Jump to content

8 பில்லியன் டொலர் குத்தகைக்கு பல சொத்துக்களை வழங்க அரசாங்கம் உத்தேசம்?


Recommended Posts

4 minutes ago, Nathamuni said:

 

சந்தர்ப்பம், ஒருமுறை தான் வரும்.... சீனாக்காரன், இந்தியாக்காரன் வாங்குவதிலும், பார்க்க, தமிழர்கள் வாங்குவது, அவர்களுக்கும், தமிழர்களுக்கும் நல்லது.

 

நல்லதுதான்.

முன்னர் கேட்ட அதே கேள்வியைத்தான் உங்களிடமும் கேட்கிறேன். வாங்கும் தமிழர்கள் யார் ? துரோகிப் பட்டம் கொடுப்பவர்களா ? துரோகிப் பட்டம் வாங்கியவர்களா ? ஏனென்றால் வெளிநாட்டில் இரண்டையும் தவிர தமிழர் தரப்பு என்று ஒன்றும் கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

ஏனெனில், அரசு, fiscal மற்றும் monetary கொள்கைகளை சீரமைத்து, முதல் படி எடுக்கும் வரையிலும் IMF தனது பண பரிவர்த்தனை செய்ய முடியாது.

அப்படி செய்யும் போது, , fiscal மற்றும் monetary கொள்கைகளை சீரமைத்து, IMF debt restructuring ஐ கடன் கொடுத்தவர்களோடு வசதிப்படுத்தும்.  

bridging finance, அதுவும் ஓர் அரசுக்கு இக்கட்டம்னா நிலையில், முக்கியமாக, ஓர் நாட்டின், அரசின் தேசிய வருமானம் உழைக்கும் சொத்துக்களை, சேவைகளை, பொதுவாக மேற்கு தனியார் கம்பனிகள், வங்கிகளின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வருவதில், IMF மறைமுக வசதிப்படுத்தல் பங்களிப்பு செய்யும்.

இதில்  ஹிந்தியை கம்பனிகளுக்கு இடம் உள்ளது.

மேற்கு, மற்றும் ஹிந்தியா வங்கிகள் கிரெடிட் வழங்கவும் இடம் இருக்கிறது.

கடஞ்சா,

இலங்கை தவிர ஆரக்குறைய 30 வளர்ந்து வரும் நாடுகள் ஏறக்குறைய வங்குரோத்து நிலைமையை அடைந்துவிட்டதாக வரும் தகவல்கள் சரியானவையா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, இணையவன் said:

குறை நினைக்க வேண்டாம், நாம் என்றால் புலத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளையும் சேர்த்தா ? 
அவர்கள் யாருக்குக் கணக்குக் காட்டுவார்கள் ? 🤣

அந்த தலைவனின் காலத்துக்கு பிறகு ஒற்றுமை என்பது கிடையாது தேவையற்று காசை சிங்களவனிடம் ஏன் இழப்பான் .

கணக்கு காட்டுவம் என்றவர்கள் தான் முன்னுக்கு போய் நிக்கினம் கண்ணுக்கு முன்னாள் எம்மை அழித்தவன் படும் பாட்டை பார்த்தாவது திருந்தட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்.... நீங்கள், காசை ரெடி பண்ணுங்கோ,
நான்... ஆக்களை, ரெடி பண்ணுறன். 😂 🤣

எதுக்கும், கவலைப்படாதீங்கோ....

இன்னும், சிங்களத்துக்கு, ஆப்பு இருக்கு.... சரியான நேரத்தில், களம் இறங்குவோம்.

18 minutes ago, இணையவன் said:

நல்லதுதான்.

முன்னர் கேட்ட அதே கேள்வியைத்தான் உங்களிடமும் கேட்கிறேன். வாங்கும் தமிழர்கள் யார் ? துரோகிப் பட்டம் கொடுப்பவர்களா ? துரோகிப் பட்டம் வாங்கியவர்களா ? ஏனென்றால் வெளிநாட்டில் இரண்டையும் தவிர தமிழர் தரப்பு என்று ஒன்றும் கிடையாது.

