Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோமகன் இன்று காலமாகி விட்டார்.


Recommended Posts

  • Replies 73
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

வாத்தியார்

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன்  கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் . இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது  காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி

நிழலி

“நடு” இணைய இதழின் ஆசிரியரும் , நடு வெளியீட்டகத்தின் வெளியீட்டாளரும், புலம்பெயர் தமிழ் இலக்கிய பரப்பில் நன்கு அறியப்பட்டவருமான கோமகன் இன்று காலை இலங்கையில் மாரடைப்பினால் காலமாகி விட்டார் என்று அறிய முட

குமாரசாமி

நானும் இவரும் பல தடவைகள் தொலைபேசியில் உரையாடியுள்ளோம்.யாழ்களத்தை தவிர வேறு எந்த விடயங்களும் எமக்குள் பகிர்ந்து கொண்டதில்லை. ஏனெனில் அவர் கொள்கை வேறு என் கொள்கை வேறு. ஆனால் யாழ்களத்தை பொறுத்தவரை இருவரு

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.6F2265F1-D1D9-4426-8134-FE2781F36DA4.webp.0ae1bc6586d36d1ed4d4382ef3123aa2.webp

 

கோமகன் மரணமடைந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியைத் தந்தது. 

கோமகன் யாழ் களமூடாக அறிமுகமாகியவர். அவர் யாழ் களத்தில்தான் தனது எழுத்துப் பயணத்தை ஆரம்பித்தார் என நினைக்கின்றேன். கதை, கவிதை, பட்டிமன்றம், தமிழ் இலக்கியம், இலக்கணம் என்று மட்டும் இல்லாமல் கள உறுப்பினர்களுடனான அலப்பறைகளுக்கும் குறைவில்லை. தமிழ்த்தேசிய அரசியலின் மீதான மாற்றுப் பார்வையால் முரண்பட்ட கருத்துக்களை வைத்து யாழ்களத்தை சில காலம் கொதிநிலையிலும் வைத்திருந்தார்.

யாழ் களத்தில் தனிமடலிலும், அதன் பின்னர் முகநூல் உள்பெட்டியினூடாகவும் மிகவும் பண்பாகவும், இனிமையாகவும், தனக்கேயுரிய பகிடிகளுடனும் உரையாடியவர். 

முகநூலில் சுறுக்கரின் பகிடிகள் மட்டுமில்லாமல், இலக்கிய உரையாடல்களும், விமர்சனக் குறிப்புக்களும், அரசியல் அவதானங்களும் என்று சுறுசுறுப்பாகவே இருப்பார்.

அவரது சிறுகதைகள், நேர்காணல்கள் “நடு” இணைய இதழில் வெளிவரும்போதெல்லாம் அபிப்பிராயங்களைக் கேட்பார். அவரது ஆக்கங்களை யாழில் இணைத்து “வாசக நயப்பை” சில வரிகளில் கொடுப்பதுண்டு.

அண்மையில் தாயகத்திலிருந்து அவர் தோட்டத்தில் களையெடுத்த படத்தைப் போட்டபோது “மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல் வேலை புரிபவன் வேறு யார்?” என்று கலாய்த்திருந்தேன். ஆனால் அவர் விடுமுறை முடிந்து திரும்ப பிரான்ஸ் வரமுன்னரே இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் என்பதை மனம் நம்ப மறுக்கின்றது.

நண்பர் கோமகனின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

C9989-EFA-02-B4-4-FEE-800-B-0462746-D144

தனதுநடுஇணைய சஞ்சிகைக்கு என்னிடம் இருந்து கோமகன் ஓவியங்களைப் பெற்றிருந்தார். என்னை நடு இதழுக்குள் உள்வாங்கவும் அவர் விருப்பம் கொண்டிருந்தார். தமிழ்கார்டியன், பொங்குதமிழ் இரண்டிற்கும் அப்பொழுது எனது பங்களிப்பு௧ள் இருந்ததால் அவர் கேட்ட பொழுது என்னால் முடியாமல் போயிற்று.

