Jump to content

யுக்ரேன் போர்: கடும் விலையேற்றம், உணவுக்கு தட்டுப்பாடு – எச்சரிக்கும் உலக வங்கி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் போர்: கடும் விலையேற்றம், உணவுக்கு தட்டுப்பாடு – எச்சரிக்கும் உலக வங்கி

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

உணவு நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியால் இந்த உலகம் "மானிட பேரழிவை" சந்தித்து வருவதாக, உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடி தொடர்ந்தால், உணவுப்பொருட்களின் அதிகப்படியான விலை ஏற்றத்தால், மில்லியன்கணக்கிலான மக்கள் வறுமை மற்றும் ஊட்டச்சத்தின்மையை நோக்கித் தள்ளப்படுவார்கள் என, டேவிட் மால்பஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

உணவுப்பொருட்களின் விலையில் "கடும் ஏற்றமாக" 37% அளவுக்கு விலை உயர்வு ஏற்படும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.

இது ஏழைகளை பெருமளவு பாதிக்கும் என தெரிவித்துள்ள உலக வங்கி, "இந்நெருக்கடியால் அவர்கள் குறைவான உணவை உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும், மேலும் பள்ளிப்படிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு அவர்களிடம் குறைவான பணமே இருக்கும்" என தெரிவித்துள்ளது.

உலகளாவிய வறுமை ஒழிப்பு நிறுவனமான உலக வங்கியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவரான மால்பஸ், பிபிசி பொருளாதார ஆசிரியர் ஃபைசல் இஸ்லாம் உடனான நேர்காணலில் பேசுகையில், ஏழைகள் மீதான இந்த தாக்கம் "இதனை நியாயமற்ற நெருக்கடியாக மாற்றியுள்ளது" எனவும், "கோவிட் தொற்று விஷயத்திலும் இதுதான் உண்மை" எனவும் அவர் தெரிவித்தார்.

"இது மானிட பேரழிவு, அதாவது இந்த நெருக்கடியால் மக்கள் குறை ஊட்டச்சத்தை நோக்கித் தள்ளப்படுவார்கள். ஆனால், இதுகுறித்து எதுவும் செய்ய முடியாத, இந்நெருக்கடிக்கு தாங்கள் காரணம் இல்லாத அரசுகளுக்கு இது அரசியல் சவாலாகவும் மாறும். உணவுப்பொருட்களின் விலை உயர்வதை அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்" என, வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் - உலக வங்கி கூட்டத்தில் மால்பஸ் தெரிவித்தார்.

இந்த விலை உயர்வு ஆழமான மற்றும் விரிவான தாக்கங்களை கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், "அனைத்துவிதமான எண்ணெய் மற்றும் தானியங்களின் விலைகளையும் இந்த நெருக்கடி பாதித்துள்ளது. மேலும், சோளப்பயிர் உள்ளிட்ட மற்ற பயிர்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஏனெனில், கோதுமை விலை உயரும்போது இவற்றின் விலையும் உயரும்" என கூறினார்.

அனைவருக்கும் தேவையான உணவு இந்த உலகில் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், உணவுப்பொருட்களின் உலகளாவிய கையிருப்பு அதிகளவில் இருப்பதாகவும் ஆனால், உணவு எங்கு தேவையோ அங்கு அவற்றை கொண்டு செல்வதற்கான பகிர்ந்தளிக்கும் அல்லது விற்பனை நடைமுறைகள் தேவை என தெரிவித்தார்.

 

உணவு நெருக்கடி

 

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

மேலும், உற்பத்திக்கு மானியம் வழங்குவது அல்லது விலைகளை கட்டுப்படுத்துவது போன்றவ வழிமுறைகளை அவர் ஊக்கப்படுத்தவில்லை.

மாறாக, உலகளவில் உரங்கள் மற்றும் உணவுப்பொருட்களின் விநியோகத்தை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்துவதும் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள மக்களுக்கான உதவிகளும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

உணவு மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரித்து வரும் நிலையில், வளரும் நாடுகள், கொரோனா தொற்று நோயால் ஏற்பட்டுள்ள தங்கள் பெரியளவிலான கடன்களைச் செலுத்த இயலாமையால் எழும் "நெருக்கடிக்கு உள்ளே ஒரு நெருக்கடி" குறித்து உலக வங்கித் தலைவர் எச்சரித்தார்.

"இதற்கான வாய்ப்பு உள்ளது. இது சில நாடுகளில் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது, எதுவரை இந்த நெருக்கடி செல்லும் என்பது தெரியவில்லை. 60 சதவீதத்திற்கும் அதிகமான ஏழை நாடுகள் தற்போது ஒன்று கடன் நெருக்கடியிலோ அல்லது கடன் நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் அதிக ஆபத்திலோ உள்ளன" என அவர் தெரிவித்தார்.

