Jump to content

இனி ஒரு விதி செய்வோம்-பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

பசி பட்டினி பொருளாதாரத் தடை 
பெரும் போர் இழப்பு 
இதுவெல்லாம் புதிதல்ல 
ஈழத் தமிழருக்கு 
அதுவெல்லாம் கடந்து தான் 
நடந்து வந்தான் 

ஆனால் இவை எல்லாம் 
உங்களுக்கு புதிது தான் 

அன்று ஒரு நாள் 
அருகில் ஒரு தமிழ்க் குழந்தை 
பசி எடுத்து அழுத குரலும் 
கேட்கவில்லை 

பிள்ளைகளை தொலைத்து விட்டு 
பெரும் குரலாய் 
காடதிரக் கத்திய தாயின்
கண்ணீரில் எழுதிய 
கதை ஒன்றும் 
உங்கள் காதுகளில் 
கேட்கவில்லை 

எதுகுமே கேட்கவில்லை 
ஈரமனம் எவருக்குமாய் 
இருந்ததாய் தெரியவில்லை 

அன்பும் அறமும் 
தர்மமும் கொண்ட அந்த தம்மபத
புத்தனின் சிந்தனையும் 
உங்களுக்கு புரிந்ததாய் 
தெரியவில்லை 

கோபமும் கொலையுமாய் 
நல்லறிவை தொலைத்து விட்டு 
ஏதேதோ சூழ்ச்சி பண்ணி 
எங்களை வீழ்த்தி விட்டு 

துட்டகைமுனு கொண்டு வந்த 
யுத்தவெற்றி ஒன்று தான் 
நித்தம் உங்கள் தெருக்களிலே 
நீங்கள் பாடியது நினைவிருக்கா 

இனி ஒரு விதி செய்வோம் 
எல்லா இனமும் சமம் என்போம் 
இருளை கடந்து செல்வோம் 

தனி ஒருவனுக்கு 
உணவும் உரிமையும் இல்லையெனில் 
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்.

பா.உதயன் ✍️
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2022 at 11:14, uthayakumar said:

 

பசி பட்டினி பொருளாதாரத் தடை 
பெரும் போர் இழப்பு 
இதுவெல்லாம் புதிதல்ல 
ஈழத் தமிழருக்கு 
அதுவெல்லாம் கடந்து தான் 
நடந்து வந்தான் 

ஆனால் இவை எல்லாம் 
உங்களுக்கு புதிது தான் 

அன்று ஒரு நாள் 
அருகில் ஒரு தமிழ்க் குழந்தை 
பசி எடுத்து அழுத குரலும் 
கேட்கவில்லை 

பிள்ளைகளை தொலைத்து விட்டு 
பெரும் குரலாய் 
காடதிரக் கத்திய தாயின்
கண்ணீரில் எழுதிய 
கதை ஒன்றும் 
உங்கள் காதுகளில் 
கேட்கவில்லை 

எதுகுமே கேட்கவில்லை 
ஈரமனம் எவருக்குமாய் 
இருந்ததாய் தெரியவில்லை 

அன்பும் அறமும் 
தர்மமும் கொண்ட அந்த தம்மபத
புத்தனின் சிந்தனையும் 
உங்களுக்கு புரிந்ததாய் 
தெரியவில்லை 

கோபமும் கொலையுமாய் 
நல்லறிவை தொலைத்து விட்டு 
ஏதேதோ சூழ்ச்சி பண்ணி 
எங்களை வீழ்த்தி விட்டு 

துட்டகைமுனு கொண்டு வந்த 
யுத்தவெற்றி ஒன்று தான் 
நித்தம் உங்கள் தெருக்களிலே 
நீங்கள் பாடியது நினைவிருக்கா 

இனி ஒரு விதி செய்வோம் 
எல்லா இனமும் சமம் என்போம் 
இருளை கடந்து செல்வோம் 

தனி ஒருவனுக்கு 
உணவும் உரிமையும் இல்லையெனில் 
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்.

பா.உதயன் ✍️
 

உண்மைகளை கவிதையாய் வடித்தமைக்கு நன்றிகள் தோழர்..💐

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2022 at 04:11, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உண்மைகளை கவிதையாய் வடித்தமைக்கு நன்றிகள் தோழர்..💐

புரட்ச்சிகர தமிழ் தேசியன் உங்கள் கருத்துக்கு நன்றிகள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடக்கும் அரசியல் அவலங்களுக்கு சாட்சியாய் எழுந்து வரும் கவிதை......!  👍

நன்றி உதயன்.......!  🌹

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2022 at 11:19, nunavilan said:

கவிதைக்கு நன்றி, உதயன்.

நன்றிகள் நுணாவிலான்🌺

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.