பொதுவாக படைப்பாளிகளுக்குள்நான், நீஎன்ற சச்சரவுகள் இருக்கும். ஆனால் கோமகன் வேறுபட்டவர். எல்லோரிடமும் சுமூகமான நல்லுறவை வைத்திருந்தார்.

ஆழ்ந்த இரங்கல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சூடாக விவாதித்தாலும்  படைப்புகளில்  நல்லதொரு எழுத்துநடை இருக்கும்.  நம்பமுடியவில்லை.    அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உறவுகளோடு  ஆழந்த இரங்கலைப் பகிர்வதோடு இயற்கையுள் சங்கமித்துவிட்ட கோமகனவர்களின் ஆத்மா சாந்தியடைவதாக. 

Link to comment
Share on other sites

யாழ்களகளத்தில் கற்றுக்குட்டியாக நுளைந்த வேளை எனது கிறுக்கல்களையும் கருத்துக்களாக ஏற்று ஊக்கம்தந்த உறவுகளில் ஒருவர்தான் கோமகன். அவரை என்றாவது ஒருநாள் சந்திக்கவேண்டும் என்ற எனது ஆசையை நிராசையாக்கிவிட்டு அவர் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

கோமகன் அவர்களின் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுவதோடு அவர் குடும்பத்தவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களால் மாறுபட்டிருந்தாலும் தமிழால் இவர் யாழில் இணைந்திருந்த காலங்கள் இப்பவும் பசுமையாக.

அன்னாருக்கு கண்ணீரஞ்சலியும் குடும்பத்தார் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Paanch said:

அவரை என்றாவது ஒருநாள் சந்திக்கவேண்டும் என்ற எனது ஆசையை நிராசையாக்கிவிட்டு அவர் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

நானும் இவரும் பல தடவைகள் தொலைபேசியில் உரையாடியுள்ளோம்.யாழ்களத்தை தவிர வேறு எந்த விடயங்களும் எமக்குள் பகிர்ந்து கொண்டதில்லை. ஏனெனில் அவர் கொள்கை வேறு என் கொள்கை வேறு. ஆனால் யாழ்களத்தை பொறுத்தவரை இருவரும் சம நிலையை பேணினோம்.அரசியலும் பேசியதில்லை.நாட்டு நிலவரங்களும் பேசியதில்லை.

யாழ்களத்தை கலகலப்பாக வைத்திருக்க ஒரு திரி ஆரம்பிக்கப்பட்டது.அதில் நானும் கோமகனும் சேர்ந்து சில நிகழ்ச்சி நிரல்களை தயாரித்து தொடர்ந்த போது அது அரசியலாக்கப்பட்டு நானும் பலரது வெறுப்புகளுக்கு உள்ளாகினேன்.அந்த திரியை பலர் பகிஸ்கரித்தார்கள்.வெறும் அரசியல் காரணங்களுக்காக மட்டும்.ஆனால் அந்த திரி யாழ்களத்திற்கானது என்பது மட்டும் எனக்கு தெரியும்.இது சம்பந்தமாக நான் நள்ளிரவு வேலையால் வரும்  வரைக்கும் காத்திருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு விவாதிப்பார்.பல இடங்களில் என் தொனியை கூட்டி கதைக்கும் போது அப்படியெல்லாம் கதைக்கக்கூடது என்பார்.

முகநூலிலும் பல கலாய்ப்புகளுடன் எமக்குள்ளான உறவு இருந்தது.இருந்தாலும் ஏனோ தெரியவில்லை எதுவுமேயில்லாமல் கருத்துபரிமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டு விட்டது.யாழ்கள மூத்த உறவு சாத்திரியும் அவரது நெருங்கிய நண்பர். அவருக்கும் இந்த அவலச்செய்தி அதிர்சியை கொடுத்திருக்கும். ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மைத்ரேயின் கைப்பக்குவம் எனும் சமையல் திரியும் அவருடையது என நினைக்கின்றேன்

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவால் வாடும் உறவுகளுக்கு என் அனுதாபங்கள்.

யாழின் அறுசுவைகளில் ஒன்று அன்றே அகன்றது. இன்றோ அது அணைந்தே விட்டது.

