Jump to content

பிரச்சினைகளுக்கு... தீர்வு வழங்காவிட்டால்,  "பௌத்த சங்க சாசனத்தை" அமுல்படுத்துவோம் – பௌத்த பீடங்களின்... மகாநாயக்க தேரர்கள், எச்சரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் பௌத்த சங்க சாசனத்தை அமுல்படுத்துவோம் – பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எச்சரிக்கை!

பிரச்சினைகளுக்கு... தீர்வு வழங்காவிட்டால்,  "பௌத்த சங்க சாசனத்தை" அமுல்படுத்துவோம் – பௌத்த பீடங்களின்... மகாநாயக்க தேரர்கள், எச்சரிக்கை!

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பௌத்த சங்க சாசனத்தை அமுல்படுத்துவதாக மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எச்சரித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்குமாறு கோரி ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களிடமும் மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடிதம் ஒன்றின் மூலம் அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறுகோரி, கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் சாதகமாக அவதானம் செலுத்தப்படாமை குறித்து அவர்கள் தங்களது கவலையை வெளியிட்டுள்ளனர்.

புதிய அமைச்சரவை நியமனம் பிரச்சினைக்கு தீர்வாகாது எனவும் 20ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி 19ஆம் திருத்தச் சட்டத்தின் சாதகமான அம்சங்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1277697

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பௌத்த சங்க சாசனத்தை அமுல்படுத்துவதாக மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எச்சரித்துள்ளனர்

மொட்டமார் உக்கிரமா மாறுவதற்குள் தீர்வை வழங்கிடுக..😊

IMG-20220421-113428.jpg

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மொட்டமார் உக்கிரமா மாறுவதற்குள் தீர்வை வழங்கிடுக..😊

IMG-20220421-113428.jpg

குருநாதா on Twitter: "எங்களுக்கு வரவேண்டிய காவிரி தண்ணீரை தடுக்குற  நாயி.எங்ககிட்ட இருந்து வர மின்சாரத்த எதுக்கு யூஸ் பண்ற #WeHateKarnataka… "  تويتر \ குருநாதா (maangamadayan86@)

இனித்தான்... ஸ்ரீலங்கா அரசியல் சூடு பிடித்து, 
கொதி நிலைக்கு போகப் போகுது.
வந்திட்டான்யா...  மொட்டையன்.  🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

பிரச்சினைகளுக்கு... தீர்வு வழங்காவிட்டால்,  "பௌத்த சங்க சாசனத்தை" அமுல்படுத்துவோம் – பௌத்த பீடங்களின்... மகாநாயக்க தேரர்கள், எச்சரிக்கை!

இந்த மூன்று மகாநாயக்க தேரர்களில் ஒருவரை சனாதிபதி ஆக்கிவிட்டால்.......!  ஆனால் இவர்கள் தங்கள் மக்களைக் கவருவதற்கு ஒரு முள்ளிவாய்கால்தானே இருக்கிறது. இன்னமும் இரண்டு வேண்டுமே.....!! 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஆட்சி செய்வது எந்த சாசனத்திலயாம்......!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பிரச்சினைகளுக்கு... தீர்வு வழங்காவிட்டால்,  "பௌத்த சங்க சாசனத்தை" அமுல்படுத்துவோம் – பௌத்த பீடங்களின்... மகாநாயக்க தேரர்கள், எச்சரிக்கை!

என்ன பிரச்சனைகளுக்கு தீர்வு??????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெட் மொட்டையள்..... கோதாவுக்குள்ள இறங்கி.... பசியில இருக்கிற சனத்திடம் வாங்கப் போகினம்.....

பேசாம.... வழக்க் போல..... ‘குடியும், குடித்தனமாக’ இருக்கிறது, நல்லது.... 😁

Link to comment
Share on other sites

மொட்டைகளும் வாங்கி தான் திருந்த வேண்டும் என்றால் யாராலும் எதுவும் செய்ய முடியாது.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் சாதகமாக அவதானம் செலுத்தப்படாமை குறித்து அவர்கள் தங்களது கவலையை வெளியிட்டுள்ளனர்.

பிச்சை எடுத்து நீங்கள்  வயிற்றை பார்த்து கொள்வீர்கள்......புத்தசாசனப்படி ...ஆனால் பிச்சை கொடுக்கிறவனுக்கு  சாப்பாட்டுக்கு முதலாளித்துவாதிகளிடம் கையேந்த வேணுமே ....

உங்கன்ட புத்தசான வங்கியில்  பில்லியன் டொலர் இருக்கோ 

1 hour ago, குமாரசாமி said:

என்ன பிரச்சனைகளுக்கு தீர்வு??????????

தமிழனை எப்படி இந்த பிரச்சனைக்குள் கொர்த்துவிட்டு  ராஜபக்சாவை காப்பற்றுவதற்கான தீர்வு....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

பிச்சை எடுத்து நீங்கள்  வயிற்றை பார்த்து கொள்வீர்கள்......புத்தசாசனப்படி ...ஆனால் பிச்சை கொடுக்கிறவனுக்கு  சாப்பாட்டுக்கு முதலாளித்துவாதிகளிடம் கையேந்த வேணுமே ....

உங்கன்ட புத்தசான வங்கியில்  பில்லியன் டொலர் இருக்கோ 

தமிழனை எப்படி இந்த பிரச்சனைக்குள் கொர்த்துவிட்டு  ராஜபக்சாவை காப்பற்றுவதற்கான தீர்வு....

அதென்ன சங்கசாசனம் ?யாராவது விளக்கம் சொல்லுங்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

என்ன பிரச்சனைகளுக்கு தீர்வு??????????

தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால்...
நாட்டை, சிங்கப்பூர் மாதிரி முன்னேற்றலாம் என்று...
பிக்குகளுக்கு... இப்ப தான் புரிந்து உள்ளது போல் தெரிகின்றது.

காலம் கடந்தாலும், அதுவே நல்ல மாற்றம் தானே.
அதுதான்...  பிக்குகள், தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணச்  சொல்லி,
அரசுக்கு... அழுத்தம் கொடுக்கின்றார்கள். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.