சிங்கள மக்கள், பழைய அரசியல் வாதிகளை ஓரம் கட்டுவது போலவே, நாமும், பழைய கோஸ்ட்டிகளை ஓரம் கட்டி விட்டு, புதிய இலங்கை அரசுடன் பேசுவோம்.

சிலவேளை, அவர்களும், 13+ கடாசி விட்டு, நன்கு விட்டுக் கொடுத்து, எமது உரிமையினை, அங்கீகரிக்க கூடும்.

காரணம், சீனாக்காரன், இந்தியன் உடன் பிச்சை பாத்திரம் கொண்டு, நாட்டினை வியாபாரம் செய்வதிலும், தமிழர்களுடன் சமாதானமாக போவது, அவர்களுக்கு நல்லது என்பதை உணரும் காலமிது.  

 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

சிங்கள மக்கள், பழைய அரசியல் வாதிகளை ஓரம் கட்டுவது போலவே, நாமும், பழைய கோஸ்ட்டிகளை ஓரம் கட்டி விட்டு, புதிய இலங்கை அரசுடன் பேசுவோம்.

சிலவேளை, அவர்களும், 13+ கடாசி விட்டு, நன்கு விட்டுக் கொடுத்து, எமது உரிமையினை, அங்கீகரிக்க கூடும்.

காரணம், சீனாக்காரன், இந்தியன் உடன் பிச்சை பாத்திரம் கொண்டு, நாட்டினை வியாபாரம் செய்வதிலும், தமிழர்களுடன் சமாதானமாக போவது, அவர்களுக்கு நல்லது என்பதை உணரும் காலமிது.  

 

இனவெறி  எனும் அரசியல் ஆயுதம் இருக்கும் வரைக்கும் தமிழருக்கான அங்கீகரிப்புகள் சாத்தியமா நாதமுனியாரே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இனவெறி  எனும் அரசியல் ஆயுதம் இருக்கும் வரைக்கும் தமிழருக்கான அங்கீகரிப்புகள் சாத்தியமா நாதமுனியாரே? 

அதைத்தான் சொல்கிறேனே....

பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் மணிமுடியில் இருந்த இந்தியா எனும் வைரக்கல் விழ, விழுந்த அடி, காந்தியினால் அல்ல... உங்கள் ஊர் ஹிட்லரினால்.....

அதுபோலம் சிங்கள இனவாதம் சுருண்டு விழ.... இப்போது மண்டையில் அடி விழுகிறது....

அது இன்னும், மோசமாக இறுகும் போது, இனவாதம் பேசாது.... பசி வந்தால் பத்தும் பறந்து போகும்...

சிங்களவர்களுக்கு வந்திருப்பது பசி மட்டுமல்ல.... நாடே விலைக்கு போகப்போகிறது என்று பயம்...

அனைத்துக்குமே ஒரு முடிவு இல்லாமல் இழு படாது என்பது இயற்கை நியதி.

போர்த்துகேயன், ஒல்லாந்தன், ஆங்கிலேயன், சிங்களவன், இடையே இந்தியன் (1987 - 90).....

ஒவொருவருக்கும் ஒரு முடிவு வந்தது போலவேம் சிங்களத்து ஆட்சிக்கு முடிவு நிச்சயம் உண்டு.  

****

2007ம் ஆண்டு, sunday leader ஆங்கில பத்திரிகையில் இலங்கையில் இருந்து வெளியே செல்லும் ஒரு ராஜதந்திரி, புனை பெயரில் (ஆங்கில பெயர்தான்), தான் அவதானித்ததை எழுதி சென்றார்.

உங்கள் பேரினவாதம், ஒரு நாள் உங்கள் முகத்தில் பலமாக அடிக்கும். அப்போதும் உங்களுக்கு உதவ யாரும் இருக்க மாட்டார்கள்.

அந்த நேரத்தில், உங்கள் அரசியல் வாதிகள் கை விட்டு ஓடி விடுவார்கள். மிகுதியை பொறுக்கி எடுத்து, நீங்கள் எழுந்திருப்பது, மிகவும் கடினமாகவே இருக்கும்.

யார் கேட்டார்கள் அப்போது?

