Jump to content

ரம்புக்கனை போராட்டக்காரர்கள் மீது, துப்பாக்கி சூடு... ஒருவர் பலி. பலர் காயம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்

எரிபொருள் விலையேற்றத்திற்கு.. எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது... கண்ணீர்ப்புகை தாக்குதல்

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்புக்கனையில் முன்னெடுக்கப்படும் போராட்டதில் பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

புகையிரத கடவையை 15 மணித்தியாலங்களுக்கு மேலாக மறித்து ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் ஏற்பட்ட பதட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

https://athavannews.com/2022/1277386

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே.. f /Simply_cinema'

நம், ராஜதந்திரங்கள் அனைத்தும்... வீணாகி விட்டதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

278741134_566382851512651_4518507247629216979_n.jpg

VEDIO) போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு ஒருவர் பலி: பலர் காயம் -  Matale News VEDIO) போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு ஒருவர் பலி: பலர் காயம் -  Matale News

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு ஒருவர் பலி: பலர் காயம்

ரம்புக்கனையில் இன்று இடம்பெற்ற போராட்டத்தின் போது, பொலிஸார் துப்பாக்கிச்சூ மேற்கொண்டதில் காயமடைந்த ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை ரம்புக்கனை புகையிரத கடவையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக பொதுமக்கள் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனை புகையிரத கடவைக்கு அருகில் புகையிரத பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை தொடர்ந்து மோதல் வெடித்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.matalenews.com/sri-lanka/p-1838/

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to ரம்புக்கனை போராட்டக்காரர்கள் மீது, துப்பாக்கி சூடு... ஒருவர் பலி. பலர் காயம்.
  • கருத்துக்கள உறவுகள்

ரம்புக்கனை  துப்பாக்கி சூட்டில், காயமடைந்தவர்களை... 
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்ட போது.... 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ரம்புக்கனை  துப்பாக்கி சூட்டில், காயமடைந்தவர்களை... 
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்ட போது.... 

சிங்களவர்களுக்கு, சரியான கோவம் வந்துட்டுது போல.... 🙄

அந்த தூசனத்தில கோத்தாவை திட்டுனவருக்கு சொல்லவேணும்: இது ஒரு வெடி தான்....

கிபிர், ஷெல் கிளஸ்டர் எல்லாம் போட்டு, நல்ல அனுபவம் உள்ள ஆளை எல்லே, பிடிச்சு உக்காத்தி வச்சுயிருக்கிறியள்...

கோத்தாவின், மகிந்தாவின்.... ஆடின காலும், பாடின வாயும் சும்மாவே இருக்கும்... 

அநுபவியுங்கோ.....

ஆனால் நம்ம, அனுதாபம் தாராளமாக கிடைக்கும். 😰

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசபக்ஷச ஆட்சிக்கெதிரானவர்களால், ஆட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில்,  திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கை.

இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.😆

(கவனிக்க ; உக்ரேனில் Maidan Revolution  -2014ல் மேற்கொள்ளப்பட்ட  ஆர்ப்பாட்டங்களையும் அதனைத் தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றமும் இப்படித்தான் துப்பாக்கிச் சூட்டில்  ஆரம்பமாகியது - அதனை ஒத்த அச்சு அசேலான நடவடிக்கைகள் தற்போது இலங்கையில் இடம்பெறத் தொடங்கியுள்ளது )

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Sasi_varnam said:

ஒரே ஒரு சிங்களவன் இறந்து…. இரண்டு மணித்தியாலமும் ஆகவில்லை,
உலகம் எங்கும் இருந்து… அனுதாப, கண்டனக் குரல்கள்.

தமிழன் மீது, வருடக் கணக்காக குண்டு போட்டு,
லட்சக் கணக்கானவர்களை கொன்ற போது… 
ஶ்ரீலங்காவுக்கு… ஆயுதமும் கொடுத்து, சேர்ந்து அழித்த கயவர்கள்.
இப்போ கண்ணீர் வடிகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: போலீஸ் சுட்டதில் ஒருவர் பலி, பலர் படுகாயம் - எங்கே சம்பவம்?

29 நிமிடங்களுக்கு முன்னர்
 

இலங்கை நெருக்கடி

பட மூலாதாரம்,EPA

 

படக்குறிப்பு,

இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பிற நகரங்களில் போராட்டங்கள் தீவிரமாகியுள்ளன.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கையில் நாடு எதிர்கொண்டு வரும் மோசமான பொருளாதார நிலைமையை அரசு கையாளத் தவறியதாகக் கூறி ஏப்ரல் மாத தொடக்கத்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்தன. இந்த நிலையில், முதல் முறையாக துப்பாக்கி பிரயோகம் மூலம் போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் முற்பட்டுள்ளனர்.

