Jump to content

மாதவிடாய்: நாப்கினுக்கு பதில் மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்துவது எப்படி? மருத்துவர் பதில்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாதவிடாய்: நாப்கினுக்கு பதில் மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்துவது எப்படி? மருத்துவர் பதில்கள்

  • சௌமியா குணசேகரன்
  • பிபிசி தமிழுக்காக
5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

உடல் நலம் - மருத்துவர் ஆலோசனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெண்ணின் வாழ்நாளில் சராசரியாக 400 முறை வரை மாதவிடாய் சுழற்சி நடைபெறுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்துதும் சானிட்டரி நாப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதற்கு ஒரு தீர்வாக மென்ஸ்ட்ருவல் கப் எனப்படும் மாதவிடாய் கப் இருக்கும் என நம்புகிறார்கள்.

மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிகக் குறைவே. நாப்கின் மற்றும் டாம்பான் பயன்படுத்துவதை விட மென்ஸ்ட்ருவல் கப் பயன் படுத்துவது சிறந்த முறை என்றாலும் இதை பயன்படுத்துவதற்கு பெரும்பாலான பெண்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இதை எவ்வாறு பயன்படுத்துவது? என்பது உள்ளிட்ட பல கேள்விகளும் குழப்பங்களும் அவர்கள் மனதில் எழுகின்றன. எனவே அவர்களின் சந்தேகத்தினைப் போக்கும் வகையில் மென்ஸ்ட்ருவல் கப் பயன்பாடு குறித்த பல கேள்விகளுக்கு பெண்ணியல் மருத்துவ வல்லுநர், டாக்டர் திருமகள் அளித்துள்ள விரிவான விளக்கத்தைப் பார்க்கலாம்.

கேள்வி: மென்ஸ்ட்ருவல் கப் என்றால் என்ன?

பதில்: மென்ஸ்ட்ருவல் கப் என்பது பெண்களின் மாதவிடாய் காலத்தில் அவர்களின் கருப்பை வாய்ப்பகுதியின் உட்புறத்தில் பொறுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்ட சிறிய அளவிலான கப் ஆகும். பெண்களின் மாதவிடாய் குருதி இந்த கப்பில் சேரும்.

மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்ட சிலிகான் எனும் பொருளால் இந்த கப்கள் செய்யப்படுகின்றன. இதில் எந்த திரவத்தை ஊற்றினாலும் அதனை இந்த கப் உரிஞ்சாது, வினைபுரியாது. எனவே இது பயன்படுத்துவதற்கு மிகவும் பாதுகாப்பானதாகும். ஒரு கப் வாங்கிவிட்டால் அதை பத்து ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். சுத்தப் படுத்துவதும் மிக எளிது. மென்ஸ்ட்ருவல் கப் பயன்பாட்டால் தொற்று ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு.

நாப்கினை விட மென்ஸ்ட்ருவல் கப் எந்தவகையில் சிறந்தது ?

பதில்: நாப்கின்கள் பயன்படுத்துவதை விட மென்ஸ்ட்ருவல் கப் பயன் படுத்துவது பல்வேறு வழிகளில் மிகவும் சிறந்ததாகும். ஏனெனில் நாப்கின் பயன்படுத்தினால், அதிக உதிரப் போக்கு ஏற்படும் பொழுது, உள்ளாடை மற்றும் ஆடைகளில் கறை ஏற்படும். நாப்கினில் நறுமணத்துக்காக சேர்க்கப்படும் வேதிப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றாலும், நடக்கும் போதும் மற்ற வேலைகள் செய்யும்போதும் தோலின் மீது நாப்கின் உரசுவதாலும், பிறப்புறுப்பு மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் அரிப்பு மற்றும் சிறு பருக்கள், கொப்பளங்கள் ஏற்படுகின்றன.

ஆனால் மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்தும்போது, இந்த சிக்கல்களைத் தவிர்க்க முடியும். ரத்தம் வெளியேறாமல் உள்ளேயே இருப்பதால் திரவ நிலையிலேயே இருக்கும் துர்நாற்றமும் வீசாது. ஒரு முறை வாங்கிய கப்பை பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்பதால் மாதம் தோறும் நாப்கின்கள் வாங்கும் செலவினையும் குறைக்க இயலும்.

பயன்படுத்துவது எப்படி?

 

மென்ஸ்ட்ருவல் கப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த கப்கள் சிலிக்கானில் செய்யப்படுவதால் மென்மையாகவும், வளையும் தன்மையுடனும் இருக்கும். கைகளை சுத்தமாக கழுவிவிட்டு சுத்தம் செய்த கப்பை "சி" வடிவத்தில் வளைத்து மடித்து கர்பப்பை வாய் பகுதியின் உட்புறத்தில் செலுத்த வேண்டும். செலுத்திய பிறகு தானாகவே மென்ஸ்ட்ருவல் கப் இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

எட்டு மணி நேரத்துக்குப் பிறகு வெளியில் எடுக்கும்போது கப்பின் கீழ் பகுதியில் உள்ள சிறிய கூம்பு பகுதியை பிடித்து இழுக்கக் கூடாது. மாறாக உட்புறம் செலுத்தும் பொழுது சி வடிவத்தில் வளைத்தது போன்று கப்பின் அடிப்பகுதியை அழுத்தி அதன் வாய் பகுதியை சிறியதாக மாற்றி எளிமையாக வெளியில் எடுக்க முடியும்.

