Jump to content

கோமகன் இன்று காலமாகி விட்டார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 1 person and text that says 'அஞ்சலி நடு இணைய சஞ்சிகை ஆசிரியர் கோமகன் (தியாகராஜா ராஜராஜன்) T7 ஒநடு .adouD'
 
நடு நாயகமாக நின்ற கோமகன்.
கோமகன்.
எல்லோருக்குமாய் சேர்த்து இயங்கிய ஒரு செயற்பாட்டாளர். இனி இல்லை.
அவரது தனிக்கதை என்ற தொகுப்பு முதல் முரண் கதைத்தொகுப்பு வரை பலவிடயங்களை உரையாடியிருக்கிறோம். என்னதான் இடக்கு முடக்காக கதைத்தாலும் அவரது நேசிப்பில் குறைவிழுந்ததில்லை. யாழ் இணையத்தில் எழுதிய காலத்திலிருந்து உருவாகிய நட்பு. அவரை முதன் முதலாக சந்தித்ததும் அதனூடாகத்தான்.
 
ஊருக்கு போவதற்கு சில நாட்கள் முன் தான் சந்தித்திருந்தேன். ஏற்கனவே ஒரு சத்திர சிகிச்சை செய்திருந்த நிலையில், உடல் நிலை குறித்து மிக அவதானமாகவே இருந்தார். மனிதர் ஒரு கடும் கோப்பிப் பிரியர். கோப்பி அருந்தியபடி நிறையவே பேசினார். நாவல் ஒன்று எழுதுவதாகவும் சில அத்தியாயங்கள் முடித்துவிட்டதாகவும் சொல்லியிருந்தார். என்ன அவசரம் ஊருக்கு எனக் கேட்டபோது, காரணத்தை சொல்லியவர், கூடவே சில நூல் வெளியீடுகளை திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார். பின்னர் தர்மினி அக்கா வீட்டுக்கு சென்றோம். கோ. நாதனின் தொகுப்பை தந்தார், அதற்கு ஒரு இரசனைக்குறிப்பாவது எழுதிதரவேண்டும் என கட்டளையிட்டார்.
இறுதி இதழுக்கு ஏதாவது எழுதித்தாருங்கள் எனக் கேட்டபோது, இப்ப எழுதுவற்கான மனநிலை இல்லையண்ணை எனப் பதில் எழுதினேன். இனி எழுதுகிறேன் என்று சொல்வதற்கு கோமகன் இல்லை.
 
நினைவுகளில்
ஏதாவதொரு நிகழ்வுகளில்
எங்காவதொரு பொழுதுகளில்
ஞாபகங்களில் மீட்டுக்கொள்வோம்.
துயரத்தின் சாயல் சிறிதுமில்லாத புன்னகையை.
அப்போதெல்லாம் ஒரு புகைப்படம் எடுத்துவைத்துக்கொள்வோம்.
தவறவிட்ட,
உங்கள் இருப்பை அதில் தேடிக்கண்டுகொள்வோம்.
சென்று வாருங்கள் கோமகன்.
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

வாத்தியார்

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன்  கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் . இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது  காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி

நிழலி

“நடு” இணைய இதழின் ஆசிரியரும் , நடு வெளியீட்டகத்தின் வெளியீட்டாளரும், புலம்பெயர் தமிழ் இலக்கிய பரப்பில் நன்கு அறியப்பட்டவருமான கோமகன் இன்று காலை இலங்கையில் மாரடைப்பினால் காலமாகி விட்டார் என்று அறிய முட

குமாரசாமி

நானும் இவரும் பல தடவைகள் தொலைபேசியில் உரையாடியுள்ளோம்.யாழ்களத்தை தவிர வேறு எந்த விடயங்களும் எமக்குள் பகிர்ந்து கொண்டதில்லை. ஏனெனில் அவர் கொள்கை வேறு என் கொள்கை வேறு. ஆனால் யாழ்களத்தை பொறுத்தவரை இருவரு

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இன்று 22.04.2022 காலை 11.00 மணிக்கு  இறுதிச் சடங்குகள் ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'நடு நிலப்பாணன் கோமகன் நடு மின்னிதழ் ஆசிரியரும் எழுத்தாளருமான கோமகன் அவர்களின் நினைவு ஆற்றுகை கோமகனுடனான நினைவுகளை நண்பர்கள் இணைய வழியில் பகிர்ந்துகொள்கிறார்கள். சனிக்கிழமை ஒருங்கிணைப்பு ஒரு ப.தெய்வீகன் ஒழுங்கமைப்பு கோமகனின் நண் கள் இலங்கை ஐரோப்பா ஆஸ்திரேலியா கனடா meeting ID 896 818 2754 zoom passcode 1965'

 