இலங்கையில் முக்கிய இறக்குமதிகளுக்கு பணம் இல்லாமல் போனதில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி அரசுக்கு எதிரான உணர்வை போராட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தாலும் பதவி விலக மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அவர் புதிய அமைச்சரவையை நியமித்தது பல இலங்கையர்களை கோபப்படுத்தியது. இலங்கையின் பிரதான எரிபொருள் சில்லறை விற்பனை விலையை ஏறக்குறைய 65% அளவுக்கு அரசு உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்கிழமை பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

15 மணி நேர போராட்டம்

ரம்புக்கன மக்கள் எரிபொருள் கோரி சுமார் 15 மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பிபிசி சிங்கள சேவையின் ரங்க சிறிலால் தெரிவித்துள்ளார்.

"ரம்புக்கன பகுதியில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது. அவர்கள் சில டயர்களுக்கு தீ வைத்தனர், அதனால் அவர்களைக் கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது" என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் நிஹால் தல்துவா பிபிசியிடம் தெரிவித்தார்.

காவல்துறையினர் மீது கற்கள் மற்றும் பிற பொருட்களை போராட்டக்காரர்கள் எறிந்ததாகவும், அதில் பல காவலர்களும் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மறுபுறம் காயமடைந்த போராட்டக்காரர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் சுடப்பட்டிருக்கலாம் என கேகாலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மிஹிரி பிரியங்கனி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

"துப்பாக்கிச் சூட்டில் காயங்கள் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம், ஆனால் மரணத்திற்கான சரியான காரணத்தை பிரேத பரிசோதனை மூலமே உறுதிப்படுத்த முடியும்," என்று அவர் கூறினார்.

சாலை மறியலில் ஈடுபடும் பொதுமக்கள்

இதற்கிடையே, ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகள், தலைநகர் கொழும்பை கண்டி நகருடன் இணைக்கும் அருகிலுள்ள நெடுஞ்சாலையை மறித்து டயர்களை எரித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது.

1948இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, தீவு நாடான இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை தற்போது எதிர்கொண்டு வருகிறது.

இது வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறையின் ஒரு பகுதியாகும், இந்த நிலைமை காரணமாக, இலங்கையில் பிரதான உணவுகள் மற்றும் எரிபொருளின் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாது, இது கடுமையான தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் அதிக விலையேற்றத்துக்கு வழிவகுக்கிறது.

மறுபுறம் இலங்கையின் பல மாவட்டங்களில் அரை நாள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் மின்வெட்டு, பொதுமக்களின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது.

 

இலங்கை நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ

இந்த ஆர்ப்பாட்டங்கள் 2019இல் ஆட்சிக்கு வந்த ராஜபக்சேவுக்கு பிரபல்யத்தில் ஒரு பெரிய திருப்புமுனையைக் குறிக்கிறது,

இலங்கையில் நிலையான ஆட்சி, வலுவான சக்தியுடன் நாட்டை ஆளுவோம் என உறுதிமொழி அளித்து ஆட்சியைப் பிடித்தவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

இதேவேளை, ஆட்சிக்கு வந்ததும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரை அமைச்சரவையில் சேர்த்தது, ஆளுகையில் மலிந்து ஊழல் காணப்பட்டதாக எழுந்த சர்ச்சை போன்றவை கோட்டாபய ஆட்சி மீது எதிர்கட்சிகள் அதிருப்தியை வெளிப்படுத்த காரணமாக அமைந்தது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ராஜபக்ஷ ஆகியோர் தங்களுடைய அமைச்சரவையில் 17 புதிய அமைச்சர்களை சேர்த்துள்ளனர். இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விமலவீர திசாநாயகவிற்கு வனத்துறையும், மோகன், பிரியதர்ஷன் டி சில்வாவிற்கு குடிநீர் வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

"புதிய அமைச்சரவையில்" ராஜபக்ச சகோதரர்களான சமல் மற்றும் பசில் ராஜபக்ஷ, அவர்களின் மருமகன் நாமல் ராஜபக்ஷ இடம்பெறவில்லை. அவர்கள் முன்னர் முக்கிய இலாகாக்களை வகித்தனர். ஆளும் கட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருப்பதற்கு எதிராக மக்களின் கோபம் வலுப்பெற்றுள்ள நிலையில், ஏப்ரல் 3ஆம் தேதி கோட்டாபய அமைச்சரவையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நீங்கலாக மற்றவர்கள் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்தனர். இதைத்தொடர்ந்து ஏழு அமைச்சர்களும் அதன் தொடர்ச்சியாக திங்கட்கிழமை 17 பேர் புதிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61150843

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஒரே ஒரு சிங்களவன் இறந்து…. இரண்டு மணித்தியாலமும் ஆகவில்லை,
உலகம் எங்கும் இருந்து… அனுதாப, கண்டனக் குரல்கள்.