எனக்கு இவரை வாசகனாக மட்டுமே தெரியும். எல்லாரைபோலவும் இவருடனும் கருத்து ஒற்றுமை, வேற்றுமை இருந்தது.

ஆத்மசாந்திக்கு பிரார்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.
பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனின் பிரிவால் துயருற்று இருக்கும், குடும்பத்தினருக்கும்…
உற்றார் உறவினருக்கும், ஆழ்ந்த அனுதாங்கள்.பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அவர்களின் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுவதோடு அவர் குடும்பத்தவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரது பூதவுடல் சொந்த ஊரான கோப்பாயில் நடைபெற இருப்பதாக அறிந்தேன்.

மிகவும் கொடுத்து வைத்தவர்.

Link to comment
Share on other sites

மிகவும் அதிர்ச்சியான செய்தி. யாழ் மூலமாகத்தான் கோம்ஸை (என்னை தும்ஸ் எண்டு மனிசன் கூப்பிடும்) எனக்குத் தெரியும். நேரிலே சந்திக்க வேண்டும் எண்டு நினைத்த உறவுகளில் ஒருவர். ஒரு கையில் கோப்பியுடனும் மறுகையில் சிகரெட்டுடனும் தனது பால்கனியில் இருந்து விடுப்பு பார்ப்பது அவரது தெரபி. அருமையான, பழக இனிய மனிசன். எல்லாருடைய எழுத்துக்களையும் ஊக்கப்படுத்துவார். எனது சில கிறுக்கல்களையும் முகநூலில் பகிர்ந்திருக்கிறார். நடுவுக்கு ஏதாவது ஆக்கம் கேட்டிருந்தார். எனக்கு எழுதப்பஞ்சி/நேரப்பிரச்சினை. கொஞ்சநாளா ஆளை வெட்டி விளையாடிக்கொண்டிருந்தேன். மனிசனும், உந்த கேஸ் உருப்படாது எண்டு பேசாமல் விட்டிட்டார். இலக்கியப் பரப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார். இலங்கை, புலம்பெயர் நாடுகள் தவிர தமிழகத்திலும், கிழக்கிலங்கை இஸ்லாமிய இலக்கிய வட்டத்திலும் பல நண்பர்களை கொண்டிருந்தார்.  

போய் வாருங்கள் அண்ணை, ஆழ்ந்த இரங்கல்கள் அக்கா.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்ம சாந்திக்கு பிரார்திக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 1 person and indoor
 
யாழ் கருத்துக்களத்தில் சந்தித்த மறக்க முடியாத உறவுகளில் ஓன்று இன்று எம்மை விட்டு பிரிந்தது.
ஆழமான சிந்தனையாளன் அவருக்கும் எனக்கும் இருவேறு அரசியல் நிலைப்பாடுகள் ஆனாலும் எந்தவித சமரசமும் இல்லாமல் தனது சார்பு போராட்ட இயக்கத்தையும் அரசியல் எதிர் கருத்தையும் துணிந்து பொது வெளியில் வைத்தவர் அதனால் நிறைய சண்டையும் பிடித்திருக்கிறோம் இருவரும் கருத்துக்களால் தான் முரண் பட்டோமே தவிர அதை தாண்டிய அன்பும் அக்கறையும் அவரிடம் இருந்தது
 
கோமகன் அண்ணா எழுதும் கதைகளும் சரி 2010 களின் ஆரம்பத்தில் அப்பொழுது யாழ் கருத்துக்களத்தில் அவர் எழுதிய ஊருக்கு போயிட்டு வந்த பயண தொடரும் ( நெருடிய நெருஞ்சி ) வாரா வாரம் எப்பொழுது வரும் என்று காத்திருந்து படித்தது நினைவுகளில் வந்து போகிறது அவ்வளவு சுவாரசியமா அதை எழுதி இருந்தார்
சென்று வாருங்கள் கோமகன் அண்ணா
 