***

https://www.colombotelegraph.com/index.php/downfall-of-sri-lanka-started-in-1948-accelerated-in-1978-completed-in-2022/

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

நல்லதுதான்.

முன்னர் கேட்ட அதே கேள்வியைத்தான் உங்களிடமும் கேட்கிறேன். வாங்கும் தமிழர்கள் யார் ? துரோகிப் பட்டம் கொடுப்பவர்களா ? துரோகிப் பட்டம் வாங்கியவர்களா ? ஏனென்றால் வெளிநாட்டில் இரண்டையும் தவிர தமிழர் தரப்பு என்று ஒன்றும் கிடையாது.

தீர்வை தேடாமல் பிரச்சினைகளை பிளவுகளை Focus செய்யும் இனம் உருப்பட வாய்ப்பில்லை சகோ. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இப்படியே கதைத்துக்கொண்டிருக்க, நித்தியானந்தா இலங்கையை வாங்கப்போவதாக ஒரு செய்தி உலாவுது. 😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, vaasi said:

நாங்கள் இப்படியே கதைத்துக்கொண்டிருக்க, நித்தியானந்தா இலங்கையை வாங்கப்போவதாக ஒரு செய்தி உலாவுது. 😀

நித்தி வாங்கினால் பாலும் தேனும் ஓடும்தானே...நாங்களும்  காலிடேயில் போய் குளிச்சிட்டு வரலாம்தானே..😆

Edited by alvayan
Link to comment
Share on other sites

இன்று ஒரு புலம்  பெயர்ந்த சிங்களவரிடம் சிறிது பேச முடிந்தது.
அவர் தான் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவராம். காணிக்குள் உள்ளவற்றை விறகில் தீ மூட்டி சமைத்து சாப்பிட்டு இருக்கலாம் என்றார்.  கொழும்பு போன்ற நகரங்களில் உள்ளவர்களுக்கு தான் மின்சாரம் ,  வாயு அடுப்பு என்று பிரச்சனைகள் பல என்றார்.
மகிந்தவும் சகோதரர்களும் மக்களின் பணத்தை கொள்ளை அடித்துள்ளார்கள். பதவி விலக்கலாம் தானே என்றேன்.
பல மில்லியனை கொள்ளை அடித்துள்ளார்கள்.கணக்கு காட்டுகிறார்கள் இல்லை என்றார்.
அப்போ ரனில், சஜித் போன்றோரை  நாட்டின் தலைவராக்கலாம் தானே என்றேன்.
ஒரு செக்கனும் யோசிக்காமல் வடக்கையும் கிழக்கையும் பிரித்து தமிழர்களிடம் கொடுத்து விடுவார்கள்.அவர்கள் வேண்டாம் என்றார். சாமானியனே இப்படி என்றால்……

  • Like 1
  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nunavilan said:

இன்று ஒரு புலம்  பெயர்ந்த சிங்களவரிடம் சிறிது பேச முடிந்தது.
அவர் தான் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவராம். காணிக்குள் உள்ளவற்றை விறகில் தீ மூட்டி சமைத்து சாப்பிட்டு இருக்கலாம் என்றார்.  கொழும்பு போன்ற நகரங்களில் உள்ளவர்களுக்கு தான் மின்சாரம் ,  வாயு அடுப்பு என்று பிரச்சனைகள் பல என்றார்.
மகிந்தவும் சகோதரர்களும் மக்களின் பணத்தை கொள்ளை அடித்துள்ளார்கள். பதவி விலக்கலாம் தானே என்றேன்.
பல மில்லியனை கொள்ளை அடித்துள்ளார்கள்.கணக்கு காட்டுகிறார்கள் இல்லை என்றார்.
அப்போ ரனில், சஜித் போன்றோரை  நாட்டின் தலைவராக்கலாம் தானே என்றேன்.
ஒரு செக்கனும் யோசிக்காமல் வடக்கையும் கிழக்கையும் பிரித்து தமிழர்களிடம் கொடுத்து விடுவார்கள்.அவர்கள் வேண்டாம் என்றார். சாமானியனே இப்படி என்றால்……

இது தான் உண்மை. வயிறு நிரம்பியவுடன் பழைய கிழவி பவுடர் போட்டு **** வாடி என்று பேரினவாத பூதம் கிளம்பிவிடும். இங்கு தமிழர் தரப்பு செய்யவேண்டியது சும்மா நிண்டு வேடிக்கை பார்ப்பது மட்டுமே!

