாங்கிரம் என்று அவர்களை தூக்கி விட மறுபடியும் தங்கள் கோர முகத்தை காட்டுவார்கள் .

  • Like 5
Link to comment
Share on other sites

10 minutes ago, பெருமாள் said:

 ஆனால் நாங்கள் வாங்கி விட்டம்  என்றால் எல்லா இனவாத சிங்களவன்களும் நித்திரை இல்லாமல் தமிழ்  இனத்துவேச கருத்துக்களை விஷம் கக்கும்  நாகம் போல் கக்கிக்கொண்டு  திரிவார்கள்

குறை நினைக்க வேண்டாம், நாம் என்றால் புலத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளையும் சேர்த்தா ? 
அவர்கள் யாருக்குக் கணக்குக் காட்டுவார்கள் ? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

பின்பக்கத்தில் சிங்களவன்  பலதடவை குறி இழுத்தும் மறந்து மறந்து குறி இழுவை வாங்க முடியடிப்பது நம்ம இனம் . உலகில் வேறு எந்த இனமும் குத்தகைக்கு எடுத்துபோகட்டும் சிங்களவன் நிம்மதியா இருப்பான் ஆனால் நாங்கள் வாங்கி விட்டம்  என்றால் எல்லா இனவாத சிங்களவன்களும் நித்திரை இல்லாமல் தமிழ்  இனத்துவேச கருத்துக்களை விஷம் கக்கும்  நாகம் போல் கக்கிக்கொண்டு  திரிவார்கள் சும்மா ஜஸ்டின் ரூடோ வேட்டி கட்டி தமிழர் மாதம் கொண்டாட கனடிய சிங்களவர்கள் எவ்வளவு தமிழர் எதிர்ப்பு துவேசம் கக்கினவர்கள்?

உடம்பு முழுக்க  தமிழர் இனவெறி  விஷம் கொண்ட நல்லபாம்பு  கூட்டம் அவசரப்பட்டு வாங்கிரம் என்று அவர்களை தூக்கி விட மறுபடியும் தங்கள் கோர முகத்தை காட்டுவார்கள் .

பெருமாள்,

நீங்களும், சிறியரும் பழைய அனுபவங்களில் பேசுகிறீர்கள். சிங்களவன் மண்டைக்கனத்தில் இருந்த கால வேலைகள் வேறு,

இப்போதும் யாரு காசு தந்தாலும் பல்லை காட்டிக்கொண்டு வாங்கும், பிச்சப்பாத்திரம் உடன் நிக்கும் நிலைமை.

பழைய கதை நினைவில் கொண்டு, இதனை சரியாக கையாள்வதே நமது திறமை.

சந்தர்ப்பம், ஒருமுறை தான் வரும்.... சீனாக்காரன், இந்தியாக்காரன் வாங்குவதிலும், பார்க்க, தமிழர்கள் வாங்குவது, அவர்களுக்கும், தமிழர்களுக்கும் நல்லது.

கணக்க வேணாம்.... திண்ணையில் நம்ம ராசவன்னியரே... மெதுவா விலை பேசுறாரே....கவனித்தீர்களா? துபாய் எமிரோடை டீல் போடலாம்.... போல தான் தெரியுது... 😜

Edited by Nathamuni
  • Like 3
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.