மென்ஸ்ட்ருவல் கப் பராமரிப்பது எப்படி ?

மாதவிடாய் சுழற்சி ஆரம்பத்தில் முதல் முறை பயன்படுத்தும் பொழுது, சூடான நீரில் போட்டு ஐந்து நிமிடம் வரை கொதிக்க வைத்து, சுத்தம் செய்து பின்பு பயன்படுத்தலாம். அதன் பிறகு ஒவ்வொரு எட்டு மணி நேரத்திற்கு பின்பும் வெளியில் எடுத்து சாதாரண நீரில் கழுவிவிட்டு மீண்டும் பொருத்திக் கொள்ளலாம். தூய்மையான நீரில் கழுவுவது மிகவும் அவசியம்.

வெளியில் பயணம் மேற்கொள்ளும் பொழுது மென்ஸ்ட்ருவல் கப்பை கழுவும் நீர் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாதவிடாய் முடிந்த பின்பு சூடான நீரில் ஐந்து நிமிடம் வரை போட்டு கொதிக்க வைத்து, சுத்தப் படுத்தி எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.

மென்ஸ்ட்ருவல் கப்பை எவ்வாறு தேர்ந்தெடுப்பது ?

மென்ஸ்ட்ருவல் கப்கள் சிறியவை, நடுத்தரம், மற்றும் பெரியவை என பல அளவுகளில் கிடைக்கின்றன இதில் சரியான அளவை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம் ஆகும். இதை பயன்படுத்திப் பார்த்துமட்டுமே தங்களுக்கான சரியான அளவை கண்டறிய முடியும்.

முதல் முறை மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்தும் போது, சிறிய அளவிலான கப்பை பயன்படுத்திப் பார்க்கலாம். குழந்தை பெற்றவர்கள் நடுத்தர அளவினையும் , சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தைப் பெற்றவர்கள் பெரிய அளவையும் பயன்படுத்திப் பார்க்கலாம். இந்த அளவு தனி நபர்களை பொருத்து மாறுபடும்.

 

டாக்டர் திருமகள்

 

படக்குறிப்பு,

டாக்டர் திருமகள்

கேள்வி: மென்ஸ்ட்ருவல் கப் பொருத்தும்போது வலி ஏற்படுமா ?

முதல் முறை பயன்படுத்தும்போது பயம் காரணமாக சிறிது அசௌகரியமாக இருக்கும். பெரிய அளவு வலி ஏதும் ஏற்படாது. ஓரிரண்டு முறை பயன் படுத்திய பிறகு மிகவும் சாதாரண விஷயமாக மாறிவிடும். சிலர் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு இது தங்களுக்கு சரிவராது என நினைத்துவிடுவதும் வழக்கம். ஆகவே சில முறை பயன்படுத்திப் பார்க்க வேண்டியதும் அவசியம். அப்படி ஆரம்ப காலத்தில் மென்ஸ்ட்ருவல் கப்பை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டால் தண்ணீர் கொண்டு செய்யப்பட்ட களிம்பு (water based lubricant gel) தடவிப் பயன்படுத்தினால் எளிமையாக இருக்கும்.

மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை அதிகப்படுத்துமா?

மாதவிடாய் காலத்தில் அடி வயிற்றில் சிலருக்கு வலி ஏற்படும், இது பொதுவானது. மாதவிடாயின் பொழுது ஏற்படும் வயிற்று வலிக்கும் மென்ஸ்ட்ருவல் கப் பயன்பாட்டிற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி ஏற்படுபவர்கள், ஏற்படாதவர்கள் என அனைவரும் இதைப் பயன்படுத்தலாம்.

கருப்பை இறக்கத்திற்கு வழிவகுக்குமா?

மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்துவதன் மூலம் கருப்பை இறக்கம் ஏற்படுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. அப்படி அந்த பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை எடுக்க வேண்டும்.

கேள்வி: காப்பர் டீ எனப்படும் கருத்தடை சாதனம் பொருத்தியவர்கள் பயன்படுத்தலாமா?

காப்பர் டீ எனப்படும் கருத்தடை சாதனம் பொருத்திக் கொண்டவர்கள் இதனை தாராளமாக பயன்படுத்தலாம். காப்பர் டீ கருத்தடை சாதனத்தின் கீழ்ப்பகுதில் இரண்டு சிறிய அளவிலான நைலான் கயிறு போன்ற நூல் இருக்கும் அதை மட்டும் பிடித்து இழுத்து விட கூடாது. மற்றபடி சரியாக பயன்படுத்தினால் எதற்கும் பயப்பட தேவையில்லை.