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

நித்தி வாங்கினால் பாலும் தேனும் ஓடும்தானே...நாங்களும்  காலிடேயில் போய் குளிச்சிட்டு வரலாம்தானே..😆

இப்படி நீங்கள் செல்லிறீங்க. அங்க ஹிசபுல்லா ரெடியா இருக்கார். அவரிட்ட அரபு சேக் பணமுள்ளது. அங்க போய் ஒரு அரபு சேக்கிடம் கதைத்து ஒரு இஸ்லாமிய கம்பஸ் கட்டும் அளவிற்க்கு பணம் வாங்கி வந்தார். கட்டியும் முடித்தார். இப்படி நாடு விற்பனக்கு வந்தால், அவர் உடனடியாக காசு கொடுத்து வாங்க ரெடி. அரபு பணத்துடன் மோத முடியாது. மாசா அல்லா என்று அள்ளி கொடுக்க அவர்கள் தயார். 

ஒரு குவைத் தினான் 1000 மேல் போகுது. ஒரு இங்கிலந்து பவுன்ஸ் என்ன் 420 தான். வாங்கினார் என்ன்றால் எங்கட கிழக்கு மாகண தமிழர்கள் எங்கே போவார்கள்? ஈச்சரங்கள் எல்லால் இறச்சி கடையாகும். ராசாக்களே கோவில்கள் எல்லாம் மதரசாக்கள் ஆகிரும்.

நாங்கள்தான் அவர்களை தமிழர்கள் என்கிறேம். ஒழுவில் பிரகடனத்தில் நாங்கள் வேட்டி வீசப்பட்ட நுனித்தோலுக்கு ஒப்பிடப்ப்ட்டுள்ளேம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இன்று ஒரு புலம்  பெயர்ந்த சிங்களவரிடம் சிறிது பேச முடிந்தது.
அவர் தான் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவராம். காணிக்குள் உள்ளவற்றை விறகில் தீ மூட்டி சமைத்து சாப்பிட்டு இருக்கலாம் என்றார்.  கொழும்பு போன்ற நகரங்களில் உள்ளவர்களுக்கு தான் மின்சாரம் ,  வாயு அடுப்பு என்று பிரச்சனைகள் பல என்றார்.
மகிந்தவும் சகோதரர்களும் மக்களின் பணத்தை கொள்ளை அடித்துள்ளார்கள். பதவி விலக்கலாம் தானே என்றேன்.
பல மில்லியனை கொள்ளை அடித்துள்ளார்கள்.கணக்கு காட்டுகிறார்கள் இல்லை என்றார்.
அப்போ ரனில், சஜித் போன்றோரை  நாட்டின் தலைவராக்கலாம் தானே என்றேன்.
ஒரு செக்கனும் யோசிக்காமல் வடக்கையும் கிழக்கையும் பிரித்து தமிழர்களிடம் கொடுத்து விடுவார்கள்.அவர்கள் வேண்டாம் என்றார். சாமானியனே இப்படி என்றால்……

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் அந்த சிங்களவரின் கருத்து இருந்தது. இனவெறி என்பது அவர்கள் இரத்ததில் ஊறியது. உழுது போட்டாலும் திருந்த மாட்டார்கள். இவர்களிடம் எம் விடுதலையை அது அரசியல் உரிமைகளாக இருந்தாலும் சரி அல்லது தனி நிலமாக இருந்தாலும் சரி அடித்து/அடாத்தாக பெற்றால் ஒழிய வேறுவழியில்லை என்பதை உணர்த்துகின்றார்கள்.

நானும் ஒருவகை தமிழன் எனும் வெறியன் தான். ஆனால் மற்றவனுடையதை பறிக்கும் /பதுக்கும் எண்ணம் இல்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

தீர்வை தேடாமல் பிரச்சினைகளை பிளவுகளை Focus செய்யும் இனம் உருப்பட வாய்ப்பில்லை சகோ. 