தமிழன் மீது, வருடக் கணக்காக குண்டு போட்டு,
லட்சக் கணக்கானவர்களை கொன்ற போது… 
ஶ்ரீலங்காவுக்கு… ஆயுதமும் கொடுத்து, சேர்ந்து அழித்த கயவர்கள்.
இப்போ கண்ணீர் வடிகின்றார்கள்.

இது மட்டுமா...மட்டு நகரில்..அன்னை பூபதி நினவாலயத்துக்கு விளக்கு ஏற்றப்போன முன்னாள்  எம்பியிடம் அடாத்துப்புரியும் பொலிசு அதிகாரி விடியோவும் போகுது..பெரிய ஆர்ப்பாடத்துக்கு தடையில்லை..சின்ன அஞ்சலி நிகழ்வுக்குத் தடை...நாய் வாலை சுமந்திரனால் நிமிர்த்த முடியாது..

Link to comment
Share on other sites

ஆங்கிலம் தெரிந்தவர்கள் இது போன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி Twitter போன்ற தளங்களில் இவர்களுக்கு உள்குத்து கொடுக்கும் பாணியில் எழுதுங்கள். இதோ ஆங்கிலத்தில் நான் எழுதுகின்றவற்றில் இருந்து: இதில் இருந்து எடுத்து உங்கள் பாணியில் எழுதுங்கள்.

 

You mean like the many murders they have got away with so far?. Law & Order in SL did not collapse overnight. It died due to a thousand cuts inflicted on it, while populace looked away b'se the brutal machinery wasn't directed at them. Now it is your turn sadly @awickrematunge

----------

If the SL populace cares about human rights just hand these bastards over to the UN, allow international investigators to come in & run a transparent investigation. Even when thousands were butchered the populace celebrated as a triumph & voted the crooks in. Pure dummies.

Kumar Sangakkara's Tweet: 

Using lethal force against unarmed protestors is unconscionable. Inexcusable. The first responsibility of the police is to protect lives of people. Such a shameful instance of brutality.
 
My response:
Yes utterly unconscionable. But ok to kill thousands of civilians under the guise of fighting terrorists, kill journalists who expose corruption, carry out enforced disappearance with white vans & get rewarded with an executive presidency. 🤬
 
Jayantha DeAlwis's Tweet  
 
6 riders on 3 motorbikes came to the parliament roundabout yesterday, reminds me of that fateful day of your Dad was murdered. This time there was a right-thinking police officer to chase away the killer squad. Oh Lord, please prevent these terrible happenings again.

My Response:

You only got 6 riders on 3 motorbikes on a day. The Tamils of North and East have endured this for decades. All of which were listed by HR orgs which the majority of SL refused to acknowledge & simply branded it as "Kottiya" supporters spreading fake news. Now it is your turn 1/n

Even when Lasantha was killed & Prageeth Ekneligoda disappeared the masses voted the monsters in & celebrated them as heroes. Even when the Tamil mothers are searching for their sons & daughters kidnapped & disappeared by these goons the majority celebrated them as heroes. 2/n

The character of a nation is defined by how it treats its fellow men in their darkest hour. So when others who looked, dressed & spoke a different language were at the receiving end of the monsters, majority were only glad to reward them with more power to continue the same 3/n

Anyone & anything who opposed those monsters was branded as "Kottiya", "traitors", "stooges of the west" etc. Now the monsters have come for you. What you do matters. However what you continue to turn a blind eye to matters even more. Otherwise this too will be false dawn n/n

 

 

Munza Mushtaq's Tweet 
 
At a Sathosa, they are giving only one kilo of sugar per person. I mean FFS. Since when did sugar become a luxury in this country? Oh wait, ever sincev@GotabayaRvwas made president andv@PresRajapaksa
was made prime minister.
 
My Response:
 
Like Since the late 80's. Were you asleep when the same policies were directed against the people in the North?. Here read it from HRW Report of 1992:
Image
 
Here is some more this time again a reminder from 2006:
Image
 
In case the above is branded as "Kottiya" propaganda here is a Peer-Reviewed Paper published in Journal of Paediatrics and Child Health on May 8, 2008 on the effects on such food embargo on Kidney growth in Children of North. https://pubmed.ncbi.nlm.nih.gov/18717773/
Image
 
Can you understand how the same monsters that were directed against others while the majority cheered on has now started eating the very same who cheered them on? This is what Bob Marley meant when he sang - What goes around, comes around..
 