நீங்கள் எழுதிய கதைகளும் உங்கள் கருத்தாடல்களும் உங்களுடன் போட்டுக்கொண்ட அரசியல் சண்டைகளும் நினைவில் இருக்கும்.
Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பின்லாந்து தொடர்ந்து நோவேயை விட குறைந்த அளவு குடிவரவாளர்களையே கொண்டிருந்திருக்கிறது. அதனால்.. சொந்தச் சனத்தொகையிடையே வளப் பரம்பலை மகிழ்ச்சிக்குரிய மட்டத்தில் வைக்க முடிந்துள்ளது. குறிப்பாக சமூகத் தேவைகளாக வீடு மற்றும் அடிப்படைவசதிகள். டென்மார்க்.. சுவீடன்.. பின்லாந்து ஈயுவிலும் அங்கத்துவம் வகிப்பதால்.. ஈயு நிதிப் பங்கீடு அவர்களுக்கும் அமையும். நோர்வே அப்படியன்று. இதுவும் ஒரு காரணியாக இருக்கும்.    https://www.statista.com/statistics/1296469/immigration-nordic-countries/  
    • என்றாலும்  இலங்கை தமிழர்கள் சிலரது இதயங்கள் வாழ்கின்ற நாடுகள் 70 க்கும் 64 வது இடத்துக்கும் வந்தது கவலை தருகிறது. இந்தியா பெண்களை தெய்வமாக வணங்கும் நாடு 😂
    • நான் நல்லா இருக்கேன்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன்..வீடியோ வெளியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் Jeyalakshmi CPublished: Wednesday, March 22, 2023, 13:56 [IST] சென்னை: நான் நலமுடன் இருக்கிறேன். விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்துள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்ட நிலையில் அவர் வீடியோ மூலம் தனது உடல் நிலை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. ஈவிகேஎஸ் இளங்கோவனை கடந்த வாரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கொரோனா தொற்று மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஓரிரு நாட்களில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக அவருடைய நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. மீண்டார் இளங்கோவன் இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இதய பாதிப்பு இருப்பதால் அவர் சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. வீடியோவில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர் நலமுடன் இருப்பதாக நேரில் பார்த்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனது உடல் நலம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் அளிக்கப்பட்டுள்ள உடையில் இருக்கும் இளங்கோவன்..நான் நல்லா இருக்கேன்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று கூறியுள்ளார். இதனைப்பார்த்த அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/i-am-fine-i-will-be-discharged-soon-video-posted-by-evks-ilangovan/articlecontent-pf884143-504081.html டிஸ்கி: அம்மா இட்லி சாப்பிட்ட மாதிரியோ?
    • காணாமற்போன சம்பவங்கள்: இராணுவம் கடந்த காலத் தவறுகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய தருணம் வந்திருக்கிறது!   Photo, TAMILGUARDIAN கடந்த வாரம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க வழக்கொன்றின் போது 2019 மே மாதம் இராணுவத்திடம் சரணடைந்த மூன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென வவுனியா உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது. அந்த மூன்று உறுப்பினர்களும் அன்று தொடக்கம் காணாமற் போயிருப்பதுடன், அவர்களுடைய மனைவிமார் அது தொடர்பாக ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்கள். தமது கணவன்மாரை