நாளை சனிக்கிழமை... கோமகன் நினைவுகளை, 
நண்பர்கள்.. பகிர்ந்து கொள்கின்றார்கள்.
நீங்களும் விரும்பினால், கலந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்த நாளில் இருந்து சொல்லவும் எழுதவும் வார்த்தைகள் இல்லாமல் பேரதிர்ச்சியாக இருக்கிறது.. எழுத ஆயிரம் நினைவுகள் இருக்கிறது.. தனிமையையும் வெறுமையையும் போக்க அவருக்கு நண்பர்கள் எல்லாம் எழுத்தின் மூலம் கிடைத்தவர்களே.. அந்த எழுத்து உலகும் யாழின் மூலமே அவருக்கு அறிமுகமானது.. யாழ் ஒவ்வொரு காலப்பகுதியில் ஒவ்வொரு விதமானதாக கருத்தாளர்களின் மனநிலையை பிரதிபலிக்கும்.. நெடுக்ஸ் கூறியதுபோல் அவர் யாழில் எழுதிய காலங்கள் சுய ஆக்கங்களின் பொற்காலம்.. அவருக்கு முன்னாடியே சென்றுவிட்ட தமிழ் இலக்கிய உறவுகளிடம் சென்று சேர்ந்து நிம்மதியாக இருப்பார் என்று நம்புகிறேன்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

  • Like 10
  • Thanks 8
Link to comment
Share on other sites

5 minutes ago, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் 

இக்கட்டான நேரத்திலும் நேரம் ஒதுக்கி சென்று அஞ்சலி செலுத்தியதும் இல்லாமல் யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்தமைக்கு மிக்க நன்றி வாத்தியார்.

 

7 minutes ago, வாத்தியார் said:


காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

உங்கள் மாமாவின் இழப்பின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

ஓ சோ சாட்..ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வாத்தியார் said:

எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது

உங்கள் மாமனாரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் மிகவும் சிறப்பாக செயலாற்றியிருக்கிறீர்கள்........உங்களின் மாமனாரின் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

உங்களின் மாமனாரின் இழப்பினால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவிக்கினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

 

நன்றி செயலும்  நேரமும் பெரும்  ஆத்ம  திருப்தி தருகிறது

நன்றி சகோ

உங்கள் மாமாவின் இழப்பின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

மாமனார் மறைவின் கவலையும், காரியங்களும் மிகுந்திருந்த வேளையிலும் யாழ்கள உறவான கோமகனுக்கு  இணையம் சார்பாகவும் இணையத்தின்  உறவுகள் சார்பாகவும் மலர்வளையம் வைத்து எங்கள் மனங்களுக்கும் ஆறுதல் அளித்த வாத்தியாருக்கு மனம் நிறைந்த நன்றிகள்.!!🙏

உங்கள் மாமனாரின் ஆத்மாவும் சாந்தியடைய ஆண்டவனை வணங்கி வேண்டுகிறேன்.💐 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

உங்கள் துயரத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

உங்கள் துயரத்திலும்… நேரம் ஒதுக்கி, கோமகனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு…
யாழ்.களம் சார்பாக, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியமை…
மிகப் பெரிய ஒரு செயல்.
உங்கள் மாமனாருக்கும்.. எமது அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

வாத்தியார் உங்கள் மாமனாரின் இழப்பால் துயருற்றிருக்கும் உங்கள் குடும்பத்தவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

கோமகனின் இறுதி ஊர்வலத்தில் யாழ்களம் சார்பாக பங்கு கொண்டு சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவின் இழப்பு பெரியது. யாழ் இணையத்துடன் முரண்பாடுகள் இருந்தாலும் தன்னை ஆளாக்கியது யாழ் இணையம் தான் என்று பல இடங்களில் கூறியுள்ளார்.  யாழ்  இணையத்தின் ஊடாக அவருக்கு அறிமுகமான தமிழ்ப் பெடியன் ஒஸ்ரேலியாவிலிருந்து வந்த அன்றே கோவின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளவந்து "அண்ணை உங்களை உயிருடன் ஒருமுறைகூடப் பார்க்க முடியவில்லையே" என்று  கலங்கி அழுததாக சுசீலா கூறினார். வாத்தியாரும் யாழ் இணையசார்பில் மலர்வளையம் வைத்ததையும் நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2022 at 15:41, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

அனுதாபங்கள் அண்ணா.

நம்சார்பாக அஞ்சலி செலுத்தியமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் உங்கள் மாமனாரின் இழப்பால் துயருற்றிருக்கும் உங்கள் குடும்பத்தவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

கோமகனின் இறுதி ஊர்வலத்தில் யாழ்களம் சார்பாக பங்கு கொண்டு சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும் 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.