 
  • Like 4
  • Thanks 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்மலாய் பாக்க போனால் இத்தடிக்கு  50 பஸ் 2,3 ரயில்களை கொளுத்தியிருக்க வேணும்.அப்பிடியெண்டால் தான் உண்மையான போராட்டம் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, kanakan said:

ஆங்கிலம் தெரிந்தவர்கள் இது போன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி Twitter போன்ற தளங்களில் இவர்களுக்கு உள்குத்து கொடுக்கும் பாணியில் எழுதுங்கள். இதோ ஆங்கிலத்தில் நான் எழுதுகின்றவற்றில் இருந்து: இதில் இருந்து எடுத்து உங்கள் பாணியில் எழுதுங்கள்.

 

You mean like the many murders they have got away with so far?. Law & Order in SL did not collapse overnight. It died due to a thousand cuts inflicted on it, while populace looked away b'se the brutal machinery wasn't directed at them. Now it is your turn sadly @awickrematunge

----------

If the SL populace cares about human rights just hand these bastards over to the UN, allow international investigators to come in & run a transparent investigation. Even when thousands were butchered the populace celebrated as a triumph & voted the crooks in. Pure dummies.

Kumar Sangakkara's Tweet: 

Using lethal force against unarmed protestors is unconscionable. Inexcusable. The first responsibility of the police is to protect lives of people. Such a shameful instance of brutality.
 
My response:
Yes utterly unconscionable. But ok to kill thousands of civilians under the guise of fighting terrorists, kill journalists who expose corruption, carry out enforced disappearance with white vans & get rewarded with an executive presidency. 🤬
 
Jayantha DeAlwis's Tweet  
 
6 riders on 3 motorbikes came to the parliament roundabout yesterday, reminds me of that fateful day of your Dad was murdered. This time there was a right-thinking police officer to chase away the killer squad. Oh Lord, please prevent these terrible happenings again.

My Response:

You only got 6 riders on 3 motorbikes on a day. The Tamils of North and East have endured this for decades. All of which were listed by HR orgs which the majority of SL refused to acknowledge & simply branded it as "Kottiya" supporters spreading fake news. Now it is your turn 1/n

Even when Lasantha was killed & Prageeth Ekneligoda disappeared the masses voted the monsters in & celebrated them as heroes. Even when the Tamil mothers are searching for their sons & daughters kidnapped & disappeared by these goons the majority celebrated them as heroes. 2/n

The character of a nation is defined by how it treats its fellow men in their darkest hour. So when others who looked, dressed & spoke a different language were at the receiving end of the monsters, majority were only glad to reward them with more power to continue the same 3/n

Anyone & anything who opposed those monsters was branded as "Kottiya", "traitors", "stooges of the west" etc. Now the monsters have come for you. What you do matters. However what you continue to turn a blind eye to matters even more. Otherwise this too will be false dawn n/n

 

 

Munza Mushtaq's Tweet 
 
At a Sathosa, they are giving only one kilo of sugar per person. I mean FFS. Since when did sugar become a luxury in this country? Oh wait, ever sincev@GotabayaRvwas made president andv@PresRajapaksa
was made prime minister.
 
My Response:
 
Like Since the late 80's. Were you asleep when the same policies were directed against the people in the North?. Here read it from HRW Report of 1992:
Image
 
Here is some more this time again a reminder from 2006:
Image
 
In case the above is branded as "Kottiya" propaganda here is a Peer-Reviewed Paper published in Journal of Paediatrics and Child Health on May 8, 2008 on the effects on such food embargo on Kidney growth in Children of North. https://pubmed.ncbi.nlm.nih.gov/18717773/
Image
 
Can you understand how the same monsters that were directed against others while the majority cheered on has now started eating the very same who cheered them on? This is what Bob Marley meant when he sang - What goes around, comes around..
 
 

Great work!!! 🙏 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, kanakan said:

ஆங்கிலம் தெரிந்தவர்கள் இது போன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி Twitter போன்ற தளங்களில் இவர்களுக்கு உள்குத்து கொடுக்கும் பாணியில் எழுதுங்கள். இதோ ஆங்கிலத்தில் நான் எழுதுகின்றவற்றில் இருந்து: இதில் இருந்து எடுத்து உங்கள் பாணியில் எழுதுங்கள்.

தேவையற்ற நேர விரயம் இனவாத சிங்களவர்களுக்கு இதெல்லாம் புரியாத ஒன்றல்ல தெரியாத மாதிரி நடிப்பார்கள் .சிங்களவர்கள் மாற மாட்டார்கள் அப்படி நினைப்பதும் தமிழுக்கு செய்யும் துரோகம் கோத்தா கோ  கோம்  என்று தமிழர்களை கூப்பிடும் சிங்களவரால் தமிழரின் காணிகள்அபகரிக்கப்பட்டபோது போராட வந்தார்களா ? காணமால் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக ஒரு சிங்களவன் வந்தானா ?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு !

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்குச் சட்டம் நாளை (20.04.22) காலை வரையிலும் அமுலில் இருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, காயமடைந்த போராட்டக்காரர்கள் உள்ளிட்ட 24 பேர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக வைத்தியசாலை தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவர்களில் 8 பேர் பொலிஸார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வேளை இந்த போராட்டத்தின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://athavannews.com/2022/1277393

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரம்புக்கனை விவகாரம் – சர்வதேச சமூகம் உள்ளடங்களாக மகேல, நாமல், மகிந்த தேசப்பிரிய என பலரும் அதிருப்தி!(ரம்புக்கனை விவகாரம் குறித்த ஒரு முழுமையான பார்வை)

ரம்புக்கனை விவகாரம் – சர்வதேச சமூகம் உள்ளடங்களாக.... மகேல, நாமல், மகிந்த தேசப்பிரிய என பலரும் அதிருப்தி!(ரம்புக்கனை விவகாரம் குறித்த ஒரு முழுமையான பார்வை)

ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டு வருவதுடன், நீதியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், காயமடைந்த மேலும் 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் இன்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ரயில் மார்க்கத்திற்கும் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டது.

அத்துடன், எரிபொருள் பவுசர் ஒன்றையும் மக்கள் தடுத்து நிறுத்தியிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், போராட்டக்காரர்கள் கலைந்துசெல்லவில்லை. இதனையடுத்து கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதிலுக்கு போராட்டக்காரர்களும் கல்வீச்சு தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரம்புக்கனை பகுதி போர்க்களமாக மாறியது.

இதனைத் தொடர்ந்து சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டு வருவதுடன், நீதியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கமைய ரம்புக்கனை சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் மிகுந்த கவலையடைவதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

யாரேனும் ஒருவர் மீது வன்முறையை கையாளும்போது, அமைதியான போராட்டகார்களின் உரிமையும் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களையும், அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்த வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ரம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் தாம் கவலையடைவதாக இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கான கனேடிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் பொறுப்பு கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் விடயத்தில், அதிகப்பட்ச விதிகள் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும்  இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கான கனேடிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று ரம்புக்கனையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung அழைப்பு விடுத்துள்ளார்.

ரம்புக்கனையில் இருந்து வெளியாகும் செய்தியால் தான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது தனது ட்விட்டர் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ரம்புக்கனை சம்பவத்தை தான் வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டுமுதல் தமது ஐந்துவருட ஆட்சியில், நிராயுதபாணியான பொதுமக்கள் மீது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாக்குதல்களை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எந்த தரப்பில் இருந்தாலும் தீர்வுகளுக்கு வன்முறை வழியாகாது என முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இதுவரை ஏற்பட்ட அழிவுகள் போதும் எனவும், எந்த விலைக்கொடுத்தேனும் அமைதியை பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அதிகாரிகள் மற்றும் ஆர்ப்பாட்டகாரர்கள் வன்முறையை கையாளக்கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், வன்முறைகள் தொடர்ந்தும் அதிகரிக்காது இருக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரம்புக்கனையில் நிராயுதபாணியான மக்கள் மீது மிலேச்சதனமான முறையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்படுவதற்கு நாட்டு மக்களுக்கு உரிமைக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்படும் பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வாழ்வதற்காக சூழ்நிலையை உருவாக்கி தருமாறு கோரியே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரத்துபஸ்வெல சம்பவமும் இதேபோன்றதொரு அழிவாகவே காணப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் ஒரு மனித படுகொலையாகும் எனவும், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமையை கட்டுப்படுத்த கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு பதிலடியாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களால் தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கல்வீச்சு தாக்குதலுக்கு பொலிஸாரின் பதில் துப்பாக்கி பிரயோகமா என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, ரம்புக்கன சம்பவத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகள் வெட்கத்திற்கு உரியது என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன விமர்சித்துள்ளார்.

தமது டுவிட்டர் பக்கத்தில் மஹேல ஜயவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறையாக செயற்பட்டு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் பொதுமக்களை கைது செய்யாமல் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதுதான் ஜனநாயகமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் பொறுப்பு கூறவேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த துப்பாக்கி பிரயோகத்தை வன்மையாக கண்டிப்பதாக பீல்ட் மார்சல் சரத்பொன்சேக்கா தமது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதவியேற்று 48 மணிநேரத்திற்கும் ஒரு உயிர் பறிபோயுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தெற்காசியாவுக்கான சர்வதேச மன்னிப்புச் சபைக் கிளையும் இந்த சம்பவத்தைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ரம்புக்கனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பிலேயே இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.