இராணுவத்திடம் ஒப்படைத்ததாக அப்பெண்கள் வழங்கிய சாட்சியத்தை தான் நம்புவதாகக் கூறிய நீதிபதி, இராணுவம் அவர்களை ஆஜர் செய்யத் தவறினால் அந்த நபர்கள் காணாமற் போன சந்தர்ப்ப சூழ்நிலைகளை எடுத்து விளக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். ஓர் ஆட்கொணர்வு மனு என்பது, பொது அல்லது தனியார் கட்டுக்காவலின் கீழ் சட்ட விரோதமாக அல்லது பொருத்தமற்ற விதத்தில் வைக்கப்பட்டிருக்கும் நபரொருவரை ஆஜர்படுத்துமாறு நிர்ப்பந்திப்பதற்கு, அவரை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்வதற்கு அல்லது சட்டத்தின் பிரகாரம் அந்த விடயத்தைக் கையாளுமாறு கேட்டுக் கொள்வதற்கு கிடைக்கும் ஒரு நிவாரணமாகும். இராணுவத் தளபதி, 58ஆவது படையணியின் தளபதி மற்றும் முல்லைத்தீவு இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த விண்ணப்பங்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், சம்பவம் நடந்த இடம் தொடர்பாக நியாயாதிக்கத்தைக் கொண்டிருக்கும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இது தொடர்பாக ஒரு விசாரணையை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென வவுனியா மேல் நீதிமன்றம் பணிப்புரை வழங்கியிருந்தது. இந்த விசாரணை முடிவடைவதற்கு ஒன்பது ஆண்டுகள் எடுத்தன. போரின் கடைசி நாட்களின் போது ஷெல் தாக்குதல்கள் மற்றும் குண்டுத் தாக்குதல்கள் என்பவற்றிலிருந்து தப்பிக் கொள்வதற்காக தாம் தப்பியோடிய போது நிலவிய கடும் திகில் மற்றும் குழப்ப நிலை என்பவற்றை அப்பெண்கள் எடுத்து விளக்கியிருந்தார்கள். அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்தை சென்றடைந்த பொழுது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் இருப்பின் அவர்கள் சரணடைய வேண்டுமென்றும், ஒரு விசாரணையின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தல்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நிலையில், அப்பெண்கள் தமது கணவன்மார் சரணடைய வேண்டுமென அவர்களைத் தூண்டினார்கள். அது தமது கணவன்மாரை அவர்கள் பார்த்த கடைசித் தடவை என்றும், இராணுவ ஆளணியினர் அவர்களை இலங்கை  போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் ஏற்றி, எடுத்துச் சென்றதைப் பார்த்ததாகவும் அப்பெண்மணிகள் கூறினார்கள். 58ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சாணக்கிய குணவர்தன இராணுவத்தின் சார்பில் சாட்சியமளிப்பதற்கென சட்டமா அதிபரினால் அழைக்கப்பட்டிருந்தார். எவரும் கைது செய்யப்பட்டதனையோ அல்லது தடுத்து வைக்கப்பட்டதனையோ அவர் மறுத்தார். ஆனால், குறுக்கு விசாரணையின் போது 2009 மே 17, 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் ஆட்கள் இராணுவத்திடம் சரணடைந்ததையும், அவ்விதம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஒரு பதிவேட்டை இராணுவம் வைத்திருந்தது என்பதனையும் அவர் ஏற்றுக் கொண்டார். எவ்வாறிருப்பினும், மேஜர் ஜெனரல் குணவர்தன அந்தப் பதிவேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறினார். ஆனால், அதற்குப் பதிலாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்டிருந்த ஒரு பதிவேட்டை அவர் எடுத்து வந்திருந்தார். அந்த மூன்று நபர்களும் இராணுவத்திடம் சரணடைந்திருந்தார்கள் என அளிக்கப்பட்ட சாட்சியம் குறித்து நீதிமன்றம் திருப்தியடைந்திருப்பதாகக் கூறிய நீதிபதி, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது இராணுவத்தின் பொறுப்பாகுமென