ஈழத்தமிழர் போராட்டம் பாணுக்கும் பருப்புக்குமான போராட்டம் இல்லை என்பதை முதலில் எம்மவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

5 hours ago, விசுகு said:

தீர்வை தேடாமல் பிரச்சினைகளை பிளவுகளை Focus செய்யும் இனம் உருப்பட வாய்ப்பில்லை சகோ. 

பிளவுகளுடன் தீர்வை நோக்கி எவ்வாறு நகர முடியும் ? எங்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். எதிரியுடன் பேசும்போது உள்பிரச்சனைகளைப் புறம்தள்ளிய ஒற்றுமை வேண்டும். அது எம்மிடம் இல்லை. அது தவிர வெளிநாட்டில் எமக்கான அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் எதுவும் இல்லை.

56 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர் போராட்டம் பாணுக்கும் பருப்புக்குமான போராட்டம் இல்லை என்பதை முதலில் எம்மவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

ஈழத் தமிழர் போராட்டம் என்று ஒன்று உள்ளதா ? அது எங்கே, அதை யார் நடத்துகிறார்கள் ? நான் அறிந்த வகையில் இலங்கையில் அது முற்றாக இல்லை. வெளிநாட்டில் யாராவது செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால் விபரம் தாருங்கள்.

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொருளாதார பிரச்சினை ஐ எம் எப் இடம் போவதால் தீர்க்கப்படப்போவதில்லை, இலங்கையின் கிரடிட் ரேட்டிங் குறைய குறைய வட்டி விகிதம் அதிகரிக்கும் (90 நாள் பண முறி 23% வந்து விட்டது அதாவது 1 வருடத்தில் கடன் இரட்டிப்பாகும்), இலங்கையின் இன்றைய நிலை ஒரு ஆரம்பம் மட்டுமே, ஆர்ஜென்ரீனா, ஈக்குவடோர் இந்தப்பாதையால்தான் இலங்கைக்கு முன்பாக போய்கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

கடஞ்சா,

இலங்கை தவிர ஆரக்குறைய 30 வளர்ந்து வரும் நாடுகள் ஏறக்குறைய வங்குரோத்து நிலைமையை அடைந்துவிட்டதாக வரும் தகவல்கள் சரியானவையா ? 

சாத்திய கூறுகள் இருக்கிறது.

கொரானாவிடற்கு முதல் பல விளிம்பு நிலையில் இருந்தன, கொரன நிலைமையை மோசமாக்கி இருக்கலாம்.

இந்த கிழமை அல்லது அடுத்த கிழமை, லண்டன் இல் சிங்கள துறைசார் எதிர்ப்பு அணி நடைபெற உள்ளதாக பார்க்கிறேன்.

அதற்கு, தெரிந்த தமிழர்களை அழைத்து உள்ளார்கள். அழைக்கப்பட்ட தமிழர்கள் கேட்டது, கோத்த வீட்டுக்குப் போ என்று நீங்கள் பிடித்தால், நாங்கள் வடகிழக்கில் இராணுவம் வீட்டுக்கு போ என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே, அவர்களுக்கு நீதி, கொத்தவும் குழாமும் Hague க்கு அனுப்ப வேண்டும் என்றார் பதாகைகள் பிடிப்போம் என்றும் சொல்லி , சித்தத்திற்கு அயத்சம் என்றால் வருகிறோம் என்று.

அத்துடன் அழைப்பு  நின்று விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

இப்படி நாடு விற்பனக்கு வந்தால், அவர் உடனடியாக காசு கொடுத்து வாங்க ரெடி. அரபு பணத்துடன் மோத முடியாது. மாசா அல்லா என்று அள்ளி கொடுக்க அவர்கள் தயார். 

அது பழைய காலம் இப்போ எண்ணெய்க்கு  பதில் லித்தியம் அதை தேடி உலகம் ஓடதொடங்கி  விட்டது அது அரபு உலகத்தவருக்கும் தெரியும் இருக்கிற பணத்தை இறுக்கி பிடிக்கிறார்கள் இல்லாவிட்டால் ரோஹிஞ்சா முஸ்லிம்களை நடு கடலில் விட்டு இருப்பார்களா ?