"கடன் நெருக்கடி குறித்து நாம் கவலைகொள்ள வேண்டும். கடன் சுமையை குறைப்பதற்கான வழிகளை மிக விரைவில் நாடுகள் தொடங்குவதுதான் சிறந்தது. எந்தளவுக்கு கடன் குறித்து செயலாற்றாமல் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு அதன் விளைவுகளும் மோசமானதாக இருக்கும்," என தெரிவித்தார்.

ஃபைசல் இஸ்லாம், பிபிசி பொருளாதார ஆசிரியர் - பகுப்பாய்வு

வளர்ந்துவரும் நாடுகளின் கடன் நெருக்கடி குறித்து நாம் கவலைகொள்ள வேண்டும் என, உலக வங்கியின் தலைவர் கூறியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

பெருந்தொற்றால் ஏற்பட்ட அதிகளவிலான கடன், உயர்ந்துவரும் வட்டி விகிதங்கள் மற்றும் விலை உயர்வு ஆகிய கூட்டு நெருக்கடிகள் உண்மையில் கொடுமை வாய்ந்ததாகும்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டங்களில், தொற்றுநோயை எதிர்கொள்ள கடன் வாங்குவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று பணக்கார நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளுக்கு கூறின.

ஆனால், தற்போது இந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா என வளர்ந்துவரும் நாடுகள் யோசிக்கின்றன.

https://www.bbc.com/tamil/global-61178847

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஏராளன் said:

யுக்ரேன் போர்: கடும் விலையேற்றம், உணவுக்கு தட்டுப்பாடு – எச்சரிக்கும் உலக வங்கி.

இங்கும்….. நினைக்க முடியாத அளவிற்கு, சகல பொருட்களும் விலை ஏறி உள்ளது.
சில பொருட்கள்… கடைகளிலேயே இல்லை.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியால் இந்த உலகம் "மானிட பேரழிவை" சந்தித்து வருவதாக, உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரேன் மீது ரஷ்ய படையெடுப்பால் உணவு பொருட்கள் விலையேற்றமாம்.ஏதோ உக்ரேன்  இந்த உலகத்துக்கு இவ்வளவுகாலமும் படியளந்த மாதிரி......

சவூதியிலை இருந்து வாற எண்ணை விலையேற்றத்துக்கும்
இந்தியாவிலை இருந்து வாற பசுமதி விலையேற்றத்துக்கும்
ஜேர்மனியிலை உற்பத்தியாகிற பால் விலையேற்றத்துக்கும்
ஏன் உலகம் முழுக்க எல்லா பொருட்களுக்குமான விலையேற்றத்துக்கும்

உக்ரேன் சண்டைக்கும் என்ன சம்பந்தம் எண்டதை யாரவது சொல்லுங்கோப்பா?
 

Link to comment
Share on other sites

2 minutes ago, குமாரசாமி said:

உக்ரேன் மீது ரஷ்ய படையெடுப்பால் உணவு பொருட்கள் விலையேற்றமாம்.ஏதோ உக்ரேன்  இந்த உலகத்துக்கு இவ்வளவுகாலமும் படியளந்த மாதிரி......

சவூதியிலை இருந்து வாற எண்ணை விலையேற்றத்துக்கும்
இந்தியாவிலை இருந்து வாற பசுமதி விலையேற்றத்துக்கும்
ஜேர்மனியிலை உற்பத்தியாகிற பால் விலையேற்றத்துக்கும்
ஏன் உலகம் முழுக்க எல்லா பொருட்களுக்குமான விலையேற்றத்துக்கும்

உக்ரேன் சண்டைக்கும் என்ன சம்பந்தம் எண்டதை யாரவது சொல்லுங்கோப்பா?
 

உலகளாவிய விலையேற்றத்துக்கு உக்ரெய்ன் போரினால் பங்குச் சந்தையில் ஏற்படும் பதட்ட நிலையும் ஒரு காரணம் என்று நம்புகிறேன்.

போர் ஆரம்பித்த முதல் நாள் அமெரிக்க ஐரோப்பிய பங்குகள் (NASDAQ, CAC40, DAX40 போன்றவை) பாரிய வீழ்ச்சியை அடைந்தன. பின்னர் ஒவ்வொரு நாளும் உயர முயற்சித்தாலும் சண்டையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் சம்பவங்களினால் மறுபடி திடீர் சரிவைச் சந்தித்தன. உதாரணமாக ரஸ்ய படைகள் சேர்னோபில் அணு நிலையத்தைச் சுற்றி வளைத்தபோது மீண்டுமொரு பாரிய சரிவு ஏற்பட்டது.