சொன்னார். இராணுவம் மார்ச் 22 ஆம் திகதி (இன்று) அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென கட்டளையிடப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் இதே மாதிரியான ஒரு கட்டளை வழங்கப்பட்டிருந்தது. போரின் இறுதிக் கட்டத்தின் போது முல்லைத்தீவில் வைத்து தனது குடும்ப உறுப்பினர்களால் ஆயுதப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நபரொருவரை ஆஜர்படுத்த வேண்டுமென வவுனியா உயர்நீதிமன்றம் இராணுவத்துக்கு கட்டளையிட்டது. இராணுவம் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தவறினால் அவர் காணாமற்போன சந்தர்ப்ப சூழ்நிலைகளை அது எடுத்து விளக்க வேண்டுமெனக் கூறிய நீதிமன்றம், அதனை நிரூபிக்கும் பொறுப்பை இராணுவம் கொண்டிருப்பதாக மேலும் கூறினார். இராணுவத்தின் சார்பில் சாட்சியமளித்த சாட்சி ஒருவர் குறிப்பிட்ட தினத்தின் போது சரணடைந்தவர்களை ஆவணப்படுத்திய ஒரு பதிவேடு இருப்பதை ஏற்றுக் கொண்ட பின்னர், காணாமல்போன நபர் ஆயுதப் படையினரின் கட்டுக்காவல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தார் என்பதை நீதிமன்றம் நம்புவதாக நீதிபதி குறிப்பிட்டார். ஆனால், அந்தப் பதிவேட்டை சாட்சி  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறினார். இந்த ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்த மூன்று பெண்களில் ஒருவர் அனந்தி சசிதரன் ஆவார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளி ஒருவராக இருந்து வந்த தனது கணவரான எழிலனை அன்றைய தினம் அவர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வேண்டுமென அனுப்பி வைத்திருந்தார். பின்னர் அவருடைய கணவர் காணாமற் போயிருந்தார். தன்னுடைய கணவர் மீண்டும் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையிலேயே சரணடையுமாறு அவர் கணவரிடம் கூறியிருந்தார். கணவர் அவ்விதம் திரும்பி வராத பொழுது அனந்தி அவரைத் தேடத் தொடங்கியதுடன், அதனைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். அனந்தி தனது விடயத்தை ஜெனீவாவில் ஐ.நா. மன்றத்துக்கு எடுத்துச் சென்றதுடன், போர்க் குற்றங்களுக்கு வகைப் பொறுப்புக் கூற வேண்டிய ஓர் அரங்கு  என்ற முறையில் நாடாளுமன்றத்திற்குள் பிரேவேசிப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. நீதிமன்றத் தீர்ப்பின் முக்கியத்துவம் குறித்த கேள்விகளுக்கு அனந்தி பதிலளித்ததுடன், நீதிக்கான தனது போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் எனக் குறிப்பிட்டார். உங்கள் கணவரை ஆஜர்படுத்துமாறு இராணுவத்தைக் கோரும் நீதிமன்ற தீர்ப்பு எவ்வளவுமுக்கியமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 18.05.2009 இல் இலட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்த இடத்தில் இலங்கை இராணுவத்திடம் நிராயுதபாணியாக கையளித்திருந்தேன். ICRC, HRC மற்றும் புனர்வாழ்வு அமைச்சர்கள், ஜனாதிபதி, பிரதமர் என்று சகலரிடமும் முறையிட்டேன். 2009 இலேயே ஐ.நா. மன்றத்திடமும் முறையிட்டிருந்தேன். ஒரு பதிலும் இல்லை. 