மென்ஸ்ட்ருவல் கப்பை கன்னிப் பெண்கள் பயன்படுதலாமா?

பெரும்பாலான பெண்கள் இதை நாங்கள் பயன்படுத்தலாமா ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு இதனால் கிழிந்து விடுமா என கேட்கின்றனர். கன்னிப் பெண்களும் தாராளமாக பயன்படுத்தலாம் ஹைமன் என்பது மெல்லிய சவ்வு ஆகும். பெரும்பாலானோர் அது ஒரு திரை முழுமையாக மூடி இருக்கும் என நினைக்கின்றனர் இது ஒரு தவறான கருத்து ஆகும். கன்னிச்சவ்வில் சிறிய வளையம் போன்ற அளவு துளை இருக்கும். அப்படி இல்லை எனில் மாதவிடாய் ரத்தம் எப்படி வெளியேறும்? திருமணம் ஆகி குழந்தை பெற்றவர்களுக்கு கூட இந்த சவ்வு இருக்கும்.

விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தலாமா ?

 

விளையாட்டு வீராங்கனைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விளையாட்டு வீரர்கள், நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்கள், முதல் அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம் மென்ஸ்ட்ருவல் கப் பொருத்திக் கொண்டபிறகு நடக்கலாம் , ஓடலாம், தூங்கலாம், தங்களுடைய அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்யலாம். அதிகபட்சம் 12 மணி நேரம் அதற்கு முன்பு சுத்தப் படுத்திவிட்டு மீண்டும் பயன்படுத்த வேண்டியது அவசியம். என்கிறார் மருத்துவர் திருமகள்.

கருத்தில் கொள்ள வேண்டியவை

இந்த கப்பினை பயன்படுத்துவோர் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி கேட்டபோது, "சரியான அளவுடைய கப்பை தேர்ந்தெடுத்து, சரியான முறையில் பொறுத்த வேண்டும். உடலின் உட்புறம் செலுத்தப்படுவது என்பதால் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் வெளிப்புற கிருமிகள் உடலின் உட்புறம் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.

பொருத்தும் முன்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கை விரல்களில் நீளமான நகங்கள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், நகம் பட்டு புண் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. முக்கியமாக இது மிகவும் சௌகரியமாக இருப்பதால் மென்ஸ்ட்ருவல் கப் உட்புறம் இருப்பதையே மறந்து விடும் நிலை சில சமயங்களில் ஏற்படும். எனவே சரியான நேரத்தில் சுத்தம் செய்துவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.'' என்கிறார் டாக்டர் திருமகள்.

https://www.bbc.com/tamil/science-61118992

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய வாகனம் தொடர்பில் விசாரணை! 19 MAR, 2024 | 11:08 AM   விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகும் போது பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்டது என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட இந்த வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மாத்திரமே என்பதுடன் இதில் கைதிகளை ஏற்றிச்செல்ல முடியாது எனும் நிபந்தனையை மீறி கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் இரகசிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/179097
    • 19 MAR, 2024 | 11:21 AM   வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று  கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை  (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று  உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடிசெய்தார்.  குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம்,  அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.   https://www.virakesari.lk/article/179099
    • காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை செய்த இஸ்ரேலிய படையினர் - தொடர்கின்றது ஊடகவியலாளர்களை இலக்குவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை Published By: RAJEEBAN    19 MAR, 2024 | 10:56 AM   காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் 12 மணிநேரத்தின் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர். காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய  படையினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அல்ஸிபா மருத்துவமனையை இலக்குவைத்து நான்காவது தடவையாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த செய்திசேகரிப்பதற்காக சக ஊடகவியலாளர்களுடன் அல்ஜசீராவின் அல்கூலும் மருத்துமவனைக்கு சென்றிருந்தார். அல்ஜசீராவின் செய்தியாளரை இஸ்ரேலிய படையினர் இழுத்துச்சென்றனர், அவரது ஊடக உபகரணங்களை அழித்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர்களிற்கான அறையில் குழுமிய ஏனைய ஊடகவியலாளர்களையும் கைதுசெய்தனர் என விடுதலை செய்யப்பட்ட பின்னர் அல்ஜசீரா ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கண்கள் கைகளை கட்டிய இஸ்ரேலிய படையினர் அவர்களை நிர்வாணமாக்கி தாக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாராவது அசைந்தால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வோம் என இஸ்ரேலிய படையினர் எச்சரித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனது சகாக்கள் சிலரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பதை அறிகின்றேன் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். காசாவின் மீது இஸ்ரேல் கடந்த ஐந்து மாதங்களாக மேற்கொண்டு வரும் தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிடும் செய்தியாளர்களிற்கான தளமாக அல்ஷிபா மருத்துவமனை காணப்படுகின்றது. அல்ஜசீரா செய்தியாளரை கைதுசெய்து சித்திரவதை செய்தனர் தாக்கினார்கள் என அல்ஜசீராவின் மற்றுமொரு செய்தியாளரான ஹனி மஹ்மூட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179096
    • 🙏🏾 🌺 உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.