மேலும், துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணைளை முன்னெடுப்பதற்கு மூவரடங்கிய விசாரணை குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை, இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், படையினர் மற்றும் பொலிஸார் அவதானமாக செயற்பட வேண்டும் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது 30 ஆயிரம் லீற்றர் எரிபொருளைக் கொண்ட பௌசருக்கு ஒரு குழுவினர் தீ வைக்க முற்பட்டதைத் தடுக்கவும், அதனால் ஏற்படக்கூடிய பாரிய சேதங்களைத் தடுக்கவும் பொலிசார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியிருந்ததாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் போது பொலிஸார் அதிக பலத்தை பிரயோகித்தனரா என்பது தொடர்பில் பொலிஸ் தலைமையக மட்ட விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவர் தற்போதைய நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மிஹிரி பிரியங்கனி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருவருக்கு சத்திரசிகிச்சை நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் இரண்டு பேருக்கு சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1277410

Link to comment
Share on other sites

4 hours ago, பெருமாள் said:

தேவையற்ற நேர விரயம் இனவாத சிங்களவர்களுக்கு இதெல்லாம் புரியாத ஒன்றல்ல தெரியாத மாதிரி நடிப்பார்கள் .சிங்களவர்கள் மாற மாட்டார்கள் அப்படி நினைப்பதும் தமிழுக்கு செய்யும் துரோகம் கோத்தா கோ  கோம்  என்று தமிழர்களை கூப்பிடும் சிங்களவரால் தமிழரின் காணிகள்அபகரிக்கப்பட்டபோது போராட வந்தார்களா ? காணமால் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக ஒரு சிங்களவன் வந்தானா ?

பெருமாள் நாங்கள்  போடும் பின்னூட்டல்கள் சிங்களவர்களை மாற்றும் நோக்கை கொண்டவையல்ல. மாறாக ஒரு நாட்டின் நிகழ்வுகள் உலகின் கவனத்தை ஈர்க்கும் பொழுது அந்த செய்திகள் ட்ரெண்ட் (trend) ஆவதும் அதனை பலர் அயல் நாடுகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பார்ப்பதுண்டு. அத்துடன் இராஜதந்திர வடடாரங்களும் இவற்றில்  கண் வைப்பதுண்டு. மிகமுக்கியமாக சமூக வலைத்தளங்கள் ஒருபக்க பார்வையை மட்டும் வழங்குவதுடன் மிகவும் சிக்கலான, வரலாற்று பின்னணி கொண்ட நிகவுகளை ஏதோ நேற்று தொடங்கிய ஒரு நிகழ்வு போன்ற தவறான பார்வையை வாசிப்போர் மத்தியில் ஏட்படுத்துவதுண்டு. ஒரு பகுதி மட்டும் கருத்தை வடிவமைக்க (opinion shaping/propgating a set narrative) நாங்கள் அனுமதிக்கமுடியாது. 

எனவே சமூகவலைத்தளங்களில் பிரபலமானோர்/நிறுவனங்கள் (உதாரணம்: சர்வதேச மன்னிப்பு சபை) அரைசியல் விடயங்களில் வைக்கும் கருத்துக்களை நாங்கள் எமது நீண்ட கால நலன் கருதி தகுந்த வழியில், ஆதாரத்துடன் (factual), அதிகம் உணர்ச்சிவசப்படாமல் (rational not emotional) போட்டுடைப்பது இந்த தகவல் தொழினுப்ப யுகத்தில் அரசியல் யுத்தம் (Political warfare in the digital age) செய்யும் போது முக்கியம். எங்களது செயல்பாடுகள் பலதளங்களில் தொடரவேண்டியதொன்று. 

நான் இங்கே இணைத்தவை ஒரு சில கருத்துக்கள் மட்டுமே. நான் வேறு கணக்கின் கீழ் எழுதிய கருத்துக்களுக்கு ஆதரவுதந்தோறும் எதிர்ப்போரும் இருக்கிறார்கள். இரண்டு பகுதியும் எங்களுக்கு தேவை. ஏனெனில் சமூக வலைதளங்கள் எங்கேஜ்மெண்ட் (engagement) முன்னுரிமை வழங்குவதால் கூடிய பார்வையார்களுக்கு செய்திகள் போய்சேர வழியுண்டு. Hashtag உடன் கருத்துக்களை போடும் போது தேடல் வழியாக வருவோரும் இவற்றை கண்டு கொள்ள முடியும். அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் நீண்ட கட்டுரை வாசிக்கும் அளவுக்கு பொறுமை கொண்டவர்கள் அல்லர். அதோடு சிக்கலான விடயங்களை சாராம்சம் செய்து இந்த சமூக வளத்தங்களூடாக வழங்கும் போது அது மேலதிக தேடல்களுக்கு வழிவகுக்கும். 

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வை கொடுக்க புலிகள்தான் தடையாக இருந்தார்கள் புலி இல்லாத இந்த 12 வருடகாலத்தில் ஒரு மயிர் அளவும் சிங்களம் தீர்வை நோக்கி செல்லவில்லை .

இவ்வளவு நீண்ட பந்தி பந்தியாய் எழுதி யாருக்கு வக்காலத்து ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

ஒரே ஒரு சிங்களவன் இறந்து…. இரண்டு மணித்தியாலமும் ஆகவில்லை,
உலகம் எங்கும் இருந்து… அனுதாப, கண்டனக் குரல்கள்.

தமிழன் மீது, வருடக் கணக்காக குண்டு போட்டு,
லட்சக் கணக்கானவர்களை கொன்ற போது… 
ஶ்ரீலங்காவுக்கு… ஆயுதமும் கொடுத்து, சேர்ந்து அழித்த கயவர்கள்.
இப்போ கண்ணீர் வடிகின்றார்கள்.

அது பயங்கர வாதம் 
இது புலோக பயங்கரவாதம்

Link to comment
Share on other sites

தமிழர் மீதான இனப்படுகொலையின் பின், மகிந்த கடந்த முறை ஆட்சியில் இருக்கும் போதும் சிங்கள கிரமாம் ஒன்றில் தண்ணீருக்காக மக்கள் போராடிய போது அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை பொலிசார் மேற்கொண்டு ஒருவரை கொன்று இருந்தனர். அதே போன்று மகசீன் சிறைச்சாலை கைதிகள் தம் அடிப்படைத் தேவைகளுக்காக கூரை மேல் ஏறி நின்று போராடும் போது பலரை Execution ஸ்ரைலில் கொன்று இருந்தனர்.

அப்பவெல்லாம் இந்த சர்வதேசம், ஐ.நா எல்லாம் எப்படியும் சீனாவிடன் ஆதிக்கத்தில் இருந்து இலங்கையை இலகுவாக வெளியே கொண்டு வரலாம் என்று பகல் கனவுகளைக் கண்டு கொண்டு இருந்தமையால் இவ் படுகொலைகளை கண்டிக்கவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

அது பயங்கர வாதம் 
இது புலோக பயங்கரவாதம்

May be an image of 2 people, people standing, outdoors and text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கேகாலை - றம்புக்கணை போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன? பிபிசி கள ஆய்வு

31 நிமிடங்களுக்கு முன்னர்
 

ஊரடங்கு

 

படக்குறிப்பு,

துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில் ஊரடங்கு அமலில் இருப்பதால் வெறிச்சோடி காணப்படுகிறது

கேகாலை - றம்புக்கணை பகுதியில் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 33 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 13 பொதுமக்களும், 20 போலீஸாரும் அடங்குவதாக சிரேஷ்ட போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

காயமடைந்தவர்கள் கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக விசேட விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் குறித்த குழு, பலரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துக்கொள்ளவுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள சிசிடிவி காணொளிகள், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளிகள், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான சாட்சியங்களின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

மரண பரிசோதனைகள் இடம்பெற்றதன் பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதி போலீஸ் மாஅதிபர் கூறுகின்றார்.

என்ன நடந்தது?

இலங்கையில் எரிபொருள் விலை நேற்று முன்தினம் இரவு முதல் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், றம்புக்கணை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட எரிபொருளை, பழைய விலைக்கு விநியோகிக்குமாறு வலியுறுத்தி, நேற்று (19) அதிகாலை 1 மணி முதல் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது, நேற்று மாலை வரை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

றம்புக்கணை பகுதியை ஊடறுத்து செல்லும் ரயில் மார்க்கத்தை மறித்து, மக்கள் இந்த போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

குறித்த பகுதியிலிருந்து வெளியேறுமாறு போலீஸார், போராட்டக்காரர்களுக்கு கோரியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

 

றம்புக்கணை போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன?

அதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகைத் தந்த எரிபொருள் கொள்கலன் (பவுசர்) ஒன்றை பொதுமக்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில், எரிபொருள் கொள்கலனை எரியூட்ட, போராட்டக்காரர்கள் முயற்சித்துள்ளதாக பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கூறுகின்றார்.

இதன்போது கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டதுடன், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வராமையினால், குறைந்த பட்ச அதிகாரத்தை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எரிபொருள் கொள்கலன் எரியூட்டப்பட்டிருக்கும் பட்சத்தில், றம்புக்கணை பகுதியே தீக்கிரையாகியிருக்கும் என அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

அதனால், ஏற்படவிருந்த சேதங்களை குறைக்கும் நோக்கிலேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 42 வயதான கே.டி. லக்ஷான் உயிரிழந்துள்ளார்.

உறவினர்கள் கண்ணீர்

பின்னவல பகுதியிலுள்ள யானைகள் சரணாலயத்தில் யானைகளுக்கு உணவு வழங்கும் தொழிலையே, உயிரிழந்த நபர் செய்து வந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டிற்காகவும், இனத்திற்காகவுமே தனது மருமகன் போராடியதாக உயிரிழந்த நபரின் மனைவியின் தாயார் பிபிசியிடம் தெரிவித்தார்.