13 hours ago, Nathamuni said:

சிங்களவர்களுக்கு வந்திருப்பது பசி மட்டுமல்ல.... நாடே விலைக்கு போகப்போகிறது என்று பயம்...

அப்படி பார்த்தால் அம்பாந்தோட்டை யை  சைனாவுக்கு தாரை வார்த்து விட்டு எப்படி அவர்களால் நித்திரை கொள்ள முடிகின்றது ?

சிங்களம் திருந்தாது 1000 வருட தமிழ் எதிர்ப்பு  இனவாத இரத்தம் அவர்களில் ஓடுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே நேரம் அவர்களால் உழைக்கவும் முடியாத சோம்பேறிகள் ஆறு லட்சம் இந்திய தமிழரை நாடு கடத்திய கூட்டத்தால்  இலங்கையின் முக்கிய வருவாயான தேயிலை கொழுந்து பறிக்க முடியாத ஏலா  வாளிகளை கொண்ட சமூகம் .

Edited by பெருமாள்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

சந்தர்ப்பம், ஒருமுறை தான் வரும்.... சீனாக்காரன், இந்தியாக்காரன் வாங்குவதிலும், பார்க்க, தமிழர்கள் வாங்குவது, அவர்களுக்கும், தமிழர்களுக்கும் நல்லது.

மற்றவன் வாங்கினால் அமைதியாக இருக்கும் இனவாத சிங்களம் அதயே தமிழன் வாங்கினால் நித்திரை இல்லாமல் இருப்பார்கள் இப்போதைக்கு மற்றவன் வாங்கி இந்த அழகிய தீவை நாசமாக போவதையே நான் விரும்புகிறேன் 2007ல் இருந்து 2009 மட்டும் நாம் பட்ட வலி அவர்களுக்கும் உருவாகட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

மற்றவன் வாங்கினால் அமைதியாக இருக்கும் இனவாத சிங்களம் அதயே தமிழன் வாங்கினால் நித்திரை இல்லாமல் இருப்பார்கள் இப்போதைக்கு மற்றவன் வாங்கி இந்த அழகிய தீவை நாசமாக போவதையே நான் விரும்புகிறேன் 2007ல் இருந்து 2009 மட்டும் நாம் பட்ட வலி அவர்களுக்கும் உருவாகட்டும் .

நூற்றுக்கு நூறு...  சரியான கருத்து.
காசை கொடுத்து காப்பாற்றியபின், 
பிக்குகளின் தூண்டுதலில்... தட்டிப் பறிக்க நிற்பார்கள். 

நேற்று....  தமிழில் தேசிய கீதம் பாடினதுக்கே... 
பிக்கு, ஒண்டு...இருப்புக் கொள்ள ஏலாமல்  ஓடி வந்து, 
"மைக்கை" வாங்கினதை பார்த்தமே. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

நூற்றுக்கு நூறு...  சரியான கருத்து.
காசை கொடுத்து காப்பாற்றியபின், 
பிக்குகளின் தூண்டுதலில்... தட்டிப் பறிக்க நிற்பார்கள். 

நேற்று....  தமிழில் தேசிய கீதம் பாடினதுக்கே... 
பிக்கு, ஒண்டு...இருப்புக் கொள்ள ஏலாமல்  ஓடி வந்து, 
"மைக்கை" வாங்கினதை பார்த்தமே. 

 

6 hours ago, பெருமாள் said:

மற்றவன் வாங்கினால் அமைதியாக இருக்கும் இனவாத சிங்களம் அதயே தமிழன் வாங்கினால் நித்திரை இல்லாமல் இருப்பார்கள் இப்போதைக்கு மற்றவன் வாங்கி இந்த அழகிய தீவை நாசமாக போவதையே நான் விரும்புகிறேன் 2007ல் இருந்து 2009 மட்டும் நாம் பட்ட வலி அவர்களுக்கும் உருவாகட்டும் .