2013 இல் ஆட்கொணர்வு மறுவழக்கு வவுனியா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சரணடைந்த சம்பவம் முல்லைத்தீவு எல்லைக்குள் நடந்தபடியால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தாலும், இராணுவ புலனாய்வாளர்களாலும் பல அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டேன். நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியில் புலனாய்வாளர்கள் எனது வாகனத்தை பின் தொடர்வதும், அச்சுறுத்துகின்ற வகையில் கண்காணிப்பதும், எனக்கு எதிராக CSD பண்ணையில் வேலை செய்கின்ற முன்னாள் போராளிகள், போராளிகளின் மனைவிமாரை கொண்டு போராட்டம் செய்வது, அவர்களைக் கொண்டு எனக்கு எதிராக கோசங்களை எழுப்புவது எல்லாமே நடந்தது. ஆனாலும் வழக்குகளுக்குத் தொடர்ந்து சென்று வந்தேன். இன்று வவுனியா உயர் நீதிமன்றில் எனது ஆட்கொணர்வு மனு வழக்கிற்கான தீர்ப்பு வந்துள்ளது என்பது ஒரு நம்பிக்கையையும் தெம்பையும் தந்திருக்கிறது. அறம் வெல்லும் என்ற நம்பிக்கை துளிர்விட்டிருக்கிறது. அது உங்களை எப்படி உணர வைத்தது? நான் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள், அவமானங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு கிடைச்சிருக்கு. மனக்காயம் கொஞ்சம் ஆறியமாதிரி இருக்கிறது.. அறம் வெல்லும் என்ற நம்பிக்கை துளிர் விட்டிருக்கு. இன்னும் நம்பிக்கையுடன், வலுவாக அறம் சார்ந்து போராடக்கூடிய மன எழுச்சி ஏற்பட்டிருக்கு. இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கு நீங்கள் மேற்கொண்ட செயல்முறை என்ன?  18.05.2009 இல் என் கணவரை சரணடையக் கொடுத்துவிட்டு, அரச உத்தியோகத்தருக்கான சொற்ப சம்பளத்தில் பிள்ளைகளை வளர்க்க, கல்வியை ஊட்ட, பாதுகாப்பாக வைத்திருக்க என்று பலவகையில் பொருளாதார ரீதியாகவும் உளரீதியாகவும் போராட வேண்டியவளாக இருந்தேன். இலங்கை இராணுவத்தின் விசாரணை, இலங்கை புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் எல்லாமே இருந்தது. முதன் முதலாக 2011இல் எனது மூன்று பிள்ளைகளையும் கொழும்பிற்கு பஸ்ஸில் கூட்டிக்கொண்டு சட்டத்தரணி ரத்னவேல் அவர்களைச் சந்தித்து எனது கணவரை சரணடைய கொடுத்த சம்பவத்தை விசாரித்து ஆட்கொணர்வு மனு வழக்கு தாக்கல் செய்து தருமாறு கோரியிருந்தேன். ரத்னவேல் சேர் சொன்னார் இவ்வழக்கு மிகவும் அச்சுறுத்தலானது, நீங்கள் தனியாக இதில் ஈடுபடுவதை விட இன்னும் சிலரை சேர்த்து இவ்வழக்கை தாக்கல் செய்யலாம் என்றார். இந்த வழக்கிற்கான பணம் எதுவும் தரத் தேவையில்லை எனவும் சொன்னார். எனவே, 2011 இல் கிளிநொச்சியில் எனது அலுவலக கடமை நேரம் முடிந்தபின் பஸ்ஸில் சென்று பல போராளிகளின் மனைவியார், தாய்மார்களைச் சந்த்தித்தேன். அதேபோல் யாழ்ப்பாணத்தில் சனி, ஞாயிறு நாட்களில் பஸ்ஸில் சென்று போராளிகளின் மனைவியாரைச் சந்தித்தேன். சுமார் 25 பேர் வரை சந்தித்தேன். இதில் நான்கு பேர் என்னுடன் சேர்ந்து வழக்குத் தாக்கல் செய்ய உடன்பட்டனர். பின்னர் இந்த நான்கு பேரையும் கொழும்பிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து ரத்னவேல் சேருடன் கடமையாற்றிய சட்டத்தரணி மங்களேஸ்வரி அவர்களின் உதவியுடன் வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அந்த நெருக்கடியான காலப்பகுதியில் CHRD யில் கடமையாற்றிய பலர் எங்களுக்கு அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தனர். குறிப்பாக சட்டத்தரணி மங்களேஸ்வரி மிகவும் துணிச்சலாக பக்கபலமாக இருந்தார். அடுத்த கட்டமாக ஐந்து பேரை இணைத்து வழக்கு தாக்கல் செய்தோம். இதில் பல சரணடைந்தவர்களின் மனைவியர் இதே வழக்கினை தாக்கல் செய்வதற்கு உடன்படவில்லை. தங்களுக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், அரசு தங்களை பழிவாங்கும், பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் மறுத்துவிட்டனர். இந்தத் தீர்ப்பால் என்ன நடக்கும் என்று