அதேவேளை மூலப்பொருட்கள் வரலாறு காணாத அளவில் ஏறியது. இதற்கான காரணம் ஒருவேளை பங்குச் சந்தை முதலீடுகளை மூலப் பொருட்களில் நகர்த்தப்பட்டதாக இருக்கலாம். மூலப் பொருட்களில் தங்கம் வெள்ளி பல்லாடியம் பிளட்டினம் போன்றவற்றுடன் கோதுமை பெற்றோல் போன்றனவும் அடங்கும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இங்கும்….. நினைக்க முடியாத அளவிற்கு, சகல பொருட்களும் விலை ஏறி உள்ளது.
சில பொருட்கள்… கடைகளிலேயே இல்லை.

அண்ணன் புட்டின் இன்னும் மனிதாபிமானத்துடன் இருக்கின்றார்.ஐரோப்பா பக்கம் வாற எரிவாயுவை நிப்பாடினால் தெரியும் கூத்து.
பாசமோ நேசமோ கோபமோ இடக்கை வலக்கை போல ஒருத்தரை ஒருத்தர் நம்பி வாழுறதுதான் உலக யதார்த்தம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@இணையவன்

இதனால் தான் மனிதநேயமற்ற மேற்குலகை வெறுக்க வேண்டிவருகின்றது. என்ன செய்வது உலகம் அவர்கள் கையில்.......

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அண்ணன் புட்டின் இன்னும் மனிதாபிமானத்துடன் இருக்கின்றார்.ஐரோப்பா பக்கம் வாற எரிவாயுவை நிப்பாடினால் தெரியும் கூத்து.
பாசமோ நேசமோ கோபமோ இடக்கை வலக்கை போல ஒருத்தரை ஒருத்தர் நம்பி வாழுறதுதான் உலக யதார்த்தம்.

மேற்கு நாடுகளுக்கு… கருனை உள்ளம் கொண்ட,
புட்டினைப் போன்ற எண்ணம்  இல்லவே இல்லை.
உண்மையில்…. மேற்கு உலகம் இரட்டை வேடமும், மனிதாபிமானமும் அற்றவர்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

மேற்கு நாடுகளுக்கு… கருனை உள்ளம் கொண்ட,
புட்டினைப் போன்ற எண்ணம்  இல்லவே இல்லை.
உண்மையில்…. மேற்கு உலகம் இரட்டை வேடமும், மனிதாபிமானமும் அற்றவர்கள்.

எல்லாம் கலிகாலம் சிறித்தம்பி.
ஒருசில கண்களுக்கு நல்லவன் கெட்டவனாய் தெரிகிறான் கெட்டவன் நல்லவனாய் தெரிகிறான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் கலிகாலம் சிறித்தம்பி.
ஒருசில கண்களுக்கு நல்லவன் கெட்டவனாய் தெரிகிறான் கெட்டவன் நல்லவனாய் தெரிகிறான்.

குமாரசாமி அண்ணை....
தமிழ்நாட்டில்... சில ஆட்கள்,  நாங்கள் பரம்பரை பரம்பரையாக..
காங்கிரசுக்கோ, தி.மு.க. விற்கோ, அ.தி.மு.க.விற்கோ... 
வாக்கு போட்ட குடும்பம் என்றும்.... இந்த முறையும் 
அதுக்குத்தான்  வாக்கு போடுவோம் என்று சொல்வார்கள்.  😂

அதிலை... 🐃 எருமை 🐃 நின்றாலும், அவர்கள் அந்தக் கட்சிக்கு  போடுற குணம் இருக்கு.
அதே... மாதிரி, இங்கையும் சிலருக்கு... வெள்ளைக்காரன் என்றால்...
ஏதோ.... கடவுள் மாதிரி, அவன் செய்யிறதெல்லாம் சரி என்று,
நினைக்கிறார்கள் போலுள்ளது.
அவர்களின்... அறியாமையை நினைத்து, பரிதாபப்  படுவதைத் தவிர வேறு வழி இல்லை. 🤣

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை....
தமிழ்நாட்டில்... சில ஆட்கள்,  நாங்கள் பரம்பரை பரம்பரையாக..
காங்கிரசுக்கோ, தி.மு.க. விற்கோ, அ.தி.மு.க.விற்கோ... 
வாக்கு போட்ட குடும்பம் என்றும்.... இந்த முறையும் 
அதுக்குத்தான்  வாக்கு போடுவோம் என்று சொல்வார்கள்.  😂

அதிலை... 🐃 எருமை 🐃 நின்றாலும், அவர்கள் அந்தக் கட்சிக்கு  போடுற குணம் இருக்கு.
அதே... மாதிரி, இங்கையும் சிலருக்கு... வெள்ளைக்காரன் என்றால்...
ஏதோ.... கடவுள் மாதிரி, அவன் செய்யிறதெல்லாம் சரி என்று,
நினைக்கிறார்கள் போலுள்ளது.
அவர்களின்... அறியாமையை நினைத்து, பரிதாபப்  படுவதைத் தவிர வேறு வழி இல்லை. 🤣

சிறித்தம்பி அது அறியாமை இல்லை  வெள்ளை /மேட்டுக்குடி மோகம் ☺️

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.