சேர் பொன் ராமநாதன் விடயத்தில் இருந்து, டட்லி - செல்வா, பண்டா - செல்வா, ஜேஆர்  - ராஜீவ் வரை சிங்களத்தை நாம்அறிவோம்.... இவர்களை நம்ப, காரணம் எதுவும் இ்ல்லை..... கணவன், மணைவி ஒத்து வரவில்லை..... ஒரே சண்டை, நம்பகத்தன்மை இல்லை என்றால், தனித்தனியாக வேறு வாழ்க்கை ஆரம்பித்து வாழ, கோட்டு போய், ஜீவனாம்ச கொடுப்பனவுகள் முடித்து தான் விவாகரத்து வாங்க வேணும்.....

சம்பந்தப்பட்டவ்கள், அடுத்தவரில் நம்பகத்தன்மை இல்லை என்று கோட்டுக்கே போவது வீண்வேலை என்றால் எப்படி ?

சந்தர்பத்தை பயன்படுத்தி, சரியான வழிமுறையை கண்டறிந்து, வெட்டி ஓடுவது தானே சரியான வழியாக இருக்க முடியும்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

சந்தர்பத்தை பயன்படுத்தி, சரியான வழிமுறையை கண்டறிந்து, வெட்டி ஓடுவது தானே சரியான வழியாக இருக்க முடியும்.

இதுக்கு உறுதியான தலைமை இருக்கனும் இப்ப இருக்கிற தலைமைகள் சம் சும்  கஜன் ஆகட்டும்  இனவாத சிங்களத்தின் ஏவல் நாய்கள் இவர்களை நம்பி ஒரு முடிவு எடுக்க முடியாது எனவே சிங்களம் சாப்பாடு இல்லாமல் தற்கொலை செய்வதை ரசிப்பதை தவிர வேறுவழியில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேணுமெண்டால் அவர்கள் தற்கொலைக்கு முன் கிரிபத் சாப்பிட பணம் அனுப்பி வைக்கிறேன் யார் யார் தற்கொலைக்கு போகிறார்கள் என்று லிஸ்ட் எடுத்து அனுப்பி வைக்கவும் 2009 நாங்கள் விழும்போது அழ  கண்ணில் கண்ணீர் வரவில்லை 2007 ல் முடிவுகள் தெரிந்த போது  அவர்கள் நல்ல வாழ்க்கை அமைத்து கொண்டு இருப்பார்கள் ஆனால்  முடிந்தவரை சிங்களத்துக்கு  அழிவுகளை ஏற்படுத்தியே போனார்கள் போனவர்களையும் சும்மா விட்டு விட்டீர்களா புனிதமான  கல்லறைகளை உடைத்து நடு ரோட்டில் போட்டீர்கள் உலகில் எங்கும் ஏற்படாத யுத்த வன்மம் அது .சோகம் வந்து அழுதால் அன்றோடு போய் விடும் அன்று அழாமல் கண்ணீரை தேக்கி வைத்தேம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொன்றையும் சொல்ல மறந்து விட்டேன்.

IMF, பகுதி, பகுதியாகவே (instalment) credit அல்லது கடன் கொடுக்கும்.

அது, சொறி சிங்களம் IMF உடன் இணங்கிய சீரமைப்பு, திட்டங்கள் போன்றவற்றை எவ்வளவு தூரம் சொறி சிங்களம் செய்து உள்ளது அல்லது எத்தனிக்கிறது என்பதஹில் தங்கி உள்ளது.

பொதுவாக, செயல்திறன் (performance) அடிப்படையில் கொடுக்கப்படும், இழுக்கப்படும், தற்கலிகளமாக நிறுத்தப்படும்.

சொறி சிங்களம், தமிழருடன் செய்வததை, கிந்தியவுடன் (தமிழரின் வெறுப்பால்) விளையாடும் விளையாட்டை ஹிந்தியை பார்த்து கொண்டு இருப்பது போல, IMF நடக்காது. 

இது மிக முக்கிய காரணம் சொறி சிங்கம் IMF ஐ நாடாமைக்கு. 

IMF சிநலத்துக்கு task  master ஆக இருக்கும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.