நம்புகிறீர்கள்? இந்தத் தீர்ப்பு காணாமற்போனவர்களுக்காக போராடும் ஏனையோருக்கு முன்னுதாரணம். ஆயிரக்கணக்கானவர்கள் சரணடைந்தார்கள். எனவே, ஏனையவர்களும் வழக்குகளை தாக்கல் செய்ய முன்வர வேண்டும். இனி பாதுகாப்பு தரப்பிலிருந்து என்ன வெளிப்பாடு வரப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நீங்கள் ஜெனிவா சென்ற போது சர்வதேச சமூகம் உங்களுக்கு உதவியாக இருந்ததா? ஜெனிவா சென்றபோது அங்குள்ள தமிழ் அமைப்புக்கள் எங்களுக்கு எதுவுமே செய்துவிடவில்லை. ஆனாலும், நீதி கோருகின்ற பொது வேலைத்திட்டத்திற்கு 2014 இலிருந்து இன்றுவரை முன்னெடுத்து வருகிறேன். 2014/ 2015 களில் சர்வதேசம் எங்கள் கருத்துக்களை செவிமடுத்தது. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானிய, சுவிஸ் போன்ற நாடுகள் போரில் சாட்சியாக என் குரலை செவிமடுத்தது. ஆனால், சர்வதேசம் உருவாக்கிய நல்லாட்சிக்கு பின் சாத்தியமான எதுவும் நடக்கவில்லை. சர்வதேச விசாரணை என்பதை வலியுறுத்தினோம். 30/1 தீர்மானம் கலப்பு பொறிமுறை என்றது. பின்னர் வலுவிழந்த தீர்மானங்கள் நீர்த்துப் போனதாக இருக்கின்றது. 2013/ 2015௧ளில் நாடுகளும் சரி, சர்வதேச நிறுவனங்களும் சரி எங்களுக்கான நீதியை பெற்றுத்தருவதில் கரிசனைக் காட்டியது. இதன் காரணமாக போர் சாட்சியாக என்னையும் முன்னிலைப்படுத்தியது. இலங்கையில் ஏற்பட்ட 2015 ஆட்சி மாற்றத்தின் பின் எல்லாமே மாறிவிட்டது. ஆனாலும், தொடர்ந்து எனது நீதிகோரிய பயணம் தொடர்கின்றது. மனித உரிமைகள் பேரவையில் எத்தனை முறை உரையாற்றினீர்கள்? நான் 2014 தொடக்கம் இன்றுவரை 15 தடவைக்கு மேல் ஐ.நா. சபையில் பேசியுள்ளேன் முடிவு என்னவாக இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்? நல்ல முடிவுக்காக இன்றும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இன்றும் போராடவேண்டிய தேவை உள்ளது. உலக நாடுகள் தங்கள் நலன் சார்ந்து சிந்திக்கின்றனவே தவிர மனித நேயம் காக்கப்படுவதில்லை. மனித உரிமை என்பது வலுவிழந்தவர்களை கையாள எடுத்துக்கொள்ளும் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. 13 வருடங்கள் கடந்தும் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், தடை செய்யப்பட்ட நச்சு குண்டுகள், கொத்து குண்டுகள் கொண்டும் கொள்ளப்பட்டும் தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று கண்டுகொள்ளத் தவறிய ஐக்கிய நாடுகள் சபையை என்னவென்று சொல்வது? இறுதியில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளதா? காலம் கடந்தாலும் நீதியைப் பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இலட்சக்கணக்கான மக்களின் ஆன்மாக்கள், இனவிடுதலைக்காக தங்கள் உன்னதமான உயிரை ஆகுதியாக்கிய ஆயிரக்கணக்கான மாவீரர்களின் தியாயங்கள் வீண்போகாது. நீதியை பெற்றுக்கொள்ள போராடுவோம். அறம் வெல்லும். Military to Face a Day of Reckoning Over the Disappeared என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளியான நேர்க்காணலின் தமிழாக்கம்.   https://maatram.org/?p=10758  
    • கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த முயற்சியும் இல்லை 😭  ஆகக் குறைந்தது யாழ் களத்திலாவது நெடுக்ஸ்யும் கோசானையும் யஸ்ரினையும் (ஒரு உதாரணத்திற்கு தான் 3 பெயர்கள்) ஆவது ஒரு கோட்டின் கீழ் கொண்டு வரமுடியுமா? முடிந்தால் அறிவாயுதப்போர் பற்றி பேசும் தகுதியாகவாவது கொள்ளலாம். 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.