''நேற்று காலை சென்றார். பின்னர் வந்தார். அங்கு தான் சென்றார் என எமக்கு தெரியும். மீண்டும் மாலை பெட்ரோல் நிரப்ப செல்வதாக கூறி சென்றார். ஆனால் அங்கு தான் சென்றார் என எமக்கு தெரியும். எமக்கு பொய் சொல்லி விட்டு, அங்கு தான் சென்றார். நாடு, இனம் என்பதற்காக செல்ல வேண்டும் என கூறினார். பெட்ரோல் நிரப்பி வருகின்றேன் என கூறியே சென்றார். சென்ற வேளையிலேயே இது நடந்துள்ளது. உயிரிழப்பதற்கே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்."

 

றம்புக்கணை போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன?

உயிரிழந்த கே.டி.லக்ஷானுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

"இந்த இருவரையும் எப்படி பாடசாலைக்கு அனுப்புவது. பாடசாலைக்கு சீருடை வாங்கு தருமாறு மகன் கூறினார். அம்மாவுடன் சென்று வாங்குமாறு கூறி வங்கி அட்டையையும் வழங்கி விட்டே சென்றார். நாட்டிற்காகவும், இனத்திற்காகவுமே அவர் போராடினார். பொய் சொல்லி விட்டேனும் செல்வார். நாங்கள் நாலு பேரும் இனி எப்படி வாழ போகின்றோம்?" என உயிரிழந்த நபரின் மனைவியின் தாய் பிபிசி தமிழுக்கு கண்ணீருடன் கருத்து தெரிவித்தார்.

ஊரங்குச் சட்டத்தை மீறி போராட்டம்

இதேவேளை, றம்புக்கணை போலீஸ் பிரிவிற்கு நேற்றிரவு முதல் போலீஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், றம்புக்கணை பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், வங்கிகள் என அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்தன.

அத்துடன், குறித்த பகுதியின் பிரதான வீதியில் பெரும் அளவிலான கற்கள் காணப்பட்டதுடன், சில இடங்களில் மர கிளைகளும் காணப்பட்டன.

அதேவேளை, றம்புக்கணை பகுதியில் இன்றும் துப்பாக்கி தோட்டக்களை காணக்கூடியதாக இருந்தது.

றம்புக்கணை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் சேதமடைந்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

போராட்டக்காரர்கள் நேற்றைய தினம் வீதிகளில் டயர்களை எரித்த அடையாளங்களையும் காணக்கூடியதாக இருந்தது.

 

றம்புக்கணை போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன?

இதேவேளை, றம்புக்கணை பகுதியில் தேசிய மக்கள் சக்தி மற்றும் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து, ஊரடங்கு சட்டத்தையும் பொருட்படுத்தாது போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

உயிரிழந்த நபருக்கு நீதி கோரியும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக கோரியும், ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரியும் இந்த போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போலீஸ் குற்றச்சாட்டுக்கு மறுப்பு

இந்த நிலையில், போராட்டத்தில் கலந்துக்கொண்ட சிலர் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தனர்.

எரிபொருள் கொள்கலனை எரியூட்ட போராட்டக்காரர்கள் முயற்சித்ததாக போலீஸார் கூறும் கருத்தை, பிரதேச மக்கள் நிராகரித்திருந்தனர்.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதல் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்படும் வரை போராட்டக்காரர்கள் எந்தவித சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கவில்லை என அந்த பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் அசார்டீன், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

 

றம்புக்கணை போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன?

 

படக்குறிப்பு,

மொஹமட் அசார்டீன்

கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்தே, இந்த அனைத்து பிரச்சினைகளும் ஏற்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

எனினும், எரிபொருள் கொள்கலனை எரியூட்ட முயற்சித்தமையே, துப்பாக்கி பிரயோகம் நடத்த காரணம் என பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

எவ்வாறாயினும், நியமிக்கப்பட்ட குழு அனைத்து விதமான சாட்சியங்களையும் பெற்று விசாரணைகளை நடத்தி, உண்மையை கண்டறிந்து நீதிமன்றத்திற்கு விடயங்களை தெளிவூட்டும் என அவர் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61168465

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக, 

ஆர்ப்பாட்டக்காறர்களால் பொலிஸார்  மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்படும். அதனை சாட்டாகக் கருதி பொலிசார் ஆர்ப்பாட்டக்காறர்கள் மீது வன்முறையை பிரயோகிப்பர். 

இதை நாங்கள் ஏர்கனவே உக்ரேன், ஜோர்ஜியா, கசக்ஸ்தான், பெலாருஸ்சில் பார்த்துவிட்